அ) கலைஞரோடு கனவில் ஒரு கலந்துரையாடல் - பேரா. உ. மகேந்திரன்
மன மேடையில் அன்று சோக நாடகம் அரங்கேற்றப்படும் அதிசயம் கண்டேன்!
இழப்பின் பாரம் இதயத்தின் மீதேற, என்னை மறந்து இடிந்து போயிருந்தேன்!
உண்மையை உரைப்பதென்றால் மணி ஆறு பத்திற்கு இந்தத் தமிழ் மண்ணை ஒரு ஆபத்து ஆட்கொண்டது!
விடுதலை வென்ற மாதத்தில், ஓர் பேருயிர் விருப்பம் இன்றி தன்னை விடுவித்துக் கொண்டது!
பிரிவின் பிறப்பிடம் அந்த சப்த தேதியில் நிசப்தத்தைப் பிரசவித்து பெருந்துயர் கொள்ளச் செய்தது!
காவிரியில் கரைபுரளும் வெள்ளமாக கோடி கருவிழிகள் கண் நதியை பெருக்கெடுக்கச் செய்தன அன்று!
இப்படி எண்ணங்கள் யாவும் கசையடி பட்டுக்கிடக்க கவலைத் தாயின் மடியில் கண்ணயர்ந்து போனேன்.
ஈடேரா எண்ணங்கள் உருவம் தரித்து கனவு உலகத்தில் உலாவருவதைக் கண்டு அதிசயித்தேன்!
கையில் வெண்கோல் பிடித்து கண்ணகி நிறுத்தத்தில் நான் காத்திருக்க,
என் கரம் பிடித்து காற்று வெளியில் அழைத்துச் சென்றார் அவர்!
இறுகப் பற்றிக்கொண்டேன் அந்த பொன்னர் சங்கரின் பொற்கரத்தை.
விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அல்ல;
அவசரமாய் விழித்துவிடக் கூடாது என்பதற்காக!
கேட்டேன் அவரிடம், “ஏன் நிறுத்திக்கொண்டீர் உமது சுவாசத்தை?”
காரணம், அது வெறும் இதயத் துடிதுடிப்பு மட்டும் அன்று;
தமிழரின் உரிமையை அடித்துரைக்கும் முரசொலி ஆதலால்!
“போதும் என்ற மன நிறைவு அல்ல, போதவில்லை என்கிற உடல் குறைவே காரணம்” என்றார் அவர்.
“ஐயா! நீங்கள் அதிகமாய் நேசித்தது இயக்குவதையா அல்லது இயற்றுவதையா?” என வினவினேன்.
“என்னை இரண்டிலும் இயங்கச் செய்த இலக்கியத்தை அல்லவா உயிராய் நேசித்தேன்!” என்றார்.
“உங்கள் உழைப்பில் உயிர்ப்புடன் விழித்துக்கிடந்த அம்சம் எது?” என்றேன்.
“தமிழுக்கு ஆற்ற வேண்டிய கடமை, அண்ணா கொடையாய் அளித்த கண்ணியம், எதிர்ப்பாளர்களால் வளர்ந்திட்ட கட்டுப்பாடு” என்றார்.
“நாங்களோ இழந்து தவிப்பது உங்களை. உயிருடன் இருக்கையில் வாழ்வில் நீங்கள் இழந்தது எவற்றையோ?” என்றேன்.
“முதலில் புரட்டிப் படிக்கவும் எழுதித் திளைக்கவும் இருந்த இரு கைதனையும் வயோதிகத்தால் இழந்தேன். அடுத்து இயன்றதை செய்ய வாய்ப்பளிக்கும் இருக்கைதனையும் இழந்தேன்” என்றார் வேடிக்கையாக!
“மறக்க இயலா மணித்துளிகள் என்று எவற்றை மதிப்பிடுவீர்?” என்றேன்.
“தமிழ்த் தொண்டு புரிந்ததும், விளிம்புநிலை மனிதருக்குச் சட்டத் தராசு கொண்டு சமநிலை வழங்க முயன்ற கணங்களும் அத்தகையவை என்பேன்” என்றார்!
“ஏற்றத்தாழ்வுகள் பெருகினால், சமூக நீதியின்மீதே அநியாய சாட்டையடி விழுந்தால் நாங்கள் என்னதான் செய்வதோ?” என்றேன்.
“ஆய்ந்தறிந்து, அதையே பெரும் ஆற்றலாய் கொண்டு, பிறகு பாய்ந்து எதிர்க்கும் பண்பினைப் பழக்கிவிட்டால் பகைவர் பயம் கொள்வர்” என்றார் தீர்க்கமாக!
“நடமாட உமது உடல் மறுத்த வேளையில் நீர் நவின்றதே மாற்றுத்திறனாளி என்னும் சொற்றொடர் என்கிறார்களே நயவஞ்சகர்கள்?” என்றேன்.
“உண்மைதான். அது என் உடலில் இருந்ததே தவிர ஒருபோதும் உள்ளத்தில் இருந்திருக்கவில்லையே” என்கிறார் பெருமிதம் பொங்க!
“அங்ஙனம் உரைத்ததன் அர்த்தம் என்ன” என்றேன் பனிவாக.
“கண்டதை எல்லாம் வைத்து மதிப்பிடாமல், புலப்படா உறத்தின் உள்ளீடைக் கொண்டு மதிப்பிட வேண்டும் என்று பொருள்” என்றார் நேர்த்தியாக!
“வாரியம் தந்தீர்! சட்டப்படி வேலைகள் அளித்தீர்! இருந்தும் வஞ்சிக்கப்படுகிறோம் அவற்றின் தொடர்ச்சியின்றி” என்று வருந்தி உரைத்தேன்.
“ஆள்பவரைச் சார்ந்தே இருந்தால் ஆட்டியும் வைப்பார், அடக்கவே அனுதினமும் நினைப்பார். போராடி வென்றிடுவீர். கொரிக்கை ஒன்று யாதெனில், ஒதுக்கீடு வேண்டும் பகுதியாக அல்ல, பாராளும் மற்றும் சட்ட மன்றங்களில் தொகுதியாக!” என்றார்.
அதன் பிறகு கனவு கலைந்தது! கலைஞரும் மறைந்துவிட்டார்!
ஆனால், அந்த எண்ண விதை நிச்சயம் விருட்சம் பெறும்;
நம் வாழ்வு ஒருநாள் பேர் வெளிச்சம்பெறும்!
--
(கவிஞர் சென்னை சர். தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர்).
தொடர்புக்கு: [email protected]
----------
ஆ) புகழஞ்சலி - நிஷா (எ) திலகவதி
அஞ்சா நெஞ்சமே! ஆசான்களின் சின்னமே!
இன்னிசைத் தமிழனே! ஈடில்லாப் புலவனே!
உன்னதக் கவிஞனே! ஊர் போற்றும் கலைஞனே!
எரியாத சூரியனே! ஏகாந்த நாயகனே!
அரசியல் என்ற ஐந்தெழுத்தின் முதல்வனே!
ஒப்பிட இயலாத ஓர் தலைவனே!
ஔவைதமிழ் பாடும் அறிவுலக முதல்வனே!
உன் தமிழைத் தா, தா என்று தமிழன்னை கெஞ்சியது!
உன்னை தமிழ்த் தாத்தாயென்று தமிழர் மனம் கொஞ்சியது!
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பது முதுமொழி;
கலைஞரின் கரம் பட்டால் காகிதமும் காவியமாகுமென்பது புதுமொழி!
உன்னால் செம்மொழியானது தமிழ்மொழி;
அதனால் வலிமையானது நம் தாய்மொழி!
திரைத்துறை உன் திறமையால் புது மலர்ச்சியைப் பெற்றது!
அரசுத்துறை உன் ஆளுமையால் பெரும்புரட்சியைக் கற்றது!
தமிழ்த்துறை உன் புலமையால் தினம் வளர்ச்சியைக் கொண்டது!
பல துறைகள் உன் புதுமையால் மன மகிழ்ச்சியைக் கண்டது!
சமச்சீர்க் கல்வி தந்து,
மாணவர்களுக்குச் சமத்துவத்தை ஊட்டினாய் பள்ளியில்;
சத்தான உணவு தர பல திட்டங்களைத் தீட்டினாய்!
திருநங்கை என்று சொல்லி,
அரவானிகளை அங்கீகரித்து சமுதாயத்தைத் திருத்தினாய்;
இறுதிவரை தொண்டர்களை உன் பக்கம் திருப்பினாய்!
ஊனம் என்ற சொல்லை நீக்கி மாற்றுத்திறனாளி என்றாய்,
ஞானமுடன் செயல்பட்டு அரசியலை வென்றாய்!
கவித்தேன் சொட்டும் உன்மேடைப் பேச்சால் மக்களைக் கவர்ந்தாய்,
நீ விட்டுச் சென்ற உன் இறுதி மூச்சினை பத்திரப்படுத்திக் கொண்டாள் காவிரித்தாய்!
நீ தமிழுக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை;
திருக்குறளைக் கொடுத்த வள்ளுவனுக்கும் வைத்தாய் சிலை.
உன் தமிழ் பற்றினை என்றும் பறைசாற்றும் குமரியின் கடல் அலை!
உன் திறமைக்கு முகவரி தந்தவர் அறிஞர் அண்ணா,
அன்போடு உன்னை அழைத்துக்கொண்டது கடற்கரை மெரினா!
இறுதிப் போரிலும் உனக்கே வெற்றி!
இனித் தென்றலும் பாடும் உன்னைப் போற்றி!
மறைந்தாலும் உன் புகழ் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்;
நீ எழுதிய தமிழ் நூல்கள் உன் பெயரை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும்!
விருப்பமின்றி விடை தருகின்றோம் விசும்பியபடி;
நீ வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமையைச் சுமந்தபடி!
--
(கவிஞர் கடலூர் மாவட்டம் திருப்பாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர்).
தொடர்புக்கு: [email protected]
மன மேடையில் அன்று சோக நாடகம் அரங்கேற்றப்படும் அதிசயம் கண்டேன்!
இழப்பின் பாரம் இதயத்தின் மீதேற, என்னை மறந்து இடிந்து போயிருந்தேன்!
உண்மையை உரைப்பதென்றால் மணி ஆறு பத்திற்கு இந்தத் தமிழ் மண்ணை ஒரு ஆபத்து ஆட்கொண்டது!
விடுதலை வென்ற மாதத்தில், ஓர் பேருயிர் விருப்பம் இன்றி தன்னை விடுவித்துக் கொண்டது!
பிரிவின் பிறப்பிடம் அந்த சப்த தேதியில் நிசப்தத்தைப் பிரசவித்து பெருந்துயர் கொள்ளச் செய்தது!
காவிரியில் கரைபுரளும் வெள்ளமாக கோடி கருவிழிகள் கண் நதியை பெருக்கெடுக்கச் செய்தன அன்று!
இப்படி எண்ணங்கள் யாவும் கசையடி பட்டுக்கிடக்க கவலைத் தாயின் மடியில் கண்ணயர்ந்து போனேன்.
ஈடேரா எண்ணங்கள் உருவம் தரித்து கனவு உலகத்தில் உலாவருவதைக் கண்டு அதிசயித்தேன்!
கையில் வெண்கோல் பிடித்து கண்ணகி நிறுத்தத்தில் நான் காத்திருக்க,
என் கரம் பிடித்து காற்று வெளியில் அழைத்துச் சென்றார் அவர்!
இறுகப் பற்றிக்கொண்டேன் அந்த பொன்னர் சங்கரின் பொற்கரத்தை.
விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அல்ல;
அவசரமாய் விழித்துவிடக் கூடாது என்பதற்காக!
கேட்டேன் அவரிடம், “ஏன் நிறுத்திக்கொண்டீர் உமது சுவாசத்தை?”
காரணம், அது வெறும் இதயத் துடிதுடிப்பு மட்டும் அன்று;
தமிழரின் உரிமையை அடித்துரைக்கும் முரசொலி ஆதலால்!
“போதும் என்ற மன நிறைவு அல்ல, போதவில்லை என்கிற உடல் குறைவே காரணம்” என்றார் அவர்.
“ஐயா! நீங்கள் அதிகமாய் நேசித்தது இயக்குவதையா அல்லது இயற்றுவதையா?” என வினவினேன்.
“என்னை இரண்டிலும் இயங்கச் செய்த இலக்கியத்தை அல்லவா உயிராய் நேசித்தேன்!” என்றார்.
“உங்கள் உழைப்பில் உயிர்ப்புடன் விழித்துக்கிடந்த அம்சம் எது?” என்றேன்.
“தமிழுக்கு ஆற்ற வேண்டிய கடமை, அண்ணா கொடையாய் அளித்த கண்ணியம், எதிர்ப்பாளர்களால் வளர்ந்திட்ட கட்டுப்பாடு” என்றார்.
“நாங்களோ இழந்து தவிப்பது உங்களை. உயிருடன் இருக்கையில் வாழ்வில் நீங்கள் இழந்தது எவற்றையோ?” என்றேன்.
“முதலில் புரட்டிப் படிக்கவும் எழுதித் திளைக்கவும் இருந்த இரு கைதனையும் வயோதிகத்தால் இழந்தேன். அடுத்து இயன்றதை செய்ய வாய்ப்பளிக்கும் இருக்கைதனையும் இழந்தேன்” என்றார் வேடிக்கையாக!
“மறக்க இயலா மணித்துளிகள் என்று எவற்றை மதிப்பிடுவீர்?” என்றேன்.
“தமிழ்த் தொண்டு புரிந்ததும், விளிம்புநிலை மனிதருக்குச் சட்டத் தராசு கொண்டு சமநிலை வழங்க முயன்ற கணங்களும் அத்தகையவை என்பேன்” என்றார்!
“ஏற்றத்தாழ்வுகள் பெருகினால், சமூக நீதியின்மீதே அநியாய சாட்டையடி விழுந்தால் நாங்கள் என்னதான் செய்வதோ?” என்றேன்.
“ஆய்ந்தறிந்து, அதையே பெரும் ஆற்றலாய் கொண்டு, பிறகு பாய்ந்து எதிர்க்கும் பண்பினைப் பழக்கிவிட்டால் பகைவர் பயம் கொள்வர்” என்றார் தீர்க்கமாக!
“நடமாட உமது உடல் மறுத்த வேளையில் நீர் நவின்றதே மாற்றுத்திறனாளி என்னும் சொற்றொடர் என்கிறார்களே நயவஞ்சகர்கள்?” என்றேன்.
“உண்மைதான். அது என் உடலில் இருந்ததே தவிர ஒருபோதும் உள்ளத்தில் இருந்திருக்கவில்லையே” என்கிறார் பெருமிதம் பொங்க!
“அங்ஙனம் உரைத்ததன் அர்த்தம் என்ன” என்றேன் பனிவாக.
“கண்டதை எல்லாம் வைத்து மதிப்பிடாமல், புலப்படா உறத்தின் உள்ளீடைக் கொண்டு மதிப்பிட வேண்டும் என்று பொருள்” என்றார் நேர்த்தியாக!
“வாரியம் தந்தீர்! சட்டப்படி வேலைகள் அளித்தீர்! இருந்தும் வஞ்சிக்கப்படுகிறோம் அவற்றின் தொடர்ச்சியின்றி” என்று வருந்தி உரைத்தேன்.
“ஆள்பவரைச் சார்ந்தே இருந்தால் ஆட்டியும் வைப்பார், அடக்கவே அனுதினமும் நினைப்பார். போராடி வென்றிடுவீர். கொரிக்கை ஒன்று யாதெனில், ஒதுக்கீடு வேண்டும் பகுதியாக அல்ல, பாராளும் மற்றும் சட்ட மன்றங்களில் தொகுதியாக!” என்றார்.
அதன் பிறகு கனவு கலைந்தது! கலைஞரும் மறைந்துவிட்டார்!
ஆனால், அந்த எண்ண விதை நிச்சயம் விருட்சம் பெறும்;
நம் வாழ்வு ஒருநாள் பேர் வெளிச்சம்பெறும்!
--
(கவிஞர் சென்னை சர். தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர்).
தொடர்புக்கு: [email protected]
----------
ஆ) புகழஞ்சலி - நிஷா (எ) திலகவதி
அஞ்சா நெஞ்சமே! ஆசான்களின் சின்னமே!
இன்னிசைத் தமிழனே! ஈடில்லாப் புலவனே!
உன்னதக் கவிஞனே! ஊர் போற்றும் கலைஞனே!
எரியாத சூரியனே! ஏகாந்த நாயகனே!
அரசியல் என்ற ஐந்தெழுத்தின் முதல்வனே!
ஒப்பிட இயலாத ஓர் தலைவனே!
ஔவைதமிழ் பாடும் அறிவுலக முதல்வனே!
உன் தமிழைத் தா, தா என்று தமிழன்னை கெஞ்சியது!
உன்னை தமிழ்த் தாத்தாயென்று தமிழர் மனம் கொஞ்சியது!
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பது முதுமொழி;
கலைஞரின் கரம் பட்டால் காகிதமும் காவியமாகுமென்பது புதுமொழி!
உன்னால் செம்மொழியானது தமிழ்மொழி;
அதனால் வலிமையானது நம் தாய்மொழி!
திரைத்துறை உன் திறமையால் புது மலர்ச்சியைப் பெற்றது!
அரசுத்துறை உன் ஆளுமையால் பெரும்புரட்சியைக் கற்றது!
தமிழ்த்துறை உன் புலமையால் தினம் வளர்ச்சியைக் கொண்டது!
பல துறைகள் உன் புதுமையால் மன மகிழ்ச்சியைக் கண்டது!
சமச்சீர்க் கல்வி தந்து,
மாணவர்களுக்குச் சமத்துவத்தை ஊட்டினாய் பள்ளியில்;
சத்தான உணவு தர பல திட்டங்களைத் தீட்டினாய்!
திருநங்கை என்று சொல்லி,
அரவானிகளை அங்கீகரித்து சமுதாயத்தைத் திருத்தினாய்;
இறுதிவரை தொண்டர்களை உன் பக்கம் திருப்பினாய்!
ஊனம் என்ற சொல்லை நீக்கி மாற்றுத்திறனாளி என்றாய்,
ஞானமுடன் செயல்பட்டு அரசியலை வென்றாய்!
கவித்தேன் சொட்டும் உன்மேடைப் பேச்சால் மக்களைக் கவர்ந்தாய்,
நீ விட்டுச் சென்ற உன் இறுதி மூச்சினை பத்திரப்படுத்திக் கொண்டாள் காவிரித்தாய்!
நீ தமிழுக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை;
திருக்குறளைக் கொடுத்த வள்ளுவனுக்கும் வைத்தாய் சிலை.
உன் தமிழ் பற்றினை என்றும் பறைசாற்றும் குமரியின் கடல் அலை!
உன் திறமைக்கு முகவரி தந்தவர் அறிஞர் அண்ணா,
அன்போடு உன்னை அழைத்துக்கொண்டது கடற்கரை மெரினா!
இறுதிப் போரிலும் உனக்கே வெற்றி!
இனித் தென்றலும் பாடும் உன்னைப் போற்றி!
மறைந்தாலும் உன் புகழ் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்;
நீ எழுதிய தமிழ் நூல்கள் உன் பெயரை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும்!
விருப்பமின்றி விடை தருகின்றோம் விசும்பியபடி;
நீ வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமையைச் சுமந்தபடி!
--
(கவிஞர் கடலூர் மாவட்டம் திருப்பாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர்).
தொடர்புக்கு: [email protected]