2017 பார்வையற்றோருக்கு எப்படி இருந்தது? ஒரு சுருக்கமான பார்வை.
தமிழகம்
*மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் 2016இன் படி மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 3%லிருந்து 4%ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்தார். இதில் பார்வையற்றோருக்கான இட ஒதுக்கீடு ஏற்கெனவே இருந்ததுபோல 1%ஆகவே தொடரும்.
*7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஊதிய விகிதங்களின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப் படி (Conveyance Allowance) ரூ.1000லிருந்து ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
*புதுக்கோட்டை அரசு பார்வையற்றோருக்கான தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
*மதுரை IAB நிறுவனத்தால் நடத்தப்படும் ’விழிச்சவால்’ பிரெயில் மாத இதழ் இணையத்திலும் வெளியிடப்படுகிறது. இதன்மூலம் இணையத்தில் வெளியிடப்படும் முதல் தமிழ் பிரெயில் இதழ் என்ற பெருமையைப் பெறுகிறது ‘விழிச்சவால்’.
*மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கு என தனிப் பூங்கா மதுரையில் அமைக்கப்பட்டது.
*மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக இந்த ஆண்டின் தேசிய விருது வழங்கப்பட்டது.
*பார்வையற்றோருக்கான முதல் தமிழ் மின் நூலகமாக www.vaasippom.com தொடங்கப்பட்டது. தன்னார்வலர் ரவிக்குமார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் பல்வேறு வகைகளிலான தமிழ் நூல்கள் படிக்கக் கிடைக்கின்றன.
இந்தியா
*பார்வை இழப்பிற்கான வரையறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 6 மீ. தூரத்தில் கை விரல்களை எண்ணிக் கூற முடியாமையே பார்வை இன்மையாக இதுவரை கருதப்பட்டது. தற்போது 3 மீ. தூரத்தில் கை விரல்களை எண்ண முடியாதவர்களே பார்வை இழந்தவர்களாகக் கருதப்படுவர். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரையின் அடிப்படையில் இம்மாற்றத்தை மைய அரசு அறிவித்துள்ளது. இந்த அடிப்படையில் பார்வையற்றோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
*புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட GST வரி விதிப்பில் பிரெயில் எழுதுபொருட்கள், வெண்கோல்கள் முதலியவற்றுக்கு 12% முதல் 18% வரை வரி விதிக்கப்பட்டது பார்வையற்றோருக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு வரி விகிதம் 5%ஆக குறைக்கப்பட்டது.
*புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.50, ரூ.200 ஆகியவை பார்வையற்றோருக்கு ஒத்திசைவாக இல்லை என பலரும் கருதுகின்றனர். இதுகுறித்து தன்னார்வ அமைப்புகள் நீதிமன்றங்களை நாடியுள்ளன.
*பிராச்சி சுக்வானி என்ற குஜராத்தைச் சேர்ந்த பார்வையற்றவர் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM) உயர்கல்வி பெறுவதற்கான தகுதியைப் பெற்றார்.
*பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான அழகிப் போட்டி மும்பையில் நடைபெற்றது. NABயோடு இணைந்து ‘Blind Dreams’ என்ற அமைப்பு நடத்திய இப்போட்டியில் டெல்லியைச் சேர்ந்த சிம்ரன் சாவ்லா என்ற கல்லூரி மாணவி ‘Princes India’ பட்டம் பெற்றார்.
*பார்வையற்றோருக்குச் சிறப்புப் பள்ளிகளில் வழங்கப்படும் சிறப்புக் கல்வி அவசியம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
உலகம்
*அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் லெப்டினென்ட் கவர்னர் என்ற உயர் பொறுப்பிற்கு சய்ரஸ் ஹபீப் என்ற பார்வையற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அறிவியல்
*பார்வையற்றோரையும், அவர்களுக்கு உதவ விரும்பும் தன்னார்வலர்களையும் இணைத்திடும் ‘Be My Eyes’ என்ற செயலி தற்போது ஆண்டிராய்டு இயங்குதளத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் பார்வையற்றவர்கள் பார்வையுள்ளோரிடம் கேட்க விரும்பும் சின்னச் சின்ன ஐயங்களையும் கேட்டுத் தெளிவுபெறலாம். அதாவது பார்வையற்றவர்களின் கண்களாக செயல்பட விரும்பும் பார்வையுள்ளோர் இச்செயலியில் இணைந்திருப்பர். தமிழ் பேசும் பார்வையுள்ளோர் பலரும் இச்செயலியில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
*முகநூலில் உள்ள ஸ்டிக்கர்களைப் பார்வையற்றோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் அதன் விவரணைகளை திரை வாசிப்பான் (Screen Reader) மூலம் கேட்கும் வசதி இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
*கூகுல் நிறுவனம் ‘Visual Position System (VPS)’ என்ற வசதியைத் தயாரித்துவருகிறது. இந்த செயலி பார்வையற்றோருக்குப் பொது இடங்களில் பயன்படும். பொது இடங்களில் உள்ள வசதிகள், அவை அமைந்திருக்கும் திசைகள் முதலியவற்றை இச்செயலி தெளிவுபடுத்தும்.
பொழுதுபோக்கு
*இந்த ஆண்டு பார்வையற்றவரைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டு ‘அதே கண்கள்’ என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தின் நாயகன் தொழில்நுட்ப அறிவு மிகுந்த பார்வையற்றவராகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்.
*ஜீ.வி. பிரகாஷ் இசை அமைக்கும் ‘அடங்காதே’ படத்தில் பாடுகிறார் ஜோதி என்ற 16 வயது நிரம்பிய பார்வையற்றவர்; இவர் மன வளர்ச்சி குன்றியவரும்கூட.
*பார்வையற்றவரை முக்கியப் பாத்திரமாகக் கொண்ட ‘தங்கல்’ திரைப்படம் ஹிந்தி திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
*இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ‘தங்கல்’ திரைப்படம் ஒலி விவரிப்புடன் (Audio Description) ZEE தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது.
*பிரபல பின்னணிப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமியின் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
*இந்த ஆண்டு ‘அறம்’ திரைப்படம் ரேடியோ மிர்ச்சி உள்ளிட்ட சில அமைப்புகளால் ஒலி விவரிப்புடன் திரையிடப்பட்டது.
*விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் தனுஷ் என்ற பார்வையற்ற சிறுவன் பங்குபெற்று அசத்தினார்.
*சன் தொலைக்காட்சியின் ‘சன் சிங்கர்’ நிகழ்ச்சியில் ஜீவிதா என்ற பார்வையற்ற சிறுமி பங்குபெற்றார்.
விளையாட்டு
*9 நாடுகள் பங்கேற்ற பார்வையற்றோருக்கான 20-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வாகையர் பட்டம் பெற்றது. வெற்றி பெற்ற பிறகு அரசு வழங்கிய பரிசுத் தொகை குறைவாக இருப்பதாக பல தளங்களில் சர்ச்சை எழுந்தது.
*உலகளாவிய பிரபலம் பெற்ற பாஸ்டன் மாரத்தான் போட்டியில் சாகர் பஹேட்டி என்ற இந்தியர் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
இறப்புகள்
*பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் (College Students and Graduates Association for the Blind-CSGAB) உருவாகக் காரணமானவர்களுள் முதன்மையானவரான திரு. ச.சி. கண்ணன் அவர்கள் காலமானார். பொதுவுடைமைவாதியான இவர் பார்வையற்றோரிடையே போராட்ட உணர்வை விதைத்தவர். இன்று பல்வேறு அரசுப் பணிகளில் பார்வையற்றவர்கள் அமர்வதற்கான அடிப்படை வகுத்தவர்.
*தமிழகத்தின் முதல் பார்வையற்ற கிராண்ட் மாஸ்டரான திரு. முத்துராமன் அவர்கள் காலமானார். தமிழ்நாடு பார்வையற்றோருக்கான சதுரங்கச் சங்கம் (Tamilnadu Braille Chess Association-TNBCA) என்ற அமைப்பை நிறுவிய இவர் பல பார்வையற்றவர்களின் சதுரங்கக் கனவை நனவாக்கியவர்.
எதிர்பார்ப்பு
*மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டம் 2016இன் அடிப்படையில் தனது கொள்கை முடிவுகளைத் தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. 2018இல் அது அறிவிக்கப்படும் என நம்புவோம்.
*TET, முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்கள் பலருக்கு இன்னும் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2018இல் அது நிகழும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழகம்
*மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் 2016இன் படி மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 3%லிருந்து 4%ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்தார். இதில் பார்வையற்றோருக்கான இட ஒதுக்கீடு ஏற்கெனவே இருந்ததுபோல 1%ஆகவே தொடரும்.
*7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஊதிய விகிதங்களின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப் படி (Conveyance Allowance) ரூ.1000லிருந்து ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
*புதுக்கோட்டை அரசு பார்வையற்றோருக்கான தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
*மதுரை IAB நிறுவனத்தால் நடத்தப்படும் ’விழிச்சவால்’ பிரெயில் மாத இதழ் இணையத்திலும் வெளியிடப்படுகிறது. இதன்மூலம் இணையத்தில் வெளியிடப்படும் முதல் தமிழ் பிரெயில் இதழ் என்ற பெருமையைப் பெறுகிறது ‘விழிச்சவால்’.
*மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கு என தனிப் பூங்கா மதுரையில் அமைக்கப்பட்டது.
*மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக இந்த ஆண்டின் தேசிய விருது வழங்கப்பட்டது.
*பார்வையற்றோருக்கான முதல் தமிழ் மின் நூலகமாக www.vaasippom.com தொடங்கப்பட்டது. தன்னார்வலர் ரவிக்குமார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் பல்வேறு வகைகளிலான தமிழ் நூல்கள் படிக்கக் கிடைக்கின்றன.
இந்தியா
*பார்வை இழப்பிற்கான வரையறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 6 மீ. தூரத்தில் கை விரல்களை எண்ணிக் கூற முடியாமையே பார்வை இன்மையாக இதுவரை கருதப்பட்டது. தற்போது 3 மீ. தூரத்தில் கை விரல்களை எண்ண முடியாதவர்களே பார்வை இழந்தவர்களாகக் கருதப்படுவர். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரையின் அடிப்படையில் இம்மாற்றத்தை மைய அரசு அறிவித்துள்ளது. இந்த அடிப்படையில் பார்வையற்றோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
*புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட GST வரி விதிப்பில் பிரெயில் எழுதுபொருட்கள், வெண்கோல்கள் முதலியவற்றுக்கு 12% முதல் 18% வரை வரி விதிக்கப்பட்டது பார்வையற்றோருக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு வரி விகிதம் 5%ஆக குறைக்கப்பட்டது.
*புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.50, ரூ.200 ஆகியவை பார்வையற்றோருக்கு ஒத்திசைவாக இல்லை என பலரும் கருதுகின்றனர். இதுகுறித்து தன்னார்வ அமைப்புகள் நீதிமன்றங்களை நாடியுள்ளன.
*பிராச்சி சுக்வானி என்ற குஜராத்தைச் சேர்ந்த பார்வையற்றவர் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM) உயர்கல்வி பெறுவதற்கான தகுதியைப் பெற்றார்.
*பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான அழகிப் போட்டி மும்பையில் நடைபெற்றது. NABயோடு இணைந்து ‘Blind Dreams’ என்ற அமைப்பு நடத்திய இப்போட்டியில் டெல்லியைச் சேர்ந்த சிம்ரன் சாவ்லா என்ற கல்லூரி மாணவி ‘Princes India’ பட்டம் பெற்றார்.
*பார்வையற்றோருக்குச் சிறப்புப் பள்ளிகளில் வழங்கப்படும் சிறப்புக் கல்வி அவசியம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
உலகம்
*அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் லெப்டினென்ட் கவர்னர் என்ற உயர் பொறுப்பிற்கு சய்ரஸ் ஹபீப் என்ற பார்வையற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அறிவியல்
*பார்வையற்றோரையும், அவர்களுக்கு உதவ விரும்பும் தன்னார்வலர்களையும் இணைத்திடும் ‘Be My Eyes’ என்ற செயலி தற்போது ஆண்டிராய்டு இயங்குதளத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் பார்வையற்றவர்கள் பார்வையுள்ளோரிடம் கேட்க விரும்பும் சின்னச் சின்ன ஐயங்களையும் கேட்டுத் தெளிவுபெறலாம். அதாவது பார்வையற்றவர்களின் கண்களாக செயல்பட விரும்பும் பார்வையுள்ளோர் இச்செயலியில் இணைந்திருப்பர். தமிழ் பேசும் பார்வையுள்ளோர் பலரும் இச்செயலியில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
*முகநூலில் உள்ள ஸ்டிக்கர்களைப் பார்வையற்றோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் அதன் விவரணைகளை திரை வாசிப்பான் (Screen Reader) மூலம் கேட்கும் வசதி இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
*கூகுல் நிறுவனம் ‘Visual Position System (VPS)’ என்ற வசதியைத் தயாரித்துவருகிறது. இந்த செயலி பார்வையற்றோருக்குப் பொது இடங்களில் பயன்படும். பொது இடங்களில் உள்ள வசதிகள், அவை அமைந்திருக்கும் திசைகள் முதலியவற்றை இச்செயலி தெளிவுபடுத்தும்.
பொழுதுபோக்கு
*இந்த ஆண்டு பார்வையற்றவரைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டு ‘அதே கண்கள்’ என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தின் நாயகன் தொழில்நுட்ப அறிவு மிகுந்த பார்வையற்றவராகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்.
*ஜீ.வி. பிரகாஷ் இசை அமைக்கும் ‘அடங்காதே’ படத்தில் பாடுகிறார் ஜோதி என்ற 16 வயது நிரம்பிய பார்வையற்றவர்; இவர் மன வளர்ச்சி குன்றியவரும்கூட.
*பார்வையற்றவரை முக்கியப் பாத்திரமாகக் கொண்ட ‘தங்கல்’ திரைப்படம் ஹிந்தி திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
*இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ‘தங்கல்’ திரைப்படம் ஒலி விவரிப்புடன் (Audio Description) ZEE தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது.
*பிரபல பின்னணிப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமியின் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
*இந்த ஆண்டு ‘அறம்’ திரைப்படம் ரேடியோ மிர்ச்சி உள்ளிட்ட சில அமைப்புகளால் ஒலி விவரிப்புடன் திரையிடப்பட்டது.
*விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் தனுஷ் என்ற பார்வையற்ற சிறுவன் பங்குபெற்று அசத்தினார்.
*சன் தொலைக்காட்சியின் ‘சன் சிங்கர்’ நிகழ்ச்சியில் ஜீவிதா என்ற பார்வையற்ற சிறுமி பங்குபெற்றார்.
விளையாட்டு
*9 நாடுகள் பங்கேற்ற பார்வையற்றோருக்கான 20-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வாகையர் பட்டம் பெற்றது. வெற்றி பெற்ற பிறகு அரசு வழங்கிய பரிசுத் தொகை குறைவாக இருப்பதாக பல தளங்களில் சர்ச்சை எழுந்தது.
*உலகளாவிய பிரபலம் பெற்ற பாஸ்டன் மாரத்தான் போட்டியில் சாகர் பஹேட்டி என்ற இந்தியர் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
இறப்புகள்
*பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் (College Students and Graduates Association for the Blind-CSGAB) உருவாகக் காரணமானவர்களுள் முதன்மையானவரான திரு. ச.சி. கண்ணன் அவர்கள் காலமானார். பொதுவுடைமைவாதியான இவர் பார்வையற்றோரிடையே போராட்ட உணர்வை விதைத்தவர். இன்று பல்வேறு அரசுப் பணிகளில் பார்வையற்றவர்கள் அமர்வதற்கான அடிப்படை வகுத்தவர்.
*தமிழகத்தின் முதல் பார்வையற்ற கிராண்ட் மாஸ்டரான திரு. முத்துராமன் அவர்கள் காலமானார். தமிழ்நாடு பார்வையற்றோருக்கான சதுரங்கச் சங்கம் (Tamilnadu Braille Chess Association-TNBCA) என்ற அமைப்பை நிறுவிய இவர் பல பார்வையற்றவர்களின் சதுரங்கக் கனவை நனவாக்கியவர்.
எதிர்பார்ப்பு
*மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டம் 2016இன் அடிப்படையில் தனது கொள்கை முடிவுகளைத் தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. 2018இல் அது அறிவிக்கப்படும் என நம்புவோம்.
*TET, முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்கள் பலருக்கு இன்னும் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2018இல் அது நிகழும் என எதிர்பார்க்கிறோம்.