ஓடிக்கொண்டிருக்கும் உலகினிலே,
தேடிவரும் இடையூறுகளை,
அதிரடி காட்டும் ஆசையினால்,
நொடிப்பொழுது சிந்திக்காமல்,
ரோஜாப்பூ வாழ்க்கையை,
முள்ளை மறந்து,
முல்லைப் பூவெனக் கருதி,
கணப் பொழுது வேகத்தாலும்,
சுயபொறுப்பற்ற முயற்சியாலும்,
தேகத்தை
முட்படுக்கையில் கிடத்திட்டோம்,
நிரந்தரமாய்!
நிரந்தரம் அதுவல்ல,
நிமிர்தலே வரந்தரும்!
சுழன்றிடும் புவியிலே,
கைகொடுப்பார் எதிர்நோக்குதல் ரவியல்லே!
முடியுமா கேள்வியிலே,
வென்றிடனும் தன்னம்பிக்கை முயற்சியிலே!
முதுகுத் தண்டுவடத்தினிலே,
மின்னிடும் வலி
தகர்ந்திடும் நின் வெற்றியிலே!
படுக்கையிலே காலைக் கடனைக் கழித்து,
நகர்தலுக்கும் மற்றோர் துணை நாடி,
பட்டாம்பூச்சி வாழ்வைத் தொலைத்து,
நொடிக்கு நொடி மனம் வெம்பி,
குடும்பச் சுமையைக் கூடுதலாக்கி,
முடிவற்ற சோதனையை எண்ணிக்
கடந்த காலம் போதும்!
எழுந்து வா -
கைகோர்த்து அடைவோம் வெற்றி!
ஏனையோர்க்கு ஒரு கருத்து!
வாகனத்தில் செல்வோர் கவனியுங்கள்,
பொறுமை காத்திடுங்கள்!
மரத்திலும், கயிற்றிலும் ஏறும்போது
உரிய காப்பு செய்திடுங்கள்!
விளையாடுவதற்கும், விலை கொடுப்பதற்கும் அல்ல வாழ்வு
என்பதை உணர்ந்திடுங்கள்!
வீழ்ச்சியிலும் எழுச்சியாய் வினையாற்றி
வாழ்வை வென்றிடுங்கள்!
(செப்டம்பர் 5, சர்வதேச முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் தினம்).
--
(கவிஞர் பரோடா வங்கி, சேலம் கிளையின் உதவி மேலாளர்).
தொடர்புக்கு: [email protected]
தேடிவரும் இடையூறுகளை,
அதிரடி காட்டும் ஆசையினால்,
நொடிப்பொழுது சிந்திக்காமல்,
ரோஜாப்பூ வாழ்க்கையை,
முள்ளை மறந்து,
முல்லைப் பூவெனக் கருதி,
கணப் பொழுது வேகத்தாலும்,
சுயபொறுப்பற்ற முயற்சியாலும்,
தேகத்தை
முட்படுக்கையில் கிடத்திட்டோம்,
நிரந்தரமாய்!
நிரந்தரம் அதுவல்ல,
நிமிர்தலே வரந்தரும்!
சுழன்றிடும் புவியிலே,
கைகொடுப்பார் எதிர்நோக்குதல் ரவியல்லே!
முடியுமா கேள்வியிலே,
வென்றிடனும் தன்னம்பிக்கை முயற்சியிலே!
முதுகுத் தண்டுவடத்தினிலே,
மின்னிடும் வலி
தகர்ந்திடும் நின் வெற்றியிலே!
படுக்கையிலே காலைக் கடனைக் கழித்து,
நகர்தலுக்கும் மற்றோர் துணை நாடி,
பட்டாம்பூச்சி வாழ்வைத் தொலைத்து,
நொடிக்கு நொடி மனம் வெம்பி,
குடும்பச் சுமையைக் கூடுதலாக்கி,
முடிவற்ற சோதனையை எண்ணிக்
கடந்த காலம் போதும்!
எழுந்து வா -
கைகோர்த்து அடைவோம் வெற்றி!
ஏனையோர்க்கு ஒரு கருத்து!
வாகனத்தில் செல்வோர் கவனியுங்கள்,
பொறுமை காத்திடுங்கள்!
மரத்திலும், கயிற்றிலும் ஏறும்போது
உரிய காப்பு செய்திடுங்கள்!
விளையாடுவதற்கும், விலை கொடுப்பதற்கும் அல்ல வாழ்வு
என்பதை உணர்ந்திடுங்கள்!
வீழ்ச்சியிலும் எழுச்சியாய் வினையாற்றி
வாழ்வை வென்றிடுங்கள்!
(செப்டம்பர் 5, சர்வதேச முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் தினம்).
--
(கவிஞர் பரோடா வங்கி, சேலம் கிளையின் உதவி மேலாளர்).
தொடர்புக்கு: [email protected]