ஓர் எழுத்தாளர், இரு நூற்றாண்டு, மூவகை எதிர்ப்பு, நான்கு தலைமுறை, ஐந்தினை, ஆறு சுவை, ஏழு பரிணாமம், எண் திசை ஈர்ப்பு, நவரசம் கொண்ட, எண்பது ஆண்டு ஓய்வற்ற, சலிப்பற்ற ஒப்பாரும் மிக்காருமற்ற இதழியலாளர். இதழ் மணக்கும் இவர் இதழியலைச் சுவைக்கும்போது, ஏடுகளுக்குச் சிறப்பு; எழுத்துக்கு உயர்வு. தமிழுக்கு மகுடம் அவரை எழுதும்போது - அவர்தான் கலைஞர்.
மூத்த குழந்தை
1940-களில் ஓர் மாணவன் கையெழுத்துப் பிரதியாகத் துவங்கி, தலையில் சுமந்த ‘மாணவ நேசன்’, வருங்காலத் தமிழகத் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் என யாரும் கணிக்கவில்லை. பேரறிஞரே வியந்த எழுத்து அது. மாணவர் படை திரட்டி இந்தியை விரட்டியது கலைஞர் அவர்களின் செல்லக் குழந்தை அன்று.
காலப்போக்கில் முரசொலியாகி, தமிழர் தம் தலை நிமிர்ந்திட அவரின் எழுத்துக்கள் முரசறைந்தன. இன்றைய விஞ்ஞான உலகிலேயே சில சமயங்களில் நாளேடுகள் வெளிவருவதில் சிக்கல் இருக்கும்போதும், ஓயாத சூரியனாய் எழுதி, பிரதி எடுத்து, மக்கள் கையில் சேர்க்கும் பணியை மழையையும், புயலையும், பல தடைகளையும் கடந்து சிறப்புறச் செய்தவர் கலைஞர் அவர்கள். பல பரிணாமம் கடந்து இன்று இணைய முரசொலியும் மிளிர்கிறதென்றால் அவரது இதழியல் ஈடுபாட்டுக்குச் சான்று தேவையா?
முரசொலி – ஓர் தேடுபொறி
இன்றைய இளைய சமுதாயமும், பல துறை வல்லுனர்களும், ஏன் மாற்றுக் கட்சியினரும் தங்களுக்கு ஏதேனும் தேவையென்றாலும், விளக்கம் பெற வேண்டுமென்றாலும் தேடிச் செல்லும் ஓர் இதழ் ‘முரசொலி’. இதழ் என்பதைவிட, முரசொலி ஓர் நூலகம் என்றால் மிகையாகாது. முரசொலியை, படிக்காத பாமரனுக்கும் விளங்கும் வகையில் எளிய தமிழில், இனிய நயத்தில் செவ்வனே வெளிவரச் செய்து இதழியலில் புரட்சி படைத்தவர் கலைஞர்.
‘உடன்பிறப்புக்குக் கடிதம்’ தினமும் எழுதி, தனது கருத்துகளையும், எதிர்வினைகளையும், கண்டனங்களையும், கட்டளைகளையும் கனிவாக வெளிப்படுத்தி கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் கட்சியை வழிநடத்தும் ஆயுதமாக்கியவர் கலைஞர். அதுமட்டுமல்லாமல், பல பூகம்பங்களைக் கடிதத்தின் மூலம் பூவாக்கிய எழுத்து அவருடையது.
‘கேள்வி பதில்’ பாணியில் எதிர்க்கட்சிகளைக் கேள்விகளாலும், பல புள்ளி விவரங்களுடனான பதில்களாலும் திணறடித்து, இந்திய அரசியல் நகர்வுகளை நடத்திய ஒரே எழுத்தாளர் கலைஞர் அவர்கள்.
படைப்பாளி ஓர் படிப்பாளி
ஓர் படைப்பாளியானவர் சிறந்த படிப்பாளியாக இருக்கவேண்டும் என்பதற்குத் தானே உதாரணமாக வாழ்ந்தவர் கலைஞர் அவர்கள். தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து அனைத்து நாளேடுகளையும் படித்து, அதற்குப் பதில் தயார் செய்து, ஆளுங்கட்சியாக இருப்பின் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவுகளை வழங்கி, முரசொலிக்கு எழுதி முடிக்கும் நேரம், நாம் துயில் களையும் சமயமாகும்.
ஒருமுறை பேராசிரியர் சுபவீ அவர்கள் கலைஞரைச் சந்திக்கச் சென்றபோது, ஓர் குறிப்பிட்ட இதழைப் படித்தீர்களா இன்று என அவர் கேட்க, “இல்லைங்க ஐயா” என்றிருக்கிறார் பேராசிரியர். அதற்குக் கலைஞர், “உங்களைப் பற்றிய செய்திதான் வந்திருக்கிறது; படியுங்கள்” என்று சொல்லியுள்ளார். இன்னொரு சமயம், ஒரு எழுத்தாளர் தனது புத்தகத்தைக் கலைஞரிடம் தந்துவிட்டு சென்ற 4 நாள் கழித்து, கலைஞர் அவரை அழைத்து, இந்த இடத்தில் ஏன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறீர்கள் என வினவியுள்ளார்.
கலைஞர் பாணி
‘மிசா’ சட்டம் பத்திரிக்கைகளை தணிக்கை என்று சொல்லி தடுத்த சமயம், மிசாவில் கைதான உடன்பிறப்புகளின் பட்டியலை உலகுக்கு முரசறையும் வகையில், பேரறிஞர் அண்ணா சமாதிக்கு ‘நினைவு நாளில் வர இயலாதோர் பட்டியல்’ என வெளியிட்டு தணிக்கையையே தணிக்கை செய்தவர் கலைஞர் அவர்கள்.
முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்த போது, கலைஞரின் சிலையை உடைத்துவிட்டனர் சிலர்; அது தொண்டர்கள் மத்தியில் பெரும் கனலை எழுப்பியது. அச்சமயம் பெரும் அசம்பாவிதம் ஏதும் நடந்திடா வகையில், உடன்பிறப்பு கடிதம் மூலம் தொண்டர்களை அமைதி செய்தவர் கலைஞர் அவர்கள்.
2009-ஆம் ஆண்டு முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து வந்த கலைஞர் உடல்நலன் குறித்து அவ்வப்போது அன்றைய எதிர்கட்சித் தலைவி அவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அது தொண்டர்களிடையே பெரும் எதிர்ப்புகள் எதிர்வினையாகத் துவங்க இருந்த தருணம், ‘உடன்பிறப்பே! எதிர்க்கட்சித் தலைவி அவர்கள் தினமும் தந்த மருந்து, மருத்துவர்கள் தந்த மருந்துகளைக் காட்டிலும் என்னை விரைவில் நலம்பெறச் செய்தது!’ என கடிதம் எழுதி அமைதிப்படுத்தியவரும் கலைஞர்தான்.
தமிழுக்கு மகுடம்
தமிழைச் ‘செம்மொழி’ என உணர்த்தி, அழகுக் கருத்துகளைப் பூமாலையாய்க் கோர்த்து பாமாலை வடித்து, உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கருப்பாடலை அமைத்துத் தமிழுக்கு மேலும் ஓர் மகுடம் தந்தவர் கலைஞர்.
தொல்காப்பியத்தை எளியோருக்கும் புரியும் வண்ணம் அதன் தனித்துவம் பாதிக்காமல் தொல்காப்பியப் பூங்காவாக படைத்த நவீன தொல்காப்பியர் கலைஞர்!
புறநானூற்றுப் பாடல்களையும், சங்கத் தமிழ் இலக்கியங்களையும் தனது பாணியில் நயத்துடன் எழுதி, சங்ககாலத் தமிழர் பண்பாடு, ஒழுக்கம், கொடை, வீரம், காதல் மற்றும் அக்கால மகளிர்தம் ஒப்பற்ற வீரம் முதலியவற்றை இன்றைய தலைமுறையும் படிக்கச் செய்தவர் கலைஞர் அவர்கள்.
திருக்குறளுக்கு உரை எழுதிய பலருள் எளிய உரையையும், பகுத்தறிவையும் அதில் அமைத்துக் குறளோவியம் தந்து அனைவரிடமும் திருக்குறளை கொண்டு சேர்த்த பங்கு கலைஞரின் எழுத்துக்குரியது.
கதை வசனம், கவிதை, திரைப்பாடல்கள், நாடகம், கடிதம், புதினம், சிறுகதை என அனைத்தும் வடித்த ஒரே எழுத்தாளர் கலைஞர்.
இதழியலாளர் தோழர்
கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் பத்திரிக்கையாளர்களின் நலனில் அக்கரை கொண்டவரே. ஒரு சமயம் ‘நக்கீரன்’ இதழுக்குப் பிரச்சனை வந்தபோது, அனைத்து அச்சகங்களும் கதவைச் சாத்திக்கொண்டன. அன்று தனது முரசொலி அச்சகத்தில் நக்கீரனை பதிப்பித்து வெளிவர வகை செய்தார். வேறு ஒரு சமயம், ஆட்சியாளர்களின் ஊழல்களை, ‘குற்றவாளிகள் 1, 2, 3, 4’ என நக்கீரன் வெளியிட்டபோது, அதன் ஆசிரியரை அழைத்து, ‘இந்தப் புத்தக வரிசையை நிறுத்திவிடுங்கள். ஏனெனில், ஆட்சியாளர்களால் நக்கீரனுக்கு எந்த இடையூரும் ஏற்பட்டுவிடக்கூடாது. அவர்கள் ஆளுங்கட்சியினர்’ என அறிவுறுத்தியவர் கலைஞர்.
செய்தியாளர்கள் தங்களின் செய்திகளை உரிய நேரத்தில் அச்சிடும் வகையில், செய்திகளை குறித்த நேரத்துக்கு தந்து அவர்களின் காலத்தை உணர்ந்து மதிப்பளிக்கும் உண்மைத் தோழர் கலைஞர்.
பஞ்சாப் பதன்கோட்டில் நடந்த விமான நிலையத் தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி ஆங்கில ஊடகமான ‘NDTV’ செய்தி வெளியிட்டதை அரசு தடுத்து ஒளிபரப்பை நிறுத்தியபோது, ஊடக சுதந்திரம் காக்க தனது முதல் கண்டனத்தைப் பதிவிட்ட இதழியலாளர் கலைஞர் அவர்கள். இதுபோல, பத்திரிக்கை சுதந்திரம் தடுக்கப்படும் போதெல்லாம், அதற்காகப் போராடிய தலைசிறந்த இதழியலாளர் கலைஞர்.
நெஞ்சுக்கு நீதி
கலைஞர் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதும் விதமாக ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற நூலை 6 பாகங்களாக வெளியிட்டுள்ளார். அந்தத் தொகுப்பு தமிழர் வரலாற்றைப் பேசும்; சுயமரியாதை வளர்க்கும்; தன்னம்பிக்கையை தழைக்கச் செய்யும் ஒரு சிறிய நூலகமாக அமைந்து, தமிழக அரசியல் களத்துடனான ஒரு நீண்ட நெடிய பயணத்தை வருங்கால சந்ததிகளுக்கு உணர்த்தும் வரலாற்றுச் சான்றாக அது திகழ்கிறது.
இணையம் இணங்கியது
இன்றைய சமூக ஊடகங்களில் பங்காற்றும் வகையில், தனது 80-ஆவது அகவையில் கணினி பயின்று சமூக வலைதளங்களில் தனது கருத்துகளைப் பதியத் தொடங்கினார் கலைஞர். அனைத்து வகையான பின்னூட்டங்களையும் கடந்து, சிறப்புற இதழியலை இணையத்தில் இணைத்த முதல் அரசியல் தலைவரும், எழுத்தாளரும் கலைஞர் அவர்கள்தான்.
முடிவிலியான கலைஞர் அவர்களின் இதழியல் பங்கானது ஒரு பெருங்கடல். அதன் சிறு துளியே இந்தக் கட்டுரை. தமிழ் கூறும் நல்லுலகம் பல ஆய்வுகளை மேற்கொண்டு கலைஞரின் எழுத்துகளை ஆவணமாக்க வேண்டும்.
ஆனால், இதழியல் தனது பக்கங்களை ஏனோ இவ்வளவு சீக்கிரம் முடித்துக்கொண்டது! எப்படியோ, “ஓய்வெடுக்காத ஒரு எழுத்தாளர், இன்று தனது எழுதுகோலுக்குச் சந்தனப் பெட்டிக்குள் ஓய்வு தந்துவிட்டார்!”
--
(கட்டுரையாளர் பரோடா வங்கி, சேலம் கிளையின் உதவி மேலாளர்).
தொடர்புக்கு: [email protected]
மூத்த குழந்தை
1940-களில் ஓர் மாணவன் கையெழுத்துப் பிரதியாகத் துவங்கி, தலையில் சுமந்த ‘மாணவ நேசன்’, வருங்காலத் தமிழகத் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் என யாரும் கணிக்கவில்லை. பேரறிஞரே வியந்த எழுத்து அது. மாணவர் படை திரட்டி இந்தியை விரட்டியது கலைஞர் அவர்களின் செல்லக் குழந்தை அன்று.
காலப்போக்கில் முரசொலியாகி, தமிழர் தம் தலை நிமிர்ந்திட அவரின் எழுத்துக்கள் முரசறைந்தன. இன்றைய விஞ்ஞான உலகிலேயே சில சமயங்களில் நாளேடுகள் வெளிவருவதில் சிக்கல் இருக்கும்போதும், ஓயாத சூரியனாய் எழுதி, பிரதி எடுத்து, மக்கள் கையில் சேர்க்கும் பணியை மழையையும், புயலையும், பல தடைகளையும் கடந்து சிறப்புறச் செய்தவர் கலைஞர் அவர்கள். பல பரிணாமம் கடந்து இன்று இணைய முரசொலியும் மிளிர்கிறதென்றால் அவரது இதழியல் ஈடுபாட்டுக்குச் சான்று தேவையா?
முரசொலி – ஓர் தேடுபொறி
இன்றைய இளைய சமுதாயமும், பல துறை வல்லுனர்களும், ஏன் மாற்றுக் கட்சியினரும் தங்களுக்கு ஏதேனும் தேவையென்றாலும், விளக்கம் பெற வேண்டுமென்றாலும் தேடிச் செல்லும் ஓர் இதழ் ‘முரசொலி’. இதழ் என்பதைவிட, முரசொலி ஓர் நூலகம் என்றால் மிகையாகாது. முரசொலியை, படிக்காத பாமரனுக்கும் விளங்கும் வகையில் எளிய தமிழில், இனிய நயத்தில் செவ்வனே வெளிவரச் செய்து இதழியலில் புரட்சி படைத்தவர் கலைஞர்.
‘உடன்பிறப்புக்குக் கடிதம்’ தினமும் எழுதி, தனது கருத்துகளையும், எதிர்வினைகளையும், கண்டனங்களையும், கட்டளைகளையும் கனிவாக வெளிப்படுத்தி கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் கட்சியை வழிநடத்தும் ஆயுதமாக்கியவர் கலைஞர். அதுமட்டுமல்லாமல், பல பூகம்பங்களைக் கடிதத்தின் மூலம் பூவாக்கிய எழுத்து அவருடையது.
‘கேள்வி பதில்’ பாணியில் எதிர்க்கட்சிகளைக் கேள்விகளாலும், பல புள்ளி விவரங்களுடனான பதில்களாலும் திணறடித்து, இந்திய அரசியல் நகர்வுகளை நடத்திய ஒரே எழுத்தாளர் கலைஞர் அவர்கள்.
படைப்பாளி ஓர் படிப்பாளி
ஓர் படைப்பாளியானவர் சிறந்த படிப்பாளியாக இருக்கவேண்டும் என்பதற்குத் தானே உதாரணமாக வாழ்ந்தவர் கலைஞர் அவர்கள். தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து அனைத்து நாளேடுகளையும் படித்து, அதற்குப் பதில் தயார் செய்து, ஆளுங்கட்சியாக இருப்பின் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவுகளை வழங்கி, முரசொலிக்கு எழுதி முடிக்கும் நேரம், நாம் துயில் களையும் சமயமாகும்.
ஒருமுறை பேராசிரியர் சுபவீ அவர்கள் கலைஞரைச் சந்திக்கச் சென்றபோது, ஓர் குறிப்பிட்ட இதழைப் படித்தீர்களா இன்று என அவர் கேட்க, “இல்லைங்க ஐயா” என்றிருக்கிறார் பேராசிரியர். அதற்குக் கலைஞர், “உங்களைப் பற்றிய செய்திதான் வந்திருக்கிறது; படியுங்கள்” என்று சொல்லியுள்ளார். இன்னொரு சமயம், ஒரு எழுத்தாளர் தனது புத்தகத்தைக் கலைஞரிடம் தந்துவிட்டு சென்ற 4 நாள் கழித்து, கலைஞர் அவரை அழைத்து, இந்த இடத்தில் ஏன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறீர்கள் என வினவியுள்ளார்.
கலைஞர் பாணி
‘மிசா’ சட்டம் பத்திரிக்கைகளை தணிக்கை என்று சொல்லி தடுத்த சமயம், மிசாவில் கைதான உடன்பிறப்புகளின் பட்டியலை உலகுக்கு முரசறையும் வகையில், பேரறிஞர் அண்ணா சமாதிக்கு ‘நினைவு நாளில் வர இயலாதோர் பட்டியல்’ என வெளியிட்டு தணிக்கையையே தணிக்கை செய்தவர் கலைஞர் அவர்கள்.
முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்த போது, கலைஞரின் சிலையை உடைத்துவிட்டனர் சிலர்; அது தொண்டர்கள் மத்தியில் பெரும் கனலை எழுப்பியது. அச்சமயம் பெரும் அசம்பாவிதம் ஏதும் நடந்திடா வகையில், உடன்பிறப்பு கடிதம் மூலம் தொண்டர்களை அமைதி செய்தவர் கலைஞர் அவர்கள்.
2009-ஆம் ஆண்டு முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து வந்த கலைஞர் உடல்நலன் குறித்து அவ்வப்போது அன்றைய எதிர்கட்சித் தலைவி அவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அது தொண்டர்களிடையே பெரும் எதிர்ப்புகள் எதிர்வினையாகத் துவங்க இருந்த தருணம், ‘உடன்பிறப்பே! எதிர்க்கட்சித் தலைவி அவர்கள் தினமும் தந்த மருந்து, மருத்துவர்கள் தந்த மருந்துகளைக் காட்டிலும் என்னை விரைவில் நலம்பெறச் செய்தது!’ என கடிதம் எழுதி அமைதிப்படுத்தியவரும் கலைஞர்தான்.
தமிழுக்கு மகுடம்
தமிழைச் ‘செம்மொழி’ என உணர்த்தி, அழகுக் கருத்துகளைப் பூமாலையாய்க் கோர்த்து பாமாலை வடித்து, உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கருப்பாடலை அமைத்துத் தமிழுக்கு மேலும் ஓர் மகுடம் தந்தவர் கலைஞர்.
தொல்காப்பியத்தை எளியோருக்கும் புரியும் வண்ணம் அதன் தனித்துவம் பாதிக்காமல் தொல்காப்பியப் பூங்காவாக படைத்த நவீன தொல்காப்பியர் கலைஞர்!
புறநானூற்றுப் பாடல்களையும், சங்கத் தமிழ் இலக்கியங்களையும் தனது பாணியில் நயத்துடன் எழுதி, சங்ககாலத் தமிழர் பண்பாடு, ஒழுக்கம், கொடை, வீரம், காதல் மற்றும் அக்கால மகளிர்தம் ஒப்பற்ற வீரம் முதலியவற்றை இன்றைய தலைமுறையும் படிக்கச் செய்தவர் கலைஞர் அவர்கள்.
திருக்குறளுக்கு உரை எழுதிய பலருள் எளிய உரையையும், பகுத்தறிவையும் அதில் அமைத்துக் குறளோவியம் தந்து அனைவரிடமும் திருக்குறளை கொண்டு சேர்த்த பங்கு கலைஞரின் எழுத்துக்குரியது.
கதை வசனம், கவிதை, திரைப்பாடல்கள், நாடகம், கடிதம், புதினம், சிறுகதை என அனைத்தும் வடித்த ஒரே எழுத்தாளர் கலைஞர்.
இதழியலாளர் தோழர்
கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் பத்திரிக்கையாளர்களின் நலனில் அக்கரை கொண்டவரே. ஒரு சமயம் ‘நக்கீரன்’ இதழுக்குப் பிரச்சனை வந்தபோது, அனைத்து அச்சகங்களும் கதவைச் சாத்திக்கொண்டன. அன்று தனது முரசொலி அச்சகத்தில் நக்கீரனை பதிப்பித்து வெளிவர வகை செய்தார். வேறு ஒரு சமயம், ஆட்சியாளர்களின் ஊழல்களை, ‘குற்றவாளிகள் 1, 2, 3, 4’ என நக்கீரன் வெளியிட்டபோது, அதன் ஆசிரியரை அழைத்து, ‘இந்தப் புத்தக வரிசையை நிறுத்திவிடுங்கள். ஏனெனில், ஆட்சியாளர்களால் நக்கீரனுக்கு எந்த இடையூரும் ஏற்பட்டுவிடக்கூடாது. அவர்கள் ஆளுங்கட்சியினர்’ என அறிவுறுத்தியவர் கலைஞர்.
செய்தியாளர்கள் தங்களின் செய்திகளை உரிய நேரத்தில் அச்சிடும் வகையில், செய்திகளை குறித்த நேரத்துக்கு தந்து அவர்களின் காலத்தை உணர்ந்து மதிப்பளிக்கும் உண்மைத் தோழர் கலைஞர்.
பஞ்சாப் பதன்கோட்டில் நடந்த விமான நிலையத் தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி ஆங்கில ஊடகமான ‘NDTV’ செய்தி வெளியிட்டதை அரசு தடுத்து ஒளிபரப்பை நிறுத்தியபோது, ஊடக சுதந்திரம் காக்க தனது முதல் கண்டனத்தைப் பதிவிட்ட இதழியலாளர் கலைஞர் அவர்கள். இதுபோல, பத்திரிக்கை சுதந்திரம் தடுக்கப்படும் போதெல்லாம், அதற்காகப் போராடிய தலைசிறந்த இதழியலாளர் கலைஞர்.
நெஞ்சுக்கு நீதி
கலைஞர் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதும் விதமாக ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற நூலை 6 பாகங்களாக வெளியிட்டுள்ளார். அந்தத் தொகுப்பு தமிழர் வரலாற்றைப் பேசும்; சுயமரியாதை வளர்க்கும்; தன்னம்பிக்கையை தழைக்கச் செய்யும் ஒரு சிறிய நூலகமாக அமைந்து, தமிழக அரசியல் களத்துடனான ஒரு நீண்ட நெடிய பயணத்தை வருங்கால சந்ததிகளுக்கு உணர்த்தும் வரலாற்றுச் சான்றாக அது திகழ்கிறது.
இணையம் இணங்கியது
இன்றைய சமூக ஊடகங்களில் பங்காற்றும் வகையில், தனது 80-ஆவது அகவையில் கணினி பயின்று சமூக வலைதளங்களில் தனது கருத்துகளைப் பதியத் தொடங்கினார் கலைஞர். அனைத்து வகையான பின்னூட்டங்களையும் கடந்து, சிறப்புற இதழியலை இணையத்தில் இணைத்த முதல் அரசியல் தலைவரும், எழுத்தாளரும் கலைஞர் அவர்கள்தான்.
முடிவிலியான கலைஞர் அவர்களின் இதழியல் பங்கானது ஒரு பெருங்கடல். அதன் சிறு துளியே இந்தக் கட்டுரை. தமிழ் கூறும் நல்லுலகம் பல ஆய்வுகளை மேற்கொண்டு கலைஞரின் எழுத்துகளை ஆவணமாக்க வேண்டும்.
ஆனால், இதழியல் தனது பக்கங்களை ஏனோ இவ்வளவு சீக்கிரம் முடித்துக்கொண்டது! எப்படியோ, “ஓய்வெடுக்காத ஒரு எழுத்தாளர், இன்று தனது எழுதுகோலுக்குச் சந்தனப் பெட்டிக்குள் ஓய்வு தந்துவிட்டார்!”
--
(கட்டுரையாளர் பரோடா வங்கி, சேலம் கிளையின் உதவி மேலாளர்).
தொடர்புக்கு: [email protected]