எங்கள் விடுதியில் காதலிக்க அனுமதி இல்லை என்றாலும், காதலோ யார் அனுமதியையும் கேட்காமல் வந்துகொண்டுதான் இருந்தது. அங்கு பலரும் அதன் மாயக் கரங்களால் ஆட்டுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். கால ஓட்டத்தில் காட்சிகள் மாறிவிட்டன. ஆனால், நினைவுகளோ நிலைத்துவிட்டன.
நான் 6-ஆம் வகுப்பு படிக்கும்போதெல்லாம் எங்கள் வகுப்பில் அமைதியாகத்தான் இருப்பேன். நொண்டிச்சாமி, வேலுச்சாமி, பாண்டிமல்லையன், காளிரத்தினம் என ஒரு பையன்கள் பட்டாளம் எங்கள் வகுப்பில் இருந்த ஒரு பெண்ணின் மனதில் முட்டி மோதி இடம்பிடிக்கப் போராடிக்கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணின் பெயர் வரும் பாடல்களைத் தேர்ந்தெடுத்து வகுப்பில் பாடுவது, ஹரிஹரன் பாடல் வரிகளை கவிதையாய் ஒப்பிப்பது என அவர்களது பெர்ஃபாமன்சுகள் தூள் பறந்தன.
நானோ, காதலென்றால் காத தூரம் தள்ளி ஓடிவிடுவேன். காதலை ஒரு கெட்ட வார்த்தையாகவே நான் கருதினேன். அந்த நேரத்தில் நான் எவ்வளவு வெகுளியாக இருந்தேன் என்றால், என் வகுப்பில் ஒரு பையன் பேச்சுவாக்கில் ‘புருசன் பொண்டாட்டி’ என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டான். உடனே நான், நரம்புகள் புடைக்க, “டீச்சர்! இவன் புருசன் பொண்டாட்டினெள்ளாம் சொல்லுறான்” என கம்ப்ளைண்ட் செய்தேன். உடனே அந்த டீச்சரும், இந்த வயசுல பேசுற பேச்சானு அவனை அடி வெளுத்துக் கட்டிட்டாங்க. பின் எனது பெருமையை விடுதி முழுவதும் பரப்பினேன். அதில் கொடுமை என்னவென்றால், அவன் ஒருமுறை சொன்ன ‘புருசன் பொண்டாட்டி’ என்ற சொற்களை, நான் அன்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட முறை சொல்லியிருப்பேன்.
அமைதியாய், அதிர்ந்து பேசினால் அழுதுவிடுபவனாய், எந்நேரமும் புத்தகமும் கையுமாய், வகுப்பின் மூலையில் அப்பாவியாய் அமர்ந்திருப்பேன். ஆனால், அந்தப் பெண் என்னிடம்தான் பேசினாள்! அப்படியே காதலும் மலர்ந்தது.
நான் காதலில் மிதக்கத் தொடங்கிய உடனே, அந்த பெண்ணோட பெயரை என்னோட நோட்டுல எழுதிப்பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அங்கேதான் எனக்கொரு சந்தேகம் வந்தது. அந்தப் பெண்ணோட பேருக்கு, சின்ன ‘ரா’ வருமா, பெரிய ‘றா’ வருமா? அந்த சந்தேகத்த எப்படித் தீர்ப்பது என யோசித்துக் கொண்டிருந்தேன்.
அன்று இரவு எங்கள் விடுதியின் வழிபாட்டுக் கூட்டத்தில், தன்னிடம் தெரிவிக்கப்பட்ட புகார்களை வார்டன் விசாரிக்கத் தொடங்கினார். அந்தப் புகார் என்னவென்றால், கண்ணதாசன் அண்ணன் தன்னோட காதலியின் பிறந்தநாள், வயது போன்ற விவரங்களை அறிந்துகொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். பார்வையற்றவர்கள் தொடர்வண்டியில் கட்டணச் சலுகையைப் பெற ஒரு அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். அந்த அட்டையை, அந்த அக்கா வகுப்புக்கு கொண்டு வந்திருக்கிறார். பார்த்துவிட்டுத் தருவதாக அதை வாங்கிய கண்ணதாசன் அண்ணன், அதில் உள்ள பிறந்தநாள் விவரங்களை பார்த்துவிட்டு, சொன்னது போலவே திருப்பிக் கொடுத்துவிட்டார்.
இங்க பிரச்சன என்னனா, இவர் நோட் செய்ததை இன்னொருத்தனும் நோட் செய்திருக்கிறான். அப்படியென்றால், ஒரே பெண்ணை இரண்டு பேர் காதலிச்சாங்களானு கேட்கக் கூடாது. அவர் அந்த அட்டையை வாங்கி என்ன செய்தார் என்பதை இன்னொருத்தன் நோட் செய்து, வார்டன் காதுல ஓதிட்டான். நியாயமா அவர் என்ன சொல்லியிருக்கணும்? ‘பள்ளிக்கூடம் என்னோட கண்ட்ரோலுல வராது. விடுதிதான் நம்ம லிமிட்டு’னு சொல்லியிருக்கணும். ஆனால் அவரோ, ஒரு ஆக்ஷன் பிளாக் மாட்டிருச்சுன்னு வெளுத்து வாங்கிட்டாரு.
இந்தக் கம்ப்ளைண்டிலிருந்து எனக்கான ஐடியாவப் புடிச்சேன். வகுப்பில் ஒரு மதிப்பெண் தேர்வு வைக்கப்பட்டால் பாண்டிமல்லையன்தான் விடைத்தாள்களை வாங்கி ஆசிரியரின் மேசையில் அடுக்குவான். “எத்தன நாளுதாண்டா நீயே வாங்கி அடுக்கி சிரமப்படுவ? இனிமே, நீ ஒரு மாசம்; நான் ஒரு மாசம் பொறுப்ப எடுத்துக்குவோம்” எனக் கூறி, அவனை ஐஸ் வைத்து, பொறுப்பை வாங்கி, அந்த பிள்ளையோட பேருக்கு என்ன ‘ரா’ வரும் என்பதை கண்டுபிடித்துவிட்டேன்.
அந்த சமயத்தில் ஃபிலேம் போட்டுப் பார்ப்பது பிரபலமாய் இருந்தது. எனக்குத் தமிழே ததீங்கினத்தோம் போடுது; ஆங்கில அறிவு சுத்தம். பாண்டிமல்லையனிடமிருந்து வாங்கிய அந்த பொறுப்பை தொடர்ந்து செவ்வனே ஆற்றியதால், அந்தப் பெண்ணின் பெயருக்கான ஸ்பெல்லிங்கையும் கண்டுபிடித்துவிட்டேன். ஃபிலேம் போட்டுப் பார்த்ததில் மேரேஜ் என ரிசல்ட்டும் வந்தது.
அப்படியே காலங்கள் உருண்டோடின. “சக்தி இங்க வாயா” என அழைத்த காந்த ரூபன், கடச்சனேந்தலிலிருந்து வாங்கி வந்த சிக்கன், கொத்துப் புரோட்டா என அனைத்தையும் என்னிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான். ஒன்றும் புரியாமல் அதை வாங்கியபோது, “ஒரு புள்ள என்ன காதலிக்கிறேனு சொல்லிருச்சுயா. இன்னைக்கி நீ என்ன வேணுமோ கேளு. நான் வாங்கித்தாரேன்” எனச் சொல்லியவன், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தான்.
சாப்பிட்டு முடித்த பின், மொட்டை மாடிக்குச் சென்று நண்பர்களிடம் இதை விவரித்துக் கொண்டிருந்தேன். கூட்டத்திலிருந்த சசிக்குமார் மட்டும் விழுந்து விழுந்து சிரித்தான். காரணம் கேட்டபோது, “நான்தான்டா அவன்கிட்ட ஃபோனுல பொம்பள குரலுல பேசுனேன். அந்த கண்றாவிக் குரலயுமா அவன் கண்டுபுடிக்கல? என்ன செய்றது சக்தி, காதல் கண்ண மறச்சுருச்சுபோல; இல்ல, இல்ல காத அடச்சுருச்சு போல. ஆனா, நீ எல்லாம் நல்லா இருக்க மாட்டடா. வெத போடுறவன் ஒருத்தன்; பழம் திங்கிறது நீயா?” என நொந்துகொண்டான்.
எங்கள் விடுதியில் எத்தனை காதல் ஜோடிகள் இருக்கின்றன என்பதை விருந்து சாப்பாட்டின்போது கண்டுபிடித்துவிடலாம். விருந்தில் பரிமாறப்படும் லட்டு, வாழைப்பழம், ஐஸ்கிரீம் என எல்லாவற்றையுமோ அல்லது அதில் சிலவற்றையோ தங்கள் காதலனுக்கு 6, 7-ஆம் வகுப்பு சிறுவர்களிடம் கொடுத்து கொடுக்கச் சொல்வார்கள். இப்படித்தான் எங்கள் விடுதிப் பிள்ளைகள் உச்சபட்ச அன்பை பரிமாறிக்கொண்டனர். அந்த சிறுவர்களை கண்காணித்தும், நேரடியாகக் கண்டவற்றையும், செவிவழியாய் கேட்டவற்றையும் கொண்டு ‘டாப் 10’ ஜோடிகளை வரிசைப்படுத்தி, நாங்கள் மாதந்தோறும் வெளியிட்டு வந்தோம்.
அதில் ஒவ்வொரு மாதமும் ‘ஃபோக்கஸ் லைட்’ ஜோடிதான் முதலிடம் பிடிக்கும். எங்கள் நிறுவனத்தின் பெயர் பதித்த கோபுரம் ஒன்று இருக்கும். அதன் இரண்டு பக்கமும் ஃபோக்கஸ் லைட் போடப்பட்டிருக்கும். அதற்கு கீழே இருக்கும் பெஞ்சில்தான் அந்த ஜோடி எப்போதும் அமர்ந்து பேசிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருக்கும். அதனால்தான் அந்த ஜோடிக்கு அப்பெயர். இருவரும் சிறப்பாக படிக்கக் கூடியவர்கள்.
நாங்கள் கொடுத்த முதலிடம் சரி என்பது போல்தான் அவர்களது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அமைந்திருந்தன. இருவருமே ஒரே மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பிடித்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடிப்பவர்களின் பெயர்கள் ஒரு பெரிய பலகையில் எழுதப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். அப்படி அந்தப் பலகையில் இருவரது பெயரும் அருகருகே இடம்பிடித்துவிட்டது. அவர்களைத் தவிர வேறு யாரும் I.A.B. பள்ளி வரலாற்றில் இதுவரை இருவராக முதல் மதிப்பெண் எடுத்ததில்லை!
மதுரை சுந்தரராஜன்பட்டியில் உள்ள I.A.B. பள்ளிக்குச் சென்றால் நீங்கள் அவர்களது பெயர்களைப் பார்க்கலாம். I.A.B. இருக்கும்வரை அவர்களது பெயர்கள் நிலைத்திருக்கும்.
--
தொடர்புக்கு: [email protected]
நான் 6-ஆம் வகுப்பு படிக்கும்போதெல்லாம் எங்கள் வகுப்பில் அமைதியாகத்தான் இருப்பேன். நொண்டிச்சாமி, வேலுச்சாமி, பாண்டிமல்லையன், காளிரத்தினம் என ஒரு பையன்கள் பட்டாளம் எங்கள் வகுப்பில் இருந்த ஒரு பெண்ணின் மனதில் முட்டி மோதி இடம்பிடிக்கப் போராடிக்கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணின் பெயர் வரும் பாடல்களைத் தேர்ந்தெடுத்து வகுப்பில் பாடுவது, ஹரிஹரன் பாடல் வரிகளை கவிதையாய் ஒப்பிப்பது என அவர்களது பெர்ஃபாமன்சுகள் தூள் பறந்தன.
நானோ, காதலென்றால் காத தூரம் தள்ளி ஓடிவிடுவேன். காதலை ஒரு கெட்ட வார்த்தையாகவே நான் கருதினேன். அந்த நேரத்தில் நான் எவ்வளவு வெகுளியாக இருந்தேன் என்றால், என் வகுப்பில் ஒரு பையன் பேச்சுவாக்கில் ‘புருசன் பொண்டாட்டி’ என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டான். உடனே நான், நரம்புகள் புடைக்க, “டீச்சர்! இவன் புருசன் பொண்டாட்டினெள்ளாம் சொல்லுறான்” என கம்ப்ளைண்ட் செய்தேன். உடனே அந்த டீச்சரும், இந்த வயசுல பேசுற பேச்சானு அவனை அடி வெளுத்துக் கட்டிட்டாங்க. பின் எனது பெருமையை விடுதி முழுவதும் பரப்பினேன். அதில் கொடுமை என்னவென்றால், அவன் ஒருமுறை சொன்ன ‘புருசன் பொண்டாட்டி’ என்ற சொற்களை, நான் அன்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட முறை சொல்லியிருப்பேன்.
அமைதியாய், அதிர்ந்து பேசினால் அழுதுவிடுபவனாய், எந்நேரமும் புத்தகமும் கையுமாய், வகுப்பின் மூலையில் அப்பாவியாய் அமர்ந்திருப்பேன். ஆனால், அந்தப் பெண் என்னிடம்தான் பேசினாள்! அப்படியே காதலும் மலர்ந்தது.
நான் காதலில் மிதக்கத் தொடங்கிய உடனே, அந்த பெண்ணோட பெயரை என்னோட நோட்டுல எழுதிப்பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அங்கேதான் எனக்கொரு சந்தேகம் வந்தது. அந்தப் பெண்ணோட பேருக்கு, சின்ன ‘ரா’ வருமா, பெரிய ‘றா’ வருமா? அந்த சந்தேகத்த எப்படித் தீர்ப்பது என யோசித்துக் கொண்டிருந்தேன்.
அன்று இரவு எங்கள் விடுதியின் வழிபாட்டுக் கூட்டத்தில், தன்னிடம் தெரிவிக்கப்பட்ட புகார்களை வார்டன் விசாரிக்கத் தொடங்கினார். அந்தப் புகார் என்னவென்றால், கண்ணதாசன் அண்ணன் தன்னோட காதலியின் பிறந்தநாள், வயது போன்ற விவரங்களை அறிந்துகொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். பார்வையற்றவர்கள் தொடர்வண்டியில் கட்டணச் சலுகையைப் பெற ஒரு அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். அந்த அட்டையை, அந்த அக்கா வகுப்புக்கு கொண்டு வந்திருக்கிறார். பார்த்துவிட்டுத் தருவதாக அதை வாங்கிய கண்ணதாசன் அண்ணன், அதில் உள்ள பிறந்தநாள் விவரங்களை பார்த்துவிட்டு, சொன்னது போலவே திருப்பிக் கொடுத்துவிட்டார்.
இங்க பிரச்சன என்னனா, இவர் நோட் செய்ததை இன்னொருத்தனும் நோட் செய்திருக்கிறான். அப்படியென்றால், ஒரே பெண்ணை இரண்டு பேர் காதலிச்சாங்களானு கேட்கக் கூடாது. அவர் அந்த அட்டையை வாங்கி என்ன செய்தார் என்பதை இன்னொருத்தன் நோட் செய்து, வார்டன் காதுல ஓதிட்டான். நியாயமா அவர் என்ன சொல்லியிருக்கணும்? ‘பள்ளிக்கூடம் என்னோட கண்ட்ரோலுல வராது. விடுதிதான் நம்ம லிமிட்டு’னு சொல்லியிருக்கணும். ஆனால் அவரோ, ஒரு ஆக்ஷன் பிளாக் மாட்டிருச்சுன்னு வெளுத்து வாங்கிட்டாரு.
இந்தக் கம்ப்ளைண்டிலிருந்து எனக்கான ஐடியாவப் புடிச்சேன். வகுப்பில் ஒரு மதிப்பெண் தேர்வு வைக்கப்பட்டால் பாண்டிமல்லையன்தான் விடைத்தாள்களை வாங்கி ஆசிரியரின் மேசையில் அடுக்குவான். “எத்தன நாளுதாண்டா நீயே வாங்கி அடுக்கி சிரமப்படுவ? இனிமே, நீ ஒரு மாசம்; நான் ஒரு மாசம் பொறுப்ப எடுத்துக்குவோம்” எனக் கூறி, அவனை ஐஸ் வைத்து, பொறுப்பை வாங்கி, அந்த பிள்ளையோட பேருக்கு என்ன ‘ரா’ வரும் என்பதை கண்டுபிடித்துவிட்டேன்.
அந்த சமயத்தில் ஃபிலேம் போட்டுப் பார்ப்பது பிரபலமாய் இருந்தது. எனக்குத் தமிழே ததீங்கினத்தோம் போடுது; ஆங்கில அறிவு சுத்தம். பாண்டிமல்லையனிடமிருந்து வாங்கிய அந்த பொறுப்பை தொடர்ந்து செவ்வனே ஆற்றியதால், அந்தப் பெண்ணின் பெயருக்கான ஸ்பெல்லிங்கையும் கண்டுபிடித்துவிட்டேன். ஃபிலேம் போட்டுப் பார்த்ததில் மேரேஜ் என ரிசல்ட்டும் வந்தது.
அப்படியே காலங்கள் உருண்டோடின. “சக்தி இங்க வாயா” என அழைத்த காந்த ரூபன், கடச்சனேந்தலிலிருந்து வாங்கி வந்த சிக்கன், கொத்துப் புரோட்டா என அனைத்தையும் என்னிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான். ஒன்றும் புரியாமல் அதை வாங்கியபோது, “ஒரு புள்ள என்ன காதலிக்கிறேனு சொல்லிருச்சுயா. இன்னைக்கி நீ என்ன வேணுமோ கேளு. நான் வாங்கித்தாரேன்” எனச் சொல்லியவன், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தான்.
சாப்பிட்டு முடித்த பின், மொட்டை மாடிக்குச் சென்று நண்பர்களிடம் இதை விவரித்துக் கொண்டிருந்தேன். கூட்டத்திலிருந்த சசிக்குமார் மட்டும் விழுந்து விழுந்து சிரித்தான். காரணம் கேட்டபோது, “நான்தான்டா அவன்கிட்ட ஃபோனுல பொம்பள குரலுல பேசுனேன். அந்த கண்றாவிக் குரலயுமா அவன் கண்டுபுடிக்கல? என்ன செய்றது சக்தி, காதல் கண்ண மறச்சுருச்சுபோல; இல்ல, இல்ல காத அடச்சுருச்சு போல. ஆனா, நீ எல்லாம் நல்லா இருக்க மாட்டடா. வெத போடுறவன் ஒருத்தன்; பழம் திங்கிறது நீயா?” என நொந்துகொண்டான்.
எங்கள் விடுதியில் எத்தனை காதல் ஜோடிகள் இருக்கின்றன என்பதை விருந்து சாப்பாட்டின்போது கண்டுபிடித்துவிடலாம். விருந்தில் பரிமாறப்படும் லட்டு, வாழைப்பழம், ஐஸ்கிரீம் என எல்லாவற்றையுமோ அல்லது அதில் சிலவற்றையோ தங்கள் காதலனுக்கு 6, 7-ஆம் வகுப்பு சிறுவர்களிடம் கொடுத்து கொடுக்கச் சொல்வார்கள். இப்படித்தான் எங்கள் விடுதிப் பிள்ளைகள் உச்சபட்ச அன்பை பரிமாறிக்கொண்டனர். அந்த சிறுவர்களை கண்காணித்தும், நேரடியாகக் கண்டவற்றையும், செவிவழியாய் கேட்டவற்றையும் கொண்டு ‘டாப் 10’ ஜோடிகளை வரிசைப்படுத்தி, நாங்கள் மாதந்தோறும் வெளியிட்டு வந்தோம்.
அதில் ஒவ்வொரு மாதமும் ‘ஃபோக்கஸ் லைட்’ ஜோடிதான் முதலிடம் பிடிக்கும். எங்கள் நிறுவனத்தின் பெயர் பதித்த கோபுரம் ஒன்று இருக்கும். அதன் இரண்டு பக்கமும் ஃபோக்கஸ் லைட் போடப்பட்டிருக்கும். அதற்கு கீழே இருக்கும் பெஞ்சில்தான் அந்த ஜோடி எப்போதும் அமர்ந்து பேசிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருக்கும். அதனால்தான் அந்த ஜோடிக்கு அப்பெயர். இருவரும் சிறப்பாக படிக்கக் கூடியவர்கள்.
நாங்கள் கொடுத்த முதலிடம் சரி என்பது போல்தான் அவர்களது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அமைந்திருந்தன. இருவருமே ஒரே மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பிடித்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடிப்பவர்களின் பெயர்கள் ஒரு பெரிய பலகையில் எழுதப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். அப்படி அந்தப் பலகையில் இருவரது பெயரும் அருகருகே இடம்பிடித்துவிட்டது. அவர்களைத் தவிர வேறு யாரும் I.A.B. பள்ளி வரலாற்றில் இதுவரை இருவராக முதல் மதிப்பெண் எடுத்ததில்லை!
மதுரை சுந்தரராஜன்பட்டியில் உள்ள I.A.B. பள்ளிக்குச் சென்றால் நீங்கள் அவர்களது பெயர்களைப் பார்க்கலாம். I.A.B. இருக்கும்வரை அவர்களது பெயர்கள் நிலைத்திருக்கும்.
--
தொடர்புக்கு: [email protected]