சென்னை CFBI (Christian Foundation for the Blind – India) நிறுவனத்தால் வெளியிடப்பட்ட திருக்குறள் பிரெயில் பதிப்பிற்கு கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அளித்த வாழ்த்து மடல், அப்பதிப்பில் உள்ளவாறே:
‘இந்தியப் பார்வையற்றோருக்கான கிறித்துவ நிறுவனம்’, பார்வையற்றவர்கள் படித்துப் பயன்பெற, அய்யன் திருவள்ளுவர் படைத்த திருக்குறள் நூலை தமிழ் பிரெயில் எழுத்துகளில் வெளியிடுவது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
பார்வையற்றோரின் கல்வி வளர்ச்சி, தொழில் பயிற்சி, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டு வரும் இந்நிறுவனம், தமிழகத்தில் வாழும் அனைத்துப் பார்வையற்றோரும் பயன்பெறத்தக்க வகையில், அய்யன் திருவள்ளுவரின் 1330 திருக்குறளையும், விளக்க உரைகளுடன் புள்ளி பிரெயில் எழுத்துகளில் நூலாக உருவாக்கியுள்ளது. இதனை, 18-2-2000 அன்று பார்த்து பெரிதும் மகிழ்ந்தேன். அப்பொழுது தமிழக கல்வி அமைச்சர் பேராசிரியர், மக்கள் நல்வாழ்வு மற்றும் மின் துறை அமைச்சர் ஆர்க்காடு நா. வீராச்சாமி, பேராயர் எஸ்ரா. சற்குணம் ஆகியோர் முன்னிலையில் பிரெயில் எழுத்துகளில் உருவாக்கப்பட்டுள்ள அந்நூலிலிருந்து திருக்குறளையும், அதன் பொருள் விளக்கத்தையும் பார்வையற்ற இளைஞர் ஒருவர் தமது விரல்களால் தடவிப் படித்துக் காட்டியதைக் கண்டும் கேட்டும் வியப்பில் ஆழ்ந்தேன் என்றால் அது மிகையாகாது.
உலகில் முதல் முறையாக பிரெயில் எழுத்துகளில் திருக்குறள் நூலை உருவாக்கி முத்திரை பதித்துள்ள ‘இந்தியப் பார்வையற்றோருக்கான கிறித்துவ நிறுவனத்திற்கு’ (Christian Foundation for the Blind - India) என் பாராட்டுகள் உரித்தாகுக. பார்வையற்றோர் அனைவரும் அய்யன் திருவள்ளுவரின் திருக்குறள் பாக்களைப் படித்துப் பயன்பெற இந்நூல் உதவுவதாகுக.
இப்படிக்கு
மு. கருணாநிதி
(தமிழக முதலமைச்சர்)
பெறுநர்:
திரு. P.C. ஆல்பிரட் ஜார்ஜ்,
நிறுவனர்/பொதுச்செயலர்,
இந்தியப் பார்வையற்றோருக்கான கிறித்துவ நிறுவனம்,
சென்னை 600043.
‘இந்தியப் பார்வையற்றோருக்கான கிறித்துவ நிறுவனம்’, பார்வையற்றவர்கள் படித்துப் பயன்பெற, அய்யன் திருவள்ளுவர் படைத்த திருக்குறள் நூலை தமிழ் பிரெயில் எழுத்துகளில் வெளியிடுவது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
பார்வையற்றோரின் கல்வி வளர்ச்சி, தொழில் பயிற்சி, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டு வரும் இந்நிறுவனம், தமிழகத்தில் வாழும் அனைத்துப் பார்வையற்றோரும் பயன்பெறத்தக்க வகையில், அய்யன் திருவள்ளுவரின் 1330 திருக்குறளையும், விளக்க உரைகளுடன் புள்ளி பிரெயில் எழுத்துகளில் நூலாக உருவாக்கியுள்ளது. இதனை, 18-2-2000 அன்று பார்த்து பெரிதும் மகிழ்ந்தேன். அப்பொழுது தமிழக கல்வி அமைச்சர் பேராசிரியர், மக்கள் நல்வாழ்வு மற்றும் மின் துறை அமைச்சர் ஆர்க்காடு நா. வீராச்சாமி, பேராயர் எஸ்ரா. சற்குணம் ஆகியோர் முன்னிலையில் பிரெயில் எழுத்துகளில் உருவாக்கப்பட்டுள்ள அந்நூலிலிருந்து திருக்குறளையும், அதன் பொருள் விளக்கத்தையும் பார்வையற்ற இளைஞர் ஒருவர் தமது விரல்களால் தடவிப் படித்துக் காட்டியதைக் கண்டும் கேட்டும் வியப்பில் ஆழ்ந்தேன் என்றால் அது மிகையாகாது.
உலகில் முதல் முறையாக பிரெயில் எழுத்துகளில் திருக்குறள் நூலை உருவாக்கி முத்திரை பதித்துள்ள ‘இந்தியப் பார்வையற்றோருக்கான கிறித்துவ நிறுவனத்திற்கு’ (Christian Foundation for the Blind - India) என் பாராட்டுகள் உரித்தாகுக. பார்வையற்றோர் அனைவரும் அய்யன் திருவள்ளுவரின் திருக்குறள் பாக்களைப் படித்துப் பயன்பெற இந்நூல் உதவுவதாகுக.
இப்படிக்கு
மு. கருணாநிதி
(தமிழக முதலமைச்சர்)
பெறுநர்:
திரு. P.C. ஆல்பிரட் ஜார்ஜ்,
நிறுவனர்/பொதுச்செயலர்,
இந்தியப் பார்வையற்றோருக்கான கிறித்துவ நிறுவனம்,
சென்னை 600043.