தமிழ் திரையிசை வரலாற்றில், ராஜாவின் யுகத்திலும் ரகுமானின் யுகத்திலும் தன்னைத் தனித்ததொரு இடத்தில் நிலைநிறுத்திக்கொண்டவர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள். ஆரம்பக் காலங்களில் அவர் வழங்கிய மெட்டுகளில் மனம் மெய்மறந்தாலும், அத்தனையையும் இசைஞானியின் பட்டியலில் மக்கள் சேர்த்துவிட்டதால், கானாப்பாடல்கள் மூலமே அவர் புகழ்பெறுவதைத்தான் காலமும் விரும்பியிருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது.
பலரும், ஏன் தேவாகூட தனது பொற்காலத்தைப் ‘பாட்ஷா’, ‘ஆசை’ போன்ற படங்களுக்குப் பின்னான காலமாகவே கூறக்கூடும். ஆனால், தமிழ் ரசிகர்களுக்குத் தேவா கொடுத்த இறவா இசையின் யுகம் ‘மனசுக்கேத்த மகராசா’விலேயே தொடங்கிவிட்டது.
தான் அறிமுகமாகிய அடுத்த ஆண்டிலேயே, அதாவது 1990-ல், சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில அரசின் விருதை ‘புதுமனிதன்’ திரைப்படத்திற்காகப் பெற்று படிப்படியாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருந்தார் தேவா. அவரது இசையைப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது ‘வைகாசிப் பிறந்தாச்சு’ படத்தின் பாடல்கள். படத்தின் அத்தனைப் பாடல்களும் முத்திரை படைத்தன என்றாலும், புதுவரவு நாயகனான பிரசாந்தின் வசீகரத்தில், தேவா என்கிற இசையமைப்பாளரின் திறமை வெளிச்சம் பெறவில்லை.
தொடர்ந்து வந்த ‘மஹா பிரபு’ படத்தின் ‘கடலையினாக் கடல’ என்ற பாடலைக் கேட்டாலே இன்றைய தலைமுறை இளைஞர்களும்கூட குத்தாட்டம் போட்டுக் குதூகளிக்கிறார்கள். ஆனால், அந்தப் பாடலுக்கு நேர் எதிராக இதயம் கரைக்கும் இன்னொரு பாடலும் அந்தப் படத்தில் இருக்கிறது.
“சொல்லவா? சொல்லவா? ஒரு காதல் கதை” என்று நெருங்கி நேசம் வளர்க்கும் பணி S.P.B.-க்குத் தரப்பட, மனமிருக்கிறது வழியில்லை என்ற தொனியில் மருகும் கடமை சுனந்தாவுக்கு. முதல் வரிக்கான இசையைக் கம்பளமாய் தேவா விரிக்க, இதமான அந்த இசை உரையாடல் இனிதே தொடங்குகிறது.
“தென்காசிச் சாரல்கூட நீயில்லாமல்,
வைகாசி வெயில் போல வாட்டுதே” என S.P.B. குளிரூட்ட,
“பன்னீரைத் தொட்டால்கூட நீயில்லாமல்,
வெந்நீரைப் போல வெப்பம் தாக்குதே” என பதிலுக்குக் குளிர்விப்பார் சுனந்தா.
அதையும் இதையும் சொல்லித் தாளாதவராய்,
“பக்கம் வா, பக்கம் வா,
பள்ளிப் பாடம் சொல்ல வா” என்று விஷயத்திற்கே வந்துவிடுவார் S.P.B.
“அப்பப்பா! தப்பப்பா; இது முதலிரவா?” என்று பதிலுரைப்பார் சுனந்தா. இந்த வரியை, கவிஞன் நாயகனின் காதைத் திருகிச் சொல்லும் நோக்கத்தோடு எழுதியிருக்க, சுனந்தாவின் குரலில் ஒலிப்பதால், அவனது கன்னம் கிள்ளி உரைத்ததாகத்தான் உணர்வெழுகிறது.
“கண்ணா! நான் உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனோ?” என்ற நாயகியின் கேள்வியைக் கவிஞர்,
“செம்பருத்தி ஒன்று,
உன் சிந்தைக்குள்ளே நின்று,
சல்லாபம் தேடுதோ?” எனக் கவித்துவமாய் எழுத, அதைத் தன் கவின்நிறை குரலால் காவியமாக்கிவிடுவார் சுனந்தா. ‘சல்லாபம் தேடுதோ’-தேடுதோ என்ற ஒற்றை வார்த்தையின் முடிவில்தான் எத்தனை எத்தனை பாவனைகள்! சொக்கவைத்துவிடுவார் சுகந்தக் குரல் சுனந்தா. “இன்பங்கள் என்னென்று சொல்ல வார்த்தை இல்லையே”. ஆம்! சுனந்தாவின் இனிய குரலில் நாம் பெறும் இன்பங்கள் சொல்ல வார்த்தைதான் இல்லை.
பாடலின் இறுதிப் பகுதியில்தான் முழுப் பல்லவியையும் பாடும் வாய்ப்பு பெறும் சுனந்தா,
“சொல்லவா? சொல்லவா? ஒரு காதல் கதை;
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை.
என் மூச்சிலும், என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்” என முடிக்க, அதே வரிகளை மீண்டும் பாடுவார் S.P.B. அந்த வாய்ப்பை மீண்டும் தேவா அவர்கள் சுனந்தாவிற்கே வழங்கி, “சொல்லவா? சொல்லவா?” என்று கேட்கச் சொல்லியே நம்மைக் கிறங்கடித்திருக்கலாமே எனத் தோன்றும்.
ராஜா, ரகுமான் வரிசையில் ரசிகர்கள் இதயத்தில் தனக்கென தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்ட தேனிசைத் தென்றலைப் போல, ஸ்வர்ணலதா, சுஜாதாவிற்கு இணையாக என்றென்றைக்கும் கொண்டாடப்படும் இன்னொரு ராகதேவதை சுனந்தா.
வாருங்கள்! தேவதையின் தீங்குரலில் திளைப்போம் (பாடலைக் கேட்க).
…ரதம் பயணிக்கும்
--
தொடர்புக்கு: [email protected]
பலரும், ஏன் தேவாகூட தனது பொற்காலத்தைப் ‘பாட்ஷா’, ‘ஆசை’ போன்ற படங்களுக்குப் பின்னான காலமாகவே கூறக்கூடும். ஆனால், தமிழ் ரசிகர்களுக்குத் தேவா கொடுத்த இறவா இசையின் யுகம் ‘மனசுக்கேத்த மகராசா’விலேயே தொடங்கிவிட்டது.
தான் அறிமுகமாகிய அடுத்த ஆண்டிலேயே, அதாவது 1990-ல், சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில அரசின் விருதை ‘புதுமனிதன்’ திரைப்படத்திற்காகப் பெற்று படிப்படியாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருந்தார் தேவா. அவரது இசையைப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது ‘வைகாசிப் பிறந்தாச்சு’ படத்தின் பாடல்கள். படத்தின் அத்தனைப் பாடல்களும் முத்திரை படைத்தன என்றாலும், புதுவரவு நாயகனான பிரசாந்தின் வசீகரத்தில், தேவா என்கிற இசையமைப்பாளரின் திறமை வெளிச்சம் பெறவில்லை.
தொடர்ந்து வந்த ‘மஹா பிரபு’ படத்தின் ‘கடலையினாக் கடல’ என்ற பாடலைக் கேட்டாலே இன்றைய தலைமுறை இளைஞர்களும்கூட குத்தாட்டம் போட்டுக் குதூகளிக்கிறார்கள். ஆனால், அந்தப் பாடலுக்கு நேர் எதிராக இதயம் கரைக்கும் இன்னொரு பாடலும் அந்தப் படத்தில் இருக்கிறது.
“சொல்லவா? சொல்லவா? ஒரு காதல் கதை” என்று நெருங்கி நேசம் வளர்க்கும் பணி S.P.B.-க்குத் தரப்பட, மனமிருக்கிறது வழியில்லை என்ற தொனியில் மருகும் கடமை சுனந்தாவுக்கு. முதல் வரிக்கான இசையைக் கம்பளமாய் தேவா விரிக்க, இதமான அந்த இசை உரையாடல் இனிதே தொடங்குகிறது.
“தென்காசிச் சாரல்கூட நீயில்லாமல்,
வைகாசி வெயில் போல வாட்டுதே” என S.P.B. குளிரூட்ட,
“பன்னீரைத் தொட்டால்கூட நீயில்லாமல்,
வெந்நீரைப் போல வெப்பம் தாக்குதே” என பதிலுக்குக் குளிர்விப்பார் சுனந்தா.
அதையும் இதையும் சொல்லித் தாளாதவராய்,
“பக்கம் வா, பக்கம் வா,
பள்ளிப் பாடம் சொல்ல வா” என்று விஷயத்திற்கே வந்துவிடுவார் S.P.B.
“அப்பப்பா! தப்பப்பா; இது முதலிரவா?” என்று பதிலுரைப்பார் சுனந்தா. இந்த வரியை, கவிஞன் நாயகனின் காதைத் திருகிச் சொல்லும் நோக்கத்தோடு எழுதியிருக்க, சுனந்தாவின் குரலில் ஒலிப்பதால், அவனது கன்னம் கிள்ளி உரைத்ததாகத்தான் உணர்வெழுகிறது.
“கண்ணா! நான் உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனோ?” என்ற நாயகியின் கேள்வியைக் கவிஞர்,
“செம்பருத்தி ஒன்று,
உன் சிந்தைக்குள்ளே நின்று,
சல்லாபம் தேடுதோ?” எனக் கவித்துவமாய் எழுத, அதைத் தன் கவின்நிறை குரலால் காவியமாக்கிவிடுவார் சுனந்தா. ‘சல்லாபம் தேடுதோ’-தேடுதோ என்ற ஒற்றை வார்த்தையின் முடிவில்தான் எத்தனை எத்தனை பாவனைகள்! சொக்கவைத்துவிடுவார் சுகந்தக் குரல் சுனந்தா. “இன்பங்கள் என்னென்று சொல்ல வார்த்தை இல்லையே”. ஆம்! சுனந்தாவின் இனிய குரலில் நாம் பெறும் இன்பங்கள் சொல்ல வார்த்தைதான் இல்லை.
பாடலின் இறுதிப் பகுதியில்தான் முழுப் பல்லவியையும் பாடும் வாய்ப்பு பெறும் சுனந்தா,
“சொல்லவா? சொல்லவா? ஒரு காதல் கதை;
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை.
என் மூச்சிலும், என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்” என முடிக்க, அதே வரிகளை மீண்டும் பாடுவார் S.P.B. அந்த வாய்ப்பை மீண்டும் தேவா அவர்கள் சுனந்தாவிற்கே வழங்கி, “சொல்லவா? சொல்லவா?” என்று கேட்கச் சொல்லியே நம்மைக் கிறங்கடித்திருக்கலாமே எனத் தோன்றும்.
ராஜா, ரகுமான் வரிசையில் ரசிகர்கள் இதயத்தில் தனக்கென தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்ட தேனிசைத் தென்றலைப் போல, ஸ்வர்ணலதா, சுஜாதாவிற்கு இணையாக என்றென்றைக்கும் கொண்டாடப்படும் இன்னொரு ராகதேவதை சுனந்தா.
வாருங்கள்! தேவதையின் தீங்குரலில் திளைப்போம் (பாடலைக் கேட்க).
…ரதம் பயணிக்கும்
--
தொடர்புக்கு: [email protected]