தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் பேரா. கோ. கண்ணன். விரல் விட்டு எண்ணும் அளவிலான பார்வையற்ற எழுத்தாளர்களில் ஒருவர். ‘ஓசைகளின் நிறமாலை’, ‘மழை குடை நாட்கள்’ என்ற இரு கவிதைத் தொகுப்புகளையும், ‘நதி வெள்ளத்தின் துளி’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். தற்போது 2017-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்றிருக்கிறார் இவர்!
பார்வையற்றவர்களின் வாழ்வியலைத் தொடர்ந்து தன் எழுத்தில் பதிவு செய்து வரும் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…
பாலகணேசன்: ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற தருணம் எப்படி இருந்தது?
கண்ணன்: மிகவும் பெருமிதமாகத்தான் இருந்தது. சுப்ரபாரதி மணியன், நெல்லை சு. முத்து, அய்க்கண் உள்ளிட்ட மிகப்பெரிய எழுத்தாளர்களோடு இவ்விருதைப் பெற்றதில் எனக்குப் பெருமகிழ்ச்சி.
பா: இந்த விருதைப் பற்றி சொல்லுங்கள்?
க: இந்த விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படும். அந்த வகையில் எனக்கு இவ்விருது எங்கள் தர்மபுரி மாவட்டத்தின் சார்பில் கிடைத்துள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வரின் படம் பொறித்த, ‘தமிழ்ச் செம்மல்’ என்று எழுதப்பட்ட விருது தரப்படும். மேலும், 25000 ரூபாய்க்கான காசோலை வழங்கி பொன்னாடையும் போர்த்துவார்கள்.
பா: இவ்விருதைப் பெற்ற முதல் பார்வையற்றவர் நீங்கள்!
க: அப்படி என்னால் சொல்ல முடியவில்லை. ஏற்கெனவே இவ்விருதை நம்மவர்கள் யார் யார் பெற்றிருக்கிறார்கள் என்ற தகவல் என்னிடம் இல்லை. நான் விருது பெறும்போது விஜயரங்கம் என்ற பார்வையற்றவர் இவ்விருதைப் பெற்றிருக்கிறார். அவர் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.
பா: அப்படியா! மிக்க மகிழ்ச்சி. நாம் வழக்கமான பேட்டிக்குள் செல்வோம். உங்கள் இளமைக் காலம் குறித்துச் சொல்லுங்கள்?
க: எனது சொந்த ஊர் தர்மபுரி. அப்பா ஒரு விவசாயி. என் குழந்தைப் பருவம் பெரும்பாலும் என் ஆயாவோடுதான் கழிந்தது. ஆயா என்மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். நான் பர்கூர் பார்வையற்றோர் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது ஒரு வாரம் சாப்பிடாமலேயே இருந்தார். அவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எனக்கு ராமாயணம், மார்கண்டேயன் கதை, நல்லதங்காள் கதை முதலிய பல கதைகளைச் சொல்வார். அவற்றைக் கேட்டுக் கேட்டுத்தான் நான் ஒரு நல்ல கதை சொல்லியாக, எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
பா: கண்ணன் அவர்கள் தன்னை ஒரு எழுத்தாளனாக உணர்ந்தது எப்போது?
க: சரியாக நினைவில்லை. கல்லூரிக் காலங்களில் ஆண்டு மலர்களுக்குக் கவிதை எழுதிக் கொடுத்திருக்கிறேன். குறிப்பாக, சென்னை கிறித்தவக் கல்லூரியில் முதுகலை தமிழ் படித்துக்கொண்டிருந்தபோது ‘நட்சத்திரங்கள்’ என்ற கவிதையை விடுதி மலருக்காக எழுதியிருக்கிறேன். இதழ்களில் எல்லாம் நான் எழுதியதில்லை. ‘ஓசைகளின் நிறமாலை’ என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பு லதா ராமகிருஷ்ணன் அவர்களால் புத்தகமாக வெளியிடப்பட்டது. அதற்கு முன்பே எனது ஆய்வேடான, ‘தமிழ் நாவல்களில் தலைமுறை இடைவெளி’ ‘காவியா’ பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
பா: நீங்கள் எப்படி எழுதுவீர்கள்? பிரெயிலிலா? நீங்கள் சொல்லச் சொல்ல இன்னொருவர் எழுதுவாரா? அல்லது கணினியிலா?
க: கணினிப் பயிற்சி பெறும் வரை பிரெயிலில்தான் எழுதினேன். ‘ஓசைகளின் நிறமாலை’ முழுக்க முழுக்க ‘பெர்கின்ஸ்’ பிரெயில் தட்டச்சுக் கருவியின் துணை கொண்டு எழுதப்பட்டதுதான். கடந்த ஆண்டில் ‘நியூ செஞ்சுரி’ பதிப்பகத்தால் ‘நதி வெள்ளத்தின் துளி’ என்ற எனது சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. அத்தொகுப்பு நான் ‘திண்ணை’ என்ற இணையதளத்திற்காக எழுதிய கதைகளின் தொகுப்பு. அவற்றை நான் முழுக்க முழுக்க கணினியில்தான் தட்டச்சு செய்தேன். காலம் நமக்குத் தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் என் கருத்து. புதிது புதிதாக வரும் கருவிகளை கையாளத் தெரியாமல் இருந்துவிட்டால், நம்மைச் சமுதாயம் இன்னும் ஒதுக்கிவிடும்.
பா: ஒருவர் எழுத்தாளராக வேண்டுமென்றால் அவர் சிறந்த படிப்பாளியாக இருத்தல் அவசியம். நீங்கள் வாசிப்பில் தீவிர ஆர்வம் காட்டக்கூடியவர். ஒரு பார்வையற்றவராக வாசிப்பில் நீங்கள் எதிர்கொண்ட தடைகளைச் சொல்லுங்கள்?
க: நமக்குப் படிப்பதில் நிறைய தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், முன்பு போல் இப்போது இல்லை. நம்மவர்கள் கணினியின் செயற்கைக் குரலின் துணையுடன் நிறைய படிக்கத் தொடங்கிவிட்டார்கள். நான் படிக்கும்போது அப்படி இல்லை.
அப்போதெல்லாம் படிப்பதற்கு ஒரு புத்தகத்தை வாங்கி, ஒருவரை வாசிக்கச் செய்யவேண்டும், அல்லது ஒலிப்பதிவு செய்து படிக்கவேண்டும். ஒரு பார்வையுள்ளவர் ஒரு புத்தகத்தைப் படிக்கச் செலவிடும் தொகையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாக நான் செலவிட வேண்டியிருந்தது. காசு கொடுத்துப் புத்தகத்தை வாங்கி, அதைப் பதிவு செய்யும் ஒலிநாடாவையும் (Cassets) வாங்கி, அதில் பதிவு செய்பவருக்கும் காசு கொடுத்து நாம் படிக்கவேண்டும். ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைச் சொல்கிறேன். சுந்தர ராமசாமியின் ‘பெண்கள், ஆண்கள், குழந்தைகள்’ படிக்க ஆசை. 200 ரூபாய்க்கு வாங்கிவிட்டேன். ஒலிப்பதிவு செய்வது கடினம்; கொஞ்சம் பெரிய புத்தகம். ஒருவரைப் பணம் கொடுத்து வாசிக்க அமர்த்தினேன். அவரும் அவ்வப்போது வாசித்தார். கிட்டத்தட்ட 800 ரூபாய் வாசிப்பாளருக்காகச் செலவிட்டேன். புத்தகத்தின் 100 பக்கங்களைத் தான் படிக்க முடிந்தது. இத்தகைய அனுபவங்களெல்லாம் பார்வையற்ற நமக்குத்தான் கிடைக்கும்.
அலைபேசி பரவலான பயன்பாட்டிற்கு வந்த பிறகு பூஸ்டர் பேக் போட்டு இரவு நேரங்களில் நண்பர்கள் வாசிக்க, நான் அலைபேசி வழியாக கேட்டுமிருக்கிறேன். ஒசூர் ப. வெங்கடேசன் என் நண்பர்; சிறந்த எழுத்தாளர். அவர் எனக்கு இப்படி பல புத்தகங்களை வாசித்திருக்கிறார். இளைய தலைமுறை பார்வையற்றவர்கள் இதையெல்லாம் நம்புவார்களா என தெரியவில்லை. அந்த அளவுக்கு கடந்த சில ஆண்டுகளில் நமக்கான வாசிப்புத் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன.
பா: உங்கள் படைப்புகளில் பார்வையற்றோரின் வாழ்வியலைப் பதிவு செய்து வருகிறீர்கள். தொடர்ச்சியாக இப்படி எழுதுவது அவசியம் என்று நினைக்கிறீர்களா? இப்படி எழுதுவதில் எப்போதாவது கூச்சம் அடைந்ததுண்டா?
க: இதில் கூச்சப்பட ஒன்றுமில்லை. நமக்குத் தெரிந்ததைதானே நாம் எழுதமுடியும். ஆனால், பொதுப்புத்தியில் இது எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதுதான் சற்று குழப்பமாக இருக்கிறது. நான் எழுதிய ‘நதி வெள்ளத்தின் துளி’ தொகுப்பைப் பலருக்கும் அனுப்பிவைத்தேன். என் நெருங்கிய நண்பர்கள் சிலர் வெவ்வேறு விமர்சனங்களை வைத்தனர். ஒருவர், ‘பார்வையற்றவர்களைப் பற்றி நிறைய எழுதுகிறீர்களே! இட ஒதுக்கீடு எதுவும் கோருகிறீர்களா?’ என்று கேட்டார். பிராமணர்கள் அவர்கள் வாழ்வியலை எழுதும்போது இப்படி யாரும் கேட்கவில்லை. இப்போது பெண்கள், தலித்கள் முதலியோரும் தங்கள் வாழ்க்கையை எழுதுகிறார்கள். அவர்களுக்குக்கூட தொடக்க காலத்தில் இதே மாதிரியான பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. சொல்லாதவை சொல்லப்படும்போதும், கேட்காதவை கேட்கப்படும்போதும் இத்தகைய சிக்கல்கள் வருவது இயல்புதான்.
பா: நம்மவர்களின் (பார்வையற்றவர்களின்) எதிர்வினை எப்படி இருந்தது?
க: நம்மவர்களில், குப்பம் திராவிட பல்கலைக்கழகப் பேராசிரியர் பத்மநாபன் அவர்கள் படித்தார். தர்மபுரியில் ‘நெல்லிக்கனி’ என்ற ஓர் இலக்கிய அமைப்பு வைத்திருக்கிறோம். அதில் இந்த தொகுப்பு பற்றி ஒரு மணி நேரம் பேசினார். அதோடு, இது பற்றி ‘தேவரலரிப் பூ வாசமும், தூரத்துக் குயிலிசையும்’ என்று ஒரு கட்டுரையும் எழுதினார்.
பா: பார்வை மாற்றுத்திறனாளிகள் கவிதைகளோ, கட்டுரைகளோ எழுதும் அளவுக்குக் கதைகள் எழுத முடிவதில்லை என்று கருதுகிறேன். சரிதானா?
க: இருக்கலாம். தேனி சீருடையான் என்பவர் ‘நிறங்களின் உலகம்’ என்று ஒரு நாவல் எழுதியிருந்தார். அவர் பார்வை-பார்வையின்மை-பார்வை என்று அனுபவித்தவர். அதனால் அவர் உணர்ந்த உலகப் பரப்பு அதிகமானதாக இருக்கும். மற்றவர்களுக்கு அது குறைவுதான் என்று நினைக்கிறேன்.
நாம் வேறொன்றை முயற்சிக்கலாம். பார்வை தவிர்த்த புலனுணர்வு மூலம் பெறுபவற்றை இலக்கியமாக்கலாம். சான்றாக, கல்யாணி ராகத்தைக் கேட்கிறோம்; அதன் மூலம் பெறும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரித்தால் அது சிறப்பாக இருக்கும். பார்த்தல், கேட்டல், பேசுதல் ஆகிய 3 வாய்ப்புகளையும் இழந்த ஹெலன் கெல்லர் தொடு உணர்வின் மூலமே நிறங்களை அறிந்துகொள்வாராம். இன்னும் நுண்ணுணர்வுகள் நிறைய அவரிடம் இருந்தன. நாமும் நம் நுண்ணுணர்வுகளைப் படைப்பாக்கவேண்டும்.
பா: நீங்கள் பிறவியிலேயே பார்வை இழந்தவரா?
க: ஆமாம். 6 மாதங்கள் வரை நான் பார்த்ததாக பெற்றோர் சொல்கிறார்கள். இருந்தாலும், அதற்கான நினைவுகள் என்னிடம் இருக்க வாய்ப்பில்லையே! மறைந்த பேரா. ஜெயராமன் அவர்கள், ‘5 வயது வரை பார்வையை இழந்தவர்களை பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் என்ற வகையில்தான் சேர்க்கவேண்டும்’ என்பார். ஏனென்றால், அவர்களுக்கு்ப் பார்வை தொடர்பான நினைவுகள் இருக்க வாய்ப்பில்லை.
பா: உங்கள் இலக்கிய நட்பு வட்டம் மிகப்பெரியது என்று கேள்விப்பட்டோம்?
க: ஆமாம். நான் ஏற்கெனவே சொன்ன பா. வெங்கடேசன் மிகச்சிறந்த படைப்பாளி; என் வாசிப்பாளரும்கூட. அவர் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அதை எழுதியவரின் எண் கொடுத்துப் பேசலாமே என்று யோசனை சொல்வார்; அப்படி நிறைய நண்பர்கள். அதோடு, என் முன்னாள் மாணவர் ஜவஹர் தற்போது திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவரும் நானும் சேர்ந்து பல இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறோம்; அப்படியும் நிறைய நண்பர்கள். எங்கள் கல்லூரிப் பேராசிரியரான எழுத்தாளர் பிரம்மராஜன், யூமா வாசுகி முதலியவர்கள் எனக்குக் கிடைத்த இலக்கிய நண்பர்கள்.
பா: நிறைய வாசிக்கும் கண்ணன் விமர்சனம் செய்ததுண்டா?
க: நெருங்கிய நண்பர்களின் படைப்புகளைப் படித்துவிட்டு நேரடியாகவே அவர்களிடம் என் மனதில் பட்டதைச் சொல்லிவிடுவேன். அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
பா: உங்களுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம் எது?
க: 3 நிகழ்வுகளைச் சொல்லலாம். ‘ஓசைகளின் நிறமாலை’யில் உள்ள ‘கண்ணாடி வியாபாரி’ கவிதையை மறைந்த பேரா. ஜெயராமன் அவர்கள் பாராட்டியபோது எனக்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது. அடுத்து, நான் படித்த பர்கூர் பார்வையற்றோர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜ் அவர்கள் என் படைப்புகளைப் பாராட்டிய தருணம். அதே பள்ளியில் பணியாற்றிய வசந்த மல்லிகா என்ற என் ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருதுக்காக நான் கடிதம் கொடுத்த பெருமிதமான தருணம். இவைதான் என் வாழ்வில் மறக்க முடியாத அங்கீகாரங்கள்.
பா: உங்களைக் கவர்ந்த மாணவர்கள் யாரேனும்?
க: நான் ஏற்கெனவே சொன்னேனே, ஜவஹர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடமிருந்து விருது பெற்றிருக்கிறார். எனக்கும் அது பெருமைதானே! மாணவராக மட்டுமில்லாமல், எனக்கு வாசிப்பாளராகவும் பல காலம் இருந்திருக்கிறார்.
பா: உங்கள் பொறுப்பு முதல்வர் பணி எப்படி இருக்கிறது?
க: பொதுவாகவே அலுவலக மேலாண்மை கூடுதல் கவனத்திற்குரியது. அதிலும், மாற்றுத்திறனாளிகள் நிறைய சிக்கல்களை, சங்கடங்களைச் சந்தித்தாக வேண்டும்; நானும் சந்திக்கிறேன். ஆனாலும், அதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அன்பால்தான் வெல்ல வேண்டும்.
பா: இப்போது நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது?
க: இல்லை. இப்போதைக்கு நான் எதுவும் எழுதவில்லை. நண்பர்கள் ஒரு நாவல் எழுதவேண்டும் என என்னை வற்புறுத்துகின்றனர். பார்ப்போம். என்னால் நினைத்த நேரத்தில் எழுதிவிட முடியாது. எழுத்து தான் வடிகால்; வேறு வழியில்லை என்று சில நேரங்களில் தோன்றும்போது நான் எழுதுகிறேன், அவ்வளவுதான். நான் எழுதுபவனாக இருக்கிறேன்; எழுத்தாளனாக இல்லை. மற்றபடி இசை என் நேசம், வாசிப்பு என் சுவாசம் என இருக்கிறேன்.
பா: உங்கள் அண்மைய நேசம், சுவாசம் பற்றி சொல்லுங்கள்?
க: எஸ். ராமகிருஷ்ணனின் ‘இந்திய வானம்’ படித்துக்கொண்டிருக்கிறேன். இன்று காலையில் ஜான் D. ஹிக்கின்ஸ் அவர்களின் அற்புதமான இசைக் கோவையை சென்னை வானொலி வழியாகக் கேட்டேன்.
பா: நம்மவர்களின் எழுத்துப் பணி பற்றி?
க: நிறைய எழுதுகிறார்கள். கோவையைச் சேர்ந்த கவிஞர் சுகுமாரன், பேரா. விஜயரங்கம் அவர்கள், மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தமைக்காக விருது பெற்ற சிதம்பரம் ரவிச்சந்திரன் அவர்கள், இப்படி பலர். அவர்கள் அளவிற்கு நான் இன்னும் உழைத்திடவில்லை என்றே கருதுகிறேன்.
பா: நீங்கள் எழுதியே ஆகவேண்டும் என்று நினைப்பது?
க: நிறைய இருக்கிறது. எல்லாவற்றையும் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்கிறேன். பார்வையற்றவர்களில் எல்லாத் தரப்பினரையும் பற்றி எழுதியாகவேண்டும். அவர்கள் இயல்பானவர்கள் என்பதைப் புரிய வைக்கவேண்டும். சான்றாக, ரயிலில் ஒருவர் சிகரெட் பிடிப்பதாக வைத்துக்கொள்வோம். யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர் ஒருவேளை மாற்றுத்திறனாளியாக இருந்தால், “இப்படி இருந்துகொண்டு என்ன செய்கிறான் பார்” என்கிறார்கள். இந்த எண்ணத்தைப் பற்றி எழுதவேண்டும்.
பா: கவிஞர்களின் அடுத்தகட்ட ஆசை பாடலாசிரியர் ஆவது. உங்களுக்கு?
க: நீங்க வேற. நான் எழுதுவதற்கே மெனக்கெடுவதில்லை. இதில் பாடலாசிரியர் எண்ணமெல்லாம் எனக்குச் சுத்தமாக இல்லை.
பா: நமக்கான ஒரு இடம் இலக்கியத்தில் உருவாகியிருப்பதாகக் கருதுகிறீர்களா?
க: இருக்கிறது. இன்னும் நிறைய வேண்டும். இந்தக் கேள்வியை நீங்கள் திருப்பூர் சிக்கன்னா கல்லூரி பேரா. கந்தசாமி அவர்களிடம்தான் கேட்கவேண்டும். அவர்தான் நிறைய இது குறித்து ஆய்வு செய்திருக்கிறார்.
பா: உங்கள் பார்வையின்மையை வரமாக எப்போதாவது கருதியிருக்கிறீர்களா?
க: கருதியிருக்கிறேன். வேலைத் தளத்தில் உதாசீனப்படுத்தப்படும்போது அவர்களின் செயல்பாடுகளைப் பார்க்க இயலாதது எவ்வளவு நல்லதாக இருக்கிறது என்று நினைத்திருக்கிறேன்!
பா: எங்கள் இதழ் குறித்து தங்கள் கருத்து?
க: மிகவும் அற்புதமான முயற்சி. தொடர்ந்து செயல்பட வேண்டும். புதியவர்கள் பலரை எழுத அழைத்து வாருங்கள். நானும் முடிந்த வரை எழுதுகிறேன்.
பாலகணேசன்: மிக்க நன்றி ஐயா.
கண்ணன்: மிக்க நன்றி.
பேரா. கோ. கண்ணன் அவர்களைத் தொடர்பு கொள்ள: [email protected]
பார்வையற்றவர்களின் வாழ்வியலைத் தொடர்ந்து தன் எழுத்தில் பதிவு செய்து வரும் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…
பாலகணேசன்: ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற தருணம் எப்படி இருந்தது?
கண்ணன்: மிகவும் பெருமிதமாகத்தான் இருந்தது. சுப்ரபாரதி மணியன், நெல்லை சு. முத்து, அய்க்கண் உள்ளிட்ட மிகப்பெரிய எழுத்தாளர்களோடு இவ்விருதைப் பெற்றதில் எனக்குப் பெருமகிழ்ச்சி.
பா: இந்த விருதைப் பற்றி சொல்லுங்கள்?
க: இந்த விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படும். அந்த வகையில் எனக்கு இவ்விருது எங்கள் தர்மபுரி மாவட்டத்தின் சார்பில் கிடைத்துள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வரின் படம் பொறித்த, ‘தமிழ்ச் செம்மல்’ என்று எழுதப்பட்ட விருது தரப்படும். மேலும், 25000 ரூபாய்க்கான காசோலை வழங்கி பொன்னாடையும் போர்த்துவார்கள்.
பா: இவ்விருதைப் பெற்ற முதல் பார்வையற்றவர் நீங்கள்!
க: அப்படி என்னால் சொல்ல முடியவில்லை. ஏற்கெனவே இவ்விருதை நம்மவர்கள் யார் யார் பெற்றிருக்கிறார்கள் என்ற தகவல் என்னிடம் இல்லை. நான் விருது பெறும்போது விஜயரங்கம் என்ற பார்வையற்றவர் இவ்விருதைப் பெற்றிருக்கிறார். அவர் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.
பா: அப்படியா! மிக்க மகிழ்ச்சி. நாம் வழக்கமான பேட்டிக்குள் செல்வோம். உங்கள் இளமைக் காலம் குறித்துச் சொல்லுங்கள்?
க: எனது சொந்த ஊர் தர்மபுரி. அப்பா ஒரு விவசாயி. என் குழந்தைப் பருவம் பெரும்பாலும் என் ஆயாவோடுதான் கழிந்தது. ஆயா என்மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். நான் பர்கூர் பார்வையற்றோர் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது ஒரு வாரம் சாப்பிடாமலேயே இருந்தார். அவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எனக்கு ராமாயணம், மார்கண்டேயன் கதை, நல்லதங்காள் கதை முதலிய பல கதைகளைச் சொல்வார். அவற்றைக் கேட்டுக் கேட்டுத்தான் நான் ஒரு நல்ல கதை சொல்லியாக, எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
பா: கண்ணன் அவர்கள் தன்னை ஒரு எழுத்தாளனாக உணர்ந்தது எப்போது?
க: சரியாக நினைவில்லை. கல்லூரிக் காலங்களில் ஆண்டு மலர்களுக்குக் கவிதை எழுதிக் கொடுத்திருக்கிறேன். குறிப்பாக, சென்னை கிறித்தவக் கல்லூரியில் முதுகலை தமிழ் படித்துக்கொண்டிருந்தபோது ‘நட்சத்திரங்கள்’ என்ற கவிதையை விடுதி மலருக்காக எழுதியிருக்கிறேன். இதழ்களில் எல்லாம் நான் எழுதியதில்லை. ‘ஓசைகளின் நிறமாலை’ என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பு லதா ராமகிருஷ்ணன் அவர்களால் புத்தகமாக வெளியிடப்பட்டது. அதற்கு முன்பே எனது ஆய்வேடான, ‘தமிழ் நாவல்களில் தலைமுறை இடைவெளி’ ‘காவியா’ பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
பா: நீங்கள் எப்படி எழுதுவீர்கள்? பிரெயிலிலா? நீங்கள் சொல்லச் சொல்ல இன்னொருவர் எழுதுவாரா? அல்லது கணினியிலா?
க: கணினிப் பயிற்சி பெறும் வரை பிரெயிலில்தான் எழுதினேன். ‘ஓசைகளின் நிறமாலை’ முழுக்க முழுக்க ‘பெர்கின்ஸ்’ பிரெயில் தட்டச்சுக் கருவியின் துணை கொண்டு எழுதப்பட்டதுதான். கடந்த ஆண்டில் ‘நியூ செஞ்சுரி’ பதிப்பகத்தால் ‘நதி வெள்ளத்தின் துளி’ என்ற எனது சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. அத்தொகுப்பு நான் ‘திண்ணை’ என்ற இணையதளத்திற்காக எழுதிய கதைகளின் தொகுப்பு. அவற்றை நான் முழுக்க முழுக்க கணினியில்தான் தட்டச்சு செய்தேன். காலம் நமக்குத் தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் என் கருத்து. புதிது புதிதாக வரும் கருவிகளை கையாளத் தெரியாமல் இருந்துவிட்டால், நம்மைச் சமுதாயம் இன்னும் ஒதுக்கிவிடும்.
பா: ஒருவர் எழுத்தாளராக வேண்டுமென்றால் அவர் சிறந்த படிப்பாளியாக இருத்தல் அவசியம். நீங்கள் வாசிப்பில் தீவிர ஆர்வம் காட்டக்கூடியவர். ஒரு பார்வையற்றவராக வாசிப்பில் நீங்கள் எதிர்கொண்ட தடைகளைச் சொல்லுங்கள்?
க: நமக்குப் படிப்பதில் நிறைய தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், முன்பு போல் இப்போது இல்லை. நம்மவர்கள் கணினியின் செயற்கைக் குரலின் துணையுடன் நிறைய படிக்கத் தொடங்கிவிட்டார்கள். நான் படிக்கும்போது அப்படி இல்லை.
அப்போதெல்லாம் படிப்பதற்கு ஒரு புத்தகத்தை வாங்கி, ஒருவரை வாசிக்கச் செய்யவேண்டும், அல்லது ஒலிப்பதிவு செய்து படிக்கவேண்டும். ஒரு பார்வையுள்ளவர் ஒரு புத்தகத்தைப் படிக்கச் செலவிடும் தொகையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாக நான் செலவிட வேண்டியிருந்தது. காசு கொடுத்துப் புத்தகத்தை வாங்கி, அதைப் பதிவு செய்யும் ஒலிநாடாவையும் (Cassets) வாங்கி, அதில் பதிவு செய்பவருக்கும் காசு கொடுத்து நாம் படிக்கவேண்டும். ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைச் சொல்கிறேன். சுந்தர ராமசாமியின் ‘பெண்கள், ஆண்கள், குழந்தைகள்’ படிக்க ஆசை. 200 ரூபாய்க்கு வாங்கிவிட்டேன். ஒலிப்பதிவு செய்வது கடினம்; கொஞ்சம் பெரிய புத்தகம். ஒருவரைப் பணம் கொடுத்து வாசிக்க அமர்த்தினேன். அவரும் அவ்வப்போது வாசித்தார். கிட்டத்தட்ட 800 ரூபாய் வாசிப்பாளருக்காகச் செலவிட்டேன். புத்தகத்தின் 100 பக்கங்களைத் தான் படிக்க முடிந்தது. இத்தகைய அனுபவங்களெல்லாம் பார்வையற்ற நமக்குத்தான் கிடைக்கும்.
அலைபேசி பரவலான பயன்பாட்டிற்கு வந்த பிறகு பூஸ்டர் பேக் போட்டு இரவு நேரங்களில் நண்பர்கள் வாசிக்க, நான் அலைபேசி வழியாக கேட்டுமிருக்கிறேன். ஒசூர் ப. வெங்கடேசன் என் நண்பர்; சிறந்த எழுத்தாளர். அவர் எனக்கு இப்படி பல புத்தகங்களை வாசித்திருக்கிறார். இளைய தலைமுறை பார்வையற்றவர்கள் இதையெல்லாம் நம்புவார்களா என தெரியவில்லை. அந்த அளவுக்கு கடந்த சில ஆண்டுகளில் நமக்கான வாசிப்புத் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன.
பா: உங்கள் படைப்புகளில் பார்வையற்றோரின் வாழ்வியலைப் பதிவு செய்து வருகிறீர்கள். தொடர்ச்சியாக இப்படி எழுதுவது அவசியம் என்று நினைக்கிறீர்களா? இப்படி எழுதுவதில் எப்போதாவது கூச்சம் அடைந்ததுண்டா?
க: இதில் கூச்சப்பட ஒன்றுமில்லை. நமக்குத் தெரிந்ததைதானே நாம் எழுதமுடியும். ஆனால், பொதுப்புத்தியில் இது எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதுதான் சற்று குழப்பமாக இருக்கிறது. நான் எழுதிய ‘நதி வெள்ளத்தின் துளி’ தொகுப்பைப் பலருக்கும் அனுப்பிவைத்தேன். என் நெருங்கிய நண்பர்கள் சிலர் வெவ்வேறு விமர்சனங்களை வைத்தனர். ஒருவர், ‘பார்வையற்றவர்களைப் பற்றி நிறைய எழுதுகிறீர்களே! இட ஒதுக்கீடு எதுவும் கோருகிறீர்களா?’ என்று கேட்டார். பிராமணர்கள் அவர்கள் வாழ்வியலை எழுதும்போது இப்படி யாரும் கேட்கவில்லை. இப்போது பெண்கள், தலித்கள் முதலியோரும் தங்கள் வாழ்க்கையை எழுதுகிறார்கள். அவர்களுக்குக்கூட தொடக்க காலத்தில் இதே மாதிரியான பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. சொல்லாதவை சொல்லப்படும்போதும், கேட்காதவை கேட்கப்படும்போதும் இத்தகைய சிக்கல்கள் வருவது இயல்புதான்.
பா: நம்மவர்களின் (பார்வையற்றவர்களின்) எதிர்வினை எப்படி இருந்தது?
க: நம்மவர்களில், குப்பம் திராவிட பல்கலைக்கழகப் பேராசிரியர் பத்மநாபன் அவர்கள் படித்தார். தர்மபுரியில் ‘நெல்லிக்கனி’ என்ற ஓர் இலக்கிய அமைப்பு வைத்திருக்கிறோம். அதில் இந்த தொகுப்பு பற்றி ஒரு மணி நேரம் பேசினார். அதோடு, இது பற்றி ‘தேவரலரிப் பூ வாசமும், தூரத்துக் குயிலிசையும்’ என்று ஒரு கட்டுரையும் எழுதினார்.
பா: பார்வை மாற்றுத்திறனாளிகள் கவிதைகளோ, கட்டுரைகளோ எழுதும் அளவுக்குக் கதைகள் எழுத முடிவதில்லை என்று கருதுகிறேன். சரிதானா?
க: இருக்கலாம். தேனி சீருடையான் என்பவர் ‘நிறங்களின் உலகம்’ என்று ஒரு நாவல் எழுதியிருந்தார். அவர் பார்வை-பார்வையின்மை-பார்வை என்று அனுபவித்தவர். அதனால் அவர் உணர்ந்த உலகப் பரப்பு அதிகமானதாக இருக்கும். மற்றவர்களுக்கு அது குறைவுதான் என்று நினைக்கிறேன்.
நாம் வேறொன்றை முயற்சிக்கலாம். பார்வை தவிர்த்த புலனுணர்வு மூலம் பெறுபவற்றை இலக்கியமாக்கலாம். சான்றாக, கல்யாணி ராகத்தைக் கேட்கிறோம்; அதன் மூலம் பெறும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரித்தால் அது சிறப்பாக இருக்கும். பார்த்தல், கேட்டல், பேசுதல் ஆகிய 3 வாய்ப்புகளையும் இழந்த ஹெலன் கெல்லர் தொடு உணர்வின் மூலமே நிறங்களை அறிந்துகொள்வாராம். இன்னும் நுண்ணுணர்வுகள் நிறைய அவரிடம் இருந்தன. நாமும் நம் நுண்ணுணர்வுகளைப் படைப்பாக்கவேண்டும்.
பா: நீங்கள் பிறவியிலேயே பார்வை இழந்தவரா?
க: ஆமாம். 6 மாதங்கள் வரை நான் பார்த்ததாக பெற்றோர் சொல்கிறார்கள். இருந்தாலும், அதற்கான நினைவுகள் என்னிடம் இருக்க வாய்ப்பில்லையே! மறைந்த பேரா. ஜெயராமன் அவர்கள், ‘5 வயது வரை பார்வையை இழந்தவர்களை பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் என்ற வகையில்தான் சேர்க்கவேண்டும்’ என்பார். ஏனென்றால், அவர்களுக்கு்ப் பார்வை தொடர்பான நினைவுகள் இருக்க வாய்ப்பில்லை.
பா: உங்கள் இலக்கிய நட்பு வட்டம் மிகப்பெரியது என்று கேள்விப்பட்டோம்?
க: ஆமாம். நான் ஏற்கெனவே சொன்ன பா. வெங்கடேசன் மிகச்சிறந்த படைப்பாளி; என் வாசிப்பாளரும்கூட. அவர் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அதை எழுதியவரின் எண் கொடுத்துப் பேசலாமே என்று யோசனை சொல்வார்; அப்படி நிறைய நண்பர்கள். அதோடு, என் முன்னாள் மாணவர் ஜவஹர் தற்போது திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவரும் நானும் சேர்ந்து பல இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறோம்; அப்படியும் நிறைய நண்பர்கள். எங்கள் கல்லூரிப் பேராசிரியரான எழுத்தாளர் பிரம்மராஜன், யூமா வாசுகி முதலியவர்கள் எனக்குக் கிடைத்த இலக்கிய நண்பர்கள்.
பா: நிறைய வாசிக்கும் கண்ணன் விமர்சனம் செய்ததுண்டா?
க: நெருங்கிய நண்பர்களின் படைப்புகளைப் படித்துவிட்டு நேரடியாகவே அவர்களிடம் என் மனதில் பட்டதைச் சொல்லிவிடுவேன். அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
பா: உங்களுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம் எது?
க: 3 நிகழ்வுகளைச் சொல்லலாம். ‘ஓசைகளின் நிறமாலை’யில் உள்ள ‘கண்ணாடி வியாபாரி’ கவிதையை மறைந்த பேரா. ஜெயராமன் அவர்கள் பாராட்டியபோது எனக்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது. அடுத்து, நான் படித்த பர்கூர் பார்வையற்றோர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜ் அவர்கள் என் படைப்புகளைப் பாராட்டிய தருணம். அதே பள்ளியில் பணியாற்றிய வசந்த மல்லிகா என்ற என் ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருதுக்காக நான் கடிதம் கொடுத்த பெருமிதமான தருணம். இவைதான் என் வாழ்வில் மறக்க முடியாத அங்கீகாரங்கள்.
பா: உங்களைக் கவர்ந்த மாணவர்கள் யாரேனும்?
க: நான் ஏற்கெனவே சொன்னேனே, ஜவஹர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடமிருந்து விருது பெற்றிருக்கிறார். எனக்கும் அது பெருமைதானே! மாணவராக மட்டுமில்லாமல், எனக்கு வாசிப்பாளராகவும் பல காலம் இருந்திருக்கிறார்.
பா: உங்கள் பொறுப்பு முதல்வர் பணி எப்படி இருக்கிறது?
க: பொதுவாகவே அலுவலக மேலாண்மை கூடுதல் கவனத்திற்குரியது. அதிலும், மாற்றுத்திறனாளிகள் நிறைய சிக்கல்களை, சங்கடங்களைச் சந்தித்தாக வேண்டும்; நானும் சந்திக்கிறேன். ஆனாலும், அதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அன்பால்தான் வெல்ல வேண்டும்.
பா: இப்போது நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது?
க: இல்லை. இப்போதைக்கு நான் எதுவும் எழுதவில்லை. நண்பர்கள் ஒரு நாவல் எழுதவேண்டும் என என்னை வற்புறுத்துகின்றனர். பார்ப்போம். என்னால் நினைத்த நேரத்தில் எழுதிவிட முடியாது. எழுத்து தான் வடிகால்; வேறு வழியில்லை என்று சில நேரங்களில் தோன்றும்போது நான் எழுதுகிறேன், அவ்வளவுதான். நான் எழுதுபவனாக இருக்கிறேன்; எழுத்தாளனாக இல்லை. மற்றபடி இசை என் நேசம், வாசிப்பு என் சுவாசம் என இருக்கிறேன்.
பா: உங்கள் அண்மைய நேசம், சுவாசம் பற்றி சொல்லுங்கள்?
க: எஸ். ராமகிருஷ்ணனின் ‘இந்திய வானம்’ படித்துக்கொண்டிருக்கிறேன். இன்று காலையில் ஜான் D. ஹிக்கின்ஸ் அவர்களின் அற்புதமான இசைக் கோவையை சென்னை வானொலி வழியாகக் கேட்டேன்.
பா: நம்மவர்களின் எழுத்துப் பணி பற்றி?
க: நிறைய எழுதுகிறார்கள். கோவையைச் சேர்ந்த கவிஞர் சுகுமாரன், பேரா. விஜயரங்கம் அவர்கள், மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தமைக்காக விருது பெற்ற சிதம்பரம் ரவிச்சந்திரன் அவர்கள், இப்படி பலர். அவர்கள் அளவிற்கு நான் இன்னும் உழைத்திடவில்லை என்றே கருதுகிறேன்.
பா: நீங்கள் எழுதியே ஆகவேண்டும் என்று நினைப்பது?
க: நிறைய இருக்கிறது. எல்லாவற்றையும் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்கிறேன். பார்வையற்றவர்களில் எல்லாத் தரப்பினரையும் பற்றி எழுதியாகவேண்டும். அவர்கள் இயல்பானவர்கள் என்பதைப் புரிய வைக்கவேண்டும். சான்றாக, ரயிலில் ஒருவர் சிகரெட் பிடிப்பதாக வைத்துக்கொள்வோம். யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர் ஒருவேளை மாற்றுத்திறனாளியாக இருந்தால், “இப்படி இருந்துகொண்டு என்ன செய்கிறான் பார்” என்கிறார்கள். இந்த எண்ணத்தைப் பற்றி எழுதவேண்டும்.
பா: கவிஞர்களின் அடுத்தகட்ட ஆசை பாடலாசிரியர் ஆவது. உங்களுக்கு?
க: நீங்க வேற. நான் எழுதுவதற்கே மெனக்கெடுவதில்லை. இதில் பாடலாசிரியர் எண்ணமெல்லாம் எனக்குச் சுத்தமாக இல்லை.
பா: நமக்கான ஒரு இடம் இலக்கியத்தில் உருவாகியிருப்பதாகக் கருதுகிறீர்களா?
க: இருக்கிறது. இன்னும் நிறைய வேண்டும். இந்தக் கேள்வியை நீங்கள் திருப்பூர் சிக்கன்னா கல்லூரி பேரா. கந்தசாமி அவர்களிடம்தான் கேட்கவேண்டும். அவர்தான் நிறைய இது குறித்து ஆய்வு செய்திருக்கிறார்.
பா: உங்கள் பார்வையின்மையை வரமாக எப்போதாவது கருதியிருக்கிறீர்களா?
க: கருதியிருக்கிறேன். வேலைத் தளத்தில் உதாசீனப்படுத்தப்படும்போது அவர்களின் செயல்பாடுகளைப் பார்க்க இயலாதது எவ்வளவு நல்லதாக இருக்கிறது என்று நினைத்திருக்கிறேன்!
பா: எங்கள் இதழ் குறித்து தங்கள் கருத்து?
க: மிகவும் அற்புதமான முயற்சி. தொடர்ந்து செயல்பட வேண்டும். புதியவர்கள் பலரை எழுத அழைத்து வாருங்கள். நானும் முடிந்த வரை எழுதுகிறேன்.
பாலகணேசன்: மிக்க நன்றி ஐயா.
கண்ணன்: மிக்க நன்றி.
பேரா. கோ. கண்ணன் அவர்களைத் தொடர்பு கொள்ள: [email protected]