அரசு பொதுத்தேர்வுகளில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள், குறிப்பாக கிராமப்புற, ஏழ்மையான, ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள், ‘நல்லாப் படிச்சு மருத்துவராகி நமது மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்யணுங்கிறதுதான் என்னோட வாழ்க்கை இலட்சியம், கனவு’ என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? கேட்டிருப்பீர்கள். நீங்கள் கேட்டிருந்தால் உங்கள் மனதில் கடந்துபோன பழைய இனிய நினைவுகளுக்கென்று வைத்திருக்கும் இடத்தில் இந்தச் சொற்றொடர்களைச் சேர்த்துவைத்துக் கொள்ளுங்கள். இனி மருத்துவர் கனவுகளைக் காணவும், சேவை இலட்சியங்களை வரித்துக்கொள்ளவும் முதலாளித்துவம் நமது குழந்தைகளை ஆசீர்வதிக்கவில்லை! இத்தகைய கனவுகளை, இலட்சியங்களைச் சுமக்கும் அணிதாக்களுக்கு தற்கொலை மரணம்தான் நிச்சய விளைவு எனும்போது, ‘கனவு காணுங்கள்’ என்ற அறைகூவல்கள் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே பொருளில்தான் தொனிக்குமென்று இனியும் நாம் நம்பவோ, நம்பவைக்கவோ முடியுமா?
பல நூற்றாண்டுக் கல்வித் தடைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராகக் கடும் முயற்சிகளாலும், பெரும் போராட்டங்களாலும் நமது ஒடுக்கப்பட்ட, ஏழ்மைப் பின்னணி கொண்ட மாணவ மாணவிகள் பெற்ற உரிமைகளைப் படிப்படியாக அவர்களிடமிருந்து பிடுங்கி, மீண்டும் வரலாற்றைப் பின்னோக்கி இழுக்க முயற்சிக்கின்றன நவகாலனிய முதலாளித்துவமும் பார்ப்பனியச் சாதி மேலாதிக்கமும். மக்களின் அடிப்படைத் தேவையான, குடிமக்களின் உரிமையான, அரசின் கடமையான மருத்துவ நலவாழ்வுச் சேவைகளை தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டு, மருத்துவம் படிப்பதற்குச் சமூக நீதி அடிப்படையிலும், மாநில சுயாட்சி உரிமை என்ற வகையிலும் மாணவ, மாணவிகள் பெற்றுவந்த உரிமைகளை ஆழக் குழிதோண்டிப் புதைக்க வந்திருக்கும் தேசியமயமாக்கப்பட்ட கொடுங்கனவுதான் நீட் தேர்வு!
மையப்படுத்தப்பட்ட தகுதி: தேசியம் தீர்மானிப்பதே திறமை!
நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது, அதே கல்வி வாரியம் தேசிய அளவில் பின்பற்றும் கல்வித்திட்டத்தின் அடிப்படையில். மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் கூட நீட் தகுதித் தேர்வுக்கு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைத்தான் தயார் செய்தாக வேண்டும். அப்படித் தயார் செய்யும் மாணவர்கள், ஏற்கெனவே அந்தப் பாடத்திட்டத்தில் படித்துவரும், அந்தப் பாடத்திட்டத்தில் நல்ல பயிற்சியும் நிபுணத்துவமும் பெற்றுள்ள மாணவர்களோடு போட்டியிட்டு தமது திறமை, தகுதிக்கு தேசிய அங்கீகாரம் பெறவேண்டும். அதாவது, மாணவர்களின் திறமையும் தகுதியும் தேசிய அளவில் மையப்படுத்தப்பட்ட ஒருபடித்தான தேர்வின் மூலமே கணக்கிடப்படும். அந்த ஒருபடித்தான, தட்டையான வரையறைக்குள் அடங்கும், அவ்வாறு போடப்பட்ட கோடுகளுக்குள் நின்று வெற்றிபெறுபவர்கள் மட்டுமே திறமையும் தகுதியும் படைத்தவர்கள்.
வேறுமாதிரிச் சொல்வதானால், நம் ஊர்களில் நன்றாகக் கபடி விளையாடும் வீரர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கிரிக்கெட் விளையாடச் சொல்வது போன்றது இது. ‘நீ கபடியில் என்ன திறமை பெற்றிருக்கிறாய், அதில் என்ன தகுதிகளை வளர்த்துக்கொண்டிருக்கிறாய் என்பதெல்லாம் எனக்குத் துளியும் தேவையில்லை. கிரிக்கெட் விளையாடி, அதனையும் நான் வகுக்கும் விதிகளுக்குள் மட்டுமே நின்று விளையாடி, உனது திறமையைக் காட்டு’ என்பதுதான் நீட் தேர்வின் பின்னணியில் உள்ள கொள்கையும் கோட்பாடும். இது மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு எதிரானது என்ற உண்மை பலமுறை பலரால் நிறுவப்பட்டுள்ளது. ஆனால், இதில் புதைந்துபோன இரு முக்கிய உண்மைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் மட்டுமே நீட் தேர்வு எவ்வளவு அபாயமானது என்ற உண்மை நமக்குப் புலப்படும்.
கூட்டாட்சித் தத்துவமா? அதைக் குப்பையில் போடு!
முதலாவதாக, கல்வி என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியும், தார்மீக நெறிமுறைகளின்படியும் மாநில அரசுகளின் அதிகாரத்திற்கும் வரம்பிற்கும் உட்பட்டது. இந்திய அரசியல் அமைப்பின் ஏழாவது அட்டவணையில் பொதுப்பிரிவில் (Concurrent List) மருத்துவக் கல்வி, தொழில்கல்வி உள்ளிட்ட கல்விசார் விடயங்கள் மாநில மற்றும் இந்திய மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வியின் தரம் எப்படி இருக்கவேண்டும், பொது இலக்குகள் என்னவாக அமையவேண்டும், மத்தியப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது ஆகியவை மட்டுமே மத்திய அரசு கல்வியில் பெற்றிருக்கும் அதிகாரங்கள். மாநில அளவில் பாடத்திட்டங்களைத் தயாரிப்பது, பள்ளிகளை நிர்வகிப்பது, மருத்துவம், தொழில், வேளாண், கால்நடைக் கல்வி நிறுவனங்களை நடத்துவதும், அவற்றில் ஆசிரியர் நியமணம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் அனைத்துமே மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.
பாடத்திட்டத்தையும் தேர்வு முறையையும் தன்னிச்சையாக முடிவு செய்து மாநில அரசுகளின் பங்கேற்பை முற்றிலுமாக மருதளித்ததனூடாக, நீட் தேர்வு மாநில அரசுகளுக்கு கல்விசார் விடயங்களில் இருக்கும் உரிமைகளை கபளீகரம் செய்திருக்கிறது. உண்மையில் இந்தியா என்பது எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கிய ஒன்றியம் (Union) மட்டுமே. அரசியல் அமைப்பிலும் நீதிமன்ற வழக்காடு நடவடிக்கைகளின்போதும் இந்திய அரசைக் குறிக்க ‘Union of India’ என்ற பதம்தான் எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. அதன் பின்னணியிலுள்ள அடிப்படை, இந்தியா என்பது எல்லா மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு, ஏற்பாடு என்பதுதான். கல்விசார் விடயங்களில் மாநில அரசுகள் அந்தந்த மாநிலத்தின் நிலவியல் அமைப்பு, மக்களின் பண்பாடு, மொழி, வரலாற்றுப் பாரம்பரியம் முதலியவற்றை கணக்கில் கொண்டு பிரத்தியேகமான பாடத்திட்டத்தை உருவாக்கினால் மட்டுமே குழந்தைகளுக்குச் சிறப்பான, தரமான கல்வி வழங்க முடியும். அறிவியல் கல்வியிலும் மாணவர்களின் தேவைக்கேற்ப தனித்துவமான பாடத்திட்டம் ஓவ்வொரு மாநிலத்திலும் இருந்தால் மட்டுமே குழந்தைகளை ஆளுமைமிக்க, அறிவாற்றல் நிறைந்த குடிமக்களாக வளர்த்தெடுக்க முடியும்.
நீட் தேர்வு தனித்துவத்தை மறுக்கிறது, மையச் சட்டகத்தினுள் எல்லோரையும் அடங்கச் சொல்கிறது. நீட் தேர்வில் வெற்றிபெற வேண்டுமானால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அல்லது மாநிலப் பாடத்திட்டங்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைக் காப்பி அடித்து மாற்றி அமைக்கப்படவேண்டும். உண்மையில் மாணவர்கள் படிக்கும் பள்ளியும் பாடத்திட்டமும் எதுவாக இருந்தாலும், அங்கு பின்பற்றப்படுவது மத்திய கல்வியாகத்தான் இருக்கும். தமிழகத்தில் தற்போது நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றிபெறுவதற்கு ஏதுவான பாடத்திட்டம் மேல்நிலை வகுப்புகளுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது மத்தியப் பாடத்திட்டத்தின் அடியொற்றி தமிழக அரசு பின்பற்றிவந்த மாநிலப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முன்பு தரமில்லாமல் இருந்த பள்ளிக்கல்வி இப்போது தரப்படுத்தப்பட்டுள்ளதாக சிலர் கருதுகின்றனர். குறிப்பாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கவைக்கவும் இயலாமல், அரசுப் பள்ளிகளில் சேர்க்கவும் மனம் ஒப்பாமல், மெட்ரிக் பள்ளிகள் என்று அழைக்கப்படும் தனியார் பள்ளிகளில் தமது குழந்தைகளைச் சேர்த்திருக்கும் நடுத்தரப் பெற்றோரின் எண்ணம் அது. உண்மையில், இவர்களோ அல்லது தாம் ஏதோ பேருண்மையைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கருதிக்கொண்டு இதனையே திரும்பத்திரும்பச் சொல்லிவரும் கல்வியாளர்களோ தமிழக அரசுப் பாடத்திட்ட புத்தகங்களைப் படித்திருக்கவே மாட்டார்கள்.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களிலும், மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் சிறப்பான பள்ளிக்கல்விக் கட்டமைப்பு உள்ளது. பல குறைபாடுகள் இருந்தாலும் தனித்துவமான, தரமான கல்வியும் சிறப்பான பாடத்திட்டமும் தமிழகத்தில் பின்பற்றப்பட்டே வந்திருக்கின்றன. இங்கு நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், தரம் என்பது மத்திய அரசு சொல்வதாகத்தான் இருக்கவேண்டுமென்றோ, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை உரைகல்லாகக்கொண்டு இருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை.
தன்னளவில் தரமான கல்வி முறைகளை மாற்றி, ஒருபடித்தான அறிவை உருவாக்க முனைகிறது நீட் தேர்வு. சித்த மருத்துவம் உள்ளிட்ட மாற்று மருத்துவப் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு இந்த ஆண்டு முதல் கட்டாயமாம்! சித்த மருத்துவம் தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறை. அதுபோலவே ஒவ்வொரு மாற்று மருத்துவ முறைக்கும் தனித்துவங்களும் பாரம்பரிய அறிவுச் சொத்தும் அந்தந்த மண் சார்ந்து உள்ளன. இவற்றைப் படிப்பதற்கு தேசிய அளவில் தகுதியை நிர்ணயிப்பது குரூரமான நகைச்சுவையல்லவா?
இங்கு பறிபோயிருப்பது மாநில அரசுகளின் கல்விசார் உரிமைகள் மட்டுமல்ல; கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையும்தான். மாநிலங்களின் உரிமைகளில் தலையிட்டு, அவ்வரசுகளை அரசாட்சிக் கட்டமைப்பிலிருந்தே விலக்கிவைக்கும் பல்வேறு திட்டங்கள் அசுர வேகத்துடன் அரங்கேறி வருகின்றன. ஜி.எஸ்.டி. வரி, ஒருதலைபட்சமான நதிநீர் பங்கீடு என்று நீளும் இந்த வரிசையில் நீட் தேர்வும் கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்க முனைப்புடன் அமல்படுத்தப்படுகிறது.
சமூக நீதிக்கு இனியென்ன வேலை?
நீட் தேர்வு சமூக நீதிக் கட்டமைப்பைத் தகர்த்தெறியப் போகிறது என்பதை நாம் நேரடியாகவே தற்போது உணர்ந்து வருகிறோம். நீட் ஆதரவாளர்கள், ‘நீட் தேர்வு இட ஒதுக்கீட்டை மறுக்கவில்லையே!’ என்று ஒரு வாதத்தை முன்வைக்கலாம். உண்மைதான். இட ஒதுக்கீடுகள் தொடரத்தான் செய்கின்றன. ஆனால், ஒதுக்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான் இனி மருத்துவக் கல்வியில் இடமே கிடைக்காது.
அதாவது, தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் இட ஒதுக்கீட்டைப்பெற நீட் தேர்வில் வெற்றிபெறவேண்டும்; உடல் ஊனமுற்றோரும் அப்படித்தான். நீட் தேர்வில் வெற்றிபெற வேண்டுமானால் பிரத்தியேகப் பயிற்சியும் சி.பி.எஸ்.இ. கல்வியும் வேண்டும். இவை அனைத்தும் கிடைக்க வேண்டுமானால் உயர் நடுத்தரப் பொருளாதார வசதிகள் இன்றியமையாத தேவை. அத்தகைய வசதிகளைப் பெற்றிருக்கும், ஏற்கெனவே அரசுப் பணியிலோ அல்லது பிற தொழில்களின் மூலமாகவோ கல்வி அறிவும், பொருளாதார வசதிகளும் ஈட்டியிருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவப் படிப்பிற்கு நுழைய முடியும். எனில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஊனமுற்றோர் இட ஒதுக்கீட்டை இவ்வாறான இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறைப் பட்டதாரிகள் மட்டுமே பெற முடியும். நிச்சயமாக மூட்டை சுமந்து வாழ்க்கையை நடத்தப் போராடும் அனிதாவின் குடும்பத்தைப் போன்ற இவ்வகை ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீட்டின் பயன் சென்றடையாது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுள் வர்க்க ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகமாக்கி கூர்மைப்படுத்தும் வேலையைத்தான் நீட் தேர்வு செய்யப்போகிறது. பின்னர் ஒரு கட்டத்தில், ‘இட ஒதுக்கீட்டின் பயன்களை ஏற்கெனவே பணம் படைத்த பிரிவினர், பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர்’ என்று சாக்குச் சொல்லி, இட ஒதுக்கீட்டையே மொத்தமாக துடைத்தேரிவதுதான் நீட் தேர்வு உள்ளிட்ட எல்லா கல்வி ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் இலக்கும், நோக்கமும்.
மருத்துவம் சேவையல்ல, லாபகரமான வர்த்தகம்!
நீட் தேர்வு மாணவர்களின் நலன்கள் மீதும் சமூக நீதிக் கட்டமைப்பு மீதும் தொடுக்கும் சாதி மேலாதிக்கத் தாக்குதல், அந்த நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே. இன்னொரு அதிபயங்கரமான பக்கம் அதற்கு உள்ளது. அது, மருத்துவத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் நீட் தேர்வு ஆற்றும் பங்கு.
1991-க்குப் பிறகு இந்தியா தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற முப்பெரும் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையினை அமல்படுத்தியது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பன்னாட்டுக் கடனாளர்களும், உலக வர்த்தக மையமும் 1990-களில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தின் கொள்கைகளையும் போக்குகளையும் சிறிதுசிறிதாகத் தீர்மானிக்கத் தொடங்கின. இந்தியா உலக வர்த்தக மையத்தின் கேட்ஸ் (GATS) எனப்படும் சேவை வணிகத்திற்கான பொது ஒப்பந்தத்தை (General Agreement on Trade in Services) ஏற்றுக்கொண்டு, அதில் கையொப்பமிட்டுள்ளது. கேட்ஸ் ஒப்பந்தத்தின்படி மருத்துவம்-நலவாழ்வு, கல்வி, தகவல் தொடர்பு, போக்குவரத்து, கப்பல்-விமானச் சேவைகள், வங்கிச் சேவைகள் உள்ளிட்ட சேவைகளை படிப்படியாகக் குறைக்க வேண்டுமென்றும், சந்தைப் போட்டியை உருவாக்கி, அன்னிய முதலீட்டாளர்களையும் வரவேற்று, அரசுகள் ஒழுங்குபடுத்தும் வேலையை மட்டுமே செய்ய வேண்டுமென்றும் கட்டளையிடுகிறது.
இந்தியாவில் அரசுகள் மருத்துவம், பொது சுகாதாரம் ஆகியவற்றிற்காகச் செய்யும் முதலீடுகள் படிப்படியாகக் குறைந்து வருவதையும், தரமான மருத்துவ வசதியை எல்லோருக்கும் அளிக்க வேண்டிய அரசுகள் மக்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்துகொடுத்து தனியாரிடமே பணத்தைத் திருப்பிவிடும் போக்கு அதிகரித்திருப்பதையும் கடந்த பத்தாண்டு நிகழ்வுகளை சற்றே அசைபோட்டால் உணர்ந்துகொள்ளலாம்.
750 கோடிக்கு உயர்தரமான மூன்று மருத்துவக் கல்லூரிகளைக் கட்டி, மக்களுக்கு தரமான மருத்துவத்தையும் மருத்துவ மாணவர்களுக்கு நல்ல கல்வியையும் அளித்திருக்கலாம் தமிழக அரசு. ஆனால், தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அதே தொகையைத் திருப்பிவிட்டு, காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் என பல தனியார் நிறுவனங்களுக்குச் சேவை புரிந்திருக்கிறது தமிழக அரசு. அந்தத் திட்டம்தான், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம்; இது ஒரு உதாரணம் மட்டுமே. நடப்பு பட்ஜெட் அறிவிப்பின்படி, இதுபோன்ற மாநில அரசுகளின் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களே நாடுதழுவிய அளவில் மிகப்பெரிய, அவர்களே சொல்வதுபோல், உலகிலேயே பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக வளர்த்தெடுத்திருக்கிறது மத்திய அரசு!
இனி மருத்துவத்தைச் சேவையாகக் கருதும் மருத்துவர்கள் தேவையில்லை. மருத்துவப் பணிகளை தொழில்முறை வர்த்தகமாக திறன்படச் செய்யும் பயிற்சி பெற்ற நபர்கள்தான் தேவை. குறிப்பாக, அவர்களுக்கு மனிதாபிமானம், மக்கள்மீது அக்கறை, சமூகப் பொறுப்புணர்வு போன்ற எந்தக் கருமமும் கிஞ்சித்தும் இருக்கக்கூடாது. சுருங்கச் சொன்னால், மருத்துவம்-நலவாழ்வு என்ற தொழிலில் ஈடுபட்டுள்ள இயந்திரத்தனமான மருத்துவ நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களாக இந்த மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும். இதனை உறுதிப்படுத்தத்தான் நீட் தேர்வு வந்திருக்கிறது. பெரும்பாலும் நடுத்தர, உயர் நடுத்தரப் பின்னணி கொண்ட, போட்டியிட்டுப் படிப்பதைத் தவிர வேறெந்த இலட்சியமோ சமூகப் பார்வையோ இல்லாத மாணவர்களை மருத்துவப் படிப்பிற்குள் வடிகட்டி அனுப்பத்தான் நீட் தேர்வு.
மேலும், இத்தகய பின்புலத்திலிருந்து மருத்துவம் பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக கிராமங்களுக்குச் சென்று மருத்துவச் சேவை புரிய விரும்ப மாட்டார்கள்; அவ்வாறு வற்புறுத்துவதும் இந்திய மருத்துவ கௌன்சில் விதிகளுக்கு எதிரானதாக இருக்கும். போதிய மருத்துவர்கள் கிடைக்காததைக் காரணம் காட்டி, ஆரம்ப சுகாதார நிலையங்களை மூடிவிடலாம், அல்லது தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கையளித்துவிடலாம் என்பதுதான் அரசுகளின் வழிமுறை. திட்டமும், இலக்கும் பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகளும், உலக வர்த்தக மையமும் தீர்மானித்தவைதான்; வழிமுறைகளை வகுத்துச் செயல்படுத்துவதுதான் அரசுகளின் வேலை! அந்த வழிமுறையின் முக்கிய அங்கம்தான் நீட் தேர்வு.
எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நடுத்தர வர்க்கம்!
இந்தியாவில், தான் நடுத்தர வர்க்கம் என்று வலிந்து நம்பிக்கொண்டிருக்கும் குடும்பங்களும் பெற்றோரும் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களின் ஒரே கனவு, இலட்சியம் எல்லாம் தமது குழந்தைகளுக்குத் தனக்குக் கிடைக்காத வசதிகளைக் கொடுப்பது, தான் சாதிக்க முடியாதனவற்றை அவர்களிடம் திணித்தாவது சாதிக்க வைப்பது ஆகியவைதான். சமூக அக்கறை, அரசியல், பொருளாதார அறிவு எல்லாம் இந்த நடுத்தர, உயர் நடுத்தர பிரிவினருக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப்புக்குள் அடக்கம். மற்றபடி எத்தனை தேர்வுகள், எவ்வளவு நெருக்கடிகள், என்ன வகை துன்பங்கள் தமக்கு ஏற்படுத்தப்பட்டாலும், அவற்றை பணிவோடு ஏற்று, அவை நியாயமா என்று ஒரு சிறு கேள்வியும் கேட்காமல், எப்படி அந்தப் புதிய நெருக்கடிக்குத் தம்மைப் பழக்கிக் கொள்வது, இதற்குள் ஓடி எப்படி வெற்றிபெறுவது என்று தீவிரமாகத் தம்மைத் தகவமைத்துக்கொள்ளத் தொடங்கிவிடுகிறார்கள்.
நீட் தேர்வு நியாயமான மதிப்பீட்டு முறைதானா, அது தமது குழந்தைகளின்மீது ஏன் திணிக்கப்படுகிறது என்பது போன்ற எந்தக் கேள்வியையும் எழுப்பாமல், ஆந்திராவில் இருந்து புதிய நீட் பயிற்சியாளர்களைக் கொண்டுவந்து இறக்கியிருக்கும் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கிறார்கள் பெற்றோர்கள். நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தவறிக்கூட இவர்கள் பங்கேற்பதுமில்லை; மக்கள் திரள் போராட்டங்களைக் குறைசொல்லிச் சிறுமைப்படுத்தத் தவறுவதுமில்லை. இந்த நடுத்தர வர்க்கம் விழித்துக்கொண்டு பெரும் மக்கள் போராட்டங்கள் நடந்தால் மட்டுமே நீட் தேர்வு நமது மாணவர்கள் மீது திணிக்கப்படுவதைத் தடுக்க முடியும். மருத்துவம் என்பது தொழில்முறை வர்த்தகமல்ல; மக்கள் சேவை, அரசுகளின் கடமை, மக்களின் அடிப்படை உரிமை என்பதை உரியவர்களுக்கு உரிய விதங்களில் புரியவைத்தால் மட்டுமே நீட் தேர்வு என்னும் கொடுங்கனவை நிறுத்த முடியும். அதுவரை பன்னாட்டு முதலாளித்துவமும் இந்நாட்டு மேலாதிக்கமும் கைகோர்த்துத் தமது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்!
சுருக்கமாகச் சொன்னால், நீட் தேர்வு சமூக நீதிக்குச் சாக்காடு; இனி மருத்துவம் தனியாரின் வேட்டைக்காடு!
பின்குறிப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட செய்திகளும் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகளும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தோன்றலாம். இந்திய அரசு தனக்குச் சொந்தமான விமான நிறுவனங்களை தனியாருக்கு விற்குமென்று யாரேனும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் கற்பனையாகத்தான் தோன்றியிருக்கும். கடந்த பத்தாண்டுகளில் இரண்டு நிறுவனங்கள் ஒன்றாகி, தற்போது அந்த ஒன்றும் விற்பனை செய்யப்பட சந்தையில் காத்திருக்கிறது. இதுபோன்ற நிலை மருத்துவத் துறையில் ஏற்பட வெகுகாலம் பிடிக்காது. நீட் தேர்வு அதற்கான சிறந்த வழிமுறை.
--
கட்டுரையாளர் கள்ளக்குறிச்சி திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர்.
தொடர்புக்கு: [email protected]
பல நூற்றாண்டுக் கல்வித் தடைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராகக் கடும் முயற்சிகளாலும், பெரும் போராட்டங்களாலும் நமது ஒடுக்கப்பட்ட, ஏழ்மைப் பின்னணி கொண்ட மாணவ மாணவிகள் பெற்ற உரிமைகளைப் படிப்படியாக அவர்களிடமிருந்து பிடுங்கி, மீண்டும் வரலாற்றைப் பின்னோக்கி இழுக்க முயற்சிக்கின்றன நவகாலனிய முதலாளித்துவமும் பார்ப்பனியச் சாதி மேலாதிக்கமும். மக்களின் அடிப்படைத் தேவையான, குடிமக்களின் உரிமையான, அரசின் கடமையான மருத்துவ நலவாழ்வுச் சேவைகளை தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டு, மருத்துவம் படிப்பதற்குச் சமூக நீதி அடிப்படையிலும், மாநில சுயாட்சி உரிமை என்ற வகையிலும் மாணவ, மாணவிகள் பெற்றுவந்த உரிமைகளை ஆழக் குழிதோண்டிப் புதைக்க வந்திருக்கும் தேசியமயமாக்கப்பட்ட கொடுங்கனவுதான் நீட் தேர்வு!
மையப்படுத்தப்பட்ட தகுதி: தேசியம் தீர்மானிப்பதே திறமை!
நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது, அதே கல்வி வாரியம் தேசிய அளவில் பின்பற்றும் கல்வித்திட்டத்தின் அடிப்படையில். மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் கூட நீட் தகுதித் தேர்வுக்கு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைத்தான் தயார் செய்தாக வேண்டும். அப்படித் தயார் செய்யும் மாணவர்கள், ஏற்கெனவே அந்தப் பாடத்திட்டத்தில் படித்துவரும், அந்தப் பாடத்திட்டத்தில் நல்ல பயிற்சியும் நிபுணத்துவமும் பெற்றுள்ள மாணவர்களோடு போட்டியிட்டு தமது திறமை, தகுதிக்கு தேசிய அங்கீகாரம் பெறவேண்டும். அதாவது, மாணவர்களின் திறமையும் தகுதியும் தேசிய அளவில் மையப்படுத்தப்பட்ட ஒருபடித்தான தேர்வின் மூலமே கணக்கிடப்படும். அந்த ஒருபடித்தான, தட்டையான வரையறைக்குள் அடங்கும், அவ்வாறு போடப்பட்ட கோடுகளுக்குள் நின்று வெற்றிபெறுபவர்கள் மட்டுமே திறமையும் தகுதியும் படைத்தவர்கள்.
வேறுமாதிரிச் சொல்வதானால், நம் ஊர்களில் நன்றாகக் கபடி விளையாடும் வீரர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கிரிக்கெட் விளையாடச் சொல்வது போன்றது இது. ‘நீ கபடியில் என்ன திறமை பெற்றிருக்கிறாய், அதில் என்ன தகுதிகளை வளர்த்துக்கொண்டிருக்கிறாய் என்பதெல்லாம் எனக்குத் துளியும் தேவையில்லை. கிரிக்கெட் விளையாடி, அதனையும் நான் வகுக்கும் விதிகளுக்குள் மட்டுமே நின்று விளையாடி, உனது திறமையைக் காட்டு’ என்பதுதான் நீட் தேர்வின் பின்னணியில் உள்ள கொள்கையும் கோட்பாடும். இது மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு எதிரானது என்ற உண்மை பலமுறை பலரால் நிறுவப்பட்டுள்ளது. ஆனால், இதில் புதைந்துபோன இரு முக்கிய உண்மைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் மட்டுமே நீட் தேர்வு எவ்வளவு அபாயமானது என்ற உண்மை நமக்குப் புலப்படும்.
கூட்டாட்சித் தத்துவமா? அதைக் குப்பையில் போடு!
முதலாவதாக, கல்வி என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியும், தார்மீக நெறிமுறைகளின்படியும் மாநில அரசுகளின் அதிகாரத்திற்கும் வரம்பிற்கும் உட்பட்டது. இந்திய அரசியல் அமைப்பின் ஏழாவது அட்டவணையில் பொதுப்பிரிவில் (Concurrent List) மருத்துவக் கல்வி, தொழில்கல்வி உள்ளிட்ட கல்விசார் விடயங்கள் மாநில மற்றும் இந்திய மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வியின் தரம் எப்படி இருக்கவேண்டும், பொது இலக்குகள் என்னவாக அமையவேண்டும், மத்தியப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது ஆகியவை மட்டுமே மத்திய அரசு கல்வியில் பெற்றிருக்கும் அதிகாரங்கள். மாநில அளவில் பாடத்திட்டங்களைத் தயாரிப்பது, பள்ளிகளை நிர்வகிப்பது, மருத்துவம், தொழில், வேளாண், கால்நடைக் கல்வி நிறுவனங்களை நடத்துவதும், அவற்றில் ஆசிரியர் நியமணம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் அனைத்துமே மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.
பாடத்திட்டத்தையும் தேர்வு முறையையும் தன்னிச்சையாக முடிவு செய்து மாநில அரசுகளின் பங்கேற்பை முற்றிலுமாக மருதளித்ததனூடாக, நீட் தேர்வு மாநில அரசுகளுக்கு கல்விசார் விடயங்களில் இருக்கும் உரிமைகளை கபளீகரம் செய்திருக்கிறது. உண்மையில் இந்தியா என்பது எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கிய ஒன்றியம் (Union) மட்டுமே. அரசியல் அமைப்பிலும் நீதிமன்ற வழக்காடு நடவடிக்கைகளின்போதும் இந்திய அரசைக் குறிக்க ‘Union of India’ என்ற பதம்தான் எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. அதன் பின்னணியிலுள்ள அடிப்படை, இந்தியா என்பது எல்லா மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு, ஏற்பாடு என்பதுதான். கல்விசார் விடயங்களில் மாநில அரசுகள் அந்தந்த மாநிலத்தின் நிலவியல் அமைப்பு, மக்களின் பண்பாடு, மொழி, வரலாற்றுப் பாரம்பரியம் முதலியவற்றை கணக்கில் கொண்டு பிரத்தியேகமான பாடத்திட்டத்தை உருவாக்கினால் மட்டுமே குழந்தைகளுக்குச் சிறப்பான, தரமான கல்வி வழங்க முடியும். அறிவியல் கல்வியிலும் மாணவர்களின் தேவைக்கேற்ப தனித்துவமான பாடத்திட்டம் ஓவ்வொரு மாநிலத்திலும் இருந்தால் மட்டுமே குழந்தைகளை ஆளுமைமிக்க, அறிவாற்றல் நிறைந்த குடிமக்களாக வளர்த்தெடுக்க முடியும்.
நீட் தேர்வு தனித்துவத்தை மறுக்கிறது, மையச் சட்டகத்தினுள் எல்லோரையும் அடங்கச் சொல்கிறது. நீட் தேர்வில் வெற்றிபெற வேண்டுமானால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அல்லது மாநிலப் பாடத்திட்டங்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைக் காப்பி அடித்து மாற்றி அமைக்கப்படவேண்டும். உண்மையில் மாணவர்கள் படிக்கும் பள்ளியும் பாடத்திட்டமும் எதுவாக இருந்தாலும், அங்கு பின்பற்றப்படுவது மத்திய கல்வியாகத்தான் இருக்கும். தமிழகத்தில் தற்போது நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றிபெறுவதற்கு ஏதுவான பாடத்திட்டம் மேல்நிலை வகுப்புகளுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது மத்தியப் பாடத்திட்டத்தின் அடியொற்றி தமிழக அரசு பின்பற்றிவந்த மாநிலப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முன்பு தரமில்லாமல் இருந்த பள்ளிக்கல்வி இப்போது தரப்படுத்தப்பட்டுள்ளதாக சிலர் கருதுகின்றனர். குறிப்பாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கவைக்கவும் இயலாமல், அரசுப் பள்ளிகளில் சேர்க்கவும் மனம் ஒப்பாமல், மெட்ரிக் பள்ளிகள் என்று அழைக்கப்படும் தனியார் பள்ளிகளில் தமது குழந்தைகளைச் சேர்த்திருக்கும் நடுத்தரப் பெற்றோரின் எண்ணம் அது. உண்மையில், இவர்களோ அல்லது தாம் ஏதோ பேருண்மையைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கருதிக்கொண்டு இதனையே திரும்பத்திரும்பச் சொல்லிவரும் கல்வியாளர்களோ தமிழக அரசுப் பாடத்திட்ட புத்தகங்களைப் படித்திருக்கவே மாட்டார்கள்.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களிலும், மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் சிறப்பான பள்ளிக்கல்விக் கட்டமைப்பு உள்ளது. பல குறைபாடுகள் இருந்தாலும் தனித்துவமான, தரமான கல்வியும் சிறப்பான பாடத்திட்டமும் தமிழகத்தில் பின்பற்றப்பட்டே வந்திருக்கின்றன. இங்கு நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், தரம் என்பது மத்திய அரசு சொல்வதாகத்தான் இருக்கவேண்டுமென்றோ, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை உரைகல்லாகக்கொண்டு இருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை.
தன்னளவில் தரமான கல்வி முறைகளை மாற்றி, ஒருபடித்தான அறிவை உருவாக்க முனைகிறது நீட் தேர்வு. சித்த மருத்துவம் உள்ளிட்ட மாற்று மருத்துவப் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு இந்த ஆண்டு முதல் கட்டாயமாம்! சித்த மருத்துவம் தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறை. அதுபோலவே ஒவ்வொரு மாற்று மருத்துவ முறைக்கும் தனித்துவங்களும் பாரம்பரிய அறிவுச் சொத்தும் அந்தந்த மண் சார்ந்து உள்ளன. இவற்றைப் படிப்பதற்கு தேசிய அளவில் தகுதியை நிர்ணயிப்பது குரூரமான நகைச்சுவையல்லவா?
இங்கு பறிபோயிருப்பது மாநில அரசுகளின் கல்விசார் உரிமைகள் மட்டுமல்ல; கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையும்தான். மாநிலங்களின் உரிமைகளில் தலையிட்டு, அவ்வரசுகளை அரசாட்சிக் கட்டமைப்பிலிருந்தே விலக்கிவைக்கும் பல்வேறு திட்டங்கள் அசுர வேகத்துடன் அரங்கேறி வருகின்றன. ஜி.எஸ்.டி. வரி, ஒருதலைபட்சமான நதிநீர் பங்கீடு என்று நீளும் இந்த வரிசையில் நீட் தேர்வும் கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்க முனைப்புடன் அமல்படுத்தப்படுகிறது.
சமூக நீதிக்கு இனியென்ன வேலை?
நீட் தேர்வு சமூக நீதிக் கட்டமைப்பைத் தகர்த்தெறியப் போகிறது என்பதை நாம் நேரடியாகவே தற்போது உணர்ந்து வருகிறோம். நீட் ஆதரவாளர்கள், ‘நீட் தேர்வு இட ஒதுக்கீட்டை மறுக்கவில்லையே!’ என்று ஒரு வாதத்தை முன்வைக்கலாம். உண்மைதான். இட ஒதுக்கீடுகள் தொடரத்தான் செய்கின்றன. ஆனால், ஒதுக்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான் இனி மருத்துவக் கல்வியில் இடமே கிடைக்காது.
அதாவது, தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் இட ஒதுக்கீட்டைப்பெற நீட் தேர்வில் வெற்றிபெறவேண்டும்; உடல் ஊனமுற்றோரும் அப்படித்தான். நீட் தேர்வில் வெற்றிபெற வேண்டுமானால் பிரத்தியேகப் பயிற்சியும் சி.பி.எஸ்.இ. கல்வியும் வேண்டும். இவை அனைத்தும் கிடைக்க வேண்டுமானால் உயர் நடுத்தரப் பொருளாதார வசதிகள் இன்றியமையாத தேவை. அத்தகைய வசதிகளைப் பெற்றிருக்கும், ஏற்கெனவே அரசுப் பணியிலோ அல்லது பிற தொழில்களின் மூலமாகவோ கல்வி அறிவும், பொருளாதார வசதிகளும் ஈட்டியிருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவப் படிப்பிற்கு நுழைய முடியும். எனில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஊனமுற்றோர் இட ஒதுக்கீட்டை இவ்வாறான இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறைப் பட்டதாரிகள் மட்டுமே பெற முடியும். நிச்சயமாக மூட்டை சுமந்து வாழ்க்கையை நடத்தப் போராடும் அனிதாவின் குடும்பத்தைப் போன்ற இவ்வகை ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீட்டின் பயன் சென்றடையாது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுள் வர்க்க ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகமாக்கி கூர்மைப்படுத்தும் வேலையைத்தான் நீட் தேர்வு செய்யப்போகிறது. பின்னர் ஒரு கட்டத்தில், ‘இட ஒதுக்கீட்டின் பயன்களை ஏற்கெனவே பணம் படைத்த பிரிவினர், பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர்’ என்று சாக்குச் சொல்லி, இட ஒதுக்கீட்டையே மொத்தமாக துடைத்தேரிவதுதான் நீட் தேர்வு உள்ளிட்ட எல்லா கல்வி ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் இலக்கும், நோக்கமும்.
மருத்துவம் சேவையல்ல, லாபகரமான வர்த்தகம்!
நீட் தேர்வு மாணவர்களின் நலன்கள் மீதும் சமூக நீதிக் கட்டமைப்பு மீதும் தொடுக்கும் சாதி மேலாதிக்கத் தாக்குதல், அந்த நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே. இன்னொரு அதிபயங்கரமான பக்கம் அதற்கு உள்ளது. அது, மருத்துவத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் நீட் தேர்வு ஆற்றும் பங்கு.
1991-க்குப் பிறகு இந்தியா தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற முப்பெரும் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையினை அமல்படுத்தியது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பன்னாட்டுக் கடனாளர்களும், உலக வர்த்தக மையமும் 1990-களில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தின் கொள்கைகளையும் போக்குகளையும் சிறிதுசிறிதாகத் தீர்மானிக்கத் தொடங்கின. இந்தியா உலக வர்த்தக மையத்தின் கேட்ஸ் (GATS) எனப்படும் சேவை வணிகத்திற்கான பொது ஒப்பந்தத்தை (General Agreement on Trade in Services) ஏற்றுக்கொண்டு, அதில் கையொப்பமிட்டுள்ளது. கேட்ஸ் ஒப்பந்தத்தின்படி மருத்துவம்-நலவாழ்வு, கல்வி, தகவல் தொடர்பு, போக்குவரத்து, கப்பல்-விமானச் சேவைகள், வங்கிச் சேவைகள் உள்ளிட்ட சேவைகளை படிப்படியாகக் குறைக்க வேண்டுமென்றும், சந்தைப் போட்டியை உருவாக்கி, அன்னிய முதலீட்டாளர்களையும் வரவேற்று, அரசுகள் ஒழுங்குபடுத்தும் வேலையை மட்டுமே செய்ய வேண்டுமென்றும் கட்டளையிடுகிறது.
இந்தியாவில் அரசுகள் மருத்துவம், பொது சுகாதாரம் ஆகியவற்றிற்காகச் செய்யும் முதலீடுகள் படிப்படியாகக் குறைந்து வருவதையும், தரமான மருத்துவ வசதியை எல்லோருக்கும் அளிக்க வேண்டிய அரசுகள் மக்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்துகொடுத்து தனியாரிடமே பணத்தைத் திருப்பிவிடும் போக்கு அதிகரித்திருப்பதையும் கடந்த பத்தாண்டு நிகழ்வுகளை சற்றே அசைபோட்டால் உணர்ந்துகொள்ளலாம்.
750 கோடிக்கு உயர்தரமான மூன்று மருத்துவக் கல்லூரிகளைக் கட்டி, மக்களுக்கு தரமான மருத்துவத்தையும் மருத்துவ மாணவர்களுக்கு நல்ல கல்வியையும் அளித்திருக்கலாம் தமிழக அரசு. ஆனால், தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அதே தொகையைத் திருப்பிவிட்டு, காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் என பல தனியார் நிறுவனங்களுக்குச் சேவை புரிந்திருக்கிறது தமிழக அரசு. அந்தத் திட்டம்தான், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம்; இது ஒரு உதாரணம் மட்டுமே. நடப்பு பட்ஜெட் அறிவிப்பின்படி, இதுபோன்ற மாநில அரசுகளின் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களே நாடுதழுவிய அளவில் மிகப்பெரிய, அவர்களே சொல்வதுபோல், உலகிலேயே பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக வளர்த்தெடுத்திருக்கிறது மத்திய அரசு!
இனி மருத்துவத்தைச் சேவையாகக் கருதும் மருத்துவர்கள் தேவையில்லை. மருத்துவப் பணிகளை தொழில்முறை வர்த்தகமாக திறன்படச் செய்யும் பயிற்சி பெற்ற நபர்கள்தான் தேவை. குறிப்பாக, அவர்களுக்கு மனிதாபிமானம், மக்கள்மீது அக்கறை, சமூகப் பொறுப்புணர்வு போன்ற எந்தக் கருமமும் கிஞ்சித்தும் இருக்கக்கூடாது. சுருங்கச் சொன்னால், மருத்துவம்-நலவாழ்வு என்ற தொழிலில் ஈடுபட்டுள்ள இயந்திரத்தனமான மருத்துவ நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களாக இந்த மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும். இதனை உறுதிப்படுத்தத்தான் நீட் தேர்வு வந்திருக்கிறது. பெரும்பாலும் நடுத்தர, உயர் நடுத்தரப் பின்னணி கொண்ட, போட்டியிட்டுப் படிப்பதைத் தவிர வேறெந்த இலட்சியமோ சமூகப் பார்வையோ இல்லாத மாணவர்களை மருத்துவப் படிப்பிற்குள் வடிகட்டி அனுப்பத்தான் நீட் தேர்வு.
மேலும், இத்தகய பின்புலத்திலிருந்து மருத்துவம் பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக கிராமங்களுக்குச் சென்று மருத்துவச் சேவை புரிய விரும்ப மாட்டார்கள்; அவ்வாறு வற்புறுத்துவதும் இந்திய மருத்துவ கௌன்சில் விதிகளுக்கு எதிரானதாக இருக்கும். போதிய மருத்துவர்கள் கிடைக்காததைக் காரணம் காட்டி, ஆரம்ப சுகாதார நிலையங்களை மூடிவிடலாம், அல்லது தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கையளித்துவிடலாம் என்பதுதான் அரசுகளின் வழிமுறை. திட்டமும், இலக்கும் பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகளும், உலக வர்த்தக மையமும் தீர்மானித்தவைதான்; வழிமுறைகளை வகுத்துச் செயல்படுத்துவதுதான் அரசுகளின் வேலை! அந்த வழிமுறையின் முக்கிய அங்கம்தான் நீட் தேர்வு.
எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நடுத்தர வர்க்கம்!
இந்தியாவில், தான் நடுத்தர வர்க்கம் என்று வலிந்து நம்பிக்கொண்டிருக்கும் குடும்பங்களும் பெற்றோரும் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களின் ஒரே கனவு, இலட்சியம் எல்லாம் தமது குழந்தைகளுக்குத் தனக்குக் கிடைக்காத வசதிகளைக் கொடுப்பது, தான் சாதிக்க முடியாதனவற்றை அவர்களிடம் திணித்தாவது சாதிக்க வைப்பது ஆகியவைதான். சமூக அக்கறை, அரசியல், பொருளாதார அறிவு எல்லாம் இந்த நடுத்தர, உயர் நடுத்தர பிரிவினருக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப்புக்குள் அடக்கம். மற்றபடி எத்தனை தேர்வுகள், எவ்வளவு நெருக்கடிகள், என்ன வகை துன்பங்கள் தமக்கு ஏற்படுத்தப்பட்டாலும், அவற்றை பணிவோடு ஏற்று, அவை நியாயமா என்று ஒரு சிறு கேள்வியும் கேட்காமல், எப்படி அந்தப் புதிய நெருக்கடிக்குத் தம்மைப் பழக்கிக் கொள்வது, இதற்குள் ஓடி எப்படி வெற்றிபெறுவது என்று தீவிரமாகத் தம்மைத் தகவமைத்துக்கொள்ளத் தொடங்கிவிடுகிறார்கள்.
நீட் தேர்வு நியாயமான மதிப்பீட்டு முறைதானா, அது தமது குழந்தைகளின்மீது ஏன் திணிக்கப்படுகிறது என்பது போன்ற எந்தக் கேள்வியையும் எழுப்பாமல், ஆந்திராவில் இருந்து புதிய நீட் பயிற்சியாளர்களைக் கொண்டுவந்து இறக்கியிருக்கும் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கிறார்கள் பெற்றோர்கள். நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தவறிக்கூட இவர்கள் பங்கேற்பதுமில்லை; மக்கள் திரள் போராட்டங்களைக் குறைசொல்லிச் சிறுமைப்படுத்தத் தவறுவதுமில்லை. இந்த நடுத்தர வர்க்கம் விழித்துக்கொண்டு பெரும் மக்கள் போராட்டங்கள் நடந்தால் மட்டுமே நீட் தேர்வு நமது மாணவர்கள் மீது திணிக்கப்படுவதைத் தடுக்க முடியும். மருத்துவம் என்பது தொழில்முறை வர்த்தகமல்ல; மக்கள் சேவை, அரசுகளின் கடமை, மக்களின் அடிப்படை உரிமை என்பதை உரியவர்களுக்கு உரிய விதங்களில் புரியவைத்தால் மட்டுமே நீட் தேர்வு என்னும் கொடுங்கனவை நிறுத்த முடியும். அதுவரை பன்னாட்டு முதலாளித்துவமும் இந்நாட்டு மேலாதிக்கமும் கைகோர்த்துத் தமது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்!
சுருக்கமாகச் சொன்னால், நீட் தேர்வு சமூக நீதிக்குச் சாக்காடு; இனி மருத்துவம் தனியாரின் வேட்டைக்காடு!
பின்குறிப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட செய்திகளும் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகளும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தோன்றலாம். இந்திய அரசு தனக்குச் சொந்தமான விமான நிறுவனங்களை தனியாருக்கு விற்குமென்று யாரேனும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் கற்பனையாகத்தான் தோன்றியிருக்கும். கடந்த பத்தாண்டுகளில் இரண்டு நிறுவனங்கள் ஒன்றாகி, தற்போது அந்த ஒன்றும் விற்பனை செய்யப்பட சந்தையில் காத்திருக்கிறது. இதுபோன்ற நிலை மருத்துவத் துறையில் ஏற்பட வெகுகாலம் பிடிக்காது. நீட் தேர்வு அதற்கான சிறந்த வழிமுறை.
--
கட்டுரையாளர் கள்ளக்குறிச்சி திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர்.
தொடர்புக்கு: [email protected]