‘இந்த உலகில் மிக அழகானதும், உன்னதமானதுமான யாவும் கைகளால் தொடவோ, கண்களால் பார்க்கவோ இயலாதது; இதயத்தால் மட்டுமே உணரக்கூடியது’.
1880 ஜூன் 27-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள துஸ்கம்பியா என்னும் இடத்தில், ஒரு அமெரிக்க தம்பதியினருக்கு மகளாகப் பிறந்த சுட்டிக் குழந்தைதான் ஹெலன். பிறந்த ஆறாவது மாதத்தில் பேசத் துவங்கிய அவளுக்கு, பதினெட்டாவது மாதத்தில் வந்த மூளைக்காய்ச்சலால் பார்வை பறிபோனது; காதுகள் கேட்கும் தன்மையை இழக்கவே, பேசும் சக்தியும் பறிபோனது.
இருப்பினும், விடாமுயற்சிக்கு சொந்தக்காரியான ஹெலன் பெற்றோரது துணையுடன், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லின் வழிகாட்டுதலுடன் பார்வையற்றோருக்கான ‘பெர்கின்ஸ்’ பள்ளியில் சேர்க்கப்பட்டார். குழந்தைகளது முதல் தேவதை தாய் என்றால், அடுத்த இடம் ஆசிரியருக்குதான். இங்கு, ஹெலனுக்கு ஆதியும் அந்தமுமாய் நின்றவர் ஆனி சலிவன்.
குறைப்பார்வைக்குச் சொந்தக்காரி ஆனி சலிவன். அவரது அரவணைப்பில் 49 ஆண்டுகள் பயணித்தார் ஹெலன். நுட்ப நுழைவுக்குள் புகுந்த ஹெலன், அதிர்வுகளின் ஓசை உணர்ந்தாள். உணர்வுகளின் உரசல்வழி உலகை உணரத் துவங்கினாள். தனது பத்தாம் வயதிற்குள் பார்வையற்றோர் பயன்படுத்தும் பிரெயில் முறையில் ஆங்கிலம். கிரேக்கம். லத்தீன், பிரெஞ்சு போன்ற மொழிகளில் எழுதவும் படிக்கவும் கற்றுத் தேர்ந்தாள்.
காது கேளாதோருக்கான பள்ளியில் சேர்ந்து பேசக் கற்றுக்கொண்ட ஹெலன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது 24-ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். அறிதல் புரிதலானது; வார்த்தைகள் எழுத்துக்களாய் உருப்பெற்றன; ஆனி, ஹெலனது உள்ளங்கையில் எழுதிக் காட்டிய எழுத்துக்கள் ஹெலனது தலையெழுத்தை மாற்றிப்போடாமல் இல்லை. உதடுகளின் அசைவுகளையும், தொண்டைக்குழியின் அதிர்வுகளையும் உணரக் கற்றுத் தந்த ஆசிரியர் நுட்பத்தின் நுழைவாயில் அன்றோ!
விரல் நுனியில் உலகை அளக்கத் துவங்கிய ஹெலன், தன் எண்ண ஓட்டங்களை பல புத்தகங்களாக வார்த்தெடுத்தார். தனது கல்லூரி நாட்களிலேயே ‘தி ஹிஸ்டரி ஆஃப் மை லைஃப்’ (The History of My Life) என்ற தனது சுயசரிதையை எழுதிய ஹெலன், தன் வாழ்நாளில் மொத்தம் 12 புத்தகங்கள் எழுதியுள்ளார். ‘தன்னம்பிக்கை’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை, ‘நான் வாழும் உலகம்’, ‘கற்சுவரின் கீதம்’, ‘மாலை காலத்து அமைதி’ போன்ற பல புத்தகங்கள் அவரது ஐம்பது ஆண்டுகால எழுத்தார்வத்திற்கு சில உதாரணங்கள். தன்னம்பிக்கை, பெண்ணுரிமை, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் ஹெலன் பல பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளார்.
தனது 88-ஆவது வயதுவரை பார்வையற்றோருக்காகவும் காது கேளாதோருக்காகவும் அயராது உழைத்த அவர், தனது பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை அமைத்து, பல நாடுகள் சுற்றுப்பயணம் செய்து, அதன் மூலம் கிடைத்த ஒன்றரை கோடி ரூபாயை தன் இன மக்களின் கல்விக்காக செலவிட்டார்.
கெல்லர், உலகம் அறிந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் உழைப்பாளர்களுக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் பேசினார். சோசலிசவாதியாகத் திகழ்ந்த இவர், அமெரிக்க சோசலிசக் கட்சியின் உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் திகழ்ந்தார். 1920-ஆம் ஆண்டு, ‘அமெரிக்க உள்நாட்டு உரிமைகளுக்கான ஒன்றியம் (ACLU)’, 1915-ஆம் ஆண்டு ஜார்ஜ் கெல்லருடன் இணைந்து, ‘ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு (HKI)’ போன்ற அமைப்புகளைத் துவங்கி, மக்களின் நலன் குறித்துப் பேசலானார். மக்கள் நலனென்றால் அரசுக்குப் பாகற்காய்தானே? ஹெலனைத் தீவிரவாதி என முத்திரை குத்தினர். அஞ்சா நெஞ்சுரம் கொண்ட ஹெலன், அனைத்தையும் மன தைரியத்தோடு எதிர்கொண்டு வெற்றி வாகை சூடினார்.
1964-இல் ஹெலன் பக்கவாதத்தால் முடங்கினார். 1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் உயர்ந்த பதக்கங்களுள் ஒன்றான ‘சுதந்திரப் பதக்கம் (Presidential Award of Freedom)’ ஹெலனுக்கு வழங்கப்பட்டது. மேலும், அதே ஆண்டில், நாட்டின் சிறந்த பெண்ணாக ஹெலன் தேர்வு செய்யப்பட்டார்.
1968 ஜூன் 1 அன்று, அவரது 88-ஆவது வயதில், தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அதிர்வுகளை உணர்ந்து, ஆனி சலிவனுடன் இணைந்து இந்த உலகையே உலுக்கிய ஹெலனது வாழ்க்கை பல பத்திரிகைகளில் தொடராகவும், வெள்ளித்திரையில் படமாகவும் வெளிவந்தது. அவரது வாழ்க்கை வரலாறு படம் ஆஸ்கர் விருது பெற்றது என்பது கூடுதல் சிறப்பு.
பெண், உலகின் ஆக்க சக்தி. அவள் மாற்றுத்திறன் பெற்றவள்தான். அவளுக்கு எத்தனை சோதனை அம்புகளை இயற்கை வீசினாலும் தன்னம்பிக்கை. கல்வி எனும் கவசம் கொண்டு சாதனைகளாய் மாற்றும் வல்லமை பொருந்தியவள் பெண் என்பதை அறியச் செய்த ஹெலன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பல்கலைக்கழகம்.
--
கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்.
தொடர்புக்கு: [email protected]
1880 ஜூன் 27-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள துஸ்கம்பியா என்னும் இடத்தில், ஒரு அமெரிக்க தம்பதியினருக்கு மகளாகப் பிறந்த சுட்டிக் குழந்தைதான் ஹெலன். பிறந்த ஆறாவது மாதத்தில் பேசத் துவங்கிய அவளுக்கு, பதினெட்டாவது மாதத்தில் வந்த மூளைக்காய்ச்சலால் பார்வை பறிபோனது; காதுகள் கேட்கும் தன்மையை இழக்கவே, பேசும் சக்தியும் பறிபோனது.
இருப்பினும், விடாமுயற்சிக்கு சொந்தக்காரியான ஹெலன் பெற்றோரது துணையுடன், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லின் வழிகாட்டுதலுடன் பார்வையற்றோருக்கான ‘பெர்கின்ஸ்’ பள்ளியில் சேர்க்கப்பட்டார். குழந்தைகளது முதல் தேவதை தாய் என்றால், அடுத்த இடம் ஆசிரியருக்குதான். இங்கு, ஹெலனுக்கு ஆதியும் அந்தமுமாய் நின்றவர் ஆனி சலிவன்.
குறைப்பார்வைக்குச் சொந்தக்காரி ஆனி சலிவன். அவரது அரவணைப்பில் 49 ஆண்டுகள் பயணித்தார் ஹெலன். நுட்ப நுழைவுக்குள் புகுந்த ஹெலன், அதிர்வுகளின் ஓசை உணர்ந்தாள். உணர்வுகளின் உரசல்வழி உலகை உணரத் துவங்கினாள். தனது பத்தாம் வயதிற்குள் பார்வையற்றோர் பயன்படுத்தும் பிரெயில் முறையில் ஆங்கிலம். கிரேக்கம். லத்தீன், பிரெஞ்சு போன்ற மொழிகளில் எழுதவும் படிக்கவும் கற்றுத் தேர்ந்தாள்.
காது கேளாதோருக்கான பள்ளியில் சேர்ந்து பேசக் கற்றுக்கொண்ட ஹெலன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது 24-ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். அறிதல் புரிதலானது; வார்த்தைகள் எழுத்துக்களாய் உருப்பெற்றன; ஆனி, ஹெலனது உள்ளங்கையில் எழுதிக் காட்டிய எழுத்துக்கள் ஹெலனது தலையெழுத்தை மாற்றிப்போடாமல் இல்லை. உதடுகளின் அசைவுகளையும், தொண்டைக்குழியின் அதிர்வுகளையும் உணரக் கற்றுத் தந்த ஆசிரியர் நுட்பத்தின் நுழைவாயில் அன்றோ!
விரல் நுனியில் உலகை அளக்கத் துவங்கிய ஹெலன், தன் எண்ண ஓட்டங்களை பல புத்தகங்களாக வார்த்தெடுத்தார். தனது கல்லூரி நாட்களிலேயே ‘தி ஹிஸ்டரி ஆஃப் மை லைஃப்’ (The History of My Life) என்ற தனது சுயசரிதையை எழுதிய ஹெலன், தன் வாழ்நாளில் மொத்தம் 12 புத்தகங்கள் எழுதியுள்ளார். ‘தன்னம்பிக்கை’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை, ‘நான் வாழும் உலகம்’, ‘கற்சுவரின் கீதம்’, ‘மாலை காலத்து அமைதி’ போன்ற பல புத்தகங்கள் அவரது ஐம்பது ஆண்டுகால எழுத்தார்வத்திற்கு சில உதாரணங்கள். தன்னம்பிக்கை, பெண்ணுரிமை, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் ஹெலன் பல பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளார்.
தனது 88-ஆவது வயதுவரை பார்வையற்றோருக்காகவும் காது கேளாதோருக்காகவும் அயராது உழைத்த அவர், தனது பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை அமைத்து, பல நாடுகள் சுற்றுப்பயணம் செய்து, அதன் மூலம் கிடைத்த ஒன்றரை கோடி ரூபாயை தன் இன மக்களின் கல்விக்காக செலவிட்டார்.
கெல்லர், உலகம் அறிந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் உழைப்பாளர்களுக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் பேசினார். சோசலிசவாதியாகத் திகழ்ந்த இவர், அமெரிக்க சோசலிசக் கட்சியின் உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் திகழ்ந்தார். 1920-ஆம் ஆண்டு, ‘அமெரிக்க உள்நாட்டு உரிமைகளுக்கான ஒன்றியம் (ACLU)’, 1915-ஆம் ஆண்டு ஜார்ஜ் கெல்லருடன் இணைந்து, ‘ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு (HKI)’ போன்ற அமைப்புகளைத் துவங்கி, மக்களின் நலன் குறித்துப் பேசலானார். மக்கள் நலனென்றால் அரசுக்குப் பாகற்காய்தானே? ஹெலனைத் தீவிரவாதி என முத்திரை குத்தினர். அஞ்சா நெஞ்சுரம் கொண்ட ஹெலன், அனைத்தையும் மன தைரியத்தோடு எதிர்கொண்டு வெற்றி வாகை சூடினார்.
1964-இல் ஹெலன் பக்கவாதத்தால் முடங்கினார். 1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் உயர்ந்த பதக்கங்களுள் ஒன்றான ‘சுதந்திரப் பதக்கம் (Presidential Award of Freedom)’ ஹெலனுக்கு வழங்கப்பட்டது. மேலும், அதே ஆண்டில், நாட்டின் சிறந்த பெண்ணாக ஹெலன் தேர்வு செய்யப்பட்டார்.
1968 ஜூன் 1 அன்று, அவரது 88-ஆவது வயதில், தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அதிர்வுகளை உணர்ந்து, ஆனி சலிவனுடன் இணைந்து இந்த உலகையே உலுக்கிய ஹெலனது வாழ்க்கை பல பத்திரிகைகளில் தொடராகவும், வெள்ளித்திரையில் படமாகவும் வெளிவந்தது. அவரது வாழ்க்கை வரலாறு படம் ஆஸ்கர் விருது பெற்றது என்பது கூடுதல் சிறப்பு.
பெண், உலகின் ஆக்க சக்தி. அவள் மாற்றுத்திறன் பெற்றவள்தான். அவளுக்கு எத்தனை சோதனை அம்புகளை இயற்கை வீசினாலும் தன்னம்பிக்கை. கல்வி எனும் கவசம் கொண்டு சாதனைகளாய் மாற்றும் வல்லமை பொருந்தியவள் பெண் என்பதை அறியச் செய்த ஹெலன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பல்கலைக்கழகம்.
--
கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்.
தொடர்புக்கு: [email protected]