சமீப காலமாக, சமூகப் பிரக்ஞை கொண்ட மாற்று சினிமாவிற்கான முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. மக்களுக்கு நெருக்கமான அல்லது பேசப்படா வெளிகளை இன்றைய இயக்குனர்கள் துனிச்சலாக கைய்யில் எடுக்கவும் தயங்குவதில்லை. மக்களின் இரசனைப் போக்கிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதும் ஒரு நல்ல சமிக்ஞையாகவே தோன்றுகிறது. அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடந்துபோகிற இயல்பான தருணங்களைப் பிரதிபலிக்கும் கதையம்சத்தை இப்போது மக்கள் தீவிரமாக நேசிக்கத் துவங்கியிருப்பது, தமிழ் சினிமாவின் ஒரு நல்ல எதிர்காலத்தையே காட்டுகிறது. சக மனிதனின் வலியை, சராசரி மனிதனுக்குள் கடத்த இன்றைய இளம் இயக்குனர்கள் சிரத்தை எடுத்து வருவது, அவர்களின்மீதான மதிப்பை, தமிழ் சினிமாவின் மீதான அவர்களின் ஆழ்ந்த காதலை உணர்த்துவதாக அமைகிறது.
காலத்திற்குக் காலம் மாறி வருகிர இசைப் போக்கையும் நாம் இவ்விடத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், கதையின் காட்சிப் படுத்தலில் இசைதான் மைய்யச் சரடு. கதை ஓட்டத்தின் உயிராய் நின்று, உணர்வினுள் நுழைந்து, நமை உறைய வைப்பது இதுதான். பல விடையங்களை உணர்த்தும் குறியீடாக அமைகிறது திரைப்படத்தில் ஒலிக்கும் இசை. கதாமாந்தர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எப்படியெல்லாம் நடனமாடுகிறார்கள்? முத்தப் பரிமாற்றம் நிகழ்த்தப் படுகிறதா? கட்டிப் பிடிப்புகள் அறங்கேறுகின்றனவா? அன்பின் ஆழத்தை, மகிழ்வின் திளைப்பை, நேசிப்பின் உச்சத்தை, உறவின் நீட்ச்சியை வெளிப்படுத்தும் பாங்கினை எவ்வாறெலாம் உணர்த்தியிருப்பார்கள்? அவர்களின் முகபாவம் மற்றும் வெளிப்பாடு எப்படி இருக்கும்? இவைபோன்ற எண்ணற்ற புரிதல்களை எழுப்பி, கற்பனைக் கடலில் மிதந்து திளைக்கச் செய்யும் சக்தியாய்த் திகழ்வது திரையிசைப் பாடல்களே எனலாம். பாடல் வரிகள், அவற்றோடு இயைந்து வருகிர பின்னனி இசைக் கோர்ப்பு, இடை இசைகள், இசைக் கருவிகளின் ஒழுங்கமைவினூடான நயம் உள்ளிட்டவை கதைக் கருவின் மைய்ய இழையை மிகச் சரியாக அடையாளங் காண உதவியாக அமைந்துவிடுகின்றன.
இன்றைய சூழலில், ஒவ்வொரு நாளும் பல புதியவர்கள் இசை அமைக்க வந்து, காலப்போக்கில் காணாமலும் போய் விடுகின்றனர். சகல தரப்பினரையும் இசையால் வெல்வதற்கு, பெரிய முயர்ச்சிகள் இன்றைக்குத் தேவையில்லை என்பதே மறுக்க இயலா உண்மை. நீண்டநாள் திரையிசைத் துறையில் ஒருவர் தாக்குப் பிடித்து நிற்பது என்பது ஒரு மிகப் பெரிய சவாலாக மாறியிருக்கிறது. அதற்கான தேவையும் இன்றைக்கு எழவில்லை. நவீனத் தொழில்நுட்பக் கருவிகளின் துணைகொண்டு, பலரின் அல்லது, பல இசைக்கருவிகளின் கூட்டொலி இல்லாமல், இசைக் கோர்ப்பை நிகழ்த்தி விடுகின்றனர் இன்றைய இசையமைப்பாளர்கள். இசையமைத்தல் என்கிர விடையம், இன்றைக்கு ஒரு அறிவு சார்ந்ததாக உருமாறியிருக்கிறது. இந்நிலையில், கடந்த பத்து ஆண்டுகளுக்குள் நான் மதிக்கத்தக்க இயய்க்குனர்களில் ஒருவரான ராமின் பேரன்பு படத்தின் பாடல்களின் இசை குறித்த பார்வைகளை மட்டும் ஈண்டு பதிவு செய்ய விழைகிறேன்.
ஒரு பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுவது அப்பாடலின் மெட்டும், வரிகளும், இசைக் கோர்ப்பும்தான். ஒரு பாடலின் உலகளாவிய கடப்பிற்கும், பறந்துபட்ட மக்களின் பேர் இரசனைக்கும் இசையமைப்பாளர் எடுத்துக் கொள்ளும் பெரிய உழைப்பும், மெனக்கெடலுமே காரணமாக அமைய முடியும். ஒரு கலைஞனின் ஆன்மாவிலிருந்து பிறந்து வரும் இசைதான் அதை முழுமை அடயச்செய்யும். எம்.எஸ்.வி, மகாதேவன், இளையராஜா இவர்களுக்குப் பிறகு இவை குறைந்து விட்டது என்றுதான் கூறவேண்டும். ஏ.ஆர். ரஹ்மானின் தொடக்க காலப் பாடல்களுக்குப் பிந்தையவற்றில் இவற்றின் தாக்கம் அருகி விட்டதென்றே நம்பலாம். இது எனது பார்வையே. ஏனையோர்களின் இரசனைத் தரத்தை நான் கொச்சைப் படுத்துவதாக நினைத்தலை தவிர்க்க. ஆனாலும், இளைஞர்களின் ஏகோபித்த வரவேர்ப்பினை பெற்றவராக யுவன் ஷங்கர் ராஜாவைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
பாடல் மற்றும் வசன நுகர்வு என்பவை பார்வை மாற்றுத்திறனாளியான என்போன்றோருக்கு பிறப்பினூடாகவே இயல்பாக நிகழ்ந்து விட்டிருக்கத்தான் வேண்டும். எங்களது ஆழ்மனம், விரிவானதும், நுட்பமானதுமான பல்வகை அடுக்குகளாக கலைந்து கிடப்பது. தேடலில் கரைவது; உள்நுழைந்து ஊசலாடுவது; வாழ்வின் அற்புத தருணங்களுக்காய் ஏங்குவது; இணையற்ற கணவுகளில் கூத்தாடுவது; கொண்டாட்டங்களும், கொந்தளிப்புகளும் நிறைந்தது. அவற்றிற்குத் துனையாய்த் திகழ்பவை இசையும் பாடல்களும்தான். ஒரு திரைப்படம் வெளிவரும்முன், பாடல்களே வெளியிடப் படுகின்றன. அப்பாடல்கள் மற்றும் இசை அடிப்படையில், படம் குறித்த விவாதங்கள் தொடங்கிவிடுவது வழக்கமான நிகழ்வு. இந்நிலையில், ஜூலை மாதம் பதினைந்தாம் தேதியன்று வெளிவந்த இயக்குனர் ராமின் பேரன்பு படத்தின் பாடல்களின் இசை உணர்த்திட்ட சில புரிதல் புள்ளிகளை தொட்டுக் காட்ட விழைகிறேன்.
கொடூரமாகவும், அதே சமயம் பேரன்பாகவும் இருக்கும் இயற்கையின் இரண்டு முனைகளை பற்றி பேசும் படம்தான் 'பேரன்பு' என்கிறார் இயக்குநர் ராம்பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில். அப் பேரன்பின் ஆழம், பாடல்களினூடே சாத்தியமாகியிருக்கிறதா என்கிர ஆர்வமேலீட்டின் அடிப்படையில் மூழ்கி, என் உணர்வுகள் கலைக்கப் பட்ட நிலையில் தான் இப்பதிவை எழுதுகிறேன். மம்மூட்டி, அஞ்சலி, குழந்தை சாதனா, சமுத்திரக்கணி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். தங்கமீன்கள் போன்றதொரு தந்தை மகளின் பாசப் பினைப்பின் இன்னொரு பரிமாநமாய் மிளிர்கிறது இப்படம். இன்று வரைக்கும் மருந்து கண்டறியப்படாத மூளை முடக்கு வாதத்துடன் பிறக்கும் ஒரு குழந்தை, சமூகத்தில் எவ்வாறு தனது வாழ்வின் தருணங்களைக் கடக்கப் போராடுகிறது? அக்குழந்தையின் வாழ்வோடு ஒரு தந்தை தன்னை எப்படிப் பிணைத்துக் கொண்டு இச்சமூகத்தை எதிர்கொள்கிறார்? இக்கதைத் தளத்தை முன்வைத்து நமக்குள் பேரன்பைக் கடத்திவிட வேண்டும் என்கிர முயர்ச்சியின் வெளிப்பாடுதான் இத்திரைப்படம். யுவனின் பாடல்களின் இசைத் தேர்வு, பாடல்களினூடான இசை இடையீடு, இசைக் கருவிகளினூடான கடத்தப் படுகிர உணர்வுகள் முதலியன, இத்திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயர்ச்சிக்கின்றனவா? என்கிர வினாக்களும் இவ்விடத்தில் எழாமல் இல்லை.
பாடல் பட்டியல்
எண் - பாடல் - ஆசிரியர் - பாடியவர் - கால அளவு
1. தூரமாய் - வைரமுத்து - விஜை ஏசுதாஸ் - 4:08
2. அன்பே அன்பின் - சுமதி ராம் - கார்த்திக் - 3:09
3. வாண் தூரல் - வைரமுத்து - ஸ்ரீராம் பார்த்தசாரதி - 4:40
4. செத்துப் போச்சு மனசு - கருணாகரன் - மது ஐயர் - 4:29.
தவிர்க்க இயலா துயரமாகிப்போன கவிஞர் நா.முத்துக்குமாரின் மரணத்தின் வாயிலில், தமிழ்த் திரைக்குத் தனது மனைவியான சுமதி ராமை அடையாளங் காட்டியிருக்கிறார் இயக்குனர் ராம். முத்துக்குமாரின் வெற்றிடம் அப்படியே இருக்கும் எனக் கூறும் ராம், முதல் முறையாக தன்னிடம் பணியாற்றக் கூடிய மாற்றுத் திறனாளியான கருணாகரனை அறிமுகப் படுத்தியிருக்கிறார். யுவன் ராம் கூட்டணியில் வைரக்கல்லாய் அமர்ந்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து முதல் முறையாக. கவிஞர் முத்துக்குமார் இல்லாத, யுவன் ராம் கூட்டணியில் வெளி வரும் முதல் திரைப்படம்.
அன்பு அளவிடமுடியாதது; எல்லையற்றது; ஆர்ப்பரிப்பற்றது; அழிவில்லாதது; பேரூற்றாய்ப் பொங்கி வருகையில் கொண்டாடப் படுவது. அப் பேரன்பின் ஆழத்தில் மௌனமே மிஞ்சி நிற்கிறது. அந்த அமைதிக்குள் நாம் தொலைகிறோம்; நமை இழக்கிறோம்; ஆறுதலடைகிறோம். அதன் நிரந்தரத்திற்காய் நீள்கிறது நமது தேடல். இந்த நெடிய பயணத்தில் நமைக் கரம்பிடித்து அழைத்துச் செல்கிறது பேரன்பின் பாடல்களும் இசையும். கண்டிப்பாய் இதற்கு ஒரு சபாஷ் போடலாம் யுவனுக்கு. கவித்துவமான வரிகளுக்கு கவிதையாய் இசையமைத்திருக்கிறார் யுவன். அசமத்துவத்தை உருவாக்கிவிடுகிர இயற்கையின் க்ரூரத்தை கடக்க, நிசப்தம் ஒன்றே ஆயுதமாகிறது. மிதமிஞ்சிய பேரன்பின் வெளிப்பாடே இந்நிசப்தம். எந்நிலையிலும், அனைவருக்குமான பொதுமைகள் இருக்கமுடியாது. அனைவருக்குமான தனித்த நியாயப்பாடுகள் வெவ்வேறு மாதிரியானவையே. அப்படித்தான் உணர்வுகளும். இந்த உலகில் ஒரு மாற்றுத் திறனாளியின் உணர்வும், ஒடுக்கப்பட்டவனின் இடமும் நிராகரிக்க இயலாதது. இயற்கையின் இரக்கமற்ற நிழல்களாகிப் போனவர்களின் மெல்லிய குரலாய் ஒலிக்கின்றன பேரன்பு படத்தின் பாடல்கள்.
பேஸ் கிட்டார் மற்றும் ஒரு மெல்லிய நரம்பிசை ஒலியின் விசும்பிடலில் துவங்குகிறது ‘தூரமாய்’ எனும் முதல் பாடல். சிறு ஆலாபனையோடு யுவன் மெட்டைத் தொடங்க, இணையும் விஜை ஏசுதாஸ், பாடலை தனதாக்கிக் கொள்கிறார். வைரமுத்துவின் ஆழமான தன்நம்பிக்கை வரிகளில் மற்றொரு பரிநாமத்தை கே.ஜே. ஏசுதாசின் மகனான விஜை ஏசுதாசின் குரல் வழி தரிசிக்க முடிகிறது. அமைதியாய்த் துவங்கும் பாடல், ஆசுவாசமாய் மாறி இதயத்தை வருடுகிறது.
‘திசைகளை நீ மறந்துவிடு; பயணங்களைத் தொடர்ந்துவிடு’ என உச்ச ஸ்தாயில் தொடரும் அனுபல்லவி, வேகமாய் கை அசைத்து முன்னேறு, வானம் தூரமில்லை என்பது மாதிரியான உற்சாக மேலிடலைத் தருகிறது. முதல் சரணத்திற்கு முன் ஒலிக்கும் கீபோர்டின் இடை இசை, சொல்லிக் கொள்வது போல இல்லை. சரணம், ‘புத்தம் புதுப் பூமி வேண்டும்’ என்கிர ரஹ்மானின் மெட்டை நினைவு படுத்துகிறது. இரண்டாம் சரணத்திற்கு முன் ஒலிக்கும் சிந்தசைசர் கிட்டாரின் இழுவை, பல தேவாவின் பாடல்களில் ஏற்கனவே கேட்டதுதான். பல்லவி தொடரப் படாமல், இரண்டாம் சரணத்தோடு நிறைவுறுகிறது பாடல். அத்தருணம், நிறைவுறா இதையத்தின் வலியாய் நீள்கிறது. குறைந்த கருவிகள்; பாடல் முழுமையும் பேஸ் கிட்டாரின் ரிதம். இதுதவிர சொல்லிக் கொள்வதுபோன்று பெரிய உழைப்பைப் பார்க்க இயலவில்லை. பழைய மெட்டில் சிலபல நகாசு வேலைகளைச் செய்து புதிதாய்த் தர முயன்று தோற்றிருக்கிறார் யுவன். ஆனாலும், ஒரு மெல்லிய பணிக் காற்றின் தடவலை உணர முடிகிறது. விஜை ஏசுதாசின் குரல் பேரன்பாய் நமைத் தழுவுகிறது; பாடலைத் தூக்கி நிறுத்துகிறது.
“பெருந்துன்பம் பழகிப்போனாலே
சிறுதுன்பம் ஏதும் நேராது!
தண்ணீரில் வாழும் மீனுக்கு
ஏது குளிர்காலமே?”
திரைப்படத்தின் காட்சிப் படுத்தலில் இவை போன்ற பாடல் வரிகள் எப்படி வந்துள்ளன என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மின்சார கிட்டாரின் ஒரு நரம்பினூடான இசை, குதிரைக் குழம்பொலி, பிறகு அதனோடு ஒரு பாட்டிலின் அல்லது ஒரு டப்பாவின் பல் சுருதி, கீபோர்டின் நடுத்தர மணி, ஹார்மோனியத்தின் வழி அணைக்கும் அழகிய மெட்டு, இப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக இணைந்து தொடங்குகிறது ‘அன்பே அன்பின்’ என்கிர அடுத்த பாடல். தந்தை, மகளோடு கொஞ்சி விளையாடும் பல தரமான இயற்கை சார் காட்சிப் படுத்தல்கள் கண்டிப்பாக இப்பாடலில் இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐய்யம் இல்லை. ஒரு தந்தையின் இணையற்ற அன்பின் ஆழத்தைப் பாடல் முழுமையும் பார்க்க முடிகிறது.
‘கடவுளின் கைகளைக் கண்டது உன்னிடம் மட்டும்தான்
என்னுயிர் பூமியில் பிறந்தது பிடித்தது இந்நொடி மட்டும்தான்’”
பெண் கவிஞரான சுமதி ராமின் இவ் வரிகள், தந்தைமையின் உயிர்ப்பை, அடர்த்தியை நுட்பமாகப் பதிவு செய்கிறது.
‘குருவி நீந்தும் நதியே,
மீன்கள் பறக்கும் வனமே,
இடியும் மின்னலும் முறிந்தது இன்று,
தனியாய் மரம் ஒன்று வென்றது நின்று’
சரணங்களில் வரும் இவ் வரிகள், தமிழ் திரைத் துறையில் இவரின் இடத்தைக் கண்டிப்பாய் உறுதிப் படுத்தும். கார்த்திக்கின் வசீகரக் குரல், இவ்வளவு நாட்களாக ஏன் மௌனித்திருந்தது என்கிற வினா, இப்பாடலைக் கேட்டபிறகு எழவே செய்கிறது. தங்க மீன்கள் திரைப் படத்தில் வரும், ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ எனும் பாடலுக்கு இனையாக இப்பாடலைத் தந்துவிட வேண்டும் என்பதற்கான முயற்சிகள், யுவனால் மேற்கொள்ளப் பட்டுள்ளமை தெரிகிறது. யுவனின் எளிய மெட்டு, அலட்டல் இல்லாத, ஆரவார மற்ற இடை இசைச் செருகல், இப்பாடலின் பலம். இரண்டு சரணங்களுக்கு இடையில் வரும் புல்லாங்குழலுடன் கூடிய மாறுபட்ட இசைக் கோர்ப்புகள் மனதைப் பிசைகின்றன. இரண்டாம் சரணத்தின் மாற்று மெட்டு, இன்னும் கூர்மையடைந்து பாடலின் வரிகளை மெருகேற்றுகிறது. சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, எல்லோராலும் இந்த ஆண்டின் பரவலான கவனம் பெற்று, கொண்டாடக் கூடிய பாடலாக இது அமைந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
அடுத்ததாக, மின்சார பேஸ் கிட்டாரின் வேகமற்ற ரிதமோடு, கிபோர்டும் இணைந்து கொள்ள, ‘வான் தூரல்’ எனும் கவிப் பேரரசு வைரமுத்து புனைந்த பாடல், ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரல் வழி மனதை ஈரமாக்கத் துவங்குகிறது.
“விதையைப் புரட்டிப் போட்டாலும், விண்ணைப் பார்த்துத் தான் முளைக்கும் பேரன்பினால் வாழ்க்கையின் கோணல்கள் நேர்படும்’ எனத் தொடரும் அனுபல்லவி, பாடலுக்குள் நமைச் சரணாகதி அடையச் செய்து விடுகிறது. பேரன்பின் கதை சொல்லும் இப்பாடலின் மெட்டுக்காய் யுவனைப் பாராட்டாமல் இருக்க முடிய வில்லை. மறுமுறை ஒலிக்கும் பல்லவியோடு இணைகிறது மெல்லிய தபேலாவின் முனகல். ஸ்ரீராம் பார்த்தசாரதியின் கணீர் குரலில் இழையோடும் ஆலாபனையினூடே நமைப் பிழிகிறது புல்லாங்குழலின் அற்புத வருடல். ட்ரம்ஸ் ரிதம் இரண்டு சரணங்களை நகர்த்த, வரிகளோ இதயத்தை கரைக்கிறது. இரக்கமற்ற இயற்கையின் முன் துவளாமல், எதிர்கொண்டு தேற்றும் ஒரு தன்நிகரற்ற தந்தையின் பேரன்பு மேலிடலின் வெளிப்பாடாய் அமைகிறது இப்பாடல்.
‘ஊனப்பட்ட ஜீவன் ஏதும்
பட்டினியால் சாவதில்லை!
எங்கோ செல்லும் எறும்பு கூட இரை கொடுக்கும்!
மேகம் மட்டும் வானமில்லை
தேகம் மட்டும் வாழ்க்கை இல்லை
புலன்களைக் கடந்து கூட இன்பம் இருக்கும்!’
கவிப் பேரரசின் அடர்த்தி மிக்க இவ் வரிகள், இப்படத்திற்கே ஆணி வேர். இயக்குனர், கவிஞர், மற்றும் இசையமைப்பாளர் இவர்களின் ஒட்டு மொத்த பேராளுமைகளை இப்பாடலின் காட்சிப் படுத்தலில் கண்டிப்பாய்க் காண ஆவல் மேலிடுகிறது.
பரவசப் படுத்தும் கிட்டாரின் சீண்டலோடு துவங்கும் அடுத்த பாடல், மறுகனமே தடம் மாறி, வீணையின் இழைவில், மது ஐய்யரின் குழைவில் நமை அழவைக்கத் துவங்கி விடுகிறது. என்னால் அதிக முறை கேட்கப் பட்டு இன்னமும் கடந்து வாரா உணர்வுக் கலைப்பில் உறைய வைத்தது இந்த ‘செத்துப்போச்சு மனசு’. கவிஞர் கருணாகரன் பாடலை எழுதியுள்ளார். ஒரு மாற்றுத் திறனாளியின் வலி சுமந்து வருகிறது இப்பாடல். உண்மையான கடக்க இயலா பெருந் துயரின் பயணம், எவ்வளவு கொடிது என்பதை நன்கு உணர்ந்த ஒருவரால்தான் எழுத இயலும். இதை அறிந்ததால் தானோ என்னவோ, ராம் இவரைப் பயன் படுத்தியிருக்க வேண்டும். இரக்க மற்ற இயற்கையால் சிதைக்கப் பட்ட ஆளுமை மிக்க கவிஞர் தமிழ் திரைக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. உடலளவில் மட்டுமே குறை கண்ட உயிரின் மனசு சொல்லும் சோகமே இப்பாடல். கசலின் சாயல் பாடல் முழுமையும் ஆக்கிரமித்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே ரஹ்மானை ஞாபகப் படுத்தக் கூடிய மெட்டு. மது ஐய்யரின் இனிமை ததும்பும் குரல். பாடல் நகர நகர எனை அறியாமல் கண்ணீர் கொட்டத் துவங்கி விடுகிறது. இனம் புரியாத ஒரு ஏக்கம், ஒரு இயலாமையின் வலி, மனதிற்கு நெருக்கமாகி, உணர்வின் உந்தலாய் உருவானதே அந்தக் கண்ணீர்ப் பீரிடல் என்பதை பிறகே உணர முடிந்தது. வீணை, சித்தார், ஷெனாய் இவற்றின் பின்னனியினூடே மிதந்து வரும் மெட்டு, இயற்கை கிழித்துப் போட்ட ஒரு ஆண்மாவின் அழுகுரலாய் ஒலிக்க,
“இருள் என்ன ஆச்சு,
நெலா எங்க போச்சு,
யார நானும் கேப்பேன்,
அட விதியே சொல்லிடு,
மரமான சேடிய தான எப்படி சொமப்பது,
அட மின்னல் ஒறங்கக் கூட இந்த மண்ணில் எடமில்ல,
மரக் கிளையில் தங்கப் போனாலும் அடப் பறவையும் அங்க விடவில்ல,
செத்துப் போச்சு மனசு’
எனத் தொடரும் வரிகள், மனதைக் கடுமையாகவே உலுக்குகிறது. சரணத்திற்கு முன் வரும் தனித்த ஷெனாய்யின் விம்மலும் பின்னனி இசையும், திக்கற்று பாராமுக மாக்கப்பட்ட நேசிப்பிற்கு ஏங்கும் ஒரு ஆண்மாவின் கதறலாய் நீள்கிறது.
‘முடியாது என்றானபோதும் நான் முயன்று தான் தோற்கிறேன்
விடியாது என்றானபோதும் நான் கிழக்கையே பார்க்கிறேன்
இயற்கையின் தீர்ப்பில் நானே குற்றவாளியா
அதைத் திருத்தி எழுதத்தானே யாருமில்லையா’
வெறுமனே கிட்டாரின் துனை கொண்டு கடந்து செல்லும் சரணத்தின் இவ்வரிகள், எனக்குள் நிசப்தத்தையே உருவாக்கி விட்டது. ‘என் மீதினில் மோதும் காத்து’ என நீண்டு ஒலிக்கும் மது ஐய்யரின் அக்குரல், காற்று மோதுவது போன்றதொரு பின்னனி இசை, யுவனின் ஆழ்ந்த திரைப் புரிதலையே காட்டுகிறது. நான் வெகுவாகக் கரைந்த இடங்களில் இதுவும் ஒன்று. ‘மெல்லத் துடிக்கும் மனசு’ என்று இசையற்று நிறைவுறும் இப்பாடல், கண்டிப்பாய் எல்லோருக்குள்ளும் ஒரு அதிர்வை ஏற்படுத்தவே செய்யும். பேரன்பின் வெற்றி, கருணாகரனை ஒரு மிகப் பெரிய பாடலாசிரியராக மிளிறச் செய்யும் என்பதே நிதர்சனம்.
மொத்தத்தில், பேரன்பு ஒரு துன்பியல் சினிமா. ஒரு ஆன்மாவின் இரங்கற்பா. உயிரில் கலந்துரசும் மெட்டு, கனமான, வலியுள்ள வரிகள், இவற்றின் தொகுப்பே இப் பேரன்பு. இந்தப் படத்தில் பணியாற்றிய ராம், யுவன், வைரமுத்து, மம்மூட்டி என அனைவருமே தேசிய விருது பெறத் தகுதியானவர்கள் என்பதற்குப் படத்தின் டீசரும் பாடல்களுமே சான்றாக அமைகின்றன.
--
(கட்டுரையாளர் புதுவை தாகூர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ் துறைத் துணைப் பேராசிரியர்).
தொடர்புக்கு: [email protected]
காலத்திற்குக் காலம் மாறி வருகிர இசைப் போக்கையும் நாம் இவ்விடத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், கதையின் காட்சிப் படுத்தலில் இசைதான் மைய்யச் சரடு. கதை ஓட்டத்தின் உயிராய் நின்று, உணர்வினுள் நுழைந்து, நமை உறைய வைப்பது இதுதான். பல விடையங்களை உணர்த்தும் குறியீடாக அமைகிறது திரைப்படத்தில் ஒலிக்கும் இசை. கதாமாந்தர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எப்படியெல்லாம் நடனமாடுகிறார்கள்? முத்தப் பரிமாற்றம் நிகழ்த்தப் படுகிறதா? கட்டிப் பிடிப்புகள் அறங்கேறுகின்றனவா? அன்பின் ஆழத்தை, மகிழ்வின் திளைப்பை, நேசிப்பின் உச்சத்தை, உறவின் நீட்ச்சியை வெளிப்படுத்தும் பாங்கினை எவ்வாறெலாம் உணர்த்தியிருப்பார்கள்? அவர்களின் முகபாவம் மற்றும் வெளிப்பாடு எப்படி இருக்கும்? இவைபோன்ற எண்ணற்ற புரிதல்களை எழுப்பி, கற்பனைக் கடலில் மிதந்து திளைக்கச் செய்யும் சக்தியாய்த் திகழ்வது திரையிசைப் பாடல்களே எனலாம். பாடல் வரிகள், அவற்றோடு இயைந்து வருகிர பின்னனி இசைக் கோர்ப்பு, இடை இசைகள், இசைக் கருவிகளின் ஒழுங்கமைவினூடான நயம் உள்ளிட்டவை கதைக் கருவின் மைய்ய இழையை மிகச் சரியாக அடையாளங் காண உதவியாக அமைந்துவிடுகின்றன.
இன்றைய சூழலில், ஒவ்வொரு நாளும் பல புதியவர்கள் இசை அமைக்க வந்து, காலப்போக்கில் காணாமலும் போய் விடுகின்றனர். சகல தரப்பினரையும் இசையால் வெல்வதற்கு, பெரிய முயர்ச்சிகள் இன்றைக்குத் தேவையில்லை என்பதே மறுக்க இயலா உண்மை. நீண்டநாள் திரையிசைத் துறையில் ஒருவர் தாக்குப் பிடித்து நிற்பது என்பது ஒரு மிகப் பெரிய சவாலாக மாறியிருக்கிறது. அதற்கான தேவையும் இன்றைக்கு எழவில்லை. நவீனத் தொழில்நுட்பக் கருவிகளின் துணைகொண்டு, பலரின் அல்லது, பல இசைக்கருவிகளின் கூட்டொலி இல்லாமல், இசைக் கோர்ப்பை நிகழ்த்தி விடுகின்றனர் இன்றைய இசையமைப்பாளர்கள். இசையமைத்தல் என்கிர விடையம், இன்றைக்கு ஒரு அறிவு சார்ந்ததாக உருமாறியிருக்கிறது. இந்நிலையில், கடந்த பத்து ஆண்டுகளுக்குள் நான் மதிக்கத்தக்க இயய்க்குனர்களில் ஒருவரான ராமின் பேரன்பு படத்தின் பாடல்களின் இசை குறித்த பார்வைகளை மட்டும் ஈண்டு பதிவு செய்ய விழைகிறேன்.
ஒரு பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுவது அப்பாடலின் மெட்டும், வரிகளும், இசைக் கோர்ப்பும்தான். ஒரு பாடலின் உலகளாவிய கடப்பிற்கும், பறந்துபட்ட மக்களின் பேர் இரசனைக்கும் இசையமைப்பாளர் எடுத்துக் கொள்ளும் பெரிய உழைப்பும், மெனக்கெடலுமே காரணமாக அமைய முடியும். ஒரு கலைஞனின் ஆன்மாவிலிருந்து பிறந்து வரும் இசைதான் அதை முழுமை அடயச்செய்யும். எம்.எஸ்.வி, மகாதேவன், இளையராஜா இவர்களுக்குப் பிறகு இவை குறைந்து விட்டது என்றுதான் கூறவேண்டும். ஏ.ஆர். ரஹ்மானின் தொடக்க காலப் பாடல்களுக்குப் பிந்தையவற்றில் இவற்றின் தாக்கம் அருகி விட்டதென்றே நம்பலாம். இது எனது பார்வையே. ஏனையோர்களின் இரசனைத் தரத்தை நான் கொச்சைப் படுத்துவதாக நினைத்தலை தவிர்க்க. ஆனாலும், இளைஞர்களின் ஏகோபித்த வரவேர்ப்பினை பெற்றவராக யுவன் ஷங்கர் ராஜாவைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
பாடல் மற்றும் வசன நுகர்வு என்பவை பார்வை மாற்றுத்திறனாளியான என்போன்றோருக்கு பிறப்பினூடாகவே இயல்பாக நிகழ்ந்து விட்டிருக்கத்தான் வேண்டும். எங்களது ஆழ்மனம், விரிவானதும், நுட்பமானதுமான பல்வகை அடுக்குகளாக கலைந்து கிடப்பது. தேடலில் கரைவது; உள்நுழைந்து ஊசலாடுவது; வாழ்வின் அற்புத தருணங்களுக்காய் ஏங்குவது; இணையற்ற கணவுகளில் கூத்தாடுவது; கொண்டாட்டங்களும், கொந்தளிப்புகளும் நிறைந்தது. அவற்றிற்குத் துனையாய்த் திகழ்பவை இசையும் பாடல்களும்தான். ஒரு திரைப்படம் வெளிவரும்முன், பாடல்களே வெளியிடப் படுகின்றன. அப்பாடல்கள் மற்றும் இசை அடிப்படையில், படம் குறித்த விவாதங்கள் தொடங்கிவிடுவது வழக்கமான நிகழ்வு. இந்நிலையில், ஜூலை மாதம் பதினைந்தாம் தேதியன்று வெளிவந்த இயக்குனர் ராமின் பேரன்பு படத்தின் பாடல்களின் இசை உணர்த்திட்ட சில புரிதல் புள்ளிகளை தொட்டுக் காட்ட விழைகிறேன்.
கொடூரமாகவும், அதே சமயம் பேரன்பாகவும் இருக்கும் இயற்கையின் இரண்டு முனைகளை பற்றி பேசும் படம்தான் 'பேரன்பு' என்கிறார் இயக்குநர் ராம்பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில். அப் பேரன்பின் ஆழம், பாடல்களினூடே சாத்தியமாகியிருக்கிறதா என்கிர ஆர்வமேலீட்டின் அடிப்படையில் மூழ்கி, என் உணர்வுகள் கலைக்கப் பட்ட நிலையில் தான் இப்பதிவை எழுதுகிறேன். மம்மூட்டி, அஞ்சலி, குழந்தை சாதனா, சமுத்திரக்கணி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். தங்கமீன்கள் போன்றதொரு தந்தை மகளின் பாசப் பினைப்பின் இன்னொரு பரிமாநமாய் மிளிர்கிறது இப்படம். இன்று வரைக்கும் மருந்து கண்டறியப்படாத மூளை முடக்கு வாதத்துடன் பிறக்கும் ஒரு குழந்தை, சமூகத்தில் எவ்வாறு தனது வாழ்வின் தருணங்களைக் கடக்கப் போராடுகிறது? அக்குழந்தையின் வாழ்வோடு ஒரு தந்தை தன்னை எப்படிப் பிணைத்துக் கொண்டு இச்சமூகத்தை எதிர்கொள்கிறார்? இக்கதைத் தளத்தை முன்வைத்து நமக்குள் பேரன்பைக் கடத்திவிட வேண்டும் என்கிர முயர்ச்சியின் வெளிப்பாடுதான் இத்திரைப்படம். யுவனின் பாடல்களின் இசைத் தேர்வு, பாடல்களினூடான இசை இடையீடு, இசைக் கருவிகளினூடான கடத்தப் படுகிர உணர்வுகள் முதலியன, இத்திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயர்ச்சிக்கின்றனவா? என்கிர வினாக்களும் இவ்விடத்தில் எழாமல் இல்லை.
பாடல் பட்டியல்
எண் - பாடல் - ஆசிரியர் - பாடியவர் - கால அளவு
1. தூரமாய் - வைரமுத்து - விஜை ஏசுதாஸ் - 4:08
2. அன்பே அன்பின் - சுமதி ராம் - கார்த்திக் - 3:09
3. வாண் தூரல் - வைரமுத்து - ஸ்ரீராம் பார்த்தசாரதி - 4:40
4. செத்துப் போச்சு மனசு - கருணாகரன் - மது ஐயர் - 4:29.
தவிர்க்க இயலா துயரமாகிப்போன கவிஞர் நா.முத்துக்குமாரின் மரணத்தின் வாயிலில், தமிழ்த் திரைக்குத் தனது மனைவியான சுமதி ராமை அடையாளங் காட்டியிருக்கிறார் இயக்குனர் ராம். முத்துக்குமாரின் வெற்றிடம் அப்படியே இருக்கும் எனக் கூறும் ராம், முதல் முறையாக தன்னிடம் பணியாற்றக் கூடிய மாற்றுத் திறனாளியான கருணாகரனை அறிமுகப் படுத்தியிருக்கிறார். யுவன் ராம் கூட்டணியில் வைரக்கல்லாய் அமர்ந்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து முதல் முறையாக. கவிஞர் முத்துக்குமார் இல்லாத, யுவன் ராம் கூட்டணியில் வெளி வரும் முதல் திரைப்படம்.
அன்பு அளவிடமுடியாதது; எல்லையற்றது; ஆர்ப்பரிப்பற்றது; அழிவில்லாதது; பேரூற்றாய்ப் பொங்கி வருகையில் கொண்டாடப் படுவது. அப் பேரன்பின் ஆழத்தில் மௌனமே மிஞ்சி நிற்கிறது. அந்த அமைதிக்குள் நாம் தொலைகிறோம்; நமை இழக்கிறோம்; ஆறுதலடைகிறோம். அதன் நிரந்தரத்திற்காய் நீள்கிறது நமது தேடல். இந்த நெடிய பயணத்தில் நமைக் கரம்பிடித்து அழைத்துச் செல்கிறது பேரன்பின் பாடல்களும் இசையும். கண்டிப்பாய் இதற்கு ஒரு சபாஷ் போடலாம் யுவனுக்கு. கவித்துவமான வரிகளுக்கு கவிதையாய் இசையமைத்திருக்கிறார் யுவன். அசமத்துவத்தை உருவாக்கிவிடுகிர இயற்கையின் க்ரூரத்தை கடக்க, நிசப்தம் ஒன்றே ஆயுதமாகிறது. மிதமிஞ்சிய பேரன்பின் வெளிப்பாடே இந்நிசப்தம். எந்நிலையிலும், அனைவருக்குமான பொதுமைகள் இருக்கமுடியாது. அனைவருக்குமான தனித்த நியாயப்பாடுகள் வெவ்வேறு மாதிரியானவையே. அப்படித்தான் உணர்வுகளும். இந்த உலகில் ஒரு மாற்றுத் திறனாளியின் உணர்வும், ஒடுக்கப்பட்டவனின் இடமும் நிராகரிக்க இயலாதது. இயற்கையின் இரக்கமற்ற நிழல்களாகிப் போனவர்களின் மெல்லிய குரலாய் ஒலிக்கின்றன பேரன்பு படத்தின் பாடல்கள்.
பேஸ் கிட்டார் மற்றும் ஒரு மெல்லிய நரம்பிசை ஒலியின் விசும்பிடலில் துவங்குகிறது ‘தூரமாய்’ எனும் முதல் பாடல். சிறு ஆலாபனையோடு யுவன் மெட்டைத் தொடங்க, இணையும் விஜை ஏசுதாஸ், பாடலை தனதாக்கிக் கொள்கிறார். வைரமுத்துவின் ஆழமான தன்நம்பிக்கை வரிகளில் மற்றொரு பரிநாமத்தை கே.ஜே. ஏசுதாசின் மகனான விஜை ஏசுதாசின் குரல் வழி தரிசிக்க முடிகிறது. அமைதியாய்த் துவங்கும் பாடல், ஆசுவாசமாய் மாறி இதயத்தை வருடுகிறது.
‘திசைகளை நீ மறந்துவிடு; பயணங்களைத் தொடர்ந்துவிடு’ என உச்ச ஸ்தாயில் தொடரும் அனுபல்லவி, வேகமாய் கை அசைத்து முன்னேறு, வானம் தூரமில்லை என்பது மாதிரியான உற்சாக மேலிடலைத் தருகிறது. முதல் சரணத்திற்கு முன் ஒலிக்கும் கீபோர்டின் இடை இசை, சொல்லிக் கொள்வது போல இல்லை. சரணம், ‘புத்தம் புதுப் பூமி வேண்டும்’ என்கிர ரஹ்மானின் மெட்டை நினைவு படுத்துகிறது. இரண்டாம் சரணத்திற்கு முன் ஒலிக்கும் சிந்தசைசர் கிட்டாரின் இழுவை, பல தேவாவின் பாடல்களில் ஏற்கனவே கேட்டதுதான். பல்லவி தொடரப் படாமல், இரண்டாம் சரணத்தோடு நிறைவுறுகிறது பாடல். அத்தருணம், நிறைவுறா இதையத்தின் வலியாய் நீள்கிறது. குறைந்த கருவிகள்; பாடல் முழுமையும் பேஸ் கிட்டாரின் ரிதம். இதுதவிர சொல்லிக் கொள்வதுபோன்று பெரிய உழைப்பைப் பார்க்க இயலவில்லை. பழைய மெட்டில் சிலபல நகாசு வேலைகளைச் செய்து புதிதாய்த் தர முயன்று தோற்றிருக்கிறார் யுவன். ஆனாலும், ஒரு மெல்லிய பணிக் காற்றின் தடவலை உணர முடிகிறது. விஜை ஏசுதாசின் குரல் பேரன்பாய் நமைத் தழுவுகிறது; பாடலைத் தூக்கி நிறுத்துகிறது.
“பெருந்துன்பம் பழகிப்போனாலே
சிறுதுன்பம் ஏதும் நேராது!
தண்ணீரில் வாழும் மீனுக்கு
ஏது குளிர்காலமே?”
திரைப்படத்தின் காட்சிப் படுத்தலில் இவை போன்ற பாடல் வரிகள் எப்படி வந்துள்ளன என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மின்சார கிட்டாரின் ஒரு நரம்பினூடான இசை, குதிரைக் குழம்பொலி, பிறகு அதனோடு ஒரு பாட்டிலின் அல்லது ஒரு டப்பாவின் பல் சுருதி, கீபோர்டின் நடுத்தர மணி, ஹார்மோனியத்தின் வழி அணைக்கும் அழகிய மெட்டு, இப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக இணைந்து தொடங்குகிறது ‘அன்பே அன்பின்’ என்கிர அடுத்த பாடல். தந்தை, மகளோடு கொஞ்சி விளையாடும் பல தரமான இயற்கை சார் காட்சிப் படுத்தல்கள் கண்டிப்பாக இப்பாடலில் இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐய்யம் இல்லை. ஒரு தந்தையின் இணையற்ற அன்பின் ஆழத்தைப் பாடல் முழுமையும் பார்க்க முடிகிறது.
‘கடவுளின் கைகளைக் கண்டது உன்னிடம் மட்டும்தான்
என்னுயிர் பூமியில் பிறந்தது பிடித்தது இந்நொடி மட்டும்தான்’”
பெண் கவிஞரான சுமதி ராமின் இவ் வரிகள், தந்தைமையின் உயிர்ப்பை, அடர்த்தியை நுட்பமாகப் பதிவு செய்கிறது.
‘குருவி நீந்தும் நதியே,
மீன்கள் பறக்கும் வனமே,
இடியும் மின்னலும் முறிந்தது இன்று,
தனியாய் மரம் ஒன்று வென்றது நின்று’
சரணங்களில் வரும் இவ் வரிகள், தமிழ் திரைத் துறையில் இவரின் இடத்தைக் கண்டிப்பாய் உறுதிப் படுத்தும். கார்த்திக்கின் வசீகரக் குரல், இவ்வளவு நாட்களாக ஏன் மௌனித்திருந்தது என்கிற வினா, இப்பாடலைக் கேட்டபிறகு எழவே செய்கிறது. தங்க மீன்கள் திரைப் படத்தில் வரும், ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ எனும் பாடலுக்கு இனையாக இப்பாடலைத் தந்துவிட வேண்டும் என்பதற்கான முயற்சிகள், யுவனால் மேற்கொள்ளப் பட்டுள்ளமை தெரிகிறது. யுவனின் எளிய மெட்டு, அலட்டல் இல்லாத, ஆரவார மற்ற இடை இசைச் செருகல், இப்பாடலின் பலம். இரண்டு சரணங்களுக்கு இடையில் வரும் புல்லாங்குழலுடன் கூடிய மாறுபட்ட இசைக் கோர்ப்புகள் மனதைப் பிசைகின்றன. இரண்டாம் சரணத்தின் மாற்று மெட்டு, இன்னும் கூர்மையடைந்து பாடலின் வரிகளை மெருகேற்றுகிறது. சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, எல்லோராலும் இந்த ஆண்டின் பரவலான கவனம் பெற்று, கொண்டாடக் கூடிய பாடலாக இது அமைந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
அடுத்ததாக, மின்சார பேஸ் கிட்டாரின் வேகமற்ற ரிதமோடு, கிபோர்டும் இணைந்து கொள்ள, ‘வான் தூரல்’ எனும் கவிப் பேரரசு வைரமுத்து புனைந்த பாடல், ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரல் வழி மனதை ஈரமாக்கத் துவங்குகிறது.
“விதையைப் புரட்டிப் போட்டாலும், விண்ணைப் பார்த்துத் தான் முளைக்கும் பேரன்பினால் வாழ்க்கையின் கோணல்கள் நேர்படும்’ எனத் தொடரும் அனுபல்லவி, பாடலுக்குள் நமைச் சரணாகதி அடையச் செய்து விடுகிறது. பேரன்பின் கதை சொல்லும் இப்பாடலின் மெட்டுக்காய் யுவனைப் பாராட்டாமல் இருக்க முடிய வில்லை. மறுமுறை ஒலிக்கும் பல்லவியோடு இணைகிறது மெல்லிய தபேலாவின் முனகல். ஸ்ரீராம் பார்த்தசாரதியின் கணீர் குரலில் இழையோடும் ஆலாபனையினூடே நமைப் பிழிகிறது புல்லாங்குழலின் அற்புத வருடல். ட்ரம்ஸ் ரிதம் இரண்டு சரணங்களை நகர்த்த, வரிகளோ இதயத்தை கரைக்கிறது. இரக்கமற்ற இயற்கையின் முன் துவளாமல், எதிர்கொண்டு தேற்றும் ஒரு தன்நிகரற்ற தந்தையின் பேரன்பு மேலிடலின் வெளிப்பாடாய் அமைகிறது இப்பாடல்.
‘ஊனப்பட்ட ஜீவன் ஏதும்
பட்டினியால் சாவதில்லை!
எங்கோ செல்லும் எறும்பு கூட இரை கொடுக்கும்!
மேகம் மட்டும் வானமில்லை
தேகம் மட்டும் வாழ்க்கை இல்லை
புலன்களைக் கடந்து கூட இன்பம் இருக்கும்!’
கவிப் பேரரசின் அடர்த்தி மிக்க இவ் வரிகள், இப்படத்திற்கே ஆணி வேர். இயக்குனர், கவிஞர், மற்றும் இசையமைப்பாளர் இவர்களின் ஒட்டு மொத்த பேராளுமைகளை இப்பாடலின் காட்சிப் படுத்தலில் கண்டிப்பாய்க் காண ஆவல் மேலிடுகிறது.
பரவசப் படுத்தும் கிட்டாரின் சீண்டலோடு துவங்கும் அடுத்த பாடல், மறுகனமே தடம் மாறி, வீணையின் இழைவில், மது ஐய்யரின் குழைவில் நமை அழவைக்கத் துவங்கி விடுகிறது. என்னால் அதிக முறை கேட்கப் பட்டு இன்னமும் கடந்து வாரா உணர்வுக் கலைப்பில் உறைய வைத்தது இந்த ‘செத்துப்போச்சு மனசு’. கவிஞர் கருணாகரன் பாடலை எழுதியுள்ளார். ஒரு மாற்றுத் திறனாளியின் வலி சுமந்து வருகிறது இப்பாடல். உண்மையான கடக்க இயலா பெருந் துயரின் பயணம், எவ்வளவு கொடிது என்பதை நன்கு உணர்ந்த ஒருவரால்தான் எழுத இயலும். இதை அறிந்ததால் தானோ என்னவோ, ராம் இவரைப் பயன் படுத்தியிருக்க வேண்டும். இரக்க மற்ற இயற்கையால் சிதைக்கப் பட்ட ஆளுமை மிக்க கவிஞர் தமிழ் திரைக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. உடலளவில் மட்டுமே குறை கண்ட உயிரின் மனசு சொல்லும் சோகமே இப்பாடல். கசலின் சாயல் பாடல் முழுமையும் ஆக்கிரமித்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே ரஹ்மானை ஞாபகப் படுத்தக் கூடிய மெட்டு. மது ஐய்யரின் இனிமை ததும்பும் குரல். பாடல் நகர நகர எனை அறியாமல் கண்ணீர் கொட்டத் துவங்கி விடுகிறது. இனம் புரியாத ஒரு ஏக்கம், ஒரு இயலாமையின் வலி, மனதிற்கு நெருக்கமாகி, உணர்வின் உந்தலாய் உருவானதே அந்தக் கண்ணீர்ப் பீரிடல் என்பதை பிறகே உணர முடிந்தது. வீணை, சித்தார், ஷெனாய் இவற்றின் பின்னனியினூடே மிதந்து வரும் மெட்டு, இயற்கை கிழித்துப் போட்ட ஒரு ஆண்மாவின் அழுகுரலாய் ஒலிக்க,
“இருள் என்ன ஆச்சு,
நெலா எங்க போச்சு,
யார நானும் கேப்பேன்,
அட விதியே சொல்லிடு,
மரமான சேடிய தான எப்படி சொமப்பது,
அட மின்னல் ஒறங்கக் கூட இந்த மண்ணில் எடமில்ல,
மரக் கிளையில் தங்கப் போனாலும் அடப் பறவையும் அங்க விடவில்ல,
செத்துப் போச்சு மனசு’
எனத் தொடரும் வரிகள், மனதைக் கடுமையாகவே உலுக்குகிறது. சரணத்திற்கு முன் வரும் தனித்த ஷெனாய்யின் விம்மலும் பின்னனி இசையும், திக்கற்று பாராமுக மாக்கப்பட்ட நேசிப்பிற்கு ஏங்கும் ஒரு ஆண்மாவின் கதறலாய் நீள்கிறது.
‘முடியாது என்றானபோதும் நான் முயன்று தான் தோற்கிறேன்
விடியாது என்றானபோதும் நான் கிழக்கையே பார்க்கிறேன்
இயற்கையின் தீர்ப்பில் நானே குற்றவாளியா
அதைத் திருத்தி எழுதத்தானே யாருமில்லையா’
வெறுமனே கிட்டாரின் துனை கொண்டு கடந்து செல்லும் சரணத்தின் இவ்வரிகள், எனக்குள் நிசப்தத்தையே உருவாக்கி விட்டது. ‘என் மீதினில் மோதும் காத்து’ என நீண்டு ஒலிக்கும் மது ஐய்யரின் அக்குரல், காற்று மோதுவது போன்றதொரு பின்னனி இசை, யுவனின் ஆழ்ந்த திரைப் புரிதலையே காட்டுகிறது. நான் வெகுவாகக் கரைந்த இடங்களில் இதுவும் ஒன்று. ‘மெல்லத் துடிக்கும் மனசு’ என்று இசையற்று நிறைவுறும் இப்பாடல், கண்டிப்பாய் எல்லோருக்குள்ளும் ஒரு அதிர்வை ஏற்படுத்தவே செய்யும். பேரன்பின் வெற்றி, கருணாகரனை ஒரு மிகப் பெரிய பாடலாசிரியராக மிளிறச் செய்யும் என்பதே நிதர்சனம்.
மொத்தத்தில், பேரன்பு ஒரு துன்பியல் சினிமா. ஒரு ஆன்மாவின் இரங்கற்பா. உயிரில் கலந்துரசும் மெட்டு, கனமான, வலியுள்ள வரிகள், இவற்றின் தொகுப்பே இப் பேரன்பு. இந்தப் படத்தில் பணியாற்றிய ராம், யுவன், வைரமுத்து, மம்மூட்டி என அனைவருமே தேசிய விருது பெறத் தகுதியானவர்கள் என்பதற்குப் படத்தின் டீசரும் பாடல்களுமே சான்றாக அமைகின்றன.
--
(கட்டுரையாளர் புதுவை தாகூர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ் துறைத் துணைப் பேராசிரியர்).
தொடர்புக்கு: [email protected]