ஒவ்வொரு குழுவும் தங்களுக்கு மட்டுமே புரியும்வண்ணம் சில சொற்களை வைத்திருப்பர். இதைத்தாண் குழு குறி என்பார்கள். நம் இலக்கண நூல்கள் அதைக் கொஞ்சம் நீட்டி ‘குழூஉ குறி’ என்று கூறும். தங்க வேலை செய்வோர், மீனவர்கள், நெசவாளர்கள் முதலியோர் தங்களுக்கு மட்டுமே புரியும்வண்ணம் தொழில் ரீதியாகப் பேசிக்கொள்வதை இதற்குச் சான்றாகக் கூறலாம்..
எளிமையாகச் சொன்னால் வணிகர் ஒருவருக்குச் ‘சரக்கு’ என்ற சொல் தரும் பொருள் வேறு. குடிகாரர்களுக்கு அது தரும் பொருள் வேறு. இப்படி ரகசியமானவற்றை, பிறருக்கு வெளிப்படுத்தமுடியாத/விரும்பாதவற்றைச் சொல்லத்தான் குழு குறி பயன்படுகிறது. தங்கள் எதிராளிகளைத் திட்டவும் இது பயன்படலாம். சான்றாக, ஒரு கட்டுரையில் இப்படி வருகிறது. ‘இதைப் படித்தால் தேசபக்தர்கள் கோபித்துக்கொள்வார்கள்’. இங்கு குறிப்பிடும் தேசபக்தர்கள் என்ற சொல் தேசபக்தி உடையவர்கள் என்ற பொருளில் வரவில்லை. பாஜக காரர்களைக் குறிக்கிறது. இதுதான் குழு குறியின் முக்கியப் பங்கு.
பள்ளிக்கூடங்கள்தான் நிறைய குழு குறிகளை உருவாக்குகின்றன. மாணவர்களுக்கு பேசும்போது இரு பிரச்சனைகள் உருவாகின்றன.
ஆசிரியர்களுக்குப் பட்டப்பெயர் வைப்பதிலிருந்து இது தொடங்குகிறது. எனக்கு ஒரு அனுபவம். எனது கணித ஆசிரியருக்கு நாங்கள் வைத்த பெயர் ராமசாமி. காரணம் தெரியாது. ஆனால் அதுதான் பெயர்.
அன்று கணித ஆசிரியர் ஒருவனைச் சரியாகக் கணக்கு போடவில்லை என்று திட்டிவிட்டு உட்கார்ந்திருந்தார். அப்போது பார்த்து ஒருவன் கேட்டான். ‘ராமசாமி என்ன சொன்னார்?’ அதற்கு திட்டு வாங்கியவன் பதில் சொன்னான். ‘ராமசாமி நன்றாக கணக்கு போட்டுப்பார்க்கச் சொன்னார்’. இதன் பிறகு ஆசிரியருக்குச் சொல்லியா தரவேண்டும்? இருவரையும் நையப்புடைத்துவிட்டார்.
குழு குறிகள் எதிராளிகளால் புரிந்துகொள்ளப்படும் இந்நிலையில்தான் நாம் அடுத்த கட்டத்திற்கு யோசிக்கவேண்டியிருக்கிறது. ஒரு புது மொழியை உண்டாக்கினால்தான் என்ன? நல்ல யோசனை தானே! தமிழ் மொழிக்குள்ளேயே பல மொழிகள் இப்படி உலவுகின்றன.
உதாரணத்திற்கு ‘பாட்டி’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். சாட்டை திரைப்படத்தில் வரும் மொழியில் அச்சொல் ‘கபாகட்கடி’ என்று வரும். எங்கள் பள்ளி மாணவர்கள் பேசும் மொழியில் அச்சொல் ‘டிப்பா’ என்று வரும். அதாவது வார்த்தையில் உள்ள எழுத்துகளை அப்படியே தலைகீழாக மாற்றிவிடுவார்கள். சொற்களுக்கிடையே ர்ம, ஐன, ட்ல ஆகிய எழுத்துகலை இடையில் போட்டு மொழிகளை உருவாக்கி வழங்குவர். சான்றாக, மேற்கண்ட பாட்டி என்ற சொல் பர்மாட்டி, பைனாட்டி, பட்லாட்டி என்று வழங்கப்பெறும்.
இதில் நம்மவர்கள் (பார்வையற்றவர்கள்) பங்கு மகத்தானது. நான் ஒரு மொழியைக் கற்றிருக்கிறேன். அதை உங்களுக்குப் புரியவைக்க முயல்கிறேன்.
அந்த மொழியின் பெயர் ‘சிக்கி மொழி’. பலர் அறிந்திருக்கலாம். இம்மொழியில் பாட்டி என்ற சொல்லை ‘டாப்பி’ என்போம். அதாவது உயிரெழுத்துகளை அப்படியே விட்டுவிட்டு மெய்யெழுத்துகளை மட்டும் இடம்பெயர்ப்பது.
தெளிவாக விளக்குகிறேன். மெய்யெழுத்துகளை A என்றும், உயிரெழுத்துகளை B என்றும் கருதிக்கொள்ளுங்கள்.
தமிழ்ச் சொல்லின்படி,
1. ப்+ஆ = பா
2. ட் = ட்
3. ட்+இ = டி.
எங்கள் மொழியில்,
A3+B1 = டா.
A1 = ப்
A1+B3 =பி.
இதில் டாட்பி என்றுதானே வரவேண்டும், டாப்பி என்று எப்படி வந்தது என்று சில அறிவுஜீவிகள் யோசிக்கலாம். மொழிக்கு தானே இலக்கணம்; இலக்கணத்திற்காக மொழி இலையே!
என்ன? எங்கள் மொழி புரிகிறதா? தெளிவாக குழப்பிவிட்டேனா? இலக்கணம் ஏன் குழம்புகிறது என்று இப்போது புரிகிறதா?
இந்த மொழி பற்றிய சில சுவாரஸ்யங்களைச் சொல்கிறேன். எங்கள் சிக்கி மொழியின் வேர்களைத் தேடியபோது அது நம் மக்களின் பயன்பாட்டில் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்தது தெரியவண்தது. தசை என்ற சொல்லை சதை என்றும், லாரியை ராலி என்றும் வழங்கும் சாதாரண மக்கள் அவர்களை அறியாமலேயே எங்கள் முன்னோடிகளாகிவிட்டார்கள்.
நாங்களும் மொழிப்போர் கண்டிருக்கிறோம். எங்கள் வீரத் தியாகி பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் கதிர்வேல் என்று ஒருவர் படித்துக்கொண்டிருந்தார். ஒரு ஆசிரியர் எதற்காகவோ எல்லோரது பெயர்களையும் கேட்டுக்கொண்டிருந்தார். எங்கள் வீரத் தியாகி கதிர்வேல் அவர்களது முறையும் வந்தது. ‘உன் பெயர் என்ன?’ என்று ஆசிரியர் கேட்டதற்கு, ‘தகிர்லேவ்’ என்று பதிலளித்துள்ளார். மீண்டும் கேட்டபோதும் அப்படித்தான் சொன்னார்; அடித்துக் கேட்டபோதும் அப்படித்தான் சொன்னார். அவர்தான் எங்கள் மொழியின் பிதாமகர் என்று என் சிக்கி மொழி குருவான எனது பின்னவர் (junior) கருப்பசாமி சொல்லித்தந்திருக்கிறார்.
இதே வகையிலான மொழி சென்னை பூவிருந்தவல்லி பார்வையற்றோர் பள்ளியில் குருபாரோ என்ற பெயரில் வழங்கப்பட்டிருக்கிறது. அங்கு 1974-ல் பள்ளி மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே முறுகல் நிலை முற்றியபோது இம்மொழி உருவாக்கப்பட்டதாக திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் M.P. கந்தசாமி அவர்கள் குறிப்பிடுகிறார். பார்வையுள்ளோர் சிலரும் இதே வகையான மொழியைப் பேசுகின்றனர். அதன் தெளிவான வரலாற்றை அறிந்துகொள்ளமுடியவில்லை. ஏதேனும் ஒரு பள்ளியில் அல்லது விடுதியில் அது உருவாக்கப்பட்டிருக்கலாம் என நான் உறுதியாக நம்புகிறேன்.
நான் மேலே கொடுத்த விதிமுறையை மட்டும் படித்துவிட்டு ஒருவேளை நீங்கள் சிக்கி மொழியைக் கற்றுக்கொண்டாலும் எங்களைப் புரிந்துகொள்ளமுடியாது. அடுத்த கட்டம் என்றும் ஒன்று இருக்கிறது.
பெரிய சொற்களில் மெய்யெழுத்துகளை விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் குழப்பிப் போட்டுக்கொள்வோம். சான்றாக, பாலகணேசன் என்ற எனது பெயரை லாபணகேனச், சாலபணேகன் நாலபணேகச் என்று பலவாறு கூறிக்கொள்ளலாம். இப்படியெல்லாம் தமிழ் எழுத்துகளை மாற்றிப்போட்டு சிக்கவிடுவதால்தான் இம்மொழிக்கு ‘சிக்கி மொழி’ என்று காரணப் பெயர் வைத்திருக்கிறார்கள் எங்கள் முன்னோர்.
எப்படி இருக்கிறது எங்கள் மொழி? இத்தகைய மொழிகள் உங்கள் வசம் இருந்தாலும் கொஞ்சம் சொல்லுங்கள். அதற்காக பரிசுத்த ஆவி இறங்கியதாக போதகர்கள் பேசும் அந்நிய பாஷையையோ, தமிழ் சினிமாப் பாடல்களில் வரும் உலறல்களையோ மொழியாகக் கருதிவிடமுடியாது. அது வரயறைகள் அற்றது. எங்கள் மொழி வரையறைக்கு உட்பட்டது. இத்தகு வரையறைகளைக் கொண்ட மொழிகளைப் பற்றி கூறுங்கள்.
இத்துடன் இக்கட்டுரையை முடித்துக்கொள்கிறேன். கணவ்வம் (மன்னிக்கவும்) வணக்கம்.
--
தொடர்புக்கு: [email protected]
எளிமையாகச் சொன்னால் வணிகர் ஒருவருக்குச் ‘சரக்கு’ என்ற சொல் தரும் பொருள் வேறு. குடிகாரர்களுக்கு அது தரும் பொருள் வேறு. இப்படி ரகசியமானவற்றை, பிறருக்கு வெளிப்படுத்தமுடியாத/விரும்பாதவற்றைச் சொல்லத்தான் குழு குறி பயன்படுகிறது. தங்கள் எதிராளிகளைத் திட்டவும் இது பயன்படலாம். சான்றாக, ஒரு கட்டுரையில் இப்படி வருகிறது. ‘இதைப் படித்தால் தேசபக்தர்கள் கோபித்துக்கொள்வார்கள்’. இங்கு குறிப்பிடும் தேசபக்தர்கள் என்ற சொல் தேசபக்தி உடையவர்கள் என்ற பொருளில் வரவில்லை. பாஜக காரர்களைக் குறிக்கிறது. இதுதான் குழு குறியின் முக்கியப் பங்கு.
பள்ளிக்கூடங்கள்தான் நிறைய குழு குறிகளை உருவாக்குகின்றன. மாணவர்களுக்கு பேசும்போது இரு பிரச்சனைகள் உருவாகின்றன.
- பாலியல் தொடர்பான சொல்லாடல்களை பள்ளி வளாகத்திற்குள் அவர்களால் சுதந்திரமாகப் பேசமுடிவதில்லை.
- தங்கள் மீது அடக்குமுறைகளைக் கையாளும் ஆசிரியர்களை அவர்கள் அறியாமலேயே திட்டி பழிவாங்கவேண்டியுள்ளது.
ஆசிரியர்களுக்குப் பட்டப்பெயர் வைப்பதிலிருந்து இது தொடங்குகிறது. எனக்கு ஒரு அனுபவம். எனது கணித ஆசிரியருக்கு நாங்கள் வைத்த பெயர் ராமசாமி. காரணம் தெரியாது. ஆனால் அதுதான் பெயர்.
அன்று கணித ஆசிரியர் ஒருவனைச் சரியாகக் கணக்கு போடவில்லை என்று திட்டிவிட்டு உட்கார்ந்திருந்தார். அப்போது பார்த்து ஒருவன் கேட்டான். ‘ராமசாமி என்ன சொன்னார்?’ அதற்கு திட்டு வாங்கியவன் பதில் சொன்னான். ‘ராமசாமி நன்றாக கணக்கு போட்டுப்பார்க்கச் சொன்னார்’. இதன் பிறகு ஆசிரியருக்குச் சொல்லியா தரவேண்டும்? இருவரையும் நையப்புடைத்துவிட்டார்.
குழு குறிகள் எதிராளிகளால் புரிந்துகொள்ளப்படும் இந்நிலையில்தான் நாம் அடுத்த கட்டத்திற்கு யோசிக்கவேண்டியிருக்கிறது. ஒரு புது மொழியை உண்டாக்கினால்தான் என்ன? நல்ல யோசனை தானே! தமிழ் மொழிக்குள்ளேயே பல மொழிகள் இப்படி உலவுகின்றன.
உதாரணத்திற்கு ‘பாட்டி’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். சாட்டை திரைப்படத்தில் வரும் மொழியில் அச்சொல் ‘கபாகட்கடி’ என்று வரும். எங்கள் பள்ளி மாணவர்கள் பேசும் மொழியில் அச்சொல் ‘டிப்பா’ என்று வரும். அதாவது வார்த்தையில் உள்ள எழுத்துகளை அப்படியே தலைகீழாக மாற்றிவிடுவார்கள். சொற்களுக்கிடையே ர்ம, ஐன, ட்ல ஆகிய எழுத்துகலை இடையில் போட்டு மொழிகளை உருவாக்கி வழங்குவர். சான்றாக, மேற்கண்ட பாட்டி என்ற சொல் பர்மாட்டி, பைனாட்டி, பட்லாட்டி என்று வழங்கப்பெறும்.
இதில் நம்மவர்கள் (பார்வையற்றவர்கள்) பங்கு மகத்தானது. நான் ஒரு மொழியைக் கற்றிருக்கிறேன். அதை உங்களுக்குப் புரியவைக்க முயல்கிறேன்.
அந்த மொழியின் பெயர் ‘சிக்கி மொழி’. பலர் அறிந்திருக்கலாம். இம்மொழியில் பாட்டி என்ற சொல்லை ‘டாப்பி’ என்போம். அதாவது உயிரெழுத்துகளை அப்படியே விட்டுவிட்டு மெய்யெழுத்துகளை மட்டும் இடம்பெயர்ப்பது.
தெளிவாக விளக்குகிறேன். மெய்யெழுத்துகளை A என்றும், உயிரெழுத்துகளை B என்றும் கருதிக்கொள்ளுங்கள்.
தமிழ்ச் சொல்லின்படி,
1. ப்+ஆ = பா
2. ட் = ட்
3. ட்+இ = டி.
எங்கள் மொழியில்,
A3+B1 = டா.
A1 = ப்
A1+B3 =பி.
இதில் டாட்பி என்றுதானே வரவேண்டும், டாப்பி என்று எப்படி வந்தது என்று சில அறிவுஜீவிகள் யோசிக்கலாம். மொழிக்கு தானே இலக்கணம்; இலக்கணத்திற்காக மொழி இலையே!
என்ன? எங்கள் மொழி புரிகிறதா? தெளிவாக குழப்பிவிட்டேனா? இலக்கணம் ஏன் குழம்புகிறது என்று இப்போது புரிகிறதா?
இந்த மொழி பற்றிய சில சுவாரஸ்யங்களைச் சொல்கிறேன். எங்கள் சிக்கி மொழியின் வேர்களைத் தேடியபோது அது நம் மக்களின் பயன்பாட்டில் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்தது தெரியவண்தது. தசை என்ற சொல்லை சதை என்றும், லாரியை ராலி என்றும் வழங்கும் சாதாரண மக்கள் அவர்களை அறியாமலேயே எங்கள் முன்னோடிகளாகிவிட்டார்கள்.
நாங்களும் மொழிப்போர் கண்டிருக்கிறோம். எங்கள் வீரத் தியாகி பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் கதிர்வேல் என்று ஒருவர் படித்துக்கொண்டிருந்தார். ஒரு ஆசிரியர் எதற்காகவோ எல்லோரது பெயர்களையும் கேட்டுக்கொண்டிருந்தார். எங்கள் வீரத் தியாகி கதிர்வேல் அவர்களது முறையும் வந்தது. ‘உன் பெயர் என்ன?’ என்று ஆசிரியர் கேட்டதற்கு, ‘தகிர்லேவ்’ என்று பதிலளித்துள்ளார். மீண்டும் கேட்டபோதும் அப்படித்தான் சொன்னார்; அடித்துக் கேட்டபோதும் அப்படித்தான் சொன்னார். அவர்தான் எங்கள் மொழியின் பிதாமகர் என்று என் சிக்கி மொழி குருவான எனது பின்னவர் (junior) கருப்பசாமி சொல்லித்தந்திருக்கிறார்.
இதே வகையிலான மொழி சென்னை பூவிருந்தவல்லி பார்வையற்றோர் பள்ளியில் குருபாரோ என்ற பெயரில் வழங்கப்பட்டிருக்கிறது. அங்கு 1974-ல் பள்ளி மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே முறுகல் நிலை முற்றியபோது இம்மொழி உருவாக்கப்பட்டதாக திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் M.P. கந்தசாமி அவர்கள் குறிப்பிடுகிறார். பார்வையுள்ளோர் சிலரும் இதே வகையான மொழியைப் பேசுகின்றனர். அதன் தெளிவான வரலாற்றை அறிந்துகொள்ளமுடியவில்லை. ஏதேனும் ஒரு பள்ளியில் அல்லது விடுதியில் அது உருவாக்கப்பட்டிருக்கலாம் என நான் உறுதியாக நம்புகிறேன்.
நான் மேலே கொடுத்த விதிமுறையை மட்டும் படித்துவிட்டு ஒருவேளை நீங்கள் சிக்கி மொழியைக் கற்றுக்கொண்டாலும் எங்களைப் புரிந்துகொள்ளமுடியாது. அடுத்த கட்டம் என்றும் ஒன்று இருக்கிறது.
பெரிய சொற்களில் மெய்யெழுத்துகளை விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் குழப்பிப் போட்டுக்கொள்வோம். சான்றாக, பாலகணேசன் என்ற எனது பெயரை லாபணகேனச், சாலபணேகன் நாலபணேகச் என்று பலவாறு கூறிக்கொள்ளலாம். இப்படியெல்லாம் தமிழ் எழுத்துகளை மாற்றிப்போட்டு சிக்கவிடுவதால்தான் இம்மொழிக்கு ‘சிக்கி மொழி’ என்று காரணப் பெயர் வைத்திருக்கிறார்கள் எங்கள் முன்னோர்.
எப்படி இருக்கிறது எங்கள் மொழி? இத்தகைய மொழிகள் உங்கள் வசம் இருந்தாலும் கொஞ்சம் சொல்லுங்கள். அதற்காக பரிசுத்த ஆவி இறங்கியதாக போதகர்கள் பேசும் அந்நிய பாஷையையோ, தமிழ் சினிமாப் பாடல்களில் வரும் உலறல்களையோ மொழியாகக் கருதிவிடமுடியாது. அது வரயறைகள் அற்றது. எங்கள் மொழி வரையறைக்கு உட்பட்டது. இத்தகு வரையறைகளைக் கொண்ட மொழிகளைப் பற்றி கூறுங்கள்.
இத்துடன் இக்கட்டுரையை முடித்துக்கொள்கிறேன். கணவ்வம் (மன்னிக்கவும்) வணக்கம்.
--
தொடர்புக்கு: [email protected]