இவ்வண்டப்பெருவெளியில் மனித உயிர்கள் உதிப்பதும், உதிர்வதும் இயல்பாய் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால், தான் வாழும் நாட்களில் சிலர் சரித்திரத்தையே மாற்றிவிடுகின்றனர். 50 ஆண்டுகளாகத் தமிழக அரசியல் செல்லவேண்டிய திசையைத் தீர்மானித்த கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவு, தமிழ்ச் சமூகத்தின் பேரிழப்பு.
அவர் மரணப்படுக்கையில் போராடிக்கொண்டிருந்தபோது, அவர் கடந்துவந்த பாதைகளைக் காட்டத்தொடங்கின ஊடகங்கள். இந்நிகழ்வு, கலைஞர் புதைக்கப்பட்டபோது அவரது கொள்கைகள் இளைஞர்கள் மனதில் விதைக்கப்படக் காரணமாய் அமைந்தது. 80 ஆண்டுகால பொதுவாழ்வில் சமூகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருக்கும்; அதில், பலவற்றிற்குத் தானே காரணமாக இருந்ததோடு, மேலும் பல மாற்றங்களுக்கு ஏற்றவாறு அவர் தன்னை தகவமைத்துக்கொண்டார்; ஒரு நீண்ட பயணத்திற்கு ஏதுவாய் தன் மனதையும் உடலையும் பராமரித்து வந்திருக்கிறார்.
மாற்றுத்திறனாளிகள் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியப் பண்பொன்று உண்டு. கண்ணில் பாதிப்பு ஏற்பட்டபோது கண்ணாடி அணிந்துகொண்டார்; நடக்க இயலாமல் போனபோது சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டார். இத்தகைய மாற்றுகளோடு இலக்கை நோக்கி அவர் முன்னேறிக்கொண்டேயிருந்தார்.
ஏழ்மையான குடும்பப் பின்னணி, முதுமை, நடை தளர்வு என அனுதாபத்தை மக்களிடம் கோருவதற்கான கூறுகள் தன் வாழ்வில் அனேகமிருந்தபோதும், அவர் தன்னை வலிமையானவராகவே முன்னிறுத்தினார். விமர்சனங்களுக்குச் செவிகொடுத்தார்; பதிலளித்தார். வசைகளைக்கண்டு அவர் வருந்தியதில்லை.
நாடகம் இயற்றினார்; வசனம் எழுதினார்; இதழ் நடத்தினார்; முதல்வராக 5 முறை ஆட்சி செலுத்தினார். இவ்வாறு பல தளங்களில் இயங்கினாலும், அதிலெல்லாம் சமூகநீதிக் கருத்துகளையே முரசொலியாய் முழங்கினார்.
சுழிகளும் சூறாவளிகளும் நிறைந்த இன்றைய அரசியல் கடலில் சமூக நீதியைக் காக்கும் கட்டுமரமாக அவரது கருத்துகள் இருக்கும். அதில் துணிந்து பயணம் செய்யலாம்; ஒருபொதும் கவிழ்ந்துவிடமாட்டீர்கள்!
பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழான உங்கள் ‘விரல்மொழியர்’, கலைஞர் அவர்களை நன்றியோடு நினைவுகூர்கிறது. தமிழினத்திற்காய் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒரு தலைவருக்காக, ஒரு தமிழ் எழுத்தாளருக்காக, தமிழின் முதன்மையான இதழாளருக்காக இந்த மாத இதழை அர்ப்பணிப்பதில் பெருமையடைகிறது உங்கள் ‘விரல்மொழியர்’.
பார்வை மாற்றுத்திறனாளி படைப்பாளர்கள் கலைஞர் குறித்து பல்வேறு கோணங்களில் வழங்கியிருக்கும் படைப்புகளைப் படித்துப் பயன்பெறுங்கள், விரல்மொழியரின் கலைஞர் சிறப்பிதழில்.
“உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு”
அவர் மரணப்படுக்கையில் போராடிக்கொண்டிருந்தபோது, அவர் கடந்துவந்த பாதைகளைக் காட்டத்தொடங்கின ஊடகங்கள். இந்நிகழ்வு, கலைஞர் புதைக்கப்பட்டபோது அவரது கொள்கைகள் இளைஞர்கள் மனதில் விதைக்கப்படக் காரணமாய் அமைந்தது. 80 ஆண்டுகால பொதுவாழ்வில் சமூகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருக்கும்; அதில், பலவற்றிற்குத் தானே காரணமாக இருந்ததோடு, மேலும் பல மாற்றங்களுக்கு ஏற்றவாறு அவர் தன்னை தகவமைத்துக்கொண்டார்; ஒரு நீண்ட பயணத்திற்கு ஏதுவாய் தன் மனதையும் உடலையும் பராமரித்து வந்திருக்கிறார்.
மாற்றுத்திறனாளிகள் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியப் பண்பொன்று உண்டு. கண்ணில் பாதிப்பு ஏற்பட்டபோது கண்ணாடி அணிந்துகொண்டார்; நடக்க இயலாமல் போனபோது சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டார். இத்தகைய மாற்றுகளோடு இலக்கை நோக்கி அவர் முன்னேறிக்கொண்டேயிருந்தார்.
ஏழ்மையான குடும்பப் பின்னணி, முதுமை, நடை தளர்வு என அனுதாபத்தை மக்களிடம் கோருவதற்கான கூறுகள் தன் வாழ்வில் அனேகமிருந்தபோதும், அவர் தன்னை வலிமையானவராகவே முன்னிறுத்தினார். விமர்சனங்களுக்குச் செவிகொடுத்தார்; பதிலளித்தார். வசைகளைக்கண்டு அவர் வருந்தியதில்லை.
நாடகம் இயற்றினார்; வசனம் எழுதினார்; இதழ் நடத்தினார்; முதல்வராக 5 முறை ஆட்சி செலுத்தினார். இவ்வாறு பல தளங்களில் இயங்கினாலும், அதிலெல்லாம் சமூகநீதிக் கருத்துகளையே முரசொலியாய் முழங்கினார்.
சுழிகளும் சூறாவளிகளும் நிறைந்த இன்றைய அரசியல் கடலில் சமூக நீதியைக் காக்கும் கட்டுமரமாக அவரது கருத்துகள் இருக்கும். அதில் துணிந்து பயணம் செய்யலாம்; ஒருபொதும் கவிழ்ந்துவிடமாட்டீர்கள்!
பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழான உங்கள் ‘விரல்மொழியர்’, கலைஞர் அவர்களை நன்றியோடு நினைவுகூர்கிறது. தமிழினத்திற்காய் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒரு தலைவருக்காக, ஒரு தமிழ் எழுத்தாளருக்காக, தமிழின் முதன்மையான இதழாளருக்காக இந்த மாத இதழை அர்ப்பணிப்பதில் பெருமையடைகிறது உங்கள் ‘விரல்மொழியர்’.
பார்வை மாற்றுத்திறனாளி படைப்பாளர்கள் கலைஞர் குறித்து பல்வேறு கோணங்களில் வழங்கியிருக்கும் படைப்புகளைப் படித்துப் பயன்பெறுங்கள், விரல்மொழியரின் கலைஞர் சிறப்பிதழில்.
“உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு”