கழிந்திருக்கிற ஜூலை மாதம், பார்வையற்ற சமூகத்தில் சில புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சிவிட்டுச் சென்றிருக்கிறது. அறிவியல், முற்போக்கு, உரிமைகள், எழுத்து, வாசிப்பு எனப் பார்வையற்றோரிடையே எழுந்த அடுத்தடுத்த பேசுபொருள்களால் நிறைவும், நம்பிக்கையுமாய் நகர்ந்திருக்கிறது ஜூலை.
தன்னார்வம் கொண்ட சில பார்வையற்றவர்கள் இணைந்து, பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்திருப்பதோடு, பெரியார் தொடர்பான மிகப்பெரிய புத்தகத்தை ஒலிவடிவில் கொண்டுவந்திருக்கிறார்கள்.
பார்வையற்ற மாணவர்கள் தங்கள் உயர்கல்வி வகுப்புகளில் மொழியும் வரலாறும் மட்டுமின்றி, அறிவியலையும் விருப்பப் பாடமாக எடுத்துப் பயில வேண்டும். அதற்கு அறிவியல் குறித்தான ஆர்வத்தினை அவர்களிடையே ஏற்படுத்துதல் அவசியம் என்கிற உயரிய நோக்கத்தோடு, கர்ண வித்யா அமைப்பு, பார்வையற்ற மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி ஒன்றை நடத்தியிருக்கிறது.
அனைத்துத் தரப்புப் பார்வையற்றோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் (CSGAB) சங்கத்தின் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வெற்றி பெற்றிருக்கிற இளைஞர்கள் தொழில்நுட்ப அறிவு கொண்ட துடிப்பானவர்கள். பார்வையற்ற சமூகத்தின் முன்னேற்றண் குறித்த ஏராளமான கனவுகளைத் தங்கள் இதயத்தில் ஏந்தியிருப்பவர்கள்.
தங்கள் ஓராண்டுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது வாசிப்போம் இணைய குழு. இவ்வாறு, பார்வையற்ற சமூகத்தின் எழுச்சி ஒன்றையே அடிநாதமாகக்கொண்டு செயல்படும் அமைப்புகள் மற்றும் சங்கங்களுக்கு தனது வாசகர்களோடு இணைந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, ஒரு வேண்டுகோளையும் முன்வைக்க விரும்புகிறது விரல்மொழியர் மின்னிதழ்.
உரிமைக்களங்களில் உழைக்கும் நமது சங்கங்களுக்கும், அன்றாட மற்றும் அறிவுத்தளங்களில் இயங்குகிற நமக்கான அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பைக் காலம் நம்மிடம் வேண்டி நிற்கிறது. அனைவருக்குமான இலக்கு ஒன்றென்றபோதும், பாதைகள் வேறென்பதால், எப்போதும் இணைந்து பயணிப்பது சாத்தியமில்லைதான். ஆனால், கருத்து முரண்களால் எழுகிற கசப்பை அப்போதைக்கப்போதே உண்டு செரிக்கிற உரையாடல்களும், கடமைக்கும் உரிமைக்கும் இடையேயான அவ்வப்போதைய கைகுலுக்கள்களும் நிகழ்த்தப்படவேண்டியது அவசியம்.
இந்தக் கோரிக்கை செயல்வடிவம் பெற்றால், நாம் நோக்கிப் பயணிக்கிற இலக்குகள் நம்மை நோக்கி நகரத் தொடங்கும். கனிவுடன் பரிசீலியுங்கள், இது காலத்தின் விண்ணப்பம்.
‘உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு’
தன்னார்வம் கொண்ட சில பார்வையற்றவர்கள் இணைந்து, பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்திருப்பதோடு, பெரியார் தொடர்பான மிகப்பெரிய புத்தகத்தை ஒலிவடிவில் கொண்டுவந்திருக்கிறார்கள்.
பார்வையற்ற மாணவர்கள் தங்கள் உயர்கல்வி வகுப்புகளில் மொழியும் வரலாறும் மட்டுமின்றி, அறிவியலையும் விருப்பப் பாடமாக எடுத்துப் பயில வேண்டும். அதற்கு அறிவியல் குறித்தான ஆர்வத்தினை அவர்களிடையே ஏற்படுத்துதல் அவசியம் என்கிற உயரிய நோக்கத்தோடு, கர்ண வித்யா அமைப்பு, பார்வையற்ற மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி ஒன்றை நடத்தியிருக்கிறது.
அனைத்துத் தரப்புப் பார்வையற்றோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் (CSGAB) சங்கத்தின் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வெற்றி பெற்றிருக்கிற இளைஞர்கள் தொழில்நுட்ப அறிவு கொண்ட துடிப்பானவர்கள். பார்வையற்ற சமூகத்தின் முன்னேற்றண் குறித்த ஏராளமான கனவுகளைத் தங்கள் இதயத்தில் ஏந்தியிருப்பவர்கள்.
தங்கள் ஓராண்டுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது வாசிப்போம் இணைய குழு. இவ்வாறு, பார்வையற்ற சமூகத்தின் எழுச்சி ஒன்றையே அடிநாதமாகக்கொண்டு செயல்படும் அமைப்புகள் மற்றும் சங்கங்களுக்கு தனது வாசகர்களோடு இணைந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, ஒரு வேண்டுகோளையும் முன்வைக்க விரும்புகிறது விரல்மொழியர் மின்னிதழ்.
உரிமைக்களங்களில் உழைக்கும் நமது சங்கங்களுக்கும், அன்றாட மற்றும் அறிவுத்தளங்களில் இயங்குகிற நமக்கான அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பைக் காலம் நம்மிடம் வேண்டி நிற்கிறது. அனைவருக்குமான இலக்கு ஒன்றென்றபோதும், பாதைகள் வேறென்பதால், எப்போதும் இணைந்து பயணிப்பது சாத்தியமில்லைதான். ஆனால், கருத்து முரண்களால் எழுகிற கசப்பை அப்போதைக்கப்போதே உண்டு செரிக்கிற உரையாடல்களும், கடமைக்கும் உரிமைக்கும் இடையேயான அவ்வப்போதைய கைகுலுக்கள்களும் நிகழ்த்தப்படவேண்டியது அவசியம்.
இந்தக் கோரிக்கை செயல்வடிவம் பெற்றால், நாம் நோக்கிப் பயணிக்கிற இலக்குகள் நம்மை நோக்கி நகரத் தொடங்கும். கனிவுடன் பரிசீலியுங்கள், இது காலத்தின் விண்ணப்பம்.
‘உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு’