பொதுவாகப் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிற மொழிகளைக் கற்பது என்பது இன்றுவரை சவாலாகவே உள்ளது. அதுவும், ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இந்து, இஸ்லாமிய பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குத் தங்கள் வேதங்களின் தத்துவங்களைப் பொருளுணர்ந்து அறிந்துகொள்வது என்பது இன்றுவரை எட்டாக் கனியாக இருந்துவருகிறது. இந்துக்களின் வேதங்கள், இதிகாசங்கள், பகவத் கீதை போன்ற மதப் புனித நூல்கள் இந்து மதத்தில் ஆன்மீகத் தேடல் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள் படிக்கும் வகையில் பிரெயில் முறையில் இதுவரை வெளியிடப்படவில்லை என்று கருதுகிறேன். ஆனால், கிறித்துவ மதத்தில் இத்தகைய குறைகள் இல்லை; எல்லா மொழிகளிலும் பைபில் பிரெயில் எழுத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதே சமயம், இஸ்லாத்தில் ஆன்மீக நாட்டங்கொண்ட பார்வையற்றவர்கள் இஸ்லாமியர்களின் புனித வேதமான திருக்குர்ஆனைப் படிக்கும் வாய்ப்பு சில ஆண்டுகளுக்கு முன்புவரை இல்லாதிருந்தது. இந்தக் குறையைக் கலையும் வகையில், மலேசியாவில்தான் முதன்முதலில் பிரெயில் குர்ஆன் வெளியிடப்பட்டது. இந்தியாவில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள ‘ஃபைன் டச்’ அமைப்பு, இஸ்லாமிய பார்வையுள்ள மார்க்க அறிஞர்களுக்கு (உளமாக்கள்) அரபி மொழியில் பிரெயில் எழுத்துப் பயிற்சியளித்து, பிரெயில் குர்ஆனை வெளியிட்டு, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கற்பிக்கச் செய்தது.
நானும் இம்தாதியாவும்
1991-ஆம் ஆண்டு முதலே மலேசியாவிலிருந்து குர்ஆனை வரவழைத்து அதனைக் கற்றுக் கொண்ட நான், தமிழகத்திலுள்ள இஸ்லாமியப் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு பிரெயில் குர்ஆன் பயிற்சி மையம் தொடங்கப்பட வேண்டுமென்று எண்ணம் கொண்டேன்; என் கனவை நனவாக்கியது இம்தாதியாதான்.
வேலூர் மாவட்டம், மேல்விசாரம் என்னும் இடத்தில் ‘இம்தாதியா’ என்ற அமைப்பை நிறுவிய மௌலானா திரு. முஹம்மது உஸ்மான் அவர்களை அணுகி, என் எண்ணத்தைத் தெரிவித்தேன். மனமகிழ்வோடு அதனை ஏற்றுக்கொண்ட திரு. உஸ்மான் அவர்கள், தனது மதரஸாவிலேயே இத்தகையதொரு பயிற்சி மையத்தைத் தொடங்க ஒப்புக்கொண்டார்.
2012-ஆம் ஆண்டு, என்னை ஆசிரியராகக் கொண்டு ஐந்து மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது நாற்பத்தைந்து பார்வை மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரெயில் குர்ஆனைத் தவிர, பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி, உணவு, உடை, உறைவிடம் மற்றும் கணினிப் பயிற்சி ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறது இவ்வமைப்பு.
ஆரம்ப காலகட்டத்தில், தமிழகத்தின் சில பார்வை மாற்றுத்திறனாளிகளை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட இந்த மையத்தில், தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பார்வை மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்கின்றனர். அண்மையில் இவ்வமைப்பு பிரெயில் குர்ஆனை அச்சிட்டு, இந்தியா முழுவதுமுள்ள இஸ்லாமியப் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கியது. இப்போது இந்த அமைப்பு பார்வையற்ற இஸ்லாமிய பெண்களுக்காகவும் ஒரு கிளையைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகிறது.
ஆலம்விழுதாக இருந்த இந்த மதரஸா, இன்று மாபெரும் விருட்சமாக வேர்விட்டுள்ளது. இவ்வமைப்பு, பார்வை மாற்றுத்திறனாளி இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம் தரும் ஒரு மாபெரும் அமைப்பாக வளரவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமாகும்.
இவ்வமைப்பைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு,
தொலைபேசி: 9952120340
மின்னஞ்சல்: [email protected]
இணையதளம்: www.mimvs.com
***
(கட்டுரையாளர் தஞ்சை மாவட்டம் ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர்).
தொடர்புக்கு: [email protected]
அதே சமயம், இஸ்லாத்தில் ஆன்மீக நாட்டங்கொண்ட பார்வையற்றவர்கள் இஸ்லாமியர்களின் புனித வேதமான திருக்குர்ஆனைப் படிக்கும் வாய்ப்பு சில ஆண்டுகளுக்கு முன்புவரை இல்லாதிருந்தது. இந்தக் குறையைக் கலையும் வகையில், மலேசியாவில்தான் முதன்முதலில் பிரெயில் குர்ஆன் வெளியிடப்பட்டது. இந்தியாவில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள ‘ஃபைன் டச்’ அமைப்பு, இஸ்லாமிய பார்வையுள்ள மார்க்க அறிஞர்களுக்கு (உளமாக்கள்) அரபி மொழியில் பிரெயில் எழுத்துப் பயிற்சியளித்து, பிரெயில் குர்ஆனை வெளியிட்டு, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கற்பிக்கச் செய்தது.
நானும் இம்தாதியாவும்
1991-ஆம் ஆண்டு முதலே மலேசியாவிலிருந்து குர்ஆனை வரவழைத்து அதனைக் கற்றுக் கொண்ட நான், தமிழகத்திலுள்ள இஸ்லாமியப் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு பிரெயில் குர்ஆன் பயிற்சி மையம் தொடங்கப்பட வேண்டுமென்று எண்ணம் கொண்டேன்; என் கனவை நனவாக்கியது இம்தாதியாதான்.
வேலூர் மாவட்டம், மேல்விசாரம் என்னும் இடத்தில் ‘இம்தாதியா’ என்ற அமைப்பை நிறுவிய மௌலானா திரு. முஹம்மது உஸ்மான் அவர்களை அணுகி, என் எண்ணத்தைத் தெரிவித்தேன். மனமகிழ்வோடு அதனை ஏற்றுக்கொண்ட திரு. உஸ்மான் அவர்கள், தனது மதரஸாவிலேயே இத்தகையதொரு பயிற்சி மையத்தைத் தொடங்க ஒப்புக்கொண்டார்.
2012-ஆம் ஆண்டு, என்னை ஆசிரியராகக் கொண்டு ஐந்து மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது நாற்பத்தைந்து பார்வை மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரெயில் குர்ஆனைத் தவிர, பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி, உணவு, உடை, உறைவிடம் மற்றும் கணினிப் பயிற்சி ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறது இவ்வமைப்பு.
ஆரம்ப காலகட்டத்தில், தமிழகத்தின் சில பார்வை மாற்றுத்திறனாளிகளை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட இந்த மையத்தில், தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பார்வை மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்கின்றனர். அண்மையில் இவ்வமைப்பு பிரெயில் குர்ஆனை அச்சிட்டு, இந்தியா முழுவதுமுள்ள இஸ்லாமியப் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கியது. இப்போது இந்த அமைப்பு பார்வையற்ற இஸ்லாமிய பெண்களுக்காகவும் ஒரு கிளையைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகிறது.
ஆலம்விழுதாக இருந்த இந்த மதரஸா, இன்று மாபெரும் விருட்சமாக வேர்விட்டுள்ளது. இவ்வமைப்பு, பார்வை மாற்றுத்திறனாளி இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம் தரும் ஒரு மாபெரும் அமைப்பாக வளரவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமாகும்.
இவ்வமைப்பைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு,
தொலைபேசி: 9952120340
மின்னஞ்சல்: [email protected]
இணையதளம்: www.mimvs.com
***
(கட்டுரையாளர் தஞ்சை மாவட்டம் ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர்).
தொடர்புக்கு: [email protected]