சில கதாபாத்திரங்களும் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களும்:
மேஜர் சந்திரகாந்த் (மேஜர் சுந்தர்ராஜன்)
உதிரிகளாக ஓரிரு பார்வை மாற்றுத்திறனாளிகள் மட்டுமே திரையில் இடம்பெற்ற காலம் அது; அவர்களுடைய பின்னணி, வாழ்வியல் முறைகள் பற்றி அக்கறைப்படாத திரைக் காலம். அத்தகைய சூழலில், முக்கியக் கதாப்பாத்திரமாகவும் முதன்மையான கதாபாத்திரமாகவும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியைக் கொண்டு உருவான திரைப்படம் ‘மேஜர் சந்திரகாந்த்’. பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய இடத்திலேயே வைக்க வேண்டும் என்பது முதல், பார்வைப் புலன் குறைபாட்டினை ஈடுசெய்வதற்காக கேட்டல், தொடுதல், சுவைத்தல், முகர்தல் போன்ற புலன்களைக் கூடுதலாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் வரை இத்திரைப்படம் வெளிக்காட்டியது.
மேற்குறிப்பிட்ட திறன்கள் அனைத்தும் ஒவ்வொரு பார்வை மாற்றுத்திறனாளியின் இயல்பான திறன்கள்தான். ஆனால், இவற்றைச் செயற்கரிய சாகசம் போல எண்ணியதால்தான், இன்று வரையிலும் திரைப்படங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்தான பார்வையில் அப்படியே தேங்கிவிட்டன. அதாவது, வைத்த பொருளைத் தேடுவது, குரலை வைத்து அடையாளம் காண்பது போன்றவை மட்டுமே தற்போதைய திரைப்படங்களிலும் இடம்பெறுகின்றன. நடிகர் விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ வரையில், பார்வை மாற்றுத்திறனாளிகளை விதவிதமான சாகசக்காரர்களாக காட்டும் நடைமுறையிலும் கூட இன்றைய திரைப்படங்கள் ‘மேஜர் சந்திரகாந்த்’ காலகட்டத்திலேயே தேங்கியிருக்கின்றன.
ராமன் தேடிய சீதை (பசுபதி)
‘ராமன் தேடிய சீதை’ திரைப்படத்தில் நடிகர் பசுபதி ஏற்றிருந்த பார்வை மாற்றுத்திறனாளி கதாபாத்திரம், திரைப் படைப்பாளிகளின் பார்வை மாற்றுத்திறனாளிகள் பற்றிய சிந்தனையை முன்னகர்த்திய கதாபாத்திரம். பார்வையுள்ள ஒருவர், பார்வை மாற்றுத்திறனாளி ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதைத் தியாகம், பெருந்தன்மை என தாழ்வு மனப்பான்மையை முதன்மைப்படுத்தாமல், உண்மையான காதலைத் திரையில் காட்டிய திரைப்படம். அதிலும், பார்வையுள்ள ஒரு பெண் தன்னைக் காதலிப்பதைத் தவிர்க்கவும் விரும்பாமல், அதே நேரத்தில் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளாமலும் தவிக்கும் உணர்வை நடிகர் பசுபதி அபாரமாக வெளிக்காட்டி இருப்பார்.
இத்திரைப்படத்தில் பசுபதி பண்பலை வானொலி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பார். அதாவது, பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களது குரலைப் பாடுவதற்கு மட்டுமின்றி, சுவாரஸ்யமாகப் பேசுவதற்கும் பயன்படுத்துகின்றனர் என்பதை மிகையில்லாமல் மிக இயல்பாகக் காட்டியது இத்திரைப்படம். பண்பலை வானொலி மட்டுமின்றி ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகள் இன்று தொடங்கப்படுகின்றன; அதிலும் செய்தித் தொலைக்காட்சிகளே அதிகம். இதனால் செய்தித் தொகுப்புகளை வழங்கும் பின்னணிக் குரல்கள் நிறையவே தேவைப்படுகின்றன. இத்தகைய பணி வாய்ப்புகள் பார்வை மாற்றுத்திறனாளிகளின் திறமைகளுக்குச் சவாலானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கின்றன. ஆகவே, ஊடகங்கள் இதுபோன்ற பணிவாய்ப்புகளை பார்வையற்றோருக்கு வழங்க முன்வர வேண்டும். அதுபோல, திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பாடகர்களாக மட்டுமே காட்ட வேண்டிய நிர்பந்தம் இனி இல்லை என்பதைப் படைப்பாளிகள் இனியாவது உணர வேண்டும்.
அமர்க்களம் (சார்லி)
குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்கள் பலவற்றை ஏற்றுள்ள நடிகர் சார்லி, பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்த திரைப்படம் ‘அமர்க்களம்’. இசைக் கல்லூரி மாணவியான நாயகி ஷாலினியின் நண்பராக சார்லி நடித்திருப்பார். நாயகி ஷாலினி காதல் வயப்பட்ட தருணம், அதை நாயகனிடம் வெளிப்படுத்துவது, நாயகன் அந்தக் காதலை ஏற்றுக்கொள்வது, நாயகனின் காதல் போலியானது என்பதை நாயகி அறிவது, மனம் திருந்திய நாயகனை உணர்வது, உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நாயகனைக் காப்பாற்ற நாயகி செல்வது என அனைத்து முக்கியமான காட்சிகளிலும் நாயகியுடன் சார்லி இருப்பார்; ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான பாவனைகளை சார்லி வெளிப்படுத்தி இருப்பார்.
ஆனாலும், சார்லியின் திறமை இத்திரைப்படத்தில் சிறிதளவுகூட பாராட்டப்படவில்லை. ஏனெனில், சார்லி கருப்புக் கண்ணாடியுடன் கருப்புத் தொப்பி மற்றும் கருப்பு உடையையே திரைப்படம் முழுதும் அணிந்திருப்பார்; பெரும்பாலான காட்சிகளில் பேசவும் மாட்டார். நாயகி ஷாலினியின் துருதுரு தோற்ற வெளிப்பாட்டின் காரணமாக, சார்லியின் இருப்பு சிறிதளவுகூட கவனம் பெறாமல் போனது. ஆகவே, படைப்பாளிகள் மற்றும் நடிகர்கள் ‘ராஜபார்வை’, ‘காசி’ போன்ற திரைப்படங்களை மட்டுமே மனதில் கொண்டு நாடகத்தனமான, வறட்சியான கதாபாத்திரங்களை உருவாக்குவதை நிறுத்திக்கொள்வதற்கு ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் நடிகர் சார்லியின் கதாபாத்திரம் உதவியாக இருக்கட்டும்.
துள்ளாத மனமும் துள்ளும் (சிம்ரன்)
இத்திரைப்படத்தில் நடிகை சிம்ரன் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பது குறித்துக் கூறுவதற்கு ஏதுமில்லை. ஆனாலும், வேறொரு காரணத்திற்காக இத்திரைப்படம் இங்கு இடம்பெறுகிறது. நாயகனின் பாடல்களைக் கேட்டு, அந்தக் குரலை வைத்து மட்டுமே நாயகனை நாயகி தேடுவதுதான் முழுத் திரைப்படத்தின் அடிப்படை. ஆனால், இத்திரைப்படத்தின் பாடல்களை வெவ்வேறு பாடகர்கள் பாடியிருப்பர். அனைத்துப் பாடல்களையும் ஒரே பின்னணிக் குரலுடன் பாடச் செய்திருக்கலாம் என்ற பொறுப்புணர்வு இல்லாமல் போனது இயக்குனரின் அறியாமையாகவோ, அலட்சியமாகவோ இருக்கலாம். இந்த அறியாமை மற்றும் அலட்சியம்தான் பார்வை மாற்றுத்திறனாளிகள் மீதான பொதுச் சமூகத்தின் அளவுகோல். இதை இனியாவது மாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும்.
இனி அடுத்த பகுதிக்கான முன்னோட்டம்: விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையில் உள்ள பாடுகளையும் கொண்டாட்டங்களையும் வெகுமக்களின் பார்வைக்கு தொடர்ச்சியாகக் கொண்டுவரும் இயக்குனரின் திரைப்படம் அது. மரணத்தை வரமாகவும் சாபமாகவும் ஒரே புள்ளியில் இணைத்துக் காட்டிய படைப்பு அது. அப்படி இணைத்தது சரியானதுதானா என்பதை அடுத்த பகுதியில் விவாதிப்போம்!
--
(கட்டுரையாளர் ஈரோடு காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல).
தொடர்புக்கு: [email protected]
மேஜர் சந்திரகாந்த் (மேஜர் சுந்தர்ராஜன்)
உதிரிகளாக ஓரிரு பார்வை மாற்றுத்திறனாளிகள் மட்டுமே திரையில் இடம்பெற்ற காலம் அது; அவர்களுடைய பின்னணி, வாழ்வியல் முறைகள் பற்றி அக்கறைப்படாத திரைக் காலம். அத்தகைய சூழலில், முக்கியக் கதாப்பாத்திரமாகவும் முதன்மையான கதாபாத்திரமாகவும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியைக் கொண்டு உருவான திரைப்படம் ‘மேஜர் சந்திரகாந்த்’. பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய இடத்திலேயே வைக்க வேண்டும் என்பது முதல், பார்வைப் புலன் குறைபாட்டினை ஈடுசெய்வதற்காக கேட்டல், தொடுதல், சுவைத்தல், முகர்தல் போன்ற புலன்களைக் கூடுதலாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் வரை இத்திரைப்படம் வெளிக்காட்டியது.
மேற்குறிப்பிட்ட திறன்கள் அனைத்தும் ஒவ்வொரு பார்வை மாற்றுத்திறனாளியின் இயல்பான திறன்கள்தான். ஆனால், இவற்றைச் செயற்கரிய சாகசம் போல எண்ணியதால்தான், இன்று வரையிலும் திரைப்படங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்தான பார்வையில் அப்படியே தேங்கிவிட்டன. அதாவது, வைத்த பொருளைத் தேடுவது, குரலை வைத்து அடையாளம் காண்பது போன்றவை மட்டுமே தற்போதைய திரைப்படங்களிலும் இடம்பெறுகின்றன. நடிகர் விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ வரையில், பார்வை மாற்றுத்திறனாளிகளை விதவிதமான சாகசக்காரர்களாக காட்டும் நடைமுறையிலும் கூட இன்றைய திரைப்படங்கள் ‘மேஜர் சந்திரகாந்த்’ காலகட்டத்திலேயே தேங்கியிருக்கின்றன.
ராமன் தேடிய சீதை (பசுபதி)
‘ராமன் தேடிய சீதை’ திரைப்படத்தில் நடிகர் பசுபதி ஏற்றிருந்த பார்வை மாற்றுத்திறனாளி கதாபாத்திரம், திரைப் படைப்பாளிகளின் பார்வை மாற்றுத்திறனாளிகள் பற்றிய சிந்தனையை முன்னகர்த்திய கதாபாத்திரம். பார்வையுள்ள ஒருவர், பார்வை மாற்றுத்திறனாளி ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதைத் தியாகம், பெருந்தன்மை என தாழ்வு மனப்பான்மையை முதன்மைப்படுத்தாமல், உண்மையான காதலைத் திரையில் காட்டிய திரைப்படம். அதிலும், பார்வையுள்ள ஒரு பெண் தன்னைக் காதலிப்பதைத் தவிர்க்கவும் விரும்பாமல், அதே நேரத்தில் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளாமலும் தவிக்கும் உணர்வை நடிகர் பசுபதி அபாரமாக வெளிக்காட்டி இருப்பார்.
இத்திரைப்படத்தில் பசுபதி பண்பலை வானொலி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பார். அதாவது, பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களது குரலைப் பாடுவதற்கு மட்டுமின்றி, சுவாரஸ்யமாகப் பேசுவதற்கும் பயன்படுத்துகின்றனர் என்பதை மிகையில்லாமல் மிக இயல்பாகக் காட்டியது இத்திரைப்படம். பண்பலை வானொலி மட்டுமின்றி ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகள் இன்று தொடங்கப்படுகின்றன; அதிலும் செய்தித் தொலைக்காட்சிகளே அதிகம். இதனால் செய்தித் தொகுப்புகளை வழங்கும் பின்னணிக் குரல்கள் நிறையவே தேவைப்படுகின்றன. இத்தகைய பணி வாய்ப்புகள் பார்வை மாற்றுத்திறனாளிகளின் திறமைகளுக்குச் சவாலானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கின்றன. ஆகவே, ஊடகங்கள் இதுபோன்ற பணிவாய்ப்புகளை பார்வையற்றோருக்கு வழங்க முன்வர வேண்டும். அதுபோல, திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பாடகர்களாக மட்டுமே காட்ட வேண்டிய நிர்பந்தம் இனி இல்லை என்பதைப் படைப்பாளிகள் இனியாவது உணர வேண்டும்.
அமர்க்களம் (சார்லி)
குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்கள் பலவற்றை ஏற்றுள்ள நடிகர் சார்லி, பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்த திரைப்படம் ‘அமர்க்களம்’. இசைக் கல்லூரி மாணவியான நாயகி ஷாலினியின் நண்பராக சார்லி நடித்திருப்பார். நாயகி ஷாலினி காதல் வயப்பட்ட தருணம், அதை நாயகனிடம் வெளிப்படுத்துவது, நாயகன் அந்தக் காதலை ஏற்றுக்கொள்வது, நாயகனின் காதல் போலியானது என்பதை நாயகி அறிவது, மனம் திருந்திய நாயகனை உணர்வது, உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நாயகனைக் காப்பாற்ற நாயகி செல்வது என அனைத்து முக்கியமான காட்சிகளிலும் நாயகியுடன் சார்லி இருப்பார்; ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான பாவனைகளை சார்லி வெளிப்படுத்தி இருப்பார்.
ஆனாலும், சார்லியின் திறமை இத்திரைப்படத்தில் சிறிதளவுகூட பாராட்டப்படவில்லை. ஏனெனில், சார்லி கருப்புக் கண்ணாடியுடன் கருப்புத் தொப்பி மற்றும் கருப்பு உடையையே திரைப்படம் முழுதும் அணிந்திருப்பார்; பெரும்பாலான காட்சிகளில் பேசவும் மாட்டார். நாயகி ஷாலினியின் துருதுரு தோற்ற வெளிப்பாட்டின் காரணமாக, சார்லியின் இருப்பு சிறிதளவுகூட கவனம் பெறாமல் போனது. ஆகவே, படைப்பாளிகள் மற்றும் நடிகர்கள் ‘ராஜபார்வை’, ‘காசி’ போன்ற திரைப்படங்களை மட்டுமே மனதில் கொண்டு நாடகத்தனமான, வறட்சியான கதாபாத்திரங்களை உருவாக்குவதை நிறுத்திக்கொள்வதற்கு ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் நடிகர் சார்லியின் கதாபாத்திரம் உதவியாக இருக்கட்டும்.
துள்ளாத மனமும் துள்ளும் (சிம்ரன்)
இத்திரைப்படத்தில் நடிகை சிம்ரன் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பது குறித்துக் கூறுவதற்கு ஏதுமில்லை. ஆனாலும், வேறொரு காரணத்திற்காக இத்திரைப்படம் இங்கு இடம்பெறுகிறது. நாயகனின் பாடல்களைக் கேட்டு, அந்தக் குரலை வைத்து மட்டுமே நாயகனை நாயகி தேடுவதுதான் முழுத் திரைப்படத்தின் அடிப்படை. ஆனால், இத்திரைப்படத்தின் பாடல்களை வெவ்வேறு பாடகர்கள் பாடியிருப்பர். அனைத்துப் பாடல்களையும் ஒரே பின்னணிக் குரலுடன் பாடச் செய்திருக்கலாம் என்ற பொறுப்புணர்வு இல்லாமல் போனது இயக்குனரின் அறியாமையாகவோ, அலட்சியமாகவோ இருக்கலாம். இந்த அறியாமை மற்றும் அலட்சியம்தான் பார்வை மாற்றுத்திறனாளிகள் மீதான பொதுச் சமூகத்தின் அளவுகோல். இதை இனியாவது மாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும்.
இனி அடுத்த பகுதிக்கான முன்னோட்டம்: விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையில் உள்ள பாடுகளையும் கொண்டாட்டங்களையும் வெகுமக்களின் பார்வைக்கு தொடர்ச்சியாகக் கொண்டுவரும் இயக்குனரின் திரைப்படம் அது. மரணத்தை வரமாகவும் சாபமாகவும் ஒரே புள்ளியில் இணைத்துக் காட்டிய படைப்பு அது. அப்படி இணைத்தது சரியானதுதானா என்பதை அடுத்த பகுதியில் விவாதிப்போம்!
--
(கட்டுரையாளர் ஈரோடு காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர். இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல).
தொடர்புக்கு: [email protected]