இந்த தொடருக்காக பார்வையற்றவர்களோடும் பார்வையற்றோருக்கான அமைப்பினரோடும் பேசியதில் கிடைத்த கருத்துகளை எல்லாம் தொகுத்தால், இந்த தொடர் முழுக்க வேலைதேடும் பார்வையற்றவர்கள் மனதில் எதிர்மறைச் சிந்தனைகளை தோற்றுவிக்கவே வாய்ப்பு அதிகம் என நினைக்கிறேன். என்னால் முடிந்தவரை வாசகர்களுக்கு பாசிட்டிவ் விஷயங்களைக் கடத்த முயல்கிறேன். ஆனாலும், சில கள எதார்த்தங்களை நாம் திறந்த மனதோடு ஒப்புக்கொண்டால்தான் ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்கமுடியும் என்பதால், உள்ளதை உள்ளவாறு பதிவுசெய்யலாம் என துணிந்துவிட்டேன். நான் எழுதியதில் ஏதேனும் தவறுகள் இருக்குமேயானால், சரியான தரவுகளோடு யார் சொன்னாலும் அதனை மாற்றிக்கொள்ள தயாராகவே இருக்கிறேன்.
மனிதர்களைப் போல தகவல் தொழில்நுட்பத் துறையும் பார்வையற்றவர்களுக்குத் தனது பாரபட்சமான முகத்தையே காட்டி வருகிறது. போதிய பயிற்சி மற்றும் விழிப்புணர்ச்சி இல்லாமை, மின்னணு கருவிகள் மற்றும் மென்பொருட்களின் அதிக விலை போன்றவற்றால் இந்தியா போன்ற மூன்றாம்தர நாடுகளில் பிறந்த பார்வையற்றவர்கள் ஐ.டி. துறையில் நுழையுமளவுக்கு திறன் பெற்றவர்களாகும் தகுதியை அடைய கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஐ.டி. துறையில் எந்த மாதிரியான பணிகள் நமக்கானவை?
TCS-இல் மனிதவளப் பிரிவில் (Human Resource) பணியாற்றும் பார்வையற்றவரான வினோத் பெஞ்சமின் இக்கேள்விக்குப் பதில் தருகிறார். “பார்வையற்றவர்களைப் பொறுத்தவரை வேலைக்குத் தகுதியான ஆட்களைத் தேர்வுசெய்தல், ‘Accessibility Testing’ எனப்படும் மென்பொருள், இணையதளம் மற்றும் மின்னணு கருவிகள் பார்வையற்றவர்களுக்கு ஒத்திசைவாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்தல், தகவல்கள் ஒருங்கிணைப்பு மற்றும் பகுப்பாய்வு போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இத்தகைய பணிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அதிலும், பல நிறுவனங்கள் பார்வையற்றவர்களைப் பணியமர்த்த ஆர்வம் காட்டுவதில்லை. பணி தேடும் பல பார்வையற்றவர்களுக்கும் ஆங்கில அறிவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை” என வருத்தத்தோடு பேசினார் வினோத்.
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
ஓரளவு குடும்பப் பின்னணியோடு, அரசு வேலையை எதிர்பார்க்காமல் ஐ.டி. துறையில் சாதிக்க விரும்புபவர்கள் 12-ஆம் வகுப்பு முடித்ததும் கர்நாடக மாநிலம் மைசூருவிலுள்ள ‘JSS Polytechnic for the Physically Handicapped (JSSPPH)’ நிறுவனத்தின் மூன்றாண்டு கணினி டிப்ளமோ படிக்கலாம். ஓராண்டிற்கு 30 இடங்கள் மட்டுமே என்பதாலும் ஐ.டி. துறையின் முக்கிய மையமான பெங்களூருக்கு அருகில் இந்த நிறுவனம் அமைந்திருப்பதாலும் இங்கு படிப்பவர்களுக்கு பணிவாய்ப்புக்கான சாத்தியங்கள் அதிகம்.
தற்காலிகமாக அரசுப்பணி கிடைக்கும்வரை ஐ.டி. துறையில் பணியாற்ற விரும்புபவர்கள், பார்வையற்றவர்களுக்கான தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பணிவாய்ப்புகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம். பயிற்சி காலம் முடிந்ததும் சில நிறுவனங்கள் சிறந்த மாணவர்களுக்கு ஐ.டி. நிறுவனங்களோடு பேசி வேலை வாங்கித் தருகிறார்கள். பயிற்சி முடிந்ததும் பணிவாய்ப்பு என்பது, பணி வழங்கும் நிறுவனத்தினரின் நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே!
சவால்கள்
ஒரு பார்வையற்றவரைப் பணியமர்த்துவதில் ஐ.டி. நிறுவனங்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் உள்ளன என்பது குறித்து சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ‘கர்ண வித்யா (KVF)’ அமைப்பின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சசிக்குமாரிடம் பேசினோம்.
“பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் திரைவாசிப்பான்களில் பல, தனியார் நிறுவனங்களின் பிரத்யேக மென்பொருளோடு ஒத்துப்போவதில்லை; நமது திரைவாசிப்பானோடு ஒத்துப்போகும் மென்பொருளைக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் பார்வையற்றவர்கள் குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. மிகுந்த சிரமப்பட்டு ஒரு நிறுவனத்தில் பார்வையற்றவரைப் பணியமர்த்த சம்மதம் வாங்கிவிட்டாலும், அதற்குத் தகுதியான பார்வையற்றவரை அடையாளம் காண்பதில் மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆங்கிலப் புலமை, தனித்து இயங்கும் திறன் (Mobility Skill) ஆகிய இந்த இரண்டிலுமோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றிலோ பெரும்பாலான பார்வையற்றவர்கள் பின்தங்கியிருக்கிறார்கள். ஆனால் ஐ.டி. நிறுவனங்களோ இந்த இரண்டு திறன்களும் பெற்றவர்களையே எதிர்பார்க்கிறார்கள்” என்றார் சசிக்குமார்.
பல நேரங்களில் ஐ.டி. நிறுவனங்களே பணி வழங்க முன்வந்தாலும் சரியான நபரை அடையாளம் காண்பது சவாலாக இருப்பதாக சொல்கிறார் சசிக்குமார். பார்வையற்றோருக்கான தொண்டு நிறுவனங்களும், அமைப்புகளும் சிந்திக்க வேண்டிய கருத்து இது.
இதே வேளையில், ஒரு தொண்டு நிறுவனத்தில் கணினி சிறப்புப் பயிற்சி பெற்ற, பெயர் குறிப்பிட விரும்பாத பார்வையற்ற மாணவர் ஒருவர். “பல நிறுவனங்களில் பார்வையற்றவர்களுக்கான கணினி மற்றும் மென்திறன் பயிற்சி வகுப்பு என்கிற பெயரில் ஆறுமாத காலத்திற்கு ஆங்கில வகுப்பு, அடிப்படைக் கணினிப் பயிற்சி மற்றும் ‘MS Office’-இல் சிலவற்றை மட்டுமே சொல்லித்தருகிறார்கள். இந்தப் பாடத்திட்டத்திற்கு ஆறுமாதம் என்பது மிக அதிகம். திரைவாசிப்பான்களின் கூடுதல் பயன்பாட்டு வழிமுறைகளைக்கூட அவர்கள் சரியாகச் சொல்லித்தருவதில்லை. இந்தப் பாடத்திட்டத்தைப் படித்துவிட்டு ஒருவர் ஐ.டி. துறையில் பணியாற்றுவது என்பது இயலாத விஷயம்” என்று தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.
ஆக, பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் மாணவர்களும் தங்கள் தரப்பை சரிசெய்துகொண்டால் மட்டுமே ஐ.டி. துறையில் பார்வையற்றவர்களால் தடம் பதிக்க முடியும். இங்கே முக்கியமாக ஒன்றைச் சொல்லியாகவேண்டும், பார்வையற்றவர்கள் கொஞ்சம் ஆங்கில அறிவை மேம்படுத்தியே ஆகவேண்டும் என்பதையே இந்த தொடருக்காக நான் சந்தித்த பயிற்சியாளர்களும், ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களும் சொன்ன ஒரே விஷயம். இது நமக்கான அடிப்படைக் கல்வியிலிருந்து நாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
பார்வையற்றவர்களில் பொருளாதார பின்புலமும், குடும்பப் பின்னணியும் உள்ளவர்களே பெரும்பாலும் தனியார் துறைகளில் ஜொலித்து வருகின்றனர்; சில விதிவிலக்குகள் இருக்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. அதே நேரம், தனியார் மயமாக்கல் பெருகியிருக்கும் சூழலில், காலத்திற்கேற்ப பார்வையற்றவர்களின் கல்வியிலும், ஆளுமையிலும் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் குறித்து செயற்பாட்டாளர்கள் சிந்தித்தாகவேண்டும்.
அடுத்த இதழில், இசைத் துறையில் பார்வையற்றோருக்கு இருக்கும் வேலைவாய்ப்புகளையும், சவால்களையும் அறிந்துகொள்வோம்.
--
தொடர்புக்கு: [email protected]
மனிதர்களைப் போல தகவல் தொழில்நுட்பத் துறையும் பார்வையற்றவர்களுக்குத் தனது பாரபட்சமான முகத்தையே காட்டி வருகிறது. போதிய பயிற்சி மற்றும் விழிப்புணர்ச்சி இல்லாமை, மின்னணு கருவிகள் மற்றும் மென்பொருட்களின் அதிக விலை போன்றவற்றால் இந்தியா போன்ற மூன்றாம்தர நாடுகளில் பிறந்த பார்வையற்றவர்கள் ஐ.டி. துறையில் நுழையுமளவுக்கு திறன் பெற்றவர்களாகும் தகுதியை அடைய கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஐ.டி. துறையில் எந்த மாதிரியான பணிகள் நமக்கானவை?
TCS-இல் மனிதவளப் பிரிவில் (Human Resource) பணியாற்றும் பார்வையற்றவரான வினோத் பெஞ்சமின் இக்கேள்விக்குப் பதில் தருகிறார். “பார்வையற்றவர்களைப் பொறுத்தவரை வேலைக்குத் தகுதியான ஆட்களைத் தேர்வுசெய்தல், ‘Accessibility Testing’ எனப்படும் மென்பொருள், இணையதளம் மற்றும் மின்னணு கருவிகள் பார்வையற்றவர்களுக்கு ஒத்திசைவாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்தல், தகவல்கள் ஒருங்கிணைப்பு மற்றும் பகுப்பாய்வு போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இத்தகைய பணிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அதிலும், பல நிறுவனங்கள் பார்வையற்றவர்களைப் பணியமர்த்த ஆர்வம் காட்டுவதில்லை. பணி தேடும் பல பார்வையற்றவர்களுக்கும் ஆங்கில அறிவு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை” என வருத்தத்தோடு பேசினார் வினோத்.
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
ஓரளவு குடும்பப் பின்னணியோடு, அரசு வேலையை எதிர்பார்க்காமல் ஐ.டி. துறையில் சாதிக்க விரும்புபவர்கள் 12-ஆம் வகுப்பு முடித்ததும் கர்நாடக மாநிலம் மைசூருவிலுள்ள ‘JSS Polytechnic for the Physically Handicapped (JSSPPH)’ நிறுவனத்தின் மூன்றாண்டு கணினி டிப்ளமோ படிக்கலாம். ஓராண்டிற்கு 30 இடங்கள் மட்டுமே என்பதாலும் ஐ.டி. துறையின் முக்கிய மையமான பெங்களூருக்கு அருகில் இந்த நிறுவனம் அமைந்திருப்பதாலும் இங்கு படிப்பவர்களுக்கு பணிவாய்ப்புக்கான சாத்தியங்கள் அதிகம்.
தற்காலிகமாக அரசுப்பணி கிடைக்கும்வரை ஐ.டி. துறையில் பணியாற்ற விரும்புபவர்கள், பார்வையற்றவர்களுக்கான தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பணிவாய்ப்புகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம். பயிற்சி காலம் முடிந்ததும் சில நிறுவனங்கள் சிறந்த மாணவர்களுக்கு ஐ.டி. நிறுவனங்களோடு பேசி வேலை வாங்கித் தருகிறார்கள். பயிற்சி முடிந்ததும் பணிவாய்ப்பு என்பது, பணி வழங்கும் நிறுவனத்தினரின் நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே!
சவால்கள்
ஒரு பார்வையற்றவரைப் பணியமர்த்துவதில் ஐ.டி. நிறுவனங்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் உள்ளன என்பது குறித்து சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ‘கர்ண வித்யா (KVF)’ அமைப்பின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சசிக்குமாரிடம் பேசினோம்.
“பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் திரைவாசிப்பான்களில் பல, தனியார் நிறுவனங்களின் பிரத்யேக மென்பொருளோடு ஒத்துப்போவதில்லை; நமது திரைவாசிப்பானோடு ஒத்துப்போகும் மென்பொருளைக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் பார்வையற்றவர்கள் குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. மிகுந்த சிரமப்பட்டு ஒரு நிறுவனத்தில் பார்வையற்றவரைப் பணியமர்த்த சம்மதம் வாங்கிவிட்டாலும், அதற்குத் தகுதியான பார்வையற்றவரை அடையாளம் காண்பதில் மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆங்கிலப் புலமை, தனித்து இயங்கும் திறன் (Mobility Skill) ஆகிய இந்த இரண்டிலுமோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றிலோ பெரும்பாலான பார்வையற்றவர்கள் பின்தங்கியிருக்கிறார்கள். ஆனால் ஐ.டி. நிறுவனங்களோ இந்த இரண்டு திறன்களும் பெற்றவர்களையே எதிர்பார்க்கிறார்கள்” என்றார் சசிக்குமார்.
பல நேரங்களில் ஐ.டி. நிறுவனங்களே பணி வழங்க முன்வந்தாலும் சரியான நபரை அடையாளம் காண்பது சவாலாக இருப்பதாக சொல்கிறார் சசிக்குமார். பார்வையற்றோருக்கான தொண்டு நிறுவனங்களும், அமைப்புகளும் சிந்திக்க வேண்டிய கருத்து இது.
இதே வேளையில், ஒரு தொண்டு நிறுவனத்தில் கணினி சிறப்புப் பயிற்சி பெற்ற, பெயர் குறிப்பிட விரும்பாத பார்வையற்ற மாணவர் ஒருவர். “பல நிறுவனங்களில் பார்வையற்றவர்களுக்கான கணினி மற்றும் மென்திறன் பயிற்சி வகுப்பு என்கிற பெயரில் ஆறுமாத காலத்திற்கு ஆங்கில வகுப்பு, அடிப்படைக் கணினிப் பயிற்சி மற்றும் ‘MS Office’-இல் சிலவற்றை மட்டுமே சொல்லித்தருகிறார்கள். இந்தப் பாடத்திட்டத்திற்கு ஆறுமாதம் என்பது மிக அதிகம். திரைவாசிப்பான்களின் கூடுதல் பயன்பாட்டு வழிமுறைகளைக்கூட அவர்கள் சரியாகச் சொல்லித்தருவதில்லை. இந்தப் பாடத்திட்டத்தைப் படித்துவிட்டு ஒருவர் ஐ.டி. துறையில் பணியாற்றுவது என்பது இயலாத விஷயம்” என்று தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.
ஆக, பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் மாணவர்களும் தங்கள் தரப்பை சரிசெய்துகொண்டால் மட்டுமே ஐ.டி. துறையில் பார்வையற்றவர்களால் தடம் பதிக்க முடியும். இங்கே முக்கியமாக ஒன்றைச் சொல்லியாகவேண்டும், பார்வையற்றவர்கள் கொஞ்சம் ஆங்கில அறிவை மேம்படுத்தியே ஆகவேண்டும் என்பதையே இந்த தொடருக்காக நான் சந்தித்த பயிற்சியாளர்களும், ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களும் சொன்ன ஒரே விஷயம். இது நமக்கான அடிப்படைக் கல்வியிலிருந்து நாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
பார்வையற்றவர்களில் பொருளாதார பின்புலமும், குடும்பப் பின்னணியும் உள்ளவர்களே பெரும்பாலும் தனியார் துறைகளில் ஜொலித்து வருகின்றனர்; சில விதிவிலக்குகள் இருக்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. அதே நேரம், தனியார் மயமாக்கல் பெருகியிருக்கும் சூழலில், காலத்திற்கேற்ப பார்வையற்றவர்களின் கல்வியிலும், ஆளுமையிலும் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் குறித்து செயற்பாட்டாளர்கள் சிந்தித்தாகவேண்டும்.
அடுத்த இதழில், இசைத் துறையில் பார்வையற்றோருக்கு இருக்கும் வேலைவாய்ப்புகளையும், சவால்களையும் அறிந்துகொள்வோம்.
--
தொடர்புக்கு: [email protected]