தேசிய ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் முன்னோடி ஜாவேத் அபிதி (Javed Abidi) காலமானார்.
இந்திய அளவில் ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் முன்னோடி செயல்பாட்டாளராகவும், அனைத்து ஊனமுற்றோர் உரிமைகள் குழுவை முதன்முதலில் தொண்ணூறுகளின் மத்தியில் தோற்றுவித்த பெருமைக்குரியவராகவும் திகழ்ந்த திரு. ஜாவேத் அபிதி அவர்கள் கடந்த 04.03.2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக காலமாகிவிட்டார். இவரது மறைவு இந்திய ஊனமுற்றோர் சமுதாயத்திற்கும், உலகெங்கிலும் உள்ள ஊனமுற்றோருக்கும் நேர்ந்த ஒரு மாபெரும் இழப்பாகும்.
1995-இல் கொண்டுவரப்பட்ட ஊனமுற்றோர் சட்டத்திலும், 2016-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்திலும் இவரது பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, 2016-ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக, பல ஊனமுற்றோர் குழுக்களுடன் இணைந்து டெல்லியில் இவர் நடத்திய போராட்டங்கள் இந்திய அரசு விரைவாக இச்சட்டத்தை இயற்றுவதற்கு அழுத்தம் கொடுத்தன. இவர், வட இந்தியாவில் ஊனமுற்றோர் மத்தியில் பெரிதும் அறியப்படும் ஊனமுற்றோரின் வேலைவாய்ப்பை உயர்த்துவதற்காக 1996-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய மையத்தின் (National Centre for Promotion of Employment for Disabled People) இயக்குனராக இருந்து வந்தார். மேலும், இவர் உலக ஊனமுற்றோர் மையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
1993-ஆம் ஆண்டு இவர் தோற்றுவித்த ஊனமுற்றோர் உரிமைகள் குழுவானது, ஊனமுற்றோரைச் சமூகத்தின் ஓர் அங்கமாக இணைத்துக்கொள்ளவும் (Social Inclusion), எளிதான அணுகுதலுக்காகவும் (Accessibility) தொடர்ந்து போராடி வருகிறது. தொண்ணூறுகளின் துவக்கத்திலிருந்து, தனது மறைவு வரை தொடர்ந்து “எங்களைச் சேர்த்துக் கொள்ளாமல் எங்களைப் பற்றி எதுவும் இருக்க கூடாது (Nothing about us without us)” என்ற ஒற்றை வரியினை மையமாகக்கொண்டு ஊனமுற்றோர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ஊனமுற்றோர் உரிமைகளை நிலைநாட்டும் ஒரு உறுதியான சட்டத்திற்காகவும், ஊனமுற்றோரின் வேலைவாய்ப்பிற்காகவும் அபிதி தொடர்ந்து தனது அமைப்பின் மூலமாகப் போராடி வந்தார்.
ஊனமுற்றோரின் கல்விக்காக இவர் ஆற்றிய பணி மிக முக்கியமானது. அமெரிக்காவில் முதுகலை பட்டம் பெற்றதன் விளைவாக தனக்கு கிடைத்த உலக ஊனமுற்றோரின் உரிமைகள் போராட்டத்தின் அனுபவத்தைக் கொண்டு, இந்திய ஊனமுற்றோருக்காகப் போராடினார். மேலும், இந்திய ஊனமுற்றோரின் பிரச்சனைகளை உலக மேடைகளில் தெளிவாக எடுத்துரைத்தார். 1970-களில் மேற்கத்திய நாடுகளில் துவங்கிய ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தை வெற்றிகரமாக இந்தியாவில் துவங்கிய பெருமை அபிதி அவர்களையே சாரும்.
சில மாதங்களுக்கு முன்பு, உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் தேசிய கீதம் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படுவதைக் கட்டாயமாக்கியபோது, அதனை அபிதி எதிர்த்தார். தேசப்பற்று கொண்டவராக இருந்தபோதும், ஊனமுற்றோரை தேசிய கீதத்திற்காக கட்டாயமாக எழுந்து நிற்க வைப்பதை அவர் கண்டித்தார். பிரதமர் மோடி கொண்டுவந்த நவீன நகரங்கள் (Smart Cities) திட்டத்தில் ஊனமுற்றோரைச் சேர்ப்பதிலுள்ள குறைபாடுகளை இவர் நேரடியாகச் சுட்டிக்காட்டி, எளிதான அணுகுமுறையின் (Accessibility) முக்கியத்துவத்தை மக்களுக்கும் அரசுக்கும் புரியும்படி எடுத்துரைத்தார்.
பார்வையற்றவர்களை பொறுத்தமட்டில், தொண்ணூறுகளின் மத்தியில் ஜார்ஜ் ஆபிரகாம் அவர்களால் முதன் முதலில் இந்தியாவில் துவங்கப்பட்ட பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட்டை அபிதி ஊக்குவித்தார். அதோடு, அது இந்தியாவில் வளர்வதற்கு, தான் ஒரு பார்வையற்றவராக இல்லாதபோதும், தன்னால் இயன்ற உதவிகளையும் ஆதரவினையும் அளித்தது அவரது போராட்டத்தின் உயர்ந்த நிலையை வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளது. எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல், அனைத்து ஊனமுற்றோர் பிரிவினருக்கும் உரிமைகள், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக அங்கீகாரம், எளிதான அணுகுமுறை போன்றவற்றுக்காக தனது மறைவு வரை போராடியது ஊனமுற்றோரைப் பற்றிய இவரது பரந்துபட்ட பார்வையைக் காட்டுகிறது.
ஆட்டிசம், டிஸ்லக்ஷியா மற்றும் பிற தென்படாத நுண்ணிய ஊனங்களை 2016-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தில் சேர்த்தது, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தினை இந்திய அரசை ஏற்றுக்கொள்ள வைத்தது, ஊனமுற்றோர் உரிமைகளை மனித உரிமைகளாக வைத்து போராடியது, மத்திய அரசாங்கத்தில் ஊனமுற்றோருக்கென்று தனியொரு துறையைத் தோற்றுவிக்க வைத்தது மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஊனமுற்றோரை ஒரு தனிப் பிரிவாக சேர்க்கவைத்தது போன்றவை அபிதி அவர்கள் ஊனமுற்றோர் சமுதாயத்திற்குச் செய்த மாபெரும் பணிகளாகும்.
இவரது எதிர்பாராத மறைவு ஊனமுற்றோர் சமூகத்திற்கு ஒரு மிகப்பெரும் இழப்பாகும். இவரது இறப்பு தோற்றுவித்துள்ள வெற்றிடத்தை இவரைப்போல மற்றொருவரை கொண்டு நிரப்புவது அவ்வளவு எளிதானதல்ல. எனினும், இவர் ஊனமுற்றோருக்காக ஆற்றிய பணிகளும், சாதித்த மாற்றங்களும் வரும் காலங்களில் இவரை நிச்சயம் நினைவுகூறச் செய்யும். இந்திய ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் வரலாற்றில் அபிதி அவர்கள் என்றும் அழிக்க முடியாத ஒரு நிலையான இடத்தினை பெற்றிருக்கிறார்.
--
கட்டுரையாளர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர்.
தொடர்புக்கு: [email protected]
இந்திய அளவில் ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் முன்னோடி செயல்பாட்டாளராகவும், அனைத்து ஊனமுற்றோர் உரிமைகள் குழுவை முதன்முதலில் தொண்ணூறுகளின் மத்தியில் தோற்றுவித்த பெருமைக்குரியவராகவும் திகழ்ந்த திரு. ஜாவேத் அபிதி அவர்கள் கடந்த 04.03.2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக காலமாகிவிட்டார். இவரது மறைவு இந்திய ஊனமுற்றோர் சமுதாயத்திற்கும், உலகெங்கிலும் உள்ள ஊனமுற்றோருக்கும் நேர்ந்த ஒரு மாபெரும் இழப்பாகும்.
1995-இல் கொண்டுவரப்பட்ட ஊனமுற்றோர் சட்டத்திலும், 2016-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்திலும் இவரது பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, 2016-ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக, பல ஊனமுற்றோர் குழுக்களுடன் இணைந்து டெல்லியில் இவர் நடத்திய போராட்டங்கள் இந்திய அரசு விரைவாக இச்சட்டத்தை இயற்றுவதற்கு அழுத்தம் கொடுத்தன. இவர், வட இந்தியாவில் ஊனமுற்றோர் மத்தியில் பெரிதும் அறியப்படும் ஊனமுற்றோரின் வேலைவாய்ப்பை உயர்த்துவதற்காக 1996-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய மையத்தின் (National Centre for Promotion of Employment for Disabled People) இயக்குனராக இருந்து வந்தார். மேலும், இவர் உலக ஊனமுற்றோர் மையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
1993-ஆம் ஆண்டு இவர் தோற்றுவித்த ஊனமுற்றோர் உரிமைகள் குழுவானது, ஊனமுற்றோரைச் சமூகத்தின் ஓர் அங்கமாக இணைத்துக்கொள்ளவும் (Social Inclusion), எளிதான அணுகுதலுக்காகவும் (Accessibility) தொடர்ந்து போராடி வருகிறது. தொண்ணூறுகளின் துவக்கத்திலிருந்து, தனது மறைவு வரை தொடர்ந்து “எங்களைச் சேர்த்துக் கொள்ளாமல் எங்களைப் பற்றி எதுவும் இருக்க கூடாது (Nothing about us without us)” என்ற ஒற்றை வரியினை மையமாகக்கொண்டு ஊனமுற்றோர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ஊனமுற்றோர் உரிமைகளை நிலைநாட்டும் ஒரு உறுதியான சட்டத்திற்காகவும், ஊனமுற்றோரின் வேலைவாய்ப்பிற்காகவும் அபிதி தொடர்ந்து தனது அமைப்பின் மூலமாகப் போராடி வந்தார்.
ஊனமுற்றோரின் கல்விக்காக இவர் ஆற்றிய பணி மிக முக்கியமானது. அமெரிக்காவில் முதுகலை பட்டம் பெற்றதன் விளைவாக தனக்கு கிடைத்த உலக ஊனமுற்றோரின் உரிமைகள் போராட்டத்தின் அனுபவத்தைக் கொண்டு, இந்திய ஊனமுற்றோருக்காகப் போராடினார். மேலும், இந்திய ஊனமுற்றோரின் பிரச்சனைகளை உலக மேடைகளில் தெளிவாக எடுத்துரைத்தார். 1970-களில் மேற்கத்திய நாடுகளில் துவங்கிய ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தை வெற்றிகரமாக இந்தியாவில் துவங்கிய பெருமை அபிதி அவர்களையே சாரும்.
சில மாதங்களுக்கு முன்பு, உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் தேசிய கீதம் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படுவதைக் கட்டாயமாக்கியபோது, அதனை அபிதி எதிர்த்தார். தேசப்பற்று கொண்டவராக இருந்தபோதும், ஊனமுற்றோரை தேசிய கீதத்திற்காக கட்டாயமாக எழுந்து நிற்க வைப்பதை அவர் கண்டித்தார். பிரதமர் மோடி கொண்டுவந்த நவீன நகரங்கள் (Smart Cities) திட்டத்தில் ஊனமுற்றோரைச் சேர்ப்பதிலுள்ள குறைபாடுகளை இவர் நேரடியாகச் சுட்டிக்காட்டி, எளிதான அணுகுமுறையின் (Accessibility) முக்கியத்துவத்தை மக்களுக்கும் அரசுக்கும் புரியும்படி எடுத்துரைத்தார்.
பார்வையற்றவர்களை பொறுத்தமட்டில், தொண்ணூறுகளின் மத்தியில் ஜார்ஜ் ஆபிரகாம் அவர்களால் முதன் முதலில் இந்தியாவில் துவங்கப்பட்ட பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட்டை அபிதி ஊக்குவித்தார். அதோடு, அது இந்தியாவில் வளர்வதற்கு, தான் ஒரு பார்வையற்றவராக இல்லாதபோதும், தன்னால் இயன்ற உதவிகளையும் ஆதரவினையும் அளித்தது அவரது போராட்டத்தின் உயர்ந்த நிலையை வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளது. எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல், அனைத்து ஊனமுற்றோர் பிரிவினருக்கும் உரிமைகள், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக அங்கீகாரம், எளிதான அணுகுமுறை போன்றவற்றுக்காக தனது மறைவு வரை போராடியது ஊனமுற்றோரைப் பற்றிய இவரது பரந்துபட்ட பார்வையைக் காட்டுகிறது.
ஆட்டிசம், டிஸ்லக்ஷியா மற்றும் பிற தென்படாத நுண்ணிய ஊனங்களை 2016-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தில் சேர்த்தது, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தினை இந்திய அரசை ஏற்றுக்கொள்ள வைத்தது, ஊனமுற்றோர் உரிமைகளை மனித உரிமைகளாக வைத்து போராடியது, மத்திய அரசாங்கத்தில் ஊனமுற்றோருக்கென்று தனியொரு துறையைத் தோற்றுவிக்க வைத்தது மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஊனமுற்றோரை ஒரு தனிப் பிரிவாக சேர்க்கவைத்தது போன்றவை அபிதி அவர்கள் ஊனமுற்றோர் சமுதாயத்திற்குச் செய்த மாபெரும் பணிகளாகும்.
இவரது எதிர்பாராத மறைவு ஊனமுற்றோர் சமூகத்திற்கு ஒரு மிகப்பெரும் இழப்பாகும். இவரது இறப்பு தோற்றுவித்துள்ள வெற்றிடத்தை இவரைப்போல மற்றொருவரை கொண்டு நிரப்புவது அவ்வளவு எளிதானதல்ல. எனினும், இவர் ஊனமுற்றோருக்காக ஆற்றிய பணிகளும், சாதித்த மாற்றங்களும் வரும் காலங்களில் இவரை நிச்சயம் நினைவுகூறச் செய்யும். இந்திய ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் வரலாற்றில் அபிதி அவர்கள் என்றும் அழிக்க முடியாத ஒரு நிலையான இடத்தினை பெற்றிருக்கிறார்.
--
கட்டுரையாளர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர்.
தொடர்புக்கு: [email protected]