திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. அது உண்மையென்றால், மணமாகக் காத்திருக்கும் எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளின் திருமணங்கள் ஏன் இன்னும் நிச்சயிக்கப்படவில்லை என்பதன் மர்மம் புரியவில்லை. திருமணங்களில் மனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பணம், கௌரவம் முதலியவை முதலிடத்தைப் பிடித்துவிட்டதும், பெண்களின் நிபந்தனைகளும் எதிர்பார்ப்புகளும் ஜி.எஸ்.டி. மாதிரி எகிறிவிட்டதும் காரணமாக இருக்கலாம்.
பல பார்வையுள்ள காளைகளே திருமணச் சந்தையில் விலைபோகாமல் காத்திருக்க, ஒரு பார்வையற்ற ஜல்லிக்கட்டுக் காளையை பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கரம் பிடித்திருக்கிறார் சக்தி பிருந்தா என்கிற பார்வையுள்ள பேராசிரியர்!
பார்வையற்றோர் குறித்த போதிய விழிப்புணர்வில்லாத சமூகத்தின் கடுமையான எதிர்மறை விமர்சனங்களையும் கருத்துக்களையும் மிகுந்த மன வலிமையோடு எதிர்கொண்டு, திருமண வாழ்வில் இணைந்திருக்கும் பேராசிரியர் திரு. முருகானந்தன், பேராசிரியை திருமதி. சக்தி பிருந்தா இணையரை விரல்மொழியர் காதலர்தின சிறப்பிதழுக்காக சந்தித்தோம். பேராசிரியரே பேச்சைத் தொடங்கினார்.
“என்னோட பள்ளிப்படிப்பு முழுக்க கரூர்ல ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் பார்வையுள்ள மாணவர்களோடு சேர்ந்தே படிச்சேன். அதுக்கப்புறம் சென்னை மாநிலக் கல்லூரியில இளங்கலை ஆங்கிலம், அடுத்து முதுகலையிலிருந்து Ph.D. வரைக்கும் 7 வருஷம் புதுவையிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துல படிச்சேன்.
Ph.D. படிக்கும்போதுதான் கரூர்ல உள்ள ஒரு பேராசிரிய நண்பர் மூலமா எனக்கு பிருந்தாவோட அறிமுகம் கெடச்சதுங்க. 2011-ல இதே பல்கலைக்கழகத்துல கரூர்ல இருந்து முதுகலை ஆங்கிலத்துல ஜாயிண்ட் பண்ணின பிருந்தாவுக்கு, பாடம் தொடர்பான கைடன்ஸ் கொடுக்கச்சொல்லி என் நண்பன் கேட்டுக்கிட்டதால ஆரம்பிச்ச எங்க நட்பு, இப்ப வாழ்க்கை முழுக்க என்ன அவங்களும் அவங்கள நானும் கைட் பண்ணிக்கிற திருமண பந்தமா தொடருது. கைட் பண்றதுன்னா முழுசா கடைசிவரைக்கும் பண்ணனுமில்லையா?” சொல்லிக்கொண்டே சிரிக்கிறார் முருகானந்தன்.
சரி. உங்களுக்கிடையிலான காதலை யார் முதல்ல ப்ரோப்போஸ் பண்ணினது?
“நான்தானுங்க” என்று உற்சாகமாக பதில் சொல்லத் தொடங்கிய முருகானந்தனை இடைமறித்து, “நான் சொல்றேன்” என்றார் பிருந்தா.
“அந்த ஸ்வீட் மெமரீஸ நானே சொல்றேன். புதுவை பல்கலைக்கழகத்துல நான் முதுகலை படிச்ச ரெண்டு வருஷமும், எங்களுக்கிடையிலான உறவு நட்பு ரீதியிலதான் இருந்துச்சு. பாடம் தொடர்பான டிஸ்கஷன்ஸ், எங்களோட நட்பு வட்டத்தோட அறிமுகம், அப்பப்ப பல்கலைக்கழகத்துக்கு எதிர்ல இருக்கிற ஜூஸ் கடை வரைக்கும் ஒன்னா சேர்ந்து ஒரு அவுட்டிங், இவ்ளோதான்.
முதுகலை முடிச்சு, 2013-ல கோவையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில M.Phil. ஜாயிண்ட் பண்ணினதுக்கப்புறமா அவங்கள ரொம்ப மிஸ் பண்ணினேன். ‘காதலை யாரது முதலில் சொல்வது நீயா இல்லை நானா’ன்னு, நான் யாருக்கும் கேட்காதமாதிரி மனசுக்குள்ள பாடிக்கிட்டிருந்தப்ப, அவங்க கொஞ்சம் தைரியமா ஃபோன் பண்ணி என் காதுக்குள்ளேயே பாடிட்டாங்க. ஆனாலும் எங்க வீட்ட நெனச்சு எனக்குக் கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு”.
உயர் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த உங்களுக்கு, ஒரு பார்வையற்றவர திருமணம் செஞ்சுக்கிறதுல குடும்பத்திலிருந்தும் பொதுச்சமூகத்திடமிருந்தும் நிறைய சிக்கல்கள் இருந்திருக்குமே?
“நிச்சயமா நிறைய சிக்கல்கள் இருந்துச்சு. எங்க லவ் பத்தி தெரிஞ்ச சிலர், ஒனக்கென்ன குறைச்சல்? நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கலாமே? நல்லா யோசிச்சுதான் முடிவு பண்ணியிருக்கியா? இந்த மாதிரியெல்லாம் கேட்டாங்க. கடைசி வரைக்கும் கல்யாணத்துக்கு எங்க வீட்டுல ஒத்துக்கவே இல்ல. எங்களோட நண்பர்கள் முன்னிலையிலதான் எங்க கல்யாணமே நடந்துச்சு. ஆனா, கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துக்குள்ள என்னோட குடும்பம் எங்களப் புரிஞ்சு ஏத்துக்கிட்டாங்க. இப்போ எங்க குடும்ப விழாக்களுக்குப் போனா, எங்க அண்ணன்தான் முருகானந்தன் கூடவே இருக்காங்க”.
பார்வையற்றவர்கள் அரசுப்பணி, கைநிறைய சம்பளம்னு நல்ல நிலையில இருந்தாலும், திருமணம்னு வரும்போது பார்வையுள்ளவர்களோடு ஒப்பிடும்போது நிறைய சிக்கல்கள் வருது. அதற்கான காரணங்களா நீங்க எதை நினைக்கறீங்க?
“ஒரு பார்வையற்றவன் எந்த சாதியில பிறந்தாலும், திருமணம்னு வரும்போது அந்த சாதிக்குள்ளாகவே அவன் மிகவும் தாழ்த்தப்பட்டவனாகத்தான் பார்க்கப்படுகிறான். அது தவிர, பார்வையற்றவர்கள் பத்தின நிறைய தவறான புரிதல் இந்த பொதுச்சமூகத்துல இருக்கு. அதனால யாரும் பார்வையற்றவர்களுக்கு தன்னோட பெண்ணையோ பையனையோ திருமணம் பண்ணிக்கொடுக்க சம்மதிக்க மாட்டேங்கிறாங்க. பார்வையற்றவர்கள் குறித்த போதிய விழிப்புணர்வையும், புரிதல்களையும் பொதுச் சமூகத்திடம் நாமதான் கொண்டு சேர்க்கணும். அந்த வகையில விரல்மொழியர் மின்னிதழின் முயற்சி பாராட்டத்தக்கது” என நமக்கு தன் பாராட்டுகளைப் பகிர்ந்துகொண்டார் முருகானந்தன்.
அப்போது, இந்தக் காதல் இணையின் பத்துமாத ஆண் குழந்தை இளமுகிலன் சிணுங்கத் தொடங்கிவிட்டான். உடனே சமையலறைக்கு விரைந்த பேராசிரியர், தன் மனைவியிடம் பால் இருக்கும் இடத்தைக் கேட்டார். அப்போது பேராசிரியை, பால் இருக்கும் இடத்தை அவருக்குப் புரியும்படி தெளிவாகச் சொன்னார். எந்த இடத்தில் இருக்கிறது, எந்தக் கை பக்கமாக இருக்கிறது, எந்தப் பொருளுக்கு அருகில் இருக்கிறது என்றெல்லாம் அவர் இயல்பாக, மடமடவென சொன்னது வியப்பாக இருந்தது. “அத கொஞ்சம் சூடு பண்ணி எடுத்துட்டு வாங்க” என்று உரிமையோடு வேலையும் வாங்கினார். இவர்களின் செயல்பாடுகள் வியப்பையும், பெருமிதத்தையும் தந்தன.
நம்முடைய ரியாக்ஷனைப் புரிந்துகொண்ட பேராசிரியர், “இதுல நீங்க ஆச்சரியப்பட ஒண்ணுமில்லைங்க. அவங்க கள்ளக்குறிச்சியில ஒரு தனியார் கல்லூரியில ஆங்கிலத்துறை விரிவுரையாளரா இருக்காங்க. நானும் கள்ளக்குறிச்சியில திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில ஆங்கிலத்துறை உதவி பேராசிரியரா இருக்கேன். ரெண்டு பேருமே வேலைக்குப் போறதால, பிருந்தாவோட பணிச் சுமையக் குறைக்க, என்னால முடிஞ்ச அளவுக்கு வீட்டுவேலைகள்ல பங்கெடுத்துக்குவேனுங்க” என்றார்.
சரி. அவர் வேலையைப் பார்க்கட்டும். தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து, பேராசிரியை பக்கம் திரும்பினோம். இளமுகிலன் அப்படிங்கிற உங்க பையனோட பேருக்கு எதும் காரணமிருக்கா?
“எனக்கும் முருகானந்தன் மாதிரியே பெரியாரியக் கொள்கைகள், பெண்ணியம், ஆங்கிலத்துறையில வேலை பார்த்தாலும் தாய்மொழிப் பற்று முதலிய கொள்கைகளில் பிடிப்பு உண்டு. அதனால, பிறந்த நேரம், நியூமராலஜி இந்த மாதிரி எதுவும் பாக்காம நல்ல தமிழ் பெயரா வைக்கணும்னு யோசிச்சப்ப தோணினதுதாங்க இந்தப் பெயர்”.
“அன்பையும் தாண்டி, எங்க ரெண்டுபேரோட ஐடியாலஜியும் ஒத்துப்போறதுதான் இந்தக் காதல் கல்யாணத்தோட வெற்றி” என்று தீர்க்கமாய் சொன்னார் முருகானந்தன்.
வாழ்க்கை முழுவதும் இணைந்திருக்கும் அந்தக் கொள்கைக் கூட்டணி வாழ்விணையர்களை வாழ்த்தி விடைபெற்றோம்.
பல பார்வையுள்ள காளைகளே திருமணச் சந்தையில் விலைபோகாமல் காத்திருக்க, ஒரு பார்வையற்ற ஜல்லிக்கட்டுக் காளையை பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கரம் பிடித்திருக்கிறார் சக்தி பிருந்தா என்கிற பார்வையுள்ள பேராசிரியர்!
பார்வையற்றோர் குறித்த போதிய விழிப்புணர்வில்லாத சமூகத்தின் கடுமையான எதிர்மறை விமர்சனங்களையும் கருத்துக்களையும் மிகுந்த மன வலிமையோடு எதிர்கொண்டு, திருமண வாழ்வில் இணைந்திருக்கும் பேராசிரியர் திரு. முருகானந்தன், பேராசிரியை திருமதி. சக்தி பிருந்தா இணையரை விரல்மொழியர் காதலர்தின சிறப்பிதழுக்காக சந்தித்தோம். பேராசிரியரே பேச்சைத் தொடங்கினார்.
“என்னோட பள்ளிப்படிப்பு முழுக்க கரூர்ல ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் பார்வையுள்ள மாணவர்களோடு சேர்ந்தே படிச்சேன். அதுக்கப்புறம் சென்னை மாநிலக் கல்லூரியில இளங்கலை ஆங்கிலம், அடுத்து முதுகலையிலிருந்து Ph.D. வரைக்கும் 7 வருஷம் புதுவையிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துல படிச்சேன்.
Ph.D. படிக்கும்போதுதான் கரூர்ல உள்ள ஒரு பேராசிரிய நண்பர் மூலமா எனக்கு பிருந்தாவோட அறிமுகம் கெடச்சதுங்க. 2011-ல இதே பல்கலைக்கழகத்துல கரூர்ல இருந்து முதுகலை ஆங்கிலத்துல ஜாயிண்ட் பண்ணின பிருந்தாவுக்கு, பாடம் தொடர்பான கைடன்ஸ் கொடுக்கச்சொல்லி என் நண்பன் கேட்டுக்கிட்டதால ஆரம்பிச்ச எங்க நட்பு, இப்ப வாழ்க்கை முழுக்க என்ன அவங்களும் அவங்கள நானும் கைட் பண்ணிக்கிற திருமண பந்தமா தொடருது. கைட் பண்றதுன்னா முழுசா கடைசிவரைக்கும் பண்ணனுமில்லையா?” சொல்லிக்கொண்டே சிரிக்கிறார் முருகானந்தன்.
சரி. உங்களுக்கிடையிலான காதலை யார் முதல்ல ப்ரோப்போஸ் பண்ணினது?
“நான்தானுங்க” என்று உற்சாகமாக பதில் சொல்லத் தொடங்கிய முருகானந்தனை இடைமறித்து, “நான் சொல்றேன்” என்றார் பிருந்தா.
“அந்த ஸ்வீட் மெமரீஸ நானே சொல்றேன். புதுவை பல்கலைக்கழகத்துல நான் முதுகலை படிச்ச ரெண்டு வருஷமும், எங்களுக்கிடையிலான உறவு நட்பு ரீதியிலதான் இருந்துச்சு. பாடம் தொடர்பான டிஸ்கஷன்ஸ், எங்களோட நட்பு வட்டத்தோட அறிமுகம், அப்பப்ப பல்கலைக்கழகத்துக்கு எதிர்ல இருக்கிற ஜூஸ் கடை வரைக்கும் ஒன்னா சேர்ந்து ஒரு அவுட்டிங், இவ்ளோதான்.
முதுகலை முடிச்சு, 2013-ல கோவையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில M.Phil. ஜாயிண்ட் பண்ணினதுக்கப்புறமா அவங்கள ரொம்ப மிஸ் பண்ணினேன். ‘காதலை யாரது முதலில் சொல்வது நீயா இல்லை நானா’ன்னு, நான் யாருக்கும் கேட்காதமாதிரி மனசுக்குள்ள பாடிக்கிட்டிருந்தப்ப, அவங்க கொஞ்சம் தைரியமா ஃபோன் பண்ணி என் காதுக்குள்ளேயே பாடிட்டாங்க. ஆனாலும் எங்க வீட்ட நெனச்சு எனக்குக் கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு”.
உயர் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த உங்களுக்கு, ஒரு பார்வையற்றவர திருமணம் செஞ்சுக்கிறதுல குடும்பத்திலிருந்தும் பொதுச்சமூகத்திடமிருந்தும் நிறைய சிக்கல்கள் இருந்திருக்குமே?
“நிச்சயமா நிறைய சிக்கல்கள் இருந்துச்சு. எங்க லவ் பத்தி தெரிஞ்ச சிலர், ஒனக்கென்ன குறைச்சல்? நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கலாமே? நல்லா யோசிச்சுதான் முடிவு பண்ணியிருக்கியா? இந்த மாதிரியெல்லாம் கேட்டாங்க. கடைசி வரைக்கும் கல்யாணத்துக்கு எங்க வீட்டுல ஒத்துக்கவே இல்ல. எங்களோட நண்பர்கள் முன்னிலையிலதான் எங்க கல்யாணமே நடந்துச்சு. ஆனா, கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துக்குள்ள என்னோட குடும்பம் எங்களப் புரிஞ்சு ஏத்துக்கிட்டாங்க. இப்போ எங்க குடும்ப விழாக்களுக்குப் போனா, எங்க அண்ணன்தான் முருகானந்தன் கூடவே இருக்காங்க”.
பார்வையற்றவர்கள் அரசுப்பணி, கைநிறைய சம்பளம்னு நல்ல நிலையில இருந்தாலும், திருமணம்னு வரும்போது பார்வையுள்ளவர்களோடு ஒப்பிடும்போது நிறைய சிக்கல்கள் வருது. அதற்கான காரணங்களா நீங்க எதை நினைக்கறீங்க?
“ஒரு பார்வையற்றவன் எந்த சாதியில பிறந்தாலும், திருமணம்னு வரும்போது அந்த சாதிக்குள்ளாகவே அவன் மிகவும் தாழ்த்தப்பட்டவனாகத்தான் பார்க்கப்படுகிறான். அது தவிர, பார்வையற்றவர்கள் பத்தின நிறைய தவறான புரிதல் இந்த பொதுச்சமூகத்துல இருக்கு. அதனால யாரும் பார்வையற்றவர்களுக்கு தன்னோட பெண்ணையோ பையனையோ திருமணம் பண்ணிக்கொடுக்க சம்மதிக்க மாட்டேங்கிறாங்க. பார்வையற்றவர்கள் குறித்த போதிய விழிப்புணர்வையும், புரிதல்களையும் பொதுச் சமூகத்திடம் நாமதான் கொண்டு சேர்க்கணும். அந்த வகையில விரல்மொழியர் மின்னிதழின் முயற்சி பாராட்டத்தக்கது” என நமக்கு தன் பாராட்டுகளைப் பகிர்ந்துகொண்டார் முருகானந்தன்.
அப்போது, இந்தக் காதல் இணையின் பத்துமாத ஆண் குழந்தை இளமுகிலன் சிணுங்கத் தொடங்கிவிட்டான். உடனே சமையலறைக்கு விரைந்த பேராசிரியர், தன் மனைவியிடம் பால் இருக்கும் இடத்தைக் கேட்டார். அப்போது பேராசிரியை, பால் இருக்கும் இடத்தை அவருக்குப் புரியும்படி தெளிவாகச் சொன்னார். எந்த இடத்தில் இருக்கிறது, எந்தக் கை பக்கமாக இருக்கிறது, எந்தப் பொருளுக்கு அருகில் இருக்கிறது என்றெல்லாம் அவர் இயல்பாக, மடமடவென சொன்னது வியப்பாக இருந்தது. “அத கொஞ்சம் சூடு பண்ணி எடுத்துட்டு வாங்க” என்று உரிமையோடு வேலையும் வாங்கினார். இவர்களின் செயல்பாடுகள் வியப்பையும், பெருமிதத்தையும் தந்தன.
நம்முடைய ரியாக்ஷனைப் புரிந்துகொண்ட பேராசிரியர், “இதுல நீங்க ஆச்சரியப்பட ஒண்ணுமில்லைங்க. அவங்க கள்ளக்குறிச்சியில ஒரு தனியார் கல்லூரியில ஆங்கிலத்துறை விரிவுரையாளரா இருக்காங்க. நானும் கள்ளக்குறிச்சியில திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில ஆங்கிலத்துறை உதவி பேராசிரியரா இருக்கேன். ரெண்டு பேருமே வேலைக்குப் போறதால, பிருந்தாவோட பணிச் சுமையக் குறைக்க, என்னால முடிஞ்ச அளவுக்கு வீட்டுவேலைகள்ல பங்கெடுத்துக்குவேனுங்க” என்றார்.
சரி. அவர் வேலையைப் பார்க்கட்டும். தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து, பேராசிரியை பக்கம் திரும்பினோம். இளமுகிலன் அப்படிங்கிற உங்க பையனோட பேருக்கு எதும் காரணமிருக்கா?
“எனக்கும் முருகானந்தன் மாதிரியே பெரியாரியக் கொள்கைகள், பெண்ணியம், ஆங்கிலத்துறையில வேலை பார்த்தாலும் தாய்மொழிப் பற்று முதலிய கொள்கைகளில் பிடிப்பு உண்டு. அதனால, பிறந்த நேரம், நியூமராலஜி இந்த மாதிரி எதுவும் பாக்காம நல்ல தமிழ் பெயரா வைக்கணும்னு யோசிச்சப்ப தோணினதுதாங்க இந்தப் பெயர்”.
“அன்பையும் தாண்டி, எங்க ரெண்டுபேரோட ஐடியாலஜியும் ஒத்துப்போறதுதான் இந்தக் காதல் கல்யாணத்தோட வெற்றி” என்று தீர்க்கமாய் சொன்னார் முருகானந்தன்.
வாழ்க்கை முழுவதும் இணைந்திருக்கும் அந்தக் கொள்கைக் கூட்டணி வாழ்விணையர்களை வாழ்த்தி விடைபெற்றோம்.