அறிவியல் புரட்சிக்கு முன் பார்வையற்றோருக்கான கல்வி மறுக்கப்பட்ட நிலையில், வசதி படைத்த பார்வையற்றவர்கள் பத்திரமாக அடைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர்; வசதி குறைந்தவர்கள் பெரும்பாலும் கைவிடப்பட்டனர். உலகின் பல நாடுகளில் இவர்கள் தெருவோரம் திரிந்து, பிச்சையெடுத்து உண்டு, பலரின் நகைப்புக்குள்ளான வரலாறுகள் உண்டு. உலகின் முதல் பார்வையற்றோருக்கான பள்ளியான பாரிஸ் ‘Royal Institute for the Blind’-ஐ நிறுவிய வேலண்டைன் ஹாய், பார்வையற்றவர்கள் சர்க்கஸ்களில் நகைச்சுவைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டதாய்க் கூறுகிறார். இத்தகைய சூழ்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பார்வையற்றவர்கள் தாங்கள் செல்லும் பாதையின் முன் உள்ள மேடு, பள்ளங்களை அறிந்துகொள்ளும் ஆயுதமாகக் கோல்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
தமிழகத்திலும் பல காலமாக பார்வையற்றவர்கள் கோல்களைத் தங்களின் துணையாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். 12-ஆம் நூற்றாண்டில் ஔவையாரால் இயற்றப்பட்ட நல்வழியின் 4-ஆம் பாடல் இதற்குச் சான்று தருகிறது. சரியாகத் திட்டமிடாமல் ஒரு செயலைச் செய்தால் என்ன ஆகும் என்பதை விளக்க வந்த ஔவையார், ‘கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே’ என்ற உவமையைப் பயன்படுத்துகிறார். அதாவது, மாங்காயை அடிக்க நினைக்கும் பார்வையற்றவன் அதற்குத் தன் கையில் இருக்கும் கோலை எறிந்து பெற முயன்றான் என்றால், மாங்காயும் போய், வழிகாட்டும் கோலும் போய்த் துன்புறுவான் என்பதை உவமையாகத் தெரிவிக்கிறார் ஔவையார். ஆக, 12-ஆம் நூற்றாண்டிலிருந்தோ, அதற்கு முன்பு எக்காலத்திலிருந்தோ தமிழகத்தில் பார்வையற்றவர்கள் வழிகாட்டியாகக் கோலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது உறுதி.
மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கியக் கண்டுபிடிப்புகள் பல போர்களால் ஏற்பட்டவையே. போர்கள் செய்த நன்மை என்று இதைக் கூறலாமா? தெரியவில்லை. முதல் உலகப் போரின் இறுதியில், போரால் ஊனமடைந்தோர் எண்ணிக்கை ஐரோப்பா முழுவதும் அதிகமாகவே இருந்தது. அவர்கள் நாட்டுக்காக உழைத்ததன் விளைவாக தங்கள் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் என்பதால் கொஞ்சம் மரியாதையோடே பார்க்கப்பட்டார்கள். அவர்கள் பொது இடங்களில் நடமாட வேண்டியிருந்தது. இதனால், பல புதுப் புது கண்டுபிடிப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாயின. இயல்பாகவோ, விபத்தாலோ ஊனமடைந்தவர்கள் மேல் இரக்கம் காட்டிய சமூகம், இவர்கள் மேல் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தியது. அதுவரை சலுகைகளாகப் பார்க்கப்பட்டவை, இவர்களால் உரிமைகளாகக் கருத்தில் கொள்ளப்பட்டன. வெளிப்படையாகச் சொல்ல இயலாதுதான் என்றாலும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் வளர்ச்சிக்காக இரு உலகப் போர்களுக்கும் நன்றி தெரிவிப்பதில் தவறில்லை!
1921-இல், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பிக்ஸ் (James Biggs) என்பவர்தான் முதன்முறையாக தான் பார்வையற்றவர் என்பதை வேறுபடுத்திக் காட்ட கோல்களில் வெள்ளை வண்ணம் பூசியதாகக் கூறப்படுகிறது. புகைப்படக் கலைஞரான இவர் விபத்தால் பார்வையை இழந்தவர்.
தொடர்ந்து, 1931-இல் பார்வையற்றவர்கள் சாலைகளிலும், பொது இடங்களிலும் இயல்பாக நடமாட, ‘வெண்கோல் இயக்கம்’ (White Cane Movement) பிரான்சில் தொடங்கப்பட்டது. கில்லி டிஹெர்ப்மான்ட் (Guilly d'Herbemont) என்ற பிரான்சு அமைச்சர், ஒரு பிரமாண்ட விழாவில் முதல் உலகப் போரில் பார்வையை இழந்த 5000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு வெண்கோல்களை வழங்கினார். இதே காலகட்டத்தில், அமெரிக்காவிலும் அரிமா சங்கம் பார்வையற்றோருக்கு வெண்கோல்களை வழங்கியது.
1944-இல், தற்போது ஓரளவு புழக்கத்தில் இருக்கும் நீண்ட வெண்கோல்கள் (Long White Canes) ரிச்சர்ட் ஹூவர் (Richard E. Hoover - 1915-1986) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டன. ஹூவர் அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் பார்வையற்றோருக்கான பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அப்போது நடந்துகொண்டிருந்த இரண்டாம் உலகப்போரில் பார்வையை இழந்த ராணுவ வீரர்களுக்காகவே இவர் இத்தகைய கோல்களை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்தான் முதல் முறையாக பார்வையற்றோர் நடமாடுவது (Mobility) குறித்த விதிமுறைகளை உருவாக்கியவர். இது ‘ஹூவர் முறை’ என்று இன்றும் வழங்கப்படுகிறது.
1964-இல், பார்வையற்றோருக்கென ‘வெண்கோல் தினம்’ கொண்டாடப்படும் என அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த ஆண்டு அக்டோபர் 15 தொடங்கி, ‘வெண்கோல் பாதுகாப்பு தினம்’ (White Cane Safety Day) அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. 1966-இல், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு பார்வையற்றோர் கூட்டமைப்பு (International Federation for the Blind) அக்டோபர் 15-ஆம் நாள் சர்வதேச வெண்கோல் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தியது. அதனைத் தொடர்ந்து, பல உலக நாடுகளிலும் வெண்கோல் தினம் இதே நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எப்போதிலிருந்து வெண்கோல் தினம் கொண்டாடப்படுகிறது? வெண்கோல் குறித்த அறிமுகம் இந்தியாவிற்கு எப்படி வந்தது? இக்கேள்விகளுக்குச் சரியான தரவுகளுடன் கூடிய பதில் இல்லை. இருந்தபோதிலும், இக்கேள்விகளை கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பார்வையற்ற பேராசிரியரும் கவிஞருமான வே. சுகுமாரன் அவர்களிடம் கேட்டோம்.
“பன்னாட்டு பார்வையற்றோர் கூட்டமைப்பில், தேசிய பார்வையற்றோர் சங்கமும் (National Association for the Blind - NAB) உறுப்பு அமைப்பாக இருந்தது என்பதால், 1960-களின் இறுதியிலேயே இந்தியாவிலும் இந்த நாள் கொண்டாடப்பட்டிருக்கவேண்டும். எனக்கு நினைவு தெரிந்து, 1980-களில் கூட வெண்கோல் தினத்தை ‘NAB’ சிறப்பாகக் கொண்டாடியது. அதனைத் தொடர்ந்துதான் பிற அமைப்புகள் தற்போது கொண்டாடி வருகின்றன. பார்வையற்றோருக்கென நடமாடும் பயிற்சி 1965-லிருந்தே தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கிண்டியில் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் மூலம் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. நானும் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருக்கிறேன். ஆனால், தற்போது இந்நிறுவனம் பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியோடு இணைக்கப்பட்டதாகத் தகவல்” என்கிறார். மேலும், 1956-இல்தான் NAB தொடங்கப்பட்டது என்பதாலும், அதற்கு முன் பார்வையற்றோர் குறித்துப் பெரிய அளவில் பேச அமைப்புகளும் இல்லை என்பதாலும் 1960-களிலேயே வெண்கோல் குறித்த அறிமுகம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கவேண்டும் என்கிறார் இவர்.
‘White Cane’ என்ற சொல்லை தமிழில் ‘ஊன்றுகோல்’ என்றும், பிறகு ‘வெண்கோல்’ என்று மொழிபெயர்த்திருக்கிறோம். இலங்கையில் இது ‘வெள்ளைப் பிரம்பு’ என்று வழங்கப்படுகிறது.
நீளமான வெண்கோல்தான் வெண்கோல்களில் பழமையானது. நவீன வெண்கோல் வடிவமைப்பின் தந்தை என்று அழைக்கப்படும் ரிச்சர்ட் ஹூவரின் நினைவாக இது, ‘ஹூவர் கோல்’ எனப்படுகிறது. பிறகு மடக்குவகை வெண்கோல், குழந்தைகளுக்கான வெண்கோல், நடக்கும்போது இடையூறுகள் வரின் அதிர்வூட்டும்/ஒலியெழுப்பும் வெண்கோல் என இது தற்போது வளர்ச்சி பெற்றுள்ளது. பார்வையற்றோருக்கு வழிகாட்ட நாய்கள், GPRS கருவி போன்றவை இருந்தாலும் இன்றளவும் எளிய மக்களின் உதவியாளனாக விளங்குகிறது வெண்கோல்.
பல பார்வையற்றவர்கள் வெண்கோல்களைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள் என்பது வருந்தத்தக்க உண்மை. வெண்கோல்கள் மேடுகளை, பள்ளங்களை, தடுப்புகளை நமக்கு அடையாளப்படுத்தும்; அதோடு, எதிரில் வருபவருக்கு நாம் பார்வையற்றவர் என்பதையும் அடையாளப்படுத்தும். சொந்தத் தேவைக்கென வெண்கோலைப் பயன்படுத்த மறுப்பது, தான் பார்வை மாற்றுத்திறனாளி என்பதையே ஒருவர் மறுப்பதைப் போன்றது. நாம் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல என்று மனதில் நினைத்துக்கொண்டால் போதுமா? எதார்த்தத்திலிருந்து நம்மால் விலகி வாழமுடியுமா?
பார்வையற்றோருக்கான நடமாடும் பயிற்சியும் தற்போது சிறப்பு நிறுவனங்களால் வழங்கப்படுவதில்லை. பார்வையற்றோருக்கும், அவர்களோடு நெருக்கமாக இருப்போருக்கும் சிறப்பு நிறுவனங்கள் அடிக்கடி நடமாடும் பயிற்சி வகுப்புகளை நடத்தவேண்டும்.
ஊனத்திலிருந்து விடுதலையாவதன் முதல் படி சுயமாக இயங்குதல். அதைப் பெருமளவில் சாத்தியமாக்கியிருக்கிறது வெண்கோல். வெண்கோல் அளித்திருக்கும் இத்தகைய சாத்தியங்களை அனைத்து பார்வையற்றவர்களும் பெற முன்னேறிய பார்வையற்றோரும், நமக்கான அமைப்புகளும் முயலவேண்டும்.
***
தொடர்புக்கு: [email protected]
தமிழகத்திலும் பல காலமாக பார்வையற்றவர்கள் கோல்களைத் தங்களின் துணையாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். 12-ஆம் நூற்றாண்டில் ஔவையாரால் இயற்றப்பட்ட நல்வழியின் 4-ஆம் பாடல் இதற்குச் சான்று தருகிறது. சரியாகத் திட்டமிடாமல் ஒரு செயலைச் செய்தால் என்ன ஆகும் என்பதை விளக்க வந்த ஔவையார், ‘கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே’ என்ற உவமையைப் பயன்படுத்துகிறார். அதாவது, மாங்காயை அடிக்க நினைக்கும் பார்வையற்றவன் அதற்குத் தன் கையில் இருக்கும் கோலை எறிந்து பெற முயன்றான் என்றால், மாங்காயும் போய், வழிகாட்டும் கோலும் போய்த் துன்புறுவான் என்பதை உவமையாகத் தெரிவிக்கிறார் ஔவையார். ஆக, 12-ஆம் நூற்றாண்டிலிருந்தோ, அதற்கு முன்பு எக்காலத்திலிருந்தோ தமிழகத்தில் பார்வையற்றவர்கள் வழிகாட்டியாகக் கோலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது உறுதி.
மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கியக் கண்டுபிடிப்புகள் பல போர்களால் ஏற்பட்டவையே. போர்கள் செய்த நன்மை என்று இதைக் கூறலாமா? தெரியவில்லை. முதல் உலகப் போரின் இறுதியில், போரால் ஊனமடைந்தோர் எண்ணிக்கை ஐரோப்பா முழுவதும் அதிகமாகவே இருந்தது. அவர்கள் நாட்டுக்காக உழைத்ததன் விளைவாக தங்கள் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் என்பதால் கொஞ்சம் மரியாதையோடே பார்க்கப்பட்டார்கள். அவர்கள் பொது இடங்களில் நடமாட வேண்டியிருந்தது. இதனால், பல புதுப் புது கண்டுபிடிப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாயின. இயல்பாகவோ, விபத்தாலோ ஊனமடைந்தவர்கள் மேல் இரக்கம் காட்டிய சமூகம், இவர்கள் மேல் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தியது. அதுவரை சலுகைகளாகப் பார்க்கப்பட்டவை, இவர்களால் உரிமைகளாகக் கருத்தில் கொள்ளப்பட்டன. வெளிப்படையாகச் சொல்ல இயலாதுதான் என்றாலும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் வளர்ச்சிக்காக இரு உலகப் போர்களுக்கும் நன்றி தெரிவிப்பதில் தவறில்லை!
1921-இல், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பிக்ஸ் (James Biggs) என்பவர்தான் முதன்முறையாக தான் பார்வையற்றவர் என்பதை வேறுபடுத்திக் காட்ட கோல்களில் வெள்ளை வண்ணம் பூசியதாகக் கூறப்படுகிறது. புகைப்படக் கலைஞரான இவர் விபத்தால் பார்வையை இழந்தவர்.
தொடர்ந்து, 1931-இல் பார்வையற்றவர்கள் சாலைகளிலும், பொது இடங்களிலும் இயல்பாக நடமாட, ‘வெண்கோல் இயக்கம்’ (White Cane Movement) பிரான்சில் தொடங்கப்பட்டது. கில்லி டிஹெர்ப்மான்ட் (Guilly d'Herbemont) என்ற பிரான்சு அமைச்சர், ஒரு பிரமாண்ட விழாவில் முதல் உலகப் போரில் பார்வையை இழந்த 5000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு வெண்கோல்களை வழங்கினார். இதே காலகட்டத்தில், அமெரிக்காவிலும் அரிமா சங்கம் பார்வையற்றோருக்கு வெண்கோல்களை வழங்கியது.
1944-இல், தற்போது ஓரளவு புழக்கத்தில் இருக்கும் நீண்ட வெண்கோல்கள் (Long White Canes) ரிச்சர்ட் ஹூவர் (Richard E. Hoover - 1915-1986) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டன. ஹூவர் அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் பார்வையற்றோருக்கான பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அப்போது நடந்துகொண்டிருந்த இரண்டாம் உலகப்போரில் பார்வையை இழந்த ராணுவ வீரர்களுக்காகவே இவர் இத்தகைய கோல்களை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்தான் முதல் முறையாக பார்வையற்றோர் நடமாடுவது (Mobility) குறித்த விதிமுறைகளை உருவாக்கியவர். இது ‘ஹூவர் முறை’ என்று இன்றும் வழங்கப்படுகிறது.
1964-இல், பார்வையற்றோருக்கென ‘வெண்கோல் தினம்’ கொண்டாடப்படும் என அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த ஆண்டு அக்டோபர் 15 தொடங்கி, ‘வெண்கோல் பாதுகாப்பு தினம்’ (White Cane Safety Day) அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. 1966-இல், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு பார்வையற்றோர் கூட்டமைப்பு (International Federation for the Blind) அக்டோபர் 15-ஆம் நாள் சர்வதேச வெண்கோல் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தியது. அதனைத் தொடர்ந்து, பல உலக நாடுகளிலும் வெண்கோல் தினம் இதே நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எப்போதிலிருந்து வெண்கோல் தினம் கொண்டாடப்படுகிறது? வெண்கோல் குறித்த அறிமுகம் இந்தியாவிற்கு எப்படி வந்தது? இக்கேள்விகளுக்குச் சரியான தரவுகளுடன் கூடிய பதில் இல்லை. இருந்தபோதிலும், இக்கேள்விகளை கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பார்வையற்ற பேராசிரியரும் கவிஞருமான வே. சுகுமாரன் அவர்களிடம் கேட்டோம்.
“பன்னாட்டு பார்வையற்றோர் கூட்டமைப்பில், தேசிய பார்வையற்றோர் சங்கமும் (National Association for the Blind - NAB) உறுப்பு அமைப்பாக இருந்தது என்பதால், 1960-களின் இறுதியிலேயே இந்தியாவிலும் இந்த நாள் கொண்டாடப்பட்டிருக்கவேண்டும். எனக்கு நினைவு தெரிந்து, 1980-களில் கூட வெண்கோல் தினத்தை ‘NAB’ சிறப்பாகக் கொண்டாடியது. அதனைத் தொடர்ந்துதான் பிற அமைப்புகள் தற்போது கொண்டாடி வருகின்றன. பார்வையற்றோருக்கென நடமாடும் பயிற்சி 1965-லிருந்தே தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கிண்டியில் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் மூலம் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. நானும் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருக்கிறேன். ஆனால், தற்போது இந்நிறுவனம் பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியோடு இணைக்கப்பட்டதாகத் தகவல்” என்கிறார். மேலும், 1956-இல்தான் NAB தொடங்கப்பட்டது என்பதாலும், அதற்கு முன் பார்வையற்றோர் குறித்துப் பெரிய அளவில் பேச அமைப்புகளும் இல்லை என்பதாலும் 1960-களிலேயே வெண்கோல் குறித்த அறிமுகம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கவேண்டும் என்கிறார் இவர்.
‘White Cane’ என்ற சொல்லை தமிழில் ‘ஊன்றுகோல்’ என்றும், பிறகு ‘வெண்கோல்’ என்று மொழிபெயர்த்திருக்கிறோம். இலங்கையில் இது ‘வெள்ளைப் பிரம்பு’ என்று வழங்கப்படுகிறது.
நீளமான வெண்கோல்தான் வெண்கோல்களில் பழமையானது. நவீன வெண்கோல் வடிவமைப்பின் தந்தை என்று அழைக்கப்படும் ரிச்சர்ட் ஹூவரின் நினைவாக இது, ‘ஹூவர் கோல்’ எனப்படுகிறது. பிறகு மடக்குவகை வெண்கோல், குழந்தைகளுக்கான வெண்கோல், நடக்கும்போது இடையூறுகள் வரின் அதிர்வூட்டும்/ஒலியெழுப்பும் வெண்கோல் என இது தற்போது வளர்ச்சி பெற்றுள்ளது. பார்வையற்றோருக்கு வழிகாட்ட நாய்கள், GPRS கருவி போன்றவை இருந்தாலும் இன்றளவும் எளிய மக்களின் உதவியாளனாக விளங்குகிறது வெண்கோல்.
பல பார்வையற்றவர்கள் வெண்கோல்களைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள் என்பது வருந்தத்தக்க உண்மை. வெண்கோல்கள் மேடுகளை, பள்ளங்களை, தடுப்புகளை நமக்கு அடையாளப்படுத்தும்; அதோடு, எதிரில் வருபவருக்கு நாம் பார்வையற்றவர் என்பதையும் அடையாளப்படுத்தும். சொந்தத் தேவைக்கென வெண்கோலைப் பயன்படுத்த மறுப்பது, தான் பார்வை மாற்றுத்திறனாளி என்பதையே ஒருவர் மறுப்பதைப் போன்றது. நாம் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல என்று மனதில் நினைத்துக்கொண்டால் போதுமா? எதார்த்தத்திலிருந்து நம்மால் விலகி வாழமுடியுமா?
பார்வையற்றோருக்கான நடமாடும் பயிற்சியும் தற்போது சிறப்பு நிறுவனங்களால் வழங்கப்படுவதில்லை. பார்வையற்றோருக்கும், அவர்களோடு நெருக்கமாக இருப்போருக்கும் சிறப்பு நிறுவனங்கள் அடிக்கடி நடமாடும் பயிற்சி வகுப்புகளை நடத்தவேண்டும்.
ஊனத்திலிருந்து விடுதலையாவதன் முதல் படி சுயமாக இயங்குதல். அதைப் பெருமளவில் சாத்தியமாக்கியிருக்கிறது வெண்கோல். வெண்கோல் அளித்திருக்கும் இத்தகைய சாத்தியங்களை அனைத்து பார்வையற்றவர்களும் பெற முன்னேறிய பார்வையற்றோரும், நமக்கான அமைப்புகளும் முயலவேண்டும்.
***
தொடர்புக்கு: [email protected]