நான் மதுரை மாவட்டம் சுந்தரராஜன்பட்டியில் உள்ள IAB மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். எங்கள் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை எழுத ஸ்கிரைப் வருவார்கள். தேர்வில் நாங்கள் சொல்லும் விடையை எழுதுபவர்கள்தான் ஸ்கிரைப் (Scribe); தமிழில் பதிலி எழுத்தர். நான் 10-ஆம் வகுப்பு படிக்கும்போது, அமெரிக்கன் கல்லூரியிலிருந்துதான் (The American College) ஸ்கிரைப் வரவேண்டுமென்று நினைப்பேன். ஏனென்றால், அது ஆண்கள் கல்லூரி. வரும் அண்ணன்மார்களிடம் விடை தெரியவில்லை என்றால் தைரியமாய்ச் சொல்லிவிடலாம். அதனால் எனது கௌரவத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை; இது முதல் காரணம். நான் நினைத்ததெல்லாம் என்றுதான் நடந்திருக்கிறது? நான் நினைப்பதற்கு மாறாக, பெரும்பாலும் லேடி டோக் (Lady Doak College) கல்லூரியிலிருந்துதான் எனக்கு ஸ்கிரைப் வருவார்கள். விடை தெரியாவிட்டால் எனது மானம் பொண்ணுங்க முன்னாடி போய்விடுமே என்கிற ஒரு மரண பயம் என்னை துரத்திக்கொண்டே இருக்கும். ஏதாச்சும் கதை அடிக்கலாம் என்று பார்த்தாலும், கல்லூரி ஃபைனல் இயர் வந்த பின்னாடியும், பத்தாம் வகுப்பு ஆன்சர்களை அப்படியே ஒப்பிப்பார்கள் அவர்கள்; அதனால், தப்பவே முடியாது!
2-ஆவது காரணம், நானோ மிகவும் அமைதியான பையன். எனக்கு புதியவர்களிடம் சரளமாகப் பேச வராது. அதிலும் பெண்கள் என்றால் கை, காலெல்லாம் நடுக்கமேற்பட்டு வார்த்தைகள் வர மறுக்கும். ஆனால், பார்வையற்றவர்கள் வாயை நம்பித்தான் பிழைக்க வேண்டியிருக்கிறது. அதனால், அவற்றை வெளிக்காட்டாது சமாளிக்க முயன்றும், பலமுறை முதல் பந்திலேயே கிலீன் போல்ட் ஆகியிருக்கிறேன்! எழுத வந்த அக்கா, “தேதி என்ன”ன்னு கேட்க, நானோ, “அறிவியல் பரிட்ச” எனச்சொல்ல, “தேதியக் கேட்டேன்” எனச் சொல்லும்போதுதான் நிதானத்துக்கு வருவேன். சில நேரம், என்னை விட எழுதவந்த அக்கா பதட்டமா இருக்கும். கொஸ்ட்டின் கொடுத்தாச்சா என கேட்கும்போதே நடுங்கிப்போய்விடும்.
நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது, நாங்கள் தேர்வுக்கு படிப்பதே ஒரு கொண்டாட்டம் போல இருக்கும். ‘குற்றாலக் குறவஞ்சி’ படிக்கும்போது பசங்க எல்லோரும் குஷியாகிவிடுவோம். ‘வசந்தவள்ளி பந்தடிக்கும்போது, அவளது இரு பாதங்கள், இரு முலைகள், கையில் இருந்த பந்து என 5 பந்துகள் களத்தில் ஆடின’ எனச் சொல்லும்போது, பசங்க கூட்டம் ஆர்ப்பரிக்கும். இவ்வரிகளில் இன்ஸ்ஃபையர் ஆகித்தான், ‘ஸ்டெஃபி கிராப் டென்னிஸ் மேட்ச்சில எம்பி குதிச்சா – டோண்ட் மிஸ்’ என்ற பாடல் வரியை எழுதியிருக்க வேண்டும் என எனது கண்டுபிடிப்பையும் சபையில் கூறுவேன்.
இவ்விலக்கியத்தில் பசங்க மிகவும் கொண்டாடும் ஒரு இடம் இருக்கிறது! ‘பருத்த மலையைக் கையில் அடக்கியவர், கொங்கையாகிய பருவ மலைகளை தன் கையால் அடக்காமல் தாமதிக்கிறாரே’ என வசந்தவள்ளி ஏங்கித் தவிக்கிறாள். “குற்றாலக் குறவஞ்சியில் எந்த வினா கேட்டாலும் இந்தப் பாயிண்ட்டை கட்டாயம் எழுதுவேன்” என ஒருவன் சபதம் எடுத்தான். ‘மலை வளத்தை விளக்குக என்ற வினா வந்தால் என்ன செய்வாய்?’ எனக் கேட்டதற்கு, ‘இவ்வளவு வளம் பொருந்திய மலையில், இவ்வாறு ஏங்கித் தவிக்கும் வசந்தவள்ளியும் இருந்தால் என்று எழுதுவேன்’ என்றான்.
தனிப்பாடல்கள் படிக்கும்போது, ‘நாகப் பாம்பின் படம் போல அகன்ற அல்குலை உடைய எனது பெண், உன்னையே எண்ணி உருகுகிறாள் அரசே!’ என வரும். இந்த உவமைகளை எல்லாம் படிக்கும்போது அத்தனை கிலுகிலுப்பாய் இருக்கும். அதையும் தாண்டி, பின் நவீனத்துவக் கதைகளும், நாவல்களும் எங்களுக்குப் பாடமாக இருந்தன. நாங்கள் வட்டமாக அமர்ந்து சாரு நிவேதிதாவின் ‘ஜீரோ டிகிரி’ நாவலைப் படித்தோம். கதை புரியவில்லை என்றாலும், அப்பட்டமான பாலியல் வர்ணனைகளும், கொச்சையான சொற்களும் எங்களுக்கு ஒருவித பரவச நிலையைக் கொடுத்தது. காணொளியிலோ, நிழல் படத்திலோ அல்லது நேரடியாகவோ என் பார்வையுள்ள நண்பர்களுக்குப் பெண் உடலைக் கண்டு ரசிக்கும் வாய்ப்புகள் அமைந்தன. நானோ, இலக்கியத்தில் சொற்களூடேதான் அவற்றைத் தரிசித்தேன். எனவே, கிலுகிலுப்பான இப்பகுதிகளைச் சிறப்பாகப் படித்துவிட்டு தேர்வுக்குச் செல்வேன்.
தேர்வு அன்று காலையில் எழுந்து, எல்லாக் கடவுள்களிடமும் கோரிக்கை வைப்பேன்; அதற்கு ஏதுவாக கோவில், மசூதி, தேவாலயம் என எல்லாமே எங்கள் விடுதிக்கு அருகிலேயே இருந்தன. போகிற வழியில் இருப்பதால், தல்லாகுளம் பெருமாளிடமும் “கைவிட்டிறாத” என வேண்டிவிட்டுத்தான் செல்வேன். மிகச் சரியாக எல்லாக் கடவுள்களும் என்னைக் கைவிட்டுவிடுவார்கள். எனக்குத் தேர்வு எழுத, ஒரு பொம்பளப்புள்ள வந்து அமர்ந்திருக்கும்!
ரசித்துப் படித்த வினாக்களை எல்லாம் சாய்ஸில் விட்டுவிட்டு, குறத்தியின் நாட்டு வளத்தையும், மலை வளத்தையும் எழுதுவேன். சரி, அந்த அகன்ற அல்குல் வினாவுக்காவது விடை எழுதுவோமென்று தொடங்கினா, “அல்குல்னா என்ன”-ன்னு அந்தப் புள்ள கேட்கும். ‘மச்சம்’ என்று குத்துமதிப்பா ஒரு பொய்யைச் சொல்லி, அந்த வினாவ எழுதி முடிச்சிருவேன். ‘என்னடி! உனக்குக் காதோரத்தில் அல்குல் இருக்கு’ என்று பேசிக்காம இருந்தா சரின்னு மனசுக்குள்ள நெனச்சுக்குவேன்!
தேர்வறையிலிருந்து வெளியே வந்ததுமே, “தல! பின்னிட்டேன்”, “வசந்தவள்ளி மேட்டர நொறுக்கி விட்டுட்டேன்”, “அந்த பாயிண்ட்டெல்லாம் ஸ்டிக் பென்னுலதான் எழுதினேன்” - இப்படி பலவாறா நம்ம வயித்தெரிச்சல வளர்த்தெடுப்பானுங்க. பிறகு, “உனக்கு ஏதோ ஒரு புள்ள எழுதுச்சு போல?” என அப்படியே நைசா விசாரணை தொடங்கும். “நீ நாட்டு வளம் தானே எழுதின?” எனக் கேட்பார்கள்; “ஆமாம்” என்று உண்மையை ஒத்துக்கொள்வேன். இல்லை என்று பொய் சொன்னால், எல்லாப் பசங்களும் என்னைச் சுத்தி நின்னுக்கிட்டு, “அப்பறம் தல! பந்தடிக்கிற மேட்டர சொல்லும்போது எப்படி ரியாக்ட் பண்ணுச்சு? ஆர்வமாக் கேட்டு எழுதுச்சா?” - இப்படிப் பல வினாக்களைக் கேட்டு கிலுகிலுப்படையத் தொடங்கிவிடுவார்கள். அவர்களின் போதைக்கு நான் ஊறுகாயாய்ச் சிக்கவேண்டியிருக்கும்.
ஒருமுறை தேர்வு எழுத வந்த பெண்ணிடம் வழக்கம் போல, “பேர் என்ன” என்று கேட்க, “தேர்வு எழுதுற வேலையை மட்டும் பார்க்கலாமே!” எனச் சொன்னதும் ஆடித்தான் போனேன். அதிலிருந்தே, எப்போதும் எழுத வரும் பெண்களிடமே உரையாடும் பொறுப்பை விட்டுவிடுவேன். இருப்பினும், அன்று நடந்த திருப்பத்தை நானே எதிர்பார்க்கவில்லை. துன்பத்திற்குப் பிறகு இன்பம் வந்தாக வேண்டுமல்லவா? தேர்வை எழுதி முடித்ததும், “உங்களுக்குத் தேர்வு எழுதியதால் நான் நிறைய தெரிந்துகொண்டேன். இதுதான் என் நம்பர். இனி பரிட்சைனா நானே எழுத வாரேன். என்ன உதவி வேண்டுமென்றாலும் தயங்காம கேளுங்க” எனச் சொல்லிவிட்டு சென்றார் அந்தப் பெண்!
எனக்குப் போட்டித்தேர்விற்கு எழுத வருபவர்கள் ஏனோ, கர்த்தர் அல்லது யோகா குழாமைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். நான் வினாக்களுக்கான விடையைச் சிந்தித்துக் கொண்டிருப்பேன். அவர்களோ, கிறிஸ்த்துவின் மகிமையையும், தியானத்தின் சிறப்பையும் எனக்குப் போதிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பார்கள். இவற்றையெல்லாம் சமாளித்துதான் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
நான் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள், நான் சொல்வதை அப்படியே விடைத்தாளில் எழுதிய பதிலி எழுத்தர்கள்தான். அதிலும், அதிகமாய் எனது தேர்வுகளை எழுதியவர்கள் பெண்கள்தான். எனக்குத் தேர்வு எழுத வந்தவர்களுள் மிகச் சிறந்தவர்களாக இருவரைக் குறிப்பிடுவேன். முதலாமவர் ஈஸ்வரி மேடம்; அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு புறமதிப்பீட்டுத் தேர்வுகள் அனைத்தையும் அவர்தான் எழுதினார். “நீ சொல்வதைக் கேட்கும்போதே அருமையாய் இருக்கும். அதனால்தான் உனக்கே எழுத வருகிறேன்” என்று சொல்வார். வேறு கல்லூரிகளுக்குச் சென்ற பிறகுதான் அவரின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டேன். இன்னொருவர், எனக்கு M.Phil. தேர்வு எழுத வந்த புஷ்பலதா. சொல்வதை விரைவாகவும், பிழை இன்றியும் அவர் எழுதினார்.
பிழையின்றி எழுதியது உனக்கு எப்படித் தெரியும் என்பதுதானே உங்கள் ஐயம்? 5-ஆம் பக்கம் எழுதிக் கொண்டிருக்கும்போது, “அந்த 2-ஆம் பக்கத்தில் 2-ஆவது பத்தியில் சின்னதா ஒரு சந்தேகம். வாசிங்களேன்?” எனக் கேட்பேன்? இப்படி எனக்குச் சந்தேகம் இருப்பதுபோலச் சொல்லி, அவர்கள் சரியாகத்தான் எழுதுகிறார்களா எனச் சோதிப்பேன். நான் அனைத்து வினாக்களுக்கும் விடை அளிப்பதால், அதிகம் எழுத வேண்டியிருக்கும்; அந்தக் காரணத்திற்காகவே எனக்குப் பதிலி எழுத்தராக வர மறுத்தவர்களும் உண்டு.
பதிலி எழுத்தராகப் பார்வையற்றோருக்குத் தேர்வு எழுதுவது என்பது சற்று கடினமான பணிதான். உடல் உழைப்போடு, அதீத பொறுமையும் அதற்குத் தேவை. தேர்வு முடிவுகள் வரும்போது, என்னைவிட அவர்கள் அடையும் மகிழ்ச்சி இருக்கிறதே! அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. எனது கல்விப் பயணத்தை மகிழ்வாக்கிய அனைத்து பதிலி எழுத்தர்களுக்கும் இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்று, 10-ஆம் வகுப்பில் அறிவியல் தேர்வை விரைவாய் எழுதி முடித்துவிட்டு அமர்ந்திருந்தேன். பக்கத்தில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த அக்கா, எனக்கு எழுதிய அக்காவிடம், “என்னடி அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுருச்சா?” எனக் கேட்க, “சும்மா இருடி! இவனுக்கு எல்லாம் தெரியும். இப்பத்தான் அந்த கொஸ்டினுக்கு ஆன்சர் சொன்னான்டி” என்றதுமே, வெவரம் தெரியாத பச்சப்புள்ளையாகிய நானே சிரித்துவிட்டேன்! அந்தக் கொஸ்டின், மனித இனப்பெருக்க மண்டலம் பற்றி விளக்குக?
விளக்கம்
1. அல்குல் - பெண்குறி.
2. கட்டுரையில் சுட்டப்பட்ட குற்றாலக் குறவஞ்சி வரிகள்:
‘வசந்தபூங் கோதைக் காலில்
இருபந்து குதிகொண் டாட
இருபந்து முலைகொண் டாட
ஒருபந்து கைகொண் டாட
ஒருசெப்பு லைந்து பந்துந்
தெரிகொண்டு வித்தை ஆடுஞ்
சித்தரை யெதிர் கொண்டாளே...’
‘பருத்த மலையைக் கையி லிணக்கினார் கொங்கை யான
பருவ மலையைக் கையி லிணக்கிலார்’.
***
தொடர்புக்கு: [email protected]
2-ஆவது காரணம், நானோ மிகவும் அமைதியான பையன். எனக்கு புதியவர்களிடம் சரளமாகப் பேச வராது. அதிலும் பெண்கள் என்றால் கை, காலெல்லாம் நடுக்கமேற்பட்டு வார்த்தைகள் வர மறுக்கும். ஆனால், பார்வையற்றவர்கள் வாயை நம்பித்தான் பிழைக்க வேண்டியிருக்கிறது. அதனால், அவற்றை வெளிக்காட்டாது சமாளிக்க முயன்றும், பலமுறை முதல் பந்திலேயே கிலீன் போல்ட் ஆகியிருக்கிறேன்! எழுத வந்த அக்கா, “தேதி என்ன”ன்னு கேட்க, நானோ, “அறிவியல் பரிட்ச” எனச்சொல்ல, “தேதியக் கேட்டேன்” எனச் சொல்லும்போதுதான் நிதானத்துக்கு வருவேன். சில நேரம், என்னை விட எழுதவந்த அக்கா பதட்டமா இருக்கும். கொஸ்ட்டின் கொடுத்தாச்சா என கேட்கும்போதே நடுங்கிப்போய்விடும்.
நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது, நாங்கள் தேர்வுக்கு படிப்பதே ஒரு கொண்டாட்டம் போல இருக்கும். ‘குற்றாலக் குறவஞ்சி’ படிக்கும்போது பசங்க எல்லோரும் குஷியாகிவிடுவோம். ‘வசந்தவள்ளி பந்தடிக்கும்போது, அவளது இரு பாதங்கள், இரு முலைகள், கையில் இருந்த பந்து என 5 பந்துகள் களத்தில் ஆடின’ எனச் சொல்லும்போது, பசங்க கூட்டம் ஆர்ப்பரிக்கும். இவ்வரிகளில் இன்ஸ்ஃபையர் ஆகித்தான், ‘ஸ்டெஃபி கிராப் டென்னிஸ் மேட்ச்சில எம்பி குதிச்சா – டோண்ட் மிஸ்’ என்ற பாடல் வரியை எழுதியிருக்க வேண்டும் என எனது கண்டுபிடிப்பையும் சபையில் கூறுவேன்.
இவ்விலக்கியத்தில் பசங்க மிகவும் கொண்டாடும் ஒரு இடம் இருக்கிறது! ‘பருத்த மலையைக் கையில் அடக்கியவர், கொங்கையாகிய பருவ மலைகளை தன் கையால் அடக்காமல் தாமதிக்கிறாரே’ என வசந்தவள்ளி ஏங்கித் தவிக்கிறாள். “குற்றாலக் குறவஞ்சியில் எந்த வினா கேட்டாலும் இந்தப் பாயிண்ட்டை கட்டாயம் எழுதுவேன்” என ஒருவன் சபதம் எடுத்தான். ‘மலை வளத்தை விளக்குக என்ற வினா வந்தால் என்ன செய்வாய்?’ எனக் கேட்டதற்கு, ‘இவ்வளவு வளம் பொருந்திய மலையில், இவ்வாறு ஏங்கித் தவிக்கும் வசந்தவள்ளியும் இருந்தால் என்று எழுதுவேன்’ என்றான்.
தனிப்பாடல்கள் படிக்கும்போது, ‘நாகப் பாம்பின் படம் போல அகன்ற அல்குலை உடைய எனது பெண், உன்னையே எண்ணி உருகுகிறாள் அரசே!’ என வரும். இந்த உவமைகளை எல்லாம் படிக்கும்போது அத்தனை கிலுகிலுப்பாய் இருக்கும். அதையும் தாண்டி, பின் நவீனத்துவக் கதைகளும், நாவல்களும் எங்களுக்குப் பாடமாக இருந்தன. நாங்கள் வட்டமாக அமர்ந்து சாரு நிவேதிதாவின் ‘ஜீரோ டிகிரி’ நாவலைப் படித்தோம். கதை புரியவில்லை என்றாலும், அப்பட்டமான பாலியல் வர்ணனைகளும், கொச்சையான சொற்களும் எங்களுக்கு ஒருவித பரவச நிலையைக் கொடுத்தது. காணொளியிலோ, நிழல் படத்திலோ அல்லது நேரடியாகவோ என் பார்வையுள்ள நண்பர்களுக்குப் பெண் உடலைக் கண்டு ரசிக்கும் வாய்ப்புகள் அமைந்தன. நானோ, இலக்கியத்தில் சொற்களூடேதான் அவற்றைத் தரிசித்தேன். எனவே, கிலுகிலுப்பான இப்பகுதிகளைச் சிறப்பாகப் படித்துவிட்டு தேர்வுக்குச் செல்வேன்.
தேர்வு அன்று காலையில் எழுந்து, எல்லாக் கடவுள்களிடமும் கோரிக்கை வைப்பேன்; அதற்கு ஏதுவாக கோவில், மசூதி, தேவாலயம் என எல்லாமே எங்கள் விடுதிக்கு அருகிலேயே இருந்தன. போகிற வழியில் இருப்பதால், தல்லாகுளம் பெருமாளிடமும் “கைவிட்டிறாத” என வேண்டிவிட்டுத்தான் செல்வேன். மிகச் சரியாக எல்லாக் கடவுள்களும் என்னைக் கைவிட்டுவிடுவார்கள். எனக்குத் தேர்வு எழுத, ஒரு பொம்பளப்புள்ள வந்து அமர்ந்திருக்கும்!
ரசித்துப் படித்த வினாக்களை எல்லாம் சாய்ஸில் விட்டுவிட்டு, குறத்தியின் நாட்டு வளத்தையும், மலை வளத்தையும் எழுதுவேன். சரி, அந்த அகன்ற அல்குல் வினாவுக்காவது விடை எழுதுவோமென்று தொடங்கினா, “அல்குல்னா என்ன”-ன்னு அந்தப் புள்ள கேட்கும். ‘மச்சம்’ என்று குத்துமதிப்பா ஒரு பொய்யைச் சொல்லி, அந்த வினாவ எழுதி முடிச்சிருவேன். ‘என்னடி! உனக்குக் காதோரத்தில் அல்குல் இருக்கு’ என்று பேசிக்காம இருந்தா சரின்னு மனசுக்குள்ள நெனச்சுக்குவேன்!
தேர்வறையிலிருந்து வெளியே வந்ததுமே, “தல! பின்னிட்டேன்”, “வசந்தவள்ளி மேட்டர நொறுக்கி விட்டுட்டேன்”, “அந்த பாயிண்ட்டெல்லாம் ஸ்டிக் பென்னுலதான் எழுதினேன்” - இப்படி பலவாறா நம்ம வயித்தெரிச்சல வளர்த்தெடுப்பானுங்க. பிறகு, “உனக்கு ஏதோ ஒரு புள்ள எழுதுச்சு போல?” என அப்படியே நைசா விசாரணை தொடங்கும். “நீ நாட்டு வளம் தானே எழுதின?” எனக் கேட்பார்கள்; “ஆமாம்” என்று உண்மையை ஒத்துக்கொள்வேன். இல்லை என்று பொய் சொன்னால், எல்லாப் பசங்களும் என்னைச் சுத்தி நின்னுக்கிட்டு, “அப்பறம் தல! பந்தடிக்கிற மேட்டர சொல்லும்போது எப்படி ரியாக்ட் பண்ணுச்சு? ஆர்வமாக் கேட்டு எழுதுச்சா?” - இப்படிப் பல வினாக்களைக் கேட்டு கிலுகிலுப்படையத் தொடங்கிவிடுவார்கள். அவர்களின் போதைக்கு நான் ஊறுகாயாய்ச் சிக்கவேண்டியிருக்கும்.
ஒருமுறை தேர்வு எழுத வந்த பெண்ணிடம் வழக்கம் போல, “பேர் என்ன” என்று கேட்க, “தேர்வு எழுதுற வேலையை மட்டும் பார்க்கலாமே!” எனச் சொன்னதும் ஆடித்தான் போனேன். அதிலிருந்தே, எப்போதும் எழுத வரும் பெண்களிடமே உரையாடும் பொறுப்பை விட்டுவிடுவேன். இருப்பினும், அன்று நடந்த திருப்பத்தை நானே எதிர்பார்க்கவில்லை. துன்பத்திற்குப் பிறகு இன்பம் வந்தாக வேண்டுமல்லவா? தேர்வை எழுதி முடித்ததும், “உங்களுக்குத் தேர்வு எழுதியதால் நான் நிறைய தெரிந்துகொண்டேன். இதுதான் என் நம்பர். இனி பரிட்சைனா நானே எழுத வாரேன். என்ன உதவி வேண்டுமென்றாலும் தயங்காம கேளுங்க” எனச் சொல்லிவிட்டு சென்றார் அந்தப் பெண்!
எனக்குப் போட்டித்தேர்விற்கு எழுத வருபவர்கள் ஏனோ, கர்த்தர் அல்லது யோகா குழாமைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். நான் வினாக்களுக்கான விடையைச் சிந்தித்துக் கொண்டிருப்பேன். அவர்களோ, கிறிஸ்த்துவின் மகிமையையும், தியானத்தின் சிறப்பையும் எனக்குப் போதிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பார்கள். இவற்றையெல்லாம் சமாளித்துதான் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
நான் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள், நான் சொல்வதை அப்படியே விடைத்தாளில் எழுதிய பதிலி எழுத்தர்கள்தான். அதிலும், அதிகமாய் எனது தேர்வுகளை எழுதியவர்கள் பெண்கள்தான். எனக்குத் தேர்வு எழுத வந்தவர்களுள் மிகச் சிறந்தவர்களாக இருவரைக் குறிப்பிடுவேன். முதலாமவர் ஈஸ்வரி மேடம்; அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு புறமதிப்பீட்டுத் தேர்வுகள் அனைத்தையும் அவர்தான் எழுதினார். “நீ சொல்வதைக் கேட்கும்போதே அருமையாய் இருக்கும். அதனால்தான் உனக்கே எழுத வருகிறேன்” என்று சொல்வார். வேறு கல்லூரிகளுக்குச் சென்ற பிறகுதான் அவரின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டேன். இன்னொருவர், எனக்கு M.Phil. தேர்வு எழுத வந்த புஷ்பலதா. சொல்வதை விரைவாகவும், பிழை இன்றியும் அவர் எழுதினார்.
பிழையின்றி எழுதியது உனக்கு எப்படித் தெரியும் என்பதுதானே உங்கள் ஐயம்? 5-ஆம் பக்கம் எழுதிக் கொண்டிருக்கும்போது, “அந்த 2-ஆம் பக்கத்தில் 2-ஆவது பத்தியில் சின்னதா ஒரு சந்தேகம். வாசிங்களேன்?” எனக் கேட்பேன்? இப்படி எனக்குச் சந்தேகம் இருப்பதுபோலச் சொல்லி, அவர்கள் சரியாகத்தான் எழுதுகிறார்களா எனச் சோதிப்பேன். நான் அனைத்து வினாக்களுக்கும் விடை அளிப்பதால், அதிகம் எழுத வேண்டியிருக்கும்; அந்தக் காரணத்திற்காகவே எனக்குப் பதிலி எழுத்தராக வர மறுத்தவர்களும் உண்டு.
பதிலி எழுத்தராகப் பார்வையற்றோருக்குத் தேர்வு எழுதுவது என்பது சற்று கடினமான பணிதான். உடல் உழைப்போடு, அதீத பொறுமையும் அதற்குத் தேவை. தேர்வு முடிவுகள் வரும்போது, என்னைவிட அவர்கள் அடையும் மகிழ்ச்சி இருக்கிறதே! அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. எனது கல்விப் பயணத்தை மகிழ்வாக்கிய அனைத்து பதிலி எழுத்தர்களுக்கும் இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்று, 10-ஆம் வகுப்பில் அறிவியல் தேர்வை விரைவாய் எழுதி முடித்துவிட்டு அமர்ந்திருந்தேன். பக்கத்தில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த அக்கா, எனக்கு எழுதிய அக்காவிடம், “என்னடி அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுருச்சா?” எனக் கேட்க, “சும்மா இருடி! இவனுக்கு எல்லாம் தெரியும். இப்பத்தான் அந்த கொஸ்டினுக்கு ஆன்சர் சொன்னான்டி” என்றதுமே, வெவரம் தெரியாத பச்சப்புள்ளையாகிய நானே சிரித்துவிட்டேன்! அந்தக் கொஸ்டின், மனித இனப்பெருக்க மண்டலம் பற்றி விளக்குக?
விளக்கம்
1. அல்குல் - பெண்குறி.
2. கட்டுரையில் சுட்டப்பட்ட குற்றாலக் குறவஞ்சி வரிகள்:
‘வசந்தபூங் கோதைக் காலில்
இருபந்து குதிகொண் டாட
இருபந்து முலைகொண் டாட
ஒருபந்து கைகொண் டாட
ஒருசெப்பு லைந்து பந்துந்
தெரிகொண்டு வித்தை ஆடுஞ்
சித்தரை யெதிர் கொண்டாளே...’
‘பருத்த மலையைக் கையி லிணக்கினார் கொங்கை யான
பருவ மலையைக் கையி லிணக்கிலார்’.
***
தொடர்புக்கு: [email protected]