இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்த நிதிநிலை அறிக்கையில், வழக்கத்திற்கு மாறாக, சிறப்புப் பள்ளிகள் தொடர்பான ஆக்கப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதால், அரசு சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பார்வையற்றவர்கள் என்றாலே அரசுக்கு வெண்கோலும், கருப்பு கண்ணாடிகளுமே நினைவுக்கு வரும் என்கிற நிலை சில காலமாகவே தளர்ந்து வருவதில் பார்வையற்றோருக்கும் மகிழ்ச்சியே. சரி, அப்படி என்னதான் இருக்கிறது சிறப்புப் பள்ளிகள் தொடர்பான அறிவிப்பில்? அதுவும், விதி எண் 110-இன் கீழ் அறிவிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற அறிவிப்புகள் எவை?
1992-ல் தான் நடுவண் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வை ஏற்படுத்தும் வகையில், ‘இந்திய மறுவாழ்வுக் குழு’ (Rehabilitation Council of India - RCI) என்ற அமைப்பை நிறுவியது. ஆனால், அதற்கு கால் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே மாற்றுத்திறனாளிகள், அவர்களின் வாழ்வியல், கல்வி, சுகாதாரம் போன்ற விடையங்கள் குறித்துச் சிந்திக்கிற முன்னோடி மாநிலமாய் திகழ்வது நம் தமிழகம். எனவேதான், கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக மாற்றுத்திறன் குழந்தைகள் படிக்க மாவட்டந்தோறும் சிறப்புப் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், தற்போது 22 அரசு சிறப்புப் பள்ளிகள் உட்பட அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என நூற்றுக்கணக்கான சிறப்புப் பள்ளிகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளாக இயங்கி வருகின்றன. புத்தகங்கள், சீருடை, கல்விச் சுற்றுலா, பதிலி எழுத்தர்களுக்கான (Scribes) ஊக்கத்தொகை, கல்வி உதவித்தொகை என அரசின் உதவிகள் அடிப்படை சார்ந்தவை என்றாலும், பார்வையற்ற மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், அவர்களுக்கான கற்றல் செயல்பாடுகள் குறித்த ஆய்வு என அரசு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஏராளமாய் உள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள், விதி எண் 110-இன் கீழ் வெளியிட்டுள்ள சில அறிவிப்புகள் அதிக கவனம் ஈர்க்கின்றன.
மேற்கண்ட மூன்று அறிவிப்புகளுமே வரவேற்கத்தக்கவை என்றாலும், அவற்றின் அமலாக்கம் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய அம்சம். உதாரணமாக, அனைத்துப் பள்ளிகளிலும் நவீன வகுப்பறைகளைத் தொடங்க முனையும் அரசு, பல பள்ளிகளில் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அரசால் நடத்தப்படும் 22 பள்ளிகளில் கணிசமானவை வாடகைக் கட்டடத்தில் இயங்குபவை என்பதைக் கவனத்துடன் பரிசீலித்து, அந்தப் பள்ளிகளுக்குச் சொந்தக் கட்டடங்களை கட்ட வேண்டியதே தற்போதைய தலையாய பணி.
பார்வையற்ற மாணவர்களுக்குக் கணினிக் கல்வி மிகவும் இன்றியமையாதது என்பதால், ஆறாம் வகுப்பு முதலாகவே கணினிப் பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும் என பல பார்வையற்றோருக்கான சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு வலு சேர்க்கும் விதத்தில், அனைத்து சிறப்புப் பள்ளிகளிலும் கணினிக்கூடம் அமைக்கும் அரசின் முடிவை வரவேற்கும் அதே நேரத்தில், பார்வையற்ற மாணவர்களுக்குக் கணினிப் பயிற்சி அளிக்கும் கணினிப் பயிற்றுனர் பணியிடங்களை ஒவ்வொரு பள்ளியிலும் தோற்றுவிப்பதோடு, பார்வையற்றோருக்கான பிரத்தியேக திரைவாசிப்பான்கள் மற்றும் மென்பொருட்கள் குறித்த போதிய அறிவு உடையவர்களையே அந்தப் பணிக்குத் தேர்ந்தெடுப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
மூன்றாவதாக இடம்பெற்றுள்ள அறிவிப்பு முக்கியமானது. ஏனெனில், மாணவர்களுக்கு உணவுச் செலவிற்காக அரசு வழங்கும் தொகையானது, கடந்த 25 ஆண்டு காலங்களில் தலா ஒரு மாணவனுக்கு ரூ. 225-லிருந்து 450, பிறகு 650 என உயர்ந்து, இப்போது அது ரூ. 900-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், விடுதி மாணவர்களுக்கான அன்றாட சோப்பு, எண்ணெய் முதலியவற்றிற்காக தலா ஒரு மாணவனுக்கு வழங்கப்படும் தொகை மட்டும் கடந்த 25 ஆண்டுகளாக மாதம் ரூ. 30-தாகவே இருப்பது விளங்கிக்கொள்ள இயலாத விந்தையாக இருக்கிறது. பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பின்னும் இந்தக் கோரிக்கை கிடப்பில் இருப்பது எதனால் என்பதும் புரியவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறையானது, திட்டங்கள் மற்றும் சேவைகள் என்ற இரு தளங்களில் இயங்கினாலும், பெரும்பாலான அதன் செயல்பாடுகளில் திட்டங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது என்பதுதான் அதன் இதுநாள் வரையிலான துறைசார் வரலாறு. ஆனால், தற்போது சிறிதளவே ஆயினும், அதன் சேவைத்தளத்தின் ஒரு பகுதியான கல்விப்புலத்தில் கவனம் கொள்ளத் தொடங்கியிருப்பது மனமுவந்து வரவேற்கப்பட வேண்டியதாகும். ஆனாலும், மாற்றுத்திறனாளிகளின் கல்வித் தளத்தில் ஆற்ற வேண்டிய பணிகளும், எதிர்கொள்ளப்பட வேண்டிய பெரும் சவால்களும் ஏராளமாய் குவிந்து கிடக்கின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான, அதிலும் பார்வையற்றோருக்கான முறையான கல்வி எது என்ற கேள்விக்கே அரசிடம் சரியான விடையில்லை. குளிரூட்டப்பட்ட அறையில், மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாத அறிவு ஜீவிகளின் மேதாவித்தனத்தால், அலங்கார வரையறைகளுடன் உருவாக்கப்பட்ட ஏதேதோ கல்வி முறைகளைக் கைவிட்டு, இனியேனும் நமது சூழலுக்கு உகந்த கல்வியை மாற்றுத்திறனாளிகளுக்காக வரையறுத்தல், அத்தகு நடவடிக்கைகளில் பல மாற்றுத்திறனாளி கல்வியாளர்களை ஈடுபடச் செய்தல் என அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
ஒரு சராசரி மனிதனின் தேவை எதுவோ, அதுவே ஒரு மாற்றுத்திறனாளியின் தேவை என்பதை அரசு உணர்ந்துகொண்டு, அவர்களை வெறும் பயனாளிகளாக மட்டும் பார்க்காமல், பங்கேற்பாளர்களாகவும் அணுக வேண்டும் என்பதே ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உள்ளார்ந்த விருப்பம்.
‘பரிமாற வாய்ப்பளியுங்கள்! பசியாறவும், பசியாற்றவும் நாங்களே கற்றுக்கொள்வோம்’.
--
கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர்.
தொடர்புக்கு: [email protected]
1992-ல் தான் நடுவண் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வை ஏற்படுத்தும் வகையில், ‘இந்திய மறுவாழ்வுக் குழு’ (Rehabilitation Council of India - RCI) என்ற அமைப்பை நிறுவியது. ஆனால், அதற்கு கால் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே மாற்றுத்திறனாளிகள், அவர்களின் வாழ்வியல், கல்வி, சுகாதாரம் போன்ற விடையங்கள் குறித்துச் சிந்திக்கிற முன்னோடி மாநிலமாய் திகழ்வது நம் தமிழகம். எனவேதான், கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக மாற்றுத்திறன் குழந்தைகள் படிக்க மாவட்டந்தோறும் சிறப்புப் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், தற்போது 22 அரசு சிறப்புப் பள்ளிகள் உட்பட அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என நூற்றுக்கணக்கான சிறப்புப் பள்ளிகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளாக இயங்கி வருகின்றன. புத்தகங்கள், சீருடை, கல்விச் சுற்றுலா, பதிலி எழுத்தர்களுக்கான (Scribes) ஊக்கத்தொகை, கல்வி உதவித்தொகை என அரசின் உதவிகள் அடிப்படை சார்ந்தவை என்றாலும், பார்வையற்ற மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், அவர்களுக்கான கற்றல் செயல்பாடுகள் குறித்த ஆய்வு என அரசு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஏராளமாய் உள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள், விதி எண் 110-இன் கீழ் வெளியிட்டுள்ள சில அறிவிப்புகள் அதிக கவனம் ஈர்க்கின்றன.
- தமிழக அரசால் நடத்தப்படும் அனைத்து சிறப்புப் பள்ளிகளிலும் நவீன வகுப்பறைகள் (Smart Classes) இந்தக் கல்வியாண்டில் ஏற்படுத்தப்படும்.
- பார்வையற்ற மாணவர்களுக்குக் கணினிக்கல்வி அவசியம் என்பதால், அனைத்து அரசு சிறப்புப் பள்ளிகளிலும் நவீன கணினி அறை அமைக்கப்படும்.
- சிறப்புப் பள்ளியின் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்காகும் உணவுச் செலவிற்கான தொகை, தலா ஒரு மாணவனுக்கு, ரூ. 650-லிருந்து ரூ. 900-ஆக உயர்த்தப்படும்.
மேற்கண்ட மூன்று அறிவிப்புகளுமே வரவேற்கத்தக்கவை என்றாலும், அவற்றின் அமலாக்கம் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய அம்சம். உதாரணமாக, அனைத்துப் பள்ளிகளிலும் நவீன வகுப்பறைகளைத் தொடங்க முனையும் அரசு, பல பள்ளிகளில் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அரசால் நடத்தப்படும் 22 பள்ளிகளில் கணிசமானவை வாடகைக் கட்டடத்தில் இயங்குபவை என்பதைக் கவனத்துடன் பரிசீலித்து, அந்தப் பள்ளிகளுக்குச் சொந்தக் கட்டடங்களை கட்ட வேண்டியதே தற்போதைய தலையாய பணி.
பார்வையற்ற மாணவர்களுக்குக் கணினிக் கல்வி மிகவும் இன்றியமையாதது என்பதால், ஆறாம் வகுப்பு முதலாகவே கணினிப் பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும் என பல பார்வையற்றோருக்கான சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு வலு சேர்க்கும் விதத்தில், அனைத்து சிறப்புப் பள்ளிகளிலும் கணினிக்கூடம் அமைக்கும் அரசின் முடிவை வரவேற்கும் அதே நேரத்தில், பார்வையற்ற மாணவர்களுக்குக் கணினிப் பயிற்சி அளிக்கும் கணினிப் பயிற்றுனர் பணியிடங்களை ஒவ்வொரு பள்ளியிலும் தோற்றுவிப்பதோடு, பார்வையற்றோருக்கான பிரத்தியேக திரைவாசிப்பான்கள் மற்றும் மென்பொருட்கள் குறித்த போதிய அறிவு உடையவர்களையே அந்தப் பணிக்குத் தேர்ந்தெடுப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
மூன்றாவதாக இடம்பெற்றுள்ள அறிவிப்பு முக்கியமானது. ஏனெனில், மாணவர்களுக்கு உணவுச் செலவிற்காக அரசு வழங்கும் தொகையானது, கடந்த 25 ஆண்டு காலங்களில் தலா ஒரு மாணவனுக்கு ரூ. 225-லிருந்து 450, பிறகு 650 என உயர்ந்து, இப்போது அது ரூ. 900-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், விடுதி மாணவர்களுக்கான அன்றாட சோப்பு, எண்ணெய் முதலியவற்றிற்காக தலா ஒரு மாணவனுக்கு வழங்கப்படும் தொகை மட்டும் கடந்த 25 ஆண்டுகளாக மாதம் ரூ. 30-தாகவே இருப்பது விளங்கிக்கொள்ள இயலாத விந்தையாக இருக்கிறது. பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பின்னும் இந்தக் கோரிக்கை கிடப்பில் இருப்பது எதனால் என்பதும் புரியவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறையானது, திட்டங்கள் மற்றும் சேவைகள் என்ற இரு தளங்களில் இயங்கினாலும், பெரும்பாலான அதன் செயல்பாடுகளில் திட்டங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது என்பதுதான் அதன் இதுநாள் வரையிலான துறைசார் வரலாறு. ஆனால், தற்போது சிறிதளவே ஆயினும், அதன் சேவைத்தளத்தின் ஒரு பகுதியான கல்விப்புலத்தில் கவனம் கொள்ளத் தொடங்கியிருப்பது மனமுவந்து வரவேற்கப்பட வேண்டியதாகும். ஆனாலும், மாற்றுத்திறனாளிகளின் கல்வித் தளத்தில் ஆற்ற வேண்டிய பணிகளும், எதிர்கொள்ளப்பட வேண்டிய பெரும் சவால்களும் ஏராளமாய் குவிந்து கிடக்கின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான, அதிலும் பார்வையற்றோருக்கான முறையான கல்வி எது என்ற கேள்விக்கே அரசிடம் சரியான விடையில்லை. குளிரூட்டப்பட்ட அறையில், மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாத அறிவு ஜீவிகளின் மேதாவித்தனத்தால், அலங்கார வரையறைகளுடன் உருவாக்கப்பட்ட ஏதேதோ கல்வி முறைகளைக் கைவிட்டு, இனியேனும் நமது சூழலுக்கு உகந்த கல்வியை மாற்றுத்திறனாளிகளுக்காக வரையறுத்தல், அத்தகு நடவடிக்கைகளில் பல மாற்றுத்திறனாளி கல்வியாளர்களை ஈடுபடச் செய்தல் என அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
ஒரு சராசரி மனிதனின் தேவை எதுவோ, அதுவே ஒரு மாற்றுத்திறனாளியின் தேவை என்பதை அரசு உணர்ந்துகொண்டு, அவர்களை வெறும் பயனாளிகளாக மட்டும் பார்க்காமல், பங்கேற்பாளர்களாகவும் அணுக வேண்டும் என்பதே ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உள்ளார்ந்த விருப்பம்.
‘பரிமாற வாய்ப்பளியுங்கள்! பசியாறவும், பசியாற்றவும் நாங்களே கற்றுக்கொள்வோம்’.
--
கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர்.
தொடர்புக்கு: [email protected]