மதுரை மாவட்டம் சுந்தரராஜன்பட்டியில் கம்பீரமாய் எழுந்து நிற்கிறது இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (Indian Association for the Blind - IAB). கம்பீரம் கட்டடத்தால் மட்டும் வந்ததல்ல. 33 ஆண்டு காலமாய் பல திறப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காய் உழைத்து அவர்களை பலமுள்ளவர்களாய் மாற்றியதால் கிடைத்திருக்கும் கம்பீரம் இது.
மேல்நிலைப் பள்ளி, கல்லூரி செல்வோருக்கு விடுதி, தொழிற்கூடங்கள், நூலகம், பிரெயில் அச்சகம் என்று பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்துவருகிறது இவ்வமைப்பு. தென் தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தை உலகறியச் செய்து, தென் தமிழகத்தில் வசிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் சரணாலயமாகத் திகழ்கிறது இவ்வமைப்பு. தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ஒவ்வொரு பார்வையற்றவரும் ஏதோ ஒரு வகையில் இவ்வமைப்பால் பயன் பெற்றிருப்பர் என்பதே உண்மை. 1985-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் S.M.A. ஜின்னா என்ற பார்வையற்றவரால் தொடங்கப்பட்ட அமைப்பு இது.
நெல்லை மாவட்டம் களக்காடு என்ற ஊரில் பிறந்தவர் ஜின்னா. 3 வயதில் தந்தை இவர் குடும்பத்தை நிர்க்கதியாய் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்; 5 வயதில் தாய் இறந்துவிட்டார்; 13 வயதில் இவர் பார்வையும் பறிபோய்விட்டது. முதலிரண்டைக் காட்டிலும் மூன்றாவது துயரம் இவரை மிகவும் வாட்டியது.
அக்காலப் பார்வையற்றவர்களின் அறிவுக் கண்ணாய்த் திகழ்ந்த வானொலி இவர் காதுகள் வழியே மூளையைத் தொட்டது. பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளி ஒன்று பாளையங்கோட்டையில் இருப்பதை அது போகிற போக்கில் சொல்லிச் சென்றது. அதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டார் ஜின்னா.
18 வயதில் பாளையங்கோட்டை பள்ளியில் மாணவனாகச் சேர்ந்தார். வயது அதிகமானவரை மாணவராகச் சேர்க்க முடியாது என்று முதலில் மறுத்த பள்ளி நிர்வாகம் பிறகு பிரெயில் தெரியாத இவரை ஒன்றாம் வகுப்பில்தான் சேர்த்துக்கொள்வோம் என உறுதியாகச் சொல்லிவிட்டது. ‘சரி’ என்றார் ஜின்னா. ஏற்கெனவே பார்வை தெரியும் வரை 7-ஆம் வகுப்பு வரை பயின்ற ஜின்னா 18 வயதில் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றார். இவர் திறமையை அறிந்துகொண்ட பள்ளி நிர்வாகம் அடுத்த ஆண்டே இவரை 8-ஆம் வகுப்பிற்குத் தரம் உயர்த்தியது.
மகிழ்ச்சிதான், ஓராண்டு வரை. 8-ஆம் வகுப்போடு அப்பள்ளியில் படிப்பு முடிந்துவிட்டது. வயது வந்தவர்களும், படித்து முடித்தவர்களும் நெசவுக்கு அனுப்பப்பட்டனர். இவரும் நெசவு செய்யத் தொடங்கினார். ஆனாலும் கல்வி தாகம் தீரவில்லை. கிடைத்த எல்லோர் மனதிலும் அதைப் போட்டுவைத்தார். பேரா. ஜெயராமன் அவர்கள் அவர் தாகத்தைத் தீர்க்க முன்வந்தார்.
பேரா. ஜெயராமன் பார்வையிழந்தவர்; போலியோவால் பாதிக்கப்பட்டவர். மதுரை சென்று படிக்குமாறு இவருக்கு ஆலோசனை சொன்னார். அடுத்து விறுவிறுவென முன்னேறினார் திரு. ஜின்னா.
மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதல் பார்வையற்ற மாணவனாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இளங்கலை பொருளாதாரம் இங்கு படித்த இவர், முதுகலையை மதுரை தியாகராசர் கல்லூரியில் முடித்தார். பிறகு அமெரிக்கா சென்று பார்வையற்றோருக்கான சிறப்புக் கல்வியைக் (Diploma of Teaching for the Blind - DTB) பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கற்றார்.
முதுகலை படிக்கும்போதே தன்னை ஒத்த பார்வையற்றவர்களுக்கு உதவத் தொடங்கினார். பிறகு ஹெலன் கெல்லர் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். உடன் பயணித்தோரோடு ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் இவ்வமைப்பிலிருந்து விலகிய இவர் 1985-ஆம் ஆண்டில் இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தை நிறுவினார்.
ஜின்னா அவர்களின் அயராத உழைப்பினாலும், தன்னலம் கருதாத பல நன்கொடையாளர்களாலும் நிறுவனம் அசுர வளர்ச்சி பெற்றது. ஒவ்வொரு வளர்ச்சியின்போதும் அதில் விழுந்து குதூகளிக்காமல் அடுத்த கட்டம் பற்றி சிந்தித்தார் இவர். தன் நிறுவன வளர்ச்சிக்குத் தேவையானவற்றை மட்டுமல்லாமல், தேவையற்றவை எவை என்பதையும் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்தார்.
அதனால்தான் வாய்ப்புகள் நிறைய இருந்தும் மதச்சார்பற்ற நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது IAB. பெருநகரங்களில் இதே நிறுவனம் இவர் தொடங்கிய காலத்திலேயே தொடங்கப்பட்டிருந்தால், இன்னும் மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்றிருக்கும். நல்ல வேளையாக இவர் அப்படிச் செயவில்லை. அதனால்தான IAB-யால் பலன் பெற்றவர்கள் பெரும்பாலும் தென் தமிழகத்தில் வாழும் சாதாரண குடும்பங்களில் பிறந்த பார்வையற்றவர்களாகவே இருக்கின்றனர். தேவையான இடத்தில், தேவையானதைச் செய்வதுதானே சேவை!
கால மாற்றத்திற்கு ஏற்ப தன் பயனாளிகளும் வளர்ச்சி பெறவேண்டும் என விரும்பிய இவர், பல புதுப் புது திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அதோடு, நம் வேர்களை இவர் கைவிடவில்லை. ஆம். நிறுவனத்தின் ஒவ்வொரு விழாவிலும் தொழில்நுட்பப் புதுமையைச் செயல்படுத்த முயன்ற இவர், நம் வேரான பிரெயில் புத்தகங்களையும் வெளியிடத் தவறவில்லை.
2010-இல் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினராகச் செயல்பட்ட இவர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டார். இவரது உறுதியான சில கருத்துகள் வாரியத்தில் அதிர்வை உருவாக்கியிருக்கின்றன.
வயது முதிர்ந்த பார்வையற்றோருக்காக சந்திப்புக் கூடம் (Day care centre), பார்வை மாற்றுத்திறனாளிகள் பற்றிய உயர் ஆய்வு மையம், பல சிறு, குறு தொண்டு நிறுவனங்களுக்குப் பயிற்சி வழங்குதல், பிரெயில் பதிப்புகளை பொது வெளியில் (Public Domain) இலவசமாக வைத்தல் என இவர் கண்ட பல கனவுகள் நனவாகாமலே போய்விட்டன. இவரது மறைவிற்குப் பிறகு நிறுவனத்தை நடத்திவரும் இவர் பிள்ளைகள் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அனைவரையும் கலந்தாலோசித்தல், எடுக்கும் முடிவில் உறுதி, தொலைநோக்குச் சிந்தனை, புதியவர்களோடும் இளையவர்களோடும் தொடர்ந்து தொடர்பில் இருத்தல் முதலியவை இவரது நிர்வாக வெற்றியின் ரகசியங்கள். இத்தனையையும் தாண்டி இவர் அடைந்த வெற்றிக்கான முதன்மையான ரகசியம் ஒன்று உண்டு. அது ‘தன்னைப் போன்றவர்கள் மீதான அக்கறை’. அதுவே அவரைத் தொடர்ந்து இயங்க வைத்தது; பல பார்வை மாற்றுத்திறனாளிகளையும் வியக்கும் நிலையில் உயர்த்திவைத்தது.
பார்வையற்றவர்களுக்கே உரிய உடல் இயக்கமின்மை பிரச்சனை இவரையும் விட்டுவைக்கவில்லை. 24/7 மணி நேரமும் தன் அமைப்பைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த இவரால் தன் உடலைக் கவனித்துக்கொள்ள இயலவில்லை. புதிய பல சவால்களை உருவாக்கிக்கொண்டு வாழ்வில் போராடிய இவர், நோய்களோடும் போராடி டிசம்பர் 19, 2013 அன்று மறைந்தார்.
தென் தமிழகத்தின் ஒரே பார்வையற்றோருக்கான மேல்நிலைப் பள்ளி, தமிழகத்தில் எலாச் சமயங்கள் குறித்த பிரெயில் புத்தகங்களும் கிடைக்கும் ஒரே பிரெயில் அச்சகம் முதலிய பெருமைகள் IAB-க்கு உண்டு. இவற்றோடு, இன்னும் பல பெருமைகளைப் பெற்று, சாதாரண குடும்பங்களிலிருந்து வரும் பார்வையற்றவர்களை மேலுயர்த்தும் அமைப்பாக இந்நிறுவனம் நிலைத்து நிற்க வேண்டும்.
தான் சார்ந்த சமூகத்துக்காக உழைத்தவர்கள் என்றும் இறப்பதில்லை. அவர்கள் தங்கள் உழைப்பின் வழியாகவும், அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் வழியாகவும் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். ஆம். திரு. S. முஹமது அலி ஜின்னா அவர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார். நாமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
--
தொடர்புக்கு: [email protected]
மேல்நிலைப் பள்ளி, கல்லூரி செல்வோருக்கு விடுதி, தொழிற்கூடங்கள், நூலகம், பிரெயில் அச்சகம் என்று பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்துவருகிறது இவ்வமைப்பு. தென் தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தை உலகறியச் செய்து, தென் தமிழகத்தில் வசிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் சரணாலயமாகத் திகழ்கிறது இவ்வமைப்பு. தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ஒவ்வொரு பார்வையற்றவரும் ஏதோ ஒரு வகையில் இவ்வமைப்பால் பயன் பெற்றிருப்பர் என்பதே உண்மை. 1985-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் S.M.A. ஜின்னா என்ற பார்வையற்றவரால் தொடங்கப்பட்ட அமைப்பு இது.
நெல்லை மாவட்டம் களக்காடு என்ற ஊரில் பிறந்தவர் ஜின்னா. 3 வயதில் தந்தை இவர் குடும்பத்தை நிர்க்கதியாய் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்; 5 வயதில் தாய் இறந்துவிட்டார்; 13 வயதில் இவர் பார்வையும் பறிபோய்விட்டது. முதலிரண்டைக் காட்டிலும் மூன்றாவது துயரம் இவரை மிகவும் வாட்டியது.
அக்காலப் பார்வையற்றவர்களின் அறிவுக் கண்ணாய்த் திகழ்ந்த வானொலி இவர் காதுகள் வழியே மூளையைத் தொட்டது. பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளி ஒன்று பாளையங்கோட்டையில் இருப்பதை அது போகிற போக்கில் சொல்லிச் சென்றது. அதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டார் ஜின்னா.
18 வயதில் பாளையங்கோட்டை பள்ளியில் மாணவனாகச் சேர்ந்தார். வயது அதிகமானவரை மாணவராகச் சேர்க்க முடியாது என்று முதலில் மறுத்த பள்ளி நிர்வாகம் பிறகு பிரெயில் தெரியாத இவரை ஒன்றாம் வகுப்பில்தான் சேர்த்துக்கொள்வோம் என உறுதியாகச் சொல்லிவிட்டது. ‘சரி’ என்றார் ஜின்னா. ஏற்கெனவே பார்வை தெரியும் வரை 7-ஆம் வகுப்பு வரை பயின்ற ஜின்னா 18 வயதில் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றார். இவர் திறமையை அறிந்துகொண்ட பள்ளி நிர்வாகம் அடுத்த ஆண்டே இவரை 8-ஆம் வகுப்பிற்குத் தரம் உயர்த்தியது.
மகிழ்ச்சிதான், ஓராண்டு வரை. 8-ஆம் வகுப்போடு அப்பள்ளியில் படிப்பு முடிந்துவிட்டது. வயது வந்தவர்களும், படித்து முடித்தவர்களும் நெசவுக்கு அனுப்பப்பட்டனர். இவரும் நெசவு செய்யத் தொடங்கினார். ஆனாலும் கல்வி தாகம் தீரவில்லை. கிடைத்த எல்லோர் மனதிலும் அதைப் போட்டுவைத்தார். பேரா. ஜெயராமன் அவர்கள் அவர் தாகத்தைத் தீர்க்க முன்வந்தார்.
பேரா. ஜெயராமன் பார்வையிழந்தவர்; போலியோவால் பாதிக்கப்பட்டவர். மதுரை சென்று படிக்குமாறு இவருக்கு ஆலோசனை சொன்னார். அடுத்து விறுவிறுவென முன்னேறினார் திரு. ஜின்னா.
மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதல் பார்வையற்ற மாணவனாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இளங்கலை பொருளாதாரம் இங்கு படித்த இவர், முதுகலையை மதுரை தியாகராசர் கல்லூரியில் முடித்தார். பிறகு அமெரிக்கா சென்று பார்வையற்றோருக்கான சிறப்புக் கல்வியைக் (Diploma of Teaching for the Blind - DTB) பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கற்றார்.
முதுகலை படிக்கும்போதே தன்னை ஒத்த பார்வையற்றவர்களுக்கு உதவத் தொடங்கினார். பிறகு ஹெலன் கெல்லர் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். உடன் பயணித்தோரோடு ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் இவ்வமைப்பிலிருந்து விலகிய இவர் 1985-ஆம் ஆண்டில் இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தை நிறுவினார்.
ஜின்னா அவர்களின் அயராத உழைப்பினாலும், தன்னலம் கருதாத பல நன்கொடையாளர்களாலும் நிறுவனம் அசுர வளர்ச்சி பெற்றது. ஒவ்வொரு வளர்ச்சியின்போதும் அதில் விழுந்து குதூகளிக்காமல் அடுத்த கட்டம் பற்றி சிந்தித்தார் இவர். தன் நிறுவன வளர்ச்சிக்குத் தேவையானவற்றை மட்டுமல்லாமல், தேவையற்றவை எவை என்பதையும் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்தார்.
அதனால்தான் வாய்ப்புகள் நிறைய இருந்தும் மதச்சார்பற்ற நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது IAB. பெருநகரங்களில் இதே நிறுவனம் இவர் தொடங்கிய காலத்திலேயே தொடங்கப்பட்டிருந்தால், இன்னும் மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்றிருக்கும். நல்ல வேளையாக இவர் அப்படிச் செயவில்லை. அதனால்தான IAB-யால் பலன் பெற்றவர்கள் பெரும்பாலும் தென் தமிழகத்தில் வாழும் சாதாரண குடும்பங்களில் பிறந்த பார்வையற்றவர்களாகவே இருக்கின்றனர். தேவையான இடத்தில், தேவையானதைச் செய்வதுதானே சேவை!
கால மாற்றத்திற்கு ஏற்ப தன் பயனாளிகளும் வளர்ச்சி பெறவேண்டும் என விரும்பிய இவர், பல புதுப் புது திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அதோடு, நம் வேர்களை இவர் கைவிடவில்லை. ஆம். நிறுவனத்தின் ஒவ்வொரு விழாவிலும் தொழில்நுட்பப் புதுமையைச் செயல்படுத்த முயன்ற இவர், நம் வேரான பிரெயில் புத்தகங்களையும் வெளியிடத் தவறவில்லை.
2010-இல் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினராகச் செயல்பட்ட இவர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டார். இவரது உறுதியான சில கருத்துகள் வாரியத்தில் அதிர்வை உருவாக்கியிருக்கின்றன.
வயது முதிர்ந்த பார்வையற்றோருக்காக சந்திப்புக் கூடம் (Day care centre), பார்வை மாற்றுத்திறனாளிகள் பற்றிய உயர் ஆய்வு மையம், பல சிறு, குறு தொண்டு நிறுவனங்களுக்குப் பயிற்சி வழங்குதல், பிரெயில் பதிப்புகளை பொது வெளியில் (Public Domain) இலவசமாக வைத்தல் என இவர் கண்ட பல கனவுகள் நனவாகாமலே போய்விட்டன. இவரது மறைவிற்குப் பிறகு நிறுவனத்தை நடத்திவரும் இவர் பிள்ளைகள் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அனைவரையும் கலந்தாலோசித்தல், எடுக்கும் முடிவில் உறுதி, தொலைநோக்குச் சிந்தனை, புதியவர்களோடும் இளையவர்களோடும் தொடர்ந்து தொடர்பில் இருத்தல் முதலியவை இவரது நிர்வாக வெற்றியின் ரகசியங்கள். இத்தனையையும் தாண்டி இவர் அடைந்த வெற்றிக்கான முதன்மையான ரகசியம் ஒன்று உண்டு. அது ‘தன்னைப் போன்றவர்கள் மீதான அக்கறை’. அதுவே அவரைத் தொடர்ந்து இயங்க வைத்தது; பல பார்வை மாற்றுத்திறனாளிகளையும் வியக்கும் நிலையில் உயர்த்திவைத்தது.
பார்வையற்றவர்களுக்கே உரிய உடல் இயக்கமின்மை பிரச்சனை இவரையும் விட்டுவைக்கவில்லை. 24/7 மணி நேரமும் தன் அமைப்பைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த இவரால் தன் உடலைக் கவனித்துக்கொள்ள இயலவில்லை. புதிய பல சவால்களை உருவாக்கிக்கொண்டு வாழ்வில் போராடிய இவர், நோய்களோடும் போராடி டிசம்பர் 19, 2013 அன்று மறைந்தார்.
தென் தமிழகத்தின் ஒரே பார்வையற்றோருக்கான மேல்நிலைப் பள்ளி, தமிழகத்தில் எலாச் சமயங்கள் குறித்த பிரெயில் புத்தகங்களும் கிடைக்கும் ஒரே பிரெயில் அச்சகம் முதலிய பெருமைகள் IAB-க்கு உண்டு. இவற்றோடு, இன்னும் பல பெருமைகளைப் பெற்று, சாதாரண குடும்பங்களிலிருந்து வரும் பார்வையற்றவர்களை மேலுயர்த்தும் அமைப்பாக இந்நிறுவனம் நிலைத்து நிற்க வேண்டும்.
தான் சார்ந்த சமூகத்துக்காக உழைத்தவர்கள் என்றும் இறப்பதில்லை. அவர்கள் தங்கள் உழைப்பின் வழியாகவும், அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் வழியாகவும் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். ஆம். திரு. S. முஹமது அலி ஜின்னா அவர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார். நாமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
--
தொடர்புக்கு: [email protected]