பாலகணேசன்: உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகத்தை எங்கள் வாசகர்களுக்குக் கொடுத்துவிடுங்களேன்?
கவேந்திரன்: நான் மலேசியாவில் உள்ள தலைசிறந்த மலாய் அரசுப் பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு சட்டம் பயின்று வருகிறேன். என் தந்தை இங்கே அரசாங்கத்தில் கட்டுமானத் துறையில் வேலைசெய்கிறார். எங்கள் முன்னோர்களின் பூர்வீகம் எல்லாமே இந்தியாதான். எனது பொழுதுபோக்கின் பெரும்பாலான நேரத்தைக் கணினியுடன் செலவு செய்வேன். மேலும் புதிய புதிய விஷயங்களை அறிந்து கொள்வதிலும், அதிகமாக வெளியுலக மனிதர்களுடன் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதிலும் அதிகம் ஆர்வம் கொண்டவன் நான். நான் இசை மீது அதிகம் ஆர்வம் கொண்டவனாக வளர்ந்திருக்கிறேன். ஆனால், முறையான இசை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளோ, அதற்கான நேரமோ எனக்கு இதுவரை இங்கே கிட்டவில்லை. ஐஃபோன்களோடும், வானொலிகளோடுமே எனது இசைப் பொழுதுகள் கழிந்துகொண்டிருக்கின்றன.
பா: உங்கள் பள்ளிப் படிப்பு குறித்துக் கூறுங்களேன்?
க: எனது பள்ளி வாழ்க்கையைப் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் துவங்கினேன். அங்கு ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு எனது இடைநிலைக் கல்வியை அதாவது படிவம் 5 வரை கோலாலம்பூரில் உள்ள சிறப்புப் பள்ளியில் பயின்றேன். பின்னர் படிவம் 6-ஐ ஒருங்கிணைந்த கல்வியின் வழி பயின்றேன். இங்கே படிவம் ஆறு என்பது பள்ளி அளவில் உயர் தராதாரத்தைக் குறிக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் உங்கள் இந்தியாவில் உள்ள +2-க்குச் சமம் இந்த படிவம் ஆறு.
பா: உங்கள் சிறப்புப் பள்ளிகளில் கற்பித்தல் மொழி என்ன? தமிழ் கற்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிட்டியதா?
க: இங்கே கற்பித்தல் மொழி என்பது முழுக்க முழுக்க மலாய்தான். இரண்டாவது கற்பித்தல் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. ஆகையால் பார்வையற்றோரைப் பொறுத்தவரை இங்கே தமிழ் கற்பதற்கான வாய்ப்புகள் என்பது கிடையவே கிடையாது. ஆனால், பார்வை உள்ள தமிழர்களுக்கு தமிழ் கற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பார்வையற்றோருக்குத் தமிழ் வழிக் கற்றல் இல்லாமல் போனதற்கான முக்கிய காரணம் இங்கே தமிழில் பிரெயிலின் பயன்பாடு இல்லாமல் போனதுதான் என்று நினைக்கிறேன். இன்னமும் இங்கே பாடப் புத்தகங்களோ, இதர புத்தகங்களோ இதுவரை தமிழ் பிரெயிலில் வெளிவந்ததாக எனக்குத் தெரியவில்லை. மலேசியாவைப் பொறுத்தவரை 524 பள்ளிக்கூடங்கள்தான் இருக்கும். அவற்றில் இருபது லட்சம் மாணவர்கள்தான் பயில்வார்கள். அதிலும் பார்வையற்றவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆகையால் இங்கே பார்வையற்றோருக்கான தமிழ் பிரெயில் குறித்தான ஏற்பாடுகளையோ, அதற்கான முன்னெடுப்புகளையோ இதுவரை யாரும் எடுத்ததாகத் தெரியவில்லை.
பா: உங்களுக்குத் தமிழ் பிரெயில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் பிரெயில் தெரிந்த பார்வையற்ற தமிழர் யாராவது அங்கே இருக்கிறார்களா?
க: இங்கே எனக்குத் தெரிந்த பார்வையற்ற தமிழ் நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவருக்கும் மலாய் மற்றும் ஆங்கில பிரெயில் நன்றாகத் தெரியும். என் அறிவுக்கு எட்டியவரை தமிழ் பிரெயில் தெரிந்த பார்வையற்றோர் எவரும் இங்கே இல்லை.
பா: மலேசியாவில் கணினியில் தமிழ்ப் பயன்பாடு பார்வையற்றோரை பொறுத்தவரை எப்படி இருக்கிறது?
க: கணினியில் தமிழ்ப் பயன்பாடு நம் பார்வையற்றோர் சமூகத்திற்கு NVDA மென்பொருளின் வரவுக்கு பின்னரே சாத்தியமானதென்பதை நீங்கள் அறிவீர்கள். மலேசியாவில் கணினியில் தமிழ்ப் பயன்பாடு பார்வையற்றோரைப் பொறுத்தவரை ஓரளவிற்குச் சிறப்பாகத்தான் இருக்கிறது. இப்போதுதான் இங்கே கணினியில் இணையம் வழியே செய்தித் தாள்கள் படிப்பது, நாவல்கள், கதைகள் படிப்பதுவரை வளர்ந்திருக்கிறார்கள்.
பா: மலேசியாவைப் பொறுத்தவரை பார்வையற்றோருக்கான வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?
க: அடிப்படையாக இங்கே பார்வையற்றோர் என்று சொன்னாலே அனைவர் மனதிலும் தோன்றும் பிம்பம் மசாஜ் தான். அதற்கு அடுத்ததாகத்தான் கைத்தொழில், சுயதொழில், இசைக்குழு வைத்துச் சம்பாதிப்பது, ஆசிரியர் பணி போன்றவை. இங்கே நம் படிப்பிற்கு ஏற்றவாறு ஓரளவிற்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. தொடக்கக் காலத்தில் பார்வையற்றோருக்கான ஆசிரியர் பணி குறித்து மலேசிய அரசு ஒரு கொள்கை வைத்திருந்தது. அதாவது பார்வையற்ற ஆசிரியர்கள் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் மட்டுமே பணியாற்ற வேண்டும். இதர பள்ளிகளில் பணியாற்ற முடியாது. இந்த கொள்கையைச் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் மலேசிய அரசாங்கம் தளர்த்திக் கொண்டிருக்கிறது. இவ்விடத்தில் மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் மலேசிய அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டைக் கண்டிப்பாகப் பாராட்டி ஆகவேண்டும். ஏனெனில் இங்கே மாற்றுத்திறனாளிகளுக்கென்றே ஒரு பிரதிநிதியை அரசாங்கம் தனது நாடாளுமன்ற மேலவையில் நியமித்திருக்கிறது. அந்த பிரதிநிதிதான் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து விதமான சிக்கல்களையும் அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்வார். நான் ஏற்கனவே சொன்ன கைத்தொழில், சுயதொழில், மசாஜ் இவற்றில் எதையுமே செய்ய இயலாதவர்கள் டிஷ்யு பேப்பர் விற்று பிழைத்துக் கொள்கிறார்கள். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில் இந்தத் தொழிலில் ஈடுபடும் பார்வையற்றோர் பரிதாபமாகவே இங்கு பார்க்கப்படுகிறார்கள்.
ஆசிரியர் பணியை விடுத்து எவ்வளவோ வேலை வாய்ப்புகள் நம் சமூகத்திற்கு இருக்கிறது. ஆனால், அந்த வாய்ப்புகள் உலகில் பல நாடுகளிலும் தரப்படுகின்றன. உதாரணமாக நம் சமூகத்தினருக்கு அறிவித்தல் பணி என்பது கைவந்த கலை. இந்த அறிவித்தல் பணியைக் கூட எந்த ஒரு வானொலியும் முன்வந்து நமக்குத் தருவதில்லை. மற்ற நாடுகள் இதில் எப்படி என்பது எனக்குத் தெரியாது. மலேசியாவைப் பொறுத்தவரை அறிவித்தலுக்கான முன்னெடுப்புகளை எந்த ஒரு வானொலியும் இதுவரை முன்வந்து செய்ததாகத் தெரியவில்லை. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் பார்வையற்றவர்கள் தாங்களாகவே இணைய வானொலிகளை நடத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். இந்தியாவில் எப்படி ஹிந்தி மற்றும் தமிழ் நண்பர்கள் இணைந்து ரேடியோ உடான் என்ற இணைய வானொலி நடத்துகிறார்களோ அதே போன்று இங்கும் மலாய் மொழி பேசும் பார்வையற்றோர்கள் இணைந்து அம்போய் (Amboi) என்னும் இணைய வானொலியை நடத்துகிறார்கள். அம்போய் என்ற மலாய் வார்த்தைக்கு தமிழில் “அப்படியா!” என்பது பொருள்.
பா: உங்கள் பள்ளிக்கூடங்களிலேயே வேலை வாய்ப்புக்கான பயிற்சிகளை தருகிறார்களா?
க: இல்லை. ஆனால், வேலை வாய்ப்புப் பயிற்சிகளுக்கென்றே சிறப்பு மையங்கள் இங்கே இயங்கி வருகின்றன. அவற்றில்தான் கைத்தொழில்கள், அலுவலக மேலாண்மை, கணினிப் பயிற்சி முதலியவை பயிற்றுவிக்கப்படுகின்றன.
பா: கவேந்திரனுக்கு மலேசியாவில் ரோல்மாடலாக பார்வையற்றவர் யாராவது இருக்கிறார்களா?
க: எனக்கு ரோல்மாடலாக இங்கே ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் திரு மோசஸ். இவர் சீன மொழி பேசக்கூடிய பார்வையற்றவர். இன்று நாங்கள் எல்லாம் நவீன தொழில்நுட்பத்தை நுகரக் காரனமாய் இருப்பவர் இவர்தான். முக்கியமாக, மலேசிய பார்வையற்றோரைக் கனினி பாவிக்க வைத்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. மேலும், பார்வையற்றோரின் சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது, வங்கிகளில் பார்வையற்றோருக்குச் சமமான வாய்ப்பைப் பெற்றுத்தருதல், மலேசிய தார்ச் சாலைகளில் பார்வையற்றோருக்கு உண்டான தடிப்புகளை ஏற்படுத்துவதற்கு அவர் எடுத்துவரும் முயற்சிகள் என அவர் இச்சமூகத்திற்கு ஆற்றிவரும் பங்கினைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பா: நீங்கள் உங்கள் படிவம் ஆறில் நாடளாவிய ரீதியில் ஒரு சிறப்பு அங்கீகாரம் கிடைத்ததாக உங்கள் சுய விவரத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த சிறப்பு அங்கீகாரம் என்ன என்பதை எங்கள் வாசகர்களுக்கும் கூறி விடுங்களேன்?
க: படிவம் ஆறில் அதிக புள்ளிகள் பெற்றதால்தான் எனக்கு நாடளாவிய ரீதியில் சிறப்பு அங்கிகாரம் கிடைத்தது. அதாவது இங்கே தேர்வு பெரும்பேறுகளை புள்ளிகள் அடிப்படையில் வரிசைப்படுத்துவார்கள். அவற்றில் 4 புள்ளிகள் எடுப்பவர்கள் முதன்மையானவர்களாக கருதப்படுவார்கள். அந்த புள்ளியில் நான் 3.92 புள்ளிகள் எடுத்ததால் எனக்கு நாடளாவிய ரீதியில் சிறப்புப் பிரிவில் தனித்த அங்கீகாரம் கிடைத்தது.
பா: நீங்கள் சட்டம் பயிலக் காரணம் என்ன? மலேசியாவில் சட்டம் படித்த வேறு பார்வையற்றோர் இருக்கிறார்களா?
க: இங்கே ஏற்கெனவே சட்டம் படித்த பார்வையற்றோர் 5, 6 பேர் இருக்கிறார்கள். நான் சட்டப் படிப்பைக் கல்வியாகக் கருதவில்லை. அதனை ஒரு அறிவாகத்தான் பார்க்கிறேன். சமூகத்தின் சட்ட திட்டங்களை அறிந்துகொள்வதற்கும், நம் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் சட்ட ரீதியிலான உரிமைகளைத் தெளிவாக அறிந்துகொள்ளவுமே சட்டப் படிப்பை தேர்வுசெய்தேன்.
பா: உங்களுக்குத் தெரிந்த உயர்நிலையில் இருக்கக்கூடிய பார்வையற்ற தமிழர் யாராவது...?
க: உயரிய நிலையில் பார்வையற்ற தமிழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரை நான் இங்கு நினைவுகூர்கிறேன். அவர் பெயர் பிரகாஷ். அவர் என்னைவிடவும் வயதிலும், அறிவிலும் மூத்தவர். அவர் தற்போது முனைவர் பட்டம் பெறுவதற்கு படித்துக் கொண்டிருக்கிறார். அவர் பொதுவாகவே மொழிபெயர்ப்புகளில் மிகுந்த ஆர்வம் உடையவர். ஆனால், அவரும் என்னைப் போலவே கணினி பாவனை, வானொலி தமிழ் வாயிலாகத்தான் தன் தமிழ்ப் புலமையை வளர்த்துக் கொண்டார்.
பா: மலேசியாவில் பார்வையற்றவராகவும் இருந்து கொண்டு தமிழராகவும் இருப்பதில் சிக்கல்கள் ஏதும் இருக்கிறதா?
க: நிச்சயமாக இங்கே சிறுபான்மையினராக வாழ்வதில் நிறையவே பிரச்சினைகள் இருக்கின்றன. அதுவும் பார்வையற்ற தமிழர் என்றால் பிரச்சினைகள் இன்னும் அதிகமாக இருக்கும். இங்கே மலாய்க்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கிறது. அவ்வளவு ஏன் மலாய் பார்வையற்றோருக்கு கிடைக்கும் வசதிகள் அனைத்துமே தமிழ் பேசும் பார்வையற்றவருக்குக் கிடைப்பதில்லை. அந்தப் பாகுபாடு பள்ளியில் துவங்கி வேலை வரை நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால், இங்கே எவருக்குத் திறமையும், மன பலமும் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் முன்னேற வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.
பா: வெளிநாட்டுத் தமிழர்களுடனான தொடர்பு கவேந்திரனுக்கு எப்படி கிடைத்தது?
க: வெளி உலகத் தொடர்பு எனது 13-ஆவது வயதில் என் தாயார் மூலம் சாத்தியமாகியது. எனது தாயார் ஒரு சிறப்பு ஆசிரியை (Special Teacher). சிறப்புக் கல்வியியலில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார்கள். அந்த சிறப்பு கல்வியியல் படித்துக்கொண்டிருக்கையில்தான் பார்வையற்றோரும் கணினி பாவிக்க முடியும் என்பதை ஒரு முனைவர் மூலம் அறிந்து நானும் கணினி பாவிக்க வேண்டும் என 2008-ல் ஒரு கணினியை வாங்கிக்கொடுத்தார். அவருக்குக் கணினி பாவிக்கத் தெரியாது என்பதால், அக்கணினியை நானே முழுக்க முழுக்க திரைவாசிப்பான் கொண்டு இயக்கப் பழகினேன். கணினி பழகிய பின்னர் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளி உலகத் தொடர்புகளை ஏர்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். அதற்கு நிச்சயம் ஸ்கைப்பிற்கு நன்றி சொல்லவேண்டும். இந்த முகநூல், வாட்ஸாப் வருகைக்கு முன்பு பார்வையற்றோரின் வெளி உலகத் தொடர்பை இணையம் வழியே சாத்தியமாக்கியது ஸ்கைப்த்தான். அவ்வாரு ஸ்கைப்பின் வழியே கிடைத்த நண்பர்கள் ஏராளம். குறிப்பாக தமிழகத்திலிருந்து நண்பர் யோகேஷ், புல்லாங்குழல் கலைஞரான பெருமாள் போன்றோரிடம் நான் நிறையவே பேசி இருக்கிறேன். சிறிது காலத்திற்குப் பிறகு ஸ்கைப்பில் எனது ஆர்வம் குறைந்துபோக, அதற்கு மாற்றாக வந்த வாட்ஸாப், மின்னஞ்சல் குழுமம் போன்றவற்றின் வாயிலாக எனது நண்பர்கள் வட்டாரத்தைப் பெருக்கிக்கொண்டேன்.
பா: இந்தியாவில் பார்வையற்றவர்களுக்கு இருக்கக் கூடிய வசதிகளில் மலேசியப் பார்வையற்றவர்கள் எதிர்பார்க்கும் வசதி என்ன? மேலும் மலேசியாவில் உள்ள வசதிகளில் எந்த வசதி இந்தியப் பார்வையற்றவர்களுக்கு கிடைத்தால் சிறப்பாக இருக்குமென நினைக்கிறீர்கள்?
க: எனக்கு இந்திய நண்பர்களுடன் அதிகம் பழக்கம் இருந்தபோதிலும், இந்தியாவைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. நான் செவி வழியே கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து இக்கேள்விக்கு பதிலளிக்கிறேன்.
இந்தியாவில் மக்கள் எந்த ஒரு விஷயத்தையும் அரசாங்கத்திடம் எளிதில் கேட்டுவிடுகிறார்கள். அதாவது, வலுவான போராட்டங்கள் வாயிலாக உங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள்கிறது. ஆனால், மலேசியாவில் அப்படி எல்லாம் மிக எளிதில், நமக்கான உரிமைகளைக் கேட்டு பெறுவது முடியாத காரியமாக இருக்கிறது. ஏனெனில் மலேசியாவில் மிகக் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதே போன்று இந்தியாவில் நிறைய சலுகைகள் உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கிறது. ஆனால் இங்கே இலவசங்களுக்கெல்லாம் சாத்தியமே இல்லை. அதற்கு மாற்றாக இங்கு அனைத்து பொருட்களுக்கும் 50 அல்லது 25 சதவிகிதத்தில் சலுகைகள் எங்களுக்குக் கிடைக்கிறது. 120 கோடி மக்கள் வசிக்கும் நாட்டிலேயே இலவசங்கள் அதிகம் கிடைக்கையில், 3 கோடி மக்கள் மட்டுமே வசிக்கும் எங்கள் நாட்டில் பல விஷயங்களும் இலவசமாகக் கிடைக்கலாமே!
இவ்விடத்தில் ஜி.எஸ்.டி பற்றியும் சொல்லியாகவேண்டும். இங்கே அனைத்து பொருட்களுக்கும் வெறும் 6 சதவிகிதம்தான் வரி விதிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இந்த வரி மிக அதிகமாகவே விதிக்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்வேன். இங்கே மாற்றுத்திறனாளிகளுக்கான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி அறவே கிடையாது. இதே மாதிரியான ஜி.எஸ்.டி. விதிவிலக்கு இந்தியாவிலும் வரவேண்டும் என நினைக்கிறேன்.
இந்தியாவில் பொது இடங்களில் இருக்கும் டேக்டைல் வசதிகளைவிட இங்கு சிறப்பாகவே இருக்கிறது. இங்கே பிரிக்ஃபீல்ட் என்ற நகரத்தை மலேசிய அரசாங்கம் பார்வையற்றவர்களுக்கான நகரம் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது. இந்ந கரத்தில் அனைத்து வசதிகளும் பார்வையற்றோருக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் வங்கிகளில் பார்வையற்றோருக்குக் கிடைக்கும் எல்லா வசதிகளும் இங்கு அறவே கிடைப்பதில்லை. ஒரு ATM அட்டை வாங்கவேண்டுமென்றாலே வக்கீல் வரை சென்று சான்றிதழ் வாங்கும் அளவிற்கு இருக்கிறது. இந்த முறை மாற வேண்டும். இந்தியாவில் புக் ஷேர் பாவிக்க மாணவர்களுக்கு இலவசமாகவே அந்த வசதிகள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வாறு இங்கும் வர வேண்டும். இன்னும் இங்கு இருக்கும் பலருக்கு புக் ஷேர் என்றால் என்ன என்றே தெரியாது. இப்பொழுதுதான் நானும் இன்னும் சில நண்பர்களும் இணைந்து புக் ஷேரை கட்டணம் செலுத்தி பாவிக்கத் துவங்கியிருக்கிறோம்
பா: மலேசியாவில் நாணயங்கள் மற்றும் தாள்களை அடையாளம் கான்பதில் பார்வையற்றோருக்கு ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா?
க: இங்கு சில வருடங்களுக்கு முன்பு வரை இவ்விஷயத்தில் அவ்வளவாக சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. முன்பெல்லாம் நாணையங்களை அதன் அளவு வேறுபாடுகளை வைத்து மிக எளிதாக அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இப்பொழுது இங்கே உள்ள மைய வங்கி வெளியிட்டிருக்கும் நாணயங்கள் எல்லாமே ஒரே அளவிலேயே இருக்கிறது. ஆகையால் இவற்றை அடையாளம் காண்பதில் மிகுந்த அசௌகரியங்களை இங்குள்ள பார்வையற்றோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தாள்களைப் பொறுத்தவரை எனக்குத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காண்பதில் சிக்கல்கள் இருப்பதாக உணர்கிறேன். இங்கிருக்கும் மைய வங்கி இந்தத் தாள்களைப் பார்வையற்றோர் எளிதில் அறிந்துகொள்ள NCBM உடன் இனைந்து money identifier-ஐக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதாவது, இது ஒரு புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு தாளிலும் எங்கள் நாட்டு வெள்ளியின் மதிப்புகள் பிரேயிலில் பொறிக்கப்பட்டிருக்கும். அந்தப் புத்தகத்திற்குள் தாள்களை மடித்து வைத்து அதன் மதிப்பை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புத்தகத்திற்குள் தாள்களை வைத்து அதன் மதிப்பைக் கண்டறிவதெல்லாம் எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை என்றுதான் சொல்லுவேன்.
பா: மலேசியாவில் பார்வையற்றோரின் திருமணச் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?
க: இங்கும் பார்வையற்றோரை பார்வையற்றோரே திருமணம் செய்துகொள்கிறார்கள். சில பார்வையற்றவர்களுக்குப் பார்வை உள்ள பெண்களும் துணைவியாக கிடைக்கிறார்கள். அம்மாதிரி பார்வையற்றவர்கள் மிக உயரிய பதவியில் இருக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பார்வையற்ற ஆண்களைவிட பெண்கள் திருமண விஷயத்தில் நிறையவே சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். பார்வையற்ற பென்களுக்கு பார்வை உள்ள கணவன் கிடைப்பது மிகவும் கடினம்தான். பார்வையற்ற பெண்கள் பார்வையற்ற ஆண்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலைதான் இங்கே நிலவுகிறது.
இவ்விடத்தில் திருமணம் குறித்த இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்துகொள்கிறேன். இங்கே தமிழ் பேசும் பார்வையற்றவர்களை விட மலாய் பேசும் பார்வையற்றவர்கள் மிக அதிகமாகவே இருக்கிறார்கள். இதனால் இவ்விரு பிரிவினருக்கும் இடையே காதல் மலர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட காதல் சமாச்சாரங்கள் திருமணத்தை நோக்கிச் செல்கையில் அவர்களுக்கு தடுப்புச் சுவராக மதம் முன்னே வந்து நிற்கிறது. இதன் காரணமாக இங்கு மத மாற்றங்கள் அதிகம் நிகழ்கின்றன.
பா: மலேசியாவின் தேர்வு முறை குறித்து கூருங்களேன்.
க: நாங்கள் பள்ளிக்கூடங்களில் தேர்வு அனைத்தையும் பிரேயிலில்தான் எழுதுகிறோம். ட்ரான்ஸ்கிரைபர்கள் கொண்டு எங்கள் பிரேயில் எழுத்துக்களை மை எழுத்துக்களில் மாற்றித்தான் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளும் இம்முறையில்தான் நடைபெறுகின்றன. எங்கள் கல்லூரித் தேர்வு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டுதான் நடைபெறுகிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டபடியால் இப்பொழுதெல்லாம் நாங்கள் எங்கள் கல்லூரித் தேர்வுகளை கணினி கொண்டு எழுதுகிறோம். இங்கிருக்கும் சில பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் இருக்கும் பதிலி எழுத்தர் (scribe) முறையையும் பின்பற்றுகிறார்கள்.
பா: நிறைய தகவல்களை வழங்கினீர்கள். உங்கள் வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாக அமைய எங்கள் வாழ்த்துகள்.
க: மிக்க நன்றி. இன்றைய நமது ஸ்கைப் வழியிலான இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.
--
எழுத்தாக்கம்: பொன். குமரவேல்.
(நன்றி: ‘விழிச்சவால்’ (ஆகஸ்ட் 2017) பிரெயில் இதழ்)
கவேந்திரன்: நான் மலேசியாவில் உள்ள தலைசிறந்த மலாய் அரசுப் பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு சட்டம் பயின்று வருகிறேன். என் தந்தை இங்கே அரசாங்கத்தில் கட்டுமானத் துறையில் வேலைசெய்கிறார். எங்கள் முன்னோர்களின் பூர்வீகம் எல்லாமே இந்தியாதான். எனது பொழுதுபோக்கின் பெரும்பாலான நேரத்தைக் கணினியுடன் செலவு செய்வேன். மேலும் புதிய புதிய விஷயங்களை அறிந்து கொள்வதிலும், அதிகமாக வெளியுலக மனிதர்களுடன் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதிலும் அதிகம் ஆர்வம் கொண்டவன் நான். நான் இசை மீது அதிகம் ஆர்வம் கொண்டவனாக வளர்ந்திருக்கிறேன். ஆனால், முறையான இசை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளோ, அதற்கான நேரமோ எனக்கு இதுவரை இங்கே கிட்டவில்லை. ஐஃபோன்களோடும், வானொலிகளோடுமே எனது இசைப் பொழுதுகள் கழிந்துகொண்டிருக்கின்றன.
பா: உங்கள் பள்ளிப் படிப்பு குறித்துக் கூறுங்களேன்?
க: எனது பள்ளி வாழ்க்கையைப் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் துவங்கினேன். அங்கு ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு எனது இடைநிலைக் கல்வியை அதாவது படிவம் 5 வரை கோலாலம்பூரில் உள்ள சிறப்புப் பள்ளியில் பயின்றேன். பின்னர் படிவம் 6-ஐ ஒருங்கிணைந்த கல்வியின் வழி பயின்றேன். இங்கே படிவம் ஆறு என்பது பள்ளி அளவில் உயர் தராதாரத்தைக் குறிக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் உங்கள் இந்தியாவில் உள்ள +2-க்குச் சமம் இந்த படிவம் ஆறு.
பா: உங்கள் சிறப்புப் பள்ளிகளில் கற்பித்தல் மொழி என்ன? தமிழ் கற்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிட்டியதா?
க: இங்கே கற்பித்தல் மொழி என்பது முழுக்க முழுக்க மலாய்தான். இரண்டாவது கற்பித்தல் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. ஆகையால் பார்வையற்றோரைப் பொறுத்தவரை இங்கே தமிழ் கற்பதற்கான வாய்ப்புகள் என்பது கிடையவே கிடையாது. ஆனால், பார்வை உள்ள தமிழர்களுக்கு தமிழ் கற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பார்வையற்றோருக்குத் தமிழ் வழிக் கற்றல் இல்லாமல் போனதற்கான முக்கிய காரணம் இங்கே தமிழில் பிரெயிலின் பயன்பாடு இல்லாமல் போனதுதான் என்று நினைக்கிறேன். இன்னமும் இங்கே பாடப் புத்தகங்களோ, இதர புத்தகங்களோ இதுவரை தமிழ் பிரெயிலில் வெளிவந்ததாக எனக்குத் தெரியவில்லை. மலேசியாவைப் பொறுத்தவரை 524 பள்ளிக்கூடங்கள்தான் இருக்கும். அவற்றில் இருபது லட்சம் மாணவர்கள்தான் பயில்வார்கள். அதிலும் பார்வையற்றவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆகையால் இங்கே பார்வையற்றோருக்கான தமிழ் பிரெயில் குறித்தான ஏற்பாடுகளையோ, அதற்கான முன்னெடுப்புகளையோ இதுவரை யாரும் எடுத்ததாகத் தெரியவில்லை.
பா: உங்களுக்குத் தமிழ் பிரெயில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் பிரெயில் தெரிந்த பார்வையற்ற தமிழர் யாராவது அங்கே இருக்கிறார்களா?
க: இங்கே எனக்குத் தெரிந்த பார்வையற்ற தமிழ் நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவருக்கும் மலாய் மற்றும் ஆங்கில பிரெயில் நன்றாகத் தெரியும். என் அறிவுக்கு எட்டியவரை தமிழ் பிரெயில் தெரிந்த பார்வையற்றோர் எவரும் இங்கே இல்லை.
பா: மலேசியாவில் கணினியில் தமிழ்ப் பயன்பாடு பார்வையற்றோரை பொறுத்தவரை எப்படி இருக்கிறது?
க: கணினியில் தமிழ்ப் பயன்பாடு நம் பார்வையற்றோர் சமூகத்திற்கு NVDA மென்பொருளின் வரவுக்கு பின்னரே சாத்தியமானதென்பதை நீங்கள் அறிவீர்கள். மலேசியாவில் கணினியில் தமிழ்ப் பயன்பாடு பார்வையற்றோரைப் பொறுத்தவரை ஓரளவிற்குச் சிறப்பாகத்தான் இருக்கிறது. இப்போதுதான் இங்கே கணினியில் இணையம் வழியே செய்தித் தாள்கள் படிப்பது, நாவல்கள், கதைகள் படிப்பதுவரை வளர்ந்திருக்கிறார்கள்.
பா: மலேசியாவைப் பொறுத்தவரை பார்வையற்றோருக்கான வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?
க: அடிப்படையாக இங்கே பார்வையற்றோர் என்று சொன்னாலே அனைவர் மனதிலும் தோன்றும் பிம்பம் மசாஜ் தான். அதற்கு அடுத்ததாகத்தான் கைத்தொழில், சுயதொழில், இசைக்குழு வைத்துச் சம்பாதிப்பது, ஆசிரியர் பணி போன்றவை. இங்கே நம் படிப்பிற்கு ஏற்றவாறு ஓரளவிற்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. தொடக்கக் காலத்தில் பார்வையற்றோருக்கான ஆசிரியர் பணி குறித்து மலேசிய அரசு ஒரு கொள்கை வைத்திருந்தது. அதாவது பார்வையற்ற ஆசிரியர்கள் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் மட்டுமே பணியாற்ற வேண்டும். இதர பள்ளிகளில் பணியாற்ற முடியாது. இந்த கொள்கையைச் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் மலேசிய அரசாங்கம் தளர்த்திக் கொண்டிருக்கிறது. இவ்விடத்தில் மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் மலேசிய அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டைக் கண்டிப்பாகப் பாராட்டி ஆகவேண்டும். ஏனெனில் இங்கே மாற்றுத்திறனாளிகளுக்கென்றே ஒரு பிரதிநிதியை அரசாங்கம் தனது நாடாளுமன்ற மேலவையில் நியமித்திருக்கிறது. அந்த பிரதிநிதிதான் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து விதமான சிக்கல்களையும் அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்வார். நான் ஏற்கனவே சொன்ன கைத்தொழில், சுயதொழில், மசாஜ் இவற்றில் எதையுமே செய்ய இயலாதவர்கள் டிஷ்யு பேப்பர் விற்று பிழைத்துக் கொள்கிறார்கள். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில் இந்தத் தொழிலில் ஈடுபடும் பார்வையற்றோர் பரிதாபமாகவே இங்கு பார்க்கப்படுகிறார்கள்.
ஆசிரியர் பணியை விடுத்து எவ்வளவோ வேலை வாய்ப்புகள் நம் சமூகத்திற்கு இருக்கிறது. ஆனால், அந்த வாய்ப்புகள் உலகில் பல நாடுகளிலும் தரப்படுகின்றன. உதாரணமாக நம் சமூகத்தினருக்கு அறிவித்தல் பணி என்பது கைவந்த கலை. இந்த அறிவித்தல் பணியைக் கூட எந்த ஒரு வானொலியும் முன்வந்து நமக்குத் தருவதில்லை. மற்ற நாடுகள் இதில் எப்படி என்பது எனக்குத் தெரியாது. மலேசியாவைப் பொறுத்தவரை அறிவித்தலுக்கான முன்னெடுப்புகளை எந்த ஒரு வானொலியும் இதுவரை முன்வந்து செய்ததாகத் தெரியவில்லை. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் பார்வையற்றவர்கள் தாங்களாகவே இணைய வானொலிகளை நடத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். இந்தியாவில் எப்படி ஹிந்தி மற்றும் தமிழ் நண்பர்கள் இணைந்து ரேடியோ உடான் என்ற இணைய வானொலி நடத்துகிறார்களோ அதே போன்று இங்கும் மலாய் மொழி பேசும் பார்வையற்றோர்கள் இணைந்து அம்போய் (Amboi) என்னும் இணைய வானொலியை நடத்துகிறார்கள். அம்போய் என்ற மலாய் வார்த்தைக்கு தமிழில் “அப்படியா!” என்பது பொருள்.
பா: உங்கள் பள்ளிக்கூடங்களிலேயே வேலை வாய்ப்புக்கான பயிற்சிகளை தருகிறார்களா?
க: இல்லை. ஆனால், வேலை வாய்ப்புப் பயிற்சிகளுக்கென்றே சிறப்பு மையங்கள் இங்கே இயங்கி வருகின்றன. அவற்றில்தான் கைத்தொழில்கள், அலுவலக மேலாண்மை, கணினிப் பயிற்சி முதலியவை பயிற்றுவிக்கப்படுகின்றன.
பா: கவேந்திரனுக்கு மலேசியாவில் ரோல்மாடலாக பார்வையற்றவர் யாராவது இருக்கிறார்களா?
க: எனக்கு ரோல்மாடலாக இங்கே ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் திரு மோசஸ். இவர் சீன மொழி பேசக்கூடிய பார்வையற்றவர். இன்று நாங்கள் எல்லாம் நவீன தொழில்நுட்பத்தை நுகரக் காரனமாய் இருப்பவர் இவர்தான். முக்கியமாக, மலேசிய பார்வையற்றோரைக் கனினி பாவிக்க வைத்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. மேலும், பார்வையற்றோரின் சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது, வங்கிகளில் பார்வையற்றோருக்குச் சமமான வாய்ப்பைப் பெற்றுத்தருதல், மலேசிய தார்ச் சாலைகளில் பார்வையற்றோருக்கு உண்டான தடிப்புகளை ஏற்படுத்துவதற்கு அவர் எடுத்துவரும் முயற்சிகள் என அவர் இச்சமூகத்திற்கு ஆற்றிவரும் பங்கினைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பா: நீங்கள் உங்கள் படிவம் ஆறில் நாடளாவிய ரீதியில் ஒரு சிறப்பு அங்கீகாரம் கிடைத்ததாக உங்கள் சுய விவரத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த சிறப்பு அங்கீகாரம் என்ன என்பதை எங்கள் வாசகர்களுக்கும் கூறி விடுங்களேன்?
க: படிவம் ஆறில் அதிக புள்ளிகள் பெற்றதால்தான் எனக்கு நாடளாவிய ரீதியில் சிறப்பு அங்கிகாரம் கிடைத்தது. அதாவது இங்கே தேர்வு பெரும்பேறுகளை புள்ளிகள் அடிப்படையில் வரிசைப்படுத்துவார்கள். அவற்றில் 4 புள்ளிகள் எடுப்பவர்கள் முதன்மையானவர்களாக கருதப்படுவார்கள். அந்த புள்ளியில் நான் 3.92 புள்ளிகள் எடுத்ததால் எனக்கு நாடளாவிய ரீதியில் சிறப்புப் பிரிவில் தனித்த அங்கீகாரம் கிடைத்தது.
பா: நீங்கள் சட்டம் பயிலக் காரணம் என்ன? மலேசியாவில் சட்டம் படித்த வேறு பார்வையற்றோர் இருக்கிறார்களா?
க: இங்கே ஏற்கெனவே சட்டம் படித்த பார்வையற்றோர் 5, 6 பேர் இருக்கிறார்கள். நான் சட்டப் படிப்பைக் கல்வியாகக் கருதவில்லை. அதனை ஒரு அறிவாகத்தான் பார்க்கிறேன். சமூகத்தின் சட்ட திட்டங்களை அறிந்துகொள்வதற்கும், நம் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் சட்ட ரீதியிலான உரிமைகளைத் தெளிவாக அறிந்துகொள்ளவுமே சட்டப் படிப்பை தேர்வுசெய்தேன்.
பா: உங்களுக்குத் தெரிந்த உயர்நிலையில் இருக்கக்கூடிய பார்வையற்ற தமிழர் யாராவது...?
க: உயரிய நிலையில் பார்வையற்ற தமிழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரை நான் இங்கு நினைவுகூர்கிறேன். அவர் பெயர் பிரகாஷ். அவர் என்னைவிடவும் வயதிலும், அறிவிலும் மூத்தவர். அவர் தற்போது முனைவர் பட்டம் பெறுவதற்கு படித்துக் கொண்டிருக்கிறார். அவர் பொதுவாகவே மொழிபெயர்ப்புகளில் மிகுந்த ஆர்வம் உடையவர். ஆனால், அவரும் என்னைப் போலவே கணினி பாவனை, வானொலி தமிழ் வாயிலாகத்தான் தன் தமிழ்ப் புலமையை வளர்த்துக் கொண்டார்.
பா: மலேசியாவில் பார்வையற்றவராகவும் இருந்து கொண்டு தமிழராகவும் இருப்பதில் சிக்கல்கள் ஏதும் இருக்கிறதா?
க: நிச்சயமாக இங்கே சிறுபான்மையினராக வாழ்வதில் நிறையவே பிரச்சினைகள் இருக்கின்றன. அதுவும் பார்வையற்ற தமிழர் என்றால் பிரச்சினைகள் இன்னும் அதிகமாக இருக்கும். இங்கே மலாய்க்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கிறது. அவ்வளவு ஏன் மலாய் பார்வையற்றோருக்கு கிடைக்கும் வசதிகள் அனைத்துமே தமிழ் பேசும் பார்வையற்றவருக்குக் கிடைப்பதில்லை. அந்தப் பாகுபாடு பள்ளியில் துவங்கி வேலை வரை நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால், இங்கே எவருக்குத் திறமையும், மன பலமும் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் முன்னேற வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.
பா: வெளிநாட்டுத் தமிழர்களுடனான தொடர்பு கவேந்திரனுக்கு எப்படி கிடைத்தது?
க: வெளி உலகத் தொடர்பு எனது 13-ஆவது வயதில் என் தாயார் மூலம் சாத்தியமாகியது. எனது தாயார் ஒரு சிறப்பு ஆசிரியை (Special Teacher). சிறப்புக் கல்வியியலில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார்கள். அந்த சிறப்பு கல்வியியல் படித்துக்கொண்டிருக்கையில்தான் பார்வையற்றோரும் கணினி பாவிக்க முடியும் என்பதை ஒரு முனைவர் மூலம் அறிந்து நானும் கணினி பாவிக்க வேண்டும் என 2008-ல் ஒரு கணினியை வாங்கிக்கொடுத்தார். அவருக்குக் கணினி பாவிக்கத் தெரியாது என்பதால், அக்கணினியை நானே முழுக்க முழுக்க திரைவாசிப்பான் கொண்டு இயக்கப் பழகினேன். கணினி பழகிய பின்னர் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளி உலகத் தொடர்புகளை ஏர்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். அதற்கு நிச்சயம் ஸ்கைப்பிற்கு நன்றி சொல்லவேண்டும். இந்த முகநூல், வாட்ஸாப் வருகைக்கு முன்பு பார்வையற்றோரின் வெளி உலகத் தொடர்பை இணையம் வழியே சாத்தியமாக்கியது ஸ்கைப்த்தான். அவ்வாரு ஸ்கைப்பின் வழியே கிடைத்த நண்பர்கள் ஏராளம். குறிப்பாக தமிழகத்திலிருந்து நண்பர் யோகேஷ், புல்லாங்குழல் கலைஞரான பெருமாள் போன்றோரிடம் நான் நிறையவே பேசி இருக்கிறேன். சிறிது காலத்திற்குப் பிறகு ஸ்கைப்பில் எனது ஆர்வம் குறைந்துபோக, அதற்கு மாற்றாக வந்த வாட்ஸாப், மின்னஞ்சல் குழுமம் போன்றவற்றின் வாயிலாக எனது நண்பர்கள் வட்டாரத்தைப் பெருக்கிக்கொண்டேன்.
பா: இந்தியாவில் பார்வையற்றவர்களுக்கு இருக்கக் கூடிய வசதிகளில் மலேசியப் பார்வையற்றவர்கள் எதிர்பார்க்கும் வசதி என்ன? மேலும் மலேசியாவில் உள்ள வசதிகளில் எந்த வசதி இந்தியப் பார்வையற்றவர்களுக்கு கிடைத்தால் சிறப்பாக இருக்குமென நினைக்கிறீர்கள்?
க: எனக்கு இந்திய நண்பர்களுடன் அதிகம் பழக்கம் இருந்தபோதிலும், இந்தியாவைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. நான் செவி வழியே கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து இக்கேள்விக்கு பதிலளிக்கிறேன்.
இந்தியாவில் மக்கள் எந்த ஒரு விஷயத்தையும் அரசாங்கத்திடம் எளிதில் கேட்டுவிடுகிறார்கள். அதாவது, வலுவான போராட்டங்கள் வாயிலாக உங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள்கிறது. ஆனால், மலேசியாவில் அப்படி எல்லாம் மிக எளிதில், நமக்கான உரிமைகளைக் கேட்டு பெறுவது முடியாத காரியமாக இருக்கிறது. ஏனெனில் மலேசியாவில் மிகக் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதே போன்று இந்தியாவில் நிறைய சலுகைகள் உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கிறது. ஆனால் இங்கே இலவசங்களுக்கெல்லாம் சாத்தியமே இல்லை. அதற்கு மாற்றாக இங்கு அனைத்து பொருட்களுக்கும் 50 அல்லது 25 சதவிகிதத்தில் சலுகைகள் எங்களுக்குக் கிடைக்கிறது. 120 கோடி மக்கள் வசிக்கும் நாட்டிலேயே இலவசங்கள் அதிகம் கிடைக்கையில், 3 கோடி மக்கள் மட்டுமே வசிக்கும் எங்கள் நாட்டில் பல விஷயங்களும் இலவசமாகக் கிடைக்கலாமே!
இவ்விடத்தில் ஜி.எஸ்.டி பற்றியும் சொல்லியாகவேண்டும். இங்கே அனைத்து பொருட்களுக்கும் வெறும் 6 சதவிகிதம்தான் வரி விதிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இந்த வரி மிக அதிகமாகவே விதிக்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்வேன். இங்கே மாற்றுத்திறனாளிகளுக்கான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி அறவே கிடையாது. இதே மாதிரியான ஜி.எஸ்.டி. விதிவிலக்கு இந்தியாவிலும் வரவேண்டும் என நினைக்கிறேன்.
இந்தியாவில் பொது இடங்களில் இருக்கும் டேக்டைல் வசதிகளைவிட இங்கு சிறப்பாகவே இருக்கிறது. இங்கே பிரிக்ஃபீல்ட் என்ற நகரத்தை மலேசிய அரசாங்கம் பார்வையற்றவர்களுக்கான நகரம் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது. இந்ந கரத்தில் அனைத்து வசதிகளும் பார்வையற்றோருக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் வங்கிகளில் பார்வையற்றோருக்குக் கிடைக்கும் எல்லா வசதிகளும் இங்கு அறவே கிடைப்பதில்லை. ஒரு ATM அட்டை வாங்கவேண்டுமென்றாலே வக்கீல் வரை சென்று சான்றிதழ் வாங்கும் அளவிற்கு இருக்கிறது. இந்த முறை மாற வேண்டும். இந்தியாவில் புக் ஷேர் பாவிக்க மாணவர்களுக்கு இலவசமாகவே அந்த வசதிகள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வாறு இங்கும் வர வேண்டும். இன்னும் இங்கு இருக்கும் பலருக்கு புக் ஷேர் என்றால் என்ன என்றே தெரியாது. இப்பொழுதுதான் நானும் இன்னும் சில நண்பர்களும் இணைந்து புக் ஷேரை கட்டணம் செலுத்தி பாவிக்கத் துவங்கியிருக்கிறோம்
பா: மலேசியாவில் நாணயங்கள் மற்றும் தாள்களை அடையாளம் கான்பதில் பார்வையற்றோருக்கு ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா?
க: இங்கு சில வருடங்களுக்கு முன்பு வரை இவ்விஷயத்தில் அவ்வளவாக சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. முன்பெல்லாம் நாணையங்களை அதன் அளவு வேறுபாடுகளை வைத்து மிக எளிதாக அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இப்பொழுது இங்கே உள்ள மைய வங்கி வெளியிட்டிருக்கும் நாணயங்கள் எல்லாமே ஒரே அளவிலேயே இருக்கிறது. ஆகையால் இவற்றை அடையாளம் காண்பதில் மிகுந்த அசௌகரியங்களை இங்குள்ள பார்வையற்றோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தாள்களைப் பொறுத்தவரை எனக்குத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காண்பதில் சிக்கல்கள் இருப்பதாக உணர்கிறேன். இங்கிருக்கும் மைய வங்கி இந்தத் தாள்களைப் பார்வையற்றோர் எளிதில் அறிந்துகொள்ள NCBM உடன் இனைந்து money identifier-ஐக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதாவது, இது ஒரு புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு தாளிலும் எங்கள் நாட்டு வெள்ளியின் மதிப்புகள் பிரேயிலில் பொறிக்கப்பட்டிருக்கும். அந்தப் புத்தகத்திற்குள் தாள்களை மடித்து வைத்து அதன் மதிப்பை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புத்தகத்திற்குள் தாள்களை வைத்து அதன் மதிப்பைக் கண்டறிவதெல்லாம் எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை என்றுதான் சொல்லுவேன்.
பா: மலேசியாவில் பார்வையற்றோரின் திருமணச் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?
க: இங்கும் பார்வையற்றோரை பார்வையற்றோரே திருமணம் செய்துகொள்கிறார்கள். சில பார்வையற்றவர்களுக்குப் பார்வை உள்ள பெண்களும் துணைவியாக கிடைக்கிறார்கள். அம்மாதிரி பார்வையற்றவர்கள் மிக உயரிய பதவியில் இருக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பார்வையற்ற ஆண்களைவிட பெண்கள் திருமண விஷயத்தில் நிறையவே சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். பார்வையற்ற பென்களுக்கு பார்வை உள்ள கணவன் கிடைப்பது மிகவும் கடினம்தான். பார்வையற்ற பெண்கள் பார்வையற்ற ஆண்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலைதான் இங்கே நிலவுகிறது.
இவ்விடத்தில் திருமணம் குறித்த இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்துகொள்கிறேன். இங்கே தமிழ் பேசும் பார்வையற்றவர்களை விட மலாய் பேசும் பார்வையற்றவர்கள் மிக அதிகமாகவே இருக்கிறார்கள். இதனால் இவ்விரு பிரிவினருக்கும் இடையே காதல் மலர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட காதல் சமாச்சாரங்கள் திருமணத்தை நோக்கிச் செல்கையில் அவர்களுக்கு தடுப்புச் சுவராக மதம் முன்னே வந்து நிற்கிறது. இதன் காரணமாக இங்கு மத மாற்றங்கள் அதிகம் நிகழ்கின்றன.
பா: மலேசியாவின் தேர்வு முறை குறித்து கூருங்களேன்.
க: நாங்கள் பள்ளிக்கூடங்களில் தேர்வு அனைத்தையும் பிரேயிலில்தான் எழுதுகிறோம். ட்ரான்ஸ்கிரைபர்கள் கொண்டு எங்கள் பிரேயில் எழுத்துக்களை மை எழுத்துக்களில் மாற்றித்தான் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளும் இம்முறையில்தான் நடைபெறுகின்றன. எங்கள் கல்லூரித் தேர்வு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டுதான் நடைபெறுகிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டபடியால் இப்பொழுதெல்லாம் நாங்கள் எங்கள் கல்லூரித் தேர்வுகளை கணினி கொண்டு எழுதுகிறோம். இங்கிருக்கும் சில பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் இருக்கும் பதிலி எழுத்தர் (scribe) முறையையும் பின்பற்றுகிறார்கள்.
பா: நிறைய தகவல்களை வழங்கினீர்கள். உங்கள் வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாக அமைய எங்கள் வாழ்த்துகள்.
க: மிக்க நன்றி. இன்றைய நமது ஸ்கைப் வழியிலான இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.
--
எழுத்தாக்கம்: பொன். குமரவேல்.
(நன்றி: ‘விழிச்சவால்’ (ஆகஸ்ட் 2017) பிரெயில் இதழ்)