நிபுணத்துவம் அல்லது ரசனை என ஏதாவது ஒரு வகையில் பார்வையற்றவர்களின் வாழ்வில் பசை மாதிரி ஒட்டிக்கொண்டிருக்கிறது இசை. இவ்வாறு நம் வாழ்வில் இரண்டறக் கலந்த இசைத் துறையில் உள்ள பணி வாய்ப்புகளையும், சவால்களையும் இந்த மாதத் தொடரில் தர முயற்சித்திருக்கிறேன்.
குருவாயூர் விரைவு இரயிலில் திருநெல்வேலியிலிருந்து குருவாயூருக்கு இரவுப் பயணம். ரயில் திருநெல்வேலிக்கு அடுத்த நிறுத்தமான நாங்குநேரியிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில், இரவுக்கே உரித்தான அமைதியைக் கிழித்துக்கொண்டு காதுகளை வந்தடைந்தது, ‘கல்யாணத் தேன்நிலா’ பாடலின் துவக்க இசை. அது ஒரு பார்வையற்றவர் பாட்டு பாடி யாசகம் கேட்பதற்காக கையடக்க ‘Mp3 பிளேயரில்’ கரோக்கியை ஒலிக்கவிட்டதால் வந்த இசை என்பதை அறியாமல், “யாருயா சைனா செட்டுல பாட்டு வைக்கிறது” என்று கொஞ்சம் சத்தம் போட்டு கேட்டுவிட்டேன். அதுவரை நான் மேற்கொண்ட இரயில் பயணங்களில் பாட்டு பாடி யாசகம் கேட்கும் பார்வையற்றவர்களைப் பார்த்திருந்தாலும், இதுபோன்று ‘Mp3 பிளேயரில்’ கரோக்கியை ஒலிக்கவிட்டு பாடி யாசகம் கேட்கும் யாரையும் பார்த்ததில்லை. தொழில்நுட்பம் எப்படியெல்லாம் பயன்படுகிறது என நினைக்கும்போது வியப்பாக இருந்தது!
அந்தப் பார்வையற்றவரிடம் பேசியபோது, அவர் ஒரு பட்டதாரி என்று தெரிந்ததும், வேலையின்மை பிரச்சனையால் பார்வையற்றவர்கள் எவ்வளவு பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்கிற எதார்த்தம் எனது தூக்கத்தைக் கெடுத்துவிட்டது; அந்த நிகழ்வுதான் இந்தத் தொடருக்கான தொடக்கம்!
இயல்பிலேயே பார்வையற்றவர்களுக்கு இசை ரசனையும், திறமையும் அதிகம் இருக்கிறது என நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அத்துறையில் இன்னும் நாம் சொல்லிக்கொள்ளும் உயரத்தை அடையவில்லை என்பதைத் திறந்த மனதோடு ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்; அந்த உயரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல என்பது இந்தக் கட்டுரைக்காக நான் சந்தித்தவர்களின் ஒப்புதல் வாக்குமூலம். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாக்குமூலத்தில், இசைத் துறையில் உள்ள பணி வாய்ப்புகளைவிட சவால்களைப் பற்றியே அதிகம் பகிர்ந்துகொண்டனர். இதில் நான் உங்களிடம் எதை அதிகம் பகிர்ந்துகொள்வது என்கிற குழப்பமான மனநிலையோடே கட்டுரையைத் தொடர்கிறேன். ஆனால், பணி வாய்ப்புகளோ, சவால்களோ எதுவும் மிகைப்படுத்தப்படாமல், உள்ளது உள்ளபடியே தரப்பட்டிருக்கிறது என்பது உறுதி.
தேவாலயங்கள்
பார்வையற்றவர்களின் இசை ரசனைக்குத் தீனி போட்டவை சினிமா பாடல்கள் என்றால், அவர்களில் பெரும்பாலானோரின் ஆர்வத்தை நெறிப்படுத்தி இசைக் கலைஞர்களாக மாற்றுபவை கிறித்துவப் பள்ளிகள்தான் என்று சொன்னால் எல்லோரும் ஒத்துக்கொள்வீர்கள்தானே! கிறித்துவப் பள்ளிகளில் படித்ததன் விளைவாகவே மதம் மாறி, இன்று பல தேவாலயங்களில் நம் பார்வையற்றவர்கள் பாடகர்களாகவும், இசைக் கருவிகள் வாசிப்பவர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இந்த தேவாலய இசைக் கலைஞர்களில் சிலர் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்களாகவும், பலர் கர்த்தருக்காக தங்களின் இசையைக் காணிக்கையாகத் தருபவர்களுமாய் இருப்பதைத் தனி அதிகாரமாகவே எழுதலாம்.
அரசுப்பணி
இசை ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்றவர்களில் சிலர், அரசுப் பள்ளிகளில் பகுதி நேரப் பயிற்றுனர்களாகவும், சிலர் முழுநேர ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இதில் பணி நிரந்தரம் செய்யப்படாத பகுதிநேர பயிற்றுனர்களின் மாதச் சம்பளம், கடைசியாகச் செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பிறகு, ரூ. 7700-ஆக உள்ளது. முழுநேர நிரந்தர இசை ஆசிரியர்கள், இடைநிலை [Second Grade] ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெறுகிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் நிரந்தர இசை ஆசிரியர் பணி நியமனம் 2009-க்குப் பிறகும், பகுதிநேரப் பயிற்றுனர்களுக்கான பணி நியமனம் 2012-க்கு பிறகும் நடத்தப்படவே இல்லை. இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல், இன்றளவும் நம்மவர்கள் சிலர் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு இசைக் கல்லூரியில் சேர்ந்து வருவது பேரவலம்.
தனி வகுப்புகளும், மேடைக் கச்சேரிகளும்
இசைத் துறையில் ஆர்வமும், தேர்ச்சியும் உள்ள நம்மவர்கள் பலர் தங்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, பகுதிநேர இசை வகுப்புகளை ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் நடத்தி வருகிறார்கள். இது தவிர, மேடை நிகழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள். மேடை நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகளும், வகுப்புகளுக்கான மாணவர்களும் நிரந்தரம் இல்லை என்பதால், இதனை மட்டுமே சார்ந்திருப்பவர்களின் பொருளாதார நிலை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.
நடமாடும் இசைக் கச்சேரிகள் (Mobile Orchestra)
பார்வையற்றவர்கள் என்றாலே இசைக் கலைஞர்களாகத்தான் இருப்பார்கள் என்கிற பிம்பத்தை பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தியதில் இந்த நடமாடும் இசைக்கச்சேரி குழுவினருக்குதான் முதலிடம். ஆரம்ப காலகட்டங்களில் இரயில்களில், குறிப்பாக சென்னையின் மின்சார இரயில்களில் தனித்தனியாகவோ, குழுவினராகவோ பாடல்கள் பாடி, இசைக் கருவிகள் வாசித்து யாசகம் பெற்றுவந்தனர். 90-களிலேயே இந்தக் கலைஞர்களின் ஒரு நாளைய வருமானம் சராசரியாக ஆயிரம் ரூபாயைத் தொட்டுவிடும் என்று நம்மோடு பகிர்ந்துகொண்டார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர்! இன்றும் சில பார்வையற்ற ரயிலிசைக் கலைஞர்கள் இருந்தாலும், அவர்களின் வருமானம் குறித்த சரியான தகவல்கள் இல்லை.
இந்த இரயிலிசைக் குழுவினர்களை அடியொற்றி, சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘குட்டி யானை’ எனப்படும் சிறிய ரக லாரிகளில் ஊர் ஊராகச் சென்று, வண்டியை முக்கிய வீதிகளில் நிறுத்தி, பின்னணி இசையுடன் பாடகர்கள் இருவர் பாட, இருவர் மக்களிடம் சென்று யாசகம் பெறும் முறை பரவலானது. ஆரம்ப காலகட்டத்தில், இரயிலிசை போல இம்முறையும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், இதன் தற்போதைய நிலை கவலைக்குரியதாகவே இருக்கிறது.
இது குறித்து நடமாடும் இசைக்குழு ஒன்றில் பணிபுரியும் முதுகலைத் தமிழ் பட்டதாரியான லிங்கதுரை, “வண்டி வாடகை, டீசலுக்கு ஆகும் செலவு, ஓட்டுனர் படி, ஆண் மற்றும் பெண் பாடகர்கள், மக்களிடம் சென்று யாசகம் கேட்கும் இருவர் மற்றும் அவர்களுக்கு வழிகாட்ட ஒரு பார்வையுள்ளவர் உள்ளிட்டவர்களுக்கான ஊதியம், தேனீர் மற்றும் சாப்பாட்டுச் செலவு, வெளியிடங்களுக்குச் சென்றால் தங்கும் அறைக்கான வாடகை இவையெல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 7000 செலவு பிடிக்கிறது. உணவு மற்றும் தங்குமிடத்திற்கு ஆகும் செலவு போக, பாடகர்களுக்கு ரூ. 400-ம், மக்களிடம் சென்று யாசகம் கேட்கும் நபருக்கு ரூ. 300-ம் ஒரு நாளைய ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஆகும் செலவுத் தொகையை விடக் குறைவான வருமானம் கிடைத்தால், இவர்களின் ஊதியத்தில் அது சரிகட்டப்படும். பணம் மட்டுமின்றி ஆடைகள் மற்றும் தேவையான சில பொருட்களும் யாசகமாகப் பெறப்படும். கிடைக்கும் ஆடைகளில் பெரும்பாலானவை பயன்படுத்த இயலாதவையாகத்தான் இருக்கும்” என வருத்தத்தோடு கூறுகிறார்.
நம் பார்வையற்றவர்கள் மத்தியிலேயே இந்த நடமாடும் இசைக்குழுவினர் குறித்து பரவலான மாற்றுக் கருத்துகள் இருப்பதை இந்தத் தொடருக்காகப் பலருடன் பேசியதில் உணரமுடிந்தது. ஆனால், மாற்றுக் கருத்துகள் கொண்ட அனைவருமே, இந்தக் குழுக்களில் இருக்கும் பெரும்பாலான பட்டதாரிகள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலக்குகளை எட்டிப்பிடித்த சில விதிவிலக்குகள்
சமீபத்தில், நம் தமிழ் பார்வையற்ற சமூகத்தில் பரவலாக அறியப்படும் புல்லாங்குழல் பெருமாள், ஒரு இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்று வந்திருக்கிறார். இதுபோல, இன்னும் சில பார்வையற்றவர்களை உள்ளடக்கிய ஒரு இசைக்குழுவும், சில தனிநபர்களும் இசை நிகழ்ச்சிக்காக ஓரிருமுறை வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததாக நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.
சினிமாத் துறையைப் பொறுத்தமட்டில், தற்பொழுது பிரபலமாக இருக்கும் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மியை யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. முழுக்க மாற்றுத்திறனாளிகளால் உருவாக்கப்பட்ட ‘மா’, திகில் திரைப்படமான ‘கருட பார்வை’ என இரண்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் கிடியோன் கார்த்திக் என்கிற பார்வையற்ற இசைக் கலைஞர்.
மேற்சொன்ன உதாரணங்களெல்லாம், பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பல விதைகளுக்கு மத்தியில், கடுமையாகப் போராடி முளைத்த சில மரங்களே! இந்த சில மரங்களும், தங்களின் கடின உழைப்போடு குடும்பம், பொருளாதாரம் அல்லது சாதி இவற்றில் எல்லாமோ அல்லது சிலவோ ஆணிவேராகத் தாங்கிப் பிடித்திருப்பதால்தான் தாக்குப்பிடிக்க முடிகிறது!
சவால்கள்
திறமை, கடின உழைப்பு இவற்றோடு விடாமுயற்சியும் உடனிருந்தால் கண்டிப்பாக இசைத் துறையில் சாதித்துவிடலாம் என்று நான் சொன்னால், அது இசைத் துறையில் நுழையக் காத்திருக்கும் சிலருக்கு வேண்டுமானால் உற்சாகத்தைத் தரலாம். ஆனால், நுழைந்து, பல ஆண்டு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு, தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மூன்று வேலை வயிற்றுப்பாட்டுக்கான முழுமையான உத்திரவாதத்தைத் தரும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் பலருக்கு எரிச்சலையே தரும்.
இசைக்கல்லூரியில் பயின்று, கர்நாடக இசையில் கைதேர்ந்த ஆதிக்க சாதி அல்லாத எந்தவொரு பார்வையற்றவருக்கும் எந்தவொரு கான சபாக்களும் வாய்ப்பளிக்கப் போவதில்லை. இளையராஜா பாடல்களை இளையராஜா மாதிரியே பாடும் எண்ணற்ற பார்வையற்றவர்களில் ஒருவரைக்கூட அவருடைய மகன்/மகள், அவருடைய மாணவர் என எந்த இசையமைப்பாளரும், சமூக வலைத்தளத்தில் இத்தனை முறை பார்க்கப்பட்டவர் என்கிற குறைந்தபட்ச தகுதி இல்லாத பட்சத்தில் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை. புரஃபெஷனலான இசைக் கருவிகள் மற்றும் அதுசார்ந்த சில துணைக்கருவிகளின் விலை லட்சங்களைத் தொட்டுவிட்ட பிறகு, இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்கிற வெறும் லட்சியத்தை மட்டும் வைத்துக்கொண்டு எங்கு போய் வாய்ப்பு தேட?
இந்த மாதிரியான யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு, எதிர்காலத்தைத் திட்டமிடுவதுதான் இசைக் கலைஞர்களுக்குச் சிறப்பானதாக இருக்கும். நிரந்தர வருமானத்திற்கான வாய்ப்புகளை முதலில் உருவாக்கிக்கொண்டு, இசைத் துறையிலும் கவனம் செலுத்தி வந்தால், என்றாவது வாய்ப்புகள் நம் வசமாகும்.
இந்தப் பதிவால், பார்வையற்ற இசைக் கலைஞர்களின் மனம் புண்பட்டிருந்தால், தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள். தங்களின் நியாயமான மாற்றுக் கருத்துகள் எதுவாக இருந்தாலும் நேரடியாக பதிவு செய்யுங்கள். இசைக் கலைஞர்களையும், இசைத் துறையையும் குறைத்து மதிப்பிடுவதல்ல எனது நோக்கம்; மாறாக, பொதுச் சமூகத்தில் பார்வையற்றவர்கள் என்றாலே இசைத் துறையில் சிறப்பானவர்கள் என்கிற செயற்கையான பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த இசைக் கலைஞர்களின் பாடுகளைப் பதிவு செய்வதே எனது இந்தப் பதிவின் நோக்கம். நமது இசைத் திறமையை சோகப் பின்னணியோடு மிகைப்படுத்திக் காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தும் பொது ஊடகங்கள் மத்தியில், நம்மை நாமாகப் பார்க்கும் கண்ணாடியே விரல்மொழியரின் பதிவுகள்.
அடுத்த மாதம், மசாஜ் உள்ளிட்ட சில சுயதொழில்களைப் பற்றிய பதிவுகளோடு தொடர் முடிவடையும்!
***
தொடர்புக்கு: [email protected]
குருவாயூர் விரைவு இரயிலில் திருநெல்வேலியிலிருந்து குருவாயூருக்கு இரவுப் பயணம். ரயில் திருநெல்வேலிக்கு அடுத்த நிறுத்தமான நாங்குநேரியிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில், இரவுக்கே உரித்தான அமைதியைக் கிழித்துக்கொண்டு காதுகளை வந்தடைந்தது, ‘கல்யாணத் தேன்நிலா’ பாடலின் துவக்க இசை. அது ஒரு பார்வையற்றவர் பாட்டு பாடி யாசகம் கேட்பதற்காக கையடக்க ‘Mp3 பிளேயரில்’ கரோக்கியை ஒலிக்கவிட்டதால் வந்த இசை என்பதை அறியாமல், “யாருயா சைனா செட்டுல பாட்டு வைக்கிறது” என்று கொஞ்சம் சத்தம் போட்டு கேட்டுவிட்டேன். அதுவரை நான் மேற்கொண்ட இரயில் பயணங்களில் பாட்டு பாடி யாசகம் கேட்கும் பார்வையற்றவர்களைப் பார்த்திருந்தாலும், இதுபோன்று ‘Mp3 பிளேயரில்’ கரோக்கியை ஒலிக்கவிட்டு பாடி யாசகம் கேட்கும் யாரையும் பார்த்ததில்லை. தொழில்நுட்பம் எப்படியெல்லாம் பயன்படுகிறது என நினைக்கும்போது வியப்பாக இருந்தது!
அந்தப் பார்வையற்றவரிடம் பேசியபோது, அவர் ஒரு பட்டதாரி என்று தெரிந்ததும், வேலையின்மை பிரச்சனையால் பார்வையற்றவர்கள் எவ்வளவு பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்கிற எதார்த்தம் எனது தூக்கத்தைக் கெடுத்துவிட்டது; அந்த நிகழ்வுதான் இந்தத் தொடருக்கான தொடக்கம்!
இயல்பிலேயே பார்வையற்றவர்களுக்கு இசை ரசனையும், திறமையும் அதிகம் இருக்கிறது என நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அத்துறையில் இன்னும் நாம் சொல்லிக்கொள்ளும் உயரத்தை அடையவில்லை என்பதைத் திறந்த மனதோடு ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்; அந்த உயரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல என்பது இந்தக் கட்டுரைக்காக நான் சந்தித்தவர்களின் ஒப்புதல் வாக்குமூலம். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாக்குமூலத்தில், இசைத் துறையில் உள்ள பணி வாய்ப்புகளைவிட சவால்களைப் பற்றியே அதிகம் பகிர்ந்துகொண்டனர். இதில் நான் உங்களிடம் எதை அதிகம் பகிர்ந்துகொள்வது என்கிற குழப்பமான மனநிலையோடே கட்டுரையைத் தொடர்கிறேன். ஆனால், பணி வாய்ப்புகளோ, சவால்களோ எதுவும் மிகைப்படுத்தப்படாமல், உள்ளது உள்ளபடியே தரப்பட்டிருக்கிறது என்பது உறுதி.
தேவாலயங்கள்
பார்வையற்றவர்களின் இசை ரசனைக்குத் தீனி போட்டவை சினிமா பாடல்கள் என்றால், அவர்களில் பெரும்பாலானோரின் ஆர்வத்தை நெறிப்படுத்தி இசைக் கலைஞர்களாக மாற்றுபவை கிறித்துவப் பள்ளிகள்தான் என்று சொன்னால் எல்லோரும் ஒத்துக்கொள்வீர்கள்தானே! கிறித்துவப் பள்ளிகளில் படித்ததன் விளைவாகவே மதம் மாறி, இன்று பல தேவாலயங்களில் நம் பார்வையற்றவர்கள் பாடகர்களாகவும், இசைக் கருவிகள் வாசிப்பவர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இந்த தேவாலய இசைக் கலைஞர்களில் சிலர் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்களாகவும், பலர் கர்த்தருக்காக தங்களின் இசையைக் காணிக்கையாகத் தருபவர்களுமாய் இருப்பதைத் தனி அதிகாரமாகவே எழுதலாம்.
அரசுப்பணி
இசை ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்றவர்களில் சிலர், அரசுப் பள்ளிகளில் பகுதி நேரப் பயிற்றுனர்களாகவும், சிலர் முழுநேர ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இதில் பணி நிரந்தரம் செய்யப்படாத பகுதிநேர பயிற்றுனர்களின் மாதச் சம்பளம், கடைசியாகச் செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பிறகு, ரூ. 7700-ஆக உள்ளது. முழுநேர நிரந்தர இசை ஆசிரியர்கள், இடைநிலை [Second Grade] ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெறுகிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் நிரந்தர இசை ஆசிரியர் பணி நியமனம் 2009-க்குப் பிறகும், பகுதிநேரப் பயிற்றுனர்களுக்கான பணி நியமனம் 2012-க்கு பிறகும் நடத்தப்படவே இல்லை. இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல், இன்றளவும் நம்மவர்கள் சிலர் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு இசைக் கல்லூரியில் சேர்ந்து வருவது பேரவலம்.
தனி வகுப்புகளும், மேடைக் கச்சேரிகளும்
இசைத் துறையில் ஆர்வமும், தேர்ச்சியும் உள்ள நம்மவர்கள் பலர் தங்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, பகுதிநேர இசை வகுப்புகளை ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் நடத்தி வருகிறார்கள். இது தவிர, மேடை நிகழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள். மேடை நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகளும், வகுப்புகளுக்கான மாணவர்களும் நிரந்தரம் இல்லை என்பதால், இதனை மட்டுமே சார்ந்திருப்பவர்களின் பொருளாதார நிலை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.
நடமாடும் இசைக் கச்சேரிகள் (Mobile Orchestra)
பார்வையற்றவர்கள் என்றாலே இசைக் கலைஞர்களாகத்தான் இருப்பார்கள் என்கிற பிம்பத்தை பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தியதில் இந்த நடமாடும் இசைக்கச்சேரி குழுவினருக்குதான் முதலிடம். ஆரம்ப காலகட்டங்களில் இரயில்களில், குறிப்பாக சென்னையின் மின்சார இரயில்களில் தனித்தனியாகவோ, குழுவினராகவோ பாடல்கள் பாடி, இசைக் கருவிகள் வாசித்து யாசகம் பெற்றுவந்தனர். 90-களிலேயே இந்தக் கலைஞர்களின் ஒரு நாளைய வருமானம் சராசரியாக ஆயிரம் ரூபாயைத் தொட்டுவிடும் என்று நம்மோடு பகிர்ந்துகொண்டார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர்! இன்றும் சில பார்வையற்ற ரயிலிசைக் கலைஞர்கள் இருந்தாலும், அவர்களின் வருமானம் குறித்த சரியான தகவல்கள் இல்லை.
இந்த இரயிலிசைக் குழுவினர்களை அடியொற்றி, சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘குட்டி யானை’ எனப்படும் சிறிய ரக லாரிகளில் ஊர் ஊராகச் சென்று, வண்டியை முக்கிய வீதிகளில் நிறுத்தி, பின்னணி இசையுடன் பாடகர்கள் இருவர் பாட, இருவர் மக்களிடம் சென்று யாசகம் பெறும் முறை பரவலானது. ஆரம்ப காலகட்டத்தில், இரயிலிசை போல இம்முறையும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், இதன் தற்போதைய நிலை கவலைக்குரியதாகவே இருக்கிறது.
இது குறித்து நடமாடும் இசைக்குழு ஒன்றில் பணிபுரியும் முதுகலைத் தமிழ் பட்டதாரியான லிங்கதுரை, “வண்டி வாடகை, டீசலுக்கு ஆகும் செலவு, ஓட்டுனர் படி, ஆண் மற்றும் பெண் பாடகர்கள், மக்களிடம் சென்று யாசகம் கேட்கும் இருவர் மற்றும் அவர்களுக்கு வழிகாட்ட ஒரு பார்வையுள்ளவர் உள்ளிட்டவர்களுக்கான ஊதியம், தேனீர் மற்றும் சாப்பாட்டுச் செலவு, வெளியிடங்களுக்குச் சென்றால் தங்கும் அறைக்கான வாடகை இவையெல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 7000 செலவு பிடிக்கிறது. உணவு மற்றும் தங்குமிடத்திற்கு ஆகும் செலவு போக, பாடகர்களுக்கு ரூ. 400-ம், மக்களிடம் சென்று யாசகம் கேட்கும் நபருக்கு ரூ. 300-ம் ஒரு நாளைய ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஆகும் செலவுத் தொகையை விடக் குறைவான வருமானம் கிடைத்தால், இவர்களின் ஊதியத்தில் அது சரிகட்டப்படும். பணம் மட்டுமின்றி ஆடைகள் மற்றும் தேவையான சில பொருட்களும் யாசகமாகப் பெறப்படும். கிடைக்கும் ஆடைகளில் பெரும்பாலானவை பயன்படுத்த இயலாதவையாகத்தான் இருக்கும்” என வருத்தத்தோடு கூறுகிறார்.
நம் பார்வையற்றவர்கள் மத்தியிலேயே இந்த நடமாடும் இசைக்குழுவினர் குறித்து பரவலான மாற்றுக் கருத்துகள் இருப்பதை இந்தத் தொடருக்காகப் பலருடன் பேசியதில் உணரமுடிந்தது. ஆனால், மாற்றுக் கருத்துகள் கொண்ட அனைவருமே, இந்தக் குழுக்களில் இருக்கும் பெரும்பாலான பட்டதாரிகள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலக்குகளை எட்டிப்பிடித்த சில விதிவிலக்குகள்
சமீபத்தில், நம் தமிழ் பார்வையற்ற சமூகத்தில் பரவலாக அறியப்படும் புல்லாங்குழல் பெருமாள், ஒரு இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்று வந்திருக்கிறார். இதுபோல, இன்னும் சில பார்வையற்றவர்களை உள்ளடக்கிய ஒரு இசைக்குழுவும், சில தனிநபர்களும் இசை நிகழ்ச்சிக்காக ஓரிருமுறை வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததாக நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.
சினிமாத் துறையைப் பொறுத்தமட்டில், தற்பொழுது பிரபலமாக இருக்கும் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மியை யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. முழுக்க மாற்றுத்திறனாளிகளால் உருவாக்கப்பட்ட ‘மா’, திகில் திரைப்படமான ‘கருட பார்வை’ என இரண்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் கிடியோன் கார்த்திக் என்கிற பார்வையற்ற இசைக் கலைஞர்.
மேற்சொன்ன உதாரணங்களெல்லாம், பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பல விதைகளுக்கு மத்தியில், கடுமையாகப் போராடி முளைத்த சில மரங்களே! இந்த சில மரங்களும், தங்களின் கடின உழைப்போடு குடும்பம், பொருளாதாரம் அல்லது சாதி இவற்றில் எல்லாமோ அல்லது சிலவோ ஆணிவேராகத் தாங்கிப் பிடித்திருப்பதால்தான் தாக்குப்பிடிக்க முடிகிறது!
சவால்கள்
திறமை, கடின உழைப்பு இவற்றோடு விடாமுயற்சியும் உடனிருந்தால் கண்டிப்பாக இசைத் துறையில் சாதித்துவிடலாம் என்று நான் சொன்னால், அது இசைத் துறையில் நுழையக் காத்திருக்கும் சிலருக்கு வேண்டுமானால் உற்சாகத்தைத் தரலாம். ஆனால், நுழைந்து, பல ஆண்டு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு, தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மூன்று வேலை வயிற்றுப்பாட்டுக்கான முழுமையான உத்திரவாதத்தைத் தரும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் பலருக்கு எரிச்சலையே தரும்.
இசைக்கல்லூரியில் பயின்று, கர்நாடக இசையில் கைதேர்ந்த ஆதிக்க சாதி அல்லாத எந்தவொரு பார்வையற்றவருக்கும் எந்தவொரு கான சபாக்களும் வாய்ப்பளிக்கப் போவதில்லை. இளையராஜா பாடல்களை இளையராஜா மாதிரியே பாடும் எண்ணற்ற பார்வையற்றவர்களில் ஒருவரைக்கூட அவருடைய மகன்/மகள், அவருடைய மாணவர் என எந்த இசையமைப்பாளரும், சமூக வலைத்தளத்தில் இத்தனை முறை பார்க்கப்பட்டவர் என்கிற குறைந்தபட்ச தகுதி இல்லாத பட்சத்தில் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை. புரஃபெஷனலான இசைக் கருவிகள் மற்றும் அதுசார்ந்த சில துணைக்கருவிகளின் விலை லட்சங்களைத் தொட்டுவிட்ட பிறகு, இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்கிற வெறும் லட்சியத்தை மட்டும் வைத்துக்கொண்டு எங்கு போய் வாய்ப்பு தேட?
இந்த மாதிரியான யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு, எதிர்காலத்தைத் திட்டமிடுவதுதான் இசைக் கலைஞர்களுக்குச் சிறப்பானதாக இருக்கும். நிரந்தர வருமானத்திற்கான வாய்ப்புகளை முதலில் உருவாக்கிக்கொண்டு, இசைத் துறையிலும் கவனம் செலுத்தி வந்தால், என்றாவது வாய்ப்புகள் நம் வசமாகும்.
இந்தப் பதிவால், பார்வையற்ற இசைக் கலைஞர்களின் மனம் புண்பட்டிருந்தால், தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள். தங்களின் நியாயமான மாற்றுக் கருத்துகள் எதுவாக இருந்தாலும் நேரடியாக பதிவு செய்யுங்கள். இசைக் கலைஞர்களையும், இசைத் துறையையும் குறைத்து மதிப்பிடுவதல்ல எனது நோக்கம்; மாறாக, பொதுச் சமூகத்தில் பார்வையற்றவர்கள் என்றாலே இசைத் துறையில் சிறப்பானவர்கள் என்கிற செயற்கையான பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த இசைக் கலைஞர்களின் பாடுகளைப் பதிவு செய்வதே எனது இந்தப் பதிவின் நோக்கம். நமது இசைத் திறமையை சோகப் பின்னணியோடு மிகைப்படுத்திக் காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தும் பொது ஊடகங்கள் மத்தியில், நம்மை நாமாகப் பார்க்கும் கண்ணாடியே விரல்மொழியரின் பதிவுகள்.
அடுத்த மாதம், மசாஜ் உள்ளிட்ட சில சுயதொழில்களைப் பற்றிய பதிவுகளோடு தொடர் முடிவடையும்!
***
தொடர்புக்கு: [email protected]