வாட்ஸ்அப் தளத்தில் அறிமுகமாகி,
வார்த்தையில் விளங்காத புது ஸ்வரம் பாடி,
கேட்போர் மனதினில் தனி இடம் பெற்று,
வாழ்த்துக்களால் வளர்கின்ற இசைப் பூங்குயில்!
வாசகர் இல்லத்தில் இன்முகம் காட்டி,
வாசிப்புக் கலையால் வருத்தங்கள் போக்கி,
வசந்தத்தின் விளைவினும் வசீகரம் கூட்டி,
சுவாசத்தின் வாசத்தை நுகர்ந்திடச் செய்தது!
ஒருசில மணித்துளிகளே சந்திப்பு என்றாலும்,
ஓராயிரம் மழைத்துளிகள் சங்கமித்த சந்தோஷம்!
ஆரோகணம் அவரோகணம் தெரியாத இன்னிசையை,
ஆராதனை செய்ததாய் அரியதோர் உற்சாகம்!
நிழல் என்று நினைத்தது நிஜமாக நிகழ்ந்தது;
குரல் ஏனோ மறைந்தது, குழலோசை நிலைத்தது!
அலைபேசியில் நுழைந்தது தினம் தினம் நினைவூட்டுது;
மழைதந்த முகிலதை மனம் மீண்டும் எதிர்பாக்குது!
(சென்ற ஆண்டு, அதாவது 30.07.2017 அன்று எமது வீட்டிற்கு வருகை தந்து, இன்ப அதிர்ச்சியும், இசை நிகழ்ச்சியுமாய் என்னையும், என் குடும்பத்தாரையும் சில நிமிடங்கள் மகிழ்வித்த, வளர்ந்துவரும் புல்லாங்குழல் இசைக் கலைஞர் ராசிபுரம் திரு. பெருமாள் அவர்களுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை).
--
கவிஞர் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர்.
தொடர்புக்கு: [email protected]
வார்த்தையில் விளங்காத புது ஸ்வரம் பாடி,
கேட்போர் மனதினில் தனி இடம் பெற்று,
வாழ்த்துக்களால் வளர்கின்ற இசைப் பூங்குயில்!
வாசகர் இல்லத்தில் இன்முகம் காட்டி,
வாசிப்புக் கலையால் வருத்தங்கள் போக்கி,
வசந்தத்தின் விளைவினும் வசீகரம் கூட்டி,
சுவாசத்தின் வாசத்தை நுகர்ந்திடச் செய்தது!
ஒருசில மணித்துளிகளே சந்திப்பு என்றாலும்,
ஓராயிரம் மழைத்துளிகள் சங்கமித்த சந்தோஷம்!
ஆரோகணம் அவரோகணம் தெரியாத இன்னிசையை,
ஆராதனை செய்ததாய் அரியதோர் உற்சாகம்!
நிழல் என்று நினைத்தது நிஜமாக நிகழ்ந்தது;
குரல் ஏனோ மறைந்தது, குழலோசை நிலைத்தது!
அலைபேசியில் நுழைந்தது தினம் தினம் நினைவூட்டுது;
மழைதந்த முகிலதை மனம் மீண்டும் எதிர்பாக்குது!
(சென்ற ஆண்டு, அதாவது 30.07.2017 அன்று எமது வீட்டிற்கு வருகை தந்து, இன்ப அதிர்ச்சியும், இசை நிகழ்ச்சியுமாய் என்னையும், என் குடும்பத்தாரையும் சில நிமிடங்கள் மகிழ்வித்த, வளர்ந்துவரும் புல்லாங்குழல் இசைக் கலைஞர் ராசிபுரம் திரு. பெருமாள் அவர்களுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை).
--
கவிஞர் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர்.
தொடர்புக்கு: [email protected]