வங்கிகளின் கடன் அட்டைகளுக்கான தொகைகளை வசூலிக்கும் தனியார் ஏஜென்சி ஒன்றில், வெவ்வேறு இடங்களுக்கு நேரில் சென்று வசூல் செய்யும் வேலை செய்கின்றார் நாயகன் விதார்த். குடும்பத்தினர் யாரும் இல்லாமல் தனி நபரான அவரது அறைக்கு எதிரில் உள்ள கீழ் வீட்டில் ஒரு கொலை (ஐஸ்வர்யா ராஜேஷ்) நிகழ்கிறது. எவரும் கேட்காத நிலையிலும் தானே முன்வந்து காவல் நிலையத்தில் சாட்சி சொல்லச் சொல்கிறார் நாயகன்; அதுவும் அது பொய்ச் சாட்சியாக; அதிலும் அவர் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியும் கூட. அவர் தனது குறைபாட்டினை மற்றவர்களிடம் எவ்வாறு மறைக்கிறார், தானாகவே முன்வந்து ஏன் பொய்ச்சாட்சி செல்கிறார், அந்தக் குற்றச் செயலுக்காக அவருக்குக் கிடைக்கும் தண்டனை என்ன என்பது தான் "குற்றமே தண்டனை" திரைப்படத்தின் மையக் கதை.
பெட்டிக்கடை ஒன்றைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். வாடிக்கையாளர்களின் இடுப்பு அல்லது மார்பு அளவிற்குத் தடுப்பு போல பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற ஒரு கடையில் நாயகன் விதார்த் பணம் கொடுத்துவிட்டு சிகரெட் கேட்கிறார். சில வினாடிகள் கழித்து, இன்னும் ஏன் சிகரெட் கொடுக்கவில்லை என கோபிக்கிறார். ஏற்கனவே நாயகனுக்கு முன்னால் வைத்துவிட்ட சிகரெட்டைக் காண்பிக்கிறார் கடைக்காரர். அதாவது கடைக்காரரின் முகம் தெரியும் நாயகனுக்கு, இடையில் மார்பு மட்டத்தில் வைக்கப்பட்ட சிகரெட் தெரியவில்லை. இதுதான் நாயகனின் பார்வைத் திறனில் உள்ள குறைபாடு. குழாய் வழியாகப் பார்ப்பது போல இருக்கும் குகைப் பார்வை (Tunnel View).
அதாவது பார்வை மட்டத்திற்கு நேராக உள்ளவை மட்டுமே தெரியும். அதற்குக் கீழே, மேலே, இடது, வலது பக்கங்களில் உள்ள எதுவும் தெரியாது. ஆக எதிரில் நிற்கும் ஒரு நபரை பாஸ்போர்ட் புகைப்படம் அளவிற்கு தான் பார்க்க இயலும். அந்தக் குழாய் போன்ற பார்வை வட்டமும் சிறிது சிறிதாகச் சுருங்கிக்கொண்டே வருகிறது. அலுவலகத்தில் கொடுக்கப்படும் தாள்களைக் கண்களுக்கு நேராக வைத்துதான் படிக்கிறார்; ஓரத்தில் வரும் வாகனங்களைப் பார்க்க முடியாததால் மிக மெதுவாகவே தனது இருசக்கர வாகனத்தை ஓட்டுகிறார். சில நேரங்களில் தரையில் கிடக்கும் பொருட்கள் அல்லது நபர்கள் மீது மோதிவிடுகிறார். ஆக பார்வை இருந்தும் இல்லாத சூழலில் வெளியே தெரியாதவாறு சமாளிக்கிறார் நாயகன்.
சின்னத்தம்பி திரைப்படத்தில் காட்டப்படும் கவுண்டமணியின் மாலைக்கண் நோய் போல பார்வை மாற்றுத்திறனாளிகளில் பல வகையினர் இருக்கின்றனர். ஆனால் காலங்காலமாக முழுப் பார்வையற்றவர்களை மட்டுமே திரையில் காட்டிவரும் சூழலில் குகைப் பார்வை போன்ற ஒரு பிரச்சினையைக் காட்டியுள்ள இத்திரைப்படம் மிகவும் முக்கியமானது. அதிலும் பார்வைத்திறன் படிப்படியாகக் குறைந்து வருவதைக் காட்டியிருப்பதும் பாராட்டத்தக்கது. ஏனெனில் வயதுவந்த பார்வை மாற்றுத்திறனாளிகளில் பலரும் ஏதோ ஒரு குறைபாட்டினால் படிப்படியாகப் பார்வைத் திறனை இழந்து வருவோர் அல்லது முழுமையாக இழந்திருப்போர் தான்.
நாயகன் கண் பரிசோதனையின் போது மருத்துவருடன் நடக்கும் உரையாடலைக் கவனியுங்கள்...
"உங்களுக்கு இந்தப் பிரச்சினை எப்போ இருந்து இருக்கு?"
"சின்ன வயசுல இருந்தே இருக்கு டாக்டர்."
"எங்கயும் ட்ரீட்மெண்ட் பாக்கலயா?"
"எல்லாரும் இப்படித்தான் பாக்கறாங்கன்னு நினைச்சிட்டிருந்தேன். ஊர்ல ஒரு டாக்டர்ட்ட போனேன். ஏதோ சொட்டு மருந்து கொடுத்தாங்க. இப்ப சரி பண்ண முடியுமா, டாக்டர்?"
"சரி பண்ண முடியாது. ஐ டிரான்ஸ்பிளான்ட் தான் பண்ணியாகனும். அதுக்கும் 3.20 இலட்சம் செலவாகும்."
"வேற வழில ஏதும் குணப்படுத்த முடியாதா டாக்டர்?"
"ஐ டிரான்ஸ்பிளான்ட் தவிர வேற வழியில்ல. நீங்க வேணும்ன்னா வேற ஹாஸ்பிட்டல்ல செகண்ட் ஒப்பீனியன் கேட்டுக்குங்க. அப்புறம் உங்க பார்வை கொறஞ்சிக்கிட்டே வரும். டூ வீலர் ஓட்டறத அவாய்ட் பண்ணுங்க. சீக்கிரமா பணத்த ரெடி பண்ணுங்க."
மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் குறைபாட்டினை உணர இயலாத நிலையில் இருப்பது. அதாவது எல்லோரும் இப்படித்தான் இருப்பதாக எண்ணிக்கொள்வது. கரும்பலகையைப் பார்த்து எழுதுவதில், புத்தகம் பார்த்துப் படிப்பது, எழுதுவதில் உள்ள பிரச்சினைகளை இரண்டு மூன்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டிய பிறகு தான் பெரும்பாலான பெற்றோர்கள் பரிசோதனைக்கே அழைத்துச் செல்கின்றனர். இத்தகைய தாமதங்களினால் எத்தனையோ பேர் பார்வை இழப்பைச் சந்திக்கின்றனர். அதிலும் போலி மருத்துவர்கள், போலி மருந்துகள் போன்ற பிரச்சினைகளும் இன்னொரு புறம் தாக்குகின்றன.
இந்தப் பணத்தேவைக்காக நாயகன் பொய்ச் சாட்சியாக மாறுகிறான். மருத்துவமனையில் பணத்தைச் செலுத்தும்போது மருந்துச் செலவுகள் மற்றும் மருத்துவமனைக் கட்டணம் சேர்த்து மொத்தமாக 4.82 இலட்சம் செலுத்த வேண்டும் என்கின்றனர். அதையும் செலுத்திய பிறகு, நாயகனின் தனது முறை வருவதற்கு இரண்டு முதல் ஆறேழு ஆண்டுகளுக்கு மேல் வரை காத்திருக்க வேண்டும் என்கின்றனர். பெயரை முன்னால் கொண்டு வருவதற்கு மேலும் ஐந்து இலட்சம் இலஞ்சம் கேட்கின்றனர். அதையும் செலுத்திவிட்டு வெளியே வரும்போது, கண்மாற்று சிகிச்சைக்குப் பரிந்துரைத்த மருத்துவரைச் சாலையில் சந்திக்கிறான் நாயகன். அப்போதைய உரையாடலைக் கவனியுங்கள்...
"ஹலோ, இப்ப எப்படி இருக்கீங்க சார்?"
"அப்படியே தான் இருக்கு டாக்டர். இப்பதான் ஆபரேசனுக்குப் பணத்தக் கட்டியிருக்கேன். வெயிட் பண்ணச் சொல்லிருக்காங்க.'
"பணத்தக் கட்டிட்டீங்களா?"
"ஆமா டாக்டர். ஏன்?"
"சார், ஆப்ரேசன் பண்ணினாலும் உங்களுக்குப் பார்வை கிடைக்காது. ஏன்னா உங்க பிராப்ளம் அந்த மாதிரி. இதைப் பேஷன்ட்கிட்டச் சொல்றதுக்கு நிர்வாகத்துல ஒத்துக்க மாட்டாங்க. அதான் உங்ககிட்ட அப்பச் சொல்லல. நானுங்கூட உங்கள வேற இடத்துல செகண்ட் ஒப்பீனியன் கேட்டுக்கச் சொன்னேனே? நீங்க செக் பண்ணிக்கலயா?"
கண்ணைப் பறிக்கும் பிரம்மாண்டமான விளம்பரங்களில் கண்ணுக்கே தெரியாத எழுத்துக்களில் "நிபந்தனைகளுக்கு உட்பட்டது" என அச்சிடப்பட்டிருக்கும். அதைப் போலவே "நீங்கள் தானே செகண்ட் ஒப்பீனியன் செக் பண்ணிப் பார்த்திருக்க வேண்டும்" என்ற நழுவிச் செல்லும் வார்த்தைகள். முதலில் அறுவை சிகிச்சைக் கட்டணத்தை மட்டுமே சொல்வது, பிறகு மருந்துச் செலவுகள், கடைசியாக கண் தானம் கிடைப்பதில் உள்ள பற்றாக்குறையைக் காரணம் காட்டி இலஞ்சம் கேட்பது என எப்படி தேன் தடவிய வார்த்தைகளில் விளையாடுகின்றனர்.
பெரும்பாலான திரைப்படங்களில் அறுவை சிகிச்சைக்குப் பணம் இல்லை அல்லது கண் கட்டை அவிழ்த்தவுடன் பார்வை கிடைத்தது போன்ற காட்சிகள் தான் இருக்கும். ஆனால் அறுவை சிகிச்சை செய்தாலும் பார்வை கிடைக்காது என்பன போன்ற குறைபாடுகள், அதை மறைத்துப் பணம் பறிக்கும் மருத்துவ மோசடிகள், கண் தானம் கிடைப்பதில் உள்ள பற்றாக்குறை, கண் தானத்தின் அவசியம் போன்ற பேசாப் பொருட்களை ஓரளவாவது பேசிய அளவில் இத்திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டன் போற்றத்தக்கவர். இறுதியாக ஒரு டுவிஸ்ட்... நாயகன் வெறும் பணத்திற்காக மட்டுமே பொய்ச் சாட்சியாக மாறவில்லை. உண்மைக் காரணம் என்ன என்பதைத் திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இனி அடுத்த பகுதிக்கான டீசர் இதோ: கடவுள் உள்ளமே, ஒவ்வொரு பூக்களுமே என பார்வை மாற்றுத்திறனாளிகளை அடையாளப்படுத்தத் தனித்தனியாகச் சில பாடல்கள் உள்ளன. ஆனால், அனைத்துப் பாடல்கள் மட்டுமின்றி முழுத் திரைப்படமாகவே பார்வை மாற்றுத்திறனாளிகளை அடையாளப்படுத்திய திரைப்படம் அது. பெருவெற்றி பெற்ற அந்தத் திரைப்படத்தின் பேசுபொருள் மற்றும் பேசப்பட்ட பொருள் எத்தகையது? அடுத்த பகுதியில்!
--
(கட்டுரையாளர் ஈரோடு காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல).
தொடர்புக்கு: [email protected]
பெட்டிக்கடை ஒன்றைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். வாடிக்கையாளர்களின் இடுப்பு அல்லது மார்பு அளவிற்குத் தடுப்பு போல பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற ஒரு கடையில் நாயகன் விதார்த் பணம் கொடுத்துவிட்டு சிகரெட் கேட்கிறார். சில வினாடிகள் கழித்து, இன்னும் ஏன் சிகரெட் கொடுக்கவில்லை என கோபிக்கிறார். ஏற்கனவே நாயகனுக்கு முன்னால் வைத்துவிட்ட சிகரெட்டைக் காண்பிக்கிறார் கடைக்காரர். அதாவது கடைக்காரரின் முகம் தெரியும் நாயகனுக்கு, இடையில் மார்பு மட்டத்தில் வைக்கப்பட்ட சிகரெட் தெரியவில்லை. இதுதான் நாயகனின் பார்வைத் திறனில் உள்ள குறைபாடு. குழாய் வழியாகப் பார்ப்பது போல இருக்கும் குகைப் பார்வை (Tunnel View).
அதாவது பார்வை மட்டத்திற்கு நேராக உள்ளவை மட்டுமே தெரியும். அதற்குக் கீழே, மேலே, இடது, வலது பக்கங்களில் உள்ள எதுவும் தெரியாது. ஆக எதிரில் நிற்கும் ஒரு நபரை பாஸ்போர்ட் புகைப்படம் அளவிற்கு தான் பார்க்க இயலும். அந்தக் குழாய் போன்ற பார்வை வட்டமும் சிறிது சிறிதாகச் சுருங்கிக்கொண்டே வருகிறது. அலுவலகத்தில் கொடுக்கப்படும் தாள்களைக் கண்களுக்கு நேராக வைத்துதான் படிக்கிறார்; ஓரத்தில் வரும் வாகனங்களைப் பார்க்க முடியாததால் மிக மெதுவாகவே தனது இருசக்கர வாகனத்தை ஓட்டுகிறார். சில நேரங்களில் தரையில் கிடக்கும் பொருட்கள் அல்லது நபர்கள் மீது மோதிவிடுகிறார். ஆக பார்வை இருந்தும் இல்லாத சூழலில் வெளியே தெரியாதவாறு சமாளிக்கிறார் நாயகன்.
சின்னத்தம்பி திரைப்படத்தில் காட்டப்படும் கவுண்டமணியின் மாலைக்கண் நோய் போல பார்வை மாற்றுத்திறனாளிகளில் பல வகையினர் இருக்கின்றனர். ஆனால் காலங்காலமாக முழுப் பார்வையற்றவர்களை மட்டுமே திரையில் காட்டிவரும் சூழலில் குகைப் பார்வை போன்ற ஒரு பிரச்சினையைக் காட்டியுள்ள இத்திரைப்படம் மிகவும் முக்கியமானது. அதிலும் பார்வைத்திறன் படிப்படியாகக் குறைந்து வருவதைக் காட்டியிருப்பதும் பாராட்டத்தக்கது. ஏனெனில் வயதுவந்த பார்வை மாற்றுத்திறனாளிகளில் பலரும் ஏதோ ஒரு குறைபாட்டினால் படிப்படியாகப் பார்வைத் திறனை இழந்து வருவோர் அல்லது முழுமையாக இழந்திருப்போர் தான்.
நாயகன் கண் பரிசோதனையின் போது மருத்துவருடன் நடக்கும் உரையாடலைக் கவனியுங்கள்...
"உங்களுக்கு இந்தப் பிரச்சினை எப்போ இருந்து இருக்கு?"
"சின்ன வயசுல இருந்தே இருக்கு டாக்டர்."
"எங்கயும் ட்ரீட்மெண்ட் பாக்கலயா?"
"எல்லாரும் இப்படித்தான் பாக்கறாங்கன்னு நினைச்சிட்டிருந்தேன். ஊர்ல ஒரு டாக்டர்ட்ட போனேன். ஏதோ சொட்டு மருந்து கொடுத்தாங்க. இப்ப சரி பண்ண முடியுமா, டாக்டர்?"
"சரி பண்ண முடியாது. ஐ டிரான்ஸ்பிளான்ட் தான் பண்ணியாகனும். அதுக்கும் 3.20 இலட்சம் செலவாகும்."
"வேற வழில ஏதும் குணப்படுத்த முடியாதா டாக்டர்?"
"ஐ டிரான்ஸ்பிளான்ட் தவிர வேற வழியில்ல. நீங்க வேணும்ன்னா வேற ஹாஸ்பிட்டல்ல செகண்ட் ஒப்பீனியன் கேட்டுக்குங்க. அப்புறம் உங்க பார்வை கொறஞ்சிக்கிட்டே வரும். டூ வீலர் ஓட்டறத அவாய்ட் பண்ணுங்க. சீக்கிரமா பணத்த ரெடி பண்ணுங்க."
மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் குறைபாட்டினை உணர இயலாத நிலையில் இருப்பது. அதாவது எல்லோரும் இப்படித்தான் இருப்பதாக எண்ணிக்கொள்வது. கரும்பலகையைப் பார்த்து எழுதுவதில், புத்தகம் பார்த்துப் படிப்பது, எழுதுவதில் உள்ள பிரச்சினைகளை இரண்டு மூன்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டிய பிறகு தான் பெரும்பாலான பெற்றோர்கள் பரிசோதனைக்கே அழைத்துச் செல்கின்றனர். இத்தகைய தாமதங்களினால் எத்தனையோ பேர் பார்வை இழப்பைச் சந்திக்கின்றனர். அதிலும் போலி மருத்துவர்கள், போலி மருந்துகள் போன்ற பிரச்சினைகளும் இன்னொரு புறம் தாக்குகின்றன.
இந்தப் பணத்தேவைக்காக நாயகன் பொய்ச் சாட்சியாக மாறுகிறான். மருத்துவமனையில் பணத்தைச் செலுத்தும்போது மருந்துச் செலவுகள் மற்றும் மருத்துவமனைக் கட்டணம் சேர்த்து மொத்தமாக 4.82 இலட்சம் செலுத்த வேண்டும் என்கின்றனர். அதையும் செலுத்திய பிறகு, நாயகனின் தனது முறை வருவதற்கு இரண்டு முதல் ஆறேழு ஆண்டுகளுக்கு மேல் வரை காத்திருக்க வேண்டும் என்கின்றனர். பெயரை முன்னால் கொண்டு வருவதற்கு மேலும் ஐந்து இலட்சம் இலஞ்சம் கேட்கின்றனர். அதையும் செலுத்திவிட்டு வெளியே வரும்போது, கண்மாற்று சிகிச்சைக்குப் பரிந்துரைத்த மருத்துவரைச் சாலையில் சந்திக்கிறான் நாயகன். அப்போதைய உரையாடலைக் கவனியுங்கள்...
"ஹலோ, இப்ப எப்படி இருக்கீங்க சார்?"
"அப்படியே தான் இருக்கு டாக்டர். இப்பதான் ஆபரேசனுக்குப் பணத்தக் கட்டியிருக்கேன். வெயிட் பண்ணச் சொல்லிருக்காங்க.'
"பணத்தக் கட்டிட்டீங்களா?"
"ஆமா டாக்டர். ஏன்?"
"சார், ஆப்ரேசன் பண்ணினாலும் உங்களுக்குப் பார்வை கிடைக்காது. ஏன்னா உங்க பிராப்ளம் அந்த மாதிரி. இதைப் பேஷன்ட்கிட்டச் சொல்றதுக்கு நிர்வாகத்துல ஒத்துக்க மாட்டாங்க. அதான் உங்ககிட்ட அப்பச் சொல்லல. நானுங்கூட உங்கள வேற இடத்துல செகண்ட் ஒப்பீனியன் கேட்டுக்கச் சொன்னேனே? நீங்க செக் பண்ணிக்கலயா?"
கண்ணைப் பறிக்கும் பிரம்மாண்டமான விளம்பரங்களில் கண்ணுக்கே தெரியாத எழுத்துக்களில் "நிபந்தனைகளுக்கு உட்பட்டது" என அச்சிடப்பட்டிருக்கும். அதைப் போலவே "நீங்கள் தானே செகண்ட் ஒப்பீனியன் செக் பண்ணிப் பார்த்திருக்க வேண்டும்" என்ற நழுவிச் செல்லும் வார்த்தைகள். முதலில் அறுவை சிகிச்சைக் கட்டணத்தை மட்டுமே சொல்வது, பிறகு மருந்துச் செலவுகள், கடைசியாக கண் தானம் கிடைப்பதில் உள்ள பற்றாக்குறையைக் காரணம் காட்டி இலஞ்சம் கேட்பது என எப்படி தேன் தடவிய வார்த்தைகளில் விளையாடுகின்றனர்.
பெரும்பாலான திரைப்படங்களில் அறுவை சிகிச்சைக்குப் பணம் இல்லை அல்லது கண் கட்டை அவிழ்த்தவுடன் பார்வை கிடைத்தது போன்ற காட்சிகள் தான் இருக்கும். ஆனால் அறுவை சிகிச்சை செய்தாலும் பார்வை கிடைக்காது என்பன போன்ற குறைபாடுகள், அதை மறைத்துப் பணம் பறிக்கும் மருத்துவ மோசடிகள், கண் தானம் கிடைப்பதில் உள்ள பற்றாக்குறை, கண் தானத்தின் அவசியம் போன்ற பேசாப் பொருட்களை ஓரளவாவது பேசிய அளவில் இத்திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டன் போற்றத்தக்கவர். இறுதியாக ஒரு டுவிஸ்ட்... நாயகன் வெறும் பணத்திற்காக மட்டுமே பொய்ச் சாட்சியாக மாறவில்லை. உண்மைக் காரணம் என்ன என்பதைத் திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இனி அடுத்த பகுதிக்கான டீசர் இதோ: கடவுள் உள்ளமே, ஒவ்வொரு பூக்களுமே என பார்வை மாற்றுத்திறனாளிகளை அடையாளப்படுத்தத் தனித்தனியாகச் சில பாடல்கள் உள்ளன. ஆனால், அனைத்துப் பாடல்கள் மட்டுமின்றி முழுத் திரைப்படமாகவே பார்வை மாற்றுத்திறனாளிகளை அடையாளப்படுத்திய திரைப்படம் அது. பெருவெற்றி பெற்ற அந்தத் திரைப்படத்தின் பேசுபொருள் மற்றும் பேசப்பட்ட பொருள் எத்தகையது? அடுத்த பகுதியில்!
--
(கட்டுரையாளர் ஈரோடு காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல).
தொடர்புக்கு: [email protected]