இந்தியாவில் தோன்றிய மிகச்சிறந்த அறிவை வளர்க்கும் விளையாட்டு, சதுரங்கம். ஆனால், ரஷ்யர்கள்தான் இதில் கொடிகட்டிப் பறந்தார்கள். தற்போது நிலைமை மாறிவிட்டது. இந்த 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவே சதுரங்க விளையாட்டில் முன்னணியில் இருக்கிறது. இதற்குக் காரணம் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் என்பது நாம் அறிந்ததே.
சதுரங்கம் என்பது
இருவரின் மூளைகள் 64 கட்டங்களுக்குள் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள (16 + 16 = 32) காய்களைப் பயன்படுத்தி எதிரியின் ராஜாவைக் கைது செய்வதே சதுரங்கம். சதுரங்கத்தில் வழங்கப்படும் உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் [Grand Master] தற்போது இந்தியாவிடம் இல்லை என்றாலும், இந்தியர்கள்தான் சதுரங்கப் புள்ளிப் பட்டியலில் அதிகம் உள்ளார்கள். பார்வை மாற்றுத்தி்றனாளிகளும் அதில் அடக்கம்.
பார்வையற்றவர்கள் எப்படி சதுரங்கம் விளையாடுவார்கள்?
பார்வை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட், கைப்பந்து, சதுரங்கம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குகின்றனர். அதிலும் சதுரங்கத்திற்கு ஒரு தனிப் பெருமை உண்டு. சதுரங்கத்தில்தான் பார்வை மாற்றுத்திறனாளிகள் பார்வையுள்ளவர்களைப் போலவே விளையாட முடியும்!
ஆம்! மற்ற போட்டிகளைப்போல சதுரங்கத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி விதிகள் இல்லை. மாற்றுத்தி்றனாளி அல்லாதவர் சதுரங்கக் காய்களைக் கண்களால் பார்த்து விளையாடுவர்; பார்வை மாற்றுத்திறனாளிகள் அவற்றைத் தொட்டுப் பார்த்து விளையாடுவர். அவ்வளவுதான் வித்தியாசம்.
இவ்விளையாட்டு தமிழக பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே சிறந்து விளங்க வித்திட்டவர்களுள் முக்கியமானவர் திரு. முத்துராமன் அவர்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே சதுரங்கம் அவ்வளவாக பிரபலமாகவில்லை. அப்போதே தமிழகத்திலிருந்து ரேட்டிங் பெற்ற முதல் பார்வையற்றவர் திரு. முத்துராமன் அவர்கள். இந்திய அளவில் இச்சாதனைப் படைத்த இரண்டாவது பார்வையற்றவர் இவர். மும்பையைச் சேர்ந்த சாருதத்தா யாதவ் என்பவர்தான் இந்தியாவில் ரேட்டிங் பெற்ற முதல் பார்வையற்ற வீரர்.
வாழ்க்கை வரலாறு
1978ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் நாள் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் என்னும் ஊரில் பிறந்தார் முத்துராமன். பிறவியிலேயே பார்வை மாற்றுத்திறனாளியான இவர், தொடக்கக்கல்வியை பாண்டிச்சேரியிலும், உயர்கல்வியை சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள அரசுப் பார்வையற்றோருக்கான பள்ளியிலும் முடித்தார். அதன் பின்பு இளங்கலை வரலாறு, முதுகலை வரலாறு, முனைவர் பட்டம் ஆகியவற்றை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். முனைவர் பட்ட ஆய்வின்போதே தேசிய தகுதித் தேர்வில் [NET] வெற்றியும் கண்டார்.
படித்து முடித்ததும் தற்காலிகப் பேராசிரியராக அதே கல்லூரியில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த இவர், பிறகு விழுப்புரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின்பு, திண்டிவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிரந்தர பேராசிரியராக இவரை அரசு பணியமர்த்தியது.
சதுரங்கமும் முத்துராமனும்
பள்ளிக் காலத்திலேயே விளையாட்டில் இவருக்கு ஆர்வம் அதிகம். அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வமுடையவராக இருந்தாலும், சதுரங்கத்தின்மேல் இவருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. கல்லூரிக் காலத்தில் பல சதுரங்கப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். பிறகு, மகேஷ் என்ற சதுரங்கப் பயிற்சியாளரிடம் மாணவராகச் சேர்ந்து கடுமையாக பயிற்சி மேற்கொண்டார். அவரது விடாமுயற்சியால், 2005ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஓப்பன் சாம்பியன்ஷிப் ரேட்டிங் டோர்னமெண்டில் ரேட்டிங் என்கின்ற சதுரங்கப் புள்ளிப் பட்டியலில் இடம்பெற்றார். இன்று அவரது ரேட்டிங் 1320ஆக இருக்கிறது.
2011ஆம் ஆண்டு அவர் தன் நண்பர்களோடு இணைந்து தமிழ்நாடு பிரெயில் சதுரங்கச் சங்கத்தைத் (TNBCA) தொடங்கினார். இச்சங்கம் தமிழக பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் சதுரங்கத்தை பிரபலப்படுத்திவருகிறது. ஒவ்வொரு வருடமும் நாட்டின் முதல் தர போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களை அதிகம் இடம்பெற வைப்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தார் அவர். கிட்டத்தட்ட இந்த நோக்கத்தைப் பெருமளவில் நிறைவேற்றிவிட்டார் என்றே சொல்லலாம். காரணம், 2017ஆம் ஆண்டு இரண்டாம் தர போட்டிகளுக்கான தேர்வு ஆட்டங்களில் தென்னிந்தியாவில் இருந்து 23 பேர் கலந்துகொண்டனர். அதில் 9 பேர் வெற்றியும் பெற்றுள்ளனர். அந்த 9 நபர்களுள் இவரும் ஒருவர்.
‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கிற வரிகளுக்கு ஏற்ப, இவர் கற்ற சதுரங்கத்தைப் பலருக்குக் கற்பித்து, அவர்களையும் இவ்விளையாட்டில் நாயகர்களாக்கியுள்ளார் திரு. முத்துராமன். அவர்களுள் சாய் கிருஷ்ணன், தமிழ்நாடு பிரெயில் சதுரங்கச் சங்கத்தின் இணைச் செயலர் விக்னேஷ் மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவரது முதல் மாணவன் சாய் கிருஷ்ணன், தமிழக அரசின் நிதி உதவி பெற்று அயல்நாட்டில் நடந்த சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
முத்துராமன் அவர்கள் பார்ப்பதற்கும், பழகுவதற்கும் மிகவும் எளிமையானவர். அதற்குச் சான்றாக என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வைச் சொல்லலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த மாநில அளவிலான போட்டி ஒன்றில் நான் சங்கத்திற்கு எதிராகப் பேசினேன். காரசாரமாக அவருக்கும் எனக்கும் இடையில் விவாதம் நடைபெற்றது. காலையில் என்னிடம் சூடான கேள்விகளை எதிர்கொண்ட அவர், மதியம் என் தோளில் கை போட்டு பேசிக்கொண்டே சூடான தேநீர் அருந்தும் அளவிற்குச் சிறந்த பண்பாளர். அவர் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. அந்த அளவிற்கு அவரின் முடிவில் ஒரு தெளிவும் திடமான மன உறுதியும் கொண்டவர்.
இவரைப் பற்றிய நிகழ்ச்சிகள் பொதிகை, ஜெயா மற்றும் தந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளன. தி இந்து ஆங்கிலம் நாளிதழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரைப் பற்றிய ஒரு கட்டுரையும் வெளிவந்தது. இவர் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துடன் ‘Blind Fold Game’ (சதுரங்கப் பலகை இல்லாமல் மனதாலேயே சதுரங்கம் விளையாடுதல்) போட்டியில் ஆட்டத்தைச் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்துராமனைப் பற்றி அவரது பயிற்சியாளர் மகேஷ், “என்னிடம் இருந்த மாணவர்களிலேயே மிகச் சிறந்தவன் முத்துராமன்“ என்று புகழ்ந்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து குறைந்தது 2 சதுரங்க வீரராவது உலக பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இடையிலான போட்டியில் கலந்துகொள்ளச்செய்து அவர்களை வெற்றிபெறச் செய்வதுதான் இவரது கணவாக இருந்தது. தற்போதுகூட, சிவகாசியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற பள்ளி மாணவன் தேசிய அளவிலான ‘A’ பிரிவு சதுரங்கப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளான்.
ஆனால், காலத்திற்கு என்ன கட்டாயமோ தெரியவில்லை; அவரது இந்தக் கனவுகள் முழுவதும் நிறைவேறும் முன்பே இவரை கடந்த 23.12.2017 அன்று தன்னுடன் கூட்டிச் சென்றுவிட்டது. இனிமேல், “டியர் ஃபிரண்ட்ஸ்! நான் தமிழ்நாடு பிரெயில் செஸ் அசோசியேஷனின் ஜென்ரல் செக்ரட்டரி முத்துராமன் பேசு்றேன்” என்கின்ற அந்த இனியக் குரலை கட்செவியில் எங்களால் கேட்கமுடியாது. இயற்கை இவரை நம்மிடமிருந்து பிரித்தாலும், ஒவ்வொரு பார்வையற்ற சதுரங்க வீரனின் விரல்கள் காய்களைத் தொட்டுத் தழுவும்போதும் முத்துராமன் அண்ணனின் நினைவுகள் மறையாமல் இருக்கும்!
சதுரங்கம் என்பது
இருவரின் மூளைகள் 64 கட்டங்களுக்குள் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள (16 + 16 = 32) காய்களைப் பயன்படுத்தி எதிரியின் ராஜாவைக் கைது செய்வதே சதுரங்கம். சதுரங்கத்தில் வழங்கப்படும் உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் [Grand Master] தற்போது இந்தியாவிடம் இல்லை என்றாலும், இந்தியர்கள்தான் சதுரங்கப் புள்ளிப் பட்டியலில் அதிகம் உள்ளார்கள். பார்வை மாற்றுத்தி்றனாளிகளும் அதில் அடக்கம்.
பார்வையற்றவர்கள் எப்படி சதுரங்கம் விளையாடுவார்கள்?
பார்வை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட், கைப்பந்து, சதுரங்கம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குகின்றனர். அதிலும் சதுரங்கத்திற்கு ஒரு தனிப் பெருமை உண்டு. சதுரங்கத்தில்தான் பார்வை மாற்றுத்திறனாளிகள் பார்வையுள்ளவர்களைப் போலவே விளையாட முடியும்!
ஆம்! மற்ற போட்டிகளைப்போல சதுரங்கத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி விதிகள் இல்லை. மாற்றுத்தி்றனாளி அல்லாதவர் சதுரங்கக் காய்களைக் கண்களால் பார்த்து விளையாடுவர்; பார்வை மாற்றுத்திறனாளிகள் அவற்றைத் தொட்டுப் பார்த்து விளையாடுவர். அவ்வளவுதான் வித்தியாசம்.
இவ்விளையாட்டு தமிழக பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே சிறந்து விளங்க வித்திட்டவர்களுள் முக்கியமானவர் திரு. முத்துராமன் அவர்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே சதுரங்கம் அவ்வளவாக பிரபலமாகவில்லை. அப்போதே தமிழகத்திலிருந்து ரேட்டிங் பெற்ற முதல் பார்வையற்றவர் திரு. முத்துராமன் அவர்கள். இந்திய அளவில் இச்சாதனைப் படைத்த இரண்டாவது பார்வையற்றவர் இவர். மும்பையைச் சேர்ந்த சாருதத்தா யாதவ் என்பவர்தான் இந்தியாவில் ரேட்டிங் பெற்ற முதல் பார்வையற்ற வீரர்.
வாழ்க்கை வரலாறு
1978ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் நாள் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் என்னும் ஊரில் பிறந்தார் முத்துராமன். பிறவியிலேயே பார்வை மாற்றுத்திறனாளியான இவர், தொடக்கக்கல்வியை பாண்டிச்சேரியிலும், உயர்கல்வியை சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள அரசுப் பார்வையற்றோருக்கான பள்ளியிலும் முடித்தார். அதன் பின்பு இளங்கலை வரலாறு, முதுகலை வரலாறு, முனைவர் பட்டம் ஆகியவற்றை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். முனைவர் பட்ட ஆய்வின்போதே தேசிய தகுதித் தேர்வில் [NET] வெற்றியும் கண்டார்.
படித்து முடித்ததும் தற்காலிகப் பேராசிரியராக அதே கல்லூரியில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த இவர், பிறகு விழுப்புரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின்பு, திண்டிவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிரந்தர பேராசிரியராக இவரை அரசு பணியமர்த்தியது.
சதுரங்கமும் முத்துராமனும்
பள்ளிக் காலத்திலேயே விளையாட்டில் இவருக்கு ஆர்வம் அதிகம். அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வமுடையவராக இருந்தாலும், சதுரங்கத்தின்மேல் இவருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. கல்லூரிக் காலத்தில் பல சதுரங்கப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். பிறகு, மகேஷ் என்ற சதுரங்கப் பயிற்சியாளரிடம் மாணவராகச் சேர்ந்து கடுமையாக பயிற்சி மேற்கொண்டார். அவரது விடாமுயற்சியால், 2005ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஓப்பன் சாம்பியன்ஷிப் ரேட்டிங் டோர்னமெண்டில் ரேட்டிங் என்கின்ற சதுரங்கப் புள்ளிப் பட்டியலில் இடம்பெற்றார். இன்று அவரது ரேட்டிங் 1320ஆக இருக்கிறது.
2011ஆம் ஆண்டு அவர் தன் நண்பர்களோடு இணைந்து தமிழ்நாடு பிரெயில் சதுரங்கச் சங்கத்தைத் (TNBCA) தொடங்கினார். இச்சங்கம் தமிழக பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் சதுரங்கத்தை பிரபலப்படுத்திவருகிறது. ஒவ்வொரு வருடமும் நாட்டின் முதல் தர போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களை அதிகம் இடம்பெற வைப்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தார் அவர். கிட்டத்தட்ட இந்த நோக்கத்தைப் பெருமளவில் நிறைவேற்றிவிட்டார் என்றே சொல்லலாம். காரணம், 2017ஆம் ஆண்டு இரண்டாம் தர போட்டிகளுக்கான தேர்வு ஆட்டங்களில் தென்னிந்தியாவில் இருந்து 23 பேர் கலந்துகொண்டனர். அதில் 9 பேர் வெற்றியும் பெற்றுள்ளனர். அந்த 9 நபர்களுள் இவரும் ஒருவர்.
‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கிற வரிகளுக்கு ஏற்ப, இவர் கற்ற சதுரங்கத்தைப் பலருக்குக் கற்பித்து, அவர்களையும் இவ்விளையாட்டில் நாயகர்களாக்கியுள்ளார் திரு. முத்துராமன். அவர்களுள் சாய் கிருஷ்ணன், தமிழ்நாடு பிரெயில் சதுரங்கச் சங்கத்தின் இணைச் செயலர் விக்னேஷ் மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவரது முதல் மாணவன் சாய் கிருஷ்ணன், தமிழக அரசின் நிதி உதவி பெற்று அயல்நாட்டில் நடந்த சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
முத்துராமன் அவர்கள் பார்ப்பதற்கும், பழகுவதற்கும் மிகவும் எளிமையானவர். அதற்குச் சான்றாக என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வைச் சொல்லலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த மாநில அளவிலான போட்டி ஒன்றில் நான் சங்கத்திற்கு எதிராகப் பேசினேன். காரசாரமாக அவருக்கும் எனக்கும் இடையில் விவாதம் நடைபெற்றது. காலையில் என்னிடம் சூடான கேள்விகளை எதிர்கொண்ட அவர், மதியம் என் தோளில் கை போட்டு பேசிக்கொண்டே சூடான தேநீர் அருந்தும் அளவிற்குச் சிறந்த பண்பாளர். அவர் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. அந்த அளவிற்கு அவரின் முடிவில் ஒரு தெளிவும் திடமான மன உறுதியும் கொண்டவர்.
இவரைப் பற்றிய நிகழ்ச்சிகள் பொதிகை, ஜெயா மற்றும் தந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளன. தி இந்து ஆங்கிலம் நாளிதழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரைப் பற்றிய ஒரு கட்டுரையும் வெளிவந்தது. இவர் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துடன் ‘Blind Fold Game’ (சதுரங்கப் பலகை இல்லாமல் மனதாலேயே சதுரங்கம் விளையாடுதல்) போட்டியில் ஆட்டத்தைச் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்துராமனைப் பற்றி அவரது பயிற்சியாளர் மகேஷ், “என்னிடம் இருந்த மாணவர்களிலேயே மிகச் சிறந்தவன் முத்துராமன்“ என்று புகழ்ந்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து குறைந்தது 2 சதுரங்க வீரராவது உலக பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இடையிலான போட்டியில் கலந்துகொள்ளச்செய்து அவர்களை வெற்றிபெறச் செய்வதுதான் இவரது கணவாக இருந்தது. தற்போதுகூட, சிவகாசியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற பள்ளி மாணவன் தேசிய அளவிலான ‘A’ பிரிவு சதுரங்கப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளான்.
ஆனால், காலத்திற்கு என்ன கட்டாயமோ தெரியவில்லை; அவரது இந்தக் கனவுகள் முழுவதும் நிறைவேறும் முன்பே இவரை கடந்த 23.12.2017 அன்று தன்னுடன் கூட்டிச் சென்றுவிட்டது. இனிமேல், “டியர் ஃபிரண்ட்ஸ்! நான் தமிழ்நாடு பிரெயில் செஸ் அசோசியேஷனின் ஜென்ரல் செக்ரட்டரி முத்துராமன் பேசு்றேன்” என்கின்ற அந்த இனியக் குரலை கட்செவியில் எங்களால் கேட்கமுடியாது. இயற்கை இவரை நம்மிடமிருந்து பிரித்தாலும், ஒவ்வொரு பார்வையற்ற சதுரங்க வீரனின் விரல்கள் காய்களைத் தொட்டுத் தழுவும்போதும் முத்துராமன் அண்ணனின் நினைவுகள் மறையாமல் இருக்கும்!