சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நாடகக் கலைஞர், நூலாசிரியர், சிறந்த படைப்புகளுக்குச் சொந்தக்காரர், ஒரு மிகப்பெரிய கட்சியின் தலைவராக ஐம்பது ஆண்டுகள் இருந்தவர், ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக செயல்பட்டவர், தமிழ் ‘செம்மொழி’ தகுதி பெற முக்கியக் காரணமானவர், ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்ததோடு மட்டும் அல்லாமல், அவர்களுக்கென்று ஒரு துறையை ஏற்படுத்தி அதனைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டவர், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின்படி பலநூறு பேருக்கு பணிவாய்ப்பு வழங்கியவர் என்ற பல சிறப்புகளுக்குரிய டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்குக் கூடுதல் சிறப்பு அவரால் உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று சொன்னால் மிகையாகாது.
2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள், அறிஞர் அண்ணாவின் 102-ஆவது பிறந்த நாள் அன்று, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்நூலகம் திறந்து வைக்கப்பட்டது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமிதத்திற்குரிய இந்நூலகம், பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நூலகப் பிரிவுகள்
ஒன்பது தளங்களைக் கொண்ட இந்த நூலகம், சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு, மெய்ப்புல அறைகூவலர் (Physically Challenged) பிரிவு, நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, ஆங்கில நூல்கள் பிரிவு என பகுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகளில் அனைத்து துறைகள் சார்ந்த புத்தகங்களும் அழகாகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நூலகம், உலகின் முக்கிய மின் நூலகங்களோடு இணைக்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும். கணினிமயமாக்கப்பட்ட இந்த நூலகம் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
நூலகப் பொதுச் செயல்பாடுகள்
நூலகம் என்றால் அங்கு நூல்கள் அழகாக வரிசைப்படுத்தப்பட்டு துறைவாரியாகத் தொகுக்கப்பட்டிருக்கும் என்றும், அவ்வாறு தொகுக்கப்பட்ட புத்தகங்களை ஆர்வமிகு வாசிப்பாளர்கள் எடுத்துப் படித்தும், குறிப்பெடுத்தும் பயன்படுத்துவர் என்றும்தான் நாம் அறிந்திருப்போம். இந்தச் செயல்பாடுகளையும் தாண்டிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். இங்கு பல வியக்கத்தக்க அறிவார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குழந்தைகள் பயன்பெறும் வகையில், கோடை கொண்டாட்டம் நடத்தப்பட்டது. வாசகர்கள் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொன்மாலைப் பொழுது என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் பல துறைசார்ந்த அறிஞர்கள் உரையாற்றுகின்றனர். அவர்கள் உரையின் இறுதியில் வாசகர்களுக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்படுவது கூடுதல் சிறப்பு. போட்டித் தேர்வுகளுக்காக ஆயத்தமாகி வரும் வாசகர்கள் பயன்பெறும் வகையில், துறைசார்ந்த நிபுணர்கள் மூலம் இங்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட செயல்பாடுகளால் அண்ணா நூற்றாண்டு நூலகம் மேலும் ஒருபடி உயர்ந்து வாசகர் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
இத்தகைய சிறப்பிற்குரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் பார்வையற்றோருக்கு எத்தகைய பணியைச் செய்து வருகிறது என்பதையும், பிரெயில் பிரிவு குறித்தும் இனி காண்போம்.
பிரெயில் பிரிவு
மெய்ப்புல அறைகூவலர் பிரிவு என்று அறியப்படும் பார்வையற்றோருக்கான பிரெயில் பிரிவில், நூற்றுக்கணக்கான பார்வையற்றவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பார்வையற்றோர் பயன்பெறும் வகையில் 1500 பிரெயில் புத்தகங்களும், 1100 ஒலி புத்தகங்களும், 150 மின் புத்தகங்களும் உள்ளதாக நூலக வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்வையற்றோர் தங்களுக்கு உடனடியாக தேவைப்படும் குறிப்பேடுகளை பிரெயிலில் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரெயில் மாற்றி (Braille Converter), பிரெயில் அச்சுப்பொறி (Braille Printer) ஆகியவையும் உள்ளன. மேலும், கணினியில் உள்ள மின் நூல்களை நேரடியாக பிரெயிலில் வாசிக்க ஏதுவாக புத்தாக்க பிரெயில் காட்சியமைவு (Refreshable Braille Display) வைக்கப்பட்டுள்ளது.
பிரெயில் பிரிவின் செயல்பாடுகள்
பார்வையற்றோர் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பயன்பெறும் வகையில், [email protected] என்ற மின்மடல் குழு இப்பிரிவால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழுவில், பார்வையற்றோருக்கான செய்திகள் மற்றும் சலுகைகள், ‘தினமணி’ மற்றும் ‘தி இந்து’ நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், பார்வையற்றோருக்கான வேலைவாய்ப்பு தகவல்கள், கல்வி தொடர்பான தகவல்கள் போன்றவை பகிரப்படுகின்றன. மேலும், பார்வையற்றோர் பலர் இதில் இணைந்து தங்களுக்குரிய அறிவார்ந்த ஐயங்களை பகிர்ந்து, விவாதித்து பயன்பெற்று வருகின்றனர்.
நூலக அலுவலர்கள் மற்றும் இப்பிரிவில் பணிபுரியும் நூலகர்கள் வேலைவாய்ப்பிற்காகவும், மேற்படிப்பிற்காகவும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் பார்வையற்றோருக்காக ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தருதல், தேர்விற்கான தகவல்களையும் புத்தகங்களையும் இணையத்திலிருந்து தரவிறக்கித் தருதல் போன்ற சிறந்த சேவைகளைச் செய்து வருகின்றனர்.
போட்டித்தேர்வில் பங்கேற்கும் பார்வையற்றோர் தேர்வினைச் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிபெறும் வகையில் வார இறுதி நாட்களில் தன்னார்வலர்கள்மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், வார நாட்களில் ‘காக்னிசண்ட்’ (Cognizant) மற்றும் ‘ஸ்கோப் இண்டர்நேஷனல்’ (Scope International) நிறுவனங்களில் இருந்து தன்னார்வலர்கள் இந்நூலகத்திற்கு வந்து பார்வையற்றோருக்குப் புத்தகங்களை வாசித்துக் காட்டுகின்றனர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளை வடிவமைத்ததில் தன்னார்வலர் திரு. சங்கர் அவர்களது பங்கும், பிரெயில் பிரிவு நூலகர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
நூலகத்தின் பிரெயில் பிரிவின் மூலம் பயனடைந்து, தற்போது சென்னை திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் திரு. நவரசன் அவர்களிடம் பேசியபோது, “நான் இளங்கலை படிக்கும்பொழுது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பிரெயில் பிரிவிற்கு வந்து இங்கு உள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நூல்களை வாசிக்கத் தொடங்கினேன்; அது இன்று வரை தொடர்கிறது. இங்கு வரும் தன்னார்வலர்கள் மூலம் அச்சுப் புத்தகங்களை வாசித்துக்காட்டச் சொல்லி, குறிப்பெடுத்து படித்து பயன்பெற்று வருகிறேன். நான் ஆசிரியரானதில் இந்த நூலகத்தின் பங்கு முக்கியமானது. இந்த நூலகத்தில் உள்ள தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகள் வேறு எங்கும் கிடைக்காது. ஒரு அரசு நூலகத்தில் இத்தகைய வசதிகள் உள்ளது என்றால் அதனை நம் பார்வையற்ற நண்பர்கள், தம்பி/தங்கைகள் மற்றும் மூத்தவர்கள் இன்னும் கூடுதலாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். இத்தகைய சிறப்பிற்குரிய நூலகத்தை ஏற்படுத்திய அன்றைய முதல்வர் அவர்களுக்கும், தற்போது அதனை நல்ல முறையில் பராமரித்து வரும் இன்றைய தமிழக அரசிற்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெகிழ்வுடன் கூறினார்.
இந்த நூலகத்தின் பிரெயில் பிரிவை மாதிரியாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள அரசு நூலகங்களில் பிரெயில் பிரிவு ஏற்படுத்தப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள பல பார்வையற்றவர்கள் இந்த நூலகங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு நூலகங்களிலும் பிரெயில் பிரிவினை ஏற்படுத்த அரசு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை சிறப்புகளைக் கொண்ட அரிய திட்டமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கட்டடப் பராமரிப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்பதே அக்கறையுள்ளவர்களின் கருத்தாக உள்ளது.
வியக்கத்தக்க பல செயல்பாடுகளையும், போற்றுதற்குரிய பல சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வரலாற்றில் சில இடையூறுகளும் வந்து சென்றதை அனைவரும் அறிவோம். இடர்பாடுகளைக் கலைந்து, தற்போது பல சாதனையாளர்களை உருவாக்கிவரும் அறிவாலயமான அண்ணா நூற்றாண்டு நூலகம் தன்னை நிறுவிய கலையாலயமாகிய கலைஞருக்கு இன்னொரு மணிமகுடமாகத் திகழ்கிறது.
மேலதிக விவரங்களுக்கு, www.annacentenarylibrary.org.
--
(கட்டுரையாளர் சென்னை இந்தியன் வங்கி கிளையில் பணியாற்றி வருகிறார்).
தொடர்புக்கு: [email protected]
2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள், அறிஞர் அண்ணாவின் 102-ஆவது பிறந்த நாள் அன்று, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்நூலகம் திறந்து வைக்கப்பட்டது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமிதத்திற்குரிய இந்நூலகம், பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நூலகப் பிரிவுகள்
ஒன்பது தளங்களைக் கொண்ட இந்த நூலகம், சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு, மெய்ப்புல அறைகூவலர் (Physically Challenged) பிரிவு, நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, ஆங்கில நூல்கள் பிரிவு என பகுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகளில் அனைத்து துறைகள் சார்ந்த புத்தகங்களும் அழகாகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நூலகம், உலகின் முக்கிய மின் நூலகங்களோடு இணைக்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும். கணினிமயமாக்கப்பட்ட இந்த நூலகம் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
நூலகப் பொதுச் செயல்பாடுகள்
நூலகம் என்றால் அங்கு நூல்கள் அழகாக வரிசைப்படுத்தப்பட்டு துறைவாரியாகத் தொகுக்கப்பட்டிருக்கும் என்றும், அவ்வாறு தொகுக்கப்பட்ட புத்தகங்களை ஆர்வமிகு வாசிப்பாளர்கள் எடுத்துப் படித்தும், குறிப்பெடுத்தும் பயன்படுத்துவர் என்றும்தான் நாம் அறிந்திருப்போம். இந்தச் செயல்பாடுகளையும் தாண்டிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். இங்கு பல வியக்கத்தக்க அறிவார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குழந்தைகள் பயன்பெறும் வகையில், கோடை கொண்டாட்டம் நடத்தப்பட்டது. வாசகர்கள் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொன்மாலைப் பொழுது என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் பல துறைசார்ந்த அறிஞர்கள் உரையாற்றுகின்றனர். அவர்கள் உரையின் இறுதியில் வாசகர்களுக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்படுவது கூடுதல் சிறப்பு. போட்டித் தேர்வுகளுக்காக ஆயத்தமாகி வரும் வாசகர்கள் பயன்பெறும் வகையில், துறைசார்ந்த நிபுணர்கள் மூலம் இங்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட செயல்பாடுகளால் அண்ணா நூற்றாண்டு நூலகம் மேலும் ஒருபடி உயர்ந்து வாசகர் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
இத்தகைய சிறப்பிற்குரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் பார்வையற்றோருக்கு எத்தகைய பணியைச் செய்து வருகிறது என்பதையும், பிரெயில் பிரிவு குறித்தும் இனி காண்போம்.
பிரெயில் பிரிவு
மெய்ப்புல அறைகூவலர் பிரிவு என்று அறியப்படும் பார்வையற்றோருக்கான பிரெயில் பிரிவில், நூற்றுக்கணக்கான பார்வையற்றவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பார்வையற்றோர் பயன்பெறும் வகையில் 1500 பிரெயில் புத்தகங்களும், 1100 ஒலி புத்தகங்களும், 150 மின் புத்தகங்களும் உள்ளதாக நூலக வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்வையற்றோர் தங்களுக்கு உடனடியாக தேவைப்படும் குறிப்பேடுகளை பிரெயிலில் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரெயில் மாற்றி (Braille Converter), பிரெயில் அச்சுப்பொறி (Braille Printer) ஆகியவையும் உள்ளன. மேலும், கணினியில் உள்ள மின் நூல்களை நேரடியாக பிரெயிலில் வாசிக்க ஏதுவாக புத்தாக்க பிரெயில் காட்சியமைவு (Refreshable Braille Display) வைக்கப்பட்டுள்ளது.
பிரெயில் பிரிவின் செயல்பாடுகள்
பார்வையற்றோர் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பயன்பெறும் வகையில், [email protected] என்ற மின்மடல் குழு இப்பிரிவால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழுவில், பார்வையற்றோருக்கான செய்திகள் மற்றும் சலுகைகள், ‘தினமணி’ மற்றும் ‘தி இந்து’ நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், பார்வையற்றோருக்கான வேலைவாய்ப்பு தகவல்கள், கல்வி தொடர்பான தகவல்கள் போன்றவை பகிரப்படுகின்றன. மேலும், பார்வையற்றோர் பலர் இதில் இணைந்து தங்களுக்குரிய அறிவார்ந்த ஐயங்களை பகிர்ந்து, விவாதித்து பயன்பெற்று வருகின்றனர்.
நூலக அலுவலர்கள் மற்றும் இப்பிரிவில் பணிபுரியும் நூலகர்கள் வேலைவாய்ப்பிற்காகவும், மேற்படிப்பிற்காகவும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் பார்வையற்றோருக்காக ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தருதல், தேர்விற்கான தகவல்களையும் புத்தகங்களையும் இணையத்திலிருந்து தரவிறக்கித் தருதல் போன்ற சிறந்த சேவைகளைச் செய்து வருகின்றனர்.
போட்டித்தேர்வில் பங்கேற்கும் பார்வையற்றோர் தேர்வினைச் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிபெறும் வகையில் வார இறுதி நாட்களில் தன்னார்வலர்கள்மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், வார நாட்களில் ‘காக்னிசண்ட்’ (Cognizant) மற்றும் ‘ஸ்கோப் இண்டர்நேஷனல்’ (Scope International) நிறுவனங்களில் இருந்து தன்னார்வலர்கள் இந்நூலகத்திற்கு வந்து பார்வையற்றோருக்குப் புத்தகங்களை வாசித்துக் காட்டுகின்றனர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளை வடிவமைத்ததில் தன்னார்வலர் திரு. சங்கர் அவர்களது பங்கும், பிரெயில் பிரிவு நூலகர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
நூலகத்தின் பிரெயில் பிரிவின் மூலம் பயனடைந்து, தற்போது சென்னை திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் திரு. நவரசன் அவர்களிடம் பேசியபோது, “நான் இளங்கலை படிக்கும்பொழுது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பிரெயில் பிரிவிற்கு வந்து இங்கு உள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நூல்களை வாசிக்கத் தொடங்கினேன்; அது இன்று வரை தொடர்கிறது. இங்கு வரும் தன்னார்வலர்கள் மூலம் அச்சுப் புத்தகங்களை வாசித்துக்காட்டச் சொல்லி, குறிப்பெடுத்து படித்து பயன்பெற்று வருகிறேன். நான் ஆசிரியரானதில் இந்த நூலகத்தின் பங்கு முக்கியமானது. இந்த நூலகத்தில் உள்ள தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகள் வேறு எங்கும் கிடைக்காது. ஒரு அரசு நூலகத்தில் இத்தகைய வசதிகள் உள்ளது என்றால் அதனை நம் பார்வையற்ற நண்பர்கள், தம்பி/தங்கைகள் மற்றும் மூத்தவர்கள் இன்னும் கூடுதலாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். இத்தகைய சிறப்பிற்குரிய நூலகத்தை ஏற்படுத்திய அன்றைய முதல்வர் அவர்களுக்கும், தற்போது அதனை நல்ல முறையில் பராமரித்து வரும் இன்றைய தமிழக அரசிற்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெகிழ்வுடன் கூறினார்.
இந்த நூலகத்தின் பிரெயில் பிரிவை மாதிரியாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள அரசு நூலகங்களில் பிரெயில் பிரிவு ஏற்படுத்தப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள பல பார்வையற்றவர்கள் இந்த நூலகங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு நூலகங்களிலும் பிரெயில் பிரிவினை ஏற்படுத்த அரசு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை சிறப்புகளைக் கொண்ட அரிய திட்டமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கட்டடப் பராமரிப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்பதே அக்கறையுள்ளவர்களின் கருத்தாக உள்ளது.
வியக்கத்தக்க பல செயல்பாடுகளையும், போற்றுதற்குரிய பல சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வரலாற்றில் சில இடையூறுகளும் வந்து சென்றதை அனைவரும் அறிவோம். இடர்பாடுகளைக் கலைந்து, தற்போது பல சாதனையாளர்களை உருவாக்கிவரும் அறிவாலயமான அண்ணா நூற்றாண்டு நூலகம் தன்னை நிறுவிய கலையாலயமாகிய கலைஞருக்கு இன்னொரு மணிமகுடமாகத் திகழ்கிறது.
மேலதிக விவரங்களுக்கு, www.annacentenarylibrary.org.
--
(கட்டுரையாளர் சென்னை இந்தியன் வங்கி கிளையில் பணியாற்றி வருகிறார்).
தொடர்புக்கு: [email protected]