இந்தியாவின் பண்பாட்டு ஆவணமாகக் கருதப்படும் நூல் ராமாயணம். சமயம் மட்டுமின்றி, அரசியல், சமூகம், இலக்கியம் முதலியவற்றிலும் முக்கிய இடம் பிடித்திருக்கிறார் ராமன்.
அதிக விதங்களில் திரிக்கப்பட்டுள்ள இந்திய நூல் ராமாயணம். பல்வேறு வடிவங்கள், பல்வேறு முடிவுகள் கொண்ட நிறைய ராமாயணக் கதைகள் உலவுகின்றன. இந்நூல் கலப்படமாக்கப்பட்ட காப்பியமாக (Corrupted Manuscript) இருப்பதாக ராஜாஜி குறிப்பிடுகிறார்.
இங்கு நாம் பார்க்கவிருக்கும் நூல் சீதாயணம் என்ற நாடகம். இயற்றியவர் ஜெயபாரதன். மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெயபாரதன் இந்திய அணுசக்தித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது கனடாவில் இருக்கிறார்.
இன்சுவை ராமாயணம்
ராமாயணக் கதை இந்தியாவில் நிச்சயம் நடந்திருக்கும் என்று கூறும் ஜெயபாரதன் ராமனுக்கு தெய்வீகத் தன்மை வழங்கப்படுவதைத் தன்னால் ஏற்கமுடியவில்லை என்கிறார். ராம-ராவணப் போரை இரு மனித இனங்களுக்கிடையிலான போராகக் குறிப்பிடுகிறார். ராவணன் 10 தலைகளைப் பெற்றிருப்பதும், சுக்ரீவன், அனுமன் முதலியோர் வானரங்களாக இருப்பதும் தற்செயலானதல்ல என்கிறார். நாயகத் தன்மையையும், விகாரங்களையும் நீக்கிப் பார்த்தால் ராமாயணம் மிகச்சிறந்த கதையாக இருக்கும் என கருதுகிறார் ஜெயபாரதன்.
நாடகத்திலும் ராமன், அனுமன், வான்மீகி என அனைவரும் மனிதர்களாகவே காட்டப்பட்டிருக்கின்றனர். வான்மீகி ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டே இந்நாடகம் இயற்றப்பட்டிருக்கிறது.
நாடக அறிமுகம்
ராமனின் இளமைக் கால சாகசங்கள், திருமணம், முடிசூடல், காடேகல், சீதை காணாமல் போதல், சீதையை மீட்டல், மீண்டும் நாடு திரும்பல்… நம்மில் பெரும்பாலானோர்க்குத் தெரிந்த ராமாயணம் இதுதான். இதற்குப் பிறகான கதையைத்தான் இந்த நாடகம் பேசுகிறது. கதைக்குள் செல்வோமா?
நாடகக் கதை
அயோத்தி அரண்மனையில் வீற்றிருக்கும் ராமன் தன் சகோதரர்களை அவசர அவசரமாக அழைக்கிறான். தன் மனைவியான சீதையை நாடுகடத்தவேண்டும் என்கிறான். மற்றவர்கள் காரணம் கேட்டபோது, தனக்குக் கிடைத்த உளவுத் தகவலைக் கூறுகிறான். ‘ராமனைப் போல் இன்னொரு மாளிகையில் பல காலம் தங்கியப் பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரலாமா?‘ என்று மக்கள் பேசிக்கொள்வதாகக் கிடைத்த தகவலைக் கூறுகிறான்.
சகோதரர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும் முடியவில்லை; சீதை நாட்டைவிட்டு பத்திரமாக வெளியேற்றப்படுகிறாள். அவள் கருவுற்றவளாக இருக்கிறாள் என்பது கூடுதல் தகவல். காடு சென்ற சீதை வான்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்களம் அடைகிறாள்.
வான்மீகி சீதையின் கடந்த காலம் பற்றி விசாரித்து அறிந்துகொண்டதன் விளைவாகவே ராமாயணம் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் நாடக ஆசிரியர். ஆசிரமத்தில் சீதைக்கு லவா, குசா என இரு மகன்கள் பிறக்கிறார்கள்.
வான்மீகி அவ்விருவருக்கும் சிறந்த குருவாக பல கலைகளைக் கற்றுத்தருகிறார். இருவரும் 12 வயது அடையும்வரை ராமன் தன் மனைவியையோ, குழந்தைகளையோ சந்திக்க வரவில்லை. இவர்கள் 12 வயதை அடைந்தபிறகு ஒருநாள் ராமனின் அஸ்வமேத யாகக் குதிரை அந்த வனப்பகுதிக்குள் வருகிறது. அந்தக் குதிரையை லவா, குசா சிறை பிடிக்கிறார்கள். இந்தக் குழந்தைகளை ராம படையினரால் வெல்லமுடியவில்லை.
ஒரு கட்டத்தில் ராமனே களமிறங்குகிறார். தாமதமாக தகவலறிந்த சீதையும், வான்மீகியும் நிகழ்விடத்திற்கு வருகின்றனர். எல்லா உண்மைகளையும் அறிந்தபிறகும் ராமன் சீதையிடம் பேசவில்லை. அனைவரும் வற்புறுத்திய பின், தன் பிள்ளைகளை அரண்மனை அழைத்துச்செல்ல இசைகிறார். ஆனால் சீதையை அழைத்துச்செல்வது குறித்து பேசமறுக்கிறார்.
அங்கிருக்கும் அனைவரும் கருத்து மாறுபட்ட நிலையிலும் ராமன் தன் நிலையில் உறுதியாக இருக்கிறார். லவாவும் குசாவும் தன் தாயைப் பிரிந்து வர இயலாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். வான்மீகி, குரு விஸ்வாமித்திரர், உடன்பிறப்பு இலக்குவன், பாசமிகு தம்பி அனுமன் என எல்லோரும் செய்வதறியாது திகைக்கின்றனர். இறுதியாக சீதைதான் சிக்கலை முடித்துவைக்கிறார்.
தன் பிள்ளைகளைத் தந்தையோடு செல்லுமாறுப் பணித்த சீதை, தன்னால் தொடங்கிய சிக்கலைத் தானே முடிப்பதாகக் கூறி மலையிலிருந்து குதித்து உயிர்விடுகிறார். எல்லோரும் செயலற்று நிற்கின்றனர். இதுதான் கதை.
நாடகம் பற்றி
சீதையைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டிருப்பதால் ‘சீதாயணம்’ என தலைப்பிடப்பட்டிருப்பது சிறப்பு. மேலும், நாடகத்தின் பல காட்சிகள் படிப்பவர்களை உள்ளம் நெகிழச்செய்கின்றன. குறிப்பாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு ராமனைச் சந்திக்க நேர்ந்தாலும், சீதை பேச விரும்பவில்லை. உள்ளுக்குள் கணவனோடு சேர்ந்து வாழும் ஆசை இருந்தபோதிலும், அதை அவர் வாயிலிருந்து கேட்கவேண்டுமே என்று ஏங்குகிறார். அதேநேரம், முன்பு ஒருமுறை தன் உயிரைக் காத்த ராமதோழன் அனுமனிடம் கனிவாகப் பேசுகிறார். தான் அரண்மனையை விட்டு வந்தபிறகு நிகழ்ந்தவற்றையெல்லாம் அறிந்துகொள்கிறாள். சீதை-அனுமன் சந்திப்பு நெகிழ்ச்சி ஊட்டுவதாய் உள்ளது.
சீதை கானகம் அனுப்பப்பட்டது ஜனகனுக்குத் தெரியுமா? அவன் தன் மருமகன் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையா என தெரியவில்லை. இந்நாடகம் கட்டமைக்கப்படும் பிம்பங்களுக்கும் கதைக்குமான இடைவெளியை அறிய உதவுகிறது.
முடிவு
நாடகத்தின் முடிவு சீதையின் இறப்பு. இந்தத் தற்கொலை லவா, குசாவுக்கு தாயின் இழப்பு; வான்மீகி முனிவருக்கு தன் காவியத்தின் முடிவு; ராமனுக்கும், அயோத்தி மக்களுக்கும் சிக்கலின் முடிவு; அனுமனுக்கும், இலக்குவனுக்கும் முடிவில்லாத் துயரம். பகைவனிடமிருந்து மீட்ட தங்கள் அண்ணியாரை, சொந்த அண்ணனின் வெறுப்பிலிருந்து மீட்கமுடியாதவர்களாகிப்போனார்கள். சுய கௌரவம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் சீதை அசோகவனத்திலேயே இருந்திருக்கக்கூடும்.
நூல்: சீதாயணம்
ஆசிரியர்: ஜெயபாரதன்
படித்தது: freetamilbooks.com தளத்தில்.
அதிக விதங்களில் திரிக்கப்பட்டுள்ள இந்திய நூல் ராமாயணம். பல்வேறு வடிவங்கள், பல்வேறு முடிவுகள் கொண்ட நிறைய ராமாயணக் கதைகள் உலவுகின்றன. இந்நூல் கலப்படமாக்கப்பட்ட காப்பியமாக (Corrupted Manuscript) இருப்பதாக ராஜாஜி குறிப்பிடுகிறார்.
இங்கு நாம் பார்க்கவிருக்கும் நூல் சீதாயணம் என்ற நாடகம். இயற்றியவர் ஜெயபாரதன். மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெயபாரதன் இந்திய அணுசக்தித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது கனடாவில் இருக்கிறார்.
இன்சுவை ராமாயணம்
ராமாயணக் கதை இந்தியாவில் நிச்சயம் நடந்திருக்கும் என்று கூறும் ஜெயபாரதன் ராமனுக்கு தெய்வீகத் தன்மை வழங்கப்படுவதைத் தன்னால் ஏற்கமுடியவில்லை என்கிறார். ராம-ராவணப் போரை இரு மனித இனங்களுக்கிடையிலான போராகக் குறிப்பிடுகிறார். ராவணன் 10 தலைகளைப் பெற்றிருப்பதும், சுக்ரீவன், அனுமன் முதலியோர் வானரங்களாக இருப்பதும் தற்செயலானதல்ல என்கிறார். நாயகத் தன்மையையும், விகாரங்களையும் நீக்கிப் பார்த்தால் ராமாயணம் மிகச்சிறந்த கதையாக இருக்கும் என கருதுகிறார் ஜெயபாரதன்.
நாடகத்திலும் ராமன், அனுமன், வான்மீகி என அனைவரும் மனிதர்களாகவே காட்டப்பட்டிருக்கின்றனர். வான்மீகி ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டே இந்நாடகம் இயற்றப்பட்டிருக்கிறது.
நாடக அறிமுகம்
ராமனின் இளமைக் கால சாகசங்கள், திருமணம், முடிசூடல், காடேகல், சீதை காணாமல் போதல், சீதையை மீட்டல், மீண்டும் நாடு திரும்பல்… நம்மில் பெரும்பாலானோர்க்குத் தெரிந்த ராமாயணம் இதுதான். இதற்குப் பிறகான கதையைத்தான் இந்த நாடகம் பேசுகிறது. கதைக்குள் செல்வோமா?
நாடகக் கதை
அயோத்தி அரண்மனையில் வீற்றிருக்கும் ராமன் தன் சகோதரர்களை அவசர அவசரமாக அழைக்கிறான். தன் மனைவியான சீதையை நாடுகடத்தவேண்டும் என்கிறான். மற்றவர்கள் காரணம் கேட்டபோது, தனக்குக் கிடைத்த உளவுத் தகவலைக் கூறுகிறான். ‘ராமனைப் போல் இன்னொரு மாளிகையில் பல காலம் தங்கியப் பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரலாமா?‘ என்று மக்கள் பேசிக்கொள்வதாகக் கிடைத்த தகவலைக் கூறுகிறான்.
சகோதரர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும் முடியவில்லை; சீதை நாட்டைவிட்டு பத்திரமாக வெளியேற்றப்படுகிறாள். அவள் கருவுற்றவளாக இருக்கிறாள் என்பது கூடுதல் தகவல். காடு சென்ற சீதை வான்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்களம் அடைகிறாள்.
வான்மீகி சீதையின் கடந்த காலம் பற்றி விசாரித்து அறிந்துகொண்டதன் விளைவாகவே ராமாயணம் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் நாடக ஆசிரியர். ஆசிரமத்தில் சீதைக்கு லவா, குசா என இரு மகன்கள் பிறக்கிறார்கள்.
வான்மீகி அவ்விருவருக்கும் சிறந்த குருவாக பல கலைகளைக் கற்றுத்தருகிறார். இருவரும் 12 வயது அடையும்வரை ராமன் தன் மனைவியையோ, குழந்தைகளையோ சந்திக்க வரவில்லை. இவர்கள் 12 வயதை அடைந்தபிறகு ஒருநாள் ராமனின் அஸ்வமேத யாகக் குதிரை அந்த வனப்பகுதிக்குள் வருகிறது. அந்தக் குதிரையை லவா, குசா சிறை பிடிக்கிறார்கள். இந்தக் குழந்தைகளை ராம படையினரால் வெல்லமுடியவில்லை.
ஒரு கட்டத்தில் ராமனே களமிறங்குகிறார். தாமதமாக தகவலறிந்த சீதையும், வான்மீகியும் நிகழ்விடத்திற்கு வருகின்றனர். எல்லா உண்மைகளையும் அறிந்தபிறகும் ராமன் சீதையிடம் பேசவில்லை. அனைவரும் வற்புறுத்திய பின், தன் பிள்ளைகளை அரண்மனை அழைத்துச்செல்ல இசைகிறார். ஆனால் சீதையை அழைத்துச்செல்வது குறித்து பேசமறுக்கிறார்.
அங்கிருக்கும் அனைவரும் கருத்து மாறுபட்ட நிலையிலும் ராமன் தன் நிலையில் உறுதியாக இருக்கிறார். லவாவும் குசாவும் தன் தாயைப் பிரிந்து வர இயலாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். வான்மீகி, குரு விஸ்வாமித்திரர், உடன்பிறப்பு இலக்குவன், பாசமிகு தம்பி அனுமன் என எல்லோரும் செய்வதறியாது திகைக்கின்றனர். இறுதியாக சீதைதான் சிக்கலை முடித்துவைக்கிறார்.
தன் பிள்ளைகளைத் தந்தையோடு செல்லுமாறுப் பணித்த சீதை, தன்னால் தொடங்கிய சிக்கலைத் தானே முடிப்பதாகக் கூறி மலையிலிருந்து குதித்து உயிர்விடுகிறார். எல்லோரும் செயலற்று நிற்கின்றனர். இதுதான் கதை.
நாடகம் பற்றி
சீதையைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டிருப்பதால் ‘சீதாயணம்’ என தலைப்பிடப்பட்டிருப்பது சிறப்பு. மேலும், நாடகத்தின் பல காட்சிகள் படிப்பவர்களை உள்ளம் நெகிழச்செய்கின்றன. குறிப்பாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு ராமனைச் சந்திக்க நேர்ந்தாலும், சீதை பேச விரும்பவில்லை. உள்ளுக்குள் கணவனோடு சேர்ந்து வாழும் ஆசை இருந்தபோதிலும், அதை அவர் வாயிலிருந்து கேட்கவேண்டுமே என்று ஏங்குகிறார். அதேநேரம், முன்பு ஒருமுறை தன் உயிரைக் காத்த ராமதோழன் அனுமனிடம் கனிவாகப் பேசுகிறார். தான் அரண்மனையை விட்டு வந்தபிறகு நிகழ்ந்தவற்றையெல்லாம் அறிந்துகொள்கிறாள். சீதை-அனுமன் சந்திப்பு நெகிழ்ச்சி ஊட்டுவதாய் உள்ளது.
சீதை கானகம் அனுப்பப்பட்டது ஜனகனுக்குத் தெரியுமா? அவன் தன் மருமகன் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையா என தெரியவில்லை. இந்நாடகம் கட்டமைக்கப்படும் பிம்பங்களுக்கும் கதைக்குமான இடைவெளியை அறிய உதவுகிறது.
முடிவு
நாடகத்தின் முடிவு சீதையின் இறப்பு. இந்தத் தற்கொலை லவா, குசாவுக்கு தாயின் இழப்பு; வான்மீகி முனிவருக்கு தன் காவியத்தின் முடிவு; ராமனுக்கும், அயோத்தி மக்களுக்கும் சிக்கலின் முடிவு; அனுமனுக்கும், இலக்குவனுக்கும் முடிவில்லாத் துயரம். பகைவனிடமிருந்து மீட்ட தங்கள் அண்ணியாரை, சொந்த அண்ணனின் வெறுப்பிலிருந்து மீட்கமுடியாதவர்களாகிப்போனார்கள். சுய கௌரவம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் சீதை அசோகவனத்திலேயே இருந்திருக்கக்கூடும்.
நூல்: சீதாயணம்
ஆசிரியர்: ஜெயபாரதன்
படித்தது: freetamilbooks.com தளத்தில்.