காதலர் தினம் நகர்ப்புறத்திற்குதானா? நாட்டுப்புறத்திற்கு இல்லையா? - அ. கௌரி
ஆண் - மஞ்சக் கெழங்கரச்சு
மண மணன்னு தாங் குளிச்சு,
கொஞ்சும் கிளி போல வந்து
கொள்ளை கொண்டு போறியேடி,
மனசத் தொறந்துவைய்யடி என் கண்ணம்மா
மாமன் வந்து குடியிருக்க!
பெண் - மலையும் மடுவும் இங்கே
மணமும் முடிப்பதுண்டோ?
மனச யந்திரமா
மாறச்சொன்னா மாறிடுமா?
மதியக் கொஞ்சம் கேளு - என்ன
மறந்துவாழப் பாரு!
ஆண் - பட்டம் வாங்கிப்புட்டா
பதவிகளும் தேடிப்புட்டா,
பவுசு கூடுமின்னு
பகட்டும்வந்து சேருமின்னு,
நெனப்பு நெசமும் இல்ல
அன்பு நேசம் போதும் புள்ள!
பெண் - எங்கவீட்டு வேலை செய்ய
ஏழு எட்டு வேலையாளு,
உங்களோட வீட்டுலதான்
ஆரிருக்காநீயும் சொல்லு?
எதுக்கு வெட்டிப் பேச்சு - என்
நேரம் வீணாப் போச்சு!
ஆண் - வேலைக்கெல்லாம் ஆளிருக்கும்
வெளியில் போகக் காரிருக்கும்,
வெள்ளை மேனி பளபளக்கும்
வியாதிகளும் நெறஞ்சிருக்கும்.
வேல செஞ்சு பாரு
நீ வாழும் ஆயுள் நூறு!
பெண் - பணங்காசு வசதிகளும்
பஞ்சுமெத்தைப் படுக்கைகளும்,
பிறர் காணப் பொறுக்கலயே
பிழைக்கும் வழி தெரியலையே,
ஒன்னக் கட்டி நான்தான் - என்ன
பண்ணப் போறேன் வீண்தான்!
ஆண் - பணங்காசச் சேர்த்திருந்தா
பாவமின்னு சொன்னதில்ல,
குணத்தோடு அளந்திருந்தா
கொள்கையில மறுப்புமில்ல,
கொஞ்சம் யோசி பெண்ணே
இது குழப்பமில்ல கண்ணே!
பெண் - காசு வந்து எங்களோட
கண்களையே மறைச்சிடுமா?
கள்ளமெது கபடமெது
கருத்தும் கூட அழிஞ்சிடுமா?
கேலிப் பேச்சு வேணாம் - அந்த
குத்தல் ஏச்சும் வேணாம்!
ஆண் - சூதுமில்ல வெனையுமில்ல
சூட்சுமமாம் நடிப்பு மில்ல,
ஆச ரொம்ப அளவுமில்ல
அத அளவு மீற விடுறதில்ல,
படிக்கலதான் நானே
ஆனா, பண்பானவன் தானே!
பெண் - கல்லு நெஞ்சக் கரைச்சுப்புட்ட
கருத்தாப் பேசிக் கலக்கிப்புட்ட,
சொல்லும் படி சொல்லி என்ன
சொக்க வெச்சு மயக்கிப்புட்ட,
வெவரமான ஆளு - பரிசு
வேணும் என்ன கேளு!
ஆண் - பொன்னும் வேணாம் பொருளும் வேணாம்
போட்டிருக்கும் நகையும் வேணாம்,
புன்னகையே போதுமடி
புதுசா என்ன வேணுமடி?
மனசு தாண்டி தங்கம்
உண்மை மகிழ்ச்சி தான்டி செல்வம்!
பெண் - கண்ணப் போலக் காத்திருப்பேன்
காதலோட பாத்திருப்பேன்,
கட்டி முத்தந் தந்து
ஒங்க கடமை செய்ய அனுப்பி வைப்பேன்,
கண் நெறஞ்ச மாமா - காலம்
கனிஞ்சிருக்கு ஆமா!
ஆண் - எம்மனசப் புரிஞ்சுக்கிட்ட
எடுத்துச் சொன்னாத் தெரிஞ்சுக்கிட்ட,
இப்பத் தாண்டி என்னுசிர
எனக்குத் திருப்பித் தந்துப்புட்ட,
ஒன்னப் போல ஒருத்தி
வேறு எவளும் இல்ல ஒசத்தி!
பெண் - உண்மை அன்பு புரிஞ்சிருச்சு
உலகம் எது தெரிஞ்சிருச்சு,
கண்களையே மறைச்சிருந்த
கர்வமும்தான் விலகிருச்சு,
கடவுள் துணை இருக்கு - இனி
கவலை என்ன நமக்கு?
--
தொடர்புக்கு: [email protected]
#####
ஆண் - மஞ்சக் கெழங்கரச்சு
மண மணன்னு தாங் குளிச்சு,
கொஞ்சும் கிளி போல வந்து
கொள்ளை கொண்டு போறியேடி,
மனசத் தொறந்துவைய்யடி என் கண்ணம்மா
மாமன் வந்து குடியிருக்க!
பெண் - மலையும் மடுவும் இங்கே
மணமும் முடிப்பதுண்டோ?
மனச யந்திரமா
மாறச்சொன்னா மாறிடுமா?
மதியக் கொஞ்சம் கேளு - என்ன
மறந்துவாழப் பாரு!
ஆண் - பட்டம் வாங்கிப்புட்டா
பதவிகளும் தேடிப்புட்டா,
பவுசு கூடுமின்னு
பகட்டும்வந்து சேருமின்னு,
நெனப்பு நெசமும் இல்ல
அன்பு நேசம் போதும் புள்ள!
பெண் - எங்கவீட்டு வேலை செய்ய
ஏழு எட்டு வேலையாளு,
உங்களோட வீட்டுலதான்
ஆரிருக்காநீயும் சொல்லு?
எதுக்கு வெட்டிப் பேச்சு - என்
நேரம் வீணாப் போச்சு!
ஆண் - வேலைக்கெல்லாம் ஆளிருக்கும்
வெளியில் போகக் காரிருக்கும்,
வெள்ளை மேனி பளபளக்கும்
வியாதிகளும் நெறஞ்சிருக்கும்.
வேல செஞ்சு பாரு
நீ வாழும் ஆயுள் நூறு!
பெண் - பணங்காசு வசதிகளும்
பஞ்சுமெத்தைப் படுக்கைகளும்,
பிறர் காணப் பொறுக்கலயே
பிழைக்கும் வழி தெரியலையே,
ஒன்னக் கட்டி நான்தான் - என்ன
பண்ணப் போறேன் வீண்தான்!
ஆண் - பணங்காசச் சேர்த்திருந்தா
பாவமின்னு சொன்னதில்ல,
குணத்தோடு அளந்திருந்தா
கொள்கையில மறுப்புமில்ல,
கொஞ்சம் யோசி பெண்ணே
இது குழப்பமில்ல கண்ணே!
பெண் - காசு வந்து எங்களோட
கண்களையே மறைச்சிடுமா?
கள்ளமெது கபடமெது
கருத்தும் கூட அழிஞ்சிடுமா?
கேலிப் பேச்சு வேணாம் - அந்த
குத்தல் ஏச்சும் வேணாம்!
ஆண் - சூதுமில்ல வெனையுமில்ல
சூட்சுமமாம் நடிப்பு மில்ல,
ஆச ரொம்ப அளவுமில்ல
அத அளவு மீற விடுறதில்ல,
படிக்கலதான் நானே
ஆனா, பண்பானவன் தானே!
பெண் - கல்லு நெஞ்சக் கரைச்சுப்புட்ட
கருத்தாப் பேசிக் கலக்கிப்புட்ட,
சொல்லும் படி சொல்லி என்ன
சொக்க வெச்சு மயக்கிப்புட்ட,
வெவரமான ஆளு - பரிசு
வேணும் என்ன கேளு!
ஆண் - பொன்னும் வேணாம் பொருளும் வேணாம்
போட்டிருக்கும் நகையும் வேணாம்,
புன்னகையே போதுமடி
புதுசா என்ன வேணுமடி?
மனசு தாண்டி தங்கம்
உண்மை மகிழ்ச்சி தான்டி செல்வம்!
பெண் - கண்ணப் போலக் காத்திருப்பேன்
காதலோட பாத்திருப்பேன்,
கட்டி முத்தந் தந்து
ஒங்க கடமை செய்ய அனுப்பி வைப்பேன்,
கண் நெறஞ்ச மாமா - காலம்
கனிஞ்சிருக்கு ஆமா!
ஆண் - எம்மனசப் புரிஞ்சுக்கிட்ட
எடுத்துச் சொன்னாத் தெரிஞ்சுக்கிட்ட,
இப்பத் தாண்டி என்னுசிர
எனக்குத் திருப்பித் தந்துப்புட்ட,
ஒன்னப் போல ஒருத்தி
வேறு எவளும் இல்ல ஒசத்தி!
பெண் - உண்மை அன்பு புரிஞ்சிருச்சு
உலகம் எது தெரிஞ்சிருச்சு,
கண்களையே மறைச்சிருந்த
கர்வமும்தான் விலகிருச்சு,
கடவுள் துணை இருக்கு - இனி
கவலை என்ன நமக்கு?
--
தொடர்புக்கு: [email protected]
#####
காதல் - வ. கணேசன்
முன்பின் தெரியா இருவர் சந்தித்து,
முகமலர்ந்து கருத்தைப் பரிமாறி சிந்தித்து,
செய்வினை மறந்து உளமார நேசிக்க,
செழித்தோங்கும் காதலோ இருமனம் ஒருமிக்க.
தம்மைப் பெற்றோரும் உற்றாரும் அருகிருக்க,
தமக்குற்ற ஒருமனம் வேரெங்கோ தொலேவிருக்க,
அக்கனமேதோ சிந்தையால் நான்குறு நகைபுரிய,
அனைவரும் வினவினர் நானுமென் நிலையறிய,
நெஞ்சிற்கினிய உரவொன்று சந்திக்கக் காத்திருக்க,
நொடிப்பொழுதும் மணிப்பொழுதாகி நகராது நிலைத்திருக்க,
கனிமுகம் கண்டதும் கூடிப்பேசிக் களித்திருக்கும்,
மணிப்பொழுதோ நொடிப்பொழுதாகி விமானம்போல் விரைந்திருக்கும்.
காதல் நோயால் தாக்குண்ட நெஞ்சம்,
பஞ்சணையில் படுத்தாலும் நோகடிக்கும் கொஞ்சம்,
அறுசுவை அமுது அருகிலே இருக்கும்,
அதைஉண்டு சுவைக்க பசியில்லா நிலையிருக்கும்.
திடமாய் ஊர்கூடி எதிர்க்கின்ற போது,
திடமாகக் காதலும் இருக்கின்ற போது,
உண்மைக் காதலை சுமக்கின்ற உள்ளம்,
உண்மையில் போராடி நிச்சயம் வெல்லும்!
--
தொடர்புக்கு: [email protected]
முன்பின் தெரியா இருவர் சந்தித்து,
முகமலர்ந்து கருத்தைப் பரிமாறி சிந்தித்து,
செய்வினை மறந்து உளமார நேசிக்க,
செழித்தோங்கும் காதலோ இருமனம் ஒருமிக்க.
தம்மைப் பெற்றோரும் உற்றாரும் அருகிருக்க,
தமக்குற்ற ஒருமனம் வேரெங்கோ தொலேவிருக்க,
அக்கனமேதோ சிந்தையால் நான்குறு நகைபுரிய,
அனைவரும் வினவினர் நானுமென் நிலையறிய,
நெஞ்சிற்கினிய உரவொன்று சந்திக்கக் காத்திருக்க,
நொடிப்பொழுதும் மணிப்பொழுதாகி நகராது நிலைத்திருக்க,
கனிமுகம் கண்டதும் கூடிப்பேசிக் களித்திருக்கும்,
மணிப்பொழுதோ நொடிப்பொழுதாகி விமானம்போல் விரைந்திருக்கும்.
காதல் நோயால் தாக்குண்ட நெஞ்சம்,
பஞ்சணையில் படுத்தாலும் நோகடிக்கும் கொஞ்சம்,
அறுசுவை அமுது அருகிலே இருக்கும்,
அதைஉண்டு சுவைக்க பசியில்லா நிலையிருக்கும்.
திடமாய் ஊர்கூடி எதிர்க்கின்ற போது,
திடமாகக் காதலும் இருக்கின்ற போது,
உண்மைக் காதலை சுமக்கின்ற உள்ளம்,
உண்மையில் போராடி நிச்சயம் வெல்லும்!
--
தொடர்புக்கு: [email protected]