அன்றாட வாழ்க்கையின் குறைந்தபட்ச அடிப்படைத்தேவைகளுக்குக்கூட இன்றியமையாததாக இருப்பது பணம்; பணம் சம்பாதிக்க அடிப்படை ஆதாரமாக இருப்பது பணி வாய்ப்பு. பார்வையுள்ள பலருக்கே பணிவாய்ப்பு எட்டாக்கனியாக இருக்கிற இந்தச் சூழலில் பார்வையற்றவர்களின் நிலையைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை.
தனது கல்வித்தகுதிக்கேற்ற வேலை கிடைக்காத சூழலில் கிடைக்கிற எந்தவேலையையும் செய்து ஒரு பார்வையுள்ளவரால் தனக்கான பொருளாதாரத் தன்னிறைவைப் பெற்றுவிடமுடியும். ஆனால், பார்வையற்றவர்களின் நிலை அப்படி இல்லை. பார்வையற்றவர்களுக்கான பணிவாய்ப்புகள் மிகக்குறைவாகவே இருக்கின்றன.
அரசுத்துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான [பார்வையற்றவர்கள் உள்பட] பணி வாய்ப்பை உறுதி செய்வதற்காக வெளியிடப்பட்ட அரசாணைகளைப் பின்பற்றுவதில் மத்திய மாநில அரசுகளும் தனியார் நிறுவனங்களும் போட்டிபோட்டுகொண்டு சுணக்கம் காட்டிவருகின்றன. பார்வையற்றவர்களின் நலன்களுக்காக இயங்கிவரும் நிறுவனங்களும்கூட பார்வையற்றவர்களின் வேலைவாய்ப்பில் அக்கறை செலுத்துவதை விடுத்து நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த சவாலான சூழலுக்கு அடிப்படைக் காரணங்கள் என்ன? பார்வையற்றவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள்? எப்படி எதிர்கொள்ளவேண்டும்? தன்னார்வ நிறுவனங்கள் என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் அந்தந்த துறைசார்ந்தவர்களுடன் கலந்துபேசி கள ஆய்வுசெய்து ஒவ்வொரு மாதமும் ஒரு துறை சார்ந்த வேலைவாய்ப்பும் அது சார்ந்த பிரச்சனைகளும், தீர்வுகளும் என தொடராக எழுதுவது எனது திட்டம்.
இந்த தொடரின் நோக்கம் எந்தவொரு தனியார் தன்னார்வ நிறுவனத்தையும் ஆதரித்தோ, எதிர்த்தோ எழுதுவது அல்ல.
அழைப்பு மையம் (Call Centre)
நன்கு படித்து அரசாங்கவேலை கிடைக்காமல் மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, ஃபினாயில், சோப்பு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு மிகக்குறைந்த வருமானத்தில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு ஓரளவிற்குப் போதுமான ஊதியத்தையும், முழுத்திறனுடனும் திருப்தியுடனும் பணியாற்றும் வகையிலான வேலையையும் வழங்கி பார்வையற்றவர்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கால்சென்டர் துறையைப்பற்றி இம்மாதம் பார்ப்போம்.
சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு செல்ஃபோன் பயன்பாடு அசுரவேகத்தில் வளர ஆரம்பித்த காலகட்டம். அப்போதுதான் கால்சென்டர் பணிவாய்ப்புகளால் பார்வையற்றவர்களின் கணிசமான பொருளாதார வளர்ச்சியும் ஆரம்பித்தது. தமிழகத்தில் பார்வையற்றவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் மதுரை IAB நிறுவனத்தில் ஒரு கால்சென்டரும், சென்னையில் NAB நிறுவனத்தில் ஒரு கால்சென்டரும் தொடங்கப்பட்டது. இவை தவிர ஆங்காங்கே சில கால்சென்டர்களில் சில பார்வையற்றவர்களுக்கு வேலை தரப்பட்டது.
தமிழகத்தில் முதல்முதலாக பார்வையற்றவர்கள் பணியாற்றும் கால்சென்டர் 2011-இல் மதுரை சுந்தரராஜன்பட்டியில் உள்ள இந்தியப் பார்வையற்றோர் சங்க வளாகத்தில் தொடங்கப்பட்டது. போஸ்ட் பெய்டுக்கு வாடிக்கையாளர்களைக் கொண்டுவருதல், காலர்டியூன் செட் செய்ய வாடிக்கையாளர்களுக்கு கால் செய்தல், சன்டைரக்ட் பில் ரீச்சார்ஜ் செய்ய வாடிக்கையாளர்களுக்கு ஞாபகப்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகளை வழங்கி பல பார்வையற்றவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் வழங்கியது இந்த மையம்.
பல கல்லூரி மாணவர்கள்கூட பகுதிநேரமாக இந்த கால்சென்டரில் பணியாற்றினார்கள். பலர் இந்த வேலை வாய்ப்பை ஆதாரமாகக்கொண்டு தங்களின் மணவாழ்க்கையையே நடத்திவருகின்றனர்.
பிரச்சனைகள்
தொலைத்தொடர்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் செல்ஃபோன் நிறுவனங்கள் இந்த கால்சென்டர் பணியாளர்களுக்கு மிகக் கடினமான இலக்குகளை நிர்ணயித்திருக்கிறார்கள். பணியாளர்களால் அந்த இலக்கை எட்டமுடியாததால் மதுரை IAB கால்சென்டர் முழுமையாக மூடப்பட்டுவிட்டது.
சென்னை N.A.B நிறுவனத்தில் செயல்பட்டுவரும் கால்சென்டர் ஜூலையோடு தங்கள் பணிகளை முடித்துக்கொள்ள இருப்பதால் பணியாளர்கள் வேறு பணிகளை தேடிக்கொள்ளுமாறு இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட்டுவிட்டார்கள். இங்கு பணியாற்றிய சிலர் வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டாலும் எஞ்சியிருக்கும் பணியாளர்களுக்கு இந்த ஜூலைக்குள் தாங்கள் கொடுக்கும் டார்கெட்டை எட்டிவிட்டால் நிறுவனம் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறது என சொல்லியிருக்கிறார்கள். இந்த இலக்கை அடைவது சாத்தியமே இல்லை என்பதால் இந்த நிறுவனம் மூடப்படவே அதிகவாய்ப்பு இருக்கிறது என்கிறார் அங்கு பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர்.
“எனக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷமாகுதுங்க. இப்ப என் மனைவி நிறைமாசமா இருக்கா. போன மாசம் IAB கால்செண்டர மூடினதால, அந்த நிறுவனத்தோட தயாரிப்பான குக்கிஸ் வியாபாரத்துல இருக்கேன். கால்சென்டர்ல நான் வேலை பார்த்தப்போ மாதம் குறைந்தபட்சம் 6000 சம்பாதிச்சேன். வீட்டுவாடகை கொடுத்ததுபோக ஏதோ கொஞ்சம் செலவுக்கு மீதமிருக்கும். ஆனா இப்போ என்னோட வருமானம் வீட்டுவாடகைக்கும் பயணச்செலவுகளுக்கும்தான் சரியா இருக்குது." என தன் வருத்தத்தை பகிர்ந்துகொண்டார் கோபால்.
இந்த நிறுவனம் மூடப்பட்டதால் வேலையிழந்த பலரில் சிலருக்கு அதே நிறுவனம் மாற்றுப்பணி வழங்கியிருந்தாலும் அது மிக குறைந்த வருமானம் தரக்கூடியதாகவே இருக்கிறது. அதனால் பலர் வேறு வழியின்றி தங்கள் வீடுகளுக்கே மறுபடியும் தஞ்சம் புகுந்துவிட்டார்கள்.
“இங்க வேல பாத்தவரைக்கும் வேலை நேரம் போக ஓய்வு நேரங்கள்ல விடுதி நன்பர்களோடு அலவளாவுவதற்கான சூழலும், போட்டித்தேர்வுகள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பும் இருந்ததால ரிலாக்ஸான மனநிலையோட படிச்சு என்னால ஈசியா ஆசிரியர் தகுதித் தேர்வுல வெற்றிபெற முடிஞ்சது. இனி இந்த மாதிரியான வாய்ப்புகள் என் நண்பர்களுக்கு கிடைக்காம போனது துரதிஷ்டமானது” என தன் வருத்தத்தை பகிர்ந்துகொண்டார் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஞானபிரகாஷ்.
IAB மற்றும் NAB கால்சென்டர்கள் மூடப்படும் முடிவு, மிகக் கடினமான சவால்களைச் சந்தித்து, முடிந்தளவுக்கு முயன்ற பிறகே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை எல்லோரும் எளிதில் புறிந்துகொள்ளலாம். தொலைத்தொடர்புத்துறையில் ஜியோ நுழைந்ததிலிருந்தே அந்தத் துறை ஆட்டம் காண ஆரம்பித்ததை அனைவரும் கண்கூடாகவே பார்த்துவருகிறோம். அதன் பிறகாவது நம் பார்வையற்றவர்கள் மாற்று வேலைவாய்ப்பைப் பற்றி சிந்தித்திருக்கலாம் அல்லது இந்த நிறுவனங்களாவது அவர்களுக்கான நல்ல மாற்று வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.
இதனை ஒரு பாடமாக கொண்டு நம் பார்வையற்றவர்கள் ஒரே வேலைவாய்ப்பை நம்பியிருக்காமல் பல துறை வேலைவாய்ப்புகளுக்கான சாத்தியங்களைப் பற்றி சிந்தித்தால் வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
மாற்று
இந்த வேலையிழப்பால் பாதிக்கப்பட்டவர்களில் கொஞ்சம் ஆதரவான பொருளாதாரப் பிண்ணனியை கொண்ட குடும்பத்தைச்சார்ந்தவர்கள் புதிய வேலை தேடுவதை விடுத்து குருகியகால தரமான கணினிப் பயிற்சிகளை அளிக்கும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் வகுப்புகளில் சேர்ந்து சான்றிதழ் பெற்று மென்பொருள் நிறுவனங்களில் வேலைக்கு முயற்சிக்கலாம். மற்றவர்கள் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கடன் உதவியைப் பெற்று புதிய தொழில் துவங்க முயற்சிக்கலாம்.
தனியார் துறையில் பார்வையற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகள் கிடைக்க பெருந்தடையாக இருப்பது பொதுச்சமூகத்தினரிடையே பார்வையற்றோர் குறித்தான விழிப்புணர்வின்மை. இந்த விழிப்புணர்வை தனி ஒருவரால் ஏற்படுத்துவது கடினமானது என்பதால் தமிழகம் முழுக்க பார்வையற்றவர்களுக்காக செயல்பட்டுவரும் சிறுசிறு தன்னார்வ அமைப்புகள் முதல் பெருநிறுவனங்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்து தங்களுக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் பார்வையற்றவர்களால் செய்யக்கூடிய பணிகளை இனங்கண்டு அந்த பணிகளை ஒரு பார்வையற்றவருக்கு ஒதுக்கினால் அதனைச் சிறப்பாக அவரால் செய்யமுடியும் என்பதைப் புரியவைத்து அந்தப் பணியை பார்வையற்ற ஒருவருக்கு பெற்றுத்தரலாம்.
சமீபத்தில் மதுரை IAB நிறுவனம் பாண்டியன் ஹோட்டலில் ஒரு பார்வையற்றவரை ரிசப்ஷனிஸ்டாக பணியமர்த்தியிருக்கிறார்கள். இந்தக் கட்டுரையை வாசிக்கும் அன்பர்கள் இது போன்ற ஹோட்டல், வணிகவளாகங்கள் உரிமையாளராக அல்லது அவர்களின் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக பாண்டியன் ஹோட்டல் நிர்வாகத்தை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் நிறுவனங்களிலும் ஒரு பார்வையற்றவரைப் பணியமர்த்த ஏற்பாடு செய்யலாம்.
அடுத்த மாதம், ஐ.டி. துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகளையும், அவற்றில் இருக்கும் சாதக, பாதகங்களையும் அலசலாம்.
--
தொடர்புக்கு: [email protected]
தனது கல்வித்தகுதிக்கேற்ற வேலை கிடைக்காத சூழலில் கிடைக்கிற எந்தவேலையையும் செய்து ஒரு பார்வையுள்ளவரால் தனக்கான பொருளாதாரத் தன்னிறைவைப் பெற்றுவிடமுடியும். ஆனால், பார்வையற்றவர்களின் நிலை அப்படி இல்லை. பார்வையற்றவர்களுக்கான பணிவாய்ப்புகள் மிகக்குறைவாகவே இருக்கின்றன.
அரசுத்துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான [பார்வையற்றவர்கள் உள்பட] பணி வாய்ப்பை உறுதி செய்வதற்காக வெளியிடப்பட்ட அரசாணைகளைப் பின்பற்றுவதில் மத்திய மாநில அரசுகளும் தனியார் நிறுவனங்களும் போட்டிபோட்டுகொண்டு சுணக்கம் காட்டிவருகின்றன. பார்வையற்றவர்களின் நலன்களுக்காக இயங்கிவரும் நிறுவனங்களும்கூட பார்வையற்றவர்களின் வேலைவாய்ப்பில் அக்கறை செலுத்துவதை விடுத்து நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த சவாலான சூழலுக்கு அடிப்படைக் காரணங்கள் என்ன? பார்வையற்றவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள்? எப்படி எதிர்கொள்ளவேண்டும்? தன்னார்வ நிறுவனங்கள் என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் அந்தந்த துறைசார்ந்தவர்களுடன் கலந்துபேசி கள ஆய்வுசெய்து ஒவ்வொரு மாதமும் ஒரு துறை சார்ந்த வேலைவாய்ப்பும் அது சார்ந்த பிரச்சனைகளும், தீர்வுகளும் என தொடராக எழுதுவது எனது திட்டம்.
இந்த தொடரின் நோக்கம் எந்தவொரு தனியார் தன்னார்வ நிறுவனத்தையும் ஆதரித்தோ, எதிர்த்தோ எழுதுவது அல்ல.
அழைப்பு மையம் (Call Centre)
நன்கு படித்து அரசாங்கவேலை கிடைக்காமல் மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, ஃபினாயில், சோப்பு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு மிகக்குறைந்த வருமானத்தில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு ஓரளவிற்குப் போதுமான ஊதியத்தையும், முழுத்திறனுடனும் திருப்தியுடனும் பணியாற்றும் வகையிலான வேலையையும் வழங்கி பார்வையற்றவர்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கால்சென்டர் துறையைப்பற்றி இம்மாதம் பார்ப்போம்.
சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு செல்ஃபோன் பயன்பாடு அசுரவேகத்தில் வளர ஆரம்பித்த காலகட்டம். அப்போதுதான் கால்சென்டர் பணிவாய்ப்புகளால் பார்வையற்றவர்களின் கணிசமான பொருளாதார வளர்ச்சியும் ஆரம்பித்தது. தமிழகத்தில் பார்வையற்றவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் மதுரை IAB நிறுவனத்தில் ஒரு கால்சென்டரும், சென்னையில் NAB நிறுவனத்தில் ஒரு கால்சென்டரும் தொடங்கப்பட்டது. இவை தவிர ஆங்காங்கே சில கால்சென்டர்களில் சில பார்வையற்றவர்களுக்கு வேலை தரப்பட்டது.
தமிழகத்தில் முதல்முதலாக பார்வையற்றவர்கள் பணியாற்றும் கால்சென்டர் 2011-இல் மதுரை சுந்தரராஜன்பட்டியில் உள்ள இந்தியப் பார்வையற்றோர் சங்க வளாகத்தில் தொடங்கப்பட்டது. போஸ்ட் பெய்டுக்கு வாடிக்கையாளர்களைக் கொண்டுவருதல், காலர்டியூன் செட் செய்ய வாடிக்கையாளர்களுக்கு கால் செய்தல், சன்டைரக்ட் பில் ரீச்சார்ஜ் செய்ய வாடிக்கையாளர்களுக்கு ஞாபகப்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகளை வழங்கி பல பார்வையற்றவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் வழங்கியது இந்த மையம்.
பல கல்லூரி மாணவர்கள்கூட பகுதிநேரமாக இந்த கால்சென்டரில் பணியாற்றினார்கள். பலர் இந்த வேலை வாய்ப்பை ஆதாரமாகக்கொண்டு தங்களின் மணவாழ்க்கையையே நடத்திவருகின்றனர்.
பிரச்சனைகள்
தொலைத்தொடர்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் செல்ஃபோன் நிறுவனங்கள் இந்த கால்சென்டர் பணியாளர்களுக்கு மிகக் கடினமான இலக்குகளை நிர்ணயித்திருக்கிறார்கள். பணியாளர்களால் அந்த இலக்கை எட்டமுடியாததால் மதுரை IAB கால்சென்டர் முழுமையாக மூடப்பட்டுவிட்டது.
சென்னை N.A.B நிறுவனத்தில் செயல்பட்டுவரும் கால்சென்டர் ஜூலையோடு தங்கள் பணிகளை முடித்துக்கொள்ள இருப்பதால் பணியாளர்கள் வேறு பணிகளை தேடிக்கொள்ளுமாறு இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட்டுவிட்டார்கள். இங்கு பணியாற்றிய சிலர் வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டாலும் எஞ்சியிருக்கும் பணியாளர்களுக்கு இந்த ஜூலைக்குள் தாங்கள் கொடுக்கும் டார்கெட்டை எட்டிவிட்டால் நிறுவனம் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறது என சொல்லியிருக்கிறார்கள். இந்த இலக்கை அடைவது சாத்தியமே இல்லை என்பதால் இந்த நிறுவனம் மூடப்படவே அதிகவாய்ப்பு இருக்கிறது என்கிறார் அங்கு பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர்.
“எனக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷமாகுதுங்க. இப்ப என் மனைவி நிறைமாசமா இருக்கா. போன மாசம் IAB கால்செண்டர மூடினதால, அந்த நிறுவனத்தோட தயாரிப்பான குக்கிஸ் வியாபாரத்துல இருக்கேன். கால்சென்டர்ல நான் வேலை பார்த்தப்போ மாதம் குறைந்தபட்சம் 6000 சம்பாதிச்சேன். வீட்டுவாடகை கொடுத்ததுபோக ஏதோ கொஞ்சம் செலவுக்கு மீதமிருக்கும். ஆனா இப்போ என்னோட வருமானம் வீட்டுவாடகைக்கும் பயணச்செலவுகளுக்கும்தான் சரியா இருக்குது." என தன் வருத்தத்தை பகிர்ந்துகொண்டார் கோபால்.
இந்த நிறுவனம் மூடப்பட்டதால் வேலையிழந்த பலரில் சிலருக்கு அதே நிறுவனம் மாற்றுப்பணி வழங்கியிருந்தாலும் அது மிக குறைந்த வருமானம் தரக்கூடியதாகவே இருக்கிறது. அதனால் பலர் வேறு வழியின்றி தங்கள் வீடுகளுக்கே மறுபடியும் தஞ்சம் புகுந்துவிட்டார்கள்.
“இங்க வேல பாத்தவரைக்கும் வேலை நேரம் போக ஓய்வு நேரங்கள்ல விடுதி நன்பர்களோடு அலவளாவுவதற்கான சூழலும், போட்டித்தேர்வுகள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பும் இருந்ததால ரிலாக்ஸான மனநிலையோட படிச்சு என்னால ஈசியா ஆசிரியர் தகுதித் தேர்வுல வெற்றிபெற முடிஞ்சது. இனி இந்த மாதிரியான வாய்ப்புகள் என் நண்பர்களுக்கு கிடைக்காம போனது துரதிஷ்டமானது” என தன் வருத்தத்தை பகிர்ந்துகொண்டார் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஞானபிரகாஷ்.
IAB மற்றும் NAB கால்சென்டர்கள் மூடப்படும் முடிவு, மிகக் கடினமான சவால்களைச் சந்தித்து, முடிந்தளவுக்கு முயன்ற பிறகே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை எல்லோரும் எளிதில் புறிந்துகொள்ளலாம். தொலைத்தொடர்புத்துறையில் ஜியோ நுழைந்ததிலிருந்தே அந்தத் துறை ஆட்டம் காண ஆரம்பித்ததை அனைவரும் கண்கூடாகவே பார்த்துவருகிறோம். அதன் பிறகாவது நம் பார்வையற்றவர்கள் மாற்று வேலைவாய்ப்பைப் பற்றி சிந்தித்திருக்கலாம் அல்லது இந்த நிறுவனங்களாவது அவர்களுக்கான நல்ல மாற்று வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.
இதனை ஒரு பாடமாக கொண்டு நம் பார்வையற்றவர்கள் ஒரே வேலைவாய்ப்பை நம்பியிருக்காமல் பல துறை வேலைவாய்ப்புகளுக்கான சாத்தியங்களைப் பற்றி சிந்தித்தால் வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
மாற்று
இந்த வேலையிழப்பால் பாதிக்கப்பட்டவர்களில் கொஞ்சம் ஆதரவான பொருளாதாரப் பிண்ணனியை கொண்ட குடும்பத்தைச்சார்ந்தவர்கள் புதிய வேலை தேடுவதை விடுத்து குருகியகால தரமான கணினிப் பயிற்சிகளை அளிக்கும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் வகுப்புகளில் சேர்ந்து சான்றிதழ் பெற்று மென்பொருள் நிறுவனங்களில் வேலைக்கு முயற்சிக்கலாம். மற்றவர்கள் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கடன் உதவியைப் பெற்று புதிய தொழில் துவங்க முயற்சிக்கலாம்.
தனியார் துறையில் பார்வையற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகள் கிடைக்க பெருந்தடையாக இருப்பது பொதுச்சமூகத்தினரிடையே பார்வையற்றோர் குறித்தான விழிப்புணர்வின்மை. இந்த விழிப்புணர்வை தனி ஒருவரால் ஏற்படுத்துவது கடினமானது என்பதால் தமிழகம் முழுக்க பார்வையற்றவர்களுக்காக செயல்பட்டுவரும் சிறுசிறு தன்னார்வ அமைப்புகள் முதல் பெருநிறுவனங்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்து தங்களுக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் பார்வையற்றவர்களால் செய்யக்கூடிய பணிகளை இனங்கண்டு அந்த பணிகளை ஒரு பார்வையற்றவருக்கு ஒதுக்கினால் அதனைச் சிறப்பாக அவரால் செய்யமுடியும் என்பதைப் புரியவைத்து அந்தப் பணியை பார்வையற்ற ஒருவருக்கு பெற்றுத்தரலாம்.
சமீபத்தில் மதுரை IAB நிறுவனம் பாண்டியன் ஹோட்டலில் ஒரு பார்வையற்றவரை ரிசப்ஷனிஸ்டாக பணியமர்த்தியிருக்கிறார்கள். இந்தக் கட்டுரையை வாசிக்கும் அன்பர்கள் இது போன்ற ஹோட்டல், வணிகவளாகங்கள் உரிமையாளராக அல்லது அவர்களின் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக பாண்டியன் ஹோட்டல் நிர்வாகத்தை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் நிறுவனங்களிலும் ஒரு பார்வையற்றவரைப் பணியமர்த்த ஏற்பாடு செய்யலாம்.
அடுத்த மாதம், ஐ.டி. துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகளையும், அவற்றில் இருக்கும் சாதக, பாதகங்களையும் அலசலாம்.
--
தொடர்புக்கு: [email protected]