கடந்த மாதத்தில் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ‘மீ டூ’ (#MeToo) புயல் அவ்வப்போது கரை கடப்பதாக எதிர்பார்க்கப்பட்டாலும், திடீரென ஏதாவது ஒரு பிரபலத்தைச் சுற்றிச் சுழன்று, மீண்டும் உக்கிரம் கொள்ளத் தொடங்கிவிடுகிறது.
பெண்கள் பாலியல் ரீதியில் தாங்கள் சந்தித்த கொடுமைகளைப் பகிர்கிற நல்லதொரு களமாக இது அமைந்திருப்பதாக ஒரு பகுதியினரும், இது சமுதாயத்தில் நற்பெயருடன் திகழ்வோரைக் குறிவைத்து நடத்தப்படும் நாடகம் என்று மற்றொரு பகுதியினரும் வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். எப்படியாயினும், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளை நிகழ்த்துகிற ஆண்களுக்கு இது ஓர் எச்சரிக்கை மணி என்றே சொல்லலாம்.
‘மீ டூ’ பிரச்சாரம் சமூக ஊடகங்களில் கவனமும் வரவேற்பும் பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், பிரபல ஊடகத்தின் இணையதளத்தில், சென்னையின் புறநகர்ப் பகுதியான மறைமலை நகரின் இரயில் நிலையத்திற்கு அருகே, நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த பார்வையற்ற பெண் பாலியல் வண்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியும் வெளியாகியிருந்தது.
மேற்குறிப்பிட்ட செய்தி, பொதுச் சமூகத்தினரிடையே, குறைந்தபட்சம் பார்வைச்சவாலுடைய சமூகத்தினரிடையேகூட அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது வேதனைக்குரியது. அன்றாட வாழ்வில் சாதாரணப் பெண்களைக் காட்டிலும் பாலியல் ரீதியிலான தொல்லைகளை அதிகம் எதிர்கொள்பவர்கள் பார்வையற்ற பெண்களே!
கல்வியின் நிமித்தமாக, பார்வையற்ற பெண்கள் குழந்தைப் பருவத்திலேயே தங்கள் பெற்றோரிடமிருந்து விலகி, விடுதிகளில் தங்கவேண்டிய சூழலிலிருந்தே இந்தக் கொடுமை அவர்களைத் துரத்தத் தொடங்கிவிடுகிறது. தனக்கு நிகழ்த்தப்படுவது அநீதி என்றே அறியாத அந்தப் பருவத்தைக் கடந்து வளரிளம் பருவத்தை அடையும் அவர்கள், அந்தப் பருவத்திற்கே உரித்தான சிக்கல்களைச் சமாளிப்பதில் உரிய வழிகாட்டலின்றித் தடுமாறுகிறார்கள்; அன்பு, ஆறுதல், காதல் என்ற பெயர்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
தொண்டு நிறுவனங்கள், சிறப்புப் பள்ளிகள், பெருநகரங்களில் பார்வையற்ற பெண்களுக்காகவே இயங்கும் தங்கும் விடுதிகள் என மறுவாழ்வு என்ற பெயரில் அவர்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளை அவர்களே முன்வந்து எழுதத் தொடங்கினால், அவை வெறும் எழுத்துகளாக இருக்காது; சமுதாயத்தின் அழுகல் முற்றிய மனசாட்சியின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கண்முன் நிறுத்துவதாகவே இருக்கும்.
கடந்தவற்றைப் பொதுவெளியில் பேசி, புதிய சர்ச்சைகளை ஏற்படுத்துவது எதற்கும் தீர்வாகாது. எனவே, இன்று வளர்ந்து நல்ல நிலையில் இருக்கும் பார்வையற்ற பெண்கள், தாங்கள் சந்தித்த இன்னல்கள் மூலம் கற்றுக்கொண்ட படிப்பினைகள் குறித்து தங்களின் இளைய தலைமுறை பார்வையற்ற சிறுமிகளைத் தேடிச் சென்று உரையாடல்களை முன்னெடுப்பதே மிகவும் அவசியமும் அவசரமுமான ஒன்று.
“உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு
பெண்கள் பாலியல் ரீதியில் தாங்கள் சந்தித்த கொடுமைகளைப் பகிர்கிற நல்லதொரு களமாக இது அமைந்திருப்பதாக ஒரு பகுதியினரும், இது சமுதாயத்தில் நற்பெயருடன் திகழ்வோரைக் குறிவைத்து நடத்தப்படும் நாடகம் என்று மற்றொரு பகுதியினரும் வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். எப்படியாயினும், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளை நிகழ்த்துகிற ஆண்களுக்கு இது ஓர் எச்சரிக்கை மணி என்றே சொல்லலாம்.
‘மீ டூ’ பிரச்சாரம் சமூக ஊடகங்களில் கவனமும் வரவேற்பும் பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், பிரபல ஊடகத்தின் இணையதளத்தில், சென்னையின் புறநகர்ப் பகுதியான மறைமலை நகரின் இரயில் நிலையத்திற்கு அருகே, நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த பார்வையற்ற பெண் பாலியல் வண்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியும் வெளியாகியிருந்தது.
மேற்குறிப்பிட்ட செய்தி, பொதுச் சமூகத்தினரிடையே, குறைந்தபட்சம் பார்வைச்சவாலுடைய சமூகத்தினரிடையேகூட அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது வேதனைக்குரியது. அன்றாட வாழ்வில் சாதாரணப் பெண்களைக் காட்டிலும் பாலியல் ரீதியிலான தொல்லைகளை அதிகம் எதிர்கொள்பவர்கள் பார்வையற்ற பெண்களே!
கல்வியின் நிமித்தமாக, பார்வையற்ற பெண்கள் குழந்தைப் பருவத்திலேயே தங்கள் பெற்றோரிடமிருந்து விலகி, விடுதிகளில் தங்கவேண்டிய சூழலிலிருந்தே இந்தக் கொடுமை அவர்களைத் துரத்தத் தொடங்கிவிடுகிறது. தனக்கு நிகழ்த்தப்படுவது அநீதி என்றே அறியாத அந்தப் பருவத்தைக் கடந்து வளரிளம் பருவத்தை அடையும் அவர்கள், அந்தப் பருவத்திற்கே உரித்தான சிக்கல்களைச் சமாளிப்பதில் உரிய வழிகாட்டலின்றித் தடுமாறுகிறார்கள்; அன்பு, ஆறுதல், காதல் என்ற பெயர்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
தொண்டு நிறுவனங்கள், சிறப்புப் பள்ளிகள், பெருநகரங்களில் பார்வையற்ற பெண்களுக்காகவே இயங்கும் தங்கும் விடுதிகள் என மறுவாழ்வு என்ற பெயரில் அவர்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளை அவர்களே முன்வந்து எழுதத் தொடங்கினால், அவை வெறும் எழுத்துகளாக இருக்காது; சமுதாயத்தின் அழுகல் முற்றிய மனசாட்சியின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கண்முன் நிறுத்துவதாகவே இருக்கும்.
கடந்தவற்றைப் பொதுவெளியில் பேசி, புதிய சர்ச்சைகளை ஏற்படுத்துவது எதற்கும் தீர்வாகாது. எனவே, இன்று வளர்ந்து நல்ல நிலையில் இருக்கும் பார்வையற்ற பெண்கள், தாங்கள் சந்தித்த இன்னல்கள் மூலம் கற்றுக்கொண்ட படிப்பினைகள் குறித்து தங்களின் இளைய தலைமுறை பார்வையற்ற சிறுமிகளைத் தேடிச் சென்று உரையாடல்களை முன்னெடுப்பதே மிகவும் அவசியமும் அவசரமுமான ஒன்று.
“உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு