ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. பகவான் கிருஷ்ணர்கூட கபீரிடம், “நீ என்னை வணங்குவதைக் காட்டிலும் உன் ஆசிரியரை வணங்கு! ஏனெனில், நீ அவர் வழியாகத்தான் என்னை அறிந்துகொண்டாய்” என்று கூறினாராம். என் வாழ்விலும், என் ஆசிரியர் திரு. ஜி. ஜெயராமன் அவர்களின் பங்கு இன்றியமையாதது.
எனது ஆசிரியர் திரு. ஜி. ஜெயராமன் அவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை கிறித்தவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். பல பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டியாக விளங்கிய அவரே ஒரு பார்வை மாற்றுத்திறனாளி!
அவரைச் சந்தித்தபோது, நான் மனம் உடைந்த நிலையில் இருந்தேன். எப்படியாவது படித்தாக வேண்டும் என்பது மட்டுமே என் மனதில் இருந்தது; ஆனால், அதற்கான வழிகள் எனக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த நேரத்தில்தான், எனது குடும்ப நண்பர் வழியாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் அவரை 1990-ஆம் ஆண்டு, M.C.C. குடியிருப்பில் முதன்முறையாக சந்தித்தேன்.
அவர் என்னை பிரைவேட்டாக படிக்க ஆலோசனை கூறினார். முதன்முதலாக என் பயத்தைப் போக்க, என்னை ஹிந்தி தேர்வு எழுத வைத்தார். என் தமிழ் அறிவை அதிகரிக்கச் செய்தது அவர்தான். என்னை சரளமாக ஆங்கிலத்தில் பேசப் பயிற்றுவித்தவரும் அவர்தான். இதுபோன்று பல வழிகளிலும் அவர் எனக்கு உதவி செய்தார்.
அது மட்டுமல்ல, என்னைப் போன்ற பலரது தனித்திறமைகளைக் கண்டறிந்து, அதைத் தேவையான நேரங்களில் பயன்படுத்தவும் செய்வார். அப்படித்தான் பலரும் லைட் மியூசிக் குரூப்பில் பாடிக்கொண்டிருந்தனர். இலக்கியத் துறையிலும் அவர் சிலருக்கு உதவி செய்துவந்தார்.
பலரது புத்தகங்களையும் எங்களது சங்க விழாக்களில் வெளியிட்டுள்ளார். என்னையும் ஊக்குவித்து, ஒரு கவிதையையும் கதையையும் எழுத வைத்து, அதை ஒரு புத்தகத்தில் பிரசுரிக்கச் செய்தார். பிறரின் தனித்திறமைகளைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்தும்போது, அந்த நபரைவிட அவருக்குத்தான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படும். இப்படி அவரது புகழை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அவருக்கு நான் ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், நானோ இசை பயின்றேன். ஆனால், நான் எதிர்பார்த்தது போல இசை எனக்கு இசைபாடாய் இல்லை. எனக்கு அடிப்படை இசை தெரிந்திருந்தாலும், நான் டிகிரி படிக்கும்போது பிராக்டிக்கல் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. பலமுறை இந்தப் படிப்பை என்னால் தொடர இயலாது என அவரிடம் நான் அழுது புலம்பியிருக்கிறேன். ஆனால், அவர் சம்மதிக்கவில்லை. நான் மட்டுமல்ல; யாராக இருந்தாலும் அவர்களின் தோல்வியைத் துடைப்பதில் அவர் உறுதியாக இருந்தார். தோல்வியின் விளிம்பில் இருப்பவர்கள் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதிகமாக ஊக்குவிப்பார். அதனால்தான், எந்தப் பாடம் எனக்குக் கடினமாக இருந்ததோ, அந்த இசைத்துறையிலேயே நான் ஆசிரியராக வர முடிந்தது. என்னைப் போன்ற பலருக்கும் அவர் வழிகாட்டியாக இருந்தார்.
அவர் பணி நேரம் தவிர, மற்ற நேரங்களில் வீட்டில் டியூஷன் எடுத்து வந்தார்; பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல, பார்வை உள்ளவர்களுக்கும், பின்தங்கியவர்களுக்கும் அவர் பாடம் நடத்தினார். அது மட்டுமல்ல, பல வெளிநாட்டவரும் அவரிடம் பயின்றனர். அவர் தாய்லாந்து மாணவர்களுக்கு கற்பித்ததை நானே பார்த்திருக்கிறேன்.
அவருக்குக் குடல் தொடர்பான பிரச்சனை இருந்தது. அதற்காக அவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். செப்டம்பர் 25, 2012 அன்றும்கூட வழக்கமான சிகிச்சைக்குப் பின் நலமுடன் வீடு திரும்பிவிடுவார் என்றுதான் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், விதி வேறுவிதமாக விளையாடி, அவரை எங்களிடமிருந்து பிரித்துக்கொண்டது.
அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். பல புத்தகங்களைப் பிரசுரித்தவர். சிறந்த புல்லாங்குழல் இசைக்கலைஞர். இதுபோன்ற பன்முகத் திறமைகள் அவரிடம் இருந்தபோதும், அவர் அனைவரிடமும் எளிமையாகவே பழகுவார். யாரையும் ஒருமையில் அழைக்கும் பழக்கம் அவருக்குக் கிடையாது. பழகுவதற்கு இனிமையானவர். நகைச்சுவை உணர்வு கொண்டவர். பல நேரங்களில் பலருக்கும் அவர் ஒரு முன்மாதிரியாக விளங்கினார். இத்தகைய பெருமைமிக்க எனது ஆசிரியருக்கு என்னுடைய கட்டுரையைச் சமர்ப்பித்து, நான் என் கட்டுரையை நிறைவு செய்கிறேன்!
--
தொடர்புக்கு: [email protected]
எனது ஆசிரியர் திரு. ஜி. ஜெயராமன் அவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை கிறித்தவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். பல பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டியாக விளங்கிய அவரே ஒரு பார்வை மாற்றுத்திறனாளி!
அவரைச் சந்தித்தபோது, நான் மனம் உடைந்த நிலையில் இருந்தேன். எப்படியாவது படித்தாக வேண்டும் என்பது மட்டுமே என் மனதில் இருந்தது; ஆனால், அதற்கான வழிகள் எனக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த நேரத்தில்தான், எனது குடும்ப நண்பர் வழியாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் அவரை 1990-ஆம் ஆண்டு, M.C.C. குடியிருப்பில் முதன்முறையாக சந்தித்தேன்.
அவர் என்னை பிரைவேட்டாக படிக்க ஆலோசனை கூறினார். முதன்முதலாக என் பயத்தைப் போக்க, என்னை ஹிந்தி தேர்வு எழுத வைத்தார். என் தமிழ் அறிவை அதிகரிக்கச் செய்தது அவர்தான். என்னை சரளமாக ஆங்கிலத்தில் பேசப் பயிற்றுவித்தவரும் அவர்தான். இதுபோன்று பல வழிகளிலும் அவர் எனக்கு உதவி செய்தார்.
அது மட்டுமல்ல, என்னைப் போன்ற பலரது தனித்திறமைகளைக் கண்டறிந்து, அதைத் தேவையான நேரங்களில் பயன்படுத்தவும் செய்வார். அப்படித்தான் பலரும் லைட் மியூசிக் குரூப்பில் பாடிக்கொண்டிருந்தனர். இலக்கியத் துறையிலும் அவர் சிலருக்கு உதவி செய்துவந்தார்.
பலரது புத்தகங்களையும் எங்களது சங்க விழாக்களில் வெளியிட்டுள்ளார். என்னையும் ஊக்குவித்து, ஒரு கவிதையையும் கதையையும் எழுத வைத்து, அதை ஒரு புத்தகத்தில் பிரசுரிக்கச் செய்தார். பிறரின் தனித்திறமைகளைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்தும்போது, அந்த நபரைவிட அவருக்குத்தான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படும். இப்படி அவரது புகழை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அவருக்கு நான் ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், நானோ இசை பயின்றேன். ஆனால், நான் எதிர்பார்த்தது போல இசை எனக்கு இசைபாடாய் இல்லை. எனக்கு அடிப்படை இசை தெரிந்திருந்தாலும், நான் டிகிரி படிக்கும்போது பிராக்டிக்கல் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. பலமுறை இந்தப் படிப்பை என்னால் தொடர இயலாது என அவரிடம் நான் அழுது புலம்பியிருக்கிறேன். ஆனால், அவர் சம்மதிக்கவில்லை. நான் மட்டுமல்ல; யாராக இருந்தாலும் அவர்களின் தோல்வியைத் துடைப்பதில் அவர் உறுதியாக இருந்தார். தோல்வியின் விளிம்பில் இருப்பவர்கள் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதிகமாக ஊக்குவிப்பார். அதனால்தான், எந்தப் பாடம் எனக்குக் கடினமாக இருந்ததோ, அந்த இசைத்துறையிலேயே நான் ஆசிரியராக வர முடிந்தது. என்னைப் போன்ற பலருக்கும் அவர் வழிகாட்டியாக இருந்தார்.
அவர் பணி நேரம் தவிர, மற்ற நேரங்களில் வீட்டில் டியூஷன் எடுத்து வந்தார்; பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல, பார்வை உள்ளவர்களுக்கும், பின்தங்கியவர்களுக்கும் அவர் பாடம் நடத்தினார். அது மட்டுமல்ல, பல வெளிநாட்டவரும் அவரிடம் பயின்றனர். அவர் தாய்லாந்து மாணவர்களுக்கு கற்பித்ததை நானே பார்த்திருக்கிறேன்.
அவருக்குக் குடல் தொடர்பான பிரச்சனை இருந்தது. அதற்காக அவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். செப்டம்பர் 25, 2012 அன்றும்கூட வழக்கமான சிகிச்சைக்குப் பின் நலமுடன் வீடு திரும்பிவிடுவார் என்றுதான் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், விதி வேறுவிதமாக விளையாடி, அவரை எங்களிடமிருந்து பிரித்துக்கொண்டது.
அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். பல புத்தகங்களைப் பிரசுரித்தவர். சிறந்த புல்லாங்குழல் இசைக்கலைஞர். இதுபோன்ற பன்முகத் திறமைகள் அவரிடம் இருந்தபோதும், அவர் அனைவரிடமும் எளிமையாகவே பழகுவார். யாரையும் ஒருமையில் அழைக்கும் பழக்கம் அவருக்குக் கிடையாது. பழகுவதற்கு இனிமையானவர். நகைச்சுவை உணர்வு கொண்டவர். பல நேரங்களில் பலருக்கும் அவர் ஒரு முன்மாதிரியாக விளங்கினார். இத்தகைய பெருமைமிக்க எனது ஆசிரியருக்கு என்னுடைய கட்டுரையைச் சமர்ப்பித்து, நான் என் கட்டுரையை நிறைவு செய்கிறேன்!
--
தொடர்புக்கு: [email protected]