பல அசத்தும் தீர்ப்புகளை வழங்கத் துவங்கியுள்ளது நீதிமன்றம் என்றால் இல்லை என்று கூறுவீர்களா? ஆம்! அசத்தும் தீர்ப்புதான்; ஆனால், அபாயகரமான தீர்ப்பும் கூட என்கிறது சமுதாயம்.
அந்த தீர்ப்பு என்னவென்றால், ‘ஒரு பெண் தன் திருமணத்திற்குப் பிறகு, கணவன் அல்லாத வேறு ஆணோடு உறவு வைத்துக்கொண்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்பட மாட்டாது’ என்பதுதான் அது; இதில் ஆணுக்கு இருந்த தண்டனையும் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘அப்படியிருந்தால் சமூகம் கெட்டு விடாதா?’ என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள். ஆனால், இதைச் சற்று பரந்த மனப்பான்மையோடு அணுகுங்கள் என்கிறது இளைய சமூகம். இச்சமயத்தில், ஒரு பெண்ணாக என் கருத்துகளையும் பதிவிடுவது அவசியம் என உணருகின்றேன். இந்த தீர்ப்பைப் பற்றி நான் பல பிரிவு மக்களோடு விவாதித்ததற்கு பின்பே நான் இதை எழுதுகின்றேன்.
‘நமது சமுதாயம் குடும்பங்களால் கட்டமைக்கப்பட்டது. பலதரப்பட்ட மனிதர்களைத் தன்னுள் அடக்கியது. நமக்கென்று கலாச்சாரம், பண்பாடு என வகுத்துக் கொண்டு வாழும் நாம், இதுபோன்ற சட்டங்களை எப்படி வரவேற்பது?’ என்ற வினாவிற்கு, “கலாச்சாரம் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே வருவது” என விடை கூறுகிறார் நடிகரும், அரசியல்வாதியுமான கமலஹாசன். ஆம்! அது உண்மைதான். ஒரு காலத்தில் விதவை மறுமணம் அங்கீகரிக்கப்படவில்லை; இளம் விதவைகள் தங்களை முடக்கிக் கொண்டு வாழ்ந்த தேசம் தானே இது? மாற்றம் வரும்போது அங்கீகரிக்கப்படவில்லையா? காலத்தோடு மாற்றங்களை சுவிகரித்துக் கொண்டு வாழ நினைக்கும் நாம், நம்மை வளரும் நாடுகளின் வரிசையில் காட்டிக்கொள்ளும் நாம், இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதுதானே சரி?
‘497’ – சட்டம் கூறுவதுதான் என்ன?
பெண்களுக்குச் சட்டம் என்றைக்கும் சாதகமாகத்தான் இருக்கும்; இருக்கத்தான் வேண்டும். ஏனென்றால், அவர்கள் இந்தச் சமூகத்தில் பலவீனராகவே கருதப்படுகின்றனர். அப்படியிருக்க, ஒரு பெண் தன் கணவனது ஒப்புதலோடு இன்னொரு ஆணோடு உறவு வைத்திருந்தால், அது கிரிமினல் குற்றம் அல்ல. ஆனால், ஒரு பெண் கணவனுக்குத் தெரியாமல் மற்றொரு ஆணோடு உறவு வைத்திருந்தால், அந்த ஆணுக்குத் தண்டனை; அந்த பெண்ணுக்கு இல்லை. இதை ‘அடல்ட்ரி’ என அழகாகக் கூறுகின்றனர்.
ஒரு ஆண், தன் மனைவியுடன் உறவு வைத்திருக்கும் மற்றொரு ஆண் மீது புகார் அளிக்க முடியுமே அன்றி, பாதிக்கப்பட்ட பெண் ஆண் மீதோ, உறவு கொண்ட பெண் மீதோ புகார் அளிக்க முடியாது. அதுவும், ஆண் திருமணம் ஆகாத பெண்ணோடு உறவில் ஈடுபட்டால், பாதிக்கப்பட்ட பெண் சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போட முடியாது என பேசுகிறது 158 ஆண்டுகள் பழமையான இந்தச் சட்டம்.
அன்றைய ஆணாதிக்க சமூகம் பெண்ணை அடக்கி ஆள நினைத்தது. அதனால், அன்றைய காலகட்டத்திற்கு அதுபோன்ற சட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால் இன்றோ, ஒளிபடைத்த கண்ணினவளாய், நிமிர்ந்த நடையோடும், நேர்கொண்ட பார்வையோடும் உலகை ஆள பெண்கள் வீறுகொண்டு எழும் காலம். அதனால், இன்றைய தீர்ப்பு இப்படிப் பேசுகிறது, ‘ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வேறு உறவில் இணைவது கிரிமினல் குற்றம் அல்ல. அதை சிவில் குற்றமாகக் கருதி, குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி, விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம்’. அப்படியெனில், வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு, நிதிநிலை குறித்து என்ன சொல்கிறது சட்டம்?
பெண்ணும், ஆணும் தன் விருப்பத்திற்கிணங்க உறவுகளை ஏற்படுத்திக்கொண்டால், அவர்களால் கொண்டுவரப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன? குழந்தைகள் அரசின் பொறுப்பு என கூறப்படுமா? அல்லது, மாற்றாக வரும் உறவு அக்குழந்தைகளை ஏற்க வேண்டும் என கட்டளையிடப்படுமா? எனக் கேட்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள். குழந்தைகளை இடைஞ்சல் என எண்ணி, கொலை செய்யும் அரக்கிகளோடும் நாம் பயணித்து வருகிறோம் தானே?
அன்பு, பாசம், காதல் என்ற மந்திரச் சொற்கள் எல்லாம் என்னவாகும்? திருமணம் என்ற அமைப்பு உடைந்தே போகும் என்கிறது ஒரு தரப்பு; அதே நேரத்தில், உடைந்த மனங்களுக்கு மருந்தாகத்தான் மறு உறவு தேவை என்கிற வாதமும் எழத்தான் செய்கிறது. பிரிந்து வேறு துணையோடு வாழலாம்; அதற்கு சட்டப்படி விவாகரத்து பெற்றிட வேண்டும். ஆனால், அடுத்த வாழ்க்கையும் கசந்துவிட்டால்? என்ற வினாவும் எழத்தான் செய்கிறது.
‘இக்காலகட்டத்திற்கு இச்சட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். மனிதன் நாகரிகத்தை நோக்கிப் பயணிக்கும்போது, இதுபோன்ற சட்டங்கள் அவசியம். இது, தனிமனித வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்கிறார் மனநல மருத்துவர் ஒருவர். சதி எதிர்ப்பு, தேவதாசி முறை எதிர்ப்புச் சட்டங்கள் வந்த போதும்கூட நாம் ஏற்க மறுத்தவர்கள்தான். காலப்போக்கில், காலத்தோடும் தேவைகளோடும் பயணிக்கும்போது அவைகள் அவசியமானவை என உணரப்பட்டன; அதுபோன்றதுதான் இதுவும்!
பெண்ணை ஆண்களின் அடிமையாகவோ, சொத்து போல் கருதவோ/நடத்தவோ முடியாது. பெண் நினைத்தால் உலகை ஆளவும், அழிக்கவும் முடியும் என்பது உண்மை. அப்படியிருக்க, பெண்ணைத் தவறாகச் சித்தரிப்பதும், குடும்பம் உடையும் என்று நினைப்பதும் அதீத கற்பனை. அடிகளையும், ஆபாசங்களையும் பொறுத்து வாழும் கட்டாயம் இனி பெண்களுக்கு இல்லை!
அதே நேரத்தில், இது ஆண்களுக்கும் சாதகமான சட்டம்தான். இனி தண்டனைகள் இல்லை; விவாகரத்து என்பது அவனுக்குப் பெரிய தண்டனையாக இருக்க முடியாது. அன்பு, காதல் என்ற சக்கரங்கள் சிதறும்போது திருமணம் என்ற அச்சாணி உடைகிறது. பலதார மணம் நம் சமுதாயத்திற்குப் புதியது அன்று. இதுவரை ஆணுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று, இன்று பெண் வசம் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்துவதும், உதாசினம் செய்வதும் அவள் உரிமை.
ஆனால், ஆண்களே எச்சரிக்கை! ‘கல்லானாலும் புல்லானாலும்’ என்ற கான்செப்ட் இனி இல்லை. நீங்கள் எடுக்கும் முடிவே இனி உங்களுக்கு பிரதிபலிக்கும். இனி பெண் உங்கள் அடிமைகள் அல்ல. இப்பொழுதும் சட்டம் உங்களுக்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது; முடிவு உங்கள் கையில்.
நமது சமூகம் இன்னும் முற்போக்கு எண்ணங்களை ஏற்கப் பழகவில்லை. ஆனால், இதுபோன்ற சட்டங்கள் வருங்காலத்திற்கு அவசியம்தான். இன்றைய சூழலில் இது புரியாத புதிர், விடை தேடும் வினா! பெண் தரப்பில், சுதந்திரம் என முழுவதும் கருதிட முடியாத கேள்விக்குறி; ஆண் தரப்பில், அச்சம் ஊட்டும் ‘அட்சயபாத்திரம்’. பெண்களே! இனியேனும் மனதால் யோசிப்பதை விடுத்து, புத்தியால் யோசியுங்கள்!
‘மெல்லச் சிரி மௌனத் தாரகையே!
வேறொருவன் வானில் ஒளிர்ந்ததன்றி
வேறொரு குற்றமும்
உன் கணக்கில் சேராது.
கிரகணத்தை நோக்கி நீ ஓடலாம்.
ஆனால், மறக்காதே கண்மணியே!
நீ மிளிர்ந்த இந்நாளை
மனதில் கொண்டு கும்மியடி...!’
***
(கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்).
தொடர்புக்கு: [email protected]
அந்த தீர்ப்பு என்னவென்றால், ‘ஒரு பெண் தன் திருமணத்திற்குப் பிறகு, கணவன் அல்லாத வேறு ஆணோடு உறவு வைத்துக்கொண்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்பட மாட்டாது’ என்பதுதான் அது; இதில் ஆணுக்கு இருந்த தண்டனையும் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘அப்படியிருந்தால் சமூகம் கெட்டு விடாதா?’ என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள். ஆனால், இதைச் சற்று பரந்த மனப்பான்மையோடு அணுகுங்கள் என்கிறது இளைய சமூகம். இச்சமயத்தில், ஒரு பெண்ணாக என் கருத்துகளையும் பதிவிடுவது அவசியம் என உணருகின்றேன். இந்த தீர்ப்பைப் பற்றி நான் பல பிரிவு மக்களோடு விவாதித்ததற்கு பின்பே நான் இதை எழுதுகின்றேன்.
‘நமது சமுதாயம் குடும்பங்களால் கட்டமைக்கப்பட்டது. பலதரப்பட்ட மனிதர்களைத் தன்னுள் அடக்கியது. நமக்கென்று கலாச்சாரம், பண்பாடு என வகுத்துக் கொண்டு வாழும் நாம், இதுபோன்ற சட்டங்களை எப்படி வரவேற்பது?’ என்ற வினாவிற்கு, “கலாச்சாரம் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே வருவது” என விடை கூறுகிறார் நடிகரும், அரசியல்வாதியுமான கமலஹாசன். ஆம்! அது உண்மைதான். ஒரு காலத்தில் விதவை மறுமணம் அங்கீகரிக்கப்படவில்லை; இளம் விதவைகள் தங்களை முடக்கிக் கொண்டு வாழ்ந்த தேசம் தானே இது? மாற்றம் வரும்போது அங்கீகரிக்கப்படவில்லையா? காலத்தோடு மாற்றங்களை சுவிகரித்துக் கொண்டு வாழ நினைக்கும் நாம், நம்மை வளரும் நாடுகளின் வரிசையில் காட்டிக்கொள்ளும் நாம், இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதுதானே சரி?
‘497’ – சட்டம் கூறுவதுதான் என்ன?
பெண்களுக்குச் சட்டம் என்றைக்கும் சாதகமாகத்தான் இருக்கும்; இருக்கத்தான் வேண்டும். ஏனென்றால், அவர்கள் இந்தச் சமூகத்தில் பலவீனராகவே கருதப்படுகின்றனர். அப்படியிருக்க, ஒரு பெண் தன் கணவனது ஒப்புதலோடு இன்னொரு ஆணோடு உறவு வைத்திருந்தால், அது கிரிமினல் குற்றம் அல்ல. ஆனால், ஒரு பெண் கணவனுக்குத் தெரியாமல் மற்றொரு ஆணோடு உறவு வைத்திருந்தால், அந்த ஆணுக்குத் தண்டனை; அந்த பெண்ணுக்கு இல்லை. இதை ‘அடல்ட்ரி’ என அழகாகக் கூறுகின்றனர்.
ஒரு ஆண், தன் மனைவியுடன் உறவு வைத்திருக்கும் மற்றொரு ஆண் மீது புகார் அளிக்க முடியுமே அன்றி, பாதிக்கப்பட்ட பெண் ஆண் மீதோ, உறவு கொண்ட பெண் மீதோ புகார் அளிக்க முடியாது. அதுவும், ஆண் திருமணம் ஆகாத பெண்ணோடு உறவில் ஈடுபட்டால், பாதிக்கப்பட்ட பெண் சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போட முடியாது என பேசுகிறது 158 ஆண்டுகள் பழமையான இந்தச் சட்டம்.
அன்றைய ஆணாதிக்க சமூகம் பெண்ணை அடக்கி ஆள நினைத்தது. அதனால், அன்றைய காலகட்டத்திற்கு அதுபோன்ற சட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால் இன்றோ, ஒளிபடைத்த கண்ணினவளாய், நிமிர்ந்த நடையோடும், நேர்கொண்ட பார்வையோடும் உலகை ஆள பெண்கள் வீறுகொண்டு எழும் காலம். அதனால், இன்றைய தீர்ப்பு இப்படிப் பேசுகிறது, ‘ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வேறு உறவில் இணைவது கிரிமினல் குற்றம் அல்ல. அதை சிவில் குற்றமாகக் கருதி, குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி, விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம்’. அப்படியெனில், வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு, நிதிநிலை குறித்து என்ன சொல்கிறது சட்டம்?
பெண்ணும், ஆணும் தன் விருப்பத்திற்கிணங்க உறவுகளை ஏற்படுத்திக்கொண்டால், அவர்களால் கொண்டுவரப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன? குழந்தைகள் அரசின் பொறுப்பு என கூறப்படுமா? அல்லது, மாற்றாக வரும் உறவு அக்குழந்தைகளை ஏற்க வேண்டும் என கட்டளையிடப்படுமா? எனக் கேட்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள். குழந்தைகளை இடைஞ்சல் என எண்ணி, கொலை செய்யும் அரக்கிகளோடும் நாம் பயணித்து வருகிறோம் தானே?
அன்பு, பாசம், காதல் என்ற மந்திரச் சொற்கள் எல்லாம் என்னவாகும்? திருமணம் என்ற அமைப்பு உடைந்தே போகும் என்கிறது ஒரு தரப்பு; அதே நேரத்தில், உடைந்த மனங்களுக்கு மருந்தாகத்தான் மறு உறவு தேவை என்கிற வாதமும் எழத்தான் செய்கிறது. பிரிந்து வேறு துணையோடு வாழலாம்; அதற்கு சட்டப்படி விவாகரத்து பெற்றிட வேண்டும். ஆனால், அடுத்த வாழ்க்கையும் கசந்துவிட்டால்? என்ற வினாவும் எழத்தான் செய்கிறது.
‘இக்காலகட்டத்திற்கு இச்சட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். மனிதன் நாகரிகத்தை நோக்கிப் பயணிக்கும்போது, இதுபோன்ற சட்டங்கள் அவசியம். இது, தனிமனித வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்கிறார் மனநல மருத்துவர் ஒருவர். சதி எதிர்ப்பு, தேவதாசி முறை எதிர்ப்புச் சட்டங்கள் வந்த போதும்கூட நாம் ஏற்க மறுத்தவர்கள்தான். காலப்போக்கில், காலத்தோடும் தேவைகளோடும் பயணிக்கும்போது அவைகள் அவசியமானவை என உணரப்பட்டன; அதுபோன்றதுதான் இதுவும்!
பெண்ணை ஆண்களின் அடிமையாகவோ, சொத்து போல் கருதவோ/நடத்தவோ முடியாது. பெண் நினைத்தால் உலகை ஆளவும், அழிக்கவும் முடியும் என்பது உண்மை. அப்படியிருக்க, பெண்ணைத் தவறாகச் சித்தரிப்பதும், குடும்பம் உடையும் என்று நினைப்பதும் அதீத கற்பனை. அடிகளையும், ஆபாசங்களையும் பொறுத்து வாழும் கட்டாயம் இனி பெண்களுக்கு இல்லை!
அதே நேரத்தில், இது ஆண்களுக்கும் சாதகமான சட்டம்தான். இனி தண்டனைகள் இல்லை; விவாகரத்து என்பது அவனுக்குப் பெரிய தண்டனையாக இருக்க முடியாது. அன்பு, காதல் என்ற சக்கரங்கள் சிதறும்போது திருமணம் என்ற அச்சாணி உடைகிறது. பலதார மணம் நம் சமுதாயத்திற்குப் புதியது அன்று. இதுவரை ஆணுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று, இன்று பெண் வசம் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்துவதும், உதாசினம் செய்வதும் அவள் உரிமை.
ஆனால், ஆண்களே எச்சரிக்கை! ‘கல்லானாலும் புல்லானாலும்’ என்ற கான்செப்ட் இனி இல்லை. நீங்கள் எடுக்கும் முடிவே இனி உங்களுக்கு பிரதிபலிக்கும். இனி பெண் உங்கள் அடிமைகள் அல்ல. இப்பொழுதும் சட்டம் உங்களுக்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது; முடிவு உங்கள் கையில்.
நமது சமூகம் இன்னும் முற்போக்கு எண்ணங்களை ஏற்கப் பழகவில்லை. ஆனால், இதுபோன்ற சட்டங்கள் வருங்காலத்திற்கு அவசியம்தான். இன்றைய சூழலில் இது புரியாத புதிர், விடை தேடும் வினா! பெண் தரப்பில், சுதந்திரம் என முழுவதும் கருதிட முடியாத கேள்விக்குறி; ஆண் தரப்பில், அச்சம் ஊட்டும் ‘அட்சயபாத்திரம்’. பெண்களே! இனியேனும் மனதால் யோசிப்பதை விடுத்து, புத்தியால் யோசியுங்கள்!
‘மெல்லச் சிரி மௌனத் தாரகையே!
வேறொருவன் வானில் ஒளிர்ந்ததன்றி
வேறொரு குற்றமும்
உன் கணக்கில் சேராது.
கிரகணத்தை நோக்கி நீ ஓடலாம்.
ஆனால், மறக்காதே கண்மணியே!
நீ மிளிர்ந்த இந்நாளை
மனதில் கொண்டு கும்மியடி...!’
***
(கட்டுரையாளர் தஞ்சை பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்).
தொடர்புக்கு: [email protected]