எனக்கு 6 வயசு இருக்கும்போது, அய்யய்யோ! இல்ல, இல்ல. கொஞ்சம் வாழ்க்கையை பார்வர்டு பண்ணணும். நான் 6-ஆம் வகுப்பு படிக்கும்போது, ஒரு பொண்ணக் காதலிச்சேன். நீங்க யாரும், ‘அப்பவே உனக்கு காதல் வந்துருச்சா’னு கேட்கக்கூடாது? காதலுக்கு வெவஸ்தயே கிடையாது. அது எதையுமே பார்க்கிறதில்ல; அதுபாட்டுக்கு காலிங்பெல் அடிக்காம கதவத் தொறந்துக்கிட்டு மனசுக்குள்ள வந்து உக்காந்திடும்! அதனால, அது 6-ஆம் வகுப்பென்றும் பார்க்காம வந்திருச்சு!
‘இப்ப எல்லாம், தான் காதலிக்கிறவளுக்குக் கணவனோ, காதலிக்கிறவனுக்குப் பொண்டாட்டி, புள்ளைங்க இருக்குதுங்கிறதையே கூடப் பார்க்கிறதில்ல’, இப்படியெல்லாம் சம்முவத்துக்குக் கருத்துச் சொல்ல நெறைய பேரு இருக்காங்க. நான் இப்ப என்னோட மேட்டருக்கு வாறேன். ‘முதல்ல காதல்னுதானே சொன்ன? இப்ப மேட்டர்னு சொல்லுற?’-ஒங்க மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்குது. இது ஒரு குடும்பப் பாங்கான பதிவு என்பதைச் சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.
எங்க விடுதி சாப்பாட்டச் சாப்பிட ஒரு தனி முறை இருக்கு. தப்பித் தவறியேனும் சாப்பாட்டை மோந்துபார்க்கக்கூடாது; அப்புறம் நம்மால சாப்பிடவே முடியாது. அங்கே வைக்கிற முட்டையும் கடுமையா வீசும்! ஆனா, முட்டை சாப்பிடாதவங்களுக்கு பட்டாணி தருவாங்க பாருங்க; அது செம்ம ருசியா இருக்கும்.
ஒருநாள் வகுப்பில் பேசிக்கொண்டிருந்தபோது சாப்பாடு பற்றிய பேச்சு எழுந்தது. அப்போது அந்தப் பிள்ளைகிட்ட, “நீ முட்டையா? பட்டாணியா?” எனக் கேட்டேன். அவள், “பட்டாணி” எனச் சொன்னாள். அன்றிரவே டைனிங் ஹாலில் பட்டாணி சாப்பிடுபவர்கள் பெஞ்சிற்கு மாறினேன். எனக்கும் முட்டையே பிடிக்காது என அவளிடம் பெருமையாய் சொன்னேன். முதலில் 5 பேராக இருந்த பட்டாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் கூடத் தொடங்கியது. அதில் காதலிக்காக மாறியவர்களும் இருக்கலாம்.
முதலில் தட்டுக்கு 2 கரண்டி பட்டாணி வைத்தார்கள். பின்னர், அது ஒரு கரண்டியாக மாறத்தொடங்கியது. நபர்களின் எண்ணிக்கை கூடியபோதும் கூட்டுக்காக ஊறவைக்கப்படும் பட்டாணியின் அளவு கூடவில்லை. இன்னும் நபர்கள் கூடவே, அதில் தண்ணீரை ஊற்றி, குழம்பு போல வைத்துக் கொடுத்தார்கள்; வெங்காயங்களுக்கு நடுவே 2, 3 பட்டாணிகள்தான் கிடக்கும். இப்போது பட்டாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை 30-ஐத் தாண்டியது. நிர்வாகம் இப்போது விழித்துக்கொண்டது! அவர்கள் பட்டாணியின் அளவைக் கூட்டத் தயாராய் இல்லை. எங்கோ தவறு நடக்கிறது என்று ஆராயத் தொடங்கினர்.
விருந்துச் சாப்பாடு என்றாலே எங்களுக்கு மகிழ்ச்சிதான்! அதிலும் கறி விருந்து என்றால் சொல்லவா வேண்டும்? எங்கள் விடுதி சமையல்காரர்களுக்கு ஒரு விருது கொடுக்கலாம். அவர்களால் மட்டரகமாக சமைக்கவும் முடியும்; விருந்துச் சாப்பாடு என்றால் அசத்தலாகவும் சமைக்கத் தெரியும். பட்டாணி சாப்பிடுபவர்கள் சைவம் சாப்பிடுபவர்கள்! ஆனால், நாங்கள் விருந்து அன்று மட்டும் இடம் மாறி அமர்ந்து கறி, முட்டை என வெளுத்துக் கட்டிவிடுவோம்.
அப்படிப்பட்ட ஒரு விருந்து சமயத்தில், வார்டன் ரைடைத் தொடங்கினார். பட்டாணி வாங்கும் கோஷ்டி இன்று இடம் மாறி இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்! அவர்களுக்கு அன்று கறி மறுக்கப்பட்டது. அதில் நான் சிக்கவில்லை! நான் அப்போதுதான் பள்ளியில் சேர்ந்திருந்ததால் வார்டனுக்கு நான் நினைவில் இல்லை.
அடுத்த நாள், சைவம் சாப்பிடுபவர்களின் பெயர்கள் எழுதப்பட்டது. ஒவ்வொருவராகக் கேட்டு வந்தார்கள். எனது முறையும் வந்தது. “சைவமா? அசைவமா?” எனக் கேட்டார் வார்டன்.
‘நம்ம ஆளு சைவமாயிற்றே! என்ன செய்யலாம்?’ என ஒரு வினா மனதில் எழும்ப, அது மூளையைச் சென்றடையும் முன்னரே வாய், “அசைவம்” எனச் சொல்லிவிட்டது. கரிக்கொழம்பா, காதலியா என வரும்போது கரிக்கொழம்பு வென்றுவிட்டது!
வகுப்பில் நுழைந்ததும் மனதில் சிறு போராட்டம் எழுந்தது. அவளிடம், “கறி சாப்பிட்டாத்தானே உடம்பு சும்மா கின்னுன்னு வரும்” எனத் திரியைக் கொளுத்திப்போட்டேன்.
“அப்படி இல்ல” என்று சொன்ன அவள், “நிலத்திலேயே பெரிய விலங்கு எது” எனக் கேட்டாள்.
நான் “யானை” என்றேன்.
“அது என்ன கறியா சாப்பிடுது?” என்றாள். நான் வியந்துபோனேன்! ‘புடிச்சாலும் புடிச்சேன், புத்திசாலிப் பொண்ணத்தான் புடுச்சுருக்கேன்’ என மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். அடுத்து அவள் பேசத்தொடங்கினாள். சரிவிகித உணவில் தொடங்கி, வைட்டமின், கொல்லாமை பக்கம் எல்லாம் சென்று நீண்ட உரை ஆற்றி முடித்தாள். ஏதோ பேச்சுப்போட்டிக்கு மனப்பாடம் பண்ணுனது போல, வணக்கத்தையும் நன்றியையும் கட் பண்ணிட்டு அப்படியே ஒப்பிச்சு முடிச்சா.
யாரு சொல்லிக்கொடுத்ததுனு தெரியல. பாய்ண்ட் அத்தனையுமே செம்ம அறுவையா இருந்துச்சு; அந்தப் புள்ள குரலில் கேட்டதால, எனக்கு எல்லாமே அருமையா இருந்துச்சு. அந்தப் பேச்சக் கேட்டதுமே மனசு கறியா, காதலியா எனச் சிறு தடுமாற்றம் கண்டது. ஆனால், அடுத்த நொடியே கறிதான் முக்கியம் என மனசு பிக்ஸாயிடுச்சு.
அந்த ஞாயிற்றுக்கிழமை வாட்டர்கேன் கிரிக்கெட்டுல சதம் அடிச்சுட்டு, உடம்புக்குக் கொஞ்சம் இதமா இருக்குமேனு தண்ணி குடிக்க பைப் பக்கம் போனேன். அப்போது பக்கத்தில் இருந்த பெஞ்சிலிருந்து ஒரு குரல்,
“ஏம்மா! இந்த 2 கறித்துண்ட மட்டும் கொண்டுக்கிட்டு என்னப் பார்க்க வந்தியாக்கும்?”
அதற்கு அவங்க அம்மா, “அர டிப்பன் பாக்ஸ் கறி இருக்கேடி!”
“இது கறியா? அம்புட்டும் எலும்பு!“
“நாட்டுக்கோழிக் கறி அப்புடித்தாண்டி இருக்கும்”.
“எந்தக் கோழிய அடிச்ச? மரத்திலேயே அடையுமே, அதத்தான?”
“ஆமாண்டி! பக்கத்து வீட்டுக்காரன் அது மேல ஒரு கண்ணா இருந்தான்”.
“நல்லவேள! நீ அடிச்சுட்ட. சரி, அடுத்த வாரம் வரும்போது ஆட்டுக்கறி கொண்டுவா! நீ சாப்பிட்டியாம்மா?”
“மொத பஸ்ஸ புடிக்கிறதுக்காண்டி கஞ்சி குடிக்காம ஓடியாந்தேன். எனக்கும் சேத்துதான் கட்டிக்கிட்டு வந்தேன்”.
“சாப்பாடு இருக்குல்ல?”
“இல்லடி! நான் கடையில சாப்பிட்டுக்கிறேன்”.
“சாரிமா! இன்னைக்கி கொழம்பு நல்லா இருந்துச்சா, அதுனால நெறைய சாப்பிட்டுட்டேன்!”
இப்படி என்னவளின் பேச்சைக் கேட்டதும் கோபம் தலைக்கேறியது. ‘சுவாலஜியைவிட பாட்டனிதான் சிறந்ததென்று எனக்குப் பாடம் எடுத்துவிட்டு, இப்படி முழுக் கோழிய முழுசா முழுங்குறியே’ என வகுப்புக்கு வந்ததும் கேட்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். உடனே அந்தக் கோபம் மாறியது. ‘அந்தப் பிள்ளைக்காக வகுப்பில் பல்முனைப்போட்டி நடந்துக்கிட்டு இருக்கு; இப்போதான் எனக்கும் அந்தப் பிள்ளைக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகத் தொடங்கியிருக்கு; அத நாமே ஏன் கெடுத்துக்கணும்’ என நினைத்து, அந்த கெமிஸ்ட்ரிக்காக சுவாலஜியா, பாட்டனியா என்ற குழப்பத்தை மட்டுமல்ல, எனது சூடு, சொரணை என எல்லாத்தையும் காத்துல விட்டுட்டேன்.
--
தொடர்புக்கு: [email protected]
‘இப்ப எல்லாம், தான் காதலிக்கிறவளுக்குக் கணவனோ, காதலிக்கிறவனுக்குப் பொண்டாட்டி, புள்ளைங்க இருக்குதுங்கிறதையே கூடப் பார்க்கிறதில்ல’, இப்படியெல்லாம் சம்முவத்துக்குக் கருத்துச் சொல்ல நெறைய பேரு இருக்காங்க. நான் இப்ப என்னோட மேட்டருக்கு வாறேன். ‘முதல்ல காதல்னுதானே சொன்ன? இப்ப மேட்டர்னு சொல்லுற?’-ஒங்க மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்குது. இது ஒரு குடும்பப் பாங்கான பதிவு என்பதைச் சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.
எங்க விடுதி சாப்பாட்டச் சாப்பிட ஒரு தனி முறை இருக்கு. தப்பித் தவறியேனும் சாப்பாட்டை மோந்துபார்க்கக்கூடாது; அப்புறம் நம்மால சாப்பிடவே முடியாது. அங்கே வைக்கிற முட்டையும் கடுமையா வீசும்! ஆனா, முட்டை சாப்பிடாதவங்களுக்கு பட்டாணி தருவாங்க பாருங்க; அது செம்ம ருசியா இருக்கும்.
ஒருநாள் வகுப்பில் பேசிக்கொண்டிருந்தபோது சாப்பாடு பற்றிய பேச்சு எழுந்தது. அப்போது அந்தப் பிள்ளைகிட்ட, “நீ முட்டையா? பட்டாணியா?” எனக் கேட்டேன். அவள், “பட்டாணி” எனச் சொன்னாள். அன்றிரவே டைனிங் ஹாலில் பட்டாணி சாப்பிடுபவர்கள் பெஞ்சிற்கு மாறினேன். எனக்கும் முட்டையே பிடிக்காது என அவளிடம் பெருமையாய் சொன்னேன். முதலில் 5 பேராக இருந்த பட்டாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் கூடத் தொடங்கியது. அதில் காதலிக்காக மாறியவர்களும் இருக்கலாம்.
முதலில் தட்டுக்கு 2 கரண்டி பட்டாணி வைத்தார்கள். பின்னர், அது ஒரு கரண்டியாக மாறத்தொடங்கியது. நபர்களின் எண்ணிக்கை கூடியபோதும் கூட்டுக்காக ஊறவைக்கப்படும் பட்டாணியின் அளவு கூடவில்லை. இன்னும் நபர்கள் கூடவே, அதில் தண்ணீரை ஊற்றி, குழம்பு போல வைத்துக் கொடுத்தார்கள்; வெங்காயங்களுக்கு நடுவே 2, 3 பட்டாணிகள்தான் கிடக்கும். இப்போது பட்டாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை 30-ஐத் தாண்டியது. நிர்வாகம் இப்போது விழித்துக்கொண்டது! அவர்கள் பட்டாணியின் அளவைக் கூட்டத் தயாராய் இல்லை. எங்கோ தவறு நடக்கிறது என்று ஆராயத் தொடங்கினர்.
விருந்துச் சாப்பாடு என்றாலே எங்களுக்கு மகிழ்ச்சிதான்! அதிலும் கறி விருந்து என்றால் சொல்லவா வேண்டும்? எங்கள் விடுதி சமையல்காரர்களுக்கு ஒரு விருது கொடுக்கலாம். அவர்களால் மட்டரகமாக சமைக்கவும் முடியும்; விருந்துச் சாப்பாடு என்றால் அசத்தலாகவும் சமைக்கத் தெரியும். பட்டாணி சாப்பிடுபவர்கள் சைவம் சாப்பிடுபவர்கள்! ஆனால், நாங்கள் விருந்து அன்று மட்டும் இடம் மாறி அமர்ந்து கறி, முட்டை என வெளுத்துக் கட்டிவிடுவோம்.
அப்படிப்பட்ட ஒரு விருந்து சமயத்தில், வார்டன் ரைடைத் தொடங்கினார். பட்டாணி வாங்கும் கோஷ்டி இன்று இடம் மாறி இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்! அவர்களுக்கு அன்று கறி மறுக்கப்பட்டது. அதில் நான் சிக்கவில்லை! நான் அப்போதுதான் பள்ளியில் சேர்ந்திருந்ததால் வார்டனுக்கு நான் நினைவில் இல்லை.
அடுத்த நாள், சைவம் சாப்பிடுபவர்களின் பெயர்கள் எழுதப்பட்டது. ஒவ்வொருவராகக் கேட்டு வந்தார்கள். எனது முறையும் வந்தது. “சைவமா? அசைவமா?” எனக் கேட்டார் வார்டன்.
‘நம்ம ஆளு சைவமாயிற்றே! என்ன செய்யலாம்?’ என ஒரு வினா மனதில் எழும்ப, அது மூளையைச் சென்றடையும் முன்னரே வாய், “அசைவம்” எனச் சொல்லிவிட்டது. கரிக்கொழம்பா, காதலியா என வரும்போது கரிக்கொழம்பு வென்றுவிட்டது!
வகுப்பில் நுழைந்ததும் மனதில் சிறு போராட்டம் எழுந்தது. அவளிடம், “கறி சாப்பிட்டாத்தானே உடம்பு சும்மா கின்னுன்னு வரும்” எனத் திரியைக் கொளுத்திப்போட்டேன்.
“அப்படி இல்ல” என்று சொன்ன அவள், “நிலத்திலேயே பெரிய விலங்கு எது” எனக் கேட்டாள்.
நான் “யானை” என்றேன்.
“அது என்ன கறியா சாப்பிடுது?” என்றாள். நான் வியந்துபோனேன்! ‘புடிச்சாலும் புடிச்சேன், புத்திசாலிப் பொண்ணத்தான் புடுச்சுருக்கேன்’ என மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். அடுத்து அவள் பேசத்தொடங்கினாள். சரிவிகித உணவில் தொடங்கி, வைட்டமின், கொல்லாமை பக்கம் எல்லாம் சென்று நீண்ட உரை ஆற்றி முடித்தாள். ஏதோ பேச்சுப்போட்டிக்கு மனப்பாடம் பண்ணுனது போல, வணக்கத்தையும் நன்றியையும் கட் பண்ணிட்டு அப்படியே ஒப்பிச்சு முடிச்சா.
யாரு சொல்லிக்கொடுத்ததுனு தெரியல. பாய்ண்ட் அத்தனையுமே செம்ம அறுவையா இருந்துச்சு; அந்தப் புள்ள குரலில் கேட்டதால, எனக்கு எல்லாமே அருமையா இருந்துச்சு. அந்தப் பேச்சக் கேட்டதுமே மனசு கறியா, காதலியா எனச் சிறு தடுமாற்றம் கண்டது. ஆனால், அடுத்த நொடியே கறிதான் முக்கியம் என மனசு பிக்ஸாயிடுச்சு.
அந்த ஞாயிற்றுக்கிழமை வாட்டர்கேன் கிரிக்கெட்டுல சதம் அடிச்சுட்டு, உடம்புக்குக் கொஞ்சம் இதமா இருக்குமேனு தண்ணி குடிக்க பைப் பக்கம் போனேன். அப்போது பக்கத்தில் இருந்த பெஞ்சிலிருந்து ஒரு குரல்,
“ஏம்மா! இந்த 2 கறித்துண்ட மட்டும் கொண்டுக்கிட்டு என்னப் பார்க்க வந்தியாக்கும்?”
அதற்கு அவங்க அம்மா, “அர டிப்பன் பாக்ஸ் கறி இருக்கேடி!”
“இது கறியா? அம்புட்டும் எலும்பு!“
“நாட்டுக்கோழிக் கறி அப்புடித்தாண்டி இருக்கும்”.
“எந்தக் கோழிய அடிச்ச? மரத்திலேயே அடையுமே, அதத்தான?”
“ஆமாண்டி! பக்கத்து வீட்டுக்காரன் அது மேல ஒரு கண்ணா இருந்தான்”.
“நல்லவேள! நீ அடிச்சுட்ட. சரி, அடுத்த வாரம் வரும்போது ஆட்டுக்கறி கொண்டுவா! நீ சாப்பிட்டியாம்மா?”
“மொத பஸ்ஸ புடிக்கிறதுக்காண்டி கஞ்சி குடிக்காம ஓடியாந்தேன். எனக்கும் சேத்துதான் கட்டிக்கிட்டு வந்தேன்”.
“சாப்பாடு இருக்குல்ல?”
“இல்லடி! நான் கடையில சாப்பிட்டுக்கிறேன்”.
“சாரிமா! இன்னைக்கி கொழம்பு நல்லா இருந்துச்சா, அதுனால நெறைய சாப்பிட்டுட்டேன்!”
இப்படி என்னவளின் பேச்சைக் கேட்டதும் கோபம் தலைக்கேறியது. ‘சுவாலஜியைவிட பாட்டனிதான் சிறந்ததென்று எனக்குப் பாடம் எடுத்துவிட்டு, இப்படி முழுக் கோழிய முழுசா முழுங்குறியே’ என வகுப்புக்கு வந்ததும் கேட்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். உடனே அந்தக் கோபம் மாறியது. ‘அந்தப் பிள்ளைக்காக வகுப்பில் பல்முனைப்போட்டி நடந்துக்கிட்டு இருக்கு; இப்போதான் எனக்கும் அந்தப் பிள்ளைக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகத் தொடங்கியிருக்கு; அத நாமே ஏன் கெடுத்துக்கணும்’ என நினைத்து, அந்த கெமிஸ்ட்ரிக்காக சுவாலஜியா, பாட்டனியா என்ற குழப்பத்தை மட்டுமல்ல, எனது சூடு, சொரணை என எல்லாத்தையும் காத்துல விட்டுட்டேன்.
--
தொடர்புக்கு: [email protected]