2010 மார்ச் முதல் நாள், தமிழக மாற்றுத்திறனாளிகளின் வரலாற்றில் தனித்துவ நாளாய் தங்கிவிட்டது. காரணம், கலைஞர். மார்ச் முதலாம் நாள் பிற்பகலில், ‘இனி ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுவர்’ என்கிற அரசின் அறிவிப்பு தொடங்கி, அதே மாதம் 19-ஆம் தேதி, அன்றைய நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மாநில நிதிநிலை அறிக்கையின் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உருவாக்கப்பட்டது வரையிலான நிகழ்வுகள் அனைத்துமே, புறக்கணிப்பும், போராட்டமும் நிறைந்த மாற்றுத்திறனாளிகள் மீதான மக்களின் பார்வையை, கருணைத் தளத்திலிருந்து உரிமைத்தளத்திற்கு இட்டுச் சென்ற உன்னதத் தருணங்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வுகளுக்குத் தொடக்கப்புள்ளியாய் அமைந்தது, தனியார் தொலைக்காட்சி ஒன்றில், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேரா. சுப. வீரபாண்டியன் அவர்கள் நிகழ்த்திய உரை. ‘விரல்மொழியர்’ சார்பாக அவரைத் தொடர்புகொண்டு அன்று என்ன நடந்தது எனக் கேட்டோம்.
“2010 மார்ச் முதல் நாளன்று, கலைஞர் தொலைக்காட்சியின் ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ என்ற நிகழ்ச்சியில், உடல் ஊனமுற்றவர்களுக்கான உரிமைகள் குறித்தும், அது தொடர்பாக 2007-இல் ஐ.நா. வெளியிட்டுள்ள தீர்மானத்தில் இந்தியா ஏழாவது நாடாகக் கையெழுத்திட்டுள்ளது குறித்தும் விரிவாகப் பேசினேன். நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களிலேயே அன்றைய முதல்வர் கலைஞர் ஐயாவின் வீட்டிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘எல்லாம் நல்லாச் சொன்னப்பா. அந்த ஐ.நா. தீர்மானம் சம்பந்தமா ஆவணங்களெல்லாம் வச்சிருக்கியா? இருந்தா வந்து கொடுத்திட்டு போ’ என்று சொன்னார். காலை 10 மணிக்கு நான் அவர் கையில் அந்த ஆவணங்களைக் கொடுத்தேன். மதியம் ஒருமணிக்கெல்லாம் செய்திகளில் ‘இனி ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுவர்’ என்ற அறிவிப்பு வெளியானது.
வெறும் அரசின் அறிவிப்பாக மட்டுமல்லாமல், அந்த அறிவிப்பில் எனது தொலைக்காட்சி உரையைக் குறிப்பிட்டு, ‘இன்று காலை தம்பி சுபவீ அவர்களின் உரையைக் கேட்டேன். அவரின் பேச்சு நன்றாகவும் நியாயமாகவும் இருந்தது’ எனவும் ஐயா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். ஒரு முதல்வராக அவர் என்னுடைய பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அன்றிலிருந்துதான் நான் உலகத்திற்கு அவர் வாயிலாக அறிமுகமானேன். இது என் வாழ்வில் கிடைத்த பெரும்பேறு” என்று பூரித்தார்.
ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகள் என அழைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, அதில் இருக்கிற நியாயத்தை உள்ளடக்கி, மறுநாள் முரசொலியில் தன் உடன்பிறப்புகளுக்கு விரிவான கடிதம் ஒன்றினை எழுதினார் கலைஞர். அந்தக் கடிதத்தை அண்ணா அறிவாலயத்திலிருந்து பெற்று, அப்படியே வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது ‘விரல்மொழியர்’.
(நன்றி: முரசொலி 02 மார்ச் 2010)
உடன்பிறப்பே,
திரைப்படத் துறையினர் 6-2-2010 அன்று நடத்திய நன்றிப் பாராட்டு விழாவில் - நடன இயக்குனரும் நடிகருமான தம்பி லாரன்ஸ் ராகவேந்திரா இருபதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அழைத்து வந்து மேடையிலே நிறுத்தி - அவர்களுக்கெல்லாம் ‘இளஞ்சிறார் இதயப் பாதுகாப்புத் திட்டத்தின்’ மூலமாக கழக அரசால் அளிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சை உதவிகளை எடுத்து விளக்கியதையும் - அந்தக் குழந்தைகளே சிலர் தங்களின் நிலைமைகளை நெஞ்சு நெகிழ எடுத்துரைத்ததைக் கண்டது முதல் - அதன் தொடர்ச்சியாக; வழக்கம்போல் இன்று காலையில் ‘கலைஞர் தொலைக்காட்சியில்’ தம்பி சுப. வீரபாண்டியனின் ‘ஒரு சொல் கேளீர்’ எனும் சொற்சித்திரத்தைக் காணவும் கேட்கவுமான வாய்ப்பைப் பெற்றேன். உடல் ஊனமுற்றோருக்காக ஏதோ சொல்லப் போகிறார் என அறிந்தவுடன், முழுப் பேச்சையும் கேட்கலாம் என்று அமர்ந்திருந்தேன்.
உடல் ஊனமுற்றோருக்கான உதவிகள் செய்வதற்கு தொண்டு நிறுவனங்கள் பல முன்வந்துள்ள நிலையிலும் - அரசினரும் அந்தப் பணியினை மேற்கொண்டுள்ள நிலையிலும் தம்பி சுப. வீரபாண்டியனின் இந்தக் கருத்துக்கோவை என்னை மிகவும் கவர்ந்தது.
"மாற்றுத்திறன் உடையவர்களுக்கான பணிகள் தற்போது உரிமை அடிப்படையில் (Right Based) செயல்பட்டு வருகின்றது. இனியும் அவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுப்பது, தொண்டு இல்லத்தில் வைத்துப் பராமரிப்பது போன்ற பணிகளை மட்டுமே அரசோ, அரசு சாரா நிறுவனங்களோ செய்து கொண்டிருக்கக்கூடாது. அதையும் தாண்டி அவர்களின் உரிமைகளை நிலைநாட்டிட அனைத்துத் துறைகளிலும் அவர்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கும் பாடுபட வேண்டும். அவர்கள் அரசிடம் இருந்து எந்த இலவசங்களையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கென இயற்றப்பட்டிருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்தச் சட்டத்தின் ஆட்சியின்படியே அவர்களது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கோருகிறார்கள்" என்று அவர் சொல்லி முடித்ததும் அவர் அந்தப் பேச்சில் குறிப்பிட்ட ‘United Nations Convention Rights for Person with Disabilities Act, 2007’-இன் விவரங்களை வாங்கிப் படித்துப் பார்த்தேன். ஆம், அவ்வாறு ஒரு சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டபோது, அந்தச் சட்டத்தையேற்று கையெழுத்திட்ட நாடுகளில் ஏழாவது நாடாக இந்தியா இடம் பெற்றிருப்பதும் தெளிவாயிற்று.
அந்தச் சட்டத்தின் தொடர்பாக காட்டப்பட்டுள்ள ஊனமுற்றோர் எண்ணிக்கை, இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இரண்டு விழுக்காடு என்றும் - தமிழ்நாட்டில் அவர்களுடைய எண்ணிக்கை 18 இலட்சம் பேர் என்றும் அறிந்து கொள்ள முடிந்தது.
உடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் - கண் தெரியாதவராய் - வாய் பேச முடியாதவர்களாய் - கைகால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் - மனநோயாளிகளாய் உள்ள அனைவருமே இடம் பெறுகிறார்கள். இவர்களை குறிப்பிட்ட அவயவங்களைப் பயன்படுத்த முடியாதவர்கள் என்று ஒதுக்கிவிடாமல் - அல்லது ஒரு தனிப் பட்டியலில் சேர்த்துவிடாமல், இழித்துரைப்பது போல் இன்று தோன்றுகிற குருடர், செவிடர், நொண்டி, ஊனம், முடம் என்றெல்லாம் அவர்களை அழைக்காமல் - பொதுவாக ‘ஊனமுற்றோர்’ என்பதற்குப் பதிலாக ஒரு அவயவத்தின் செயல்பாட்டுக் குறையால் அவர்களுடைய மற்றொரு திறன் மேலும் ஒரு பங்கு சிறப்புறுகிறது என்ற அடிப்படையில் - அவர்களை ‘மாற்றுத்திறனாளிகள்’ என்று அழைக்கின்ற முறை சில ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 2007-ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபையிலே விவாதிக்கப்பட்டு அதன் தொடர்பாகத்தான் அந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இப்போதும் அந்த மக்களுடைய கோரிக்கைகளாக பின்வருவன இருக்கின்றன. அவர்கள் எந்த கோரிக்கைகளையும் பெறுவதற்கு யாசகங்கள் கேட்கும் பாணியில் கை நீட்டவில்லை; கை நீட்டக் கூடாது என்பதே எனது கருத்துமாகும்.
1) மாற்றுத்திறனுடையோருக்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தை இந்தியாவில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
2) அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிப்பதுடன் அனைத்துத் துறையின் வளங்களிலும் 3 சதவிகிதத்தை மாற்றுத்திறன் உடையோரின் வளர்ச்சிக்காக செலவிட வேண்டும்.
3) மாற்றுத்திறன் உடையோரின் அரசியல் உரிமைகளை நிலைநாட்டிட அவர்களுக்கு மாநில சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் (மக்களவை, மாநிலங்களவை) 3 சதவிகித இட ஒதுக்கீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
4) மாநிலத்திலும், மத்திய அரசிலும் மாற்றுத்திறனுடையோருக்கான அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். தனியாக அமைச்சரும் வேண்டும். (தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்துடன் இணைத்து ஊனமுற்றோர் நல்வாழ்வு என்பதனை மாற்றி மாற்றுத்திறன் உடையோர்களுக்கென தனியான அமைச்சகம் அமைக்க வேண்டும்).
5) அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் குறைந்துவிட்ட நிலையில் தனியார் பள்ளிகளில், கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.
6) உடனடியாக நாடெங்கிலும் வீடு வீடாகச் சென்று மாற்றுத்திறன் உடையோரின் கணக்கெடுப்பை நிகழ்த்த வேண்டும். இந்தத் தகவல்களை முறையாக கணினிமயப்படுத்தி பாதுகாக்கவேண்டும்.
7) மாற்றுத்திறன் உடையோருக்கு வழங்கப்பட்டிருக்கும் தேசிய அடையாள அட்டை முழுமையான ஏற்பு ஆவணமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு உதவியைப் பெறவும், பணியைப் பெறவும், உதவும் உபகரணங்களைப் பெறவும் தனித்தனியான மருத்துவச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றைக் கேட்க கூடாது.
8) பதினைந்து இலக்க மின்னணு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். இதன் மூலமாகவே அனைத்து சேவைகளையும், நலத் திட்டங்களையும் அளிக்க வேண்டும்.
9) மாற்றுத்திறன் உடையோரின் குடும்ப வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் மறுக்கப்படுகின்றன. பதினெட்டு வயது பூர்த்தியான மாற்றுத்திறன் உடையோரின் குடும்ப வருமானத்தைக் கணக்கில் எடுக்காமல் அவரது தனி நபர் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அரசின் உதவிகள் வழங்கப்பட வேண்டும். குடும்ப வருமானத்தைக் காரணமாகக் காட்டி தற்பொழுது பலருக்கும் எந்த விதமான உதவிகளும் கிடைப்பதில்லை.
10) ‘Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights and Full Participation) Act, 1995’ ஊனமுற்றோருக்கான சட்டம் 1995 (சமவாய்ப்பு, பங்கேற்பு)-ன்படி பதினைந்து ஆண்டுகளுக்கான மொத்தமான வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டை உடனடியாக மத்திய மாநில அரசுகள் வழங்கிட வேண்டும்.
மாற்றுத்திறன் உடையோருக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை பெறுவதில் அனைத்து மக்களும் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும். கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் இதை முன்னெடுக்க வேண்டும்.
இவைகள் எல்லாம் அவர்களுடைய கோரிக்கைகளாக இருக்கின்றன. நான் முதலிலே சொன்னபடி கோரிக்கைகள் அல்ல – ‘உரிமையை வலியுறுத்தல்’ என்று எடுத்துக் கொண்டு - அவர்களுக்குரிய வாய்ப்புகளை அளிப்பதற்கு மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இந்த அரசின் மூலமாக தகுந்த முறையில் மாற்றுத்திறன் உடையோருக்கான துன்பங்களைத் துடைக்கலாம் - அவர்களை எல்லோரையும் போல சமமாக உயர்த்தலாம் என்ற கருத்தை நமது அரசின் மூலமாக மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கலாம் என்று கருதுகிறேன். ஐ.நா. மன்றம் இயற்றிய சட்டத்தின்படி, சில முக்கிய சலுகைகள் குறிப்பாக எல்லாவற்றிலும் அவர்களுக்கு உரிய சதவிகிதம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதற்கட்டமாக நாம் பரிசீலித்து, அவர்களுக்குத் தோராயமாக மனிதநேய உணர்வுடன் அரசின் சார்பில் வழங்குகின்ற உதவிகளுக்குப் பதிலாக அவர்கள் கோரும் உரிமையை நிலைநாட்ட குறிப்பிட்ட சதவிகித அளவு வாய்ப்புகளை அளிப்பதற்கு மத்திய அரசுடன் தொடர்பு கொள்ள வேண்டும். மத்திய அரசும் இதற்கு இணங்கி 2007-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மத்திய சாசனத்தில் ஏழாவது நாடாக கையெழுத்திட்டதை நினைவிலே வைத்துக்கொண்டு ஆவண செய்யும் - அனுகூலமான முடிவையெடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
அன்புள்ள,
மு.க.
--
ஒருங்குறி வடிவம்: D. வெரோனிக்கா மோனிஷா
தொகுப்பு: ப. சரவணமணிகண்டன்
முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வுகளுக்குத் தொடக்கப்புள்ளியாய் அமைந்தது, தனியார் தொலைக்காட்சி ஒன்றில், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேரா. சுப. வீரபாண்டியன் அவர்கள் நிகழ்த்திய உரை. ‘விரல்மொழியர்’ சார்பாக அவரைத் தொடர்புகொண்டு அன்று என்ன நடந்தது எனக் கேட்டோம்.
“2010 மார்ச் முதல் நாளன்று, கலைஞர் தொலைக்காட்சியின் ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ என்ற நிகழ்ச்சியில், உடல் ஊனமுற்றவர்களுக்கான உரிமைகள் குறித்தும், அது தொடர்பாக 2007-இல் ஐ.நா. வெளியிட்டுள்ள தீர்மானத்தில் இந்தியா ஏழாவது நாடாகக் கையெழுத்திட்டுள்ளது குறித்தும் விரிவாகப் பேசினேன். நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களிலேயே அன்றைய முதல்வர் கலைஞர் ஐயாவின் வீட்டிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘எல்லாம் நல்லாச் சொன்னப்பா. அந்த ஐ.நா. தீர்மானம் சம்பந்தமா ஆவணங்களெல்லாம் வச்சிருக்கியா? இருந்தா வந்து கொடுத்திட்டு போ’ என்று சொன்னார். காலை 10 மணிக்கு நான் அவர் கையில் அந்த ஆவணங்களைக் கொடுத்தேன். மதியம் ஒருமணிக்கெல்லாம் செய்திகளில் ‘இனி ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுவர்’ என்ற அறிவிப்பு வெளியானது.
வெறும் அரசின் அறிவிப்பாக மட்டுமல்லாமல், அந்த அறிவிப்பில் எனது தொலைக்காட்சி உரையைக் குறிப்பிட்டு, ‘இன்று காலை தம்பி சுபவீ அவர்களின் உரையைக் கேட்டேன். அவரின் பேச்சு நன்றாகவும் நியாயமாகவும் இருந்தது’ எனவும் ஐயா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். ஒரு முதல்வராக அவர் என்னுடைய பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அன்றிலிருந்துதான் நான் உலகத்திற்கு அவர் வாயிலாக அறிமுகமானேன். இது என் வாழ்வில் கிடைத்த பெரும்பேறு” என்று பூரித்தார்.
ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகள் என அழைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, அதில் இருக்கிற நியாயத்தை உள்ளடக்கி, மறுநாள் முரசொலியில் தன் உடன்பிறப்புகளுக்கு விரிவான கடிதம் ஒன்றினை எழுதினார் கலைஞர். அந்தக் கடிதத்தை அண்ணா அறிவாலயத்திலிருந்து பெற்று, அப்படியே வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது ‘விரல்மொழியர்’.
(நன்றி: முரசொலி 02 மார்ச் 2010)
உடன்பிறப்பே,
திரைப்படத் துறையினர் 6-2-2010 அன்று நடத்திய நன்றிப் பாராட்டு விழாவில் - நடன இயக்குனரும் நடிகருமான தம்பி லாரன்ஸ் ராகவேந்திரா இருபதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அழைத்து வந்து மேடையிலே நிறுத்தி - அவர்களுக்கெல்லாம் ‘இளஞ்சிறார் இதயப் பாதுகாப்புத் திட்டத்தின்’ மூலமாக கழக அரசால் அளிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சை உதவிகளை எடுத்து விளக்கியதையும் - அந்தக் குழந்தைகளே சிலர் தங்களின் நிலைமைகளை நெஞ்சு நெகிழ எடுத்துரைத்ததைக் கண்டது முதல் - அதன் தொடர்ச்சியாக; வழக்கம்போல் இன்று காலையில் ‘கலைஞர் தொலைக்காட்சியில்’ தம்பி சுப. வீரபாண்டியனின் ‘ஒரு சொல் கேளீர்’ எனும் சொற்சித்திரத்தைக் காணவும் கேட்கவுமான வாய்ப்பைப் பெற்றேன். உடல் ஊனமுற்றோருக்காக ஏதோ சொல்லப் போகிறார் என அறிந்தவுடன், முழுப் பேச்சையும் கேட்கலாம் என்று அமர்ந்திருந்தேன்.
உடல் ஊனமுற்றோருக்கான உதவிகள் செய்வதற்கு தொண்டு நிறுவனங்கள் பல முன்வந்துள்ள நிலையிலும் - அரசினரும் அந்தப் பணியினை மேற்கொண்டுள்ள நிலையிலும் தம்பி சுப. வீரபாண்டியனின் இந்தக் கருத்துக்கோவை என்னை மிகவும் கவர்ந்தது.
"மாற்றுத்திறன் உடையவர்களுக்கான பணிகள் தற்போது உரிமை அடிப்படையில் (Right Based) செயல்பட்டு வருகின்றது. இனியும் அவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுப்பது, தொண்டு இல்லத்தில் வைத்துப் பராமரிப்பது போன்ற பணிகளை மட்டுமே அரசோ, அரசு சாரா நிறுவனங்களோ செய்து கொண்டிருக்கக்கூடாது. அதையும் தாண்டி அவர்களின் உரிமைகளை நிலைநாட்டிட அனைத்துத் துறைகளிலும் அவர்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கும் பாடுபட வேண்டும். அவர்கள் அரசிடம் இருந்து எந்த இலவசங்களையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கென இயற்றப்பட்டிருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்தச் சட்டத்தின் ஆட்சியின்படியே அவர்களது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கோருகிறார்கள்" என்று அவர் சொல்லி முடித்ததும் அவர் அந்தப் பேச்சில் குறிப்பிட்ட ‘United Nations Convention Rights for Person with Disabilities Act, 2007’-இன் விவரங்களை வாங்கிப் படித்துப் பார்த்தேன். ஆம், அவ்வாறு ஒரு சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டபோது, அந்தச் சட்டத்தையேற்று கையெழுத்திட்ட நாடுகளில் ஏழாவது நாடாக இந்தியா இடம் பெற்றிருப்பதும் தெளிவாயிற்று.
அந்தச் சட்டத்தின் தொடர்பாக காட்டப்பட்டுள்ள ஊனமுற்றோர் எண்ணிக்கை, இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இரண்டு விழுக்காடு என்றும் - தமிழ்நாட்டில் அவர்களுடைய எண்ணிக்கை 18 இலட்சம் பேர் என்றும் அறிந்து கொள்ள முடிந்தது.
உடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் - கண் தெரியாதவராய் - வாய் பேச முடியாதவர்களாய் - கைகால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் - மனநோயாளிகளாய் உள்ள அனைவருமே இடம் பெறுகிறார்கள். இவர்களை குறிப்பிட்ட அவயவங்களைப் பயன்படுத்த முடியாதவர்கள் என்று ஒதுக்கிவிடாமல் - அல்லது ஒரு தனிப் பட்டியலில் சேர்த்துவிடாமல், இழித்துரைப்பது போல் இன்று தோன்றுகிற குருடர், செவிடர், நொண்டி, ஊனம், முடம் என்றெல்லாம் அவர்களை அழைக்காமல் - பொதுவாக ‘ஊனமுற்றோர்’ என்பதற்குப் பதிலாக ஒரு அவயவத்தின் செயல்பாட்டுக் குறையால் அவர்களுடைய மற்றொரு திறன் மேலும் ஒரு பங்கு சிறப்புறுகிறது என்ற அடிப்படையில் - அவர்களை ‘மாற்றுத்திறனாளிகள்’ என்று அழைக்கின்ற முறை சில ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 2007-ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபையிலே விவாதிக்கப்பட்டு அதன் தொடர்பாகத்தான் அந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இப்போதும் அந்த மக்களுடைய கோரிக்கைகளாக பின்வருவன இருக்கின்றன. அவர்கள் எந்த கோரிக்கைகளையும் பெறுவதற்கு யாசகங்கள் கேட்கும் பாணியில் கை நீட்டவில்லை; கை நீட்டக் கூடாது என்பதே எனது கருத்துமாகும்.
1) மாற்றுத்திறனுடையோருக்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தை இந்தியாவில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
2) அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிப்பதுடன் அனைத்துத் துறையின் வளங்களிலும் 3 சதவிகிதத்தை மாற்றுத்திறன் உடையோரின் வளர்ச்சிக்காக செலவிட வேண்டும்.
3) மாற்றுத்திறன் உடையோரின் அரசியல் உரிமைகளை நிலைநாட்டிட அவர்களுக்கு மாநில சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் (மக்களவை, மாநிலங்களவை) 3 சதவிகித இட ஒதுக்கீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
4) மாநிலத்திலும், மத்திய அரசிலும் மாற்றுத்திறனுடையோருக்கான அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். தனியாக அமைச்சரும் வேண்டும். (தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்துடன் இணைத்து ஊனமுற்றோர் நல்வாழ்வு என்பதனை மாற்றி மாற்றுத்திறன் உடையோர்களுக்கென தனியான அமைச்சகம் அமைக்க வேண்டும்).
5) அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் குறைந்துவிட்ட நிலையில் தனியார் பள்ளிகளில், கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.
6) உடனடியாக நாடெங்கிலும் வீடு வீடாகச் சென்று மாற்றுத்திறன் உடையோரின் கணக்கெடுப்பை நிகழ்த்த வேண்டும். இந்தத் தகவல்களை முறையாக கணினிமயப்படுத்தி பாதுகாக்கவேண்டும்.
7) மாற்றுத்திறன் உடையோருக்கு வழங்கப்பட்டிருக்கும் தேசிய அடையாள அட்டை முழுமையான ஏற்பு ஆவணமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு உதவியைப் பெறவும், பணியைப் பெறவும், உதவும் உபகரணங்களைப் பெறவும் தனித்தனியான மருத்துவச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றைக் கேட்க கூடாது.
8) பதினைந்து இலக்க மின்னணு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். இதன் மூலமாகவே அனைத்து சேவைகளையும், நலத் திட்டங்களையும் அளிக்க வேண்டும்.
9) மாற்றுத்திறன் உடையோரின் குடும்ப வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் மறுக்கப்படுகின்றன. பதினெட்டு வயது பூர்த்தியான மாற்றுத்திறன் உடையோரின் குடும்ப வருமானத்தைக் கணக்கில் எடுக்காமல் அவரது தனி நபர் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அரசின் உதவிகள் வழங்கப்பட வேண்டும். குடும்ப வருமானத்தைக் காரணமாகக் காட்டி தற்பொழுது பலருக்கும் எந்த விதமான உதவிகளும் கிடைப்பதில்லை.
10) ‘Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights and Full Participation) Act, 1995’ ஊனமுற்றோருக்கான சட்டம் 1995 (சமவாய்ப்பு, பங்கேற்பு)-ன்படி பதினைந்து ஆண்டுகளுக்கான மொத்தமான வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டை உடனடியாக மத்திய மாநில அரசுகள் வழங்கிட வேண்டும்.
மாற்றுத்திறன் உடையோருக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை பெறுவதில் அனைத்து மக்களும் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும். கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் இதை முன்னெடுக்க வேண்டும்.
இவைகள் எல்லாம் அவர்களுடைய கோரிக்கைகளாக இருக்கின்றன. நான் முதலிலே சொன்னபடி கோரிக்கைகள் அல்ல – ‘உரிமையை வலியுறுத்தல்’ என்று எடுத்துக் கொண்டு - அவர்களுக்குரிய வாய்ப்புகளை அளிப்பதற்கு மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இந்த அரசின் மூலமாக தகுந்த முறையில் மாற்றுத்திறன் உடையோருக்கான துன்பங்களைத் துடைக்கலாம் - அவர்களை எல்லோரையும் போல சமமாக உயர்த்தலாம் என்ற கருத்தை நமது அரசின் மூலமாக மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கலாம் என்று கருதுகிறேன். ஐ.நா. மன்றம் இயற்றிய சட்டத்தின்படி, சில முக்கிய சலுகைகள் குறிப்பாக எல்லாவற்றிலும் அவர்களுக்கு உரிய சதவிகிதம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதற்கட்டமாக நாம் பரிசீலித்து, அவர்களுக்குத் தோராயமாக மனிதநேய உணர்வுடன் அரசின் சார்பில் வழங்குகின்ற உதவிகளுக்குப் பதிலாக அவர்கள் கோரும் உரிமையை நிலைநாட்ட குறிப்பிட்ட சதவிகித அளவு வாய்ப்புகளை அளிப்பதற்கு மத்திய அரசுடன் தொடர்பு கொள்ள வேண்டும். மத்திய அரசும் இதற்கு இணங்கி 2007-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மத்திய சாசனத்தில் ஏழாவது நாடாக கையெழுத்திட்டதை நினைவிலே வைத்துக்கொண்டு ஆவண செய்யும் - அனுகூலமான முடிவையெடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
அன்புள்ள,
மு.க.
--
ஒருங்குறி வடிவம்: D. வெரோனிக்கா மோனிஷா
தொகுப்பு: ப. சரவணமணிகண்டன்