அரசாங்கம் என்னும் வாடகைத்தாய்
ஈன்றெடுத்த இளைத்த பிள்ளை.
எங்களுக்கும் அரசுக்குமான இடைவெளியை
அவ்வப் பொழுது அளக்க உதவும் அளவுகோல்.
இரத்த ஓட்டத்தால் அல்ல,
ரப்பர் நீட்டத்தால் உயிர் வாழும் உன்னத உருவம்.
கிளர்ந்து பாயும் வாகனங்களிடம் இருந்து
எங்களைக் காக்கும் கைப்பிள்ளை.
அவ்வப் பொழுது அவர்தம் சக்கரத்தில் சிக்குண்டு
எங்களைச் சேதாரம் இன்றி காக்கும் தியாக அவதாரம்.
தளந்து போகையில் அழுத்தமாய் தாங்கிப் பிடித்தாலும்
சுமந்து செல்லும் எங்களின் தனிவோருவன்.
அழகு பெண்கள் கைபிடிக்க வருகையில் மட்டும்
தன்னையே பிடிக்கச் செய்துவிடும் சண்டாளன்.
உறவுகள் உதறினாலும்
எங்களின் கைகளோடு கோர்த்துக் கிடக்கும்
கோப்பெரும் தேவன்.
வடிவங்களும் அளவுகளும் பல உண்டு, எனினும் அவனிடம்
மாறாது கிடப்பது காக்கும் தொண்டு.
வெவ்வேறு புரிதல் பலர் கொண்டிருப்பினும்,
எங்களின் அழிக்க இயலா அடையாளம் இந்த மடிபடும் ஆபத்பாந்தவன்!
எங்கள் கைபற்றி கிடக்கும் இவன்
வெண்கோலா, மந்திரக்கோலா?
திருடர்களும் சில முரடர்களும் – இவனைக்
கண்டதும் கப்சிப் ஆகிவிடுகிறார்களே!
இருப்புப் பாதையிலும் எங்களைக் காக்கிறான்;
பள்ளம் மேட்டிலும் மீட்கிறான்; - அப்படியெனில்
இவன் கடவுள் அல்ல காற்று.
காவிய நாயகர்களின் உயிர்
கிளியின் உள்ளே இருந்ததா தெரியாது;
எங்களின் உயிர்
ஊடுருவிக் கிடப்பது – இந்த
ஒருஜான் உருவத்தினுள் தான்!
--
(கவிஞர் சென்னை சர். தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர்).
தொடர்புக்கு: [email protected]
ஈன்றெடுத்த இளைத்த பிள்ளை.
எங்களுக்கும் அரசுக்குமான இடைவெளியை
அவ்வப் பொழுது அளக்க உதவும் அளவுகோல்.
இரத்த ஓட்டத்தால் அல்ல,
ரப்பர் நீட்டத்தால் உயிர் வாழும் உன்னத உருவம்.
கிளர்ந்து பாயும் வாகனங்களிடம் இருந்து
எங்களைக் காக்கும் கைப்பிள்ளை.
அவ்வப் பொழுது அவர்தம் சக்கரத்தில் சிக்குண்டு
எங்களைச் சேதாரம் இன்றி காக்கும் தியாக அவதாரம்.
தளந்து போகையில் அழுத்தமாய் தாங்கிப் பிடித்தாலும்
சுமந்து செல்லும் எங்களின் தனிவோருவன்.
அழகு பெண்கள் கைபிடிக்க வருகையில் மட்டும்
தன்னையே பிடிக்கச் செய்துவிடும் சண்டாளன்.
உறவுகள் உதறினாலும்
எங்களின் கைகளோடு கோர்த்துக் கிடக்கும்
கோப்பெரும் தேவன்.
வடிவங்களும் அளவுகளும் பல உண்டு, எனினும் அவனிடம்
மாறாது கிடப்பது காக்கும் தொண்டு.
வெவ்வேறு புரிதல் பலர் கொண்டிருப்பினும்,
எங்களின் அழிக்க இயலா அடையாளம் இந்த மடிபடும் ஆபத்பாந்தவன்!
எங்கள் கைபற்றி கிடக்கும் இவன்
வெண்கோலா, மந்திரக்கோலா?
திருடர்களும் சில முரடர்களும் – இவனைக்
கண்டதும் கப்சிப் ஆகிவிடுகிறார்களே!
இருப்புப் பாதையிலும் எங்களைக் காக்கிறான்;
பள்ளம் மேட்டிலும் மீட்கிறான்; - அப்படியெனில்
இவன் கடவுள் அல்ல காற்று.
காவிய நாயகர்களின் உயிர்
கிளியின் உள்ளே இருந்ததா தெரியாது;
எங்களின் உயிர்
ஊடுருவிக் கிடப்பது – இந்த
ஒருஜான் உருவத்தினுள் தான்!
--
(கவிஞர் சென்னை சர். தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர்).
தொடர்புக்கு: [email protected]