சமீப காலமாக திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்கப்படாமல் அரசியல் உள்நோக்கத்தோடு சர்ச்சைக்குள்ளாக்கப்படுவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் அண்மையில் சேர்ந்திருக்கும் படம் பத்மாவதி. இந்தி மொழியில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் தீபிகா படுகோனே (ராணி பத்மாவதி), ஷாகித் கபூர் (ரத்தன் சிங்), ரன்வீர் சிங் (அலாவுதின் கில்ஜி) ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 200 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம்தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தி படம். படப்பிடிப்பு துவங்கிய நாளிலிருந்தே இப்படத்தின்மீதான சர்ச்சைகளும் துவங்கிவிட்டன. படப்பிடிப்பு வேலைகள் முடிந்து, வெளியீட்டு தேதிகள் பலமுறை மாற்றப்பட்டு, ஒருவழியாக தற்போது படம் வெளியிடப்படவேபோகிறது. ஆனால், இப்படத்தின்மீதான சர்ச்சைகள் மட்டும் இன்னும் ஓயவில்லை.
ஏன் இப்படத்தின்மீது இத்தனை விமர்சனங்கள், தாக்குதல்கள்?
இத்திரைப்படம் 1540ஆம் ஆண்டு சூஃபி கவிஞர் மாலிக் முகமது ஜெயசி என்பவர் அவதி மொழியில் எழுதிய ‘பத்மாவத்’ என்ற கவிதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. அக்கவிதையின்படி, ராணி பத்மாவதி 14ஆம் நூற்றாண்டில் மேவாரை ஆட்சி செய்த இராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அரசன் ரத்தன் சிங்கின் பேரழகு மனைவி. பத்மாவதியின் அழகைப் பற்றி அறிந்த டெல்லி சுல்தான் மாவீரன் அலாவுதின் கில்ஜி அவளை அடையவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மேவாரின்மீது படையெடுக்கிறான். கண்ணில் பட்டதையெல்லாம் வெறித்தனமாக வேட்டையாடிய அலாவுதின் கில்ஜி, மேவாரின் தலைநகரான சித்தூரை நோக்கி முன்னேறினான். கண்டிப்பாக அலாவுதின் கில்ஜி வெற்றிபெற்று தன்னைக் கைப்பற்றிவிடுவான் என்பதை அறிந்த ராணி பத்மாவதி, தனது கற்பையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு, கோட்டைக்குள் இருந்த அனைத்து பெண்களோடும் சேர்ந்து தீயில் இறங்கி தன்னை மாய்த்துக்கொள்கிறாள்.
நமக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றின்படி, 1303ஆம் ஆண்டு டெல்லி சுல்தானியத்தின் வலிமையான அரசனான அலாவுதின் கில்ஜி மேவாரின்மீது படையெடுத்து வெற்றிபெற்றான் என்பதும் மாபெரும் அழிவை ஏற்படுத்தினான் என்பதும் உண்மைதான். ஆனால், ராணி பத்மாவதிக்காக இந்த படையெடுப்பு நிகழ்ந்ததாக எந்த ஒரு ஆவணமும் இல்லை. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் ராணி பத்மாவதியைப் பற்றிய எந்த ஒரு குறிப்புமேகூட வரலாற்றில் இல்லை. பத்மாவத்தை எழுதிய ஜெயசியும், கவிதையின் முடிவில், தான் ஒரு கதையை உருவாக்கி அதை வரலாற்றோடு தொடர்புபடுத்தியிருப்பதாக கூறியிருக்கிறார். ராணி பத்மாவதியின் இருப்பு வரலாற்றின் அடிப்படையில் நிரூபிக்கப்படாததால் ராணி பத்மாவதி என்ற கதாபாத்திரமே கற்பனையானதுதான்.
சரி, அதனால் என்ன பிரச்சனை என்கிறீர்களா? அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், படத்தில் அலாவுதின் கில்ஜியும் பத்மாவதியும் காதலிப்பது போன்ற கனவுப் பாடல் காட்சியும், போரில் தோற்ற ராஜபுத்திர அரசன் ரத்தன் சிங் வேறு வழியின்றி தனது மனைவியை அலாவுதின் கில்ஜிக்கு நேரடியாக அல்லாமல் அவளின் பிம்பத்தை கண்ணாடியின்வழியே காட்டுவதாகவும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. அதுதான் இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம். ஏனெனில், ராமாயண சீதையைப் போல, இன்றளவும் ராஜபுத்திரர்கள் பத்மாவதியைக் கடவுளாக வழிபடுகின்றனர். தங்கள் கடவுள், அதுவும் தனது கற்பை காப்பாற்றிக்கொள்ள தனது உயிரையே விட்ட தங்கள் கடவுள் பத்மாவதி, வேறு ஒரு ஆணை, அதுவும் ஒரு இஸ்லாமிய ஆணைக் காதலிப்பதான காட்சிகள் தங்களது மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இருப்பதாக வலதுசாரி இந்து அமைப்புகள், ராஜபுத்திர கர்ணி சேனா, ராஜபுத்திர சமூக அமைப்பு உட்பட அனைத்து இந்து அமைப்புகளும் கொடி உயர்த்தத் துவங்கின. இத்தகைய காட்சிகள் எதுவும் இப்படத்தில் இல்லை என பன்சாலி மறுத்திருக்கிறார். ஆனாலும் இந்து அமைப்புகள் அவரை விடுவதாக இல்லை.
துவக்கத்தில் படக்குழுவுக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. பின், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் கண்டேல்வால் என்பவர் பன்சாலியைச் செருப்பால் அடிப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் என்று முகநூலில் அறிவித்தது; அதைத் தொடர்ந்து ராஜபுத்திர கர்ணி சேனா அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு பன்சாலியை படப்பிடிப்புத் தளத்தில் வைத்தே தாக்கியது; பின்னர் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட செட்கள் அதே அமைப்பைச் சேர்ந்தவர்களால் தகர்க்கப்பட்டது; பாரதிய காத்ரிய சமாஜம் என்ற மத அமைப்பு தீபிகா மற்றும் பன்சாலியின் தலைகளுக்கு 5 கோடி ரூபாயும் ஹரியானாவைச் சேர்ந்த சுராஜ் பால் அவ்விருவரின் தலைகளுக்கும் 10 கோடி ரூபாயும் சன்மானமாக அறிவித்தது; பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜ் புரோகித் இத்திரைப்படத்தைத் திரையிடத் தடைவிதிக்கவேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணியை வலியுறுத்தியது; சாதியக் கட்சிகளின் ஆதரவில் சிறுசிறு சாதிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது; அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், குஜராத் என பல மாநிலங்களின் முதல்வர்கள் இத்திரைப்படத்தை தங்களது மாநிலத்தில் திரையிட அனுமதி அளிக்க மாட்டோம் என அறிவித்தது; அதற்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் தானாக முன்வந்து இப்படத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தது மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அனுமதி மறுத்தாலும் மேற்குவங்கத்தில் இப்படத்தை வெளியிட சிறப்பு ஏற்பாடுகளைத் தான் செய்துதருவதாக உறுதியளித்தது; அதனால் சூர்ப்பனகையைப் போல மம்தாவின் மூக்கும் அறுக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது; அனைத்தையும் தாண்டி படம் திரையிடப்படும் அனைத்துத் திரையரங்குகளும் சூரையாடப்படும் என்று மிரட்டப்பட்டது; வெளியீட்டிற்கு முன்பு தங்களுக்கு படம் காண்பிக்கப்படவேண்டும் என்று சில இந்து அமைப்புகள் நிர்பந்தித்தது; டிசம்பர் 1 அன்று திரைப்படம் வெளியிடப்படவிருந்த நிலையில் மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தியது என அரசியல் விளையாட்டுகள் தூள் பரந்தன. எனவே படத்தை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மட்டும் 2018 பிப்ரவரி 9 அன்று வெளியிட படக்குழுவினர் தீர்மானித்திருந்தனர்.
ஒருவழியாக தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து, பல கத்தரிப்புகள் செய்யப்படவேண்டும், மேலும் சில டிக்ளமைர்கள் சேர்க்கப்படவேண்டும், படத்தின் பெயர் பத்மாவத் என மாற்றப்படவேண்டும் போன்ற கட்டுப்பாடுகளோடு படத்தை வெளியிட மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. எனவே பத்மாவதி, பத்மாவத் என்ற பெயரில் 2018 ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்டுவிட்டது. படத்தைப் பார்த்துவிட்டு வரும் இதழ்களில் தொடர்ந்து பேசுவோம்…
ஏன் இப்படத்தின்மீது இத்தனை விமர்சனங்கள், தாக்குதல்கள்?
இத்திரைப்படம் 1540ஆம் ஆண்டு சூஃபி கவிஞர் மாலிக் முகமது ஜெயசி என்பவர் அவதி மொழியில் எழுதிய ‘பத்மாவத்’ என்ற கவிதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. அக்கவிதையின்படி, ராணி பத்மாவதி 14ஆம் நூற்றாண்டில் மேவாரை ஆட்சி செய்த இராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அரசன் ரத்தன் சிங்கின் பேரழகு மனைவி. பத்மாவதியின் அழகைப் பற்றி அறிந்த டெல்லி சுல்தான் மாவீரன் அலாவுதின் கில்ஜி அவளை அடையவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மேவாரின்மீது படையெடுக்கிறான். கண்ணில் பட்டதையெல்லாம் வெறித்தனமாக வேட்டையாடிய அலாவுதின் கில்ஜி, மேவாரின் தலைநகரான சித்தூரை நோக்கி முன்னேறினான். கண்டிப்பாக அலாவுதின் கில்ஜி வெற்றிபெற்று தன்னைக் கைப்பற்றிவிடுவான் என்பதை அறிந்த ராணி பத்மாவதி, தனது கற்பையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு, கோட்டைக்குள் இருந்த அனைத்து பெண்களோடும் சேர்ந்து தீயில் இறங்கி தன்னை மாய்த்துக்கொள்கிறாள்.
நமக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றின்படி, 1303ஆம் ஆண்டு டெல்லி சுல்தானியத்தின் வலிமையான அரசனான அலாவுதின் கில்ஜி மேவாரின்மீது படையெடுத்து வெற்றிபெற்றான் என்பதும் மாபெரும் அழிவை ஏற்படுத்தினான் என்பதும் உண்மைதான். ஆனால், ராணி பத்மாவதிக்காக இந்த படையெடுப்பு நிகழ்ந்ததாக எந்த ஒரு ஆவணமும் இல்லை. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் ராணி பத்மாவதியைப் பற்றிய எந்த ஒரு குறிப்புமேகூட வரலாற்றில் இல்லை. பத்மாவத்தை எழுதிய ஜெயசியும், கவிதையின் முடிவில், தான் ஒரு கதையை உருவாக்கி அதை வரலாற்றோடு தொடர்புபடுத்தியிருப்பதாக கூறியிருக்கிறார். ராணி பத்மாவதியின் இருப்பு வரலாற்றின் அடிப்படையில் நிரூபிக்கப்படாததால் ராணி பத்மாவதி என்ற கதாபாத்திரமே கற்பனையானதுதான்.
சரி, அதனால் என்ன பிரச்சனை என்கிறீர்களா? அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், படத்தில் அலாவுதின் கில்ஜியும் பத்மாவதியும் காதலிப்பது போன்ற கனவுப் பாடல் காட்சியும், போரில் தோற்ற ராஜபுத்திர அரசன் ரத்தன் சிங் வேறு வழியின்றி தனது மனைவியை அலாவுதின் கில்ஜிக்கு நேரடியாக அல்லாமல் அவளின் பிம்பத்தை கண்ணாடியின்வழியே காட்டுவதாகவும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. அதுதான் இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம். ஏனெனில், ராமாயண சீதையைப் போல, இன்றளவும் ராஜபுத்திரர்கள் பத்மாவதியைக் கடவுளாக வழிபடுகின்றனர். தங்கள் கடவுள், அதுவும் தனது கற்பை காப்பாற்றிக்கொள்ள தனது உயிரையே விட்ட தங்கள் கடவுள் பத்மாவதி, வேறு ஒரு ஆணை, அதுவும் ஒரு இஸ்லாமிய ஆணைக் காதலிப்பதான காட்சிகள் தங்களது மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இருப்பதாக வலதுசாரி இந்து அமைப்புகள், ராஜபுத்திர கர்ணி சேனா, ராஜபுத்திர சமூக அமைப்பு உட்பட அனைத்து இந்து அமைப்புகளும் கொடி உயர்த்தத் துவங்கின. இத்தகைய காட்சிகள் எதுவும் இப்படத்தில் இல்லை என பன்சாலி மறுத்திருக்கிறார். ஆனாலும் இந்து அமைப்புகள் அவரை விடுவதாக இல்லை.
துவக்கத்தில் படக்குழுவுக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. பின், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் கண்டேல்வால் என்பவர் பன்சாலியைச் செருப்பால் அடிப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் என்று முகநூலில் அறிவித்தது; அதைத் தொடர்ந்து ராஜபுத்திர கர்ணி சேனா அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு பன்சாலியை படப்பிடிப்புத் தளத்தில் வைத்தே தாக்கியது; பின்னர் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட செட்கள் அதே அமைப்பைச் சேர்ந்தவர்களால் தகர்க்கப்பட்டது; பாரதிய காத்ரிய சமாஜம் என்ற மத அமைப்பு தீபிகா மற்றும் பன்சாலியின் தலைகளுக்கு 5 கோடி ரூபாயும் ஹரியானாவைச் சேர்ந்த சுராஜ் பால் அவ்விருவரின் தலைகளுக்கும் 10 கோடி ரூபாயும் சன்மானமாக அறிவித்தது; பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜ் புரோகித் இத்திரைப்படத்தைத் திரையிடத் தடைவிதிக்கவேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணியை வலியுறுத்தியது; சாதியக் கட்சிகளின் ஆதரவில் சிறுசிறு சாதிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது; அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், குஜராத் என பல மாநிலங்களின் முதல்வர்கள் இத்திரைப்படத்தை தங்களது மாநிலத்தில் திரையிட அனுமதி அளிக்க மாட்டோம் என அறிவித்தது; அதற்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் தானாக முன்வந்து இப்படத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தது மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அனுமதி மறுத்தாலும் மேற்குவங்கத்தில் இப்படத்தை வெளியிட சிறப்பு ஏற்பாடுகளைத் தான் செய்துதருவதாக உறுதியளித்தது; அதனால் சூர்ப்பனகையைப் போல மம்தாவின் மூக்கும் அறுக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது; அனைத்தையும் தாண்டி படம் திரையிடப்படும் அனைத்துத் திரையரங்குகளும் சூரையாடப்படும் என்று மிரட்டப்பட்டது; வெளியீட்டிற்கு முன்பு தங்களுக்கு படம் காண்பிக்கப்படவேண்டும் என்று சில இந்து அமைப்புகள் நிர்பந்தித்தது; டிசம்பர் 1 அன்று திரைப்படம் வெளியிடப்படவிருந்த நிலையில் மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தியது என அரசியல் விளையாட்டுகள் தூள் பரந்தன. எனவே படத்தை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மட்டும் 2018 பிப்ரவரி 9 அன்று வெளியிட படக்குழுவினர் தீர்மானித்திருந்தனர்.
ஒருவழியாக தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து, பல கத்தரிப்புகள் செய்யப்படவேண்டும், மேலும் சில டிக்ளமைர்கள் சேர்க்கப்படவேண்டும், படத்தின் பெயர் பத்மாவத் என மாற்றப்படவேண்டும் போன்ற கட்டுப்பாடுகளோடு படத்தை வெளியிட மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. எனவே பத்மாவதி, பத்மாவத் என்ற பெயரில் 2018 ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்டுவிட்டது. படத்தைப் பார்த்துவிட்டு வரும் இதழ்களில் தொடர்ந்து பேசுவோம்…