பேருந்திற்குக் காத்திருந்த அந்த மாலை வேளையில், இதயத்தில் பேரிடியாய் வந்து விழுந்தது கலைஞரின் மரணச் செய்தி. அன்று மட்டும் சூரியன் வினாடியில் மறைந்து இருள் சூழ்ந்ததாய் உணர்ந்தது தமிழகம்.
‘வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்க ஒன்னா வேதம்’, (பாடலைக் கேட்க) என் மனதின் அடி ஆழத்தில் அசரீரியாய் ஒலிக்கிறதே K.P. சுந்தராம்பாலின் குரல்!
ஒவ்வொரு மரணமும் விட்டுச் செல்லும் நினைவுகளின் தொகுப்புகளில்தான் இனி இறந்தவர்களால் வந்துபோக முடியும் என்றால், நமது மனதைவிட்டுக் கலைஞரால் போகவே முடியாது என்பதுதானே நிஜம்? அரசியல் பெருங்கடலில் அவர் செலுத்திய வாழ்க்கை என்னும் ஓடம், தமிழராகிய நமக்கெல்லாம் மறக்க ஒன்னா வேதமே!
தமிழகத்தின் ஒரு நூற்றாண்டு அரசியலை அவரைத் தவிர்த்துவிட்டு எவரால் எழுதிவிட, பேசிவிட முடியும்? எப்போதும் தன் எதிரிகளுக்கு அவர் மாற்றான் தோட்டத்து மலர்தான். மல்லிகையா, அரளியா என்பதெல்லாம் அவரவர் நுகர்வின் பாடு. ஆனால், இனி எப்போதும் அவரின் நினைவுகளை நுகராமல் நகரப்போவதில்லை அரசியலில் தமிழ்நாடு.
‘வாலிபம் என்பது கலைகின்ற வேடம் – அதில்
வந்தது வரட்டும் என்பவன் மூடன்’, என்ற தன் எழுத்திற்குச் சான்றாய் உழைத்துக்கொண்டே இருந்தவர் கலைஞர். அவரின் மிகச்சிறந்த செயல் ஆவணப்படுத்தல். இடைக்காலத்தைத் தொலைத்து நிற்கிற தமிழர்க்கூட்டம், தமிழ் இலக்கியத்திலும் பக்தியையே பறைசாற்றிக்கொண்டிருந்ததை மாற்ற எண்ணினார் அவர். திரைப்பட வசனங்கள் வாயிலாக, தான் சார்ந்த பகுத்தறிவு இயக்கத்தின் கோட்பாடுகளை ஆவணப்படுத்தினார்.
‘துடுப்புகள் இல்லாப் படகு
அலை அடிக்கின்ற திசையெலாம் போகும்’. தமிழரை ஆதிக்க அலை அடித்துச் சென்றுவிடாதபடி தமிழையே துடுப்பாக்கி, மறுமலர்ச்சிக் கரைக்குக் கொண்டு சேர்க்கிற மாலுமியாய் இயங்கியவர் கலைஞர். தனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களில் தமிழ்ப் பண்பாட்டை பறைசாற்றும் கட்டடங்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். இதுவரை அவர் எழுதியிருக்கிற நூல்கள், எழுதிக்கொண்டிருந்த உடன்பிறப்புகளுக்கான தினசரிக் கடிதங்கள் அனைத்தையுமே தான் வாழ்ந்த காலத்தின் வரலாற்று ஆவணங்களாய்ச் செதுக்கினார்.
பொதுவாகவே, தேர்தல் அரசியலில் தொடர் தோல்விகளைச் சந்திக்கும் ஒரு கட்சி கரைந்து காணாமல் போய்விடும்; அதிலும் ஆட்சி அதிகாரத்தை சுவைத்த கட்சியென்றால், அதன் மாஜிகளே அதைக் கைவிட்டு, ஜோதியில் ஐக்கியமாகி, சுகம்காணப் போய்விடுவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். எழுச்சிக்குப் பின்னால், திமுகவின் அரசியல் வனவாசத்தின்போது, கட்சியில் சிறு பிளவும் நேராது காத்தவர் கலைஞர்.
‘தமிழ்நாட்டைத் தன் குடும்பத்திற்காக அடகுவைத்துவிட்டார் கருணாநிதி’ என்று சொல்லிச் சொல்லியே சோபித்துக்கொண்டிருந்தவருக்குப் பின்னிருந்ததெல்லாம் குடும்பத்தைவிட மிக ஆபத்தான ஒரு கும்பல் என்பதை ரத்தத்தின் ரத்தங்களே சொல்லக் கேட்டது தமிழகம். அதை இன்னும் துல்லியத்துடன் தனது மறுமொழிகளால் ஆவணப்படுத்த கருணாநிதியின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதில் அவரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு வருத்தம். இது, ரத்தத்தின் ரத்தங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம்.
அவரது ஆட்சி காலங்களில் பெரும்பாலும் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதில்லை. தன்னைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்துகளாலேயே எதிர்கொண்டவர் அவர். அதுவே, மதம், சாதி என்ற உள்நோக்கங்களை மனதில் மறைத்தபடி இயங்கிக்கொண்டிருந்த அறிவு ஜீவிகள், அறிஞர்களுக்கெல்லாம் மிக வசதியாகப் போய்விட்டது.
பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மிகவும் இழிவுபடுத்தியும், எப்போதும் அவரின் எல்லாச் செயல்களுக்கும் உள்நோக்கம் கற்பித்தும் எழுதினார்கள். இந்தச் செயல்கள் நிறுவனப்படுத்தப்பட்ட முறையில் இப்போதும் மெரினாவை முன்வைத்து, காமராஜர் பெயரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெரும்பாலும் தங்களைச் சந்திப்பதைத் தவிர்த்த முன்னாள் முதல்வரை விமர்சிக்கும் சூழலுக்கு ஊடக கனவான்களில் பலர் தள்ளப்பட்டபோதெல்லாம், அவர்கள் துணைக்குப் பலிகொடுத்த பலியாடு கலைஞரும் அவரது திமுகவும்தான். திராணியற்றவர்கள்; முதல் வரியில் ஜெயலலிதா என்ற பெயருக்குப் பதிலாக ‘தமிழக அரசு’ என்று எழுதுவார்கள். அடுத்த வரியில், முந்தைய அரசு என்பதற்குப் பதிலாக, ‘முந்தைய கருணாநிதியின் ஆட்சி’யில் என்று எழுதுவார்கள்.
இப்போது கலைஞர் இல்லாத தமிழகம் தன்னை ஓர் அநாதை குழந்தையாகவே கருதுகிறது. தத்தளிக்கும் தமிழகத்தைக் கரைசேர்க்கும் இதுபோன்ற தலைவர் இனி கிடைப்பாரா எனத் தெரியவில்லை. ஆனால், என்னை இவ்விடம் விட்டு என் இடம் சேர்க்கும் எனக்கான பேருந்து வந்துவிட்டது.
பேருந்தில் ஒரு வெறுமை தெரிகிறதே. எல்லா இருக்கைகளுமே காலியாகத்தான் இருக்கிறது என்பது, பேருந்து மேடு பள்ளங்களை மெதுவாகக் கடக்கும்போதுகூட, ‘டொக்கடா டொக்கடா’ என்று சத்தமிட்டுச் சாகடிக்கும்போதே புரிகிறது. ஒழுங்காய் ஊர்சேர்ந்தால் உத்தமமாய்ப் போகும். நான், ஓட்டுநர், நடத்துநர் ஆகிய மூவர் மட்டுமே பயணித்துக்கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்.
இப்போதும் கலைஞரின் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.
‘காகித ஓடம்
கடலலை மீது
போவது போலே
மூவரும் போவோம்’.
...ரதம் பயணிக்கும்
--
தொடர்புக்கு: [email protected]
‘வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்க ஒன்னா வேதம்’, (பாடலைக் கேட்க) என் மனதின் அடி ஆழத்தில் அசரீரியாய் ஒலிக்கிறதே K.P. சுந்தராம்பாலின் குரல்!
ஒவ்வொரு மரணமும் விட்டுச் செல்லும் நினைவுகளின் தொகுப்புகளில்தான் இனி இறந்தவர்களால் வந்துபோக முடியும் என்றால், நமது மனதைவிட்டுக் கலைஞரால் போகவே முடியாது என்பதுதானே நிஜம்? அரசியல் பெருங்கடலில் அவர் செலுத்திய வாழ்க்கை என்னும் ஓடம், தமிழராகிய நமக்கெல்லாம் மறக்க ஒன்னா வேதமே!
தமிழகத்தின் ஒரு நூற்றாண்டு அரசியலை அவரைத் தவிர்த்துவிட்டு எவரால் எழுதிவிட, பேசிவிட முடியும்? எப்போதும் தன் எதிரிகளுக்கு அவர் மாற்றான் தோட்டத்து மலர்தான். மல்லிகையா, அரளியா என்பதெல்லாம் அவரவர் நுகர்வின் பாடு. ஆனால், இனி எப்போதும் அவரின் நினைவுகளை நுகராமல் நகரப்போவதில்லை அரசியலில் தமிழ்நாடு.
‘வாலிபம் என்பது கலைகின்ற வேடம் – அதில்
வந்தது வரட்டும் என்பவன் மூடன்’, என்ற தன் எழுத்திற்குச் சான்றாய் உழைத்துக்கொண்டே இருந்தவர் கலைஞர். அவரின் மிகச்சிறந்த செயல் ஆவணப்படுத்தல். இடைக்காலத்தைத் தொலைத்து நிற்கிற தமிழர்க்கூட்டம், தமிழ் இலக்கியத்திலும் பக்தியையே பறைசாற்றிக்கொண்டிருந்ததை மாற்ற எண்ணினார் அவர். திரைப்பட வசனங்கள் வாயிலாக, தான் சார்ந்த பகுத்தறிவு இயக்கத்தின் கோட்பாடுகளை ஆவணப்படுத்தினார்.
‘துடுப்புகள் இல்லாப் படகு
அலை அடிக்கின்ற திசையெலாம் போகும்’. தமிழரை ஆதிக்க அலை அடித்துச் சென்றுவிடாதபடி தமிழையே துடுப்பாக்கி, மறுமலர்ச்சிக் கரைக்குக் கொண்டு சேர்க்கிற மாலுமியாய் இயங்கியவர் கலைஞர். தனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களில் தமிழ்ப் பண்பாட்டை பறைசாற்றும் கட்டடங்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். இதுவரை அவர் எழுதியிருக்கிற நூல்கள், எழுதிக்கொண்டிருந்த உடன்பிறப்புகளுக்கான தினசரிக் கடிதங்கள் அனைத்தையுமே தான் வாழ்ந்த காலத்தின் வரலாற்று ஆவணங்களாய்ச் செதுக்கினார்.
பொதுவாகவே, தேர்தல் அரசியலில் தொடர் தோல்விகளைச் சந்திக்கும் ஒரு கட்சி கரைந்து காணாமல் போய்விடும்; அதிலும் ஆட்சி அதிகாரத்தை சுவைத்த கட்சியென்றால், அதன் மாஜிகளே அதைக் கைவிட்டு, ஜோதியில் ஐக்கியமாகி, சுகம்காணப் போய்விடுவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். எழுச்சிக்குப் பின்னால், திமுகவின் அரசியல் வனவாசத்தின்போது, கட்சியில் சிறு பிளவும் நேராது காத்தவர் கலைஞர்.
‘தமிழ்நாட்டைத் தன் குடும்பத்திற்காக அடகுவைத்துவிட்டார் கருணாநிதி’ என்று சொல்லிச் சொல்லியே சோபித்துக்கொண்டிருந்தவருக்குப் பின்னிருந்ததெல்லாம் குடும்பத்தைவிட மிக ஆபத்தான ஒரு கும்பல் என்பதை ரத்தத்தின் ரத்தங்களே சொல்லக் கேட்டது தமிழகம். அதை இன்னும் துல்லியத்துடன் தனது மறுமொழிகளால் ஆவணப்படுத்த கருணாநிதியின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதில் அவரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு வருத்தம். இது, ரத்தத்தின் ரத்தங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம்.
அவரது ஆட்சி காலங்களில் பெரும்பாலும் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதில்லை. தன்னைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்துகளாலேயே எதிர்கொண்டவர் அவர். அதுவே, மதம், சாதி என்ற உள்நோக்கங்களை மனதில் மறைத்தபடி இயங்கிக்கொண்டிருந்த அறிவு ஜீவிகள், அறிஞர்களுக்கெல்லாம் மிக வசதியாகப் போய்விட்டது.
பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மிகவும் இழிவுபடுத்தியும், எப்போதும் அவரின் எல்லாச் செயல்களுக்கும் உள்நோக்கம் கற்பித்தும் எழுதினார்கள். இந்தச் செயல்கள் நிறுவனப்படுத்தப்பட்ட முறையில் இப்போதும் மெரினாவை முன்வைத்து, காமராஜர் பெயரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெரும்பாலும் தங்களைச் சந்திப்பதைத் தவிர்த்த முன்னாள் முதல்வரை விமர்சிக்கும் சூழலுக்கு ஊடக கனவான்களில் பலர் தள்ளப்பட்டபோதெல்லாம், அவர்கள் துணைக்குப் பலிகொடுத்த பலியாடு கலைஞரும் அவரது திமுகவும்தான். திராணியற்றவர்கள்; முதல் வரியில் ஜெயலலிதா என்ற பெயருக்குப் பதிலாக ‘தமிழக அரசு’ என்று எழுதுவார்கள். அடுத்த வரியில், முந்தைய அரசு என்பதற்குப் பதிலாக, ‘முந்தைய கருணாநிதியின் ஆட்சி’யில் என்று எழுதுவார்கள்.
இப்போது கலைஞர் இல்லாத தமிழகம் தன்னை ஓர் அநாதை குழந்தையாகவே கருதுகிறது. தத்தளிக்கும் தமிழகத்தைக் கரைசேர்க்கும் இதுபோன்ற தலைவர் இனி கிடைப்பாரா எனத் தெரியவில்லை. ஆனால், என்னை இவ்விடம் விட்டு என் இடம் சேர்க்கும் எனக்கான பேருந்து வந்துவிட்டது.
பேருந்தில் ஒரு வெறுமை தெரிகிறதே. எல்லா இருக்கைகளுமே காலியாகத்தான் இருக்கிறது என்பது, பேருந்து மேடு பள்ளங்களை மெதுவாகக் கடக்கும்போதுகூட, ‘டொக்கடா டொக்கடா’ என்று சத்தமிட்டுச் சாகடிக்கும்போதே புரிகிறது. ஒழுங்காய் ஊர்சேர்ந்தால் உத்தமமாய்ப் போகும். நான், ஓட்டுநர், நடத்துநர் ஆகிய மூவர் மட்டுமே பயணித்துக்கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்.
இப்போதும் கலைஞரின் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.
‘காகித ஓடம்
கடலலை மீது
போவது போலே
மூவரும் போவோம்’.
...ரதம் பயணிக்கும்
--
தொடர்புக்கு: [email protected]