இருபத்தோறாம் நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்ப வளர்ச்சி, நம்மை ஓய்வின்றிச் சுழலும் இயந்திரங்களாகவே மாற்றிவிட்டது என்ற உண்மை நாம் அனைவரும் அறிந்ததே. தேவைக் கருதி அறிமுகமாகும் அறிவியல் கண்டுபிடிப்புக்களும், நாகரீகம் என்ற பெயரில் தருவிக்கப்படும் மேற்கத்திய முறைகளும் நம் அன்றாட வாழ்வில், குறிப்பாக நமது உணவு முறைகளில் அளவிட்டுச் சொல்ல முடியாத மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய மாற்றங்களுக்கு தற்போதைய பச்சிளங்குழந்தைகள் பலிகடாவாவதைத் தடுப்பது, அதாவது, வணிக நோக்கத்திற்காக விற்பனை செய்யப்படும் பால் பௌடர்களின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு, இயற்கையாகச் சுரக்கக்கூடிய, எவ்வித கலப்படமும் செய்யவியலாத, உயிரை வளர்க்கக்கூடிய முதல் ஆகாரமாகிய தாய்ப்பாலைப் பழக்கும் வழக்கத்தை ஊக்குவிப்பதே இப்பகிர்வின் தலையாய நோக்கம்.
தாய்ப்பால்
குழந்தைகளின் உடல் நலத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக விளங்கும் அனைத்துச் சத்துக்களின் பிறப்பிடமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியின் உறைவிடமாகவும் தாய்ப்பால் திகழ்கிறது. மேலும், தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகள், எலும்பு தொடர்பான பிரச்சனைகள், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவாகவே உள்ளதாக மருத்துவம் சொல்கிறது.
2016ஆம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த ‘Polio Campus’ என்ற அமைப்பின் மூலம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வானது, தாய்ப்பால் புகட்டும் பெண்களின் எண்ணிக்கை 280% அதிகரித்திருப்பதாக வியப்பான ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. இதிலுள்ள சத்துக்களை மேலும் உறுதிபடுத்திக்கொள்ள, பெண்கள் கற்ப காலம் முதல், குழந்தைகளுக்கு அமுதூட்டுவதை நிறுத்தும்வரை Processed Foods என்று சொல்லப்படுகிற துரித உணவுகளைத் தவிர்த்துவிட்டு, Natural Foods என்று சொல்லப்படுகிற பால், மீன், முட்டை, கீரைவகைகள், காய்கறிகள் மற்றும் பழவகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
நல்ல உடல்நலத்துடன் இருக்கக்கூடிய தாய்மார்கள் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பாலை மட்டுமே முதன்மை உணவாகக் கொடுக்கலாம். 2 ஆண்டுகள்வரை பால் குடிக்கும் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடனும், அதிகமான நோயெதிர்ப்பு சக்தி பெற்றும் வளர்வதாக நமது உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது.
தற்போது, கணவர்களுக்கும் பால் கொடுக்கும் புது டிரெண்ட் உருவாகியுள்ளது. தாய்ப்பால் ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், ஆண்மைக்குறையைப் போக்குவதற்கும், இதயம் சம்மந்தப்பட்ட பல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் பேருதவியாக இருப்பதாக சில இதயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்லாமிய மதம் பெண்களை விளைநிலங்களாகச் சித்தரிக்கிறது. குழந்தைப் பெற்ற பெண்கள் உடலுறவின்போது, தங்கள் கணவர்களைப் பாலருந்த அனுமதிக்கலாம் என்றும், குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெளிவான விளக்கம் அளிக்கிறது.
பாலூட்டல்
தாய்ப்பால் சுரப்பதை பெண்கள் இப்பிறவியில் இறைவன் அளித்த மிகச்சிறந்த வரமாகக் கருதுகின்றனர். பால் புகட்டுவதன்மூலம் தாய்க்கும் சேய்க்குமான உறவு வலுப்பெறுகிறது; நெருக்கம் அதிகரிக்கிறது.
மகப்பேறு மருத்துவர்களின் கூற்றுப்படி, பாலூட்டல் என்பது தாய்க்கும் சேய்க்குமான கற்றல் முறையாகும். ஒரு குழந்தையானது, தன் தாயின் மார்பகக் காம்புகளில் வாயை வைத்தல், உறிஞ்சுதல், அவ்வாறு உறிஞ்சியதை விழுங்குதல் ஆகிய செயல்களை பசி அடங்கும்வரை தொடர்ச்சியாகச் செய்யப் பழகிக்கொள்கிறது. அதே சமயம், ஒரு தாயானவள், குழந்தையின் செயல்களை முறைப்படுத்தவும், தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும், சீரான இடைவெளியில் குழந்தையின் பசி தீர்க்கவும் தன்னைப் பழக்கிக் கொள்கிறாள். பாலூட்டும்போது, தாயின் உணர்வுகள் சேய்க்குக் கடத்தப்படுவதாக சில சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் தங்களது ஆண் குழந்தைகளுக்கு வீரம் செறிந்த தமிழ்ப்பாலை ஊட்டி வளர்த்ததாகச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. தன் 10 வயது பச்சிளம் பாலகனைப் போருக்கு அனுப்பிய வீரத் தாயொருத்தி, தன் மகன் போரில் புறமுதுகிட்டு இறந்ததாகச் செய்தி வருமேயானால், அவனுக்குப் பாலூட்டிய தன் கொங்கைகளை அறுத்து எறிந்துவிடுவதாகச் சூளுரைக்கிறாள். இதைவிடச் சிறந்த விளக்கம் வேறெந்த மொழி இலக்கியத்திலும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
பெரியவர்கள் அருகிருந்து பாலூட்டலின் சிறுசிறு நுணுக்கங்களையும் படிப்படியாகப் பயிற்றுவித்த காலம் மலையேறிவிட்டது. பெருகிவரும் தனிக் குடும்ப வாழ்க்கை முறையும், மருத்துவர்களின் ஆலோசனைகளும், முதியோர் இல்லங்களின் பரவல்களும், நவீனத் தொடுதிரைப் பயன்பாடுகளும் பெரியோர் கூறும் அனுபவப் பாடங்களுக்கு ஈடாகாது என்பதுதான் தற்போதைய சென்சிடிவான அம்மாக்கள் ஏற்க மறுக்கும் கசப்பான உண்மையாகும்.
பால் புகட்டும்போது செய்ய வேண்டியவை
1. பாலூட்டும் தாய்மார்கள் தங்களது மனநிலையை எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே வைத்துக்கொள்ளவேண்டும்.
2. தன் சுத்தம், குறிப்பாக, தங்களது மார்பகக் காம்புகளை முறையாகப் பராமரித்தல் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
3. குழந்தைப் பிறந்தவுடன் சுரக்கும் சீம்பாலை கட்டாயமாகக் குழந்தைக்குப் பருகக் கொடுக்க வேண்டும்.
4. பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் தாயின் மார்பகம் மற்றும் குழந்தையின் வாய்ப்பகுதியை மறவாமல் நன்றாகத் துடைத்துவிடவேண்டும்.
5. தாயும் சேயும் குளித்ததற்கு 30-45 நிமிடங்களுக்குப் பிறகே பால் புகட்டும் செயலில் ஈடுபடவேண்டும்.
6. குழந்தைக்கு விக்கல் எடுக்கும்போது தாராளமாகப் பாலூட்டலாம்.
7. பணிக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குத் தேவைப்படும் பாலை, ஒரு பாத்திரத்தில் கறந்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு, பின் வீட்டிலிருப்போரின் முறையான பராமரித்தலின்பேரில், குழந்தைகளுக்குத் தேவைப்படும் சமயத்தில் குப்பிகளில் அடைத்து, 8 மணி நேரம்வரைக் கொடுக்கலாம்.
செய்யக் கூடாதவை
1. படுத்துக்கொண்டு பால் கொடுக்கும்பொழுது, குழந்தைகள் மூச்சுத் திணறல் மற்றும் புறையேறுதல் உள்ளிட்ட விரும்பத் தகாத விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எனவே அதைத் தவிர்த்திடவேண்டும்.
2. குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை இனங்கண்டு, முற்றிலுமாக அவ்வுணவுகளை நிறுத்திவிட வேண்டும்.
3. வேலைக்குச் சென்று திரும்புவோர், குறிப்பாக, வெயிலில் நின்று வேலைசெய்த பெண்மணிகள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.
4. உடலுறவில் ஈடுபட்ட அடுத்த கனமே, அழுதிடும் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதால் பேராபத்துக்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே, அதையும் தவிர்த்தே விடுவோம்.
5. மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் எந்தவித மாத்திரை மருந்துகளையும் பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக் கூடாது.
6. தாய்ப்பாலோடு பசும்பால் அல்லது செயற்கைப் பால் பௌடர்களைப் பழக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தும் பட்சத்தில், அவற்றில் பயன்படுத்தப்படும் இனிப்பின் அளவு குறைவாக இருத்தல் நல்லது. இனிப்புத் தன்மை அதிகமாகும்போது, குழந்தைகள் அதை விரும்பி குடித்துவிட்டு, ஆரோக்கியம் தரும் தாய்ப்பாலைத் தவிர்க்க முற்படுவதாக பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கதறுகின்றனர்.
தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு தற்போதைய இளம் தலைமுறையினரிடையே அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒருகாலத்தில் தாய்மார்கள் பேசவே கூச்சப்பட்ட விஷயமாக இருந்த பாலூட்டும் செயல், இப்போது ஆண்களும் அச்சமின்றி பேசக்கூடிய தூய்மயான பொருளாக மாறிவிட்டது. "எனக்கு நல்லா பால் ஊறுறதுக்காக எதையும் சாப்பிடத் தயார்" என்று கூறும் பெண்களும், "என் மனைவிக்கு அதிகமா பால் சுரக்க நல்ல ஐடியா சொல்லுங்க பாட்டி/டாக்டர்" என்று கேட்கக்கூடிய ஆண்களும் மேற்சொன்ன கூற்றுக்கு மிகச்சிறந்த உதாரணங்கள். சிசேரியன் செய்து, படுக்கையிலிருந்து எழ முடியாத நிலையில் இருக்கும் பெண்களும் அமுதூட்ட முயல்வது தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வின் உச்சம் என்றால் அது மிகையாகாது.
குழந்தையைப் பெற்றெடுப்பதொடு தாயின் கடமை முடிந்துவிடப்போவதில்லை. தவமிருந்து வரமாகப் பெற்றெடுக்கும் உயிர்களுக்கு நலம் தரும் தாய்ப்பாலை முதல் உணவாகப் பொறுப்புடன் கொடுத்து வளமுடன் வளர்த்தெடுப்பதிலும் தொடர்கிறது. வருங்கால இந்தியாவின் சிறப்பான தூண்களை இயற்கையின் துணைகொண்டு இண்பமாக உருவாக்கிடுவோம்!
தாய்ப்பால்
குழந்தைகளின் உடல் நலத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக விளங்கும் அனைத்துச் சத்துக்களின் பிறப்பிடமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியின் உறைவிடமாகவும் தாய்ப்பால் திகழ்கிறது. மேலும், தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகள், எலும்பு தொடர்பான பிரச்சனைகள், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவாகவே உள்ளதாக மருத்துவம் சொல்கிறது.
2016ஆம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த ‘Polio Campus’ என்ற அமைப்பின் மூலம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வானது, தாய்ப்பால் புகட்டும் பெண்களின் எண்ணிக்கை 280% அதிகரித்திருப்பதாக வியப்பான ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. இதிலுள்ள சத்துக்களை மேலும் உறுதிபடுத்திக்கொள்ள, பெண்கள் கற்ப காலம் முதல், குழந்தைகளுக்கு அமுதூட்டுவதை நிறுத்தும்வரை Processed Foods என்று சொல்லப்படுகிற துரித உணவுகளைத் தவிர்த்துவிட்டு, Natural Foods என்று சொல்லப்படுகிற பால், மீன், முட்டை, கீரைவகைகள், காய்கறிகள் மற்றும் பழவகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
நல்ல உடல்நலத்துடன் இருக்கக்கூடிய தாய்மார்கள் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பாலை மட்டுமே முதன்மை உணவாகக் கொடுக்கலாம். 2 ஆண்டுகள்வரை பால் குடிக்கும் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடனும், அதிகமான நோயெதிர்ப்பு சக்தி பெற்றும் வளர்வதாக நமது உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது.
தற்போது, கணவர்களுக்கும் பால் கொடுக்கும் புது டிரெண்ட் உருவாகியுள்ளது. தாய்ப்பால் ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், ஆண்மைக்குறையைப் போக்குவதற்கும், இதயம் சம்மந்தப்பட்ட பல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் பேருதவியாக இருப்பதாக சில இதயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்லாமிய மதம் பெண்களை விளைநிலங்களாகச் சித்தரிக்கிறது. குழந்தைப் பெற்ற பெண்கள் உடலுறவின்போது, தங்கள் கணவர்களைப் பாலருந்த அனுமதிக்கலாம் என்றும், குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெளிவான விளக்கம் அளிக்கிறது.
பாலூட்டல்
தாய்ப்பால் சுரப்பதை பெண்கள் இப்பிறவியில் இறைவன் அளித்த மிகச்சிறந்த வரமாகக் கருதுகின்றனர். பால் புகட்டுவதன்மூலம் தாய்க்கும் சேய்க்குமான உறவு வலுப்பெறுகிறது; நெருக்கம் அதிகரிக்கிறது.
மகப்பேறு மருத்துவர்களின் கூற்றுப்படி, பாலூட்டல் என்பது தாய்க்கும் சேய்க்குமான கற்றல் முறையாகும். ஒரு குழந்தையானது, தன் தாயின் மார்பகக் காம்புகளில் வாயை வைத்தல், உறிஞ்சுதல், அவ்வாறு உறிஞ்சியதை விழுங்குதல் ஆகிய செயல்களை பசி அடங்கும்வரை தொடர்ச்சியாகச் செய்யப் பழகிக்கொள்கிறது. அதே சமயம், ஒரு தாயானவள், குழந்தையின் செயல்களை முறைப்படுத்தவும், தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும், சீரான இடைவெளியில் குழந்தையின் பசி தீர்க்கவும் தன்னைப் பழக்கிக் கொள்கிறாள். பாலூட்டும்போது, தாயின் உணர்வுகள் சேய்க்குக் கடத்தப்படுவதாக சில சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் தங்களது ஆண் குழந்தைகளுக்கு வீரம் செறிந்த தமிழ்ப்பாலை ஊட்டி வளர்த்ததாகச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. தன் 10 வயது பச்சிளம் பாலகனைப் போருக்கு அனுப்பிய வீரத் தாயொருத்தி, தன் மகன் போரில் புறமுதுகிட்டு இறந்ததாகச் செய்தி வருமேயானால், அவனுக்குப் பாலூட்டிய தன் கொங்கைகளை அறுத்து எறிந்துவிடுவதாகச் சூளுரைக்கிறாள். இதைவிடச் சிறந்த விளக்கம் வேறெந்த மொழி இலக்கியத்திலும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
பெரியவர்கள் அருகிருந்து பாலூட்டலின் சிறுசிறு நுணுக்கங்களையும் படிப்படியாகப் பயிற்றுவித்த காலம் மலையேறிவிட்டது. பெருகிவரும் தனிக் குடும்ப வாழ்க்கை முறையும், மருத்துவர்களின் ஆலோசனைகளும், முதியோர் இல்லங்களின் பரவல்களும், நவீனத் தொடுதிரைப் பயன்பாடுகளும் பெரியோர் கூறும் அனுபவப் பாடங்களுக்கு ஈடாகாது என்பதுதான் தற்போதைய சென்சிடிவான அம்மாக்கள் ஏற்க மறுக்கும் கசப்பான உண்மையாகும்.
பால் புகட்டும்போது செய்ய வேண்டியவை
1. பாலூட்டும் தாய்மார்கள் தங்களது மனநிலையை எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே வைத்துக்கொள்ளவேண்டும்.
2. தன் சுத்தம், குறிப்பாக, தங்களது மார்பகக் காம்புகளை முறையாகப் பராமரித்தல் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
3. குழந்தைப் பிறந்தவுடன் சுரக்கும் சீம்பாலை கட்டாயமாகக் குழந்தைக்குப் பருகக் கொடுக்க வேண்டும்.
4. பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் தாயின் மார்பகம் மற்றும் குழந்தையின் வாய்ப்பகுதியை மறவாமல் நன்றாகத் துடைத்துவிடவேண்டும்.
5. தாயும் சேயும் குளித்ததற்கு 30-45 நிமிடங்களுக்குப் பிறகே பால் புகட்டும் செயலில் ஈடுபடவேண்டும்.
6. குழந்தைக்கு விக்கல் எடுக்கும்போது தாராளமாகப் பாலூட்டலாம்.
7. பணிக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குத் தேவைப்படும் பாலை, ஒரு பாத்திரத்தில் கறந்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு, பின் வீட்டிலிருப்போரின் முறையான பராமரித்தலின்பேரில், குழந்தைகளுக்குத் தேவைப்படும் சமயத்தில் குப்பிகளில் அடைத்து, 8 மணி நேரம்வரைக் கொடுக்கலாம்.
செய்யக் கூடாதவை
1. படுத்துக்கொண்டு பால் கொடுக்கும்பொழுது, குழந்தைகள் மூச்சுத் திணறல் மற்றும் புறையேறுதல் உள்ளிட்ட விரும்பத் தகாத விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எனவே அதைத் தவிர்த்திடவேண்டும்.
2. குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை இனங்கண்டு, முற்றிலுமாக அவ்வுணவுகளை நிறுத்திவிட வேண்டும்.
3. வேலைக்குச் சென்று திரும்புவோர், குறிப்பாக, வெயிலில் நின்று வேலைசெய்த பெண்மணிகள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.
4. உடலுறவில் ஈடுபட்ட அடுத்த கனமே, அழுதிடும் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதால் பேராபத்துக்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே, அதையும் தவிர்த்தே விடுவோம்.
5. மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் எந்தவித மாத்திரை மருந்துகளையும் பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக் கூடாது.
6. தாய்ப்பாலோடு பசும்பால் அல்லது செயற்கைப் பால் பௌடர்களைப் பழக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தும் பட்சத்தில், அவற்றில் பயன்படுத்தப்படும் இனிப்பின் அளவு குறைவாக இருத்தல் நல்லது. இனிப்புத் தன்மை அதிகமாகும்போது, குழந்தைகள் அதை விரும்பி குடித்துவிட்டு, ஆரோக்கியம் தரும் தாய்ப்பாலைத் தவிர்க்க முற்படுவதாக பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கதறுகின்றனர்.
தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு தற்போதைய இளம் தலைமுறையினரிடையே அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒருகாலத்தில் தாய்மார்கள் பேசவே கூச்சப்பட்ட விஷயமாக இருந்த பாலூட்டும் செயல், இப்போது ஆண்களும் அச்சமின்றி பேசக்கூடிய தூய்மயான பொருளாக மாறிவிட்டது. "எனக்கு நல்லா பால் ஊறுறதுக்காக எதையும் சாப்பிடத் தயார்" என்று கூறும் பெண்களும், "என் மனைவிக்கு அதிகமா பால் சுரக்க நல்ல ஐடியா சொல்லுங்க பாட்டி/டாக்டர்" என்று கேட்கக்கூடிய ஆண்களும் மேற்சொன்ன கூற்றுக்கு மிகச்சிறந்த உதாரணங்கள். சிசேரியன் செய்து, படுக்கையிலிருந்து எழ முடியாத நிலையில் இருக்கும் பெண்களும் அமுதூட்ட முயல்வது தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வின் உச்சம் என்றால் அது மிகையாகாது.
குழந்தையைப் பெற்றெடுப்பதொடு தாயின் கடமை முடிந்துவிடப்போவதில்லை. தவமிருந்து வரமாகப் பெற்றெடுக்கும் உயிர்களுக்கு நலம் தரும் தாய்ப்பாலை முதல் உணவாகப் பொறுப்புடன் கொடுத்து வளமுடன் வளர்த்தெடுப்பதிலும் தொடர்கிறது. வருங்கால இந்தியாவின் சிறப்பான தூண்களை இயற்கையின் துணைகொண்டு இண்பமாக உருவாக்கிடுவோம்!