இன்றைய அவசர உலகில் புத்தகம் படிப்பது என்பது அரிதாகி விட்டது. அதிலும் அதிக நேரம் செலவிட்டுப் படிப்பது என்பது நம் இளைஞர் மத்தியில் எட்டாக் கனி தான்.
பார்வையற்றவர்கள் தொடக்க காலத்தில் பார்வை உடையவர்களைச் சார்ந்துதான் புத்தகங்களைப் படித்தனர். இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ‘JAWS’, ‘NVDA’ முதலிய பேசும் மென்பொருட்களின் துணையுடன் கணினியிலும், Accessible Reader, Voice Dream Reader, Voice Allow Reader, Co Reader முதலிய செயலிகள் மூலம் அலை பேசிகளிலும் புத்தகங்களைப் படித்துவருகின்றனர். அலமாரி, Free Tamil eBooks, Amazon Kindle, பிரதிலிபி முதலிய இணைய செயலிகள் இணையத்தில் இருந்து நேரடியாக புத்தகங்களை எளிமையான முறையில் பதிவிரக்கம் செய்து படிக்க உதவுகின்றன. பார்வையற்றவர்களின் புத்தக தாகத்தை இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி பெருமளவில் தீர்க்கத் தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
ஹைக்கூ
பெருங்கவிதைகளைப் படிக்க விரும்பாதவர்களின் நேரக் குறைபாட்டைச் சரிசெய்ய வந்ததுதான் இன்றைய இலக்கிய வடிவமான ஹைக்கூ. சிறுகதை, புதினம் முதலியவற்றைப் படிக்கவும் நமக்குப் பொறுமை குறைவாக உள்ளது. அதற்கு ஏற்ற வகையில், சிறிது நேரத்தில் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்துத் தூக்கிப் போட்டுவிடலாம் என்று விரும்புபவர்களுக்கு ஏற்ற வடிவம் ஹைக்கூ.
தமிழர் பண்டைய வாய்வழி இலக்கிய மரபில் மிக முக்கியமானது விடுகதையும், பழமொழியும். அதை அடியொற்றி ஹைக்கூ கவிதை முத்தான மூன்று அடியில் தோன்றி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மூன்று அடியில் கவிஞர் சொல்ல வந்த கருத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். நான் படித்த ஒரு சிறிய ஹைக்கூ கவிதை நூலை உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.
கட்டை விரல்
மனிதன் உடல் உறுப்பில் மிகவும் முதன்மை வாய்ந்தது கட்டை விரல். கையின் அனைத்து இயக்கமும் இந்த விரலின் துணையோடுதான். இதனால்தான் கவிஞர் இந்நூலுக்கு ‘கட்டை விரல்’ என்று பெயர் வைத்திருப்பார் போலும். இந்நூல் 2005-ஆம் ஆண்டு தமிழ் மொழி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் புதுவை தமிழ் நெஞ்சன். இந்நூல் படிப்பதற்கு அருமையாக உள்ளது. கவிஞரின் எண்ணம் உயர்வாக உள்ளது; சமூக சிந்தனை விரவிக் கிடக்கிறது. சொல் தேர்வும், பொருள் செறிவும் சிறப்பாக உள்ளது.
இலையுதிர் காலம் வந்தால் மரத்தில் உள்ள இலைகள் உதிர்வது இயல்பு. கவிஞர் இதைச் சிறப்பாக விளக்குகிறார்.
“இலையுதிர் மரம்
பிறகுள்ள வன்மை இலைகள்
பழைய பாசம்”.
இலையுதிர் காலத்தில் மரத்திலுள்ள ஓரிரு இலைகள் உதிராமல் இருப்பது, அவை அந்த மரத்தின் மீது வைத்திருக்கும் பாசத்தால்தான் என்கிறார்.
தெருவில் வீணாக கிடக்கிறது மண். குயவரின் சிந்தனையால்தான் பானை, சட்டி, குடம் போன்ற அழகான பாண்டமாக மாறுகிறது என்பதை அழகான கவிதை வரிகளால் விளக்குகிறார்.
“தளிர் மண்ணும்
கை வடிவம் பெற்றுப் பயனாகும்
குயவன் எண்ணம்”.
‘சனிப் பிணம் தனி போகாது’, ‘திங்க கிழமை பத்துக் கொட்டினால் திரும்பி பாத்தா பத்து’ போன்ற வாசகங்கள் தமிழ் மக்களிடையே புழக்கத்தில் உள்ளன. அதன்படியே சிலர் கோழிக் குஞ்சையும், சிலர் ஒரு சந்தனக் கட்டை துண்டையும் பிணத்தின் மீது போட்டு அனுப்புவது வழக்கம். இந்தக் கருத்தை மூன்று அடியில் தெளிவாக கவிஞர் குறிப்பிட்டுள்ளது வியப்பிற்குரியது.
“பிணத்தோடு உடன் கட்டை
கோழி என்ன உறவு
சனிப் பிணம் துணை தேடும்”.
இத்தகைய கருத்துக்கள் இவரது சமூக சிந்தனையை எடுத்துக் காட்டுகின்றன. இன்னும் நிறைய கருத்துக்கள் இந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நான் என்னைக் கவர்ந்த கவிதைகளை மட்டும் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளென். எனக்கு இந்த கவிதை தொகுப்பை வாசித்துக் காட்டியவர் என் அன்பு அன்னை.
நூலின் பெயர்: கட்டை விரல்
ஆசிரியர்: புதுவை தமிழ் நெஞ்சன்
பதிப்பு: தமிழ்மொழி பதிப்பகம்
பக்கங்கள்: 50
விலை: ரூ. 10
--
(கட்டுரையாளர் காரைக்கால் திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுநிலை தமிழாசிரியர்).
தொடர்புக்கு: [email protected]
பார்வையற்றவர்கள் தொடக்க காலத்தில் பார்வை உடையவர்களைச் சார்ந்துதான் புத்தகங்களைப் படித்தனர். இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ‘JAWS’, ‘NVDA’ முதலிய பேசும் மென்பொருட்களின் துணையுடன் கணினியிலும், Accessible Reader, Voice Dream Reader, Voice Allow Reader, Co Reader முதலிய செயலிகள் மூலம் அலை பேசிகளிலும் புத்தகங்களைப் படித்துவருகின்றனர். அலமாரி, Free Tamil eBooks, Amazon Kindle, பிரதிலிபி முதலிய இணைய செயலிகள் இணையத்தில் இருந்து நேரடியாக புத்தகங்களை எளிமையான முறையில் பதிவிரக்கம் செய்து படிக்க உதவுகின்றன. பார்வையற்றவர்களின் புத்தக தாகத்தை இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி பெருமளவில் தீர்க்கத் தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
ஹைக்கூ
பெருங்கவிதைகளைப் படிக்க விரும்பாதவர்களின் நேரக் குறைபாட்டைச் சரிசெய்ய வந்ததுதான் இன்றைய இலக்கிய வடிவமான ஹைக்கூ. சிறுகதை, புதினம் முதலியவற்றைப் படிக்கவும் நமக்குப் பொறுமை குறைவாக உள்ளது. அதற்கு ஏற்ற வகையில், சிறிது நேரத்தில் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்துத் தூக்கிப் போட்டுவிடலாம் என்று விரும்புபவர்களுக்கு ஏற்ற வடிவம் ஹைக்கூ.
தமிழர் பண்டைய வாய்வழி இலக்கிய மரபில் மிக முக்கியமானது விடுகதையும், பழமொழியும். அதை அடியொற்றி ஹைக்கூ கவிதை முத்தான மூன்று அடியில் தோன்றி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மூன்று அடியில் கவிஞர் சொல்ல வந்த கருத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். நான் படித்த ஒரு சிறிய ஹைக்கூ கவிதை நூலை உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.
கட்டை விரல்
மனிதன் உடல் உறுப்பில் மிகவும் முதன்மை வாய்ந்தது கட்டை விரல். கையின் அனைத்து இயக்கமும் இந்த விரலின் துணையோடுதான். இதனால்தான் கவிஞர் இந்நூலுக்கு ‘கட்டை விரல்’ என்று பெயர் வைத்திருப்பார் போலும். இந்நூல் 2005-ஆம் ஆண்டு தமிழ் மொழி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் புதுவை தமிழ் நெஞ்சன். இந்நூல் படிப்பதற்கு அருமையாக உள்ளது. கவிஞரின் எண்ணம் உயர்வாக உள்ளது; சமூக சிந்தனை விரவிக் கிடக்கிறது. சொல் தேர்வும், பொருள் செறிவும் சிறப்பாக உள்ளது.
இலையுதிர் காலம் வந்தால் மரத்தில் உள்ள இலைகள் உதிர்வது இயல்பு. கவிஞர் இதைச் சிறப்பாக விளக்குகிறார்.
“இலையுதிர் மரம்
பிறகுள்ள வன்மை இலைகள்
பழைய பாசம்”.
இலையுதிர் காலத்தில் மரத்திலுள்ள ஓரிரு இலைகள் உதிராமல் இருப்பது, அவை அந்த மரத்தின் மீது வைத்திருக்கும் பாசத்தால்தான் என்கிறார்.
தெருவில் வீணாக கிடக்கிறது மண். குயவரின் சிந்தனையால்தான் பானை, சட்டி, குடம் போன்ற அழகான பாண்டமாக மாறுகிறது என்பதை அழகான கவிதை வரிகளால் விளக்குகிறார்.
“தளிர் மண்ணும்
கை வடிவம் பெற்றுப் பயனாகும்
குயவன் எண்ணம்”.
‘சனிப் பிணம் தனி போகாது’, ‘திங்க கிழமை பத்துக் கொட்டினால் திரும்பி பாத்தா பத்து’ போன்ற வாசகங்கள் தமிழ் மக்களிடையே புழக்கத்தில் உள்ளன. அதன்படியே சிலர் கோழிக் குஞ்சையும், சிலர் ஒரு சந்தனக் கட்டை துண்டையும் பிணத்தின் மீது போட்டு அனுப்புவது வழக்கம். இந்தக் கருத்தை மூன்று அடியில் தெளிவாக கவிஞர் குறிப்பிட்டுள்ளது வியப்பிற்குரியது.
“பிணத்தோடு உடன் கட்டை
கோழி என்ன உறவு
சனிப் பிணம் துணை தேடும்”.
இத்தகைய கருத்துக்கள் இவரது சமூக சிந்தனையை எடுத்துக் காட்டுகின்றன. இன்னும் நிறைய கருத்துக்கள் இந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நான் என்னைக் கவர்ந்த கவிதைகளை மட்டும் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளென். எனக்கு இந்த கவிதை தொகுப்பை வாசித்துக் காட்டியவர் என் அன்பு அன்னை.
நூலின் பெயர்: கட்டை விரல்
ஆசிரியர்: புதுவை தமிழ் நெஞ்சன்
பதிப்பு: தமிழ்மொழி பதிப்பகம்
பக்கங்கள்: 50
விலை: ரூ. 10
--
(கட்டுரையாளர் காரைக்கால் திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுநிலை தமிழாசிரியர்).
தொடர்புக்கு: [email protected]