சிறுவயதில்
வண்டித்தடத்தில் சைக்கிள் வந்தாலும் ஒதுங்கி நின்றேன்;
வளர்ந்த பின்பு
வாகனங்களின் ஊடேவூம் நடந்து சென்றேன்.
வெண்கோலின் உதவியால் என் கால்கள் சாலையில் நடக்கும்,
யாரும் உதவாமலே தங்க நாற்கரச் சாலையையும் அது கடக்கும்.
ஓட்டை வண்டியின் சத்தங்கேட்டு ஒதுங்கிக்கொள்வேன்;
அருகில் வந்த பின்னே சத்தம் கேட்கும்
வண்டிகளுக்கு மத்தியில் நான் என்ன செய்வேன்?
உரசிப்போன லாரியில்,
பின் வந்து மோதிய பேருந்தில்,
குறுக்கேவரும் வாகனத்தில்,
விரைவாய் வந்து என் முன் பிரேக்கடித்த இருசக்கர வண்டியில்
என் மரணம் அமர்ந்து வந்ததை கண்டிருக்கிறேன்!
ஊருக்குச் செல்லும்போதெல்லாம்
உடனழைத்துச் செல்கிறேன் மரணத்தை;
எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்,
அது என் மீது கவியப்போகும் தருணத்தை!
ஓ! வாகன ஓட்டிகளே!
உங்கள் முன் வைக்கிறேன் ஒரு கோரிக்கையை.
அடித்துவிட்டு போகாதீர்கள் அரைகுறையாய்;
குறைஉடலோடு வாழ்வதெல்லாம் பெருந்துயரம்.
அதனால்தான் உங்களிடம் யாசிக்கிறேன்,
ஒரு மரணம்!
வண்டித்தடத்தில் சைக்கிள் வந்தாலும் ஒதுங்கி நின்றேன்;
வளர்ந்த பின்பு
வாகனங்களின் ஊடேவூம் நடந்து சென்றேன்.
வெண்கோலின் உதவியால் என் கால்கள் சாலையில் நடக்கும்,
யாரும் உதவாமலே தங்க நாற்கரச் சாலையையும் அது கடக்கும்.
ஓட்டை வண்டியின் சத்தங்கேட்டு ஒதுங்கிக்கொள்வேன்;
அருகில் வந்த பின்னே சத்தம் கேட்கும்
வண்டிகளுக்கு மத்தியில் நான் என்ன செய்வேன்?
உரசிப்போன லாரியில்,
பின் வந்து மோதிய பேருந்தில்,
குறுக்கேவரும் வாகனத்தில்,
விரைவாய் வந்து என் முன் பிரேக்கடித்த இருசக்கர வண்டியில்
என் மரணம் அமர்ந்து வந்ததை கண்டிருக்கிறேன்!
ஊருக்குச் செல்லும்போதெல்லாம்
உடனழைத்துச் செல்கிறேன் மரணத்தை;
எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்,
அது என் மீது கவியப்போகும் தருணத்தை!
ஓ! வாகன ஓட்டிகளே!
உங்கள் முன் வைக்கிறேன் ஒரு கோரிக்கையை.
அடித்துவிட்டு போகாதீர்கள் அரைகுறையாய்;
குறைஉடலோடு வாழ்வதெல்லாம் பெருந்துயரம்.
அதனால்தான் உங்களிடம் யாசிக்கிறேன்,
ஒரு மரணம்!