தமிழகக் கல்வியில் மற்றுமொரு புரட்சியாக வெளிவந்திருக்கின்றன புதிய பாடப் புத்தகங்கள். பல வண்ணங்களில், நிறைய படங்களோடு, ஆழமான தகவல்கள், கூடுதல் தகவல் பெற விரைவுக் குறியீடு (QR Code) என அசத்தும் வடிவமைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன புதிய பாடப் புத்தகங்கள். 1, 6, 9, 11-ஆம் வகுப்புகள் புத்தெழுச்சியுடனும், பல்வேறு கேள்விகளோடும் இப்புத்தக மணத்தை முகர்ந்துகொண்டிருக்கின்றன. அதே நேரம், ஆயிரக்கணக்கான பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களும், ஆசிரியர்களும் இம்மணத்தை முகர முடியாமல் அல்லலுறுகின்றனர்.
பார்வை மாற்றுத்திறனாளிகள் படிக்கும் வண்ணம் புத்தகங்கள் பிரெயிலிலும், ஒலி வடிவிலும், இணையத்தில் ஒருங்குறி (Unicode) வடிவிலும் வெளியிடுவதாக வாக்குறுதி தந்த தமிழக அரசு அந்த உறுதியை நிறைவேற்றிடவில்லை. அப்படியென்றால், இத்தனை பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களும், ஆசிரியர்களும் எப்படிப் படிக்கின்றனர்?
ஒலி வடிவில் (Audio Format)
பல பார்வையற்ற ஆசிரியர்கள் அவர்களுக்கு நெருக்கமான பார்வையுள்ளவர்களின் துணையுடன் பாடங்களை ஒலிப்பதிவு செய்து வகுப்புகளை நடத்துகின்றனர். அவற்றைப் பிற நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்துகொள்கின்றனர். இத்தகைய பதிவுகள் அவசரத்திற்கான ஆறுதல்களாக அமையுமே தவிர, நிரந்தரத் தீர்வாகாது. அதோடு, பாடப் புத்தகங்கள் சில ஆண்டுகளுக்கேனும் நிலையாக இருக்கவேண்டியவை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
‘பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்கம் (CSGAB)’ புதிய பாடப் புத்தகங்களைத் தரமான ஒலிப்பதிவில் வழங்கும் முயற்சிகளை ‘ 'www.vaasippom.blogspot.com' என்ற வலைதளத்தை நடத்திவரும் ரவிக்குமார் அவர்களோடு இணைந்து மேற்கொண்டு வருகிறது. “தற்போது பார்வையற்ற ஆசிரியர்களின் உடனடித் தேவைகள் தீர்க்கப்பட்டுவிட்டன” என்கிறார் திரு. ரவிக்குமார். இந்த ஒலிப்பதிவு முழுமை பெற்றால் ஆயிரக்கணக்கான பார்வையற்ற ஆசிரியர்களும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் பார்வையற்றவர்களும் பயன் பெறுவர்.
ஒருங்குறி வடிவில் (Unicode Format)
பார்வையற்றோருக்குப் பயன்படும் எல்லா வடிவங்களுக்கும் அடிப்படை இது. ஒருங்குறி வடிவில் புத்தகங்களைப் பெறுவதன் மூலம் அவற்றைப் பிரெயிலிலும், ஒலி வடிவிலும் மாற்றுவது எளிதாகிவிடும்.
தமிழக அரசின் ‘www.textbooksonline.tn.nic.in’ தளத்தில் இதுவரை ஒருங்குறி வடிவிலான புத்தகங்கள் வெளியிடப்படவில்லை. “PDF வடிவில் இருக்கும் புத்தகங்களை ஒருங்குறி வடிவில் மாற்றுவது மிகவும் கடினமாக இருக்கிறது. இப்புத்தகம் தயாரிப்பதற்கான ஒருங்குறி வடிவ மூலப் பதிப்பை (Soft Copy) அரசு வழங்கினால் தரமான, பார்வையற்றோர் அணுகும் வகையிலான இணையப் புத்தகங்களாக புதிய பாடப் புத்தகங்களை வடிவமைத்திட முடியும்” என்கிறார் ரவிக்குமார்.
இது குறித்து சென்ற ஆண்டிலேயே தனது சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தியதாகக் கூறும் பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் மதுரை கிளை தலைவர் டாக்டர் S. பாலாஜி, தமிழக அரசு அதை இதுவரை நிறைவேற்றிடவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.
ஒருங்குறி வடிவக் கோப்புகளைச் சரியான நேரத்தில், சரியான அமைப்புகளுக்கு வழங்கியிருந்தால் இன்று பார்வையற்றோர் எதிர்கொள்ளும் பெரும்பாலான சிரமங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். மத்திய அரசு நிறுவனமான ‘NIVH’-க்கு ஒருங்குறி வடிவிலான மூலப் பதிப்பு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்நிறுவனம் அப்பதிப்பை பிரெயில் வெளியீட்டிற்குப் பயன்படுத்துகிறதே தவிர, பொதுப் பயன்பாட்டிற்கு (Public Domain) கொண்டுவரவில்லை.
பிரெயிலில்
பார்வையற்றோருக்கான எழுத்து முறை பிரெயில். மேற்கண்ட பிற முறைகளில் பார்வையற்றோர் புத்தகங்களில் இருப்பவற்றைக் கேட்டுப் பயன்பெற முடியும். ஆனால், பிரெயிலில் மட்டும்தான் அவர்களால் படித்துப் பயன்பெற இயலும். அதோடு, மேற்கண்ட முறைகள் மாணவர்களுக்கு உதவாது. அவர்கள் வரி வடிவில் படித்தால் மட்டுமே தரமான கல்வியைப் பெறமுடியும்.
தமிழக அரசின் ஒருங்குறி மூலப் பதிப்பின் துணையுடன் சென்னை ‘NIVH’ தென்மண்டல மைய பிரெயில் அச்சகத்தில் புதிய புத்தகங்களுக்குப் பிரெயில் வடிவம் வழங்கப்படுகிறது. ஒருங்குறிக் கோப்புகள் இல்லாமலேயே கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பிரெயில் அச்சகம், மதுரை IAB பிரெயில் அச்சகம் ஆகியவை புதிய புத்தகங்களுக்கு பிரெயில் வடிவம் கொடுக்கத் தொடங்கிவிட்டன. வழக்கத்திற்கு மாறாக. புத்தகங்களை விரைந்து தயாரிக்க வேண்டும் என்ற வேகம் இந்த முறை பிரெயில் அச்சகங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியவை.
‘PDF’ வடிவக் கோப்புகளை ஒருங்குறி வடிவில் மாற்றி, பிரெயிலுக்குக் கொண்டுவருவது சவாலான பணியாக இருப்பதாகக் கூறுகிறார் IAB பிரெயில் அச்சகத்தின் பொறுப்பாளர் திரு. நா. ரமணி. “புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது ஒருங்குறி வடிவத்துக்கு மாற்றப்படும்போது, வரி ஒழுங்குமுறையே குழம்பிப் போய்விடுகிறது. அட்டவணைகள், மாறுபட்ட வடிவிலான பத்திகள் முதலியவற்றை மீண்டும் சரிசெய்ய வேண்டியுள்ளது” என்கிறார் இவர்.
“வேலைத் திட்டத்தை பிரெயில் அச்சகங்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டால் புத்தகங்களை இன்னும் விரைவாக வழங்கமுடியும்” என்று வலியுறுத்தும் டாக்டர் S. பாலாஜி, அதே நேரம் முறையான மூலப் பதிப்பு இல்லாமல் கடுமையாக உழைத்துப் புத்தகங்களை வெளியிடும் அச்சகங்களைப் பாராட்டுவதாகத் தெரிவிக்கிறார்.
புத்தகங்களில் உள்ள படங்களைப் பார்வையற்றோருக்கு ஏற்றாற்போல் விளக்கி எழுதுவது பெரிய சவாலாக இருப்பதாகக் கூறும் நா. ரமணி, “பிரெயிலில் மாற்றுவதற்கான தொழில்நுட்ப வசதி பெருகியிருக்கும் இந்தத் தருணத்திலும் ஒருங்குறி வடிவிலான மூலப் பதிப்பைப் பெற முடியாதது வருந்தத்தக்கது” என்கிறார்.
‘கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் பார்வையற்ற ஆசிரியர்கள் இல்லாததால் அப்பாடங்களுக்கானப் பாடப் புத்தகங்கள் தயாரிப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது’ என்ற மாணவர்கள் சார்பிலான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து பிரெயில் அச்சகங்களிடம் கேட்டபோது, ‘முழுவதும் எழுத்துகளாலான புத்தகங்களைத் தயாரிக்கும் பணியையே இன்னும் முடிக்க இயலாத சூழ்நிலையில், பல குறியீடுகள் நிறைந்த, பிரெயிலில் மாற்றப்படும்போது நிறைய சிக்கல்கள் உள்ள புத்தகங்களை மாற்றி அமைக்க நாட்கள் ஆகத்தான் செய்யும். வருடக் கணக்கில் இப்புத்தகங்கள் இல்லாமல் சிறப்புப் பள்ளிகள் இயங்கினால்கூட வியப்படைய வேண்டியதில்லை’ என்று பதில் கிடைக்கிறது. பார்வையற்ற ஆசிரியர்களிலேயே மிகச் சிறுபான்மையினரே பொருளாதாரம், அரசியல் அறிவியல், வணிகவியல் முதலிய துறைகளில் பணியாற்றுகின்றனர். பெரும்பான்மையானோரின் சத்தத்தில் இவர்கள் குரல் அடங்கிப்போய் விடுகிறது; இவர்களும் மிகவும் தாமதமாகவே பிரெயில் புத்தகங்களைப் பெறுகின்றனர்.
தீர்வுதான் என்ன?
“மாற்றுத்திறனாளிகள் பலர் படிக்கிறார்கள்; பலர் பணியாற்றி வருகிறார்கள் என்பதையே அரசு கவனத்தில் கொள்வதில்லை” என்கிறார் செம்பாக்கம் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் அசோக் குமார். “அடுத்த முறையும் இத்தகைய சிக்கல்கள் நேராமல் நாம் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று கூறும் அசோக் குமாருக்கு தற்போது 6-ஆம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் மட்டுமே ‘NIVH’ பிரெயில் அச்சகத்திலிருந்து கிடைத்துள்ளது. 9-ஆம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை.
“நாங்கள் புத்தக மாற்றம் குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்து இதுவரை பாடப் புத்தக வடிவமைப்பு தொடர்பாக சந்திக்காத அதிகாரிகளே இல்லை” என்று கூறும் டாக்டர் பாலாஜி, “எல்லோரும் எங்களுக்கு உறுதியளித்தனர். ஆனால், தற்போது எந்த உறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அரசு அதிகார மையங்களால் பார்வையற்ற நாங்கள் பந்தாடப்படுகிறோம்” என்றார். ‘SCERT’, ‘மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்’, ‘NIVH’ ஆகிய அமைப்புகள் மாற்றி மாற்றி தங்களுக்குள் கை காட்டி பிரச்சனையை முடித்துவிடுகிறார்கள் என்கிறார் இவர். மேலும், மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டம் 2016, நீதிமன்றத் தீர்ப்புகள், பல தரப்பினரின் கோரிக்கைகள் முதலியவற்றை எல்லாம் தமிழக அரசு புறந்தள்ளிவிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
“பிரச்சனை இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. 6, 9 ஆகிய வகுப்புகளுக்கு அடுத்த பருவத்திற்கு நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? அடுத்த ஆண்டு மாற்றப்பட இருக்கும் புத்தகங்களை எப்படி வாங்கப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை. அடுத்த ஆண்டு வரை இதே அவதி தொடர்ந்துவிடுமோ என அச்சமாக உள்ளது” என்கிறார் அசோக் குமார்.
“அடுத்த ஆண்டில் மாற்றப்பட இருக்கும் பாடங்களுக்கான வல்லுனர் குழுவில் பார்வையற்றோர் தொடர்பான பிரதிநிதி உறுதியாக அமர்த்தப்பட வேண்டும். அந்த பிரதிநிதி பாடங்களின் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துவதோடு, பார்வையற்றோருக்கு ஏற்ற வடிவில் புத்தகங்கள் சரியான நேரத்தில் வெளியிட உதவவேண்டும்” என வலியுறுத்துகிறார், ‘ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் சங்கம்’ தலைவர் சித்ரா. “ஒருங்குறி வடிவ மூலப் பதிப்பை அரசிடம் கேட்பது மட்டுமல்ல, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குச் சிக்கலான படங்கள் முதலியவற்றுக்கான விளக்கங்களையும் பாடத்திட்டக் குழுவே வழங்க ஏற்பாடுகள் செய்தாகவேண்டும்” என்கிறார் நா. ரமணி.
உண்மைதான்; தான் தயாரித்தளிக்கும் பாடப் புத்தகங்கள் எல்லாத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்கிற அக்கறை தமிழக அரசுக்கு வேண்டும். எத்தனையோ தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் இது குறித்து தொடர்ந்து இயங்கலாம். அவர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் புத்தகங்களை மாற்றி வடிவமைத்துச் சிறப்பாகவே வெளியிடலாம். ஆனாலும், அவை முழுமையான பணி ஆகாது. புத்தகத்தைத் தயாரித்தளிப்பவர்களே அது மாற்றுத்திறனாளிகளையும் முழுமையாகச் சென்றடையத் தேவையான பணிகளையும் மேற்கொண்டாக வேண்டும். பார்வையுள்ளோருக்குப் புத்தகங்கள் கிடைக்கும் அதே நாளில் பார்வையற்றோருக்கும் புத்தகங்கள் கிடைக்கும்போதுதான் ‘சமச்சீர் கல்வி’ என்ற தொடர் பொருள் உள்ளதாக அமையும்.
தமிழக அரசின் பாடப்புத்தகங்களும், கூடுதல் விவரங்களும் மத்திய அரசின் நிறுவனமான ‘NCTE’-யின் ‘திக்ஷா’ (diksha) செயலியில் தரப்பட்டுள்ளன. அவற்றை ஆசிரியர்களும், மாணவர்களும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தச் செயலியில் பெரும்பாலும் காணொளிகளே இடம்பெற்றுள்ளன. இந்தக் காணொளிகள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் புரியும் வகையில் ஒலி விவரிப்புடன் (Audio Description) வெளியிடப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்க வேண்டிய இந்த நேரத்தில், ‘இன்னும் எங்களுக்கான புத்தகங்களே கிடைக்கவில்லை’ என்ற பழைய கோரிக்கையை வலியுறுத்த வேண்டியிருப்பது பேரவலம்.
“இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டம் 2016-இன் படி, இன்னும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றாற்போல் முழுமையாக புத்தகங்கள் கிடைக்காதது தவறு. இத்தகைய செயல்பாடுகள் தொடருமேயானால், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார் பார்வையற்ற ஆசிரியர்கள் சங்க மதுரை கிளையின் தலைவர் டாக்டர் பாலாஜி. இதுவரை அறியாமையில் இருந்தவர்களைத் தட்டி எழுப்பினோம்; அறிதுயில் கொள்பவர்களையும் எழுப்ப வேண்டியது கட்டாயம் ஆன பின்னர், எழுப்பித்தான் ஆகவேண்டும்.
அடுத்த ஆண்டும் இதே சிக்கல்களைத் தாங்கிய கட்டுரை வருமா, வராதா என்பதைக் களம் காண்பவர்களும், அரசும்தான் முடிவு செய்யவேண்டும்!
--
தொடர்புக்கு: [email protected]
பார்வை மாற்றுத்திறனாளிகள் படிக்கும் வண்ணம் புத்தகங்கள் பிரெயிலிலும், ஒலி வடிவிலும், இணையத்தில் ஒருங்குறி (Unicode) வடிவிலும் வெளியிடுவதாக வாக்குறுதி தந்த தமிழக அரசு அந்த உறுதியை நிறைவேற்றிடவில்லை. அப்படியென்றால், இத்தனை பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களும், ஆசிரியர்களும் எப்படிப் படிக்கின்றனர்?
ஒலி வடிவில் (Audio Format)
பல பார்வையற்ற ஆசிரியர்கள் அவர்களுக்கு நெருக்கமான பார்வையுள்ளவர்களின் துணையுடன் பாடங்களை ஒலிப்பதிவு செய்து வகுப்புகளை நடத்துகின்றனர். அவற்றைப் பிற நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்துகொள்கின்றனர். இத்தகைய பதிவுகள் அவசரத்திற்கான ஆறுதல்களாக அமையுமே தவிர, நிரந்தரத் தீர்வாகாது. அதோடு, பாடப் புத்தகங்கள் சில ஆண்டுகளுக்கேனும் நிலையாக இருக்கவேண்டியவை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
‘பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்கம் (CSGAB)’ புதிய பாடப் புத்தகங்களைத் தரமான ஒலிப்பதிவில் வழங்கும் முயற்சிகளை ‘ 'www.vaasippom.blogspot.com' என்ற வலைதளத்தை நடத்திவரும் ரவிக்குமார் அவர்களோடு இணைந்து மேற்கொண்டு வருகிறது. “தற்போது பார்வையற்ற ஆசிரியர்களின் உடனடித் தேவைகள் தீர்க்கப்பட்டுவிட்டன” என்கிறார் திரு. ரவிக்குமார். இந்த ஒலிப்பதிவு முழுமை பெற்றால் ஆயிரக்கணக்கான பார்வையற்ற ஆசிரியர்களும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் பார்வையற்றவர்களும் பயன் பெறுவர்.
ஒருங்குறி வடிவில் (Unicode Format)
பார்வையற்றோருக்குப் பயன்படும் எல்லா வடிவங்களுக்கும் அடிப்படை இது. ஒருங்குறி வடிவில் புத்தகங்களைப் பெறுவதன் மூலம் அவற்றைப் பிரெயிலிலும், ஒலி வடிவிலும் மாற்றுவது எளிதாகிவிடும்.
தமிழக அரசின் ‘www.textbooksonline.tn.nic.in’ தளத்தில் இதுவரை ஒருங்குறி வடிவிலான புத்தகங்கள் வெளியிடப்படவில்லை. “PDF வடிவில் இருக்கும் புத்தகங்களை ஒருங்குறி வடிவில் மாற்றுவது மிகவும் கடினமாக இருக்கிறது. இப்புத்தகம் தயாரிப்பதற்கான ஒருங்குறி வடிவ மூலப் பதிப்பை (Soft Copy) அரசு வழங்கினால் தரமான, பார்வையற்றோர் அணுகும் வகையிலான இணையப் புத்தகங்களாக புதிய பாடப் புத்தகங்களை வடிவமைத்திட முடியும்” என்கிறார் ரவிக்குமார்.
இது குறித்து சென்ற ஆண்டிலேயே தனது சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தியதாகக் கூறும் பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் மதுரை கிளை தலைவர் டாக்டர் S. பாலாஜி, தமிழக அரசு அதை இதுவரை நிறைவேற்றிடவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.
ஒருங்குறி வடிவக் கோப்புகளைச் சரியான நேரத்தில், சரியான அமைப்புகளுக்கு வழங்கியிருந்தால் இன்று பார்வையற்றோர் எதிர்கொள்ளும் பெரும்பாலான சிரமங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். மத்திய அரசு நிறுவனமான ‘NIVH’-க்கு ஒருங்குறி வடிவிலான மூலப் பதிப்பு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்நிறுவனம் அப்பதிப்பை பிரெயில் வெளியீட்டிற்குப் பயன்படுத்துகிறதே தவிர, பொதுப் பயன்பாட்டிற்கு (Public Domain) கொண்டுவரவில்லை.
பிரெயிலில்
பார்வையற்றோருக்கான எழுத்து முறை பிரெயில். மேற்கண்ட பிற முறைகளில் பார்வையற்றோர் புத்தகங்களில் இருப்பவற்றைக் கேட்டுப் பயன்பெற முடியும். ஆனால், பிரெயிலில் மட்டும்தான் அவர்களால் படித்துப் பயன்பெற இயலும். அதோடு, மேற்கண்ட முறைகள் மாணவர்களுக்கு உதவாது. அவர்கள் வரி வடிவில் படித்தால் மட்டுமே தரமான கல்வியைப் பெறமுடியும்.
தமிழக அரசின் ஒருங்குறி மூலப் பதிப்பின் துணையுடன் சென்னை ‘NIVH’ தென்மண்டல மைய பிரெயில் அச்சகத்தில் புதிய புத்தகங்களுக்குப் பிரெயில் வடிவம் வழங்கப்படுகிறது. ஒருங்குறிக் கோப்புகள் இல்லாமலேயே கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பிரெயில் அச்சகம், மதுரை IAB பிரெயில் அச்சகம் ஆகியவை புதிய புத்தகங்களுக்கு பிரெயில் வடிவம் கொடுக்கத் தொடங்கிவிட்டன. வழக்கத்திற்கு மாறாக. புத்தகங்களை விரைந்து தயாரிக்க வேண்டும் என்ற வேகம் இந்த முறை பிரெயில் அச்சகங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியவை.
‘PDF’ வடிவக் கோப்புகளை ஒருங்குறி வடிவில் மாற்றி, பிரெயிலுக்குக் கொண்டுவருவது சவாலான பணியாக இருப்பதாகக் கூறுகிறார் IAB பிரெயில் அச்சகத்தின் பொறுப்பாளர் திரு. நா. ரமணி. “புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது ஒருங்குறி வடிவத்துக்கு மாற்றப்படும்போது, வரி ஒழுங்குமுறையே குழம்பிப் போய்விடுகிறது. அட்டவணைகள், மாறுபட்ட வடிவிலான பத்திகள் முதலியவற்றை மீண்டும் சரிசெய்ய வேண்டியுள்ளது” என்கிறார் இவர்.
“வேலைத் திட்டத்தை பிரெயில் அச்சகங்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டால் புத்தகங்களை இன்னும் விரைவாக வழங்கமுடியும்” என்று வலியுறுத்தும் டாக்டர் S. பாலாஜி, அதே நேரம் முறையான மூலப் பதிப்பு இல்லாமல் கடுமையாக உழைத்துப் புத்தகங்களை வெளியிடும் அச்சகங்களைப் பாராட்டுவதாகத் தெரிவிக்கிறார்.
புத்தகங்களில் உள்ள படங்களைப் பார்வையற்றோருக்கு ஏற்றாற்போல் விளக்கி எழுதுவது பெரிய சவாலாக இருப்பதாகக் கூறும் நா. ரமணி, “பிரெயிலில் மாற்றுவதற்கான தொழில்நுட்ப வசதி பெருகியிருக்கும் இந்தத் தருணத்திலும் ஒருங்குறி வடிவிலான மூலப் பதிப்பைப் பெற முடியாதது வருந்தத்தக்கது” என்கிறார்.
‘கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் பார்வையற்ற ஆசிரியர்கள் இல்லாததால் அப்பாடங்களுக்கானப் பாடப் புத்தகங்கள் தயாரிப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது’ என்ற மாணவர்கள் சார்பிலான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து பிரெயில் அச்சகங்களிடம் கேட்டபோது, ‘முழுவதும் எழுத்துகளாலான புத்தகங்களைத் தயாரிக்கும் பணியையே இன்னும் முடிக்க இயலாத சூழ்நிலையில், பல குறியீடுகள் நிறைந்த, பிரெயிலில் மாற்றப்படும்போது நிறைய சிக்கல்கள் உள்ள புத்தகங்களை மாற்றி அமைக்க நாட்கள் ஆகத்தான் செய்யும். வருடக் கணக்கில் இப்புத்தகங்கள் இல்லாமல் சிறப்புப் பள்ளிகள் இயங்கினால்கூட வியப்படைய வேண்டியதில்லை’ என்று பதில் கிடைக்கிறது. பார்வையற்ற ஆசிரியர்களிலேயே மிகச் சிறுபான்மையினரே பொருளாதாரம், அரசியல் அறிவியல், வணிகவியல் முதலிய துறைகளில் பணியாற்றுகின்றனர். பெரும்பான்மையானோரின் சத்தத்தில் இவர்கள் குரல் அடங்கிப்போய் விடுகிறது; இவர்களும் மிகவும் தாமதமாகவே பிரெயில் புத்தகங்களைப் பெறுகின்றனர்.
தீர்வுதான் என்ன?
“மாற்றுத்திறனாளிகள் பலர் படிக்கிறார்கள்; பலர் பணியாற்றி வருகிறார்கள் என்பதையே அரசு கவனத்தில் கொள்வதில்லை” என்கிறார் செம்பாக்கம் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் அசோக் குமார். “அடுத்த முறையும் இத்தகைய சிக்கல்கள் நேராமல் நாம் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று கூறும் அசோக் குமாருக்கு தற்போது 6-ஆம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் மட்டுமே ‘NIVH’ பிரெயில் அச்சகத்திலிருந்து கிடைத்துள்ளது. 9-ஆம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை.
“நாங்கள் புத்தக மாற்றம் குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்து இதுவரை பாடப் புத்தக வடிவமைப்பு தொடர்பாக சந்திக்காத அதிகாரிகளே இல்லை” என்று கூறும் டாக்டர் பாலாஜி, “எல்லோரும் எங்களுக்கு உறுதியளித்தனர். ஆனால், தற்போது எந்த உறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அரசு அதிகார மையங்களால் பார்வையற்ற நாங்கள் பந்தாடப்படுகிறோம்” என்றார். ‘SCERT’, ‘மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்’, ‘NIVH’ ஆகிய அமைப்புகள் மாற்றி மாற்றி தங்களுக்குள் கை காட்டி பிரச்சனையை முடித்துவிடுகிறார்கள் என்கிறார் இவர். மேலும், மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டம் 2016, நீதிமன்றத் தீர்ப்புகள், பல தரப்பினரின் கோரிக்கைகள் முதலியவற்றை எல்லாம் தமிழக அரசு புறந்தள்ளிவிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
“பிரச்சனை இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. 6, 9 ஆகிய வகுப்புகளுக்கு அடுத்த பருவத்திற்கு நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? அடுத்த ஆண்டு மாற்றப்பட இருக்கும் புத்தகங்களை எப்படி வாங்கப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை. அடுத்த ஆண்டு வரை இதே அவதி தொடர்ந்துவிடுமோ என அச்சமாக உள்ளது” என்கிறார் அசோக் குமார்.
“அடுத்த ஆண்டில் மாற்றப்பட இருக்கும் பாடங்களுக்கான வல்லுனர் குழுவில் பார்வையற்றோர் தொடர்பான பிரதிநிதி உறுதியாக அமர்த்தப்பட வேண்டும். அந்த பிரதிநிதி பாடங்களின் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துவதோடு, பார்வையற்றோருக்கு ஏற்ற வடிவில் புத்தகங்கள் சரியான நேரத்தில் வெளியிட உதவவேண்டும்” என வலியுறுத்துகிறார், ‘ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் சங்கம்’ தலைவர் சித்ரா. “ஒருங்குறி வடிவ மூலப் பதிப்பை அரசிடம் கேட்பது மட்டுமல்ல, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குச் சிக்கலான படங்கள் முதலியவற்றுக்கான விளக்கங்களையும் பாடத்திட்டக் குழுவே வழங்க ஏற்பாடுகள் செய்தாகவேண்டும்” என்கிறார் நா. ரமணி.
உண்மைதான்; தான் தயாரித்தளிக்கும் பாடப் புத்தகங்கள் எல்லாத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்கிற அக்கறை தமிழக அரசுக்கு வேண்டும். எத்தனையோ தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் இது குறித்து தொடர்ந்து இயங்கலாம். அவர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் புத்தகங்களை மாற்றி வடிவமைத்துச் சிறப்பாகவே வெளியிடலாம். ஆனாலும், அவை முழுமையான பணி ஆகாது. புத்தகத்தைத் தயாரித்தளிப்பவர்களே அது மாற்றுத்திறனாளிகளையும் முழுமையாகச் சென்றடையத் தேவையான பணிகளையும் மேற்கொண்டாக வேண்டும். பார்வையுள்ளோருக்குப் புத்தகங்கள் கிடைக்கும் அதே நாளில் பார்வையற்றோருக்கும் புத்தகங்கள் கிடைக்கும்போதுதான் ‘சமச்சீர் கல்வி’ என்ற தொடர் பொருள் உள்ளதாக அமையும்.
தமிழக அரசின் பாடப்புத்தகங்களும், கூடுதல் விவரங்களும் மத்திய அரசின் நிறுவனமான ‘NCTE’-யின் ‘திக்ஷா’ (diksha) செயலியில் தரப்பட்டுள்ளன. அவற்றை ஆசிரியர்களும், மாணவர்களும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தச் செயலியில் பெரும்பாலும் காணொளிகளே இடம்பெற்றுள்ளன. இந்தக் காணொளிகள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் புரியும் வகையில் ஒலி விவரிப்புடன் (Audio Description) வெளியிடப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்க வேண்டிய இந்த நேரத்தில், ‘இன்னும் எங்களுக்கான புத்தகங்களே கிடைக்கவில்லை’ என்ற பழைய கோரிக்கையை வலியுறுத்த வேண்டியிருப்பது பேரவலம்.
“இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டம் 2016-இன் படி, இன்னும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றாற்போல் முழுமையாக புத்தகங்கள் கிடைக்காதது தவறு. இத்தகைய செயல்பாடுகள் தொடருமேயானால், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார் பார்வையற்ற ஆசிரியர்கள் சங்க மதுரை கிளையின் தலைவர் டாக்டர் பாலாஜி. இதுவரை அறியாமையில் இருந்தவர்களைத் தட்டி எழுப்பினோம்; அறிதுயில் கொள்பவர்களையும் எழுப்ப வேண்டியது கட்டாயம் ஆன பின்னர், எழுப்பித்தான் ஆகவேண்டும்.
அடுத்த ஆண்டும் இதே சிக்கல்களைத் தாங்கிய கட்டுரை வருமா, வராதா என்பதைக் களம் காண்பவர்களும், அரசும்தான் முடிவு செய்யவேண்டும்!
--
தொடர்புக்கு: [email protected]