அனைத்து தமிழ் மக்களின் தலைவராக விளங்கும் டாக்டர் கலைஞர் அவர்கள், மாற்றுத்திறனாளிகளின் இன்னலை நீக்கி, அவர்களுக்கு மறுமலர்ச்சியைக் கொடுத்ததில் உயரிய பங்கு வகிக்கிறார். வேலைவாய்ப்பிலும், மற்ற பொருளாதார தேவைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான பணி ஆற்றியவர் கலைஞர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என தனித் துறையை அமைத்து, அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்ததன் மூலம் அவருடைய பேரன்பை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர் அதிகமான உதவிகள் செய்த போதிலும், பார்வையற்றோருக்கு அதிகமான உதவிகளை உற்சாகமாக செய்து, நம் நெஞ்சங்களில் மாறாத மணம் வீசும் மல்லிகையாய் திகழ்கிறார் கலைஞர்.
1958-ஆம் ஆண்டு, முதல் முறையாக பார்வையற்றோர் எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். அதன் பிறகு, வேலை தேடத் தொடங்கினர்; ஆனால், அதில் பல சிக்கல்களைச் சந்தித்தனர். 1971-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு, மளமளவென பார்வையற்றோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கினார். கலைஞர் முதலமைச்சர் ஆவதற்கு முன்புவரை பார்வையற்றோர் அரசுப்பணியில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கலைஞர் அவர்கள் பதவியேற்ற பிறகுதான் பார்வையற்றோருக்குப் பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனங்களும், கல்லூரிகளில் பேராசிரியர் பணிநியமனங்களும் கிடைத்தன என்பது வரலாற்று உண்மையாகும். இந்த அடிப்படையில்தான் நம் நெஞ்சங்களில் நீங்காத தலைவராக நிற்கிறார் கலைஞர் அவர்கள்.
நீங்கள் முன்னால் செல்லுங்கள்
1974-ஆம் ஆண்டு பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. அனைத்து மாணவர்களும் கலந்துகொண்டனர்; ஆனால் 26 மாணவர்களுக்கு மட்டும் நன்னடத்தைச் சான்றிதழில் ‘Bad’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால், அந்த மாணவர்கள் கல்லூரியில் சேர இயலாத நிலை உருவானது.
பாதிக்கப்பட்ட 26 மாணவர்களும் கலைஞரைச் சந்தித்தனர். அவர் அவர்களுக்குப் பேருதவி செய்தார். அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவரை தொடர்புகொண்டபோது அவர், தனது பெயர் கணபதி என்றும், தனக்கு நன்னடத்தைச் சான்றிதழில் ‘பேட்’ (Bad) என்று போட்டுக் கொடுத்ததால், புத்தகக் கட்டுனர் பயிற்சியில் சேர இயலாமல் போனதாகவும் கூறினார். செய்வதறியாது திகைத்த அவர், தான் வசித்த இடத்திற்கு அருகில் இருந்த ‘பம்மல்’ என்ற ஊருக்கு கலைஞர் வருவதை அறிந்து, தன் தந்தையுடன் கலைஞரைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். ஆனால், அதிகாரிகள் தடுத்திருக்கின்றனர். இருந்தபோதும் விடாமுயற்சியுடன் கலைஞரைச் சந்தித்ததாகக் கூறுகிறார் அவர்.
“கலைஞர் அவர்கள் என் தோளைத் தட்டிக்கொடுத்து, ‘படி, நன்றாகப் படி, மிக நன்றாகப் படி’ என்று கூறினார். பின்னர் என் தந்தையிடம், ‘பெரியவரே! நீங்கள் முன்னால் சென்று, உங்கள் மகனை பின்னால் வரச்செய்து அழைத்துச் செல்லுங்கள்’ என்று பார்வையற்றோரை அழைத்துச்செல்லும் முறையை விளக்கினார். பின்னர் என்னுடைய நன்னடத்தைச் சான்றிதழில் ‘பேட்’ என்பதை மாற்றித் திருத்திக்கொடுத்தார். அதன்மூலம், நான் புத்தகக் கட்டுனர் பயிற்சியில் சேர்ந்தேன். எனது பயிற்சிப் படிப்பை முடித்தபின், அச்சகத்துறையில் பணியில் சேர்ந்தேன். இப்போது அச்சகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். என்னுடைய சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு அன்று கலைஞர் செய்த உதவி பேருதவியாகும்” என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார் அவர்.
இவர்கள் காண்டக்ட் (Conduct) பேட் (Bad) இல்லை
அதுபோலவே, நன்னடத்தைச் சான்றிதழில் ‘பேட்’ என்று போடப்பட்டிருந்ததால் உயர்கல்வியில் சேர இயலாது தவித்த சுப்ரமணியம் என்பவரை நான் சந்தித்துப் பேசினேன். அவர், “நன்னடத்தைச் சான்றிதழில் ‘பேட்’ என போடப்பட்டிருந்த நானும், திரு. P. பொன்முடி மற்றும் திரு. P. அர்த்தனாரி ஆகிய மூவரும் நந்தனம் அரசினர் கலைக்கல்லூரியில் விண்ணப்பித்து இருந்தோம்.
சான்றிதழ்களைப் பரிசோதனை செய்த கல்லூரி முதல்வர், நன்னடத்தைச் சான்றிதழில் ‘பேட்’ எனப் போடப்பட்டிருந்ததால் எங்கள் விண்ணப்பங்களை நிராகரித்தார். உடனே நாங்கள் மூவரும் கலைஞர் அவர்களைச் சந்தித்து நடந்ததைக் கூறினோம். பள்ளி நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாக எங்கள் காண்டக்ட் சர்ட்டிபிகேட்டில் ‘பேட்’ என போடப்பட்டது என்று நாங்கள் கூறினோம். உடனே கலைஞர் அவர்கள் கல்லூரி முதல்வரைத் தொடர்புகொண்டு, ‘இச்சான்றிதழ் அளித்தவர் காண்டக்ட்தான் பேட், இவர்கள் பேட் இல்லை; ஆகவே, மூவரையும் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். உடனே நந்தனம் அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் அவர்கள் எங்கள் மூவரையும் கல்லூரியில் சேர்த்துக்கொண்டார். எங்கள் கல்லூரிப் படிப்பைப் படித்து முடித்துவிட்டு, நாங்களும் பணியில் சேர்ந்து, தற்போது ஓய்வு பெற்றுவிட்டோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பார்வையற்றோருக்கான வளாகமாக இருக்க வழி செய்யுங்கள்
நண்பர்களே! உண்மையில் 1974-ஆம் ஆண்டு பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் விடுதலைப் போராட்டம் மிகவும் கடுமையானது. உணவுப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, அன்றைய பள்ளியின் முதல்வர் திரு. நந்தகோபால் அவர்கள், கடைநிலை ஊழியர்களின் உதவியுடன் பள்ளி மாணவர்களைக் குண்டாந்தடியைக் கொண்டு தாக்கினார். அப்படித் தாக்கப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்நிலையில் பள்ளி முதல்வர், அப்போதய அமைச்சர் பி.ஆர். நெடுஞ்செழியன் அவர்களின் ஆதரவைப் பெற்று, பூவைப் பள்ளியைச் சாதாரண மாணவர்கள் பயிலும் கல்லூரியாக மாற்ற முயன்றதாகக் கூறப்பட்டது. உடனே கலைஞர் அதில் தலையிட்டு, ‘பள்ளியின் பெயர் பலகையில் விக்டோரியா மெமோரியல் ஸ்கூல் ஃபார் தி ப்லைண்ட் என வெள்ளைக்காரனால் எழுதப்பட்டுள்ளது. எனவே, கல்லூரியாக மாற்ற இயலாது’ என்று கராராகக் கூறிவிட்டாராம். மேலும், ‘இதனை எப்போதும் பார்வையற்றோர் வளாகமாகவே இருக்க வழி செய்யுங்கள்’ என்றும் கூறினாராம்.
எப்போதும் சுயமரியாதையோடு இருங்கள்
போக்குவரத்துத்துறை அரசு மயமாக மாற்றப்பட்ட பிறகு, பல பார்வையற்றோர் கலைஞரை தேடி வேலை கேட்டுச் சென்றனர். அப்படி சென்றவர்களில் ஒருவர்தான், நாகர்கோவிலைச் சேர்ந்த பரமசிவம். பரமசிவத்தின் மனுவைப் பெற்றுக்கொண்ட கலைஞர் அவர்கள், உடனே அவருக்குப் பணிநியமன ஆணையைக் கொடுத்து, தன் வீட்டிலேயே உணவும் கொடுத்து, போக்குவரத்துப் படியும் கொடுத்து, அவர் மீண்டும் ரயிலில் செல்ல முதல் வகுப்பு ரயில் பயணச்சீட்டும் கொடுத்திருக்கிறார். அவர் நாகர்கோவிலைச் சென்றடைந்தவுடன் போக்குவரத்துத்துறை அலுவலகத்திற்குச் சென்று பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோலவே, நான் படித்துக்கொண்டிருந்தபோது அய்யனார் என்ற ஒரு நண்பர் இருந்தார்; அவர் போக்குவரத்துத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர், தனக்குப் பணி வழங்க வேண்டுமென கலைஞர் அவர்களின் காலில் விழ முயன்ற நிகழ்ச்சி பற்றி நினைவுகூர்ந்தார். “நான் எனக்குப் பணிவாய்ப்பு தரும்படி மனு கொடுத்துவிட்டு அவர் காலில் விழ முயன்றபோது, அவர் தடுத்து நிறுத்தி, என்னைத் தூக்கிவிட்டு, ‘எப்பொழுதும் சுயமரியாதையோடு இருங்கள்; யாருக்காகவும் யார் காலிலும் விழாதீர்கள்’ என்று என்னைக் கைதூக்கிவிட்டார். மேலும், என்னைத் தட்டிக் கொடுத்து, எனக்குப் பணிநியமன ஆணையும் வழங்கினார்” என்று நெகிழ்ந்தார். இப்படி பல அனுபவங்கள் உண்டு.
தம்பிகள் சாப்பிடவில்லை
பூவிருந்தவல்லி பள்ளி மாணவர் விடுதிப் போராட்டத்தில் மட்டுமின்றி, பார்வையற்றோர் நடத்திய ஏனைய போராட்டங்களிலும், தான் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து பங்கேற்று, ஆதரவு தந்து, கோரிக்கை வெற்றிபெறப் பாடுபட்டவர் கலைஞர் அவர்கள்.
கலைஞர் அவர்கள் ஆட்சியிலிருந்தபோது, ஒருமுறை சி.எஸ்.ஜி.ஏ.பி. (CSGAB) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள் மாணவர்கள். தலைவர் அவர்கள் தனது காலை உணவைக்கூட உண்ணாது, போராட்டக் களத்திற்கு நேரடியாக வந்து, அந்தப் போராட்டத்தை முடித்துவைத்து, அவர்களுக்கு வேண்டியனவற்றைச் செய்துகொடுத்தார். அப்போது பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், “ஒரு முதலமைச்சர் காலை உணவைக்கூட எடுத்துக்கொள்ளாமல் பார்வையற்றவர்களின் போராட்டத்திற்கு வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?” என்று முனுமுனுத்திருக்கிறார்கள். அப்போது, “தம்பிமார்கள் பசியோடு இருக்கிறார்கள், நான் மட்டும் எப்படி உணவருந்துவது?” என்று சொன்னாராம் கலைஞர். அந்த அளவிற்கு மாற்றுத்திறனாளிகள், அதிலும் குறிப்பாக பார்வையற்றவர்கள் மீது பேரன்பு கொண்டவர் கலைஞர் அவர்கள்.
குரு பக்தி
கலைஞர் அவர்கள் தனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் மீது அளவுகடந்த பற்றும், மரியாதையும் கொண்டவர் என்பதை அவருடைய வரலாற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது. ஒருமுறை திருவாரூரிலே தனக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்ட தலைவர் அவர்கள், பேசி முடித்து மேடையைவிட்டுக் கீழே இறங்கினார். “எனக்குக் கற்பித்த ஆசிரியருக்கு நீங்கள் அழைப்பு விடுக்கவில்லையா?” என்று கலைஞர் கேட்க, அதிகாரிகள் தயங்கவே, தனது உதவியாளர் சண்முகநாதனிடம் சொல்லி, அந்த ஆசிரியரைக் கண்டுபிடித்து, அவரோடே சிலமணிநேரம் உண்டு, உறவாடித் திரும்பியிருக்கிறார் கலைஞர்.
தலைவர் கலைஞர் அவர்கள், 3.6.1924-இல் பிறந்து, தனது 14-ஆவது வயதிலேயே அரசியலில் பிரவேசித்து, தனது 33-ஆவது வயதில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்று, தனது 45-ஆவது வயதிலே முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் உயர்ந்தார்.
தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராகவும், வெல்லப்பட முடியாத சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்து பல்வேறு நன்மைகளை நமக்காகச் செய்த தலைவர் கலைஞர் அவர்களை மறவாது, எந்நாளும் நம் இதயத்தில் வைத்துப் போற்றி நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். வாழ்க கலைஞர்! வளர்க அவர் புகழ்!
--
(கட்டுரையாளர் பணி நிறைவுபெற்ற முதுநிலை வரலாற்று ஆசிரியர்).
தொடர்புக்கு: [email protected]
1958-ஆம் ஆண்டு, முதல் முறையாக பார்வையற்றோர் எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். அதன் பிறகு, வேலை தேடத் தொடங்கினர்; ஆனால், அதில் பல சிக்கல்களைச் சந்தித்தனர். 1971-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு, மளமளவென பார்வையற்றோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கினார். கலைஞர் முதலமைச்சர் ஆவதற்கு முன்புவரை பார்வையற்றோர் அரசுப்பணியில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கலைஞர் அவர்கள் பதவியேற்ற பிறகுதான் பார்வையற்றோருக்குப் பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனங்களும், கல்லூரிகளில் பேராசிரியர் பணிநியமனங்களும் கிடைத்தன என்பது வரலாற்று உண்மையாகும். இந்த அடிப்படையில்தான் நம் நெஞ்சங்களில் நீங்காத தலைவராக நிற்கிறார் கலைஞர் அவர்கள்.
நீங்கள் முன்னால் செல்லுங்கள்
1974-ஆம் ஆண்டு பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. அனைத்து மாணவர்களும் கலந்துகொண்டனர்; ஆனால் 26 மாணவர்களுக்கு மட்டும் நன்னடத்தைச் சான்றிதழில் ‘Bad’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால், அந்த மாணவர்கள் கல்லூரியில் சேர இயலாத நிலை உருவானது.
பாதிக்கப்பட்ட 26 மாணவர்களும் கலைஞரைச் சந்தித்தனர். அவர் அவர்களுக்குப் பேருதவி செய்தார். அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவரை தொடர்புகொண்டபோது அவர், தனது பெயர் கணபதி என்றும், தனக்கு நன்னடத்தைச் சான்றிதழில் ‘பேட்’ (Bad) என்று போட்டுக் கொடுத்ததால், புத்தகக் கட்டுனர் பயிற்சியில் சேர இயலாமல் போனதாகவும் கூறினார். செய்வதறியாது திகைத்த அவர், தான் வசித்த இடத்திற்கு அருகில் இருந்த ‘பம்மல்’ என்ற ஊருக்கு கலைஞர் வருவதை அறிந்து, தன் தந்தையுடன் கலைஞரைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். ஆனால், அதிகாரிகள் தடுத்திருக்கின்றனர். இருந்தபோதும் விடாமுயற்சியுடன் கலைஞரைச் சந்தித்ததாகக் கூறுகிறார் அவர்.
“கலைஞர் அவர்கள் என் தோளைத் தட்டிக்கொடுத்து, ‘படி, நன்றாகப் படி, மிக நன்றாகப் படி’ என்று கூறினார். பின்னர் என் தந்தையிடம், ‘பெரியவரே! நீங்கள் முன்னால் சென்று, உங்கள் மகனை பின்னால் வரச்செய்து அழைத்துச் செல்லுங்கள்’ என்று பார்வையற்றோரை அழைத்துச்செல்லும் முறையை விளக்கினார். பின்னர் என்னுடைய நன்னடத்தைச் சான்றிதழில் ‘பேட்’ என்பதை மாற்றித் திருத்திக்கொடுத்தார். அதன்மூலம், நான் புத்தகக் கட்டுனர் பயிற்சியில் சேர்ந்தேன். எனது பயிற்சிப் படிப்பை முடித்தபின், அச்சகத்துறையில் பணியில் சேர்ந்தேன். இப்போது அச்சகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். என்னுடைய சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு அன்று கலைஞர் செய்த உதவி பேருதவியாகும்” என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார் அவர்.
இவர்கள் காண்டக்ட் (Conduct) பேட் (Bad) இல்லை
அதுபோலவே, நன்னடத்தைச் சான்றிதழில் ‘பேட்’ என்று போடப்பட்டிருந்ததால் உயர்கல்வியில் சேர இயலாது தவித்த சுப்ரமணியம் என்பவரை நான் சந்தித்துப் பேசினேன். அவர், “நன்னடத்தைச் சான்றிதழில் ‘பேட்’ என போடப்பட்டிருந்த நானும், திரு. P. பொன்முடி மற்றும் திரு. P. அர்த்தனாரி ஆகிய மூவரும் நந்தனம் அரசினர் கலைக்கல்லூரியில் விண்ணப்பித்து இருந்தோம்.
சான்றிதழ்களைப் பரிசோதனை செய்த கல்லூரி முதல்வர், நன்னடத்தைச் சான்றிதழில் ‘பேட்’ எனப் போடப்பட்டிருந்ததால் எங்கள் விண்ணப்பங்களை நிராகரித்தார். உடனே நாங்கள் மூவரும் கலைஞர் அவர்களைச் சந்தித்து நடந்ததைக் கூறினோம். பள்ளி நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாக எங்கள் காண்டக்ட் சர்ட்டிபிகேட்டில் ‘பேட்’ என போடப்பட்டது என்று நாங்கள் கூறினோம். உடனே கலைஞர் அவர்கள் கல்லூரி முதல்வரைத் தொடர்புகொண்டு, ‘இச்சான்றிதழ் அளித்தவர் காண்டக்ட்தான் பேட், இவர்கள் பேட் இல்லை; ஆகவே, மூவரையும் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். உடனே நந்தனம் அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் அவர்கள் எங்கள் மூவரையும் கல்லூரியில் சேர்த்துக்கொண்டார். எங்கள் கல்லூரிப் படிப்பைப் படித்து முடித்துவிட்டு, நாங்களும் பணியில் சேர்ந்து, தற்போது ஓய்வு பெற்றுவிட்டோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பார்வையற்றோருக்கான வளாகமாக இருக்க வழி செய்யுங்கள்
நண்பர்களே! உண்மையில் 1974-ஆம் ஆண்டு பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் விடுதலைப் போராட்டம் மிகவும் கடுமையானது. உணவுப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, அன்றைய பள்ளியின் முதல்வர் திரு. நந்தகோபால் அவர்கள், கடைநிலை ஊழியர்களின் உதவியுடன் பள்ளி மாணவர்களைக் குண்டாந்தடியைக் கொண்டு தாக்கினார். அப்படித் தாக்கப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்நிலையில் பள்ளி முதல்வர், அப்போதய அமைச்சர் பி.ஆர். நெடுஞ்செழியன் அவர்களின் ஆதரவைப் பெற்று, பூவைப் பள்ளியைச் சாதாரண மாணவர்கள் பயிலும் கல்லூரியாக மாற்ற முயன்றதாகக் கூறப்பட்டது. உடனே கலைஞர் அதில் தலையிட்டு, ‘பள்ளியின் பெயர் பலகையில் விக்டோரியா மெமோரியல் ஸ்கூல் ஃபார் தி ப்லைண்ட் என வெள்ளைக்காரனால் எழுதப்பட்டுள்ளது. எனவே, கல்லூரியாக மாற்ற இயலாது’ என்று கராராகக் கூறிவிட்டாராம். மேலும், ‘இதனை எப்போதும் பார்வையற்றோர் வளாகமாகவே இருக்க வழி செய்யுங்கள்’ என்றும் கூறினாராம்.
எப்போதும் சுயமரியாதையோடு இருங்கள்
போக்குவரத்துத்துறை அரசு மயமாக மாற்றப்பட்ட பிறகு, பல பார்வையற்றோர் கலைஞரை தேடி வேலை கேட்டுச் சென்றனர். அப்படி சென்றவர்களில் ஒருவர்தான், நாகர்கோவிலைச் சேர்ந்த பரமசிவம். பரமசிவத்தின் மனுவைப் பெற்றுக்கொண்ட கலைஞர் அவர்கள், உடனே அவருக்குப் பணிநியமன ஆணையைக் கொடுத்து, தன் வீட்டிலேயே உணவும் கொடுத்து, போக்குவரத்துப் படியும் கொடுத்து, அவர் மீண்டும் ரயிலில் செல்ல முதல் வகுப்பு ரயில் பயணச்சீட்டும் கொடுத்திருக்கிறார். அவர் நாகர்கோவிலைச் சென்றடைந்தவுடன் போக்குவரத்துத்துறை அலுவலகத்திற்குச் சென்று பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோலவே, நான் படித்துக்கொண்டிருந்தபோது அய்யனார் என்ற ஒரு நண்பர் இருந்தார்; அவர் போக்குவரத்துத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர், தனக்குப் பணி வழங்க வேண்டுமென கலைஞர் அவர்களின் காலில் விழ முயன்ற நிகழ்ச்சி பற்றி நினைவுகூர்ந்தார். “நான் எனக்குப் பணிவாய்ப்பு தரும்படி மனு கொடுத்துவிட்டு அவர் காலில் விழ முயன்றபோது, அவர் தடுத்து நிறுத்தி, என்னைத் தூக்கிவிட்டு, ‘எப்பொழுதும் சுயமரியாதையோடு இருங்கள்; யாருக்காகவும் யார் காலிலும் விழாதீர்கள்’ என்று என்னைக் கைதூக்கிவிட்டார். மேலும், என்னைத் தட்டிக் கொடுத்து, எனக்குப் பணிநியமன ஆணையும் வழங்கினார்” என்று நெகிழ்ந்தார். இப்படி பல அனுபவங்கள் உண்டு.
தம்பிகள் சாப்பிடவில்லை
பூவிருந்தவல்லி பள்ளி மாணவர் விடுதிப் போராட்டத்தில் மட்டுமின்றி, பார்வையற்றோர் நடத்திய ஏனைய போராட்டங்களிலும், தான் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து பங்கேற்று, ஆதரவு தந்து, கோரிக்கை வெற்றிபெறப் பாடுபட்டவர் கலைஞர் அவர்கள்.
கலைஞர் அவர்கள் ஆட்சியிலிருந்தபோது, ஒருமுறை சி.எஸ்.ஜி.ஏ.பி. (CSGAB) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள் மாணவர்கள். தலைவர் அவர்கள் தனது காலை உணவைக்கூட உண்ணாது, போராட்டக் களத்திற்கு நேரடியாக வந்து, அந்தப் போராட்டத்தை முடித்துவைத்து, அவர்களுக்கு வேண்டியனவற்றைச் செய்துகொடுத்தார். அப்போது பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், “ஒரு முதலமைச்சர் காலை உணவைக்கூட எடுத்துக்கொள்ளாமல் பார்வையற்றவர்களின் போராட்டத்திற்கு வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?” என்று முனுமுனுத்திருக்கிறார்கள். அப்போது, “தம்பிமார்கள் பசியோடு இருக்கிறார்கள், நான் மட்டும் எப்படி உணவருந்துவது?” என்று சொன்னாராம் கலைஞர். அந்த அளவிற்கு மாற்றுத்திறனாளிகள், அதிலும் குறிப்பாக பார்வையற்றவர்கள் மீது பேரன்பு கொண்டவர் கலைஞர் அவர்கள்.
குரு பக்தி
கலைஞர் அவர்கள் தனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் மீது அளவுகடந்த பற்றும், மரியாதையும் கொண்டவர் என்பதை அவருடைய வரலாற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது. ஒருமுறை திருவாரூரிலே தனக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்ட தலைவர் அவர்கள், பேசி முடித்து மேடையைவிட்டுக் கீழே இறங்கினார். “எனக்குக் கற்பித்த ஆசிரியருக்கு நீங்கள் அழைப்பு விடுக்கவில்லையா?” என்று கலைஞர் கேட்க, அதிகாரிகள் தயங்கவே, தனது உதவியாளர் சண்முகநாதனிடம் சொல்லி, அந்த ஆசிரியரைக் கண்டுபிடித்து, அவரோடே சிலமணிநேரம் உண்டு, உறவாடித் திரும்பியிருக்கிறார் கலைஞர்.
தலைவர் கலைஞர் அவர்கள், 3.6.1924-இல் பிறந்து, தனது 14-ஆவது வயதிலேயே அரசியலில் பிரவேசித்து, தனது 33-ஆவது வயதில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்று, தனது 45-ஆவது வயதிலே முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் உயர்ந்தார்.
தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராகவும், வெல்லப்பட முடியாத சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்து பல்வேறு நன்மைகளை நமக்காகச் செய்த தலைவர் கலைஞர் அவர்களை மறவாது, எந்நாளும் நம் இதயத்தில் வைத்துப் போற்றி நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். வாழ்க கலைஞர்! வளர்க அவர் புகழ்!
--
(கட்டுரையாளர் பணி நிறைவுபெற்ற முதுநிலை வரலாற்று ஆசிரியர்).
தொடர்புக்கு: [email protected]