சமுதாயத்தில் சில பிரிவினர் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்து வந்துள்ளனர். அதில் தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள் முதலியோரோடு மாற்றுத்திறனாளிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இருந்தபோதிலும், பல மாற்றுத்திறனாளிகள் உயர்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் மறுக்கமுடியாது.
கி.பி. 1000-ஆம் ஆண்டு, ராஜராஜ சோழனால் ஓர் பார்வையற்ற பிராமணருக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டதாக தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ‘இலியட்’, ‘ஒடிசி’ போன்ற காப்பியங்களை எழுதிய ஹோமர் ஒரு பார்வையற்றவர். இஸ்லாமிய சமயத்தில், நபிகள் நாயகம் ஆட்சித் தலைவராக இருந்தபோது, அவர் போர் நிமித்தமாக வெளியூர் சென்ற நேரத்தில் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற நபித் தோழர் பகர ஆட்சியாளராக இருந்துள்ளார். மஹாபாரதத்தில், திரிதராஸ்டிரன் என்ற பார்வையற்றவர் ஒரு பொம்மை ஆட்சியாளராக இருந்தார். இதுபோல, பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும், பொதுவாக அவர்கள் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர்.
ஆனால், கீழை நாடுகளோடு ஒப்பிடுகையில் மேற்கத்திய நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் போற்றப்பட்டு வந்துள்ளனர் என்பதற்கு லூயி பிரெயில், ஹெலன் கெல்லர் ஆகியோர் முதல் அமெரிக்காவில் ஒபாமா அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சச்சின்தேவ் பவித்திரன், இங்கிலாந்து நாட்டில் டோனி பிளேயர் அமைச்சரவையில் டேவிட் பிளங்கெட், சவுதி அரேபியாவில் தலைமை நீதிபதியாக இருந்த அப்துல்லாஹ் பின் பாஸ் ஆகியோரையும் ஆதாரங்களாகக் காட்டலாம்.
‘மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் 2016’ உருவான வரலாறு
இரண்டாம் உலகப் போருக்குப் பின், இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினரானது. ஐக்கிய நாடுகள் சபை உலக அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தத் தொடங்கியது. 1968-ஆம் ஆண்டு பெல்கிரேடில் நடைபெற்ற ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் மாற்றுத்திறனாளிகளின் நலன் பாதுகாக்கப் படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீண்டும், 1993-ஆம் ஆண்டு பியூனஸ் அயர்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் அனைத்து நாட்டுப் பாராளுமன்றங்களிலும் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும், மாற்றுத்திறனாளிகள் ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தில் இந்தியா உட்பட 180-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கையொப்பமிட்டன.
அதன்படி, 1995-ஆம் ஆண்டு நரசிம்மராவ் இந்தியப் பிரதமராக இருந்தபோது, இந்தியப் பாராளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அச்சட்டம் வெறும் ஏட்டளவிலேயே இருந்து வந்தது. கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை.
2004-ஆம் ஆண்டு டாக்டர். மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராக இருந்தபொழுது, மாற்றுத்திறனாளிகள் சிறப்பாகப் பணியாற்றும் வகையிலான வேலை வாய்ப்புகளைக் கண்டறிந்து அறிக்கையளிக்கும்படி பல்வேறு துறைகளுக்கும் உத்தரவிட்டார். அந்த அடிப்படையில்தான் செல்வி. பெனோ ஜெஃபைன் அவர்கள் இந்திய வெளியுறவுத் துறையின் கூடுதல் செயலராகவும், திரு. தினகரன் இ.ஆ.ப. அவர்கள் தெற்கு இரயில்வேயில் முதன்மைச் செயலாளராகவும், செல்வி. ஹர்சா பட்டேல் அவர்கள் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்தான், 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஒய்.கே. சபர்வால் மற்றும் ஹெச்.கே. சேமா ஆகியோர், மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்ததுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும்கூட மாற்றுத்திறனாளிகள் நலனில் அரசு எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை என்று கூறியது. பதவி உயர்விலும் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்துவதோடு, அது குறித்த அறிக்கையை 3 மாதத்திற்கு ஒருமுறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஆணையிட்டது. இதன் பிறகுதான், 2016-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான திருத்தச் சட்டத்தை இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இதன்படி கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு மூன்றிலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது. 7 வகையான குறைபாடு உடையோர் மாற்றுத்திறனாளிகளாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மேலும் 14 வகையான குறைபாடுகளை உடையவர்கள் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்தியாவிலேயே ஹரியானா முதலிடத்திலும் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே 2, 3, 4-ஆம் இடங்களிலும் உள்ளன. 1974-ஆம் ஆண்டில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழகத்தில் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒரு தனித் துறை உருவாக்கப்பட்டு, அத்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
மேலும், அரசுப் பேருந்துகளில் நான்கில் ஒரு பங்கு கட்டணச் சலுகை, மாற்றுத்திறனாளிகளுடன் பயணம் செய்யும் அவர்களின் உதவியாளருக்கும் கட்டணச் சலுகை, அரசுப் பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குப் போக்குவரத்துச் சிக்கல் இருப்பதால் அலுவலகம் முடிவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்னதாகவே செல்லலாம், உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் மூன்றாம் தேதி அரசுப் பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் போன்ற அரசாணைகள் இக்காலகட்டத்தில்தான் வெளியிடப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால், 2006 முதல் 2011 வரையிலான காலம், தமிழக மாற்றுத்திறனாளிகளின் பொற்காலம் எனலாம்.
இன்னும் என்ன செய்ய வேண்டும்?
அயல்நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் நலனில் செலுத்தப்படும் அக்கறை நம் நாட்டில் செலுத்தப்படவில்லை என்பது எனது கருத்தாகும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் அச்சடிக்கப்படும் பணத்தில், பண மதிப்பு பிரெயிலிலும் அச்சடிக்கப்படுகிறது. அரசியலிலும்கூட மாற்றுத்திறனாளிகள் சிலர் உயர் பதவி வகிக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகள் அரசியலுக்கு வருவதையெல்லாம் கற்பனை செய்யக்கூட முடியாது! வெளிநாடுகளில் கட்டப்படும் அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்துசெல்ல, சாய்தள (Ramp) வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுதான் நமது நாட்டில் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வட இந்தியாவில், பெரும்பாலான மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் தற்போதும் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும்கூட அரசுப் பணி, பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசோ, மாநில அரசுகளோ முறையாகப் பின்பற்றுவதில்லை. இதைவிட ஒரு கொடுமை என்னவென்றால், 2012-ஆம் ஆண்டு குஜராத் மாநில அரசு பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் பணிக்குத் தகுதியற்றவர்கள் என்று ஒரு அரசாணை வெளியிட்டது. அதற்கு, ‘அவர்களால் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வகுப்புகள் எடுக்க முடியாது’ என்று காரணம் சொல்லப்பட்டது!
‘மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் 2016’ நிறைவேற்றப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் நம்முடைய மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு நவீனத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சியளிப்பது, அவர்களுக்குரிய பணிவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை உரிய முறையில் பின்பற்றுவது, நம் நாட்டில் அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் பணமதிப்பை பிரெயிலில் அச்சிடுவது ஆகியவை இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டியவை என்பது எனது கருத்தாகும்!
***
(கட்டுரையாளர் சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர்).
தொடர்புக்கு: [email protected]
கி.பி. 1000-ஆம் ஆண்டு, ராஜராஜ சோழனால் ஓர் பார்வையற்ற பிராமணருக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டதாக தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ‘இலியட்’, ‘ஒடிசி’ போன்ற காப்பியங்களை எழுதிய ஹோமர் ஒரு பார்வையற்றவர். இஸ்லாமிய சமயத்தில், நபிகள் நாயகம் ஆட்சித் தலைவராக இருந்தபோது, அவர் போர் நிமித்தமாக வெளியூர் சென்ற நேரத்தில் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற நபித் தோழர் பகர ஆட்சியாளராக இருந்துள்ளார். மஹாபாரதத்தில், திரிதராஸ்டிரன் என்ற பார்வையற்றவர் ஒரு பொம்மை ஆட்சியாளராக இருந்தார். இதுபோல, பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும், பொதுவாக அவர்கள் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர்.
ஆனால், கீழை நாடுகளோடு ஒப்பிடுகையில் மேற்கத்திய நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் போற்றப்பட்டு வந்துள்ளனர் என்பதற்கு லூயி பிரெயில், ஹெலன் கெல்லர் ஆகியோர் முதல் அமெரிக்காவில் ஒபாமா அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சச்சின்தேவ் பவித்திரன், இங்கிலாந்து நாட்டில் டோனி பிளேயர் அமைச்சரவையில் டேவிட் பிளங்கெட், சவுதி அரேபியாவில் தலைமை நீதிபதியாக இருந்த அப்துல்லாஹ் பின் பாஸ் ஆகியோரையும் ஆதாரங்களாகக் காட்டலாம்.
‘மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் 2016’ உருவான வரலாறு
இரண்டாம் உலகப் போருக்குப் பின், இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினரானது. ஐக்கிய நாடுகள் சபை உலக அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தத் தொடங்கியது. 1968-ஆம் ஆண்டு பெல்கிரேடில் நடைபெற்ற ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் மாற்றுத்திறனாளிகளின் நலன் பாதுகாக்கப் படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீண்டும், 1993-ஆம் ஆண்டு பியூனஸ் அயர்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் அனைத்து நாட்டுப் பாராளுமன்றங்களிலும் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும், மாற்றுத்திறனாளிகள் ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தில் இந்தியா உட்பட 180-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கையொப்பமிட்டன.
அதன்படி, 1995-ஆம் ஆண்டு நரசிம்மராவ் இந்தியப் பிரதமராக இருந்தபோது, இந்தியப் பாராளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அச்சட்டம் வெறும் ஏட்டளவிலேயே இருந்து வந்தது. கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை.
2004-ஆம் ஆண்டு டாக்டர். மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராக இருந்தபொழுது, மாற்றுத்திறனாளிகள் சிறப்பாகப் பணியாற்றும் வகையிலான வேலை வாய்ப்புகளைக் கண்டறிந்து அறிக்கையளிக்கும்படி பல்வேறு துறைகளுக்கும் உத்தரவிட்டார். அந்த அடிப்படையில்தான் செல்வி. பெனோ ஜெஃபைன் அவர்கள் இந்திய வெளியுறவுத் துறையின் கூடுதல் செயலராகவும், திரு. தினகரன் இ.ஆ.ப. அவர்கள் தெற்கு இரயில்வேயில் முதன்மைச் செயலாளராகவும், செல்வி. ஹர்சா பட்டேல் அவர்கள் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்தான், 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஒய்.கே. சபர்வால் மற்றும் ஹெச்.கே. சேமா ஆகியோர், மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்ததுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும்கூட மாற்றுத்திறனாளிகள் நலனில் அரசு எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை என்று கூறியது. பதவி உயர்விலும் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்துவதோடு, அது குறித்த அறிக்கையை 3 மாதத்திற்கு ஒருமுறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஆணையிட்டது. இதன் பிறகுதான், 2016-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான திருத்தச் சட்டத்தை இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இதன்படி கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு மூன்றிலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது. 7 வகையான குறைபாடு உடையோர் மாற்றுத்திறனாளிகளாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மேலும் 14 வகையான குறைபாடுகளை உடையவர்கள் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்தியாவிலேயே ஹரியானா முதலிடத்திலும் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே 2, 3, 4-ஆம் இடங்களிலும் உள்ளன. 1974-ஆம் ஆண்டில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழகத்தில் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒரு தனித் துறை உருவாக்கப்பட்டு, அத்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
மேலும், அரசுப் பேருந்துகளில் நான்கில் ஒரு பங்கு கட்டணச் சலுகை, மாற்றுத்திறனாளிகளுடன் பயணம் செய்யும் அவர்களின் உதவியாளருக்கும் கட்டணச் சலுகை, அரசுப் பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்குப் போக்குவரத்துச் சிக்கல் இருப்பதால் அலுவலகம் முடிவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்னதாகவே செல்லலாம், உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் மூன்றாம் தேதி அரசுப் பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் போன்ற அரசாணைகள் இக்காலகட்டத்தில்தான் வெளியிடப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால், 2006 முதல் 2011 வரையிலான காலம், தமிழக மாற்றுத்திறனாளிகளின் பொற்காலம் எனலாம்.
இன்னும் என்ன செய்ய வேண்டும்?
அயல்நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் நலனில் செலுத்தப்படும் அக்கறை நம் நாட்டில் செலுத்தப்படவில்லை என்பது எனது கருத்தாகும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் அச்சடிக்கப்படும் பணத்தில், பண மதிப்பு பிரெயிலிலும் அச்சடிக்கப்படுகிறது. அரசியலிலும்கூட மாற்றுத்திறனாளிகள் சிலர் உயர் பதவி வகிக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகள் அரசியலுக்கு வருவதையெல்லாம் கற்பனை செய்யக்கூட முடியாது! வெளிநாடுகளில் கட்டப்படும் அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்துசெல்ல, சாய்தள (Ramp) வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுதான் நமது நாட்டில் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வட இந்தியாவில், பெரும்பாலான மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் தற்போதும் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும்கூட அரசுப் பணி, பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசோ, மாநில அரசுகளோ முறையாகப் பின்பற்றுவதில்லை. இதைவிட ஒரு கொடுமை என்னவென்றால், 2012-ஆம் ஆண்டு குஜராத் மாநில அரசு பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் பணிக்குத் தகுதியற்றவர்கள் என்று ஒரு அரசாணை வெளியிட்டது. அதற்கு, ‘அவர்களால் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வகுப்புகள் எடுக்க முடியாது’ என்று காரணம் சொல்லப்பட்டது!
‘மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் 2016’ நிறைவேற்றப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் நம்முடைய மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு நவீனத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சியளிப்பது, அவர்களுக்குரிய பணிவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை உரிய முறையில் பின்பற்றுவது, நம் நாட்டில் அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் பணமதிப்பை பிரெயிலில் அச்சிடுவது ஆகியவை இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டியவை என்பது எனது கருத்தாகும்!
***
(கட்டுரையாளர் சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர்).
தொடர்புக்கு: [email protected]