ஏழைகட்கு இறுகுகின்றாய்; இருப்பவர்க்கோ இலகுகின்றாய்!
சாலையோர மனிதரையே, சாட்டை கொண்டு வருத்துகின்றாய்!
மனசாட்சி உள்ளவர்க்கும், மனித நேயம் கொண்டவர்க்கும்,
மாற்றுப் பாதை தேர்வு செய்ய மறைமுகமாய்த் தூண்டுகின்றாய்!
பொது விதியை, நடுநிலையைப் பேணி வந்த பொழுதுகளில்,
போற்றுதலாய் ஏற்றுதலாய் பெருமையுடன் பவனி வந்தாய்.
நீதிநேர்மை ஞாயம்தன்னை நிரந்தரமாய் மறந்ததனால்,
அவமதிப்பும் அருவருப்பும், அணிகலனாய் அணிந்துகொண்டாய்!
எவருக்கும் நான் அடிமையில்லை என்றிருந்த காலங்களில்,
தவறிழைத்தோர் தண்டனையில் தவறிடவும் கூடாதென்றாய்;
இன்றிருக்கும் நிலைதனிலே அன்றிருந்த நிலை மறந்தே,
தவறுகளைத் தண்டனையைத் தரம் பிரித்தே முடிவு செய்தாய்!
எண்ணங்களை எழுதுகிறேன்; ஏக்கத்துடன் குமுறுகின்றேன்.
இன்னமும் நீ இருக்கும் நிலை, இகழ்தலுக்கே உரியதென்பேன்!
நடுநிலையைக் கடைபிடித்தால் நல்ல உள்ளம் வாழ்ந்திருக்கும்,
நாடு நகர் செழித்திருக்கும், சுபிட்சங்களும் நிறைந்திருக்கும்.
உன்னை மாற்றிக் கொண்டுவிடு, ஊழல் தன்னைக் கொன்றுவிடு.
நீதி நேர்மை ஞாயத்திற்கே, நிச்சயமாய் வளைந்துகொடு.
ஏழைகளை வாழவிடு, ஏற்றங்களைக் காணவிடு.
நாளைகளும் உண்டெனவே, நிம்மதியாய் உறங்கவிடு!
பிஞ்சுக் குழந்தைகளைப் பாழ்படுத்தும் பாதகனை,
பொது வெளியில் நிறுத்தி வைத்துத் தண்டனைக்கு ஆணையிடு!
வாழ்வதுவே கேள்வி என்று வருத்தமுறும் மாந்தருக்கே,
வாழ்க்கை ஒரு வரமெனவே, வாழ வழி உரைத்துவிடு!
உடல்நலத்தைக் கேடு செய்யும் உணவுகளைத் தவிர்ப்பதற்கே,
பொதுநலனை மனதில் வைத்தே போலிகளை அழித்துவிடு!
உன்னை ஒன்று வேண்டிடுவேன், உருக்கமுடன் கேட்டிடுவேன்;
கண்ணை விற்றுச் சித்திரத்தைக் காட்சிகொள்ளப் பயன் பெறுமோ?
நன்றாக உரைப்பதனை நயமுடனே கேட்டிடுவாய்!
சான்றாக ஒன்று சொல்வேன் சலிக்காமல் மனதில் கொள்வாய்!
தனியொருவன் தரகினுக்கே தாழ்ந்து விலை போவதுவோ?
பசுமைதனை அழித்துவிட்டுப் பெயரில் மட்டும் புகுத்துவதோ?
விவசாயம் அழிவதற்கே வித்தாகும் திட்டங்களை,
பழிபாவம் ஏதுமின்றி செயல்படுத்தித் திளைப்பதுவோ?
உன்னைச் சொல்லிக் குற்றமென்ன? உள்ளவர்க்கே நட்டமென்ன?
ஒற்றுமையைக் கற்றிருந்தால் உண்மையிலே மாற்றம் வரும்!
தலைமையது சிறந்திருந்தால், தவறுகளும் குறைந்திருக்கும்!
தன்னலன்கள் மலிந்திருந்தால், அவலநிலை தொடர்ந்திருக்கும்!
இயற்கையையும் இறைவனையும் இரங்கும் வண்ணம் இறைஞ்சி நிற்போம்,
இவ்வுலகைக் காப்பதற்கே, இதயங்களால் வேண்டிநிற்போம்!
***
(கவிஞர் திருச்சிராப்பள்ளி மாவட்டக் கருவூலத்தின் கணக்கர்).
தொடர்புக்கு: [email protected]
சாலையோர மனிதரையே, சாட்டை கொண்டு வருத்துகின்றாய்!
மனசாட்சி உள்ளவர்க்கும், மனித நேயம் கொண்டவர்க்கும்,
மாற்றுப் பாதை தேர்வு செய்ய மறைமுகமாய்த் தூண்டுகின்றாய்!
பொது விதியை, நடுநிலையைப் பேணி வந்த பொழுதுகளில்,
போற்றுதலாய் ஏற்றுதலாய் பெருமையுடன் பவனி வந்தாய்.
நீதிநேர்மை ஞாயம்தன்னை நிரந்தரமாய் மறந்ததனால்,
அவமதிப்பும் அருவருப்பும், அணிகலனாய் அணிந்துகொண்டாய்!
எவருக்கும் நான் அடிமையில்லை என்றிருந்த காலங்களில்,
தவறிழைத்தோர் தண்டனையில் தவறிடவும் கூடாதென்றாய்;
இன்றிருக்கும் நிலைதனிலே அன்றிருந்த நிலை மறந்தே,
தவறுகளைத் தண்டனையைத் தரம் பிரித்தே முடிவு செய்தாய்!
எண்ணங்களை எழுதுகிறேன்; ஏக்கத்துடன் குமுறுகின்றேன்.
இன்னமும் நீ இருக்கும் நிலை, இகழ்தலுக்கே உரியதென்பேன்!
நடுநிலையைக் கடைபிடித்தால் நல்ல உள்ளம் வாழ்ந்திருக்கும்,
நாடு நகர் செழித்திருக்கும், சுபிட்சங்களும் நிறைந்திருக்கும்.
உன்னை மாற்றிக் கொண்டுவிடு, ஊழல் தன்னைக் கொன்றுவிடு.
நீதி நேர்மை ஞாயத்திற்கே, நிச்சயமாய் வளைந்துகொடு.
ஏழைகளை வாழவிடு, ஏற்றங்களைக் காணவிடு.
நாளைகளும் உண்டெனவே, நிம்மதியாய் உறங்கவிடு!
பிஞ்சுக் குழந்தைகளைப் பாழ்படுத்தும் பாதகனை,
பொது வெளியில் நிறுத்தி வைத்துத் தண்டனைக்கு ஆணையிடு!
வாழ்வதுவே கேள்வி என்று வருத்தமுறும் மாந்தருக்கே,
வாழ்க்கை ஒரு வரமெனவே, வாழ வழி உரைத்துவிடு!
உடல்நலத்தைக் கேடு செய்யும் உணவுகளைத் தவிர்ப்பதற்கே,
பொதுநலனை மனதில் வைத்தே போலிகளை அழித்துவிடு!
உன்னை ஒன்று வேண்டிடுவேன், உருக்கமுடன் கேட்டிடுவேன்;
கண்ணை விற்றுச் சித்திரத்தைக் காட்சிகொள்ளப் பயன் பெறுமோ?
நன்றாக உரைப்பதனை நயமுடனே கேட்டிடுவாய்!
சான்றாக ஒன்று சொல்வேன் சலிக்காமல் மனதில் கொள்வாய்!
தனியொருவன் தரகினுக்கே தாழ்ந்து விலை போவதுவோ?
பசுமைதனை அழித்துவிட்டுப் பெயரில் மட்டும் புகுத்துவதோ?
விவசாயம் அழிவதற்கே வித்தாகும் திட்டங்களை,
பழிபாவம் ஏதுமின்றி செயல்படுத்தித் திளைப்பதுவோ?
உன்னைச் சொல்லிக் குற்றமென்ன? உள்ளவர்க்கே நட்டமென்ன?
ஒற்றுமையைக் கற்றிருந்தால் உண்மையிலே மாற்றம் வரும்!
தலைமையது சிறந்திருந்தால், தவறுகளும் குறைந்திருக்கும்!
தன்னலன்கள் மலிந்திருந்தால், அவலநிலை தொடர்ந்திருக்கும்!
இயற்கையையும் இறைவனையும் இரங்கும் வண்ணம் இறைஞ்சி நிற்போம்,
இவ்வுலகைக் காப்பதற்கே, இதயங்களால் வேண்டிநிற்போம்!
***
(கவிஞர் திருச்சிராப்பள்ளி மாவட்டக் கருவூலத்தின் கணக்கர்).
தொடர்புக்கு: [email protected]