பார்வை மாற்றுத்திறனாளி கதாபாத்திரம் இடம்பெற்ற முக்கியமான முதல் திரைப்படம் ‘மேஜர் சந்திரகாந்த்’. அதையும் குணசித்திர வேடம் என்றுதான் கூறமுடியும். ஏனெனில், நாயகன் என்றால் நாயகி வேண்டும்; பாடல்கள், நடனம், சண்டைக் காட்சிகள் போன்றவை வேண்டும். பார்வை மாற்றுத்திறனாளிகளின் இத்தகைய இயலாமையை ஈடுசெய்ய வந்தவர்தான் இசைஞானி இளையராஜா. இளையராஜா அவர்களின் கரம்பிடித்து, பார்வை மாற்றுத்திறனாளிகள் வெற்றிகரமாக வெள்ளித்திரையில் உலா வர முடிந்தது. அப்படியான சாத்தியத்தை உணர்த்திய முதல் திரைப்படம் ‘ராஜபார்வை’.
வசதியான குடும்பத்தில் பிறந்து, தந்தை இறந்த பிறகு தனது சிற்றன்னையின் வெறுப்பினால் சிறப்புப் பள்ளியின் விடுதியில் நிரந்தரமாக விடப்படும் பார்வை மாற்றுத்திறனாளிதான் நாயகன் (கமல்ஹாசன்). பிறகு அவனது காதல், அதில் பிரிவு, இறுதியில் சுபம். இத்திரைப்படத்தில் கையாளப்பட்ட வழக்கமான கதை, அதைவிட மிகச் சாதாரணமான திரைக்கதை மற்றும் மொழி மாற்றுத் திரைப்படப் பாணியில் அறிமுகம் இல்லாத பல முகங்கள் போன்ற பல காரணங்களால் கசப்பான திரை அனுபவத்தையே இப்படம் பரிசளித்தது. ஆனாலும், ராஜபார்வை திரைப்படத்தில் தொட்டுக்காட்டப்பட்ட சில விடையங்கள் இன்று வரையிலும் வெளிச்சம் படாமல் இருக்கின்றன.
தாயை இழந்த நாயகன் (கமல்ஹாசன்) சிற்றன்னையின் வெறுப்பின் ஊடே வளர்கிறார். மரணம் என்றால் என்னவென்று தெரியாத பருவத்திலேயே தன் மீது பாசம் காட்டி வளர்த்த வேலைக்கார ஆயாவையும் இழக்கிறார். அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே ஒரே ஆதரவான தந்தையையும் இழக்கிறார். தொடர் மரணங்கள் மற்றும் சிற்றன்னை மீதான அச்சம் காரணமாக நாயகனுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்படுகிறது. அதன் காரணமாக பார்வையை இழக்க நேரிடுகிறது. இந்த வகையில், பார்வைத்திறன் பாதிப்பு என்பது பிறக்கும்போது மட்டுமின்றி இடையிலும் கூட வேறு காரணங்களால் (விபத்துக்கள் தவிர) ஏற்படலாம் என்பதைக் கூறிய ஒரே திரைப்படம் ராஜபார்வைதான்.
பார்வை மாற்றுத்திறனாளிகள் பயிலும் சிறப்புப் பள்ளிகள், பிரெயில் எழுத்து வடிவங்கள், வெண்கோல் போன்றவையும் முதன்முறையாக வெள்ளித்திரையில் இடம்பெற்றதும் ராஜபார்வை திரைப்படத்தில்தான். ஆனாலும், நடக்கும்போது மோதிக்கொள்வது, தடுமாறி விழுவது என மிகச் சாதாரணமான அணுகுமுறையையே கமல்ஹாசனும் பின்பற்றியிருப்பார். இருந்தாலும், இரண்டு முக்கியமான காட்சிகளில் பார்வை மாற்றுத்திறனாளிகளை மிகச்சிறந்த முறையில் கமல்ஹாசன் வெளிக்காட்டியிருப்பார்.
தான் பயின்ற சிறப்புப் பள்ளிக்கு நாயகியை ஒருமுறை அழைத்துச் செல்வார் நாயகன். அதுவரையில் நாயகியின் கையைப் பிடித்துக்கொண்டு தடவித் தடவி நடந்துவரும் நாயகன், பள்ளிக்குள் நுழைந்தவுடன் அவளது கைகளை விட்டுவிடுவார். அதாவது, இனிமேல் தன்னால் சுயமாக நடமாட முடியும் என்பதாக அவனது உடல்மொழி இருக்கும். தான் குடியிருக்கும் வீட்டை விடவும் சிறப்புப் பள்ளிகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மிகவும் வசதியாக, சவுகரியமாக உணர்வதை கமல்ஹாசன் மிக இயல்பாக வெளிப்படுத்தி இருப்பார். ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா’ என்பதை நிரூபித்த தருணம் அது.
சிறுவயது நாயகனை அவனது தந்தை வீட்டின் விட்டத்தில் தொங்கவிட்டு விளையாட்டுக் காட்டுவார். அப்படி ஒருமுறை விளையாடும்போதுதான் அவர் தந்தை நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இறந்துபோவார்; சிறுவயது நாயகனோ அனாதரவாக விட்டத்தில் தொங்கிக்கொண்டு இருப்பான். அந்த அச்சத்திலேயே நாயகனுக்கு காய்ச்சல் வந்து பார்வை பறிபோய்விடும். வாலிப வயதில் காதலி பிரியும் போது, சிறுவயதில் அனாதரவாக தொங்குவது போன்றே நாயகன் உணர்வது பொருத்தமாக இருக்கும். அதாவது, சிற்றன்னையைப் பிரிந்து இசைக்குழு ஒன்றில் இணைந்து சுயமாக சம்பாதித்து வாழ்ந்தாலும் நேசம் கொண்ட காதலியின் பிரிவை, தந்தை தன்னை விட்டத்தில் தொங்க விட்டுவிட்டுப் பிரிந்ததை ஒப்பிடுகையில் கமல்ஹாசனின் நடிப்பு சிறப்பானதாக இருக்கும்.
ராஜபார்வை திரைப்படத்தில் புரிந்துகொள்ள முடியாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு காட்சி இருக்கும். நாயகன் பார்வையுள்ள நாயகியைக் காதலிப்பார்; ஆனால், சிற்றன்னையோ பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்ணைத் திருமணம் செய்துவைத்து நாயகனைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ளத் திட்டமிடுவார். அப்படியொரு பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் நாயகன், "நாம ரெண்டு பேரும் கண்ணாமூச்சி வேணும்னா விளையாடலாம்; கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்று கூறி மறுத்துவிடுவார்.
அந்தப் பெண் சிறுவயது என்பதாலா அல்லது அந்தப் பெண் பார்வை மாற்றுத்திறனாளி என்பதாலா, எதன் காரணமாக கண்ணாமூச்சிதான் விளையாட முடியும் என்று நாயகன் கூறினார் என்பது தெளிவாக இருக்காது. ஆனால், பார்வை மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்துகொண்டால் அவர்களை பிறர் ஆதிக்கம் செலுத்த முடியும், அல்லது அவர்களால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது என்று நம்புவதாக இந்தக் காட்சி இருக்கும்.
பார்வை மாற்றுத்திறனாளி ஒர் இசைக் கலைஞராக சாதிக்க முடியும் என்பதை அறிந்திருந்த படக்குழு, அவர்களுக்குள் திருமணம் செய்துகொண்டு வாழ முடியாது என முடிவு செய்திருப்பது ஆகப்பெரிய முரண். ஆகவே, ராஜபார்வை திரைப்படமும்கூட வெறும் சாதனை முயற்சி அல்லது வணிக விளம்பரம் என்பதாகவே பார்க்க முடிகிறது; மாறாக, உண்மையான அக்கறையுடன் எடுக்கப்பட்டதாக நினைக்கத் தோன்றவில்லை.
அடுத்த பகுதிக்கான முன்னோட்டம் இதோ: பார்வை மாற்றுத்திறனாளிகளில் முக்கியமான பிரிவினர் குறைப்பார்வை உடையோர். அத்தகைய குறைப்பார்வையும் படிப்படியாகக் குறைந்துகொண்டே வரும் தன்மை உடையதாகவும் இருக்கும். பெருமளவு பிறவியிலேயே முழுப் பார்வையற்றவர்களாகத் திரையில் காட்டப்படும் நிலையில், படிப்படியாக உருவாகும் பார்வை இழப்பைத் திரையில் காட்டிய திரைப்படம் - அடுத்த பகுதியில்!
...வெளிச்சம் பாய்ச்சுவோம்
--
கட்டுரையாளர் ஈரோடு காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல.
தொடர்புக்கு: [email protected]
வசதியான குடும்பத்தில் பிறந்து, தந்தை இறந்த பிறகு தனது சிற்றன்னையின் வெறுப்பினால் சிறப்புப் பள்ளியின் விடுதியில் நிரந்தரமாக விடப்படும் பார்வை மாற்றுத்திறனாளிதான் நாயகன் (கமல்ஹாசன்). பிறகு அவனது காதல், அதில் பிரிவு, இறுதியில் சுபம். இத்திரைப்படத்தில் கையாளப்பட்ட வழக்கமான கதை, அதைவிட மிகச் சாதாரணமான திரைக்கதை மற்றும் மொழி மாற்றுத் திரைப்படப் பாணியில் அறிமுகம் இல்லாத பல முகங்கள் போன்ற பல காரணங்களால் கசப்பான திரை அனுபவத்தையே இப்படம் பரிசளித்தது. ஆனாலும், ராஜபார்வை திரைப்படத்தில் தொட்டுக்காட்டப்பட்ட சில விடையங்கள் இன்று வரையிலும் வெளிச்சம் படாமல் இருக்கின்றன.
தாயை இழந்த நாயகன் (கமல்ஹாசன்) சிற்றன்னையின் வெறுப்பின் ஊடே வளர்கிறார். மரணம் என்றால் என்னவென்று தெரியாத பருவத்திலேயே தன் மீது பாசம் காட்டி வளர்த்த வேலைக்கார ஆயாவையும் இழக்கிறார். அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே ஒரே ஆதரவான தந்தையையும் இழக்கிறார். தொடர் மரணங்கள் மற்றும் சிற்றன்னை மீதான அச்சம் காரணமாக நாயகனுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்படுகிறது. அதன் காரணமாக பார்வையை இழக்க நேரிடுகிறது. இந்த வகையில், பார்வைத்திறன் பாதிப்பு என்பது பிறக்கும்போது மட்டுமின்றி இடையிலும் கூட வேறு காரணங்களால் (விபத்துக்கள் தவிர) ஏற்படலாம் என்பதைக் கூறிய ஒரே திரைப்படம் ராஜபார்வைதான்.
பார்வை மாற்றுத்திறனாளிகள் பயிலும் சிறப்புப் பள்ளிகள், பிரெயில் எழுத்து வடிவங்கள், வெண்கோல் போன்றவையும் முதன்முறையாக வெள்ளித்திரையில் இடம்பெற்றதும் ராஜபார்வை திரைப்படத்தில்தான். ஆனாலும், நடக்கும்போது மோதிக்கொள்வது, தடுமாறி விழுவது என மிகச் சாதாரணமான அணுகுமுறையையே கமல்ஹாசனும் பின்பற்றியிருப்பார். இருந்தாலும், இரண்டு முக்கியமான காட்சிகளில் பார்வை மாற்றுத்திறனாளிகளை மிகச்சிறந்த முறையில் கமல்ஹாசன் வெளிக்காட்டியிருப்பார்.
தான் பயின்ற சிறப்புப் பள்ளிக்கு நாயகியை ஒருமுறை அழைத்துச் செல்வார் நாயகன். அதுவரையில் நாயகியின் கையைப் பிடித்துக்கொண்டு தடவித் தடவி நடந்துவரும் நாயகன், பள்ளிக்குள் நுழைந்தவுடன் அவளது கைகளை விட்டுவிடுவார். அதாவது, இனிமேல் தன்னால் சுயமாக நடமாட முடியும் என்பதாக அவனது உடல்மொழி இருக்கும். தான் குடியிருக்கும் வீட்டை விடவும் சிறப்புப் பள்ளிகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மிகவும் வசதியாக, சவுகரியமாக உணர்வதை கமல்ஹாசன் மிக இயல்பாக வெளிப்படுத்தி இருப்பார். ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா’ என்பதை நிரூபித்த தருணம் அது.
சிறுவயது நாயகனை அவனது தந்தை வீட்டின் விட்டத்தில் தொங்கவிட்டு விளையாட்டுக் காட்டுவார். அப்படி ஒருமுறை விளையாடும்போதுதான் அவர் தந்தை நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இறந்துபோவார்; சிறுவயது நாயகனோ அனாதரவாக விட்டத்தில் தொங்கிக்கொண்டு இருப்பான். அந்த அச்சத்திலேயே நாயகனுக்கு காய்ச்சல் வந்து பார்வை பறிபோய்விடும். வாலிப வயதில் காதலி பிரியும் போது, சிறுவயதில் அனாதரவாக தொங்குவது போன்றே நாயகன் உணர்வது பொருத்தமாக இருக்கும். அதாவது, சிற்றன்னையைப் பிரிந்து இசைக்குழு ஒன்றில் இணைந்து சுயமாக சம்பாதித்து வாழ்ந்தாலும் நேசம் கொண்ட காதலியின் பிரிவை, தந்தை தன்னை விட்டத்தில் தொங்க விட்டுவிட்டுப் பிரிந்ததை ஒப்பிடுகையில் கமல்ஹாசனின் நடிப்பு சிறப்பானதாக இருக்கும்.
ராஜபார்வை திரைப்படத்தில் புரிந்துகொள்ள முடியாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு காட்சி இருக்கும். நாயகன் பார்வையுள்ள நாயகியைக் காதலிப்பார்; ஆனால், சிற்றன்னையோ பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்ணைத் திருமணம் செய்துவைத்து நாயகனைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ளத் திட்டமிடுவார். அப்படியொரு பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் நாயகன், "நாம ரெண்டு பேரும் கண்ணாமூச்சி வேணும்னா விளையாடலாம்; கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்று கூறி மறுத்துவிடுவார்.
அந்தப் பெண் சிறுவயது என்பதாலா அல்லது அந்தப் பெண் பார்வை மாற்றுத்திறனாளி என்பதாலா, எதன் காரணமாக கண்ணாமூச்சிதான் விளையாட முடியும் என்று நாயகன் கூறினார் என்பது தெளிவாக இருக்காது. ஆனால், பார்வை மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்துகொண்டால் அவர்களை பிறர் ஆதிக்கம் செலுத்த முடியும், அல்லது அவர்களால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது என்று நம்புவதாக இந்தக் காட்சி இருக்கும்.
பார்வை மாற்றுத்திறனாளி ஒர் இசைக் கலைஞராக சாதிக்க முடியும் என்பதை அறிந்திருந்த படக்குழு, அவர்களுக்குள் திருமணம் செய்துகொண்டு வாழ முடியாது என முடிவு செய்திருப்பது ஆகப்பெரிய முரண். ஆகவே, ராஜபார்வை திரைப்படமும்கூட வெறும் சாதனை முயற்சி அல்லது வணிக விளம்பரம் என்பதாகவே பார்க்க முடிகிறது; மாறாக, உண்மையான அக்கறையுடன் எடுக்கப்பட்டதாக நினைக்கத் தோன்றவில்லை.
அடுத்த பகுதிக்கான முன்னோட்டம் இதோ: பார்வை மாற்றுத்திறனாளிகளில் முக்கியமான பிரிவினர் குறைப்பார்வை உடையோர். அத்தகைய குறைப்பார்வையும் படிப்படியாகக் குறைந்துகொண்டே வரும் தன்மை உடையதாகவும் இருக்கும். பெருமளவு பிறவியிலேயே முழுப் பார்வையற்றவர்களாகத் திரையில் காட்டப்படும் நிலையில், படிப்படியாக உருவாகும் பார்வை இழப்பைத் திரையில் காட்டிய திரைப்படம் - அடுத்த பகுதியில்!
...வெளிச்சம் பாய்ச்சுவோம்
--
கட்டுரையாளர் ஈரோடு காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல.
தொடர்புக்கு: [email protected]